Jump to content

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும்

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் (வாக்கு மூலம் – 23) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டபய ராஜபக்சே மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது. 

எனவே, நாட்டின் எதிர்கால அரசைஅமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது’ (காலைக்கதிர் 15.07.2022 மின்னிதழ் மாலைப் பதிப்பு) 

இப்படி எந்தச் சட்டப் புத்தகத்தில் இருக்கிறது என்ற கேள்வியைச் சுமந்திரனிடம் எழுப்பும் அதேவேளை, சட்ட வரம்புகளுக்கு உட்படாத இப்படியான சுமந்திரனின் தன்னிச்சையான வியாக்கியானங்களால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் உண்டா? சுமந்திரன் சொல்வது எல்லாம் ‘வேத வாக்கு’ ஆகிவிடுமா? 

சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் போக்குகளைப் பார்த்தால் தமிழ்த் தேசிய அரசியல் இலக்குகளை மறந்துவிட்டுத் தனது சொந்த அரசியல் எதிர்காலத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுவது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ‘முந்திரிக்கொட்டை’ போல் முந்திக்கொண்டு ‘வித்துவக் காய்ச்சல்’ காரணமாக ‘அவசரக் குடுக்கை’ யாகவும் ‘அதிகப் பிரசங்கித்தனம்’ ஆகவும் நடந்து கொள்வதாகவே படுகிறது. இவரைக் குறித்துத் தமிழ் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இவர் மீதான கட்டுப்பாட்டைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழந்துவிட்டன போல்தான் தெரிகிறது. 

கடந்த பத்திகள் பலவற்றில் அவ்வப்போது சுமந்திரனின் அரசியல் நடத்தைகளைக் குறிப்பிட்டு, சுமந்திரன் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறாரா? அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கு – அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அரசியல் செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுப்பியிருந்தேன். 

இதனை ஊர்ஜிதம் செய்வது போன்று ‘ஈழநாடு’ பத்திரிகை தனது 26.06.2022 வாரமலரில் ‘தமிழ் அரசியல்வாதி ஒருவரினால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம்!’ எனத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதியின் பெயர் குறிப்பிடாமல் ஈழநாடு வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள முக்கியமான பகுதிகளை அதில் உள்ளபடி அப்படியே பதிவிடுகிறேன். 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு மாத்திரமன்றி, அந்தக் கட்சியின் முக்கிய உள்ளகக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் இந்த தமிழ்அரசியல்வாதி, அந்தக் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சிலமுக்கிய முடிவுகளை எடுக்க தூண்டுவதுடன், அந்தமுடிவுகளையே கட்சி செயல்படுத்தவும் வேண்டும் என கட்சியின் ஏனைய தலைவர்களை வற்புறுத்தி வருவதாகவும் மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன’ 

‘இதே போலவே கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமாக செயல்பட்ட இந்த அரசியல்வாதி, ஐக்கிய தேசியக்கட்சியின் உள் விவகாரங்களிலும் தலையிட்டு, பிரதமர் ரணில் மீது கடுமையாக செல்வாக்குச் செலுத்த முற்பட்டார் என்றும், அதன் விளைவாக ஐக்கிய தேசியக்கட்சியின் வீழ்ச்சிக்கே அவர் வழிவகுத்தார் என்றும் சுட்டிக்காட்டுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள், ஆனாலும் இறுதிகாலத்தில் சுதாகரித்துக் கொண்ட பிரதமர் ரணில் மேற்படி தமிழ் அரசியல்வாதியை ஓரங்கட்டினார் என்பதையும் தமது தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இப்போது நினைவூட்டுவதாகவும் தென்னிலங்கைச் செய்திகள் மேலும் கசிகின்றன.’ 

 ‘ஈழநாடு’ பத்திரிகை குறிப்பிடும் மேற்படி அரசியல்வாதி சுமந்திரன்தான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு வெகுநேரம் எடுக்காது. 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றை ஓரங்கட்டி- பங்காளிக் கட்சிகளைப் பகிரங்கமாக அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் விமர்சித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சிதறடிப்பதில் சுமந்திரனுக்குப் பாரிய பங்குண்டு என்றே தமிழ் அரசியல் பொது வெளியில் பரவலான கருத்துண்டு. 

 சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான் தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்யும் சுமந்திரன் போன்ற வாய்ச்சொல் வீரர்களையிட்டுத் தமிழ் மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டும். தற்போது தமிழ்த் தேசிய அரசியல் என்று கூறிக் கொண்டு இப்படியான வாய்ச்சொல் வீரர்களாகவே அதிகமானவர்கள் வலம் வருகிறார்கள். 

தமிழ்த் தேசிய அரசியலிலும்- தமிழர்களின் அரசியல் கலாசாரத்திலும் பாரிய ‘மாற்றம்’ நிகழும் வகையில் தமிழர்களின் அரசியல் சிந்தனைகள் இது காலவரையிலான மரபு வழித் தேர்தல் அரசியலிலிருந்து விடுபட்டுப் புதிய திசை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் தமிழர் அரசியலில் சுமந்திரன் போன்ற ‘சுயநலமி’ கள் நுழைவது தடுக்கப்படும். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகைக் கோணத்தினால் திசை திரும்ப வேண்டிய தருணம் இதுவாகும். புதியதோர் அரசியல் தலைமையையும் புதியதோர் அரசியல் கலாசாரத்தையும் தமிழர் அரசியல் வேண்டி நிற்கிறது. 
 

https://arangamnews.com/?p=7920

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும்

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் (வாக்கு மூலம் – 23) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டபய ராஜபக்சே மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது. 

எனவே, நாட்டின் எதிர்கால அரசைஅமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது’ (காலைக்கதிர் 15.07.2022 மின்னிதழ் மாலைப் பதிப்பு) 

இப்படி எந்தச் சட்டப் புத்தகத்தில் இருக்கிறது என்ற கேள்வியைச் சுமந்திரனிடம் எழுப்பும் அதேவேளை, சட்ட வரம்புகளுக்கு உட்படாத இப்படியான சுமந்திரனின் தன்னிச்சையான வியாக்கியானங்களால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் உண்டா? சுமந்திரன் சொல்வது எல்லாம் ‘வேத வாக்கு’ ஆகிவிடுமா? 

சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் போக்குகளைப் பார்த்தால் தமிழ்த் தேசிய அரசியல் இலக்குகளை மறந்துவிட்டுத் தனது சொந்த அரசியல் எதிர்காலத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுவது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ‘முந்திரிக்கொட்டை’ போல் முந்திக்கொண்டு ‘வித்துவக் காய்ச்சல்’ காரணமாக ‘அவசரக் குடுக்கை’ யாகவும் ‘அதிகப் பிரசங்கித்தனம்’ ஆகவும் நடந்து கொள்வதாகவே படுகிறது. இவரைக் குறித்துத் தமிழ் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இவர் மீதான கட்டுப்பாட்டைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழந்துவிட்டன போல்தான் தெரிகிறது. 

கடந்த பத்திகள் பலவற்றில் அவ்வப்போது சுமந்திரனின் அரசியல் நடத்தைகளைக் குறிப்பிட்டு, சுமந்திரன் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறாரா? அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கு – அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அரசியல் செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுப்பியிருந்தேன். 

இதனை ஊர்ஜிதம் செய்வது போன்று ‘ஈழநாடு’ பத்திரிகை தனது 26.06.2022 வாரமலரில் ‘தமிழ் அரசியல்வாதி ஒருவரினால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம்!’ எனத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதியின் பெயர் குறிப்பிடாமல் ஈழநாடு வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள முக்கியமான பகுதிகளை அதில் உள்ளபடி அப்படியே பதிவிடுகிறேன். 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு மாத்திரமன்றி, அந்தக் கட்சியின் முக்கிய உள்ளகக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் இந்த தமிழ்அரசியல்வாதி, அந்தக் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சிலமுக்கிய முடிவுகளை எடுக்க தூண்டுவதுடன், அந்தமுடிவுகளையே கட்சி செயல்படுத்தவும் வேண்டும் என கட்சியின் ஏனைய தலைவர்களை வற்புறுத்தி வருவதாகவும் மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன’ 

‘இதே போலவே கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமாக செயல்பட்ட இந்த அரசியல்வாதி, ஐக்கிய தேசியக்கட்சியின் உள் விவகாரங்களிலும் தலையிட்டு, பிரதமர் ரணில் மீது கடுமையாக செல்வாக்குச் செலுத்த முற்பட்டார் என்றும், அதன் விளைவாக ஐக்கிய தேசியக்கட்சியின் வீழ்ச்சிக்கே அவர் வழிவகுத்தார் என்றும் சுட்டிக்காட்டுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள், ஆனாலும் இறுதிகாலத்தில் சுதாகரித்துக் கொண்ட பிரதமர் ரணில் மேற்படி தமிழ் அரசியல்வாதியை ஓரங்கட்டினார் என்பதையும் தமது தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இப்போது நினைவூட்டுவதாகவும் தென்னிலங்கைச் செய்திகள் மேலும் கசிகின்றன.’ 

 ‘ஈழநாடு’ பத்திரிகை குறிப்பிடும் மேற்படி அரசியல்வாதி சுமந்திரன்தான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு வெகுநேரம் எடுக்காது. 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றை ஓரங்கட்டி- பங்காளிக் கட்சிகளைப் பகிரங்கமாக அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் விமர்சித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சிதறடிப்பதில் சுமந்திரனுக்குப் பாரிய பங்குண்டு என்றே தமிழ் அரசியல் பொது வெளியில் பரவலான கருத்துண்டு. 

 சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான் தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்யும் சுமந்திரன் போன்ற வாய்ச்சொல் வீரர்களையிட்டுத் தமிழ் மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டும். தற்போது தமிழ்த் தேசிய அரசியல் என்று கூறிக் கொண்டு இப்படியான வாய்ச்சொல் வீரர்களாகவே அதிகமானவர்கள் வலம் வருகிறார்கள். 

தமிழ்த் தேசிய அரசியலிலும்- தமிழர்களின் அரசியல் கலாசாரத்திலும் பாரிய ‘மாற்றம்’ நிகழும் வகையில் தமிழர்களின் அரசியல் சிந்தனைகள் இது காலவரையிலான மரபு வழித் தேர்தல் அரசியலிலிருந்து விடுபட்டுப் புதிய திசை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் தமிழர் அரசியலில் சுமந்திரன் போன்ற ‘சுயநலமி’ கள் நுழைவது தடுக்கப்படும். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகைக் கோணத்தினால் திசை திரும்ப வேண்டிய தருணம் இதுவாகும். புதியதோர் அரசியல் தலைமையையும் புதியதோர் அரசியல் கலாசாரத்தையும் தமிழர் அரசியல் வேண்டி நிற்கிறது. 

சுமந்திரனின் சுத்து மாத்துக்களை, கிழித்து  தொங்க விட்ட  நல்ல ஒரு கட்டுரை.
நேரம் ஒதுக்கி, கட்டாயம் இதனை படியுங்கள்.
இணைப்பிற்கு நன்றி...கிருபன் ஜீ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் அடிநாதமே இதுதான். 👇


““”சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான்தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. “”

சுமந்திரனை மூன்று  பகுதியினர் அறவே வெறுக்கின்றனர். 

1) இந்தியா 

இந்தியாவிற்கு சுமந்திரன் அமெரிக்காவின் முகவர், கிறீத்துவர் என்கின்ற காரணங்களுக்காக அவரை வெறுக்கின்றது

2) அதிதீவிர தமிழ்த் தேசியவாதிகள்.  

இவர்கள் சுமந்திரன் தமிழ்த் தேசிய உணர்வை சிதைத்துவிடுவார் என்கின்ற பயம்  காரணமாக அவரை வெறுக்கின்றனர். இந்தப் பகுதியினரில் மிக மிகப் பெரிய பங்கினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

3) அதி தீவிர, சாதி சமய பற்றாளர்கள். 

இவர்கள் சுமந்திரனை வெறுப்பதற்கான காரணத்தை புரியVAக்க வேண்டிய தேவை இல்லை.

 

சுமந்திரன் மட்டுமல்ல, யார் வந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் முன்புபோல  எல்லோருடனும் முரண்டு பிடிப்பதாய் இனிமேலும் தொடர முடியாது. 

நாம் மாற்றத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

”சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான்தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. “”

அத்துடன் தமிழரசு கட்சி அஸ்தமனமாகும். அதன் பின் பல புதிய முகங்களுடன் நல்ல திருப்பங்கள் ஏற்படலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கட்டுரையின் அடிநாதமே இதுதான். 👇


““”சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான்தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. “”

சுமந்திரனை மூன்று  பகுதியினர் அறவே வெறுக்கின்றனர். 

1) இந்தியா 

இந்தியாவிற்கு சுமந்திரன் அமெரிக்காவின் முகவர், கிறீத்துவர் என்கின்ற காரணங்களுக்காக அவரை வெறுக்கின்றது

2) அதிதீவிர தமிழ்த் தேசியவாதிகள்.  

இவர்கள் சுமந்திரன் தமிழ்த் தேசிய உணர்வை சிதைத்துவிடுவார் என்கின்ற பயம்  காரணமாக அவரை வெறுக்கின்றனர். இந்தப் பகுதியினரில் மிக மிகப் பெரிய பங்கினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

3) அதி தீவிர, சாதி சமய பற்றாளர்கள். 

இவர்கள் சுமந்திரனை வெறுப்பதற்கான காரணத்தை புரியVAக்க வேண்டிய தேவை இல்லை.

 

சுமந்திரன் மட்டுமல்ல, யார் வந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் முன்புபோல  எல்லோருடனும் முரண்டு பிடிப்பதாய் இனிமேலும் தொடர முடியாது. 

நாம் மாற்றத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். 

 

உங்களின் ஒன்றும் மூன்றாவதும் ஒரே கருத்து திரும்ப திரும்ப சொல்லியும் விளங்காத ஆட்கள் போல் சமையத்தை இழுப்பது   சும் விசுவாசிகளின் கடைசி ஆயுதம் சமயம் ஒன்றுதான் அதை விட்டு வேறு ஏதாவது சும் செய்த நாலு நல்ல விடயம்களை சொல்லி கருத்தாடுவது நல்லது அது முடியாது தமிழர்களுக்கு ஒரு நல்ல விடயம் கூட சும்மால் செய்யப்படவில்லை என்பதே உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

1) உங்களின் ஒன்றும் மூன்றாவதும் ஒரே கருத்து

2)திரும்ப திரும்ப சொல்லியும் விளங்காத ஆட்கள் போல் சமையத்தை இழுப்பது   சும் விசுவாசிகளின் கடைசி ஆயுதம்

3)சமயம் ஒன்றுதான் அதை விட்டு வேறு ஏதாவது சும் செய்த நாலு நல்ல விடயம்களை சொல்லி கருத்தாடுவது நல்லது அது முடியாது

4)தமிழர்களுக்கு ஒரு நல்ல விடயம் கூட சும்மால் செய்யப்படவில்லை என்பதே உண்மை .

பெருமாள் 

1)இந்தியாவும், இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் (மிகவும் சிறிய பகுதியினர்) ஒன்றல்ல. 

2) சாதாரண பொதுமக்கள் சமயத்தை இழுப்பதில்லை. எல்லா  சைவ/கிறீத்துவ சமயத்தவரும் சமய வேறுபாடு பார்ப்பவர்கள் என்றில்லை.  குறைவான ஆட்கள்தான் சமயத்தை இழுப்பவர்கள். சுமந்திரனுக்கு எதிராக சமயத்தை முன்வைப்பவர்கள் இந்தச் சிறுபான்மையினரே. அவர்களிடத்தில் அதிகார பலம், பண பலம் இருக்கிறது. இது உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் விதண்டாவாதமாக இதை மறுக்கிறீர்கள்.

இவற்றை நான் 1990களிலிருந்து (பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்து) கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் , அனுபவப்பட்டும் வருகிறேன். இதை மறுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

3+4) நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அதை நான் ஏற்கவோ மறுக்கவோ போவதில்லை. 

மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரை சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனுக்கு எதிராக எழுதப்பட்டதாக நான் கருதவில்லை. 

இந்தியச் சார்பு நிலையில் நின்று, சுமந்திரனுக்கு எதிராக  எழுதப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். 

 

2 hours ago, குமாரசாமி said:

அத்துடன் தமிழரசு கட்சி அஸ்தமனமாகும். அதன் பின் பல புதிய முகங்களுடன் நல்ல திருப்பங்கள் ஏற்படலாம்.

அஸ்தமனமாகும்.

புதிய சிந்தனைகள் இரு பகுதியினரிடம் இருந்தும் மேலெழ வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

பெருமாள் 

1)இந்தியாவும், இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் (மிகவும் சிறிய பகுதியினர்) ஒன்றல்ல. 

2) சாதாரண பொதுமக்கள் சமயத்தை இழுப்பதில்லை. எல்லா  சைவ/கிறீத்துவ சமயத்தவரும் சமய வேறுபாடு பார்ப்பவர்கள் என்றில்லை.  குறைவான ஆட்கள்தான் சமயத்தை இழுப்பவர்கள். சுமந்திரனுக்கு எதிராக சமயத்தை முன்வைப்பவர்கள் இந்தச் சிறுபான்மையினரே. அவர்களிடத்தில் அதிகார பலம், பண பலம் இருக்கிறது. இது உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் விதண்டாவாதமாக இதை மறுக்கிறீர்கள்.

இவற்றை நான் 1990களிலிருந்து (பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்து) கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் , அனுபவப்பட்டும் வருகிறேன். இதை மறுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

3+4) நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அதை நான் ஏற்கவோ மறுக்கவோ போவதில்லை. 

மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரை சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனுக்கு எதிராக எழுதப்பட்டதாக நான் கருதவில்லை. 

இந்தியச் சார்பு நிலையில் நின்று, சுமந்திரனுக்கு எதிராக  எழுதப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். 

சுருக்கமாக ஒரே ஒரு கேள்வி சுமத்திரன் அரசியலுக்கு வந்து இதுவரை தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன  என்று சொல்ல முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பெருமாள் said:

சுருக்கமாக ஒரே ஒரு கேள்வி சுமத்திரன் அரசியலுக்கு வந்து இதுவரை தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன  என்று சொல்ல முடியுமா ?

 

இதில் தமிழருக்கு  என்பதை  தவிர்த்து பார்த்தால்...?

சிங்களத்தின் வண்டி 2009க்கு  பின்னர்  ஒட இவரின் பங்கு  மிக மிக முக்கியம்  அவசியம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Parliament of Sri Lanka - Sivagnanam Shritharan    ஊவா மாகாண முதலமைச்சரை நீக்கக் கோரி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்! | Seithy.com  - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil  breaking news,tamilclassifieds,tamil entertainment ...   ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா
 
ஒரு விடயத்தை கூற மறந்துவிட்டேன். மறந்து விட்டேன் என்று கூறுவதை விட அதனை தவிர்த்திருந்தேன் என்பதே உண்மை. நேற்று ஒருவர் தமிழ் உள்ளூராட்சி அரசியல்வாதி ஒருவரின் பதிவில் என்னை Tag செய்திருந்தார். அந்த பதிவில் அவருக்கு வழங்கிய பதிலில் நான் மறந்த / தவிர்த்த விடயத்தை எழுத நேர்ந்தது.
 
அதன் பின் அந்த விடயத்தை இங்கே பொது வெளியில் குறிப்பிடாமல் இருப்பதில் அர்த்தமில்லை.
 
சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி நகரில் TNA நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்தித்திக்க நேர்ந்தது. பேச்சுவாக்கில் அவர் கூறியது இதுதான். " எங்கட ஆள் அதுக்கு சரிபட்டு வரமாட்டார்"
 
இதில் எங்கட ஆள் என்பது பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிறிதரன் அவர்கள்.
அதுக்கு என்பது TNAயின் தலைமை பதவி.
 
அவருடைய கருத்தில் பிரதிபலிப்பது திரு. சிறிதரன் அவர்கள் TNAக்கு தலைமை தாங்கும் அளவுக்கு Competent Politician அல்ல என்பதுதான். அப்படியென்றால் யார் அந்த Competent அரசியல்வாதி என்கின்ற கேள்வி எழும்?
 
அது ஒன்றும் ஒழிவு மறைவான விடயம் அல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சுமந்திரன் அவர்களும், திரு. சாணக்கியன் அவர்களுமே அந்த தகுதிவாய்ந்த அரசியல்வாதிகளாக இருக்க முடியும்.
 
திரு. சிறிதரன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கின் அவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. திரு. சாணக்கியன் அவர்களுக்கு மும்மொழி ஆற்றல் உண்டு. ஒருவர் ஆங்கிலம் பேசினால் அவர் தகுதியான ஆள் என்று அர்த்தம் கிடையாது.
 
ஆங்கிலம் தெரிந்தவர் எல்லோரும் அறிவாளிகளும் கிடையாது.
உலகின் அரசியலில் தலைமை தாங்கிய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே மொழியாற்றலை வைத்து திரு.சிறிதரன் அவர்களை குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையது அல்ல.
 
அதே போன்று திரு.சிறிதரன் அவர்களை விட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் தகுதியானவர் என்று கூறவும் முடியாது. திரு. சுமந்திரன் அவர்கள் சட்டபுலமை மிக்கவர் தொழிற்சார் நிபுணத்துவம் மிக்கவும். அது அவரது தொழிலில் அவர் அடைந்த சிறப்பு தேர்ச்சி. அதே போன்று திரு. சிறிதரன் அவர்களும் தனது ஆசிரியர் தொழிலில் சிறப்பு தேர்ச்சியுடையவராக இருக்கலாம்.
 
திரு.சுமந்திரன் அவர்கள் போன்று இவருக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம். அதே போன்று அவருக்கு இவரை பேன்று Art of Teaching தெரியாமல் இருக்கலாம். ஒருவருடைய தொழிலுடன் ஒப்பிட்டு மற்றைமவரை குறைத்து மதிப்பிடுவது தவறானது. ஏற்புடையதும் அல்ல.
 
திரு. சுமந்திரனின் அவர்களின் சட்ட புலமை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்களை விட சிங்களவர்களுக்கும், தேசிய அரசியலுக்குமே அதிகம் பயன்படுகின்றது.
 
திரு. சுமந்திரன் அவர்கள் அரசியலுக்கு அறிமுகமாகி கிட்டதட்ட 10 ஆண்டுகளில் தமிழர்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் அவர் எதனையும் தனது சட்டப்புலமை மூலம் செய்தது கிடையாது.
 
குறைந்த பட்சம் தமிழர்களுக்கு தேவையான Devolution Packageஐ கூட அவர் தயாரித்து முன்மொழியவில்லை. கடநத சில ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்ற மாகாணசபையை கூட இயங்க வைக்க அவரால் முடியவில்லை.
 
அவரும் ஏனைய அரசியல் வாதிகள் போன்றே வெட்டி பேச்சுக்களுடன் கடந்து செல்கின்றார். அவர் இப்போதெல்லாம் தமிழர்களின் தேசிய பியச்சினை தொடர்பில் பேசுவது கூட இல்லை. தேசிய அரசியல் அல்லது புலிகளின் பாணியில் கூறுவதானால் தென்னிலைங்கை சிங்கள பேரினவாத அரசியலில் மட்டுமே ஈடுபடுகின்றார்.
 
திரு. சுமந்திரன் அவர்களும் திரு. சிறிதரன் அவர்களும் அரசியலில் சமகாலத்தில் பிரவேசித்தவர்கள்.
 
இன்று திரு.சுமந்திரன் அவர்கள் அதிகம் பேசும் மக்கள் ஆணையில்லா பின்கதவு வழியின் ஊடாகவே அவரும் அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகினார். ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் மக்களால தெரிவு செய்யப்பட்டு தனது அரசியலை ஆரம்பித்தவர்.
 
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் நிரந்தர வெற்றியை கையில் வைத்திருக்கும் இருவரில் திரு. சிறிதரன் அவர்களும் ஒருவர். தனக்கான உறுதியான வாக்கு வங்கியை கைவசம் வைத்திருக்கின்றார். ஆனால் திரு. சுமந்திரன் அவர்களின் நிலை அவ்வாறனது அல்ல. கடந்த தேர்தலில் திரு.சிறிதரன் அவய்களின் ஆதரவிலேயே கணிசமான வாக்குகளை தனதாக்கி இருந்தார்.
 
சமீபத்தையை ராஜதந்திர மட்டங்களில் திரு.சுமந்திரன் அவர்கள் தனது சொந்த விருப்பின் பெயரில் ஏற்படுத்தும் குளறுபடிகள் காரணமாக அடுத்த தேர்தலில் அவரின் வெற்றி கேள்விக்குறியாக மாறியுள்ளது. அநேகமாக அவர் மக்கள் ஆணையை இழந்த தேசிய பட்டியல் MPயாகவே பாராளுமன்றத்தில் எதெர்காலத்தில் வீற்றிருக்க கூடும்.
 
ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் உறுதியான தேர்தல் வெற்றியை பதிவு செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்.
 
எனவே திரு. சிறிதரன் அவர்கள் TNAயின் தலைமை பதவிக்கு திரு.சுமந்திரன் அவர்களை விட குறைந்தவராகவோ Incompetent Politician ஆகவோ இல்லை என்பதே உண்மை.
 
தனிப்பட்ட விமர்சனங்கள், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தால் திரு. சம்மந்தன் அவர்களுகாகு பின் ஏற்படும் தலைமைத்துவ வெற்றிடத்துக்கு திரு. சிறிதரன் அவர்களும் பொருத்தமான ஒரு அரசியல்வாதியாகவே உள்ளார். அவர் அதுக்கு சரிபட்டு வரக்கூடியவர்தான்.
 
பிற்குறிப்பு: இந்த உண்மையை கூறியதற்காக எனக்கு TNA முத்திரை குத்தி திரு. சிறிதரன் அவர்களின் ஆதரவாளர் என்று நீங்களை கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதி ஆக்கினால் தமிழினத்தின் தற்கொலைக்கு சமம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதி ஆக்கினால் தமிழினத்தின் தற்கொலைக்கு சமம்.

ஆளை கட்சிக்குள் கொண்டு வந்து, வில்லங்கமாக சேர்த்தது சம்பந்தனாம்.
இந்த இருவரும் சேர்ந்து... நொந்த தமிழ் இனத்தை, படு குழியில் தள்ளி விட்டார்கள்.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனைப்பற்றி தெரியாது அனுபவமில்லை

ஆனால்  சிறிதரன்???

இவர்  தலமை  தாங்கினால் இந்திய  அல்லது  தமிழக அரசியல்  தான்  செய்வார் 

பல  தலைமுறைக்கு எமது  தேசம்  பின் தள்ளப்பட்டு  விடும்???

(இந்திய தமிழக  உறவுகள்  மன்னிக்கவும்)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

ஆளை கட்சிக்குள் கொண்டு வந்து, வில்லங்கமாக சேர்த்தது சம்பந்தனாம்.
இந்த இருவரும் சேர்ந்து... நொந்த தமிழ் இனத்தை, படு குழியில் தள்ளி விட்டார்கள்.  

அங்காலை விசுகரும் ஏதோ சொல்லுறார். ஆர் வந்தால் திறம் எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

சுமந்திரனைப்பற்றி தெரியாது அனுபவமில்லை

ஆனால்  சிறிதரன்???

இவர்  தலமை  தாங்கினால் இந்திய  அல்லது  தமிழக அரசியல்  தான்  செய்வார் 

பல  தலைமுறைக்கு எமது  தேசம்  பின் தள்ளப்பட்டு  விடும்???

(இந்திய தமிழக  உறவுகள்  மன்னிக்கவும்)

 

2 minutes ago, குமாரசாமி said:

அங்காலை விசுகரும் ஏதோ சொல்லுறார். ஆர் வந்தால் திறம் எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? 😎

இப்போது... இருப்பவர்களில், 
அடுத்த தலைமைக்கு தகுதியானவர் யார் என்று  நினைக்கின்றீர்கள்? 

அடுத்த தலைமைக்கு... சரியான இளையவர்களை  
நாம் தயார் படுத்தவில்லை என்பதே, கசப்பான உண்மை.

குறுகிய காலம்தான் உள்ளது. அதற்குள்... ஒரு சிலரையாவது 
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள் வாங்கப் பட வேண்டும்.

அதே நேரம்... 10 வருடத்துக்கு மேல், தமிழர்களுக்கு எதனையுமே 
பெற்றுக்  கொடுக்காத அரசியல் வாதிகள் ஒய்வு பெற வேண்டும்.

அப்படி... இனியும், போட்டி போட்டால், தலை நிமிர முடியாத அளவிற்கு 
வாக்குச் சீட்டின் மூலம்  பதிலடி கொடுக்க வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

 

இப்போது... இருப்பவர்களில், 
அடுத்த தலைமைக்கு தகுதியானவர் யார் என்று  நினைக்கின்றீர்கள்? 

அடுத்த தலைமைக்கு... சரியான இளையவர்களை  
நாம் தயார் படுத்தவில்லை என்பதே, கசப்பான உண்மை.

குறுகிய காலம்தான் உள்ளது. அதற்குள்... ஒரு சிலரையாவது 
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள் வாங்கப் பட வேண்டும்.

அதே நேரம்... 10 வருடத்துக்கு மேல், தமிழர்களுக்கு எதனையுமே 
பெற்றுக்  கொடுக்காத அரசியல் வாதிகள் ஒய்வு பெற வேண்டும்.

அப்படி... இனியும், போட்டி போட்டால், தலை நிமிர முடியாத அளவிற்கு 
வாக்குச் சீட்டின் மூலம்  பதிலடி கொடுக்க வேண்டும்.

 

கட்சிகளுக்குள் இல்லை என்பதே  கசப்பான  உண்மை

இளையவர்கள்

அந்த  மக:களை  நேசிப்பவர்கள்

தாயகப்பற்றாளர்கள்

முன்  வரணும்

ஆனால் தேச இளையர்கள் அரசியலில்  ஆர்வமற்றவர்களாக (தோல்வி மற்றும் சுயநலம்?) மாறி  வருகிறாரகள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுருக்கமாக ஒரே ஒரு கேள்வி சுமத்திரன் அரசியலுக்கு வந்து இதுவரை தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன  என்று சொல்ல முடியுமா ?

உங்களிடம் அதே கேள்வியை கொஞ்சம் அகலமாக முன்வைக்கிறேன. பதிலளியுங்கள். 

தமிழ் அரசியல்வாதிகள் அரசியலுக்கு வந்து தமிழருக்குச் செய்த நன்மைகள் என்ன ?

தமிழருக்கு நன்மை செய்த ஒரு தமிழ் அரசியல்வாதியைக் காட்டுங்கள் , சுமந்திரன் என்ன செய்தாரென்று நான் கூறுகிறேன். 

1 hour ago, குமாரசாமி said:

சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதி ஆக்கினால் தமிழினத்தின் தற்கொலைக்கு சமம்.

இப்ப மட்டும் என்ன வாழுதாம் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:
Parliament of Sri Lanka - Sivagnanam Shritharan    ஊவா மாகாண முதலமைச்சரை நீக்கக் கோரி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்! | Seithy.com  - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil  breaking news,tamilclassifieds,tamil entertainment ...   ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா
 
ஒரு விடயத்தை கூற மறந்துவிட்டேன். மறந்து விட்டேன் என்று கூறுவதை விட அதனை தவிர்த்திருந்தேன் என்பதே உண்மை. நேற்று ஒருவர் தமிழ் உள்ளூராட்சி அரசியல்வாதி ஒருவரின் பதிவில் என்னை Tag செய்திருந்தார். அந்த பதிவில் அவருக்கு வழங்கிய பதிலில் நான் மறந்த / தவிர்த்த விடயத்தை எழுத நேர்ந்தது.
 
அதன் பின் அந்த விடயத்தை இங்கே பொது வெளியில் குறிப்பிடாமல் இருப்பதில் அர்த்தமில்லை.
 
சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி நகரில் TNA நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்தித்திக்க நேர்ந்தது. பேச்சுவாக்கில் அவர் கூறியது இதுதான். " எங்கட ஆள் அதுக்கு சரிபட்டு வரமாட்டார்"
 
இதில் எங்கட ஆள் என்பது பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிறிதரன் அவர்கள்.
அதுக்கு என்பது TNAயின் தலைமை பதவி.
 
அவருடைய கருத்தில் பிரதிபலிப்பது திரு. சிறிதரன் அவர்கள் TNAக்கு தலைமை தாங்கும் அளவுக்கு Competent Politician அல்ல என்பதுதான். அப்படியென்றால் யார் அந்த Competent அரசியல்வாதி என்கின்ற கேள்வி எழும்?
 
அது ஒன்றும் ஒழிவு மறைவான விடயம் அல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சுமந்திரன் அவர்களும், திரு. சாணக்கியன் அவர்களுமே அந்த தகுதிவாய்ந்த அரசியல்வாதிகளாக இருக்க முடியும்.
 
திரு. சிறிதரன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கின் அவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. திரு. சாணக்கியன் அவர்களுக்கு மும்மொழி ஆற்றல் உண்டு. ஒருவர் ஆங்கிலம் பேசினால் அவர் தகுதியான ஆள் என்று அர்த்தம் கிடையாது.
 
ஆங்கிலம் தெரிந்தவர் எல்லோரும் அறிவாளிகளும் கிடையாது.
உலகின் அரசியலில் தலைமை தாங்கிய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே மொழியாற்றலை வைத்து திரு.சிறிதரன் அவர்களை குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையது அல்ல.
 
அதே போன்று திரு.சிறிதரன் அவர்களை விட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் தகுதியானவர் என்று கூறவும் முடியாது. திரு. சுமந்திரன் அவர்கள் சட்டபுலமை மிக்கவர் தொழிற்சார் நிபுணத்துவம் மிக்கவும். அது அவரது தொழிலில் அவர் அடைந்த சிறப்பு தேர்ச்சி. அதே போன்று திரு. சிறிதரன் அவர்களும் தனது ஆசிரியர் தொழிலில் சிறப்பு தேர்ச்சியுடையவராக இருக்கலாம்.
 
திரு.சுமந்திரன் அவர்கள் போன்று இவருக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம். அதே போன்று அவருக்கு இவரை பேன்று Art of Teaching தெரியாமல் இருக்கலாம். ஒருவருடைய தொழிலுடன் ஒப்பிட்டு மற்றைமவரை குறைத்து மதிப்பிடுவது தவறானது. ஏற்புடையதும் அல்ல.
 
திரு. சுமந்திரனின் அவர்களின் சட்ட புலமை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்களை விட சிங்களவர்களுக்கும், தேசிய அரசியலுக்குமே அதிகம் பயன்படுகின்றது.
 
திரு. சுமந்திரன் அவர்கள் அரசியலுக்கு அறிமுகமாகி கிட்டதட்ட 10 ஆண்டுகளில் தமிழர்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் அவர் எதனையும் தனது சட்டப்புலமை மூலம் செய்தது கிடையாது.
 
குறைந்த பட்சம் தமிழர்களுக்கு தேவையான Devolution Packageஐ கூட அவர் தயாரித்து முன்மொழியவில்லை. கடநத சில ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்ற மாகாணசபையை கூட இயங்க வைக்க அவரால் முடியவில்லை.
 
அவரும் ஏனைய அரசியல் வாதிகள் போன்றே வெட்டி பேச்சுக்களுடன் கடந்து செல்கின்றார். அவர் இப்போதெல்லாம் தமிழர்களின் தேசிய பியச்சினை தொடர்பில் பேசுவது கூட இல்லை. தேசிய அரசியல் அல்லது புலிகளின் பாணியில் கூறுவதானால் தென்னிலைங்கை சிங்கள பேரினவாத அரசியலில் மட்டுமே ஈடுபடுகின்றார்.
 
திரு. சுமந்திரன் அவர்களும் திரு. சிறிதரன் அவர்களும் அரசியலில் சமகாலத்தில் பிரவேசித்தவர்கள்.
 
இன்று திரு.சுமந்திரன் அவர்கள் அதிகம் பேசும் மக்கள் ஆணையில்லா பின்கதவு வழியின் ஊடாகவே அவரும் அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகினார். ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் மக்களால தெரிவு செய்யப்பட்டு தனது அரசியலை ஆரம்பித்தவர்.
 
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் நிரந்தர வெற்றியை கையில் வைத்திருக்கும் இருவரில் திரு. சிறிதரன் அவர்களும் ஒருவர். தனக்கான உறுதியான வாக்கு வங்கியை கைவசம் வைத்திருக்கின்றார். ஆனால் திரு. சுமந்திரன் அவர்களின் நிலை அவ்வாறனது அல்ல. கடந்த தேர்தலில் திரு.சிறிதரன் அவய்களின் ஆதரவிலேயே கணிசமான வாக்குகளை தனதாக்கி இருந்தார்.
 
சமீபத்தையை ராஜதந்திர மட்டங்களில் திரு.சுமந்திரன் அவர்கள் தனது சொந்த விருப்பின் பெயரில் ஏற்படுத்தும் குளறுபடிகள் காரணமாக அடுத்த தேர்தலில் அவரின் வெற்றி கேள்விக்குறியாக மாறியுள்ளது. அநேகமாக அவர் மக்கள் ஆணையை இழந்த தேசிய பட்டியல் MPயாகவே பாராளுமன்றத்தில் எதெர்காலத்தில் வீற்றிருக்க கூடும்.
 
ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் உறுதியான தேர்தல் வெற்றியை பதிவு செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்.
 
எனவே திரு. சிறிதரன் அவர்கள் TNAயின் தலைமை பதவிக்கு திரு.சுமந்திரன் அவர்களை விட குறைந்தவராகவோ Incompetent Politician ஆகவோ இல்லை என்பதே உண்மை.
 
தனிப்பட்ட விமர்சனங்கள், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தால் திரு. சம்மந்தன் அவர்களுகாகு பின் ஏற்படும் தலைமைத்துவ வெற்றிடத்துக்கு திரு. சிறிதரன் அவர்களும் பொருத்தமான ஒரு அரசியல்வாதியாகவே உள்ளார். அவர் அதுக்கு சரிபட்டு வரக்கூடியவர்தான்.
 
பிற்குறிப்பு: இந்த உண்மையை கூறியதற்காக எனக்கு TNA முத்திரை குத்தி திரு. சிறிதரன் அவர்களின் ஆதரவாளர் என்று நீங்களை கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

கொடுப்புக்குள் சிரிக்கப்போகின்றார்கள். பதிவை நீக்கிவிடுங்கள் 🤣

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தர விரும்பாத சிறீதரன் TNA யின் தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர் ? 

ஒருவன் முடவன் என்பதற்காக தலைமை தாங்க முடியாதென்றால் இன்னொரு குருடன் எப்படி வழிகாட்டியாக முடியும் ? 

🤣

Edited by Kapithan
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

கொடுப்புக்குள் சிரிக்கப்போகின்றார்கள். பதிவை நீக்கிவிடுங்கள் 🤣

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தர விரும்பாத சிறீதரன் TNA யின் தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர் ? 

ஒருவன் முடவன் என்பதற்காக தலைமை தாங்க முடியாதென்றால் இன்னொரு குருடன் எப்படி வழிகாட்டியாக முடியும் ? 

🤣

 

நெத்தியடி...

இனி  கருத்துக்களை  வைப்பது???😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இப்போது... இருப்பவர்களில், 
அடுத்த தலைமைக்கு தகுதியானவர் யார் என்று  நினைக்கின்றீர்கள்? 

2 hours ago, Kapithan said:

இப்ப மட்டும் என்ன வாழுதாம் ? 

 

இது வரைக்கும் ஒரு சல்லிக்கும் உதவாத உந்த கட்சியையே கலைத்து விட்டால் என்ன?
அந்த பெயரை வைத்து தானே இவ்வளவு ஆட்டம் போடுகின்றார்கள்.
நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவித பிரயோசனமும் இல்லாமல் அந்தந்த உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சிங்கள இனவாத கட்சிகளுக்கும் உதவினதுதான் மிச்சம்.


சுமந்திரன் நாட்டுக்கு சேவைசெய்ய விரும்பினால் அம்பன்/குடத்தனையில் சுயேட்சையாக போட்டியிடட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 

இது வரைக்கும் ஒரு சல்லிக்கும் உதவாத உந்த கட்சியையே கலைத்து விட்டால் என்ன?
அந்த பெயரை வைத்து தானே இவ்வளவு ஆட்டம் போடுகின்றார்கள்.
நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவித பிரயோசனமும் இல்லாமல் அந்தந்த உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சிங்கள இனவாத கட்சிகளுக்கும் உதவினதுதான் மிச்சம்.


சுமந்திரன் நாட்டுக்கு சேவைசெய்ய விரும்பினால் அம்பன்/குடத்தனையில் சுயேட்சையாக போட்டியிடட்டும்.

TNA யில் உள்ள மிகுதி ? 

கட்சியைக் கலைப்பது நல்ல யோசனை  😀

கவைப்படாதீர்கள், சம்பந்தர் படுக்க உங்கள்/எங்கள் விருப்பம் இனிதே நிறைவேறும். 🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

TNA யில் உள்ள மிகுதி ? 

கட்சியைக் கலைப்பது நல்ல யோசனை  😀

கவைப்படாதீர்கள், சம்பந்தர் படுக்க உங்கள்/எங்கள் விருப்பம் இனிதே நிறைவேறும். 🤣

 

இப்ப மட்டும் உங்க  சம்பந்தர் என்ன  செய்கிறாராம்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

 

இப்ப மட்டும் உங்க  சம்பந்தர் என்ன  செய்கிறாராம்?😂

நான் பாடையில் படுப்பதை கொஞ்சூண்டு நாகரீகமாகச் சொன்னேன். அதையும் காட்டிக் கொடுக்கிறீங்களே.. இது உங்களுக்கே அடுக்குமா ?

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நான் பாடையில் படுப்பதை கொஞ்சூண்டு நாகரீகமாகச் சொன்னேன். அதையும் காட்டிக் கொடுக்கிறீங்களே.. இது உங்களுக்கே அடுக்குமா ?

🤣

 

நானும்  கொஞ்சூண்டு நாகரீகமாகச் சொல்ல  முயற்சித்தேன்?

மாட்டிக்கொண்டேனா?🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

உங்களிடம் அதே கேள்வியை கொஞ்சம் அகலமாக முன்வைக்கிறேன. பதிலளியுங்கள். 

தமிழ் அரசியல்வாதிகள் அரசியலுக்கு வந்து தமிழருக்குச் செய்த நன்மைகள் என்ன ?

தமிழருக்கு நன்மை செய்த ஒரு தமிழ் அரசியல்வாதியைக் காட்டுங்கள் , சுமந்திரன் என்ன செய்தாரென்று நான் கூறுகிறேன். 

பல தடவை யாழில் கருத்துக்களை வைத்து விட்டேன் இளைய அரசியல்வாதிகளுக்கு வழிவிட்டு சிறியண்ணா சொல்வது போல் 1௦ வருடங்களுக்கு மேல் தமிழருக்கு எதையும் பெற்று கொடுக்காத அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஓய்வுக்கு போவது நல்லது சைக்கிள் கூட்டம் உள்ளடங்கலாக .

செய்வார்களா ? பெட்டி வாங்கி குவிப்பதுக்கு தமிழர் பிரச்சனையை சாட்டாக வைத்து தமிழரின் ரத்தம் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையில் இவர்களுக்கு எங்கள் பிரச்சனை தீர்வது பிடித்தமான ஒன்றல்ல .

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 முறைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக இருக்க முடியாது என சட்டம் இயற்றப்பட வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டோர் நேரடி அரசியலில் ஈடுபடக்கூடாது, ஆலோசகர்களாக செயற்படலாம் எனவும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.