Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
(truecopythink.media தளத்தில் வெளியான மலையாள கட்டுரையின் தமிழாக்கம்)
சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு
(மலையாள எழுத்தாளர்)
தமிழாக்கம்
களியக்காவிளை ஷினு (Shinu R S)
மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக நாம் கல்விநிலையங்களில் பிரதான துணைமொழியாக கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான் என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால், தமிழ்தான் நமது பாரம்பரியத்தின் மொழி. கேரளாவின் நீண்ட கலாச்சாரத்தின் சரித்திர உள்ளுணர்ச்சியாக இருப்பது தமிழ். நமது மொழியின் உயிர் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் குடி கொள்கிறது. வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கத்திற்கு எதிராக வியக்கத்தக்க விதத்தில் தாக்குப்பிடித்த மொழியாகவும் தமிழை நாம் காண வேண்டும்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளில், சமஸ்கிருதத்தினை கலக்கவிடாமல் மிகக்கவனமாக விலக்கி வைத்தவர்கள் தமிழ்ப் பெருங்குடிகள். தமிழின் பழமையும் இலக்கிய வளமும் அந்த மண்ணின் பெருமைக்குரிய சின்னங்களாக, அரசியல் உந்துசக்தியாக இன்று வரையிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. சொல்வளத்தாலும் இசைத்தன்மையாலும் தமிழ் மொழி உலகின் அனைத்து மொழிகளைவிட முன்னணியில் இருக்கிறது. எந்த ஆங்கில வார்த்தைகளுக்கும் அந்த மொழியில் அதற்கு தகுந்த சொல்லாடல்கள் தேவைக்கு தகுந்தபடி தோற்றம் பெறுவதைக் காணலாம். ஏராளமான இயந்திரக் கருவிகள் மேற்குலக நாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்படுவதும், அவை இந்தியாவை வந்தடையவும் செய்கின்றன.
நம்மால் எக்கருவியும் கண்டுபிடிக்கப்படாதது மட்டுமின்றி, இல்லாத பழங்கதை பேச்சுகளில் மூழ்கிப் போவதும், எந்தவித வெட்கமுமின்றி கருவிகளைப் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் செய்பவர்கள். நமக்கு அந்த கருவியின் பெயரில் கூட எந்தவித உரிமையும் இல்லை! அச்சூழலிலும் அந்த இயந்திரங்களுக்கு சுயமாக பெயர் சொல்லி அழைப்பதற்காவது முயற்சி செய்யும் மொழிதான் தமிழ். ரெப்ரிஜிரேட்டருக்கு அவர்கள் சாதாரணமாக 'குளிர் சாதனப் பெட்டி' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஏர்கண்டிஷனருக்கும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
சாதனம் என்பதற்கு இயந்திரம் என்பதுதான் தமிழில் அர்த்தம். மொபைல் என்ற சொல்லிற்கு தமிழர்கள் முதல்தர பெயரிட்டிருக்கிறார்கள்; 'அலைபேசி'. கம்ப்யூட்டருக்கு கணினி, கால்குலேட்டருக்கு 'கணிப்பான்', 'எளிகணி' என்னும் இரு பெயரிட்டிருக்கிறார்கள். கணிப்பான் என்ற சொல்லிலிருந்து கணிப்பதற்கும், எளிதில் கணிக்க என்னும் அர்த்தங்களில் இருந்துதான் 'எளிகணி' என்று கால்குலேட்டருக்கு பெயர் படைத்திருக்கலாம்.
பஸ்சை 'பேருந்து' என்று தமிழ்ப்படுத்தினார்கள். போட்டோவிற்கோ மிகவும் ரசனைக்குரிய சொற்பிரயோகமே தமிழுக்கு; நிழல் படம். மற்றும் ஒரு அழகான சொல் 'நிழல்குடை'. இது வேறெதுவுமில்லை. வெயிட்டிங் ஷெட்டிற்கு!
Weather என்பதற்கு சரியான மலையாளம் இன்றைக்கும் இல்லை. Climate என்ற சொல்லுக்கு 'காலாவஸ்த' என்று எழுதுகிறோம். Weather என்பதற்கு 'தைனம்தின காலாவஸ்த' என்றெல்லாம் சில பத்திரிகைகள் எழுத முயற்சித்தாலும் அது எதுவும் சரிப்படவில்லை. உண்மையில் நான் பிறந்த இடமான கண்ணூரில் Weather என்பதற்கு அழகான மலையாளச் சொல் இருக்கிறது - ஆச்ச். வானம் கருமேகங்கள் சூழும்பொழுது மழை மறையும்பொழுது பண்டைய தலைமுறையினர் இப்போதும் சொல்வார்கள். ஆஹா, ஆச்ச் மாறிட்டே என்று. இப்படி எவ்வளவோ கவித்துவமான வட்டார வழக்குகளை மலையாளி இழந்திருக்கிறான். ஏதாவது ஒரு பிரபல தினசரி பத்திரிகை பழக்கப்படுத்தி இருந்தால் சிலவேளை அழியாமல் இருந்திருக்கும்.
எந்த மொழியிலும் புதிய சொல்லாடல்களை வெளியில் இருந்து திணிப்பன் மூலம் உருவாக்க இயலாது. சமீபத்தில் நமது மொழி வல்லுனர்கள் ஆங்கிலத்திற்குச் சமமான வார்த்தைகளை உருவாக்க கடினமாக முயற்சி செய்த போதிலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. அவ்வாறான சொற்கள் ஓசை நயமோ, நமது கலாச்சாரம் குறித்த ஆழ்மன சித்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதுவே நிதர்சனம். 'ஸ்விட்ச்' என்பதற்கு 'வைத்யுத ஆகமன பிரத்தியாகமன யந்திரம்' என்ற ரீதியில் சொற்களை உருவாக்கினால் எப்படி இருக்கும்? 'ரயில்வே ஸ்டேஷனுக்கு' 'அக்னிசகட ஆகமன பிரத்தியாகன யந்திரம்' என்று இரண்டு முறை சொல்லி முடியும்போது, நமக்கான வண்டி கிளம்பிப் போயிருக்கும். இந்த இடத்தில் தமிழ் ஒரு முன்னுதாரணமாகிறது. நேற்று கண்டறிந்த ஆங்கில வார்த்தைக்கும் நாளை தமிழ் வார்த்தையை கண்டுபிடித்திருப்பார்கள். அதற்குத்தக வாட்ஸ் - அப்பிற்கு கூட தமிழில் பெயர் வந்துவிட்டது; பகிரி என்னும் சொல். எடுத்துக்காட்டுகள் இன்னும் நிறைய இருக்கிறது.
தமிழ் மொழிக்கு எப்படி இது சாத்தியமாகிறது? விடை எளிது. இசைத் தன்மை கொண்டது அம்மொழி. எளிமையானது. அனேக நூற்றாண்டுகளின் இலக்கியப் பாரம்பரியம் அதற்கு இருக்கிறது. அதன்மீதான அனைத்து மதிப்பும், அன்பும் அவர்களின் இதயத்தில் அந்த மொழியிடம் இருக்கிறது. 'தமிழன்' என்றுகூட ஒரு திரைப்படத்தின் பெயர் வருகிறது. சுயமரியாதையின் ஆற்றல் ஒரு வியாபார திரைப்படத்தின் பெயரில்கூட வெளிப்படுகிறது. அது மிகவிரைவிலேயே ஒரு சமூக, அரசியல் உணர்வாக மடை மாற்றம் செய்யப்படுகிறது. இப்படி இருக்கும்போது மலையாளி ஒரு திரைப்படத்திற்கு சூட்டிய பெயரைப் பாருங்கள் - 'மலையாளி மாமனுக்கு வணக்கம்' !
இணையோடு புணர்வது குறித்து சொல்வதற்கு காவியத் தன்மை கொண்ட ஒரு சொல் கூட மலையாளத்தில் இல்லை. ஆனால் தமிழில் கவனியுங்கள்; உடல் உறவு. எவ்வளவு தூரம் அழகானதும் ஓசை நயம் கொண்டதுமான சொல். காதலின் மென்மையை வெளிப்படுத்த இதுபோன்ற அதி அற்புதமான வார்த்தை இன்னும் இருக்கிறது தமிழில். அதில் ஒன்று தான் கலவி. 'கலவி' என்பதற்கு 'இரண்டாக இராமல் ஒன்றாவது' என்பதுவே அர்த்தம். காதலுடன் இணைவதற்க்கு இதைப்போன்ற சொல்லழகும் சமூக உணர்வும் உள்வாங்கிய வேறு எந்த சொல் இருக்கிறது? மலையாளத்தில் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் பகுதியான சொற்களும் விகாரம் தரக்கூடியவை. சுயமரியாதை அற்றதும் கூட. ஒரு நிமிடம், இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு அவ்வாறான சொற்களை ஆராய்ந்து பாருங்கள்; சொன்னதன் அர்த்தம் புரியும்.
1578 இல் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு தமிழ் வழிபாட்டு நூலை பழைய தமிழ் மொழிநடையில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அதற்குப் பெயர் 'தம்புரான் வணக்கம்'. அம்மொழிக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அப்புத்தகம், அச்சில் வெளியான முதல் இந்திய மொழி என்பதை கூட நினைவுகூர வேண்டும். அதை நமது சொந்த கேரள மண்ணில்தான் அச்சடித்தார்கள். வேணாட்டின் கொல்லத்தில். இந்த விஷயத்தில் கொல்லம் மாவட்டத்தவர்கள் மிகவும் பெருமை கொள்ளலாம். மலையாள நாடும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்பு குறித்து இதைவிட கூடுதலாக வேறு எதை சொல்ல முடியும்?
எந்தவொரு சமூகத்தினரினதும் வரலாற்று உணர்வும் மொழியில்தான் உயிர் வாழ்கிறது. வடக்கிலிருந்து உருவாகும் ஆரிய மயமாக்கல், தென்மேற்கு கரை ஓரங்களிலிருந்து உருவான வியாபார மிஷனரி தொடர்புகளினால் நாம் நமது தாய் மொழியான தமிழிலிருந்து பெருமளவுக்கு விலகி போய்யிருக்க வேண்டும். மொழியால் திணிக்கப்பட்ட நேரடியான மற்றும் மறைமுகமான காலனித்துவம் இன்றும் தொடர்கிறது. ஆனால், தமிழ் மொழியைக் கற்றிராத எந்தவொரு மலையாளியாலும் ஓரளவுக்கு தமிழில் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமது மொழி தமிழ் மொழியுடன் கொண்டிருப்பது தொப்புள் கொடி உறவாகும். தமிழின் சங்ககால காவியங்களில் ஒன்றினை எழுதியது ஒரு கேரளீயர். இளங்கோவடிகள் என்பது கவிஞனின் பெயர். படைப்பு; சிலப்பதிகாரம். ஒன்றிரண்டு அல்ல, 5700 வரிகள் இருக்கிறது. நாம் அறிந்திடாத கேரளக் கவிஞர்களின் பெயர்கள் இன்னும் இருக்கலாம். எட்டுத்தொகையின் சில கவிதைவரிகள் கேரளாவின் கவிஞர்கள் எழுதியதாக கருதப்படுகிறது.
இந்த குறிப்பின் நோக்கம் மொழி மீதான உரிமை கோரும் வாதமல்ல. உலகிலுள்ள எந்த மொழியும் பிற மொழிகளுக்கு எதிராக இல்லை என்பதுவே மேன்மையான உண்மை. உலகில் மிகவும் குறைவான மக்கள்தொகையினர் பேசும் மொழியைக்கூட மனிதன் பாதுகாக்க வேண்டும் என்று நம்பக்கூடிய ஒரு மனிதன் நான். ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு எந்த மொழியையும் திணிப்பதற்கு நான் எதிராளியும் கூட. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் மொழிக்குப் பின்னால் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் குரூர மனம் இருக்கிறது.
வேர்களை கைவிட்ட மரங்கள் அதன் ஆன்மாவை விரைவில் இழந்துவிடும். துணை மொழியாக நாம் கற்கும் ஆங்கிலத்துடன் முக்கியத்துவம் கொடுத்து கற்க வேண்டியது தமிழ் மொழியைத்தான். காரணம், வெயில் இலைகளை பசுமையாக்குவது போன்று, மண்ணின் ஆழங்களில் ஊடுருவும் வேர்கள் அதன் தாய்த்தடிகளையும் கிளைகளையும் வலுப்படுத்தும். கேரளாவில் வாழ்பவர்களின் தாய்மொழி மலையாளம் என்றாலும், மலையாளத்தின் தாய்மொழி தமிழ். அதில் ஒரு தற்காப்பு அரசியல் செயல்படுவதை நாம் அவதானிக்கலாம்.
(பி.கு: இந்த கட்டுரையை பகிர்வதின் நோக்கம் தமிழர்கள் முக்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது போன்று வீண் பெருமை பேசும் நோக்கத்தில் அல்ல. மாறாக தாய்மொழி கல்வியின் சிறப்பை இதைவிட எதார்த்தமாக தற்போதைய சூழலில் எளிமையாக புரியவைக்க முடியாது என்பதற்கே.
இந்த கட்டுரையை வாசிக்கும் போது மற்றொரு சம்பவம் நினைவு வருகிறது. சோவியத் வீழ்ந்து முப்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும் சோவியத் நாட்டில் ரஷ்ய மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்டு இங்கே ஏற்றுமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட பழைய புத்தகங்கள் சில நேரம் மூத்த தோழர்கள் வீடுகளில் காண கிடைக்கும். அந்த புத்தகத்தை தொட்டு பார்த்து "முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ” என்ற வரியை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வை வர்ணிக்க முடியாது. வெறும் தமிழ் என்றில்லை சோவியத் கம்யூனிஸ்டுகளால் உலகம் முழுவதும் அவரவர் தாய் மொழியிலேயே புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்து அச்சடித்து ஏற்றுமதி செய்தார்கள். தாய் மொழி கல்வியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக கம்யூனிச ஆசான்கள் பெரும் விவாதங்களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்)
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையும் ஆழமுமான பகுதிகளில் வாழ்பவர்கள் பேசும் மொழி என்பதனால் மலையாளம் (தமிழின்புணர்ச்சிவிதிப்படி) என்று அழைக்கப்பட்டது. உண்மையில் மலையாளத்தில் பேசப்படும் பல சொற்கள் ஆதித்தமிழ் சொற்களாகும். தமிழ் மலையாளத்துடன் கலந்ததனால் உருவான மொழிளே மலையாளம்.மலையாளிகள் பேசுவதை தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும். தமிழர்கள் பேசுவது தை மலையாளிகளால் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் மலையாளிகளும் தமிழர்களே . சேரநாடுட்டுத் தமிழர்கள்.அதை மறந்து தாங்கள் தனியான இனம் என்று அவர்கள் சொல்வது வேடிக்கையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புலவர் said:

தமிழ் மலையாளத்துடன் கலந்ததனால் உருவான மொழிளே மலையாளம்.மலையாளிகள் பேசுவதை தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும்.

இதை பலமுறை அங்கு சொல்லிவிட்டேன்.

இப்போதைய மலையாளம் எண்ணப்படும் மொழி தோற்றத்தின் உருவாக்கம், 1800க்கு பின்.

கேரளத்தில், முதல் இருந்த மொழி மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ்.

 (இது மிக முக்கியமான காரணம், போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் , அவர்கள் மலபார் மொழி என்று அடையாளப்படுத்திய மலையாளத் தமிழையும், இப்போதைய தமிழ் நாடு மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதியில்  இருந்த தமிழை மலபார் மொழி என்று குழம்பி, இரண்டையும் மலபார் மொழி, மலபார் இனம் என்று  அடையாள படுத்தியதற்கு).

நம்பூதிரிகளின் சூழ்ச்சியால், ஆங்கிலேயர் மலையாளத் தமிழை  தடை செய்ததுடன், மலையாளத் தமிழில்   இருந்த அரச பதிவுகளை எரித்து விட்டனர்.

ஆங்கிலேயர், துளு நாட்டில்    திகலரி மொழியை, எழுத்துக்களை தடை செய்த அதேவேளையில், நம்பூதிரிகளின் தூண்டுதலால், அதே திகலரி எழுத்துக்களை மலையாளத் தமிழில் புகுத்தி இப்போதைய எழுத்து மலையாளத்தை உருவாக்கினர்.

ஆனால், பேச்சு மொழியான மலையளம்மா மொழியை நீக்க முடியவில்லை (எப்படி முடியும்? சிந்தித்து பார்க்கவும்).

இந்த திகலரி எழுத்து , உச்சரிப்பு மாற்றம் செய்யப்பட்ட எழுத்து மலையாளமும், தொன்று தொட்டு தொட்டு வழங்கி வந்த மலையளம்மாவும் கலந்து உருவானதே இப்போதைய பேச்சு மொழி மலையாளம்.

இதனால் தான், தமிழருக்கு மலையாளம் பேச்சு மொழி (முழுவதும் இல்லாவிட்டாலும்) உடனடியாக புரியாக் கூடியதாக இருப்பது.

அனால், திகலாரியால் எழுத்து, உச்சரிப்பு  மாற்றப்பட்ட எழுத்து   மலையாளம் (முதலில் கற்காமல்) விளங்காது.    

2 hours ago, புலவர் said:

1578 இல் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு தமிழ் வழிபாட்டு நூலை பழைய தமிழ் மொழிநடையில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அதற்குப் பெயர் 'தம்புரான் வணக்கம்'. அம்மொழிக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அப்புத்தகம், அச்சில் வெளியான முதல் இந்திய மொழி என்பதை கூட நினைவுகூர வேண்டும். அதை நமது சொந்த கேரள மண்ணில்தான் அச்சடித்தார்கள். வேணாட்டின் கொல்லத்தில்.

இத தம்பிரான் வணக்கத்தை பார்த்தல், மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் தெரியும், இபோதுதும் தமிழர்கள் வாசிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன் - தம்பிரான் வணக்கம் எனும் நூல், ஓர் கிறிஸ்தவ கோட்பாடுகள் பற்றிய நூல். முதலில் போத்துகேய மொழியில் லிஸ்பன் இல் வெளியிடப்பட்டு, பின் மொழிபெயர்க்கப்பட்டு, கோவாவில் அச்சிடப்பட்டு, கொல்லத்தில் வெளியிடப்பட்டது   

இது அப்படியே தரவேற்றம் செய்யப்பட்ட தம்பிரான் வணக்கம் நூலின்  பிரதி

https://eap.bl.uk/archive-file/EAP981-1-15-54#?c=0&m=0&s=0&cv=0&xywh=-1809%2C-1%2C5899%2C3425

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி போல வருடாவருடம் தமிழில் புதிய சொற்களை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பு இல்லாது இருக்கும் பெரும் குறையை நாம் எப்போ தீர்க்கப்போகிறோம்?

ஆளாளுக்கு, கீச்சகம், பகரி, பிடரி எண்டு ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள். இதுவா மொழியை வளர்க்கும் பாங்கு?

அப்புறம் Fanta என்பதை 247 எழுத்தில் எதையாவது பாவித்து அதே ஒலிவரும் படி தமிழில் எழுத முடியுமா? (ஃபன் டா என்றதும் சரியாக இல்லை).

 வியாபார பெயர்கள் (Brand name) ஐ எல்லாம் மொழிமாற்றம் செய்வது தேவைதானா? இதை யார் தீர்மானிப்பது?

டிவிட்டரை கீச்சகம் என்றால் கொக்கோகோலா தமிழில் என்ன? அக்கா மாலாவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் சொற்கள் இவை தான் இருக்கவேண்டும் என்று கட்டுப்பபடுத்டுத்தக்கூடிய, நிறுவனமயப்பட்ட மொழி அரச அமைப்பு இல்லை.

oxford அகராதி, பொதுவாழ்வில் வழக்கதுக்கு வரும் சொற்களை அகராதியில் பதிந்து வருகிறது.

பிரெஞ்சு மொழி அரச அமைப்பு அல்லது அரசு சார்ந்த அமைப்பு இருக்கிறது (The Académie, தேடிப்பார்க்கவும்) அது எந்த சொற்கள் பிரெஞ்சு சொல்லிலக்கண வடிவத்தில் இருக்கிறது, இல்லை என்பதை நிர்ணயித்து, இந்த சொற்கள் இருக்கலாம், மாற்றப்பட அல்லது நீக்கப்பட வேண்டிய சொற்கள் என்று இறுக்கமான விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்  கீழ் இயங்குகிறது.

தமிழ் இந்த இரண்டுக்கும் இடையில் இயங்குகிறது, அனால் நெகிழ்வு தன்மையான, எந்த எழுத்திலும் இல்லாத, பகிரங்க அங்கீகாரத் தன்மையுடன்.    

பிரஞ்சு மொழி அமைப்பு செய்வது போன்று, தமிழில் மொழிக்காப்பு முனைவுகள் எடுக்கப்பட்டது , மொழி அறிஞர்கள் மற்றும் பல்கலை கழக மொழி பீடங்கள் போன்றவற்றின் தன்னார்வ முயற்சியால்  , அரச ஈடுபடு இல்லாமல்.  அரசியல் ஆதரவும் இருந்து இருக்கும் என்று நினைக்கிறன்.

இறுக்கமான விதிமுறைகள் கீழ் இயங்குவது, தமிழ் விருத்திக்கும், காலத்துக்கு   இயைந்து தமிழ் மொழியாக வரலாற்றின் ஊடு வளரக் கூடிய நெகிழ்வு தன்மையை  இறுக்கமான விதிமுறைகள் தடுத்துவிடும் என்று கண்டறியப்பட்டது.     

முதலில், பாணினியால்  (பாணினி. சமஸ்கிருதத்தின் இலக்கணத்தை வகுத்தவரில் முக்கியமானாவரில் ஒருவர்)  முதல் இலக்கணப்படுத்தப்பட்ட சம்ஸ்கிருத சொற்கள் மற்றும் அதன் வழியே புகுந்த மொழி பிரயோகம் போன்றவற்றை தூய  தமிழாக்குதல் என்று தொடங்கி, இறுதியில் அது கைவிடப்பட்டது. 

அனல்,அனால், இந்த இறுக்கமான மொழி ஒழுங்குபடுத்தும் அமைப்பு, இலங்கைத் தமிழருக்கு தேவை, ஏனெனில்,இலங்கைத் தீவில் பாவிக்கப்படும் தமிழ் மொழிக்கு  என்பது அடையாளம், வரலாறு, தொன்மை போன்றவற்றை தீர்மானிப்பதில் பாரிய பங்கு உள்ளது, அது தமிழ் நாட்டு தமிழுக்குள் புதைந்து விடாமல் இருக்க.

வளரும் போக்கில் தமிழ்நாடு இலங்கைத்தீவில் பாரிய பொருளாதார பங்கு செலுத்தப்போகிறது என்பதால்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 31/7/2022 at 17:55, goshan_che said:

எல்லாம் சரி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி போல வருடாவருடம் தமிழில் புதிய சொற்களை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பு இல்லாது இருக்கும் பெரும் குறையை நாம் எப்போ தீர்க்கப்போகிறோம்?

 

ஆங்கிலத்தில் இருப்பது போன்று சொற்களை உருவாக்கவும் அவற்றை ஏற்பளிக்கவும் எமக்கு ஒன்று இல்லை என்பது ஒரு பெருங்குறைதான். அதை நாம் தீர்க்க முனைய வேண்டும். 

ஆனால் அதற்கு நன்கு ஆழ்ந்த தமிழறிவுடைய - குறிப்பாக இந்த வழக்கில் உள்ள சொற்களையே ஒட்டி ஒட்டி ஒட்டுண்ணி வேலை செய்வோர் நீங்கலாக. (எனக்கு இவங்களைக் கண்டாலே புண்ணில புளிபோட்ட மாதிரி இருக்கும்). - தமிழ் அகராதிகளைப் படித்து தேர்ச்சி பெற்ற தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு அறிஞர் அவையை உண்டாக்கல் வேண்டும். இங்கு ஆக்கப்படும் சொற்கள் ஒட்டுண்ணியாக அல்லாமல் அகராதிகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் புத்தம் புதிய தமிழ்ச்சொற்களைக் கொண்டு எனது தலைமுறைக்கு ஏற்றாற்போல் - இன்னமும் அந்த 50, 60 களில் வந்தோருக்கு ஏற்ப கிமீ நீளத்தில் சொற்களை ஆக்காமல் - வேகமாக பலுக்கும் விதமாக சிறியதானதாக ஆக்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் இந்தக் கால இளையோருக்கு ஏற்ப, இந்த வேகமான உலகில், தமிழை இளவட்டத்திடம் கொண்டு செல்ல ஏலும். சுருங்கச் சொல்லப்போனால், எமது மொழியமைப்பு மாறாமலும் கிமீ நீளத்தில் ஆக்காமலும் சிறியதாக  போன்று ஆக்கப்படல் வேண்டும்.

அப்படி ஆக்கப்படும் போது ஒரு சொல்லுக்கு ஒரு கலைச்சொல்லே ஆக்கப்பட வேண்டும். பொருத்தமானது தவிர ஏனையவை நீக்கப்பட வேண்டும். பலது இருந்தால் குழம்புவோம்.

அடுத்தது இவை இந்தியத் தமிழ், ஈழத்தமிழ் என்று சரியாக  பிரித்தானியா அமெரிக்க, ஆங்கிலம் போன்று "பார்க்கப்படல்" வேண்டும். எங்கடை பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்களுக்கும் அவங்கடைக்கும் வலுத்த வேறுபாடுகள் உண்டு. இரு புத்தக கலைச்சொல் வழக்கிலும் வேறுபாடுகள் உண்டு. எங்கடை தனித்தன்மையை நாங்கள் இழந்துவிடக்கூடாது. இந்த விசயத்தில் நான் கொஞ்சங்கூட சமரசம் இல்லை. 

இன்னொரு முக்கியமான விடையம், எங்கடை அறிஞர்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 30 இற்கும் மேற்பட்ட கலைச்சொல் அகராதிகளை (அத்தனையும் என்னிடம் உண்டு) நாமொரு வலைத்தளம் தொடங்கி அதில் பதிவேற்ற வேண்டும். இல்லாதுவிடின் இந்தியத் தமிழ் எம்முள் புகும். இப்போது எமது ஊடகங்களை கட்டுப்படுத்த எமக்கொரு அரசு கூட இல்லை. அதனால் இந்தியத் தக்கம் எமது ஊடகங்களில் அதிகமாக எதிரொளிக்கிறது. இதைத் தடுக்க எமது சொற்களை நாம் இணைய அகராதிகளில் ஏற்றல் வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரை எழுதுபவர்கள் எமது சொற்களைக் கையாள்வர். 

அவ்வாறு யாரும் உருவாக்க விரும்பின், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான அத்தனை மூலங்களையும் நான் வழங்குகிறேன்.

 

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 31/7/2022 at 17:55, goshan_che said:

ஆளாளுக்கு, கீச்சகம், பகரி, பிடரி எண்டு ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள். இதுவா மொழியை வளர்க்கும் பாங்கு?

அப்புறம் Fanta என்பதை 247 எழுத்தில் எதையாவது பாவித்து அதே ஒலிவரும் படி தமிழில் எழுத முடியுமா? (ஃபன் டா என்றதும் சரியாக இல்லை).

 வியாபார பெயர்கள் (Brand name) ஐ எல்லாம் மொழிமாற்றம் செய்வது தேவைதானா? இதை யார் தீர்மானிப்பது?

பெயர்சொற்களை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவற்றை நாம் வழங்கும் போது எமது மொழியின் இலக்கணத்திற்கு ஏற்ப வடிவமைத்து வழங்க வேண்டும். அதுவே எமது மொழியை சிதைக்காமால் வைத்திருக்கும் செயற்பாடு ஆகும். 

 

Fanta - நீங்கள் "இஃவான்ரா" என்று எழுதுங்கள். 'விடுதலைப்புலிகள், களத்தில், ஈழநாதம்' போன்ற எமது நாட்டின் நாளேடு/மாதயிதழகளில் "F" இற்கு நிகராக "ஃவ்" ஆகிய இரு எழுத்துக்கள் கையாளப்பட்டுள்ளதைக் கண்டிருக்கிறேன். அதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன். அகேனத்திற்கு முன் இ/அ வரல் வேண்டும். 

மேலும் "ஃப" வைக் காட்டிலும் "ஃவ" தான் F என்ற ஒலிக்கு நிகராக உள்ளது. (கொஞ்சம் அண்மியதாக என்று வைத்துக்கொள்ளலாம்.)

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2022 at 22:55, goshan_che said:

எல்லாம் சரி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி போல வருடாவருடம் தமிழில் புதிய சொற்களை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பு இல்லாது இருக்கும் பெரும் குறையை நாம் எப்போ தீர்க்கப்போகிறோம்?

ஆளாளுக்கு, கீச்சகம், பகரி, பிடரி எண்டு ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள். இதுவா மொழியை வளர்க்கும் பாங்கு?

அப்புறம் Fanta என்பதை 247 எழுத்தில் எதையாவது பாவித்து அதே ஒலிவரும் படி தமிழில் எழுத முடியுமா? (ஃபன் டா என்றதும் சரியாக இல்லை).

 வியாபார பெயர்கள் (Brand name) ஐ எல்லாம் மொழிமாற்றம் செய்வது தேவைதானா? இதை யார் தீர்மானிப்பது?

டிவிட்டரை கீச்சகம் என்றால் கொக்கோகோலா தமிழில் என்ன? அக்கா மாலாவா?

தமிழில் பல விதமான பெயர்கள் உண்டு காரணப் பெயர்தான் கட்டாயம் வைக்கவேண்டும் என்பதில்லை.காரணப் பெயர் வைத்தால் அது கூடிய பொருள் விளக்கத்தைக் கொடுக்கும் என்ற காரணத்தால் தற்காலத்தில் அநேக புதிய சொற்கள் காரணப்பெயர்களாக அமைக்கப்படுகின்றன்.காரணப் பெயர் வைக்க உச்சரிப்பதற்கு கடினமாகவோ நீளமானதாகவோ இருந்தால்  இடுகுறிப்பெயர் குணப்பெயர்  பெுhன்ற பெயர்களை வைக்கலாம். அனால் அதனை ஒரு அமைப்பு முறைக்குள் கொண்டு வரவேண்டும். அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் இப் பொழுது கனகாலமாக நடக்கவில்லை. அவை போன்ற அமைப்புக்களில் புதிய தமிழ் சொற்களை உருவாக்குவதற்கான அறிஞர்களை வைத்து உருவாக்கி  அறிஞர்களிடையே விவாதங்கள் i வைத்து கூடுதலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயரை வைக்கலாம்.. ஆனால் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி  காலப் போக்கில் அது ஆங்கில மொழிச் சொல்லாகவே பலராலும் கருதப்படுகிறது;.தமிழும் இவ்வளவு காலத்துக்கு நிலைத்து நிற்பதற்கு காரணம் காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பபித்துக் கொள்ளும் ஆற்றலினால்தான்.உண்மையில் மதிழக அரசு இதனை முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் அலர்கள் கீழடி நாகரிகத்தையே திராவிடநாகரிகம் என்று பெயர் மாற்றி வஞ்சகம் செய்பவர்கள். தமழரைத் தமிழர்களே ஆளும் நிலை வரும்போது தமிழ் பாரிய வளர்சியை அடையும். இவ்வளவு நெருக்குவாரத்துக்குள்ளும் நின்று பிடித்து வளர்வதே nஅதன் சிறப்புத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

ஆங்கிலத்தில் சொற்கள் இவை தான் இருக்கவேண்டும் என்று கட்டுப்பபடுத்டுத்தக்கூடிய, நிறுவனமயப்பட்ட மொழி அரச அமைப்பு இல்லை.

oxford அகராதி, பொதுவாழ்வில் வழக்கதுக்கு வரும் சொற்களை அகராதியில் பதிந்து வருகிறது.

பிரெஞ்சு மொழி அரச அமைப்பு அல்லது அரசு சார்ந்த அமைப்பு இருக்கிறது (The Académie, தேடிப்பார்க்கவும்) அது எந்த சொற்கள் பிரெஞ்சு சொல்லிலக்கண வடிவத்தில் இருக்கிறது, இல்லை என்பதை நிர்ணயித்து, இந்த சொற்கள் இருக்கலாம், மாற்றப்பட அல்லது நீக்கப்பட வேண்டிய சொற்கள் என்று இறுக்கமான விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்  கீழ் இயங்குகிறது.

தமிழ் இந்த இரண்டுக்கும் இடையில் இயங்குகிறது, அனால் நெகிழ்வு தன்மையான, எந்த எழுத்திலும் இல்லாத, பகிரங்க அங்கீகாரத் தன்மையுடன்.    

பிரஞ்சு மொழி அமைப்பு செய்வது போன்று, தமிழில் மொழிக்காப்பு முனைவுகள் எடுக்கப்பட்டது , மொழி அறிஞர்கள் மற்றும் பல்கலை கழக மொழி பீடங்கள் போன்றவற்றின் தன்னார்வ முயற்சியால்  , அரச ஈடுபடு இல்லாமல்.  அரசியல் ஆதரவும் இருந்து இருக்கும் என்று நினைக்கிறன்.

இறுக்கமான விதிமுறைகள் கீழ் இயங்குவது, தமிழ் விருத்திக்கும், காலத்துக்கு   இயைந்து தமிழ் மொழியாக வரலாற்றின் ஊடு வளரக் கூடிய நெகிழ்வு தன்மையை  இறுக்கமான விதிமுறைகள் தடுத்துவிடும் என்று கண்டறியப்பட்டது.     

முதலில், பாணினியால்  (பாணினி. சமஸ்கிருதத்தின் இலக்கணத்தை வகுத்தவரில் முக்கியமானாவரில் ஒருவர்)  முதல் இலக்கணப்படுத்தப்பட்ட சம்ஸ்கிருத சொற்கள் மற்றும் அதன் வழியே புகுந்த மொழி பிரயோகம் போன்றவற்றை தூய  தமிழாக்குதல் என்று தொடங்கி, இறுதியில் அது கைவிடப்பட்டது. 

அனல்,அனால், இந்த இறுக்கமான மொழி ஒழுங்குபடுத்தும் அமைப்பு, இலங்கைத் தமிழருக்கு தேவை, ஏனெனில்,இலங்கைத் தீவில் பாவிக்கப்படும் தமிழ் மொழிக்கு  என்பது அடையாளம், வரலாறு, தொன்மை போன்றவற்றை தீர்மானிப்பதில் பாரிய பங்கு உள்ளது, அது தமிழ் நாட்டு தமிழுக்குள் புதைந்து விடாமல் இருக்க.

வளரும் போக்கில் தமிழ்நாடு இலங்கைத்தீவில் பாரிய பொருளாதார பங்கு செலுத்தப்போகிறது என்பதால்.

பிர்ஞ்சுகாரர் மொழி மட்டும் அல்ல, உணவு, உடை கலாச்சாரத்தில் கூட ஆங்கில கலப்பை  தடுப்பத்தில் முன்னிற்பார்கள் என்பது தெரியும். ஆனால் இதற்காக அரச அமைப்பை வைத்திருப்பது தெரியாது. தகவலுக்கு நன்றி.

உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆங்கிலத்தில் authority என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. ஒன்று அதிகாரம் உள்ள அமைப்பு (எ கா - Greater London Authority). இன்னொன்று ஒருவரோ அல்லது ஒரு அமைப்போ அவர்களின் புலமை அல்லது திறமை காரணமாக அதிகாரம்/authority ஆக கருதப்படுவார்கள் (எ.கா Lord Wilberforce is an authority on public law).

இந்த இரண்டாம் அடிப்படையில்தான் ஆக்ஸ்போர்ட் அகராதி எது ஆங்கிலம் என்பதை தீர்மானிக்கும் “அதிகாரமாக” அனைவராலும் ஏற்கப்படுகிறது. ஏனைய அகராதி அமைப்புகள் கூட ஆக்ஸ்போர்ட்டின் அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்துவதில்லை.

எமக்கு என ஒரு தேசிய-அரசு (nation-state) இல்லாதபடியால், நாம் பிரென்ஞ் பாணியை எடுத்தால் அது இந்திய கைப்பொம்மையாகவே இருக்கும்.

ஆகவே ஆங்கில/ஆக்ஸ்போர்ட் பாணியில் - கேள்விக்கு அப்பாலான தகுதி உடையவர்களை கொண்ட ஒரு அமைப்பை அமைக்க வேண்டியது காலத்தின் தேவை என நான் நினைக்கிறேன்.

இப்படியே சுயம்பாக இப்போ இருப்பது போல் விடுவது பல குழப்பங்களை தருகிறது (ஒரு கொள்கை வகுப்பு, விதி முறை இல்லை).

அதை விட முக்கியமாக நீ யார் என்ற கேள்வியையும், அதனைவிட பாரதூரமாக இப்படி மொழி உருவாக்கத்தை கேலிப்பொருளாக்கும் போக்கையும் காண்கிறோம்.

ஆகவே இப்போ இருக்கும் நிலை மாற வேண்டும் ஒரு காத்திரமான அரசுசாரா அமைப்பு இதை முன்னெடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான ஆனால் உறுதியான நம்பிக்கை.

3 hours ago, நன்னிச் சோழன் said:

 

ஆங்கிலத்தில் இருப்பது போன்று சொற்களை உருவாக்கவும் அவற்றை ஏற்பளிக்கவும் எமக்கு ஒன்று இல்லை என்பது ஒரு பெருங்குறைதான். அதை நாம் தீர்க்க முனைய வேண்டும். 

ஆனால் அதற்கு நன்கு ஆழ்ந்த தமிழறிவுடைய - குறிப்பாக இந்த வழக்கில் உள்ள சொற்களையே ஒட்டி ஒட்டி ஒட்டுண்ணி வேலை செய்வோர் நீங்கலாக. (எனக்கு இவங்களைக் கண்டாலே புண்ணில புளிபோட்ட மாதிரி இருக்கும்). - தமிழ் அகராதிகளைப் படித்து தேர்ச்சி பெற்ற தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு அறிஞர் அவையை உண்டாக்கல் வேண்டும். இங்கு ஆக்கப்படும் சொற்கள் ஒட்டுண்ணியாக அல்லாமல் அகராதிகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் புத்தம் புதிய தமிழ்ச்சொற்களைக் கொண்டு எனது தலைமுறைக்கு ஏற்றாற்போல் - இன்னமும் அந்த 50, 60 களில் வந்தோருக்கு ஏற்ப கிமீ நீளத்தில் சொற்களை ஆக்காமல் - வேகமாக பலுக்கும் விதமாக சிறியதானதாக ஆக்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் இந்தக் கால இளையோருக்கு ஏற்ப, இந்த வேகமான உலகில், தமிழை இளவட்டத்திடம் கொண்டு செல்ல ஏலும். சுருங்கச் சொல்லப்போனால், எமது மொழியமைப்பு மாறாமலும் கிமீ நீளத்தில் ஆக்காமலும் சிறியதாக  போன்று ஆக்கப்படல் வேண்டும்.

அப்படி ஆக்கப்படும் போது ஒரு சொல்லுக்கு ஒரு கலைச்சொல்லே ஆக்கப்பட வேண்டும். பொருத்தமானது தவிர ஏனையவை நீக்கப்பட வேண்டும். பலது இருந்தால் குழம்புவோம்.

அடுத்தது இவை இந்தியத் தமிழ், ஈழத்தமிழ் என்று சரியாக  பிரித்தானியா அமெரிக்க, ஆங்கிலம் போன்று "பார்க்கப்படல்" வேண்டும். எங்கடை பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்களுக்கும் அவங்கடைக்கும் வலுத்த வேறுபாடுகள் உண்டு. இரு புத்தக கலைச்சொல் வழக்கிலும் வேறுபாடுகள் உண்டு. எங்கடை தனித்தன்மையை நாங்கள் இழந்துவிடக்கூடாது. இந்த விசயத்தில் நான் கொஞ்சங்கூட சமரசம் இல்லை. 

இன்னொரு முக்கியமான விடையம், எங்கடை அறிஞர்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 30 இற்கும் மேற்பட்ட கலைச்சொல் அகராதிகளை (அத்தனையும் என்னிடம் உண்டு) நாமொரு வலைத்தளம் தொடங்கி அதில் பதிவேற்ற வேண்டும். இல்லாதுவிடின் இந்தியத் தமிழ் எம்முள் புகும். இப்போது எமது ஊடகங்களை கட்டுப்படுத்த எமக்கொரு அரசு கூட இல்லை. அதனால் இந்தியத் தக்கம் எமது ஊடகங்களில் அதிகமாக எதிரொளிக்கிறது. இதைத் தடுக்க எமது சொற்களை நாம் இணைய அகராதிகளில் ஏற்றல் வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரை எழுதுபவர்கள் எமது சொற்களைக் கையாள்வர். 

அவ்வாறு யாரும் உருவாக்க விரும்பின், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான அத்தனை மூலங்களையும் நான் வழங்குகிறேன்.

 

 

 

நீங்கள் சொன்னது அத்தனையிலும் எனக்கு உடன்பாடு நன்னி👍.

3 hours ago, நன்னிச் சோழன் said:

அவ்வாறு யாரும் உருவாக்க விரும்பின், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான அத்தனை மூலங்களையும் நான் வழங்குகிறேன்.

அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் யாராவது வருவார்கள். ஆரம்ப முயற்சியை ஒரு தமிழ் படம் எடுக்கும் செலவிற்குள் செய்யலாம்.

எப்போதும் லொட்டரி டிக்கெட் போடுவேன்…விழுந்தால் முதல் வேலை இதுதான்.

2 hours ago, நன்னிச் சோழன் said:

பெயர்சொற்களை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவற்றை நாம் வழங்கும் போது எமது மொழியின் இலக்கணத்திற்கு ஏற்ப வடிவமைத்து வழங்க வேண்டும். அதுவே எமது மொழியை சிதைக்காமால் வைத்திருக்கும் செயற்பாடு ஆகும். 

 

Fanta - நீங்கள் "இஃவான்ரா" என்று எழுதுங்கள். 'விடுதலைப்புலிகள், களத்தில், ஈழநாதம்' போன்ற எமது நாட்டின் நாளேடு/மாதயிதழகளில் "F" இற்கு நிகராக "ஃவ்" ஆகிய இரு எழுத்துக்கள் கையாளப்பட்டுள்ளதைக் கண்டிருக்கிறேன். அதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன். அகேனத்திற்கு முன் இ/அ வரல் வேண்டும். 

மேலும் "ஃப" வைக் காட்டிலும் "ஃவ" தான் F என்ற ஒல்லிக்கு நிகராக உள்ளது. (கொஞ்சம் அண்மியதாக என்று வைத்துக்கொள்ளலாம்.)

 

 

நன்றி.

Edited by goshan_che
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

தமிழில் பல விதமான பெயர்கள் உண்டு காரணப் பெயர்தான் கட்டாயம் வைக்கவேண்டும் என்பதில்லை.காரணப் பெயர் வைத்தால் அது கூடிய பொருள் விளக்கத்தைக் கொடுக்கும் என்ற காரணத்தால் தற்காலத்தில் அநேக புதிய சொற்கள் காரணப்பெயர்களாக அமைக்கப்படுகின்றன்.காரணப் பெயர் வைக்க உச்சரிப்பதற்கு கடினமாகவோ நீளமானதாகவோ இருந்தால்  இடுகுறிப்பெயர் குணப்பெயர்  பெுhன்ற பெயர்களை வைக்கலாம். அனால் அதனை ஒரு அமைப்பு முறைக்குள் கொண்டு வரவேண்டும். அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் இப் பொழுது கனகாலமாக நடக்கவில்லை. அவை போன்ற அமைப்புக்களில் புதிய தமிழ் சொற்களை உருவாக்குவதற்கான அறிஞர்களை வைத்து உருவாக்கி  அறிஞர்களிடையே விவாதங்கள் i வைத்து கூடுதலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயரை வைக்கலாம்.. ஆனால் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி  காலப் போக்கில் அது ஆங்கில மொழிச் சொல்லாகவே பலராலும் கருதப்படுகிறது;.தமிழும் இவ்வளவு காலத்துக்கு நிலைத்து நிற்பதற்கு காரணம் காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பபித்துக் கொள்ளும் ஆற்றலினால்தான்.உண்மையில் மதிழக அரசு இதனை முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் அலர்கள் கீழடி நாகரிகத்தையே திராவிடநாகரிகம் என்று பெயர் மாற்றி வஞ்சகம் செய்பவர்கள். தமழரைத் தமிழர்களே ஆளும் நிலை வரும்போது தமிழ் பாரிய வளர்சியை அடையும். இவ்வளவு நெருக்குவாரத்துக்குள்ளும் நின்று பிடித்து வளர்வதே nஅதன் சிறப்புத்தான்.

உண்மைதான். நிச்சயம் பல சொற்கள் உதாரணம் disc = வட்டு தமிழில் வழக்கொழிந்து போயுள்ளன. நன்னி சொன்னது போல் இவற்றை மீள பாவனைக்கு எடுத்து அதன் பின்னும் தகுந்த சொல் இல்லை என்றால், இடுகுறியாகவோ காரணமாகவோ உருவாக்கலாம்.

ஆனால் புதியதாக ஒரு சொல்லை உருவாக்குவது கடைசி வழியாக (last resort) ஆக இருக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

எமக்கு என ஒரு தேசிய-அரசு (nation-state) இல்லாதபடியால், நாம் பிரென்ஞ் பாணியை எடுத்தால் அது இந்திய கைப்பொம்மையாகவே இருக்கும்.

ஆகவே ஆங்கில/ஆக்ஸ்போர்ட் பாணியில் - கேள்விக்கு அப்பாலான தகுதி உடையவர்களை கொண்ட ஒரு அமைப்பை அமைக்க வேண்டியது காலத்தின் தேவை என நான் நினைக்கிறேன்.

இப்படியே சுயம்பாக இப்போ இருப்பது போல் விடுவது பல குழப்பங்களை தருகிறது (ஒரு கொள்கை வகுப்பு, விதி முறை இல்லை).

அதை விட முக்கியமாக நீ யார் என்ற கேள்வியையும், அதனைவிட பாரதூரமாக இப்படி மொழி உருவாக்கத்தை கேலிப்பொருளாக்கும் போக்கையும் காண்கிறோம்.

ஆகவே இப்போ இருக்கும் நிலை மாற வேண்டும் ஒரு காத்திரமான அரசுசாரா அமைப்பு இதை முன்னெடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான ஆனால் உறுதியான நம்பிக்கை.

நீங்கள் சொன்னது அத்தனையிலும் எனக்கு உடன்பாடு நன்னி👍.

அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் யாராவது வருவார்கள். ஆரம்ப முயற்சியை ஒரு தமிழ் படம் எடுக்கும் செலவிற்குள் செய்யலாம்.

எப்போதும் லொட்டரி டிக்கெட் போடுவேன்…விழுந்தால் முதல் வேலை இதுதான்.

நன்றி.

ஓம், உண்மை. அரசோடு உருவாக்கினால் அது இந்தியாவில் தான் அமையும், எமக்கென ஒரு அரசு உருவாகாத வரை. இந்தியாவில் உண்டாகுவதில் கண்டிப்பாக ஆரியத்தாக்கம் இருக்கும். மேலும் வழக்கமான இழுத்தடிப்புகள், எம்மை புறக்கணிப்பமை என பல கூத்துகள் அரங்கேறும். 

எமக்கென ஒன்றும் அவர்களுக்கென ஒன்றும் அமைந்தால் நல்லாயிருக்கும். இரு புலத்தின் வழக்கும் அவ்வவரின் தனித்தன்மையும் காக்கப்படும். எனக்கு ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக இருக்க விருப்பமில்லை. உலகெங்கும் சிதறியுள்ள எமது அறிஞர்களை ஒன்றிணைத்து நாமிதை உருவாக்க வேண்டும் - ஏலும்.

லொட்ரியில் வெல்ல வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2022 at 02:56, நன்னிச் சோழன் said:

ஓம், உண்மை. அரசோடு உருவாக்கினால் அது இந்தியாவில் தான் அமையும், எமக்கென ஒரு அரசு உருவாகாத வரை. இந்தியாவில் உண்டாகுவதில் கண்டிப்பாக ஆரியத்தாக்கம் இருக்கும். மேலும் வழக்கமான இழுத்தடிப்புகள், எம்மை புறக்கணிப்பமை என பல கூத்துகள் அரங்கேறும். 

எமக்கென ஒன்றும் அவர்களுக்கென ஒன்றும் அமைந்தால் நல்லாயிருக்கும். இரு புலத்தின் வழக்கும் அவ்வவரின் தனித்தன்மையும் காக்கப்படும். எனக்கு ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக இருக்க விருப்பமில்லை. உலகெங்கும் சிதறியுள்ள எமது அறிஞர்களை ஒன்றிணைத்து நாமிதை உருவாக்க வேண்டும் - ஏலும்.

லொட்ரியில் வெல்ல வாழ்த்துக்கள்!

 

லொட்ரியில் வெல்ல வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மை தான் பையா.இந்த ஒரு காரனத்துக்காக சென்னை அணியை பிடிக்காது.
    • சென்னையை இறுதி வரை திணற வைத்த குஜராத் பேட்டர்கள்: அசால்டாக வெற்றி பெற்ற டைட்டன்ஸ் பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER 31 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் எப்போது என எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டன. அதிலும் முதல் போட்டியே தமிழக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டி. சென்னை அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணியைச் சேர்ந்த ஷுப்மன் கில், விஜய் சங்கர், ரஷீத் கான், ராகுல் தெவாதியா என்று அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் சென்னை வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்யவே, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.   கடந்த ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்து, இறுதியில் 9வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சென்னை அணி, இந்த முறை தனது பழைய வெற்றிப் பட்டியலில் இடம் பெறுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளாசத் தொடங்கியது. சென்னை அணியின் கேப்டன் 41 வயதான தோனிக்கு இது அநேகமாக கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வருவதால், அவர் சுழற்றியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதேவேளையில், அவரது ஆட்டம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பைப் போல் முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தோனி இன்னும் 22 ரன்களை எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய சீசனில் சென்னை அணியை குஜராத் அணி இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER   படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது இன்னிங்ஸில் ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டை வீழ்த்தியபோது முகமது ஷமியின் 100வது விக்கெட் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சென்னை தரப்பில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரில் விக்கெட் எதையும் இழக்காமல் நின்ற சென்னை அணி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. முகமது ஷமியின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே, கெய்க்வாட் இருவருமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இரண்டாவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா நேரடித் தாக்குதலைத் தொடங்கினார். ஆனால், அவரது பந்தை லாகவமாகத் தட்டிய கெய்க்வாட் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஸ்டம்புக்கு குறி வைத்து பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே நிதானமாக அதை எதிர்கொண்டார். முதல் மூன்று ஓவர்களில் ஷமி, ஹர்திக் பாண்ட்யா இருவரது பந்துவீச்சையும் எதிர்கொண்டதில், மூன்றாவது ஓவரின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்களை சென்னை எடுத்திருந்தது. டெவோன் கான்வே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஷமி தனது 100வது விக்கெட்டை எடுத்தார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். ஷமியின் சுழற்பந்தை எதிர்கொண்ட மொயீன் அலிக்கு தனது பந்துவீச்சின் சுவையைத் தொடக்கத்திலேயே கொஞ்சம் காட்டி விளையாடினார் ஷமி. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 ஆறாவது ஓவர் முடிவில் ரஷீத் கான் பந்துவீச்சில் மொயீன் அலியும் அவுட்டானார். ஆறு ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 51 ரன்காளை எடுத்திருந்தது. தொடக்க வீரர் டெவோன் கான்வே ஒரு ரன்னிலும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி ஒரு சிக்சர், 4 பவுண்டரி அடித்து 24 ரன்களோடும் ஆட்டமிழந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து களத்தில் நின்று விளாசினார். மொயீன் அலியை தொடர்ந்து கெய்க்வாட் உடன் கூட்டணி சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் களமிறங்கிய நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பந்துவீசத் தொடங்கினார். ஏழாவது ஓவரில் ஹர்திக் பந்துவீச்சை எதிர்கொண்ட கெய்க்வாட், பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு லாங்-ஆஃபில் சிக்சர் அடித்தார். நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே ரஷீத் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார். உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை மிக அழகாக வீழ்த்தினார் ரஷீத். அவரது பந்துவீச்சை கணிப்பதே பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமானது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டினார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 கேன் வில்லியம்சன் காயம் பவர்பிளே முடிவதற்கு முன்பாக ரஷீத் ஆஃப்-ஸ்டம்பை சுற்றி ஒரு பந்து வீசினார். அந்தப் பந்தை இறங்கி லாங் ஷாட்டில் அடிக்க முயன்றார் மொயீன் அலி. அவரை அப்படி அடிக்க வைப்பதே ரஷீத்தின் திட்டமாக இருந்தது. ஆனால், அப்படி அவர் செய்யும்போது மொயீன் அலி அடித்த பந்தை அழகாக சாஹா கேட்ச் செய்தார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டையும் அழகாக எடுத்தார் ரஷீத் கான். ஒன்பது ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எடுத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அபார பேட்டிங்கை வெளிப்படுத்தியவர், அடுத்தடுத்து ஃபோர், சிக்ஸ் என விளாசிக் கொண்டிருந்தார். 13வது ஓவர் முடிவில் சிக்சர் அடிக்க முயன்றார் ஜோசுவா லிட்டில். அந்த நேரத்தில் அதைத் தடுக்க முயன்ற வில்லியம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பக்கம் பந்து ஃபோர் போனதாக நடுவரும் சைகை செய்தார். அதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு ஜோசுவா லிட்டிலை 12 ரன்களில் அவுட்டாக்கி திருப்பி அனுப்பினார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடர்களில் தனது 12 வது அரைசதத்தை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே பூர்த்தி செய்துள்ளார். இதுவரை அவர் 11 அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியதில் இருந்து கே.எல்.ராகுல் 18 அரைசதங்களையும் டுப்ளெஸ்ஸிஸ் 13 அரை சதங்களையும் அடித்துள்ளார்கள். அடுத்தடுத்து சிக்சரும் ஃபோரும் விளாசிக் கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 18வது ஓவரில் 92 ரன்களில் அவுட்டானார். அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஃபுல் டாஸில் வந்த பந்தை லாங் ஷாட் அடிக்க முயன்றபோது ஷுப்மன் கில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவையும் அதே ஓவரில் தமிழக வீரரான விஜய் சங்கர் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இறுதியாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த தோனியின் என்ட்ரிக்கு நேரம் வந்தது. தோனி களமிறங்கி அட்டகாசமான சிக்சர் ஒன்றை அடிக்கவே ரசிகர்களின் ஆனந்தக் கூச்சல் அரங்கத்தை அதிர வைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பவுண்டரிக்கு பந்தை தட்டிவிட்டார். கடைசியாக களமிறங்கிய தோனி 7 பந்துகளில் 14 ரன்களை அடித்து சென்னையின் ரன் கணக்கை 178 ஆக உயர்த்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து பேட்டிங்கை நிறைவு செய்தது. பட மூலாதாரம்,ANI இம்பாக்ட் ப்ளேயர்கள் இந்த ஐபிஎல் தொடரின் முதல் இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக களமிறங்கினார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கூட்டணியாக ஷுப்மன் கில், விரித்திமான் சாஹா களமிறங்கினர். 179 ரன்கள் இலக்கோடு குஜராத் தனது ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் ஓவரை வெறும் மூன்று ரன்களோடு குஜராத் தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், இரண்டாவது ஓவரிலேயே சாஹா இறங்கி ஆடத் தொடங்கினார். தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் சாஹா ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தனர். ஷுப்மன் கில்லும் தன் பங்குக்கு ஒரு ஃபோர் அடித்தார். மூன்றாவது ஓவரை தீபக் சஹார் வீசவே அதிலும் சாஹா மீண்டுமொரு சிக்ஸ் அடித்தார். மூன்று ஓவர் முடிவில் குஜராத் அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 29 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், நான்காவது ஓவரில் குஜராத் அணிக்கு அதிர்ச்சியளிக்க வந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சாஹாவுக்கு ஒரு யார்க்கர் பந்தை வீசினார். நான்காவது ஓவரில், சாஹா தூக்கி அடித்த பந்தை துபே கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கினார் சாய் சுதர்சன். களத்திற்கு வந்தவுடன் ஸ்கொயர் லெக்கில் ஒரு ஃபோர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். ஐந்தாவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் கில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். பவர் ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை எடுத்திருந்தது. பத்தாவது ஓவரில் குஜராத் அணிக்கான அடுத்த விக்கெட் விழுந்தது. நான்காவது ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன், அதுவரை மூன்று பவுண்டரிகளை அடித்து 17 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவரது விக்கெட்டை ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எடுத்துக் கொடுத்தார். அவரது பந்தில் பின்பக்கமாக வந்த பந்தை கேப்டன் தோனி கேட்ச் பிடித்தார். இது மிகவும் தேவையான விக்கெட்டாகவும் கருதப்பட்டது. பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER ஷுப்மன் கில் அதிரடி அவரைத் தொடர்ந்து முழு ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்தார். ஷுப்மன் கில் மிக அழகாக ஆட்டத்தைக் கொண்டு சென்றார். தேவையான நேரத்தில் இறங்கி அடித்து பந்தை பவுண்டரிக்கு தட்டிவிடுவதும் சூழ்நிலைக்கு ஏற்ப சிங்கிள்ஸ் ஓடுவதுமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஷுப்மன் கில் 11வது ஓவரில் கச்சிதமான சிக்ஸ் ஒன்றை அடித்து குஜராத் அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டு விக்கெட் இழப்பிற்கு 106 ஆக உயர்த்தினார். சரியாகக் கணித்து, திட்டமிட்டு அடித்த சிக்ஸ் அது. மிகக் கடினமான சிக்ஸரை அட்டகாசமாக அடித்துக் காட்டினார் கில். 54 பந்துகளில் 74 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தொடங்கினார். தொடர்ந்து அதே அதிரடியைக் காட்டிய ஷுப்மன் கில், 12வது ஓவரில் 30 பந்துகளில் 50 ரன்களை அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். “சென்னை, குஜராத் இரு அணிகளிலும் பார்த்தால், அனுபவம், திறமை ஆகியவற்றில் பெரியளவு வித்தியாசம் உள்ளது. ஆனால், குஜராத் அணிக்கான உத்வேகம் இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டாவிடம் இருந்து கிடைத்துள்ளது களத்தில் பிரதிபலிக்கிறது” என்று வர்ணனையாளர்கள் குஜராத் அணியின் பேட்டிங் குறித்துக் குறிப்பிட்டனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே 11 பந்துகளில் 8 ரன்களை அடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஐந்தாவதாக விஜய் சங்கர் களத்தில் இறங்கினார். 13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்திருந்தது. தனது மூன்றாவது ஓவரை வீசுவதற்காக 15வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார். 13 பந்துகளில் 30 ரன்களைக் கொடுத்து, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாமல் இருந்தார். 15வது ஓவரில் சென்னை இருந்த நிலைமைக்கு, ஷுப்மன் கில் விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. அவர் தொடர்ச்சியாக ஷார்ட் பால்களை வீசிக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஆட்டம் குஜராத்தின் கைகளிலேயே இருந்துகொண்டிருந்தது. துல்லியமாகத் திட்டமிட்டு, கச்சிதமாக விளையாடினால் வெற்றி எளிது என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், ஷுப்மன் கில்லின் விக்கெட்டை எடுத்துவிட்டால் சென்னையின் தரப்புக்கு ஆட்டம் வந்துவிடக்கூடிய சிறிதளவு வாய்ப்பும் இருந்தது. தேஷ்பாண்டேவின்மீது அதிக அழுத்தம் இருந்தது. அந்த நேரத்தில் மீண்டுமொரு லாங் ஆன் சிக்ஸ் அடித்து ஷுப்மன் கில் மேலதிக அழுத்தத்தை அவர்மீது திணித்தார். இருந்தும் தனது பந்துவீச்சை அதே ஃபார்மில் தொடர்ந்த துஷார் தேஷ்பாண்டே மிக முக்கியமான விக்கெட்டை சரியான நேரத்தில் எடுத்தார். பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER சென்னையின் நம்பிக்கையை உடைத்த ரஷீத் கான் அவர் சிக்ஸ் அடித்த பிறகு, அதற்கு அடுத்த பந்திலேயே ஷார்ட் பாலை கில் அடிக்கவே பறந்து சென்ற பந்து ருதுராஜ் கெய்க்வாடின் கைகளில் அழகாக அமர்ந்தது. 36 பந்துகளில் 63 ரன்களை எடுத்து கில் வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் தெவாதியா களமிறங்கினார். இன்னும் ஒரேயொரு விக்கெட்டை எடுத்துவிட்டால், குஜராத் அணியில் பேட்டிங் செய்ய ஆள் இல்லை என்ற நிலை நிலவியது. 15 ஓவர் இறுதியில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்திருந்தது குஜராத். களத்தில் விஜய் சங்கர், ராகுல் தெவாதியா ஆடிக் கொண்டிருந்தனர். இப்போதும்கூட ஆட்டத்தை குஜராத் தனது கைகளிலேயே வைத்திருந்தது. கடைசி நான்கு ஓவர் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 34 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. தீபக் சாஹர் 17வது ஓவரில் களமிறங்கி நான்கு ரன்களை கொடுத்திருந்தார். மூன்று ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 149 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 18 பந்துகளில் 30 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இருந்தது. 10.59 என்ற ரன்ரேட் அந்த அணிக்குத் தேவையாக இருந்தது. இந்நிலையில், ஹங்கர்கேகர் 18வது ஓவரில் பந்துவீசினார். மிக மிக முக்கியமான ஓவராக கருதப்படும் இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் டாட் பாலாக வீசினார் ஹங்கர்கேகர். பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER மூன்றாவது பந்தில் ஒரேயொரு ரன்னை கொடுத்து ரன் ரேட்டை 11க்கும் மேல் அதிகரிக்க வைத்து குஜராத் அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்து அந்த ஓவரில் ஏற்பட்ட அழுத்தத்தை அசால்டாக வி்ஜய் சங்கர் குறைத்தார். ஆனால், அவருக்கு ஈடுகொடுத்துப் போராடிய ஹங்கர்கேகர், விஜய் சங்கரின் விக்கெட்டை வீழ்த்தினார். அவருடைய பந்துவீச்சில் விஜய் சங்கர் ஷாட்டை மிட்செல் சான்ட்னர் கேட்ச் பிடித்தார். அவருக்கு அடுத்ததாக ரஷீத் கான் களமிறங்கினார். ஆனால், 10 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் ராகுல் தெவாதியா. இன்னும் இரண்டு ஓவர்களே பாக்கியிருந்தன. 19வது ஓவரில் ஐந்து பந்துகளில் 15 ரன்களை எடுத்துக் காட்டினார் ரஷீத் கான். விஜய் சங்கர் விக்கெட்டை இழந்ததும் வெற்றிக்கான கதவு மூடிவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக ரஷீத் கான் களத்தில் சிக்ஸ், ஃபோர் எனப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் குஜராத் பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பெரியளவு ரன் எடுக்காமல் இருந்த ராகுல் தெவாதியா 20வது ஓவரில் சிக்ஸ் அடித்து சாவகாசமாக ஆட்டத்தை முடிக்க உதவினார். இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/articles/c3g5998v5g1o
    • வெடுக்குநாறி ஆலயத்திற்கு சிவபூமியால் 7 இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு Published By: T. SARANYA 01 APR, 2023 | 09:55 AM வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய நிறுவனங்களுடனான  கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில், அழிக்கப்பட்ட ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அவர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளது. இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால்  பிரதிஷ்டை நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் வருவார்கள் என அறங்காவலர் கூறியபடியால் அரசியல்வாதிகள்  வழங்கி வைத்திருப்பார்கள் என யாரும் கருதக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/151878
    • "இது வெறும் படமல்ல, தமிழ் ரசிகர்களின் கனத்த உணர்வு" - விடுதலை படத்தை பாராட்டும் சீமான், திருமாவளவன் பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சூரியின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு நடிகராக சூரி வேறொரு பரிமாணத்திற்குச் சென்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் நேர்மறையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.   சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், பத்திரிக்கையாளர்களும்கூட சூரியின் நடிப்பு குறித்து மிகவும் வியந்து பாராட்டி வருகின்றனர். ”இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார்,” என சீமான் கூறியுள்ளார். விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'31 மார்ச் 2023 விடுதலை படம் கூறும் 'கொடூர' சம்பவங்கள் - தமிழகத்தில் நடந்த உண்மைக் கதையா?31 மார்ச் 2023 சென்னை அணிக்கு தண்ணி காட்டிய சுப்மன் கில் - சொதப்பிய சிஎஸ்கே இம்பாக்ட் ப்ளேயர்2 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் கதை என்ன? அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்தச் சுரங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற அமைப்பு ஆயுதம் தாங்கிப் போராடுகிறது. அந்த அமைப்பை வழிநடத்தும் விஜய் சேதுபதியைக் கைது செய்யச் செல்லும் காவல்துறை குழுவில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் குமரேசன் கதாப்பாத்திரத்தில் வரும் சூரி. உயரதிகாரியின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சூரிக்கு, அவரது உயரதிகாரியால் மெமோ கொடுக்கப்படுகிறது. தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் பணியில் இருக்கப் போராடும் சூரிக்கு என்ன ஆனது? விஜய் சேதுபதி பிடிபட்டாரா? சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பு? இதுதான் படத்தின் மீதிக் கதை. அரசியல் தலைவர்கள் பாராட்டு பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE விடுதலை திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ உலக சினிமா அளவிற்கு படம் எடுப்பதற்கு, நம்மிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்திருக்கிறது. இதுவொரு திரைக்கதை மட்டுமல்ல, நெடுங்காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சுமக்கும் ஒரு கனத்த உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார். இதற்கு முன்னால் நீங்கள் பார்த்த சூரியை இந்த திரைப்படத்தில் காண முடியாது” என்று சூரியின் நடிப்பு குறித்தும் பாராட்டினார். அதேபோல் இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், "அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், "வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு திரை நட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள் பட மூலாதாரம்,ALPHONSE PUTHREN/TWITTER "இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூரியிடம் வெளிப்பட்டிருக்கும் நடிப்பு ஒரு சாதாரண மாற்றம் அல்ல, அது ஒரு பரிணாம வளர்ச்சி” என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் ட்விட்டர் பதிவில், “இதை சாதாரண மாற்றம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சூரியின் பரிணாம வளர்ச்சி. அவர் மீது நம்பிக்கை வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கும், அவருக்கு இப்படியான ஒரு பாதையை வகுத்துக் கொடுத்ததற்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியை குறிப்பிட்டு, “அண்ணா நீங்கள் இல்லாமல் தமிழ் சினிமா ஒரு அடி முன்னால் செல்லாது என்ற நிலையை உருவாக்கியதற்கு உங்களுக்கு ஒரு சல்யூட்” என்றும் கூறியுள்ளார். குணச்சித்திர நடிகரான கயல் தேவராஜ், “விடுதலை திரைப்படத்தினுடைய கதையின் நாயகனாக சூரியின் முகவரி சொல்லும்,” என்று கூறியுள்ளார். “நீ படிப்படியாய் முன்னுக்கு வந்தவன். நகைச்சுவையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய். இன்று விடுதலை திரைப்படத்தில் உனது எதிர்கால லட்சியங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். விடுதலை முதல் பாகத்தினுடைய கதையின் நாயகனாக உன் முகவரி சொல்லும். வெற்றி, வெற்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். "அதேபோல் விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும்,” என்று நடிகர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். படம் வெளியாவதற்குச் சில வாரங்கள் முன்னதாக விடுதலை திரைப்படத்தின் புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த இயக்குநர் சுதா கொங்காரா, “விடுதலை திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்று என் நண்பர் சொன்னதால், அதைக் காண வந்திருக்கிறேன்” என்று பதிவிட்டு இப்படம் வெளியாவது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். சினிமா விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் பட மூலாதாரம்,BARADWAJ RANGAN/TWITTER விடுதலை திரைப்படம் குறித்து விமர்சித்திருக்கும் ஊடகவியலாளர் பரத்வாஜ்ரங்கன், “விசாரணை திரைப்படம் அளவிற்கு இந்தப் படம் வலிமையாக இல்லை," என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில், “விசாரணை திரைப்படத்தில் காணப்பட்ட அந்த வலிமையான சக்தி, விடுதலையில் இல்லை. ஆனால் இது நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்,” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகரான பிரசாத் ரங்கசாமி, “விடுதலை, தமிழ் சினிமாவின் மணி மகுடத்தில் ஏறியிருக்கும் மற்றொரு வைரம். நடிகர் சூரிக்கு எனது அன்பும் மரியாதையும். இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இதயத்தில் இருப்பதை, சினிமாவின் மூலம் பேசுகிறார்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சினிமா ஊடகவியலாளரான கவிதா, “நடிகர் சூரிக்கு சல்யூட். விடுதலை திரைப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார். சூரியின் நடிப்பை வியக்கும் ரசிகர்கள் பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE சூரியின் நடிப்பை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சூரியின் சினிமா பயணத்தில் விடுதலை திரைப்படம் ஒரு பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். “நடிகர் சூரிக்கு அவரின் மொத்த வாழ்நாளுக்கான வாய்ப்பாக விடுதலை திரைப்படம் அமைந்துள்ளது. விஜய் சேதுபதிக்காக முக்கியமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது வெற்றிமாறனின் மிகச் சிறந்த படம் அல்ல. ஆனால் இதுவொரு நல்ல திரைப்படம்,” என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், ”சூரியின் வெள்ளந்தித்தனமான இயல்பான நடிப்பு, அவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியாய் அருமையான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்,” என்று மற்றொரு ட்விட்டர் பயனர் ஒருவரும் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c7290955njlo
    • ஒரு காலின் பாதத்தை இழந்த முன்னாள் போராளி மகனின் பார்வைக்காக கையேந்தும் அவலம் Published By: Nanthini 01 Apr, 2023 | 11:11 AM (எஸ்.றொசேரியன் லெம்பேட்)  இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகால போர் தமிழர் வாழ்வியலில் பல மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. இந்த கொடூர யுத்தத்தினால் தமிழர் தாயக பகுதிகளில் பலர் மரணித்தனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்; இன்னும் பலர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலை காணப்படுகிறது. ஆனாலும், யுத்தத்தின் வடுக்களினாலும், நேரடியாக யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி, தற்போது மாற்றுத்திறனாளியாகியுள்ள 'சிலுவைராசா' என அழைக்கப்படும் தமிழ் கீதனின் தற்போதைய நிலையை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். மன்னார், விடத்தல் தீவு பகுதியை சேர்ந்த தமிழ் கீதன் 'யாழ் செல்லும் படையணியை' சேர்ந்த முன்னாள் போராளி ஆவார். மாங்குள யுத்தம், ஓயாத அலைகள் போன்ற சமர்களில் கலந்துகொண்ட இந்த போராளி, தற்போது தோட்டவெளி ஜோசேவாஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்க வீட்டுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடொன்றில் வாழ்ந்து வருகிறார். 1999ஆம் ஆண்டில் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது தனது ஒரு காலின் பாதத்தை முழுவதுமாக இழந்த நிலையில் தமிழ் கீதன் மாற்றுத்திறனாளியானார். ஒழுங்காக நடக்க முடியாத நிலையில், தனது 3 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை பராமரிப்பதற்காக தனக்கு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார். ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் இவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன. குடும்ப வறுமை காரணமாக இவரின் மனைவி தனியார் நிறுவனமொன்றில் சிறிய சம்பளத்துக்காக சுத்திகரிப்பு பணியாளராக வேலை செய்து வருகின்றார். இத்தகைய துன்பகரமான நிலையிலேயே தமிழ் கீதனின் மூத்த மகள் உயர்தரத்தில் கல்வி பயில்கிறார். ஒரு மகன் விபத்தொன்றினால்  எலும்பு முறிவு ஏற்பட்டு, அவரும் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார். இளைய மகனும் பார்வையற்ற குழந்தையாகவே பிறந்துள்ளமை அந்த குடும்பத்தின் பேரவலமாக காணப்படுகிறது.  இவ்வாறு தானும், தனது இரு மாற்றுத்திறனாளி பிள்ளைகளும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் அன்றாடம் தவித்து வருவதாக தமிழ் கீதன் தெரிவித்துள்ளார்.  இவர் தனது மகனின் பார்வைக்காக தன்னிடம் இருந்த படகு மற்றும் இதர சொத்துக்களை விற்று சிகிச்சை மேற்கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் மகனுக்கு மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்.  மகனின் கண்களை விழித்திரை மறைப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில், அவ்விழித்திரையை சரி செய்யும் சிகிச்சையை மேற்கொள்ள வசதியின்றி துன்புற்று வருகிறார். தனக்கு ஆடம்பர உதவிகளை செய்யாவிட்டால் கூட வாழ்வாதாரத்தை முன்னேற்றும் சிறு உதவிகளையேனும் புலம்பெயர் உறவுகள் வழங்க முன்வந்தால், தன் குடும்பத்தையும் மகனின் சிகிச்சையையும் கொண்டு நடத்த உதவியாக இருக்கும்.  வாழ்வாதார உதவிகளை வழங்க விரும்பாவிடினும், தனது மகன் பார்வை பெறுவதற்கான சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளையாவது யாரேனும் வழங்க முன்வாருங்கள் என தமிழ் கீதன் கண்ணீர் சிந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.         https://www.virakesari.lk/article/151879
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.