Jump to content

நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி

கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன்.

சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியதால் இதனை எழுதுகிறேன்.

பதிவாளர் அம்பிகா சற்குணநாதன். அவரேதான், சுமந்திரனால் அரசியலுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டு பின்னர் செய்திகளிலிருந்து சிறிது சிறிதாகக் காணாமற்போனவர். 

அவரது இன்றைய பதிவில் 1999 ஆம் ஜூலை மாதம் 29 ஆம் ஆண்டு புலிகளின் தற்கொலைப் போராளி ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிங்களவர்களின் நண்பனாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவராக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் நினைவுநாள் என்று பதிவுசெய்து, புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நல்ல அரசியல்வாதி, மனிதவுரிமைவாதி என்று எழுதியிருந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் இப்பதிவை மீள்ப் பதிவாகப் பதிய இன்னும் சிலர் தமது கருத்துக்களை இட்டிருந்தனர். 

பதியப்பட்ட பல சிங்களவர்களின் கருத்துக்களில் நீலன் ஒரு முற்போக்கு, மிதவாத அரசியல்வாதியென்றும், இலங்கை ஒரு சிறந்த கல்வியாளனை, சட்டத்திறமையுள்ள மனிதரை பறிகொடுத்துவிட்டதென்றும், முற்போக்குத்தனமான மிதவாத தலைவர்களைக்  கொல்வதை புலிகள் ஒரு தொழிலாகவே செய்துவந்தனர் என்றும் பதிவிட்டிருந்தனர்.

இதனைப் புலிகள் செய்தார்களா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால், செய்யப்பட்டதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று நான் அறிந்துகொண்டவை பற்றி எனக்கு எதுவித சந்தேகங்களும் இருக்கவில்லை என்பதற்கப்பால், இக்கொலை நடந்திருக்கத் தேவையில்லை என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். 

உனது நண்பர்கள் யாரென்று சொல், நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்று யாரோ ஒருவர் எப்போது சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாராம். அதுபோலத்தான் நீலனின் நண்பர்களும். நீலன் இறந்த செய்தி வந்தபோது முழு சிங்களப் பெளத்த உயர்வர்க்கமும் இரங்கியது. அரச வானொலியும், தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இந்த மரணத்தை மிகப்பெரும் பேசுபொருளாக மாற்றியிருந்ததுடன், புலிகள் மீது சேறு பூசும் தமது பிரச்சாரத்திற்காக இதனை மிகவும் திறமையாகவும் பாவித்துக்கொண்டன. 

எனது கேள்வி என்னவென்றால், நீலன் இறந்தபோதும், கதிர்காமர் இறந்தபோதும் சிங்களம் அவர்களின் மரணங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை ரவிராஜோ, பரராஜசிங்கமோ கொல்லப்பட்டபோது கொடுத்ததா? அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? நான் விளங்கிக்கொண்ட வகையில் நீலனும் கதிர்காமரும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் நெருங்கியவர்கள். அவர்கள் செய்யும் அரசியலால் சிங்களத்திற்கு பாதிப்பேதும் வரப்போவதில்லை என்பதில் சிங்களம் மிகவும் உறுதியாக இருந்தது. இவர்களைத் தன்னுடன் வைத்திருப்பதன்மூலம் சர்வதேசத்தில் தமிழ் மிதவாதத் தலைவர்கள் எம்முடன் இருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கென்று அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யவும், புலிகளாலோ அல்லது வேறு எவராலோ இவர்கள் கொல்லப்படும்போது இவர்களின் மரணங்களை புலிகளுக்கெதிரான பிரச்சாரத்திற்குப் பாவிப்பதற்கும் சிங்களத்திற்கு இவர்கள் தேவைப்பட்டார்கள். 

நீலன் கொல்லப்பட்டபோது நான் கொழும்பில் இருந்தேன். அவர் கொல்லப்படும்வரை நீலனின் இருப்புப் பற்றி அறியும் தேவை எனக்கு இருந்ததில்லை. அதற்கான பல காரணங்களில் சிலவற்றை இங்கு பதிகிறேன்.
நீலன் என்றால் எனக்கு அன்றைய நாட்களில் நினைவிற்கு வந்தது சமாதானத்திற்காகப் போர் நடத்திய சந்திரிக்காவின் அரசியல் ஆலோசகர் என்பது. அதாவது ஒரு சிங்கள பெளத்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் என்பது. அடுத்ததாக அவரும் ஜி எல் பீரிஸும் இணைந்து உருவாக்கிய சந்திரிக்காவின் தீர்வுப்பொதி. கொழும்பில், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் நெருங்கிப் பழகிய பல மேற்தட்டு தமிழர்களைப் பொறுத்தவரை நீலனின் பொதி தமிழர்களுக்கு உண்மையாகவே தீர்வு ஒன்றினைத் தரவிருந்ததாக நம்பியிருந்தனர். வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதியென்றும், மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் என்றும், மத்திய - மாகாண அரசுகளுக்கிடையிலான சுமூகமான உறவு என்றும் பல விடயங்கள் பேசப்பட்டன. இவை எவற்றையும் ஏறெடுத்தும் பார்க்காத புலிகள் சந்திரிக்காவை போருக்குள் இழுத்துவிட்டனர் என்றும் இதே தமிழர்கள் வசைபாடினர். இன்னும் சிலருக்கு நீலனின் கொலைபற்றி எழுதுவது தமது ஆங்கிலப் புலமையினைக் காட்டுவதற்கும், சிங்களவர்களுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்குமான ஒரு காரணமாக ஆகிவிட்டிருந்தது. ஆனால், புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு சந்திரிக்கா ஆரம்பித்தபோரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை, அது தேவையுமில்லை. 
அடுத்தது, நீலன் தொடர்பாக நான் நினைவில் வைத்திருக்கும் இன்னொரு விடயம்தான் லக்ஷ்மன் கதிர்காமர் எனும் கோடரிக் காம்பை போர்தேவதையான சந்திரிக்காவுக்கு அறிமுகம் செய்துவைத்த மனிதர் என்பது. கதிர்காமர் சிங்கள பெளத்த இனவாதிகளுக்கு ஏன் உற்ற நண்பராகத் தெரிந்தார் என்பதும், அவரால் எமது விடுதலைப் போராட்டம் எவ்வகையான பின்னடைவுகளைச் சந்தித்தது என்பதும் வரலாறு. 

கொழும்பில் பிறந்து, சிங்கள உயர்தட்டுவர்க்கப் பாடசாலையான ரோயல் கல்லூரியில் கல்விகற்று, பேராதனையில் பட்டப்படிப்பு முடித்து, வடக்குக் கிழக்குத் தமிழர்களின் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் குறித்த பிரக்ஞையற்று வாழ்ந்து, சிங்கள பெளத்த அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் மிக நெருங்கிப் பழகி, அவர்களின் அரசியல் ஆலோசகர்களாக, வெளிவிவகார அமைச்சர்களாக தம்மை அலங்கரித்துக்கொண்ட நீலன், கதிர்காமர் போன்றவர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கும் அம்பிகா சற்குணநாதன் போன்ற மனிதவுரிமைவாதிகள் பரராஜசிங்கம், ரவிராஜ், நடேசன், தமிழ்ச்செல்வன், புலித்தேவன் பற்றியும் பேசட்டும். 

இவர்களது மரணங்களை சிங்கள பெளத்தம் எமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தும் பிரச்சாரத்திற்காகப் பாவித்துக்கொண்டது என்பதற்கப்பால் இவர்களின் மரணங்கள் குறித்து எனக்கு சிறிது கவலையும் இல்லை. 

  • Like 8
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி

கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன்.

சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியதால் இதனை எழுதுகிறேன்.

பதிவாளர் அம்பிகா சற்குணநாதன். அவரேதான், சுமந்திரனால் அரசியலுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டு பின்னர் செய்திகளிலிருந்து சிறிது சிறிதாகக் காணாமற்போனவர். 

அவரது இன்றைய பதிவில் 1999 ஆம் ஜூலை மாதம் 29 ஆம் ஆண்டு புலிகளின் தற்கொலைப் போராளி ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிங்களவர்களின் நண்பனாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவராக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் நினைவுநாள் என்று பதிவுசெய்து, புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நல்ல அரசியல்வாதி, மனிதவுரிமைவாதி என்று எழுதியிருந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் இப்பதிவை மீள்ப் பதிவாகப் பதிய இன்னும் சிலர் தமது கருத்துக்களை இட்டிருந்தனர். 

பதியப்பட்ட பல சிங்களவர்களின் கருத்துக்களில் நீலன் ஒரு முற்போக்கு, மிதவாத அரசியல்வாதியென்றும், இலங்கை ஒரு சிறந்த கல்வியாளனை, சட்டத்திறமையுள்ள மனிதரை பறிகொடுத்துவிட்டதென்றும், முற்போக்குத்தனமான மிதவாத தலைவர்களைக்  கொல்வதை புலிகள் ஒரு தொழிலாகவே செய்துவந்தனர் என்றும் பதிவிட்டிருந்தனர்.

இதனைப் புலிகள் செய்தார்களா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால், செய்யப்பட்டதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று நான் அறிந்துகொண்டவை பற்றி எனக்கு எதுவித சந்தேகங்களும் இருக்கவில்லை என்பதற்கப்பால், இக்கொலை நடந்திருக்கத் தேவையில்லை என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். 

உனது நண்பர்கள் யாரென்று சொல், நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்று யாரோ ஒருவர் எப்போது சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாராம். அதுபோலத்தான் நீலனின் நண்பர்களும். நீலன் இறந்த செய்தி வந்தபோது முழு சிங்களப் பெளத்த உயர்வர்க்கமும் இரங்கியது. அரச வானொலியும், தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இந்த மரணத்தை மிகப்பெரும் பேசுபொருளாக மாற்றியிருந்ததுடன், புலிகள் மீது சேறு பூசும் தமது பிரச்சாரத்திற்காக இதனை மிகவும் திறமையாகவும் பாவித்துக்கொண்டன. 

எனது கேள்வி என்னவென்றால், நீலன் இறந்தபோதும், கதிர்காமர் இறந்தபோதும் சிங்களம் அவர்களின் மரணங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை ரவிராஜோ, பரராஜசிங்கமோ கொல்லப்பட்டபோது கொடுத்ததா? அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? நான் விளங்கிக்கொண்ட வகையில் நீலனும் கதிர்காமரும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் நெருங்கியவர்கள். அவர்கள் செய்யும் அரசியலால் சிங்களத்திற்கு பாதிப்பேதும் வரப்போவதில்லை என்பதில் சிங்களம் மிகவும் உறுதியாக இருந்தது. இவர்களைத் தன்னுடன் வைத்திருப்பதன்மூலம் சர்வதேசத்தில் தமிழ் மிதவாதத் தலைவர்கள் எம்முடன் இருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கென்று அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யவும், புலிகளாலோ அல்லது வேறு எவராலோ இவர்கள் கொல்லப்படும்போது இவர்களின் மரணங்களை புலிகளுக்கெதிரான பிரச்சாரத்திற்குப் பாவிப்பதற்கும் சிங்களத்திற்கு இவர்கள் தேவைப்பட்டார்கள். 

நீலன் கொல்லப்பட்டபோது நான் கொழும்பில் இருந்தேன். அவர் கொல்லப்படும்வரை நீலனின் இருப்புப் பற்றி அறியும் தேவை எனக்கு இருந்ததில்லை. அதற்கான பல காரணங்களில் சிலவற்றை இங்கு பதிகிறேன்.
நீலன் என்றால் எனக்கு அன்றைய நாட்களில் நினைவிற்கு வந்தது சமாதானத்திற்காகப் போர் நடத்திய சந்திரிக்காவின் அரசியல் ஆலோசகர் என்பது. அதாவது ஒரு சிங்கள பெளத்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் என்பது. அடுத்ததாக அவரும் ஜி எல் பீரிஸும் இணைந்து உருவாக்கிய சந்திரிக்காவின் தீர்வுப்பொதி. கொழும்பில், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் நெருங்கிப் பழகிய பல மேற்தட்டு தமிழர்களைப் பொறுத்தவரை நீலனின் பொதி தமிழர்களுக்கு உண்மையாகவே தீர்வு ஒன்றினைத் தரவிருந்ததாக நம்பியிருந்தனர். வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதியென்றும், மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் என்றும், மத்திய - மாகாண அரசுகளுக்கிடையிலான சுமூகமான உறவு என்றும் பல விடயங்கள் பேசப்பட்டன. இவை எவற்றையும் ஏறெடுத்தும் பார்க்காத புலிகள் சந்திரிக்காவை போருக்குள் இழுத்துவிட்டனர் என்றும் இதே தமிழர்கள் வசைபாடினர். இன்னும் சிலருக்கு நீலனின் கொலைபற்றி எழுதுவது தமது ஆங்கிலப் புலமையினைக் காட்டுவதற்கும், சிங்களவர்களுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்குமான ஒரு காரணமாக ஆகிவிட்டிருந்தது. ஆனால், புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு சந்திரிக்கா ஆரம்பித்தபோரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை, அது தேவையுமில்லை. 
அடுத்தது, நீலன் தொடர்பாக நான் நினைவில் வைத்திருக்கும் இன்னொரு விடயம்தான் லக்ஷ்மன் கதிர்காமர் எனும் கோடரிக் காம்பை போர்தேவதையான சந்திரிக்காவுக்கு அறிமுகம் செய்துவைத்த மனிதர் என்பது. கதிர்காமர் சிங்கள பெளத்த இனவாதிகளுக்கு ஏன் உற்ற நண்பராகத் தெரிந்தார் என்பதும், அவரால் எமது விடுதலைப் போராட்டம் எவ்வகையான பின்னடைவுகளைச் சந்தித்தது என்பதும் வரலாறு. 

கொழும்பில் பிறந்து, சிங்கள உயர்தட்டுவர்க்கப் பாடசாலையான ரோயல் கல்லூரியில் கல்விகற்று, பேராதனையில் பட்டப்படிப்பு முடித்து, வடக்குக் கிழக்குத் தமிழர்களின் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் குறித்த பிரக்ஞையற்று வாழ்ந்து, சிங்கள பெளத்த அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் மிக நெருங்கிப் பழகி, அவர்களின் அரசியல் ஆலோசகர்களாக, வெளிவிவகார அமைச்சர்களாக தம்மை அலங்கரித்துக்கொண்ட நீலன், கதிர்காமர் போன்றவர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கும் அம்பிகா சற்குணநாதன் போன்ற மனிதவுரிமைவாதிகள் பரராஜசிங்கம், ரவிராஜ், நடேசன், தமிழ்ச்செல்வன், புலித்தேவன் பற்றியும் பேசட்டும். 

இவர்களது மரணங்களை சிங்கள பெளத்தம் எமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தும் பிரச்சாரத்திற்காகப் பாவித்துக்கொண்டது என்பதற்கப்பால் இவர்களின் மரணங்கள் குறித்து எனக்கு சிறிது கவலையும் இல்லை. 

அருமையான கட்டுரை, ரஞ்சித்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்  சுமந்திரனே தேவதையில்லாத ஆணி.
அதற்குள்...  அம்பிகா சற்குணநாதனை கொண்டு வந்து சேர்க்கிறாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
58 minutes ago, ரஞ்சித் said:

நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி

கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன்.

சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியதால் இதனை எழுதுகிறேன்.

பதிவாளர் அம்பிகா சற்குணநாதன். அவரேதான், சுமந்திரனால் அரசியலுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டு பின்னர் செய்திகளிலிருந்து சிறிது சிறிதாகக் காணாமற்போனவர். 

அவரது இன்றைய பதிவில் 1999 ஆம் ஜூலை மாதம் 29 ஆம் ஆண்டு புலிகளின் தற்கொலைப் போராளி ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிங்களவர்களின் நண்பனாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவராக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் நினைவுநாள் என்று பதிவுசெய்து, புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நல்ல அரசியல்வாதி, மனிதவுரிமைவாதி என்று எழுதியிருந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் இப்பதிவை மீள்ப் பதிவாகப் பதிய இன்னும் சிலர் தமது கருத்துக்களை இட்டிருந்தனர். 

பதியப்பட்ட பல சிங்களவர்களின் கருத்துக்களில் நீலன் ஒரு முற்போக்கு, மிதவாத அரசியல்வாதியென்றும், இலங்கை ஒரு சிறந்த கல்வியாளனை, சட்டத்திறமையுள்ள மனிதரை பறிகொடுத்துவிட்டதென்றும், முற்போக்குத்தனமான மிதவாத தலைவர்களைக்  கொல்வதை புலிகள் ஒரு தொழிலாகவே செய்துவந்தனர் என்றும் பதிவிட்டிருந்தனர்.

இதனைப் புலிகள் செய்தார்களா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால், செய்யப்பட்டதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று நான் அறிந்துகொண்டவை பற்றி எனக்கு எதுவித சந்தேகங்களும் இருக்கவில்லை என்பதற்கப்பால், இக்கொலை நடந்திருக்கத் தேவையில்லை என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். 

உனது நண்பர்கள் யாரென்று சொல், நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்று யாரோ ஒருவர் எப்போது சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாராம். அதுபோலத்தான் நீலனின் நண்பர்களும். நீலன் இறந்த செய்தி வந்தபோது முழு சிங்களப் பெளத்த உயர்வர்க்கமும் இரங்கியது. அரச வானொலியும், தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இந்த மரணத்தை மிகப்பெரும் பேசுபொருளாக மாற்றியிருந்ததுடன், புலிகள் மீது சேறு பூசும் தமது பிரச்சாரத்திற்காக இதனை மிகவும் திறமையாகவும் பாவித்துக்கொண்டன. 

எனது கேள்வி என்னவென்றால், நீலன் இறந்தபோதும், கதிர்காமர் இறந்தபோதும் சிங்களம் அவர்களின் மரணங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை ரவிராஜோ, பரராஜசிங்கமோ கொல்லப்பட்டபோது கொடுத்ததா? அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? நான் விளங்கிக்கொண்ட வகையில் நீலனும் கதிர்காமரும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் நெருங்கியவர்கள். அவர்கள் செய்யும் அரசியலால் சிங்களத்திற்கு பாதிப்பேதும் வரப்போவதில்லை என்பதில் சிங்களம் மிகவும் உறுதியாக இருந்தது. இவர்களைத் தன்னுடன் வைத்திருப்பதன்மூலம் சர்வதேசத்தில் தமிழ் மிதவாதத் தலைவர்கள் எம்முடன் இருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கென்று அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யவும், புலிகளாலோ அல்லது வேறு எவராலோ இவர்கள் கொல்லப்படும்போது இவர்களின் மரணங்களை புலிகளுக்கெதிரான பிரச்சாரத்திற்குப் பாவிப்பதற்கும் சிங்களத்திற்கு இவர்கள் தேவைப்பட்டார்கள். 

நீலன் கொல்லப்பட்டபோது நான் கொழும்பில் இருந்தேன். அவர் கொல்லப்படும்வரை நீலனின் இருப்புப் பற்றி அறியும் தேவை எனக்கு இருந்ததில்லை. அதற்கான பல காரணங்களில் சிலவற்றை இங்கு பதிகிறேன்.
நீலன் என்றால் எனக்கு அன்றைய நாட்களில் நினைவிற்கு வந்தது சமாதானத்திற்காகப் போர் நடத்திய சந்திரிக்காவின் அரசியல் ஆலோசகர் என்பது. அதாவது ஒரு சிங்கள பெளத்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் என்பது. அடுத்ததாக அவரும் ஜி எல் பீரிஸும் இணைந்து உருவாக்கிய சந்திரிக்காவின் தீர்வுப்பொதி. கொழும்பில், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் நெருங்கிப் பழகிய பல மேற்தட்டு தமிழர்களைப் பொறுத்தவரை நீலனின் பொதி தமிழர்களுக்கு உண்மையாகவே தீர்வு ஒன்றினைத் தரவிருந்ததாக நம்பியிருந்தனர். வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதியென்றும், மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் என்றும், மத்திய - மாகாண அரசுகளுக்கிடையிலான சுமூகமான உறவு என்றும் பல விடயங்கள் பேசப்பட்டன. இவை எவற்றையும் ஏறெடுத்தும் பார்க்காத புலிகள் சந்திரிக்காவை போருக்குள் இழுத்துவிட்டனர் என்றும் இதே தமிழர்கள் வசைபாடினர். இன்னும் சிலருக்கு நீலனின் கொலைபற்றி எழுதுவது தமது ஆங்கிலப் புலமையினைக் காட்டுவதற்கும், சிங்களவர்களுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்குமான ஒரு காரணமாக ஆகிவிட்டிருந்தது. ஆனால், புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு சந்திரிக்கா ஆரம்பித்தபோரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை, அது தேவையுமில்லை. 
அடுத்தது, நீலன் தொடர்பாக நான் நினைவில் வைத்திருக்கும் இன்னொரு விடயம்தான் லக்ஷ்மன் கதிர்காமர் எனும் கோடரிக் காம்பை போர்தேவதையான சந்திரிக்காவுக்கு அறிமுகம் செய்துவைத்த மனிதர் என்பது. கதிர்காமர் சிங்கள பெளத்த இனவாதிகளுக்கு ஏன் உற்ற நண்பராகத் தெரிந்தார் என்பதும், அவரால் எமது விடுதலைப் போராட்டம் எவ்வகையான பின்னடைவுகளைச் சந்தித்தது என்பதும் வரலாறு. 

கொழும்பில் பிறந்து, சிங்கள உயர்தட்டுவர்க்கப் பாடசாலையான ரோயல் கல்லூரியில் கல்விகற்று, பேராதனையில் பட்டப்படிப்பு முடித்து, வடக்குக் கிழக்குத் தமிழர்களின் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் குறித்த பிரக்ஞையற்று வாழ்ந்து, சிங்கள பெளத்த அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் மிக நெருங்கிப் பழகி, அவர்களின் அரசியல் ஆலோசகர்களாக, வெளிவிவகார அமைச்சர்களாக தம்மை அலங்கரித்துக்கொண்ட நீலன், கதிர்காமர் போன்றவர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கும் அம்பிகா சற்குணநாதன் போன்ற மனிதவுரிமைவாதிகள் பரராஜசிங்கம், ரவிராஜ், நடேசன், தமிழ்ச்செல்வன், புலித்தேவன் பற்றியும் பேசட்டும். 

இவர்களது மரணங்களை சிங்கள பெளத்தம் எமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தும் பிரச்சாரத்திற்காகப் பாவித்துக்கொண்டது என்பதற்கப்பால் இவர்களின் மரணங்கள் குறித்து எனக்கு சிறிது கவலையும் இல்லை. 

நல்ல பதிவு. 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலன் கொல்லப்பட்டதற்கு இன்றுவரை யாருக்கும் காரணம் தெரியாது

☹️

தற்போது நமது நிலைமைக்கும், அப்போதைய நிலையில் நீலன் திருச்செல்வம் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. 

இதே நேரம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும்... சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுவதில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

இவர்களது மரணங்களை சிங்கள பெளத்தம் எமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தும் பிரச்சாரத்திற்காகப் பாவித்துக்கொண்டது என்பதற்கப்பால் இவர்களின் மரணங்கள் குறித்து எனக்கு சிறிது கவலையும் இல்லை. 

அவர்களது மரணங்கள் பற்றி நான் சிந்திப்பதுமில்லை.கவலைப்படுவதுமில்லை.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தை... நீர்த்துப் போகச் செய்ய, நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில்... சுமந்திரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ்த் தேசியத்தை... நீர்த்துப் போகச் செய்ய, நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில்... சுமந்திரன்.

தமிழ்த் தேசியம் என்பது கிள்ளுக் கீரையா வாறவன் போறவன் எல்லாம் கிள்ளி வாயில் போட்டு முடிப்பதற்கு? 

தேசிய உணர்வை ஓரிரு  தனி நபர்களால் நீர்த்துப்போகச் செய்ய முடியுமென்று எவ்வளவு இலகுவாக எடைபோடுகிறீர்கள்? 

அப்படி ஒருவர் இருவரால் நீர்த்துப்போகச் செய்ய முடியுமென்றால் அது உண்மையான தமிழ்த் தேசிய உணர்வே அல்ல. 

 

## எங்கள் அறிவின்மைதான் தமிழ்த் தேசியத்தின் எதிரி ##

😏

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.