Jump to content

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும்

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் (வாக்கு மூலம் – 23) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டபய ராஜபக்சே மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது. 

எனவே, நாட்டின் எதிர்கால அரசைஅமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது’ (காலைக்கதிர் 15.07.2022 மின்னிதழ் மாலைப் பதிப்பு) 

இப்படி எந்தச் சட்டப் புத்தகத்தில் இருக்கிறது என்ற கேள்வியைச் சுமந்திரனிடம் எழுப்பும் அதேவேளை, சட்ட வரம்புகளுக்கு உட்படாத இப்படியான சுமந்திரனின் தன்னிச்சையான வியாக்கியானங்களால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் உண்டா? சுமந்திரன் சொல்வது எல்லாம் ‘வேத வாக்கு’ ஆகிவிடுமா? 

சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் போக்குகளைப் பார்த்தால் தமிழ்த் தேசிய அரசியல் இலக்குகளை மறந்துவிட்டுத் தனது சொந்த அரசியல் எதிர்காலத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுவது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ‘முந்திரிக்கொட்டை’ போல் முந்திக்கொண்டு ‘வித்துவக் காய்ச்சல்’ காரணமாக ‘அவசரக் குடுக்கை’ யாகவும் ‘அதிகப் பிரசங்கித்தனம்’ ஆகவும் நடந்து கொள்வதாகவே படுகிறது. இவரைக் குறித்துத் தமிழ் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இவர் மீதான கட்டுப்பாட்டைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழந்துவிட்டன போல்தான் தெரிகிறது. 

கடந்த பத்திகள் பலவற்றில் அவ்வப்போது சுமந்திரனின் அரசியல் நடத்தைகளைக் குறிப்பிட்டு, சுமந்திரன் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறாரா? அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கு – அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அரசியல் செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுப்பியிருந்தேன். 

இதனை ஊர்ஜிதம் செய்வது போன்று ‘ஈழநாடு’ பத்திரிகை தனது 26.06.2022 வாரமலரில் ‘தமிழ் அரசியல்வாதி ஒருவரினால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம்!’ எனத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதியின் பெயர் குறிப்பிடாமல் ஈழநாடு வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள முக்கியமான பகுதிகளை அதில் உள்ளபடி அப்படியே பதிவிடுகிறேன். 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு மாத்திரமன்றி, அந்தக் கட்சியின் முக்கிய உள்ளகக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் இந்த தமிழ்அரசியல்வாதி, அந்தக் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சிலமுக்கிய முடிவுகளை எடுக்க தூண்டுவதுடன், அந்தமுடிவுகளையே கட்சி செயல்படுத்தவும் வேண்டும் என கட்சியின் ஏனைய தலைவர்களை வற்புறுத்தி வருவதாகவும் மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன’ 

‘இதே போலவே கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமாக செயல்பட்ட இந்த அரசியல்வாதி, ஐக்கிய தேசியக்கட்சியின் உள் விவகாரங்களிலும் தலையிட்டு, பிரதமர் ரணில் மீது கடுமையாக செல்வாக்குச் செலுத்த முற்பட்டார் என்றும், அதன் விளைவாக ஐக்கிய தேசியக்கட்சியின் வீழ்ச்சிக்கே அவர் வழிவகுத்தார் என்றும் சுட்டிக்காட்டுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள், ஆனாலும் இறுதிகாலத்தில் சுதாகரித்துக் கொண்ட பிரதமர் ரணில் மேற்படி தமிழ் அரசியல்வாதியை ஓரங்கட்டினார் என்பதையும் தமது தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இப்போது நினைவூட்டுவதாகவும் தென்னிலங்கைச் செய்திகள் மேலும் கசிகின்றன.’ 

 ‘ஈழநாடு’ பத்திரிகை குறிப்பிடும் மேற்படி அரசியல்வாதி சுமந்திரன்தான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு வெகுநேரம் எடுக்காது. 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றை ஓரங்கட்டி- பங்காளிக் கட்சிகளைப் பகிரங்கமாக அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் விமர்சித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சிதறடிப்பதில் சுமந்திரனுக்குப் பாரிய பங்குண்டு என்றே தமிழ் அரசியல் பொது வெளியில் பரவலான கருத்துண்டு. 

 சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான் தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்யும் சுமந்திரன் போன்ற வாய்ச்சொல் வீரர்களையிட்டுத் தமிழ் மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டும். தற்போது தமிழ்த் தேசிய அரசியல் என்று கூறிக் கொண்டு இப்படியான வாய்ச்சொல் வீரர்களாகவே அதிகமானவர்கள் வலம் வருகிறார்கள். 

தமிழ்த் தேசிய அரசியலிலும்- தமிழர்களின் அரசியல் கலாசாரத்திலும் பாரிய ‘மாற்றம்’ நிகழும் வகையில் தமிழர்களின் அரசியல் சிந்தனைகள் இது காலவரையிலான மரபு வழித் தேர்தல் அரசியலிலிருந்து விடுபட்டுப் புதிய திசை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் தமிழர் அரசியலில் சுமந்திரன் போன்ற ‘சுயநலமி’ கள் நுழைவது தடுக்கப்படும். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகைக் கோணத்தினால் திசை திரும்ப வேண்டிய தருணம் இதுவாகும். புதியதோர் அரசியல் தலைமையையும் புதியதோர் அரசியல் கலாசாரத்தையும் தமிழர் அரசியல் வேண்டி நிற்கிறது. 
 

https://arangamnews.com/?p=7920

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும்

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் (வாக்கு மூலம் – 23) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டபய ராஜபக்சே மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது. 

எனவே, நாட்டின் எதிர்கால அரசைஅமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது’ (காலைக்கதிர் 15.07.2022 மின்னிதழ் மாலைப் பதிப்பு) 

இப்படி எந்தச் சட்டப் புத்தகத்தில் இருக்கிறது என்ற கேள்வியைச் சுமந்திரனிடம் எழுப்பும் அதேவேளை, சட்ட வரம்புகளுக்கு உட்படாத இப்படியான சுமந்திரனின் தன்னிச்சையான வியாக்கியானங்களால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் உண்டா? சுமந்திரன் சொல்வது எல்லாம் ‘வேத வாக்கு’ ஆகிவிடுமா? 

சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் போக்குகளைப் பார்த்தால் தமிழ்த் தேசிய அரசியல் இலக்குகளை மறந்துவிட்டுத் தனது சொந்த அரசியல் எதிர்காலத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுவது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ‘முந்திரிக்கொட்டை’ போல் முந்திக்கொண்டு ‘வித்துவக் காய்ச்சல்’ காரணமாக ‘அவசரக் குடுக்கை’ யாகவும் ‘அதிகப் பிரசங்கித்தனம்’ ஆகவும் நடந்து கொள்வதாகவே படுகிறது. இவரைக் குறித்துத் தமிழ் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இவர் மீதான கட்டுப்பாட்டைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழந்துவிட்டன போல்தான் தெரிகிறது. 

கடந்த பத்திகள் பலவற்றில் அவ்வப்போது சுமந்திரனின் அரசியல் நடத்தைகளைக் குறிப்பிட்டு, சுமந்திரன் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறாரா? அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கு – அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அரசியல் செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுப்பியிருந்தேன். 

இதனை ஊர்ஜிதம் செய்வது போன்று ‘ஈழநாடு’ பத்திரிகை தனது 26.06.2022 வாரமலரில் ‘தமிழ் அரசியல்வாதி ஒருவரினால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம்!’ எனத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதியின் பெயர் குறிப்பிடாமல் ஈழநாடு வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள முக்கியமான பகுதிகளை அதில் உள்ளபடி அப்படியே பதிவிடுகிறேன். 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு மாத்திரமன்றி, அந்தக் கட்சியின் முக்கிய உள்ளகக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் இந்த தமிழ்அரசியல்வாதி, அந்தக் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சிலமுக்கிய முடிவுகளை எடுக்க தூண்டுவதுடன், அந்தமுடிவுகளையே கட்சி செயல்படுத்தவும் வேண்டும் என கட்சியின் ஏனைய தலைவர்களை வற்புறுத்தி வருவதாகவும் மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன’ 

‘இதே போலவே கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமாக செயல்பட்ட இந்த அரசியல்வாதி, ஐக்கிய தேசியக்கட்சியின் உள் விவகாரங்களிலும் தலையிட்டு, பிரதமர் ரணில் மீது கடுமையாக செல்வாக்குச் செலுத்த முற்பட்டார் என்றும், அதன் விளைவாக ஐக்கிய தேசியக்கட்சியின் வீழ்ச்சிக்கே அவர் வழிவகுத்தார் என்றும் சுட்டிக்காட்டுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள், ஆனாலும் இறுதிகாலத்தில் சுதாகரித்துக் கொண்ட பிரதமர் ரணில் மேற்படி தமிழ் அரசியல்வாதியை ஓரங்கட்டினார் என்பதையும் தமது தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இப்போது நினைவூட்டுவதாகவும் தென்னிலங்கைச் செய்திகள் மேலும் கசிகின்றன.’ 

 ‘ஈழநாடு’ பத்திரிகை குறிப்பிடும் மேற்படி அரசியல்வாதி சுமந்திரன்தான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு வெகுநேரம் எடுக்காது. 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றை ஓரங்கட்டி- பங்காளிக் கட்சிகளைப் பகிரங்கமாக அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் விமர்சித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சிதறடிப்பதில் சுமந்திரனுக்குப் பாரிய பங்குண்டு என்றே தமிழ் அரசியல் பொது வெளியில் பரவலான கருத்துண்டு. 

 சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான் தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்யும் சுமந்திரன் போன்ற வாய்ச்சொல் வீரர்களையிட்டுத் தமிழ் மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டும். தற்போது தமிழ்த் தேசிய அரசியல் என்று கூறிக் கொண்டு இப்படியான வாய்ச்சொல் வீரர்களாகவே அதிகமானவர்கள் வலம் வருகிறார்கள். 

தமிழ்த் தேசிய அரசியலிலும்- தமிழர்களின் அரசியல் கலாசாரத்திலும் பாரிய ‘மாற்றம்’ நிகழும் வகையில் தமிழர்களின் அரசியல் சிந்தனைகள் இது காலவரையிலான மரபு வழித் தேர்தல் அரசியலிலிருந்து விடுபட்டுப் புதிய திசை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் தமிழர் அரசியலில் சுமந்திரன் போன்ற ‘சுயநலமி’ கள் நுழைவது தடுக்கப்படும். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகைக் கோணத்தினால் திசை திரும்ப வேண்டிய தருணம் இதுவாகும். புதியதோர் அரசியல் தலைமையையும் புதியதோர் அரசியல் கலாசாரத்தையும் தமிழர் அரசியல் வேண்டி நிற்கிறது. 

சுமந்திரனின் சுத்து மாத்துக்களை, கிழித்து  தொங்க விட்ட  நல்ல ஒரு கட்டுரை.
நேரம் ஒதுக்கி, கட்டாயம் இதனை படியுங்கள்.
இணைப்பிற்கு நன்றி...கிருபன் ஜீ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் அடிநாதமே இதுதான். 👇


““”சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான்தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. “”

சுமந்திரனை மூன்று  பகுதியினர் அறவே வெறுக்கின்றனர். 

1) இந்தியா 

இந்தியாவிற்கு சுமந்திரன் அமெரிக்காவின் முகவர், கிறீத்துவர் என்கின்ற காரணங்களுக்காக அவரை வெறுக்கின்றது

2) அதிதீவிர தமிழ்த் தேசியவாதிகள்.  

இவர்கள் சுமந்திரன் தமிழ்த் தேசிய உணர்வை சிதைத்துவிடுவார் என்கின்ற பயம்  காரணமாக அவரை வெறுக்கின்றனர். இந்தப் பகுதியினரில் மிக மிகப் பெரிய பங்கினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

3) அதி தீவிர, சாதி சமய பற்றாளர்கள். 

இவர்கள் சுமந்திரனை வெறுப்பதற்கான காரணத்தை புரியVAக்க வேண்டிய தேவை இல்லை.

 

சுமந்திரன் மட்டுமல்ல, யார் வந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் முன்புபோல  எல்லோருடனும் முரண்டு பிடிப்பதாய் இனிமேலும் தொடர முடியாது. 

நாம் மாற்றத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

”சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான்தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. “”

அத்துடன் தமிழரசு கட்சி அஸ்தமனமாகும். அதன் பின் பல புதிய முகங்களுடன் நல்ல திருப்பங்கள் ஏற்படலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கட்டுரையின் அடிநாதமே இதுதான். 👇


““”சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான்தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. “”

சுமந்திரனை மூன்று  பகுதியினர் அறவே வெறுக்கின்றனர். 

1) இந்தியா 

இந்தியாவிற்கு சுமந்திரன் அமெரிக்காவின் முகவர், கிறீத்துவர் என்கின்ற காரணங்களுக்காக அவரை வெறுக்கின்றது

2) அதிதீவிர தமிழ்த் தேசியவாதிகள்.  

இவர்கள் சுமந்திரன் தமிழ்த் தேசிய உணர்வை சிதைத்துவிடுவார் என்கின்ற பயம்  காரணமாக அவரை வெறுக்கின்றனர். இந்தப் பகுதியினரில் மிக மிகப் பெரிய பங்கினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

3) அதி தீவிர, சாதி சமய பற்றாளர்கள். 

இவர்கள் சுமந்திரனை வெறுப்பதற்கான காரணத்தை புரியVAக்க வேண்டிய தேவை இல்லை.

 

சுமந்திரன் மட்டுமல்ல, யார் வந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் முன்புபோல  எல்லோருடனும் முரண்டு பிடிப்பதாய் இனிமேலும் தொடர முடியாது. 

நாம் மாற்றத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். 

 

உங்களின் ஒன்றும் மூன்றாவதும் ஒரே கருத்து திரும்ப திரும்ப சொல்லியும் விளங்காத ஆட்கள் போல் சமையத்தை இழுப்பது   சும் விசுவாசிகளின் கடைசி ஆயுதம் சமயம் ஒன்றுதான் அதை விட்டு வேறு ஏதாவது சும் செய்த நாலு நல்ல விடயம்களை சொல்லி கருத்தாடுவது நல்லது அது முடியாது தமிழர்களுக்கு ஒரு நல்ல விடயம் கூட சும்மால் செய்யப்படவில்லை என்பதே உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

1) உங்களின் ஒன்றும் மூன்றாவதும் ஒரே கருத்து

2)திரும்ப திரும்ப சொல்லியும் விளங்காத ஆட்கள் போல் சமையத்தை இழுப்பது   சும் விசுவாசிகளின் கடைசி ஆயுதம்

3)சமயம் ஒன்றுதான் அதை விட்டு வேறு ஏதாவது சும் செய்த நாலு நல்ல விடயம்களை சொல்லி கருத்தாடுவது நல்லது அது முடியாது

4)தமிழர்களுக்கு ஒரு நல்ல விடயம் கூட சும்மால் செய்யப்படவில்லை என்பதே உண்மை .

பெருமாள் 

1)இந்தியாவும், இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் (மிகவும் சிறிய பகுதியினர்) ஒன்றல்ல. 

2) சாதாரண பொதுமக்கள் சமயத்தை இழுப்பதில்லை. எல்லா  சைவ/கிறீத்துவ சமயத்தவரும் சமய வேறுபாடு பார்ப்பவர்கள் என்றில்லை.  குறைவான ஆட்கள்தான் சமயத்தை இழுப்பவர்கள். சுமந்திரனுக்கு எதிராக சமயத்தை முன்வைப்பவர்கள் இந்தச் சிறுபான்மையினரே. அவர்களிடத்தில் அதிகார பலம், பண பலம் இருக்கிறது. இது உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் விதண்டாவாதமாக இதை மறுக்கிறீர்கள்.

இவற்றை நான் 1990களிலிருந்து (பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்து) கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் , அனுபவப்பட்டும் வருகிறேன். இதை மறுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

3+4) நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அதை நான் ஏற்கவோ மறுக்கவோ போவதில்லை. 

மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரை சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனுக்கு எதிராக எழுதப்பட்டதாக நான் கருதவில்லை. 

இந்தியச் சார்பு நிலையில் நின்று, சுமந்திரனுக்கு எதிராக  எழுதப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். 

 

2 hours ago, குமாரசாமி said:

அத்துடன் தமிழரசு கட்சி அஸ்தமனமாகும். அதன் பின் பல புதிய முகங்களுடன் நல்ல திருப்பங்கள் ஏற்படலாம்.

அஸ்தமனமாகும்.

புதிய சிந்தனைகள் இரு பகுதியினரிடம் இருந்தும் மேலெழ வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

பெருமாள் 

1)இந்தியாவும், இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் (மிகவும் சிறிய பகுதியினர்) ஒன்றல்ல. 

2) சாதாரண பொதுமக்கள் சமயத்தை இழுப்பதில்லை. எல்லா  சைவ/கிறீத்துவ சமயத்தவரும் சமய வேறுபாடு பார்ப்பவர்கள் என்றில்லை.  குறைவான ஆட்கள்தான் சமயத்தை இழுப்பவர்கள். சுமந்திரனுக்கு எதிராக சமயத்தை முன்வைப்பவர்கள் இந்தச் சிறுபான்மையினரே. அவர்களிடத்தில் அதிகார பலம், பண பலம் இருக்கிறது. இது உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் விதண்டாவாதமாக இதை மறுக்கிறீர்கள்.

இவற்றை நான் 1990களிலிருந்து (பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்து) கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் , அனுபவப்பட்டும் வருகிறேன். இதை மறுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

3+4) நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அதை நான் ஏற்கவோ மறுக்கவோ போவதில்லை. 

மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரை சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனுக்கு எதிராக எழுதப்பட்டதாக நான் கருதவில்லை. 

இந்தியச் சார்பு நிலையில் நின்று, சுமந்திரனுக்கு எதிராக  எழுதப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். 

சுருக்கமாக ஒரே ஒரு கேள்வி சுமத்திரன் அரசியலுக்கு வந்து இதுவரை தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன  என்று சொல்ல முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பெருமாள் said:

சுருக்கமாக ஒரே ஒரு கேள்வி சுமத்திரன் அரசியலுக்கு வந்து இதுவரை தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன  என்று சொல்ல முடியுமா ?

 

இதில் தமிழருக்கு  என்பதை  தவிர்த்து பார்த்தால்...?

சிங்களத்தின் வண்டி 2009க்கு  பின்னர்  ஒட இவரின் பங்கு  மிக மிக முக்கியம்  அவசியம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Parliament of Sri Lanka - Sivagnanam Shritharan    ஊவா மாகாண முதலமைச்சரை நீக்கக் கோரி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்! | Seithy.com  - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil  breaking news,tamilclassifieds,tamil entertainment ...   ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா
 
ஒரு விடயத்தை கூற மறந்துவிட்டேன். மறந்து விட்டேன் என்று கூறுவதை விட அதனை தவிர்த்திருந்தேன் என்பதே உண்மை. நேற்று ஒருவர் தமிழ் உள்ளூராட்சி அரசியல்வாதி ஒருவரின் பதிவில் என்னை Tag செய்திருந்தார். அந்த பதிவில் அவருக்கு வழங்கிய பதிலில் நான் மறந்த / தவிர்த்த விடயத்தை எழுத நேர்ந்தது.
 
அதன் பின் அந்த விடயத்தை இங்கே பொது வெளியில் குறிப்பிடாமல் இருப்பதில் அர்த்தமில்லை.
 
சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி நகரில் TNA நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்தித்திக்க நேர்ந்தது. பேச்சுவாக்கில் அவர் கூறியது இதுதான். " எங்கட ஆள் அதுக்கு சரிபட்டு வரமாட்டார்"
 
இதில் எங்கட ஆள் என்பது பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிறிதரன் அவர்கள்.
அதுக்கு என்பது TNAயின் தலைமை பதவி.
 
அவருடைய கருத்தில் பிரதிபலிப்பது திரு. சிறிதரன் அவர்கள் TNAக்கு தலைமை தாங்கும் அளவுக்கு Competent Politician அல்ல என்பதுதான். அப்படியென்றால் யார் அந்த Competent அரசியல்வாதி என்கின்ற கேள்வி எழும்?
 
அது ஒன்றும் ஒழிவு மறைவான விடயம் அல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சுமந்திரன் அவர்களும், திரு. சாணக்கியன் அவர்களுமே அந்த தகுதிவாய்ந்த அரசியல்வாதிகளாக இருக்க முடியும்.
 
திரு. சிறிதரன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கின் அவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. திரு. சாணக்கியன் அவர்களுக்கு மும்மொழி ஆற்றல் உண்டு. ஒருவர் ஆங்கிலம் பேசினால் அவர் தகுதியான ஆள் என்று அர்த்தம் கிடையாது.
 
ஆங்கிலம் தெரிந்தவர் எல்லோரும் அறிவாளிகளும் கிடையாது.
உலகின் அரசியலில் தலைமை தாங்கிய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே மொழியாற்றலை வைத்து திரு.சிறிதரன் அவர்களை குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையது அல்ல.
 
அதே போன்று திரு.சிறிதரன் அவர்களை விட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் தகுதியானவர் என்று கூறவும் முடியாது. திரு. சுமந்திரன் அவர்கள் சட்டபுலமை மிக்கவர் தொழிற்சார் நிபுணத்துவம் மிக்கவும். அது அவரது தொழிலில் அவர் அடைந்த சிறப்பு தேர்ச்சி. அதே போன்று திரு. சிறிதரன் அவர்களும் தனது ஆசிரியர் தொழிலில் சிறப்பு தேர்ச்சியுடையவராக இருக்கலாம்.
 
திரு.சுமந்திரன் அவர்கள் போன்று இவருக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம். அதே போன்று அவருக்கு இவரை பேன்று Art of Teaching தெரியாமல் இருக்கலாம். ஒருவருடைய தொழிலுடன் ஒப்பிட்டு மற்றைமவரை குறைத்து மதிப்பிடுவது தவறானது. ஏற்புடையதும் அல்ல.
 
திரு. சுமந்திரனின் அவர்களின் சட்ட புலமை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்களை விட சிங்களவர்களுக்கும், தேசிய அரசியலுக்குமே அதிகம் பயன்படுகின்றது.
 
திரு. சுமந்திரன் அவர்கள் அரசியலுக்கு அறிமுகமாகி கிட்டதட்ட 10 ஆண்டுகளில் தமிழர்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் அவர் எதனையும் தனது சட்டப்புலமை மூலம் செய்தது கிடையாது.
 
குறைந்த பட்சம் தமிழர்களுக்கு தேவையான Devolution Packageஐ கூட அவர் தயாரித்து முன்மொழியவில்லை. கடநத சில ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்ற மாகாணசபையை கூட இயங்க வைக்க அவரால் முடியவில்லை.
 
அவரும் ஏனைய அரசியல் வாதிகள் போன்றே வெட்டி பேச்சுக்களுடன் கடந்து செல்கின்றார். அவர் இப்போதெல்லாம் தமிழர்களின் தேசிய பியச்சினை தொடர்பில் பேசுவது கூட இல்லை. தேசிய அரசியல் அல்லது புலிகளின் பாணியில் கூறுவதானால் தென்னிலைங்கை சிங்கள பேரினவாத அரசியலில் மட்டுமே ஈடுபடுகின்றார்.
 
திரு. சுமந்திரன் அவர்களும் திரு. சிறிதரன் அவர்களும் அரசியலில் சமகாலத்தில் பிரவேசித்தவர்கள்.
 
இன்று திரு.சுமந்திரன் அவர்கள் அதிகம் பேசும் மக்கள் ஆணையில்லா பின்கதவு வழியின் ஊடாகவே அவரும் அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகினார். ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் மக்களால தெரிவு செய்யப்பட்டு தனது அரசியலை ஆரம்பித்தவர்.
 
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் நிரந்தர வெற்றியை கையில் வைத்திருக்கும் இருவரில் திரு. சிறிதரன் அவர்களும் ஒருவர். தனக்கான உறுதியான வாக்கு வங்கியை கைவசம் வைத்திருக்கின்றார். ஆனால் திரு. சுமந்திரன் அவர்களின் நிலை அவ்வாறனது அல்ல. கடந்த தேர்தலில் திரு.சிறிதரன் அவய்களின் ஆதரவிலேயே கணிசமான வாக்குகளை தனதாக்கி இருந்தார்.
 
சமீபத்தையை ராஜதந்திர மட்டங்களில் திரு.சுமந்திரன் அவர்கள் தனது சொந்த விருப்பின் பெயரில் ஏற்படுத்தும் குளறுபடிகள் காரணமாக அடுத்த தேர்தலில் அவரின் வெற்றி கேள்விக்குறியாக மாறியுள்ளது. அநேகமாக அவர் மக்கள் ஆணையை இழந்த தேசிய பட்டியல் MPயாகவே பாராளுமன்றத்தில் எதெர்காலத்தில் வீற்றிருக்க கூடும்.
 
ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் உறுதியான தேர்தல் வெற்றியை பதிவு செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்.
 
எனவே திரு. சிறிதரன் அவர்கள் TNAயின் தலைமை பதவிக்கு திரு.சுமந்திரன் அவர்களை விட குறைந்தவராகவோ Incompetent Politician ஆகவோ இல்லை என்பதே உண்மை.
 
தனிப்பட்ட விமர்சனங்கள், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தால் திரு. சம்மந்தன் அவர்களுகாகு பின் ஏற்படும் தலைமைத்துவ வெற்றிடத்துக்கு திரு. சிறிதரன் அவர்களும் பொருத்தமான ஒரு அரசியல்வாதியாகவே உள்ளார். அவர் அதுக்கு சரிபட்டு வரக்கூடியவர்தான்.
 
பிற்குறிப்பு: இந்த உண்மையை கூறியதற்காக எனக்கு TNA முத்திரை குத்தி திரு. சிறிதரன் அவர்களின் ஆதரவாளர் என்று நீங்களை கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதி ஆக்கினால் தமிழினத்தின் தற்கொலைக்கு சமம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதி ஆக்கினால் தமிழினத்தின் தற்கொலைக்கு சமம்.

ஆளை கட்சிக்குள் கொண்டு வந்து, வில்லங்கமாக சேர்த்தது சம்பந்தனாம்.
இந்த இருவரும் சேர்ந்து... நொந்த தமிழ் இனத்தை, படு குழியில் தள்ளி விட்டார்கள்.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனைப்பற்றி தெரியாது அனுபவமில்லை

ஆனால்  சிறிதரன்???

இவர்  தலமை  தாங்கினால் இந்திய  அல்லது  தமிழக அரசியல்  தான்  செய்வார் 

பல  தலைமுறைக்கு எமது  தேசம்  பின் தள்ளப்பட்டு  விடும்???

(இந்திய தமிழக  உறவுகள்  மன்னிக்கவும்)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

ஆளை கட்சிக்குள் கொண்டு வந்து, வில்லங்கமாக சேர்த்தது சம்பந்தனாம்.
இந்த இருவரும் சேர்ந்து... நொந்த தமிழ் இனத்தை, படு குழியில் தள்ளி விட்டார்கள்.  

அங்காலை விசுகரும் ஏதோ சொல்லுறார். ஆர் வந்தால் திறம் எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

சுமந்திரனைப்பற்றி தெரியாது அனுபவமில்லை

ஆனால்  சிறிதரன்???

இவர்  தலமை  தாங்கினால் இந்திய  அல்லது  தமிழக அரசியல்  தான்  செய்வார் 

பல  தலைமுறைக்கு எமது  தேசம்  பின் தள்ளப்பட்டு  விடும்???

(இந்திய தமிழக  உறவுகள்  மன்னிக்கவும்)

 

2 minutes ago, குமாரசாமி said:

அங்காலை விசுகரும் ஏதோ சொல்லுறார். ஆர் வந்தால் திறம் எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? 😎

இப்போது... இருப்பவர்களில், 
அடுத்த தலைமைக்கு தகுதியானவர் யார் என்று  நினைக்கின்றீர்கள்? 

அடுத்த தலைமைக்கு... சரியான இளையவர்களை  
நாம் தயார் படுத்தவில்லை என்பதே, கசப்பான உண்மை.

குறுகிய காலம்தான் உள்ளது. அதற்குள்... ஒரு சிலரையாவது 
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள் வாங்கப் பட வேண்டும்.

அதே நேரம்... 10 வருடத்துக்கு மேல், தமிழர்களுக்கு எதனையுமே 
பெற்றுக்  கொடுக்காத அரசியல் வாதிகள் ஒய்வு பெற வேண்டும்.

அப்படி... இனியும், போட்டி போட்டால், தலை நிமிர முடியாத அளவிற்கு 
வாக்குச் சீட்டின் மூலம்  பதிலடி கொடுக்க வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

 

இப்போது... இருப்பவர்களில், 
அடுத்த தலைமைக்கு தகுதியானவர் யார் என்று  நினைக்கின்றீர்கள்? 

அடுத்த தலைமைக்கு... சரியான இளையவர்களை  
நாம் தயார் படுத்தவில்லை என்பதே, கசப்பான உண்மை.

குறுகிய காலம்தான் உள்ளது. அதற்குள்... ஒரு சிலரையாவது 
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள் வாங்கப் பட வேண்டும்.

அதே நேரம்... 10 வருடத்துக்கு மேல், தமிழர்களுக்கு எதனையுமே 
பெற்றுக்  கொடுக்காத அரசியல் வாதிகள் ஒய்வு பெற வேண்டும்.

அப்படி... இனியும், போட்டி போட்டால், தலை நிமிர முடியாத அளவிற்கு 
வாக்குச் சீட்டின் மூலம்  பதிலடி கொடுக்க வேண்டும்.

 

கட்சிகளுக்குள் இல்லை என்பதே  கசப்பான  உண்மை

இளையவர்கள்

அந்த  மக:களை  நேசிப்பவர்கள்

தாயகப்பற்றாளர்கள்

முன்  வரணும்

ஆனால் தேச இளையர்கள் அரசியலில்  ஆர்வமற்றவர்களாக (தோல்வி மற்றும் சுயநலம்?) மாறி  வருகிறாரகள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுருக்கமாக ஒரே ஒரு கேள்வி சுமத்திரன் அரசியலுக்கு வந்து இதுவரை தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன  என்று சொல்ல முடியுமா ?

உங்களிடம் அதே கேள்வியை கொஞ்சம் அகலமாக முன்வைக்கிறேன. பதிலளியுங்கள். 

தமிழ் அரசியல்வாதிகள் அரசியலுக்கு வந்து தமிழருக்குச் செய்த நன்மைகள் என்ன ?

தமிழருக்கு நன்மை செய்த ஒரு தமிழ் அரசியல்வாதியைக் காட்டுங்கள் , சுமந்திரன் என்ன செய்தாரென்று நான் கூறுகிறேன். 

1 hour ago, குமாரசாமி said:

சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதி ஆக்கினால் தமிழினத்தின் தற்கொலைக்கு சமம்.

இப்ப மட்டும் என்ன வாழுதாம் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:
Parliament of Sri Lanka - Sivagnanam Shritharan    ஊவா மாகாண முதலமைச்சரை நீக்கக் கோரி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்! | Seithy.com  - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil  breaking news,tamilclassifieds,tamil entertainment ...   ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா
 
ஒரு விடயத்தை கூற மறந்துவிட்டேன். மறந்து விட்டேன் என்று கூறுவதை விட அதனை தவிர்த்திருந்தேன் என்பதே உண்மை. நேற்று ஒருவர் தமிழ் உள்ளூராட்சி அரசியல்வாதி ஒருவரின் பதிவில் என்னை Tag செய்திருந்தார். அந்த பதிவில் அவருக்கு வழங்கிய பதிலில் நான் மறந்த / தவிர்த்த விடயத்தை எழுத நேர்ந்தது.
 
அதன் பின் அந்த விடயத்தை இங்கே பொது வெளியில் குறிப்பிடாமல் இருப்பதில் அர்த்தமில்லை.
 
சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி நகரில் TNA நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்தித்திக்க நேர்ந்தது. பேச்சுவாக்கில் அவர் கூறியது இதுதான். " எங்கட ஆள் அதுக்கு சரிபட்டு வரமாட்டார்"
 
இதில் எங்கட ஆள் என்பது பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிறிதரன் அவர்கள்.
அதுக்கு என்பது TNAயின் தலைமை பதவி.
 
அவருடைய கருத்தில் பிரதிபலிப்பது திரு. சிறிதரன் அவர்கள் TNAக்கு தலைமை தாங்கும் அளவுக்கு Competent Politician அல்ல என்பதுதான். அப்படியென்றால் யார் அந்த Competent அரசியல்வாதி என்கின்ற கேள்வி எழும்?
 
அது ஒன்றும் ஒழிவு மறைவான விடயம் அல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சுமந்திரன் அவர்களும், திரு. சாணக்கியன் அவர்களுமே அந்த தகுதிவாய்ந்த அரசியல்வாதிகளாக இருக்க முடியும்.
 
திரு. சிறிதரன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கின் அவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. திரு. சாணக்கியன் அவர்களுக்கு மும்மொழி ஆற்றல் உண்டு. ஒருவர் ஆங்கிலம் பேசினால் அவர் தகுதியான ஆள் என்று அர்த்தம் கிடையாது.
 
ஆங்கிலம் தெரிந்தவர் எல்லோரும் அறிவாளிகளும் கிடையாது.
உலகின் அரசியலில் தலைமை தாங்கிய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே மொழியாற்றலை வைத்து திரு.சிறிதரன் அவர்களை குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையது அல்ல.
 
அதே போன்று திரு.சிறிதரன் அவர்களை விட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் தகுதியானவர் என்று கூறவும் முடியாது. திரு. சுமந்திரன் அவர்கள் சட்டபுலமை மிக்கவர் தொழிற்சார் நிபுணத்துவம் மிக்கவும். அது அவரது தொழிலில் அவர் அடைந்த சிறப்பு தேர்ச்சி. அதே போன்று திரு. சிறிதரன் அவர்களும் தனது ஆசிரியர் தொழிலில் சிறப்பு தேர்ச்சியுடையவராக இருக்கலாம்.
 
திரு.சுமந்திரன் அவர்கள் போன்று இவருக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம். அதே போன்று அவருக்கு இவரை பேன்று Art of Teaching தெரியாமல் இருக்கலாம். ஒருவருடைய தொழிலுடன் ஒப்பிட்டு மற்றைமவரை குறைத்து மதிப்பிடுவது தவறானது. ஏற்புடையதும் அல்ல.
 
திரு. சுமந்திரனின் அவர்களின் சட்ட புலமை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்களை விட சிங்களவர்களுக்கும், தேசிய அரசியலுக்குமே அதிகம் பயன்படுகின்றது.
 
திரு. சுமந்திரன் அவர்கள் அரசியலுக்கு அறிமுகமாகி கிட்டதட்ட 10 ஆண்டுகளில் தமிழர்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் அவர் எதனையும் தனது சட்டப்புலமை மூலம் செய்தது கிடையாது.
 
குறைந்த பட்சம் தமிழர்களுக்கு தேவையான Devolution Packageஐ கூட அவர் தயாரித்து முன்மொழியவில்லை. கடநத சில ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்ற மாகாணசபையை கூட இயங்க வைக்க அவரால் முடியவில்லை.
 
அவரும் ஏனைய அரசியல் வாதிகள் போன்றே வெட்டி பேச்சுக்களுடன் கடந்து செல்கின்றார். அவர் இப்போதெல்லாம் தமிழர்களின் தேசிய பியச்சினை தொடர்பில் பேசுவது கூட இல்லை. தேசிய அரசியல் அல்லது புலிகளின் பாணியில் கூறுவதானால் தென்னிலைங்கை சிங்கள பேரினவாத அரசியலில் மட்டுமே ஈடுபடுகின்றார்.
 
திரு. சுமந்திரன் அவர்களும் திரு. சிறிதரன் அவர்களும் அரசியலில் சமகாலத்தில் பிரவேசித்தவர்கள்.
 
இன்று திரு.சுமந்திரன் அவர்கள் அதிகம் பேசும் மக்கள் ஆணையில்லா பின்கதவு வழியின் ஊடாகவே அவரும் அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகினார். ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் மக்களால தெரிவு செய்யப்பட்டு தனது அரசியலை ஆரம்பித்தவர்.
 
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் நிரந்தர வெற்றியை கையில் வைத்திருக்கும் இருவரில் திரு. சிறிதரன் அவர்களும் ஒருவர். தனக்கான உறுதியான வாக்கு வங்கியை கைவசம் வைத்திருக்கின்றார். ஆனால் திரு. சுமந்திரன் அவர்களின் நிலை அவ்வாறனது அல்ல. கடந்த தேர்தலில் திரு.சிறிதரன் அவய்களின் ஆதரவிலேயே கணிசமான வாக்குகளை தனதாக்கி இருந்தார்.
 
சமீபத்தையை ராஜதந்திர மட்டங்களில் திரு.சுமந்திரன் அவர்கள் தனது சொந்த விருப்பின் பெயரில் ஏற்படுத்தும் குளறுபடிகள் காரணமாக அடுத்த தேர்தலில் அவரின் வெற்றி கேள்விக்குறியாக மாறியுள்ளது. அநேகமாக அவர் மக்கள் ஆணையை இழந்த தேசிய பட்டியல் MPயாகவே பாராளுமன்றத்தில் எதெர்காலத்தில் வீற்றிருக்க கூடும்.
 
ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் உறுதியான தேர்தல் வெற்றியை பதிவு செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்.
 
எனவே திரு. சிறிதரன் அவர்கள் TNAயின் தலைமை பதவிக்கு திரு.சுமந்திரன் அவர்களை விட குறைந்தவராகவோ Incompetent Politician ஆகவோ இல்லை என்பதே உண்மை.
 
தனிப்பட்ட விமர்சனங்கள், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தால் திரு. சம்மந்தன் அவர்களுகாகு பின் ஏற்படும் தலைமைத்துவ வெற்றிடத்துக்கு திரு. சிறிதரன் அவர்களும் பொருத்தமான ஒரு அரசியல்வாதியாகவே உள்ளார். அவர் அதுக்கு சரிபட்டு வரக்கூடியவர்தான்.
 
பிற்குறிப்பு: இந்த உண்மையை கூறியதற்காக எனக்கு TNA முத்திரை குத்தி திரு. சிறிதரன் அவர்களின் ஆதரவாளர் என்று நீங்களை கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

கொடுப்புக்குள் சிரிக்கப்போகின்றார்கள். பதிவை நீக்கிவிடுங்கள் 🤣

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தர விரும்பாத சிறீதரன் TNA யின் தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர் ? 

ஒருவன் முடவன் என்பதற்காக தலைமை தாங்க முடியாதென்றால் இன்னொரு குருடன் எப்படி வழிகாட்டியாக முடியும் ? 

🤣

Edited by Kapithan
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

கொடுப்புக்குள் சிரிக்கப்போகின்றார்கள். பதிவை நீக்கிவிடுங்கள் 🤣

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தர விரும்பாத சிறீதரன் TNA யின் தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர் ? 

ஒருவன் முடவன் என்பதற்காக தலைமை தாங்க முடியாதென்றால் இன்னொரு குருடன் எப்படி வழிகாட்டியாக முடியும் ? 

🤣

 

நெத்தியடி...

இனி  கருத்துக்களை  வைப்பது???😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இப்போது... இருப்பவர்களில், 
அடுத்த தலைமைக்கு தகுதியானவர் யார் என்று  நினைக்கின்றீர்கள்? 

2 hours ago, Kapithan said:

இப்ப மட்டும் என்ன வாழுதாம் ? 

 

இது வரைக்கும் ஒரு சல்லிக்கும் உதவாத உந்த கட்சியையே கலைத்து விட்டால் என்ன?
அந்த பெயரை வைத்து தானே இவ்வளவு ஆட்டம் போடுகின்றார்கள்.
நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவித பிரயோசனமும் இல்லாமல் அந்தந்த உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சிங்கள இனவாத கட்சிகளுக்கும் உதவினதுதான் மிச்சம்.


சுமந்திரன் நாட்டுக்கு சேவைசெய்ய விரும்பினால் அம்பன்/குடத்தனையில் சுயேட்சையாக போட்டியிடட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 

இது வரைக்கும் ஒரு சல்லிக்கும் உதவாத உந்த கட்சியையே கலைத்து விட்டால் என்ன?
அந்த பெயரை வைத்து தானே இவ்வளவு ஆட்டம் போடுகின்றார்கள்.
நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவித பிரயோசனமும் இல்லாமல் அந்தந்த உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சிங்கள இனவாத கட்சிகளுக்கும் உதவினதுதான் மிச்சம்.


சுமந்திரன் நாட்டுக்கு சேவைசெய்ய விரும்பினால் அம்பன்/குடத்தனையில் சுயேட்சையாக போட்டியிடட்டும்.

TNA யில் உள்ள மிகுதி ? 

கட்சியைக் கலைப்பது நல்ல யோசனை  😀

கவைப்படாதீர்கள், சம்பந்தர் படுக்க உங்கள்/எங்கள் விருப்பம் இனிதே நிறைவேறும். 🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

TNA யில் உள்ள மிகுதி ? 

கட்சியைக் கலைப்பது நல்ல யோசனை  😀

கவைப்படாதீர்கள், சம்பந்தர் படுக்க உங்கள்/எங்கள் விருப்பம் இனிதே நிறைவேறும். 🤣

 

இப்ப மட்டும் உங்க  சம்பந்தர் என்ன  செய்கிறாராம்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

 

இப்ப மட்டும் உங்க  சம்பந்தர் என்ன  செய்கிறாராம்?😂

நான் பாடையில் படுப்பதை கொஞ்சூண்டு நாகரீகமாகச் சொன்னேன். அதையும் காட்டிக் கொடுக்கிறீங்களே.. இது உங்களுக்கே அடுக்குமா ?

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நான் பாடையில் படுப்பதை கொஞ்சூண்டு நாகரீகமாகச் சொன்னேன். அதையும் காட்டிக் கொடுக்கிறீங்களே.. இது உங்களுக்கே அடுக்குமா ?

🤣

 

நானும்  கொஞ்சூண்டு நாகரீகமாகச் சொல்ல  முயற்சித்தேன்?

மாட்டிக்கொண்டேனா?🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

உங்களிடம் அதே கேள்வியை கொஞ்சம் அகலமாக முன்வைக்கிறேன. பதிலளியுங்கள். 

தமிழ் அரசியல்வாதிகள் அரசியலுக்கு வந்து தமிழருக்குச் செய்த நன்மைகள் என்ன ?

தமிழருக்கு நன்மை செய்த ஒரு தமிழ் அரசியல்வாதியைக் காட்டுங்கள் , சுமந்திரன் என்ன செய்தாரென்று நான் கூறுகிறேன். 

பல தடவை யாழில் கருத்துக்களை வைத்து விட்டேன் இளைய அரசியல்வாதிகளுக்கு வழிவிட்டு சிறியண்ணா சொல்வது போல் 1௦ வருடங்களுக்கு மேல் தமிழருக்கு எதையும் பெற்று கொடுக்காத அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஓய்வுக்கு போவது நல்லது சைக்கிள் கூட்டம் உள்ளடங்கலாக .

செய்வார்களா ? பெட்டி வாங்கி குவிப்பதுக்கு தமிழர் பிரச்சனையை சாட்டாக வைத்து தமிழரின் ரத்தம் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையில் இவர்களுக்கு எங்கள் பிரச்சனை தீர்வது பிடித்தமான ஒன்றல்ல .

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 முறைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக இருக்க முடியாது என சட்டம் இயற்றப்பட வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டோர் நேரடி அரசியலில் ஈடுபடக்கூடாது, ஆலோசகர்களாக செயற்படலாம் எனவும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.