Jump to content

மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
(truecopythink.media தளத்தில் வெளியான மலையாள கட்டுரையின் தமிழாக்கம்)
சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு
(மலையாள எழுத்தாளர்)
தமிழாக்கம்
களியக்காவிளை ஷினு (Shinu R S)
மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக நாம் கல்விநிலையங்களில் பிரதான துணைமொழியாக கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான் என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால், தமிழ்தான் நமது பாரம்பரியத்தின் மொழி. கேரளாவின் நீண்ட கலாச்சாரத்தின் சரித்திர உள்ளுணர்ச்சியாக இருப்பது தமிழ். நமது மொழியின் உயிர் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் குடி கொள்கிறது. வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கத்திற்கு எதிராக வியக்கத்தக்க விதத்தில் தாக்குப்பிடித்த மொழியாகவும் தமிழை நாம் காண வேண்டும்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளில், சமஸ்கிருதத்தினை கலக்கவிடாமல் மிகக்கவனமாக விலக்கி வைத்தவர்கள் தமிழ்ப் பெருங்குடிகள். தமிழின் பழமையும் இலக்கிய வளமும் அந்த மண்ணின் பெருமைக்குரிய சின்னங்களாக, அரசியல் உந்துசக்தியாக இன்று வரையிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. சொல்வளத்தாலும் இசைத்தன்மையாலும் தமிழ் மொழி உலகின் அனைத்து மொழிகளைவிட முன்னணியில் இருக்கிறது. எந்த ஆங்கில வார்த்தைகளுக்கும் அந்த மொழியில் அதற்கு தகுந்த சொல்லாடல்கள் தேவைக்கு தகுந்தபடி தோற்றம் பெறுவதைக் காணலாம். ஏராளமான இயந்திரக் கருவிகள் மேற்குலக நாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்படுவதும், அவை இந்தியாவை வந்தடையவும் செய்கின்றன.
நம்மால் எக்கருவியும் கண்டுபிடிக்கப்படாதது மட்டுமின்றி, இல்லாத பழங்கதை பேச்சுகளில் மூழ்கிப் போவதும், எந்தவித வெட்கமுமின்றி கருவிகளைப் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் செய்பவர்கள். நமக்கு அந்த கருவியின் பெயரில் கூட எந்தவித உரிமையும் இல்லை! அச்சூழலிலும் அந்த இயந்திரங்களுக்கு சுயமாக பெயர் சொல்லி அழைப்பதற்காவது முயற்சி செய்யும் மொழிதான் தமிழ். ரெப்ரிஜிரேட்டருக்கு அவர்கள் சாதாரணமாக 'குளிர் சாதனப் பெட்டி' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஏர்கண்டிஷனருக்கும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
சாதனம் என்பதற்கு இயந்திரம் என்பதுதான் தமிழில் அர்த்தம். மொபைல் என்ற சொல்லிற்கு தமிழர்கள் முதல்தர பெயரிட்டிருக்கிறார்கள்; 'அலைபேசி'. கம்ப்யூட்டருக்கு கணினி, கால்குலேட்டருக்கு 'கணிப்பான்', 'எளிகணி' என்னும் இரு பெயரிட்டிருக்கிறார்கள். கணிப்பான் என்ற சொல்லிலிருந்து கணிப்பதற்கும், எளிதில் கணிக்க என்னும் அர்த்தங்களில் இருந்துதான் 'எளிகணி' என்று கால்குலேட்டருக்கு பெயர் படைத்திருக்கலாம்.
பஸ்சை 'பேருந்து' என்று தமிழ்ப்படுத்தினார்கள். போட்டோவிற்கோ மிகவும் ரசனைக்குரிய சொற்பிரயோகமே தமிழுக்கு; நிழல் படம். மற்றும் ஒரு அழகான சொல் 'நிழல்குடை'. இது வேறெதுவுமில்லை. வெயிட்டிங் ஷெட்டிற்கு!
Weather என்பதற்கு சரியான மலையாளம் இன்றைக்கும் இல்லை. Climate என்ற சொல்லுக்கு 'காலாவஸ்த' என்று எழுதுகிறோம். Weather என்பதற்கு 'தைனம்தின காலாவஸ்த' என்றெல்லாம் சில பத்திரிகைகள் எழுத முயற்சித்தாலும் அது எதுவும் சரிப்படவில்லை. உண்மையில் நான் பிறந்த இடமான கண்ணூரில் Weather என்பதற்கு அழகான மலையாளச் சொல் இருக்கிறது - ஆச்ச். வானம் கருமேகங்கள் சூழும்பொழுது மழை மறையும்பொழுது பண்டைய தலைமுறையினர் இப்போதும் சொல்வார்கள். ஆஹா, ஆச்ச் மாறிட்டே என்று. இப்படி எவ்வளவோ கவித்துவமான வட்டார வழக்குகளை மலையாளி இழந்திருக்கிறான். ஏதாவது ஒரு பிரபல தினசரி பத்திரிகை பழக்கப்படுத்தி இருந்தால் சிலவேளை அழியாமல் இருந்திருக்கும்.
எந்த மொழியிலும் புதிய சொல்லாடல்களை வெளியில் இருந்து திணிப்பன் மூலம் உருவாக்க இயலாது. சமீபத்தில் நமது மொழி வல்லுனர்கள் ஆங்கிலத்திற்குச் சமமான வார்த்தைகளை உருவாக்க கடினமாக முயற்சி செய்த போதிலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. அவ்வாறான சொற்கள் ஓசை நயமோ, நமது கலாச்சாரம் குறித்த ஆழ்மன சித்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதுவே நிதர்சனம். 'ஸ்விட்ச்' என்பதற்கு 'வைத்யுத ஆகமன பிரத்தியாகமன யந்திரம்' என்ற ரீதியில் சொற்களை உருவாக்கினால் எப்படி இருக்கும்? 'ரயில்வே ஸ்டேஷனுக்கு' 'அக்னிசகட ஆகமன பிரத்தியாகன யந்திரம்' என்று இரண்டு முறை சொல்லி முடியும்போது, நமக்கான வண்டி கிளம்பிப் போயிருக்கும். இந்த இடத்தில் தமிழ் ஒரு முன்னுதாரணமாகிறது. நேற்று கண்டறிந்த ஆங்கில வார்த்தைக்கும் நாளை தமிழ் வார்த்தையை கண்டுபிடித்திருப்பார்கள். அதற்குத்தக வாட்ஸ் - அப்பிற்கு கூட தமிழில் பெயர் வந்துவிட்டது; பகிரி என்னும் சொல். எடுத்துக்காட்டுகள் இன்னும் நிறைய இருக்கிறது.
தமிழ் மொழிக்கு எப்படி இது சாத்தியமாகிறது? விடை எளிது. இசைத் தன்மை கொண்டது அம்மொழி. எளிமையானது. அனேக நூற்றாண்டுகளின் இலக்கியப் பாரம்பரியம் அதற்கு இருக்கிறது. அதன்மீதான அனைத்து மதிப்பும், அன்பும் அவர்களின் இதயத்தில் அந்த மொழியிடம் இருக்கிறது. 'தமிழன்' என்றுகூட ஒரு திரைப்படத்தின் பெயர் வருகிறது. சுயமரியாதையின் ஆற்றல் ஒரு வியாபார திரைப்படத்தின் பெயரில்கூட வெளிப்படுகிறது. அது மிகவிரைவிலேயே ஒரு சமூக, அரசியல் உணர்வாக மடை மாற்றம் செய்யப்படுகிறது. இப்படி இருக்கும்போது மலையாளி ஒரு திரைப்படத்திற்கு சூட்டிய பெயரைப் பாருங்கள் - 'மலையாளி மாமனுக்கு வணக்கம்' !
இணையோடு புணர்வது குறித்து சொல்வதற்கு காவியத் தன்மை கொண்ட ஒரு சொல் கூட மலையாளத்தில் இல்லை. ஆனால் தமிழில் கவனியுங்கள்; உடல் உறவு. எவ்வளவு தூரம் அழகானதும் ஓசை நயம் கொண்டதுமான சொல். காதலின் மென்மையை வெளிப்படுத்த இதுபோன்ற அதி அற்புதமான வார்த்தை இன்னும் இருக்கிறது தமிழில். அதில் ஒன்று தான் கலவி. 'கலவி' என்பதற்கு 'இரண்டாக இராமல் ஒன்றாவது' என்பதுவே அர்த்தம். காதலுடன் இணைவதற்க்கு இதைப்போன்ற சொல்லழகும் சமூக உணர்வும் உள்வாங்கிய வேறு எந்த சொல் இருக்கிறது? மலையாளத்தில் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் பகுதியான சொற்களும் விகாரம் தரக்கூடியவை. சுயமரியாதை அற்றதும் கூட. ஒரு நிமிடம், இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு அவ்வாறான சொற்களை ஆராய்ந்து பாருங்கள்; சொன்னதன் அர்த்தம் புரியும்.
1578 இல் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு தமிழ் வழிபாட்டு நூலை பழைய தமிழ் மொழிநடையில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அதற்குப் பெயர் 'தம்புரான் வணக்கம்'. அம்மொழிக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அப்புத்தகம், அச்சில் வெளியான முதல் இந்திய மொழி என்பதை கூட நினைவுகூர வேண்டும். அதை நமது சொந்த கேரள மண்ணில்தான் அச்சடித்தார்கள். வேணாட்டின் கொல்லத்தில். இந்த விஷயத்தில் கொல்லம் மாவட்டத்தவர்கள் மிகவும் பெருமை கொள்ளலாம். மலையாள நாடும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்பு குறித்து இதைவிட கூடுதலாக வேறு எதை சொல்ல முடியும்?
எந்தவொரு சமூகத்தினரினதும் வரலாற்று உணர்வும் மொழியில்தான் உயிர் வாழ்கிறது. வடக்கிலிருந்து உருவாகும் ஆரிய மயமாக்கல், தென்மேற்கு கரை ஓரங்களிலிருந்து உருவான வியாபார மிஷனரி தொடர்புகளினால் நாம் நமது தாய் மொழியான தமிழிலிருந்து பெருமளவுக்கு விலகி போய்யிருக்க வேண்டும். மொழியால் திணிக்கப்பட்ட நேரடியான மற்றும் மறைமுகமான காலனித்துவம் இன்றும் தொடர்கிறது. ஆனால், தமிழ் மொழியைக் கற்றிராத எந்தவொரு மலையாளியாலும் ஓரளவுக்கு தமிழில் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமது மொழி தமிழ் மொழியுடன் கொண்டிருப்பது தொப்புள் கொடி உறவாகும். தமிழின் சங்ககால காவியங்களில் ஒன்றினை எழுதியது ஒரு கேரளீயர். இளங்கோவடிகள் என்பது கவிஞனின் பெயர். படைப்பு; சிலப்பதிகாரம். ஒன்றிரண்டு அல்ல, 5700 வரிகள் இருக்கிறது. நாம் அறிந்திடாத கேரளக் கவிஞர்களின் பெயர்கள் இன்னும் இருக்கலாம். எட்டுத்தொகையின் சில கவிதைவரிகள் கேரளாவின் கவிஞர்கள் எழுதியதாக கருதப்படுகிறது.
இந்த குறிப்பின் நோக்கம் மொழி மீதான உரிமை கோரும் வாதமல்ல. உலகிலுள்ள எந்த மொழியும் பிற மொழிகளுக்கு எதிராக இல்லை என்பதுவே மேன்மையான உண்மை. உலகில் மிகவும் குறைவான மக்கள்தொகையினர் பேசும் மொழியைக்கூட மனிதன் பாதுகாக்க வேண்டும் என்று நம்பக்கூடிய ஒரு மனிதன் நான். ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு எந்த மொழியையும் திணிப்பதற்கு நான் எதிராளியும் கூட. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் மொழிக்குப் பின்னால் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் குரூர மனம் இருக்கிறது.
வேர்களை கைவிட்ட மரங்கள் அதன் ஆன்மாவை விரைவில் இழந்துவிடும். துணை மொழியாக நாம் கற்கும் ஆங்கிலத்துடன் முக்கியத்துவம் கொடுத்து கற்க வேண்டியது தமிழ் மொழியைத்தான். காரணம், வெயில் இலைகளை பசுமையாக்குவது போன்று, மண்ணின் ஆழங்களில் ஊடுருவும் வேர்கள் அதன் தாய்த்தடிகளையும் கிளைகளையும் வலுப்படுத்தும். கேரளாவில் வாழ்பவர்களின் தாய்மொழி மலையாளம் என்றாலும், மலையாளத்தின் தாய்மொழி தமிழ். அதில் ஒரு தற்காப்பு அரசியல் செயல்படுவதை நாம் அவதானிக்கலாம்.
(பி.கு: இந்த கட்டுரையை பகிர்வதின் நோக்கம் தமிழர்கள் முக்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது போன்று வீண் பெருமை பேசும் நோக்கத்தில் அல்ல. மாறாக தாய்மொழி கல்வியின் சிறப்பை இதைவிட எதார்த்தமாக தற்போதைய சூழலில் எளிமையாக புரியவைக்க முடியாது என்பதற்கே.
இந்த கட்டுரையை வாசிக்கும் போது மற்றொரு சம்பவம் நினைவு வருகிறது. சோவியத் வீழ்ந்து முப்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும் சோவியத் நாட்டில் ரஷ்ய மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்டு இங்கே ஏற்றுமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட பழைய புத்தகங்கள் சில நேரம் மூத்த தோழர்கள் வீடுகளில் காண கிடைக்கும். அந்த புத்தகத்தை தொட்டு பார்த்து "முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ” என்ற வரியை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வை வர்ணிக்க முடியாது. வெறும் தமிழ் என்றில்லை சோவியத் கம்யூனிஸ்டுகளால் உலகம் முழுவதும் அவரவர் தாய் மொழியிலேயே புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்து அச்சடித்து ஏற்றுமதி செய்தார்கள். தாய் மொழி கல்வியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக கம்யூனிச ஆசான்கள் பெரும் விவாதங்களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்)
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையும் ஆழமுமான பகுதிகளில் வாழ்பவர்கள் பேசும் மொழி என்பதனால் மலையாளம் (தமிழின்புணர்ச்சிவிதிப்படி) என்று அழைக்கப்பட்டது. உண்மையில் மலையாளத்தில் பேசப்படும் பல சொற்கள் ஆதித்தமிழ் சொற்களாகும். தமிழ் மலையாளத்துடன் கலந்ததனால் உருவான மொழிளே மலையாளம்.மலையாளிகள் பேசுவதை தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும். தமிழர்கள் பேசுவது தை மலையாளிகளால் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் மலையாளிகளும் தமிழர்களே . சேரநாடுட்டுத் தமிழர்கள்.அதை மறந்து தாங்கள் தனியான இனம் என்று அவர்கள் சொல்வது வேடிக்கையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புலவர் said:

தமிழ் மலையாளத்துடன் கலந்ததனால் உருவான மொழிளே மலையாளம்.மலையாளிகள் பேசுவதை தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும்.

இதை பலமுறை அங்கு சொல்லிவிட்டேன்.

இப்போதைய மலையாளம் எண்ணப்படும் மொழி தோற்றத்தின் உருவாக்கம், 1800க்கு பின்.

கேரளத்தில், முதல் இருந்த மொழி மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ்.

 (இது மிக முக்கியமான காரணம், போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் , அவர்கள் மலபார் மொழி என்று அடையாளப்படுத்திய மலையாளத் தமிழையும், இப்போதைய தமிழ் நாடு மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதியில்  இருந்த தமிழை மலபார் மொழி என்று குழம்பி, இரண்டையும் மலபார் மொழி, மலபார் இனம் என்று  அடையாள படுத்தியதற்கு).

நம்பூதிரிகளின் சூழ்ச்சியால், ஆங்கிலேயர் மலையாளத் தமிழை  தடை செய்ததுடன், மலையாளத் தமிழில்   இருந்த அரச பதிவுகளை எரித்து விட்டனர்.

ஆங்கிலேயர், துளு நாட்டில்    திகலரி மொழியை, எழுத்துக்களை தடை செய்த அதேவேளையில், நம்பூதிரிகளின் தூண்டுதலால், அதே திகலரி எழுத்துக்களை மலையாளத் தமிழில் புகுத்தி இப்போதைய எழுத்து மலையாளத்தை உருவாக்கினர்.

ஆனால், பேச்சு மொழியான மலையளம்மா மொழியை நீக்க முடியவில்லை (எப்படி முடியும்? சிந்தித்து பார்க்கவும்).

இந்த திகலரி எழுத்து , உச்சரிப்பு மாற்றம் செய்யப்பட்ட எழுத்து மலையாளமும், தொன்று தொட்டு தொட்டு வழங்கி வந்த மலையளம்மாவும் கலந்து உருவானதே இப்போதைய பேச்சு மொழி மலையாளம்.

இதனால் தான், தமிழருக்கு மலையாளம் பேச்சு மொழி (முழுவதும் இல்லாவிட்டாலும்) உடனடியாக புரியாக் கூடியதாக இருப்பது.

அனால், திகலாரியால் எழுத்து, உச்சரிப்பு  மாற்றப்பட்ட எழுத்து   மலையாளம் (முதலில் கற்காமல்) விளங்காது.    

2 hours ago, புலவர் said:

1578 இல் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு தமிழ் வழிபாட்டு நூலை பழைய தமிழ் மொழிநடையில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அதற்குப் பெயர் 'தம்புரான் வணக்கம்'. அம்மொழிக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அப்புத்தகம், அச்சில் வெளியான முதல் இந்திய மொழி என்பதை கூட நினைவுகூர வேண்டும். அதை நமது சொந்த கேரள மண்ணில்தான் அச்சடித்தார்கள். வேணாட்டின் கொல்லத்தில்.

இத தம்பிரான் வணக்கத்தை பார்த்தல், மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் தெரியும், இபோதுதும் தமிழர்கள் வாசிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன் - தம்பிரான் வணக்கம் எனும் நூல், ஓர் கிறிஸ்தவ கோட்பாடுகள் பற்றிய நூல். முதலில் போத்துகேய மொழியில் லிஸ்பன் இல் வெளியிடப்பட்டு, பின் மொழிபெயர்க்கப்பட்டு, கோவாவில் அச்சிடப்பட்டு, கொல்லத்தில் வெளியிடப்பட்டது   

இது அப்படியே தரவேற்றம் செய்யப்பட்ட தம்பிரான் வணக்கம் நூலின்  பிரதி

https://eap.bl.uk/archive-file/EAP981-1-15-54#?c=0&m=0&s=0&cv=0&xywh=-1809%2C-1%2C5899%2C3425

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி போல வருடாவருடம் தமிழில் புதிய சொற்களை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பு இல்லாது இருக்கும் பெரும் குறையை நாம் எப்போ தீர்க்கப்போகிறோம்?

ஆளாளுக்கு, கீச்சகம், பகரி, பிடரி எண்டு ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள். இதுவா மொழியை வளர்க்கும் பாங்கு?

அப்புறம் Fanta என்பதை 247 எழுத்தில் எதையாவது பாவித்து அதே ஒலிவரும் படி தமிழில் எழுத முடியுமா? (ஃபன் டா என்றதும் சரியாக இல்லை).

 வியாபார பெயர்கள் (Brand name) ஐ எல்லாம் மொழிமாற்றம் செய்வது தேவைதானா? இதை யார் தீர்மானிப்பது?

டிவிட்டரை கீச்சகம் என்றால் கொக்கோகோலா தமிழில் என்ன? அக்கா மாலாவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் சொற்கள் இவை தான் இருக்கவேண்டும் என்று கட்டுப்பபடுத்டுத்தக்கூடிய, நிறுவனமயப்பட்ட மொழி அரச அமைப்பு இல்லை.

oxford அகராதி, பொதுவாழ்வில் வழக்கதுக்கு வரும் சொற்களை அகராதியில் பதிந்து வருகிறது.

பிரெஞ்சு மொழி அரச அமைப்பு அல்லது அரசு சார்ந்த அமைப்பு இருக்கிறது (The Académie, தேடிப்பார்க்கவும்) அது எந்த சொற்கள் பிரெஞ்சு சொல்லிலக்கண வடிவத்தில் இருக்கிறது, இல்லை என்பதை நிர்ணயித்து, இந்த சொற்கள் இருக்கலாம், மாற்றப்பட அல்லது நீக்கப்பட வேண்டிய சொற்கள் என்று இறுக்கமான விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்  கீழ் இயங்குகிறது.

தமிழ் இந்த இரண்டுக்கும் இடையில் இயங்குகிறது, அனால் நெகிழ்வு தன்மையான, எந்த எழுத்திலும் இல்லாத, பகிரங்க அங்கீகாரத் தன்மையுடன்.    

பிரஞ்சு மொழி அமைப்பு செய்வது போன்று, தமிழில் மொழிக்காப்பு முனைவுகள் எடுக்கப்பட்டது , மொழி அறிஞர்கள் மற்றும் பல்கலை கழக மொழி பீடங்கள் போன்றவற்றின் தன்னார்வ முயற்சியால்  , அரச ஈடுபடு இல்லாமல்.  அரசியல் ஆதரவும் இருந்து இருக்கும் என்று நினைக்கிறன்.

இறுக்கமான விதிமுறைகள் கீழ் இயங்குவது, தமிழ் விருத்திக்கும், காலத்துக்கு   இயைந்து தமிழ் மொழியாக வரலாற்றின் ஊடு வளரக் கூடிய நெகிழ்வு தன்மையை  இறுக்கமான விதிமுறைகள் தடுத்துவிடும் என்று கண்டறியப்பட்டது.     

முதலில், பாணினியால்  (பாணினி. சமஸ்கிருதத்தின் இலக்கணத்தை வகுத்தவரில் முக்கியமானாவரில் ஒருவர்)  முதல் இலக்கணப்படுத்தப்பட்ட சம்ஸ்கிருத சொற்கள் மற்றும் அதன் வழியே புகுந்த மொழி பிரயோகம் போன்றவற்றை தூய  தமிழாக்குதல் என்று தொடங்கி, இறுதியில் அது கைவிடப்பட்டது. 

அனல்,அனால், இந்த இறுக்கமான மொழி ஒழுங்குபடுத்தும் அமைப்பு, இலங்கைத் தமிழருக்கு தேவை, ஏனெனில்,இலங்கைத் தீவில் பாவிக்கப்படும் தமிழ் மொழிக்கு  என்பது அடையாளம், வரலாறு, தொன்மை போன்றவற்றை தீர்மானிப்பதில் பாரிய பங்கு உள்ளது, அது தமிழ் நாட்டு தமிழுக்குள் புதைந்து விடாமல் இருக்க.

வளரும் போக்கில் தமிழ்நாடு இலங்கைத்தீவில் பாரிய பொருளாதார பங்கு செலுத்தப்போகிறது என்பதால்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 31/7/2022 at 17:55, goshan_che said:

எல்லாம் சரி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி போல வருடாவருடம் தமிழில் புதிய சொற்களை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பு இல்லாது இருக்கும் பெரும் குறையை நாம் எப்போ தீர்க்கப்போகிறோம்?

 

ஆங்கிலத்தில் இருப்பது போன்று சொற்களை உருவாக்கவும் அவற்றை ஏற்பளிக்கவும் எமக்கு ஒன்று இல்லை என்பது ஒரு பெருங்குறைதான். அதை நாம் தீர்க்க முனைய வேண்டும். 

ஆனால் அதற்கு நன்கு ஆழ்ந்த தமிழறிவுடைய - குறிப்பாக இந்த வழக்கில் உள்ள சொற்களையே ஒட்டி ஒட்டி ஒட்டுண்ணி வேலை செய்வோர் நீங்கலாக. (எனக்கு இவங்களைக் கண்டாலே புண்ணில புளிபோட்ட மாதிரி இருக்கும்). - தமிழ் அகராதிகளைப் படித்து தேர்ச்சி பெற்ற தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு அறிஞர் அவையை உண்டாக்கல் வேண்டும். இங்கு ஆக்கப்படும் சொற்கள் ஒட்டுண்ணியாக அல்லாமல் அகராதிகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் புத்தம் புதிய தமிழ்ச்சொற்களைக் கொண்டு எனது தலைமுறைக்கு ஏற்றாற்போல் - இன்னமும் அந்த 50, 60 களில் வந்தோருக்கு ஏற்ப கிமீ நீளத்தில் சொற்களை ஆக்காமல் - வேகமாக பலுக்கும் விதமாக சிறியதானதாக ஆக்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் இந்தக் கால இளையோருக்கு ஏற்ப, இந்த வேகமான உலகில், தமிழை இளவட்டத்திடம் கொண்டு செல்ல ஏலும். சுருங்கச் சொல்லப்போனால், எமது மொழியமைப்பு மாறாமலும் கிமீ நீளத்தில் ஆக்காமலும் சிறியதாக  போன்று ஆக்கப்படல் வேண்டும்.

அப்படி ஆக்கப்படும் போது ஒரு சொல்லுக்கு ஒரு கலைச்சொல்லே ஆக்கப்பட வேண்டும். பொருத்தமானது தவிர ஏனையவை நீக்கப்பட வேண்டும். பலது இருந்தால் குழம்புவோம்.

அடுத்தது இவை இந்தியத் தமிழ், ஈழத்தமிழ் என்று சரியாக  பிரித்தானியா அமெரிக்க, ஆங்கிலம் போன்று "பார்க்கப்படல்" வேண்டும். எங்கடை பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்களுக்கும் அவங்கடைக்கும் வலுத்த வேறுபாடுகள் உண்டு. இரு புத்தக கலைச்சொல் வழக்கிலும் வேறுபாடுகள் உண்டு. எங்கடை தனித்தன்மையை நாங்கள் இழந்துவிடக்கூடாது. இந்த விசயத்தில் நான் கொஞ்சங்கூட சமரசம் இல்லை. 

இன்னொரு முக்கியமான விடையம், எங்கடை அறிஞர்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 30 இற்கும் மேற்பட்ட கலைச்சொல் அகராதிகளை (அத்தனையும் என்னிடம் உண்டு) நாமொரு வலைத்தளம் தொடங்கி அதில் பதிவேற்ற வேண்டும். இல்லாதுவிடின் இந்தியத் தமிழ் எம்முள் புகும். இப்போது எமது ஊடகங்களை கட்டுப்படுத்த எமக்கொரு அரசு கூட இல்லை. அதனால் இந்தியத் தக்கம் எமது ஊடகங்களில் அதிகமாக எதிரொளிக்கிறது. இதைத் தடுக்க எமது சொற்களை நாம் இணைய அகராதிகளில் ஏற்றல் வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரை எழுதுபவர்கள் எமது சொற்களைக் கையாள்வர். 

அவ்வாறு யாரும் உருவாக்க விரும்பின், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான அத்தனை மூலங்களையும் நான் வழங்குகிறேன்.

 

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 31/7/2022 at 17:55, goshan_che said:

ஆளாளுக்கு, கீச்சகம், பகரி, பிடரி எண்டு ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள். இதுவா மொழியை வளர்க்கும் பாங்கு?

அப்புறம் Fanta என்பதை 247 எழுத்தில் எதையாவது பாவித்து அதே ஒலிவரும் படி தமிழில் எழுத முடியுமா? (ஃபன் டா என்றதும் சரியாக இல்லை).

 வியாபார பெயர்கள் (Brand name) ஐ எல்லாம் மொழிமாற்றம் செய்வது தேவைதானா? இதை யார் தீர்மானிப்பது?

பெயர்சொற்களை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவற்றை நாம் வழங்கும் போது எமது மொழியின் இலக்கணத்திற்கு ஏற்ப வடிவமைத்து வழங்க வேண்டும். அதுவே எமது மொழியை சிதைக்காமால் வைத்திருக்கும் செயற்பாடு ஆகும். 

 

Fanta - நீங்கள் "இஃவான்ரா" என்று எழுதுங்கள். 'விடுதலைப்புலிகள், களத்தில், ஈழநாதம்' போன்ற எமது நாட்டின் நாளேடு/மாதயிதழகளில் "F" இற்கு நிகராக "ஃவ்" ஆகிய இரு எழுத்துக்கள் கையாளப்பட்டுள்ளதைக் கண்டிருக்கிறேன். அதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன். அகேனத்திற்கு முன் இ/அ வரல் வேண்டும். 

மேலும் "ஃப" வைக் காட்டிலும் "ஃவ" தான் F என்ற ஒலிக்கு நிகராக உள்ளது. (கொஞ்சம் அண்மியதாக என்று வைத்துக்கொள்ளலாம்.)

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2022 at 22:55, goshan_che said:

எல்லாம் சரி.

ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி போல வருடாவருடம் தமிழில் புதிய சொற்களை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பு இல்லாது இருக்கும் பெரும் குறையை நாம் எப்போ தீர்க்கப்போகிறோம்?

ஆளாளுக்கு, கீச்சகம், பகரி, பிடரி எண்டு ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள். இதுவா மொழியை வளர்க்கும் பாங்கு?

அப்புறம் Fanta என்பதை 247 எழுத்தில் எதையாவது பாவித்து அதே ஒலிவரும் படி தமிழில் எழுத முடியுமா? (ஃபன் டா என்றதும் சரியாக இல்லை).

 வியாபார பெயர்கள் (Brand name) ஐ எல்லாம் மொழிமாற்றம் செய்வது தேவைதானா? இதை யார் தீர்மானிப்பது?

டிவிட்டரை கீச்சகம் என்றால் கொக்கோகோலா தமிழில் என்ன? அக்கா மாலாவா?

தமிழில் பல விதமான பெயர்கள் உண்டு காரணப் பெயர்தான் கட்டாயம் வைக்கவேண்டும் என்பதில்லை.காரணப் பெயர் வைத்தால் அது கூடிய பொருள் விளக்கத்தைக் கொடுக்கும் என்ற காரணத்தால் தற்காலத்தில் அநேக புதிய சொற்கள் காரணப்பெயர்களாக அமைக்கப்படுகின்றன்.காரணப் பெயர் வைக்க உச்சரிப்பதற்கு கடினமாகவோ நீளமானதாகவோ இருந்தால்  இடுகுறிப்பெயர் குணப்பெயர்  பெுhன்ற பெயர்களை வைக்கலாம். அனால் அதனை ஒரு அமைப்பு முறைக்குள் கொண்டு வரவேண்டும். அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் இப் பொழுது கனகாலமாக நடக்கவில்லை. அவை போன்ற அமைப்புக்களில் புதிய தமிழ் சொற்களை உருவாக்குவதற்கான அறிஞர்களை வைத்து உருவாக்கி  அறிஞர்களிடையே விவாதங்கள் i வைத்து கூடுதலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயரை வைக்கலாம்.. ஆனால் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி  காலப் போக்கில் அது ஆங்கில மொழிச் சொல்லாகவே பலராலும் கருதப்படுகிறது;.தமிழும் இவ்வளவு காலத்துக்கு நிலைத்து நிற்பதற்கு காரணம் காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பபித்துக் கொள்ளும் ஆற்றலினால்தான்.உண்மையில் மதிழக அரசு இதனை முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் அலர்கள் கீழடி நாகரிகத்தையே திராவிடநாகரிகம் என்று பெயர் மாற்றி வஞ்சகம் செய்பவர்கள். தமழரைத் தமிழர்களே ஆளும் நிலை வரும்போது தமிழ் பாரிய வளர்சியை அடையும். இவ்வளவு நெருக்குவாரத்துக்குள்ளும் நின்று பிடித்து வளர்வதே nஅதன் சிறப்புத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

ஆங்கிலத்தில் சொற்கள் இவை தான் இருக்கவேண்டும் என்று கட்டுப்பபடுத்டுத்தக்கூடிய, நிறுவனமயப்பட்ட மொழி அரச அமைப்பு இல்லை.

oxford அகராதி, பொதுவாழ்வில் வழக்கதுக்கு வரும் சொற்களை அகராதியில் பதிந்து வருகிறது.

பிரெஞ்சு மொழி அரச அமைப்பு அல்லது அரசு சார்ந்த அமைப்பு இருக்கிறது (The Académie, தேடிப்பார்க்கவும்) அது எந்த சொற்கள் பிரெஞ்சு சொல்லிலக்கண வடிவத்தில் இருக்கிறது, இல்லை என்பதை நிர்ணயித்து, இந்த சொற்கள் இருக்கலாம், மாற்றப்பட அல்லது நீக்கப்பட வேண்டிய சொற்கள் என்று இறுக்கமான விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்  கீழ் இயங்குகிறது.

தமிழ் இந்த இரண்டுக்கும் இடையில் இயங்குகிறது, அனால் நெகிழ்வு தன்மையான, எந்த எழுத்திலும் இல்லாத, பகிரங்க அங்கீகாரத் தன்மையுடன்.    

பிரஞ்சு மொழி அமைப்பு செய்வது போன்று, தமிழில் மொழிக்காப்பு முனைவுகள் எடுக்கப்பட்டது , மொழி அறிஞர்கள் மற்றும் பல்கலை கழக மொழி பீடங்கள் போன்றவற்றின் தன்னார்வ முயற்சியால்  , அரச ஈடுபடு இல்லாமல்.  அரசியல் ஆதரவும் இருந்து இருக்கும் என்று நினைக்கிறன்.

இறுக்கமான விதிமுறைகள் கீழ் இயங்குவது, தமிழ் விருத்திக்கும், காலத்துக்கு   இயைந்து தமிழ் மொழியாக வரலாற்றின் ஊடு வளரக் கூடிய நெகிழ்வு தன்மையை  இறுக்கமான விதிமுறைகள் தடுத்துவிடும் என்று கண்டறியப்பட்டது.     

முதலில், பாணினியால்  (பாணினி. சமஸ்கிருதத்தின் இலக்கணத்தை வகுத்தவரில் முக்கியமானாவரில் ஒருவர்)  முதல் இலக்கணப்படுத்தப்பட்ட சம்ஸ்கிருத சொற்கள் மற்றும் அதன் வழியே புகுந்த மொழி பிரயோகம் போன்றவற்றை தூய  தமிழாக்குதல் என்று தொடங்கி, இறுதியில் அது கைவிடப்பட்டது. 

அனல்,அனால், இந்த இறுக்கமான மொழி ஒழுங்குபடுத்தும் அமைப்பு, இலங்கைத் தமிழருக்கு தேவை, ஏனெனில்,இலங்கைத் தீவில் பாவிக்கப்படும் தமிழ் மொழிக்கு  என்பது அடையாளம், வரலாறு, தொன்மை போன்றவற்றை தீர்மானிப்பதில் பாரிய பங்கு உள்ளது, அது தமிழ் நாட்டு தமிழுக்குள் புதைந்து விடாமல் இருக்க.

வளரும் போக்கில் தமிழ்நாடு இலங்கைத்தீவில் பாரிய பொருளாதார பங்கு செலுத்தப்போகிறது என்பதால்.

பிர்ஞ்சுகாரர் மொழி மட்டும் அல்ல, உணவு, உடை கலாச்சாரத்தில் கூட ஆங்கில கலப்பை  தடுப்பத்தில் முன்னிற்பார்கள் என்பது தெரியும். ஆனால் இதற்காக அரச அமைப்பை வைத்திருப்பது தெரியாது. தகவலுக்கு நன்றி.

உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆங்கிலத்தில் authority என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. ஒன்று அதிகாரம் உள்ள அமைப்பு (எ கா - Greater London Authority). இன்னொன்று ஒருவரோ அல்லது ஒரு அமைப்போ அவர்களின் புலமை அல்லது திறமை காரணமாக அதிகாரம்/authority ஆக கருதப்படுவார்கள் (எ.கா Lord Wilberforce is an authority on public law).

இந்த இரண்டாம் அடிப்படையில்தான் ஆக்ஸ்போர்ட் அகராதி எது ஆங்கிலம் என்பதை தீர்மானிக்கும் “அதிகாரமாக” அனைவராலும் ஏற்கப்படுகிறது. ஏனைய அகராதி அமைப்புகள் கூட ஆக்ஸ்போர்ட்டின் அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்துவதில்லை.

எமக்கு என ஒரு தேசிய-அரசு (nation-state) இல்லாதபடியால், நாம் பிரென்ஞ் பாணியை எடுத்தால் அது இந்திய கைப்பொம்மையாகவே இருக்கும்.

ஆகவே ஆங்கில/ஆக்ஸ்போர்ட் பாணியில் - கேள்விக்கு அப்பாலான தகுதி உடையவர்களை கொண்ட ஒரு அமைப்பை அமைக்க வேண்டியது காலத்தின் தேவை என நான் நினைக்கிறேன்.

இப்படியே சுயம்பாக இப்போ இருப்பது போல் விடுவது பல குழப்பங்களை தருகிறது (ஒரு கொள்கை வகுப்பு, விதி முறை இல்லை).

அதை விட முக்கியமாக நீ யார் என்ற கேள்வியையும், அதனைவிட பாரதூரமாக இப்படி மொழி உருவாக்கத்தை கேலிப்பொருளாக்கும் போக்கையும் காண்கிறோம்.

ஆகவே இப்போ இருக்கும் நிலை மாற வேண்டும் ஒரு காத்திரமான அரசுசாரா அமைப்பு இதை முன்னெடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான ஆனால் உறுதியான நம்பிக்கை.

3 hours ago, நன்னிச் சோழன் said:

 

ஆங்கிலத்தில் இருப்பது போன்று சொற்களை உருவாக்கவும் அவற்றை ஏற்பளிக்கவும் எமக்கு ஒன்று இல்லை என்பது ஒரு பெருங்குறைதான். அதை நாம் தீர்க்க முனைய வேண்டும். 

ஆனால் அதற்கு நன்கு ஆழ்ந்த தமிழறிவுடைய - குறிப்பாக இந்த வழக்கில் உள்ள சொற்களையே ஒட்டி ஒட்டி ஒட்டுண்ணி வேலை செய்வோர் நீங்கலாக. (எனக்கு இவங்களைக் கண்டாலே புண்ணில புளிபோட்ட மாதிரி இருக்கும்). - தமிழ் அகராதிகளைப் படித்து தேர்ச்சி பெற்ற தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு அறிஞர் அவையை உண்டாக்கல் வேண்டும். இங்கு ஆக்கப்படும் சொற்கள் ஒட்டுண்ணியாக அல்லாமல் அகராதிகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் புத்தம் புதிய தமிழ்ச்சொற்களைக் கொண்டு எனது தலைமுறைக்கு ஏற்றாற்போல் - இன்னமும் அந்த 50, 60 களில் வந்தோருக்கு ஏற்ப கிமீ நீளத்தில் சொற்களை ஆக்காமல் - வேகமாக பலுக்கும் விதமாக சிறியதானதாக ஆக்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் இந்தக் கால இளையோருக்கு ஏற்ப, இந்த வேகமான உலகில், தமிழை இளவட்டத்திடம் கொண்டு செல்ல ஏலும். சுருங்கச் சொல்லப்போனால், எமது மொழியமைப்பு மாறாமலும் கிமீ நீளத்தில் ஆக்காமலும் சிறியதாக  போன்று ஆக்கப்படல் வேண்டும்.

அப்படி ஆக்கப்படும் போது ஒரு சொல்லுக்கு ஒரு கலைச்சொல்லே ஆக்கப்பட வேண்டும். பொருத்தமானது தவிர ஏனையவை நீக்கப்பட வேண்டும். பலது இருந்தால் குழம்புவோம்.

அடுத்தது இவை இந்தியத் தமிழ், ஈழத்தமிழ் என்று சரியாக  பிரித்தானியா அமெரிக்க, ஆங்கிலம் போன்று "பார்க்கப்படல்" வேண்டும். எங்கடை பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்களுக்கும் அவங்கடைக்கும் வலுத்த வேறுபாடுகள் உண்டு. இரு புத்தக கலைச்சொல் வழக்கிலும் வேறுபாடுகள் உண்டு. எங்கடை தனித்தன்மையை நாங்கள் இழந்துவிடக்கூடாது. இந்த விசயத்தில் நான் கொஞ்சங்கூட சமரசம் இல்லை. 

இன்னொரு முக்கியமான விடையம், எங்கடை அறிஞர்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 30 இற்கும் மேற்பட்ட கலைச்சொல் அகராதிகளை (அத்தனையும் என்னிடம் உண்டு) நாமொரு வலைத்தளம் தொடங்கி அதில் பதிவேற்ற வேண்டும். இல்லாதுவிடின் இந்தியத் தமிழ் எம்முள் புகும். இப்போது எமது ஊடகங்களை கட்டுப்படுத்த எமக்கொரு அரசு கூட இல்லை. அதனால் இந்தியத் தக்கம் எமது ஊடகங்களில் அதிகமாக எதிரொளிக்கிறது. இதைத் தடுக்க எமது சொற்களை நாம் இணைய அகராதிகளில் ஏற்றல் வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரை எழுதுபவர்கள் எமது சொற்களைக் கையாள்வர். 

அவ்வாறு யாரும் உருவாக்க விரும்பின், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான அத்தனை மூலங்களையும் நான் வழங்குகிறேன்.

 

 

 

நீங்கள் சொன்னது அத்தனையிலும் எனக்கு உடன்பாடு நன்னி👍.

3 hours ago, நன்னிச் சோழன் said:

அவ்வாறு யாரும் உருவாக்க விரும்பின், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான அத்தனை மூலங்களையும் நான் வழங்குகிறேன்.

அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் யாராவது வருவார்கள். ஆரம்ப முயற்சியை ஒரு தமிழ் படம் எடுக்கும் செலவிற்குள் செய்யலாம்.

எப்போதும் லொட்டரி டிக்கெட் போடுவேன்…விழுந்தால் முதல் வேலை இதுதான்.

2 hours ago, நன்னிச் சோழன் said:

பெயர்சொற்களை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவற்றை நாம் வழங்கும் போது எமது மொழியின் இலக்கணத்திற்கு ஏற்ப வடிவமைத்து வழங்க வேண்டும். அதுவே எமது மொழியை சிதைக்காமால் வைத்திருக்கும் செயற்பாடு ஆகும். 

 

Fanta - நீங்கள் "இஃவான்ரா" என்று எழுதுங்கள். 'விடுதலைப்புலிகள், களத்தில், ஈழநாதம்' போன்ற எமது நாட்டின் நாளேடு/மாதயிதழகளில் "F" இற்கு நிகராக "ஃவ்" ஆகிய இரு எழுத்துக்கள் கையாளப்பட்டுள்ளதைக் கண்டிருக்கிறேன். அதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன். அகேனத்திற்கு முன் இ/அ வரல் வேண்டும். 

மேலும் "ஃப" வைக் காட்டிலும் "ஃவ" தான் F என்ற ஒல்லிக்கு நிகராக உள்ளது. (கொஞ்சம் அண்மியதாக என்று வைத்துக்கொள்ளலாம்.)

 

 

நன்றி.

Edited by goshan_che
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

தமிழில் பல விதமான பெயர்கள் உண்டு காரணப் பெயர்தான் கட்டாயம் வைக்கவேண்டும் என்பதில்லை.காரணப் பெயர் வைத்தால் அது கூடிய பொருள் விளக்கத்தைக் கொடுக்கும் என்ற காரணத்தால் தற்காலத்தில் அநேக புதிய சொற்கள் காரணப்பெயர்களாக அமைக்கப்படுகின்றன்.காரணப் பெயர் வைக்க உச்சரிப்பதற்கு கடினமாகவோ நீளமானதாகவோ இருந்தால்  இடுகுறிப்பெயர் குணப்பெயர்  பெுhன்ற பெயர்களை வைக்கலாம். அனால் அதனை ஒரு அமைப்பு முறைக்குள் கொண்டு வரவேண்டும். அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் இப் பொழுது கனகாலமாக நடக்கவில்லை. அவை போன்ற அமைப்புக்களில் புதிய தமிழ் சொற்களை உருவாக்குவதற்கான அறிஞர்களை வைத்து உருவாக்கி  அறிஞர்களிடையே விவாதங்கள் i வைத்து கூடுதலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயரை வைக்கலாம்.. ஆனால் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி  காலப் போக்கில் அது ஆங்கில மொழிச் சொல்லாகவே பலராலும் கருதப்படுகிறது;.தமிழும் இவ்வளவு காலத்துக்கு நிலைத்து நிற்பதற்கு காரணம் காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பபித்துக் கொள்ளும் ஆற்றலினால்தான்.உண்மையில் மதிழக அரசு இதனை முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் அலர்கள் கீழடி நாகரிகத்தையே திராவிடநாகரிகம் என்று பெயர் மாற்றி வஞ்சகம் செய்பவர்கள். தமழரைத் தமிழர்களே ஆளும் நிலை வரும்போது தமிழ் பாரிய வளர்சியை அடையும். இவ்வளவு நெருக்குவாரத்துக்குள்ளும் நின்று பிடித்து வளர்வதே nஅதன் சிறப்புத்தான்.

உண்மைதான். நிச்சயம் பல சொற்கள் உதாரணம் disc = வட்டு தமிழில் வழக்கொழிந்து போயுள்ளன. நன்னி சொன்னது போல் இவற்றை மீள பாவனைக்கு எடுத்து அதன் பின்னும் தகுந்த சொல் இல்லை என்றால், இடுகுறியாகவோ காரணமாகவோ உருவாக்கலாம்.

ஆனால் புதியதாக ஒரு சொல்லை உருவாக்குவது கடைசி வழியாக (last resort) ஆக இருக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

எமக்கு என ஒரு தேசிய-அரசு (nation-state) இல்லாதபடியால், நாம் பிரென்ஞ் பாணியை எடுத்தால் அது இந்திய கைப்பொம்மையாகவே இருக்கும்.

ஆகவே ஆங்கில/ஆக்ஸ்போர்ட் பாணியில் - கேள்விக்கு அப்பாலான தகுதி உடையவர்களை கொண்ட ஒரு அமைப்பை அமைக்க வேண்டியது காலத்தின் தேவை என நான் நினைக்கிறேன்.

இப்படியே சுயம்பாக இப்போ இருப்பது போல் விடுவது பல குழப்பங்களை தருகிறது (ஒரு கொள்கை வகுப்பு, விதி முறை இல்லை).

அதை விட முக்கியமாக நீ யார் என்ற கேள்வியையும், அதனைவிட பாரதூரமாக இப்படி மொழி உருவாக்கத்தை கேலிப்பொருளாக்கும் போக்கையும் காண்கிறோம்.

ஆகவே இப்போ இருக்கும் நிலை மாற வேண்டும் ஒரு காத்திரமான அரசுசாரா அமைப்பு இதை முன்னெடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான ஆனால் உறுதியான நம்பிக்கை.

நீங்கள் சொன்னது அத்தனையிலும் எனக்கு உடன்பாடு நன்னி👍.

அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் யாராவது வருவார்கள். ஆரம்ப முயற்சியை ஒரு தமிழ் படம் எடுக்கும் செலவிற்குள் செய்யலாம்.

எப்போதும் லொட்டரி டிக்கெட் போடுவேன்…விழுந்தால் முதல் வேலை இதுதான்.

நன்றி.

ஓம், உண்மை. அரசோடு உருவாக்கினால் அது இந்தியாவில் தான் அமையும், எமக்கென ஒரு அரசு உருவாகாத வரை. இந்தியாவில் உண்டாகுவதில் கண்டிப்பாக ஆரியத்தாக்கம் இருக்கும். மேலும் வழக்கமான இழுத்தடிப்புகள், எம்மை புறக்கணிப்பமை என பல கூத்துகள் அரங்கேறும். 

எமக்கென ஒன்றும் அவர்களுக்கென ஒன்றும் அமைந்தால் நல்லாயிருக்கும். இரு புலத்தின் வழக்கும் அவ்வவரின் தனித்தன்மையும் காக்கப்படும். எனக்கு ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக இருக்க விருப்பமில்லை. உலகெங்கும் சிதறியுள்ள எமது அறிஞர்களை ஒன்றிணைத்து நாமிதை உருவாக்க வேண்டும் - ஏலும்.

லொட்ரியில் வெல்ல வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2022 at 02:56, நன்னிச் சோழன் said:

ஓம், உண்மை. அரசோடு உருவாக்கினால் அது இந்தியாவில் தான் அமையும், எமக்கென ஒரு அரசு உருவாகாத வரை. இந்தியாவில் உண்டாகுவதில் கண்டிப்பாக ஆரியத்தாக்கம் இருக்கும். மேலும் வழக்கமான இழுத்தடிப்புகள், எம்மை புறக்கணிப்பமை என பல கூத்துகள் அரங்கேறும். 

எமக்கென ஒன்றும் அவர்களுக்கென ஒன்றும் அமைந்தால் நல்லாயிருக்கும். இரு புலத்தின் வழக்கும் அவ்வவரின் தனித்தன்மையும் காக்கப்படும். எனக்கு ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக இருக்க விருப்பமில்லை. உலகெங்கும் சிதறியுள்ள எமது அறிஞர்களை ஒன்றிணைத்து நாமிதை உருவாக்க வேண்டும் - ஏலும்.

லொட்ரியில் வெல்ல வாழ்த்துக்கள்!

 

லொட்ரியில் வெல்ல வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.