Jump to content

'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்காக பல உறக்கமில்லாத இரவுகளை கடந்தேன்: தெருக்குரல் அறிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்காக பல உறக்கமில்லாத இரவுகளை கடந்தேன்: தெருக்குரல் அறிவு

37 நிமிடங்களுக்கு முன்னர்
 

Therukural/Instagram

பட மூலாதாரம்,THERUKURAL/INSTAGRAM

தான் எழுதி, உருவாக்கிய 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் தொடர்பாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக 'தெருக்குரல்' அறிவு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் தெருக்குரல் அறிவு எழுதி, உருவாக்கிய Enjoy Enjaami பாடல், பல்வேறு இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.

விழாவில் இந்தப் பாடலை பாடகி தீயும் மாரியம்மாளும் பாடினர். இந்தப் பாடல் ஆல்பமாக வெளிவந்தபோது அதில் இடம்பெற்றிருந்த தெருக்குரல் அறிவு இந்த விழாவில் இடம்பெறவில்லை. இந்தப் பாடல் நிகழ்த்தப்பட்ட தருணத்திலேயே, அறிவு அதில் இடம்பெறாதது குறித்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்தப் பாடல் தொடர்பாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து தெருக்குரல் அறிவு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "Enjoy Enjaami பாடலை நானே உருவாக்கி, எழுதி, பாடி, நடித்தேன். யாருமே இதற்கான மெட்டையோ, ஒரு சொல்லையோ தரவில்லை. அந்தப் பாடலை இப்போது இருப்பது போல உருவாக்குவதற்காக ஆறு மாதங்களாக உறக்கமில்லாத, மிகுந்த அழுத்தத்துடன் கூடிய இரவுகளைக் கடந்தேன். இது ஒரு அணி இணைந்து செய்த மிகப் பெரிய வேலை என்பதில் சந்தேகமில்லை. இதற்காக எல்லோரும் ஒன்றாக செயல்பட வேண்டுமென்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்காக அது வள்ளியம்மாளின் வரலாறு இல்லையென்றோ என்னுடைய முன்னோரான நிலமற்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் வரலாறு இல்லையென்றோ ஆகிவிடாது. என்னுடைய ஒவ்வொரு பாடலிலும் தலைமுறை தாண்டிய அடக்குமுறையின் தழும்புகள் இருக்கும். இந்தப் பாடலில் இருந்ததைப் போலவே.

 
 

தெருக்குரல் அறிவு

பட மூலாதாரம்,THERUKURAL/INSTAGRAM

இந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான நாட்டுப்புறப் பாடல்கள் இருக்கின்றன. முன்னோர்களின் மூச்சை, வலியை, வாழ்க்கையை, அன்பை, எதிர்ப்பை, ஒட்டுமொத்தமாக அவர்களுடைய இருப்பைச் சுமந்துவரும் பாடல்கள். இவையெல்லாம் அழகிய பாடல்களாக உங்களுடன் பேசுகின்றன. ஒரு தலைமுறையின் ரத்தத்தையும் வியர்வையையும் விடுதலையளிக்கும் கலையின் பாடல்களாக மாறியிருக்கிறோம். அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியை பாடல்களின் மூலமாக எடுத்துச் செல்கிறோம்.

நீங்கள் தூங்கும்போது உங்கள் சொத்தை யாராவது பறித்துச் செல்ல முடியும். ஆனால், விழித்திருக்கும்போது முடியாது. ஜெய்பீம். இறுதியில் வாய்மையே வெல்லும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Enjoy Enjaami என்ற இந்தப் பாடல், ஏ.ஆர். ரஹ்மானின் மாஜா நிறுவனத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை அறிவும் பாடகி தீயும் இணைந்து பாடியிருந்தனர். பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரித்திருந்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இலங்கைக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளியாகச் சென்ற தனது பாட்டி வள்ளியம்மாளின் கதையையே பாடலாக எழுதியிருந்தார் அறிவு. இந்தப் பாடல் வெளியானபோது, விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. யு டியூபில் தற்போதுவரை இந்தப் பாடல் 43 கோடி முறை கேட்கப்பட்டிருக்கிறது. இசைக்கான செயலியான ஸ்பாட்டிஃபையில் இரு வாரங்களிலேயே 2 மில்லியன் தடவைகள் கேட்கப்பட்டது. இந்தியாவில் வெளியான இசை வீடியோக்களில் முதல் 10 வீடியோக்களுக்குள் இந்தப் பாடலும் இருக்கிறது.

தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்படுவதாக சர்சை எழுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக Rolling Stone Indiaவின் அட்டைப்படத்தில் பாடகி தீ, பாடகர் ஷான் வின்சென்ட் ஆகியோர் இடம்பெற, அறிவின் படம் விடுபட்டது. சர்ச்சைக்குப் பிறகு அறிவு இடம்பெறும்வகையில் ஒரு அட்டைப் படத்தை வெளியிட்டது Rolling Stone India.

இப்போது அறிவு வெளியிட்டிருக்கும் பதிவில், செஸ் ஒலிம்பியாடில் புறக்கணிக்கப்பட்டது குறித்தோ, அதற்குக் காரணமானவர்கள் என்றோ வெளிப்படையாக எதையும் குறிப்பிடவில்லை.

அறிவு தற்போது அமெரிக்காவில் இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக அவருடைய கருத்துகள் எதையும் கூடுதலாகப் பெற இயலவில்லை.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62374158

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு திட்டமிட்டே சாதிய அடிப்படையில் புறக்கணிக்கபடுவதாக எனக்கு படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அறிவு திட்டமிட்டே சாதிய அடிப்படையில் புறக்கணிக்கபடுவதாக எனக்கு படுகிறது.

அப்படி சொல்ல முடியமா என்ன?

இளையராஜா, எந்த அடி மட்டத்தில் இருந்து வந்து, தனது திறமையால் நம்மை எல்லாம் கட்டிப்போட்டார்....

ஆகவே.... திறமை.... அது திமிறிக்கொண்டு வெளியே வரும், வந்தே தீரும் என்பது எனது பார்வை.

தவறானால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

***

சிலர், குறை சொல்வார்கள். நெருங்கி போய் விசாரித்தால்.... குறித்த நபர் திறமையாளர் தான், சந்தேகமே இல்லை. ஆனால், அய்யோ.... அவருடன் வேலை செய்ய நான் பட்ட பாடு, நாய் பாடப்பாடு என்று அழுவார்கள். இவர் அப்படி ஒருவராக இருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

உதாரணமாக, சிறந்த நடிகர் கார்த்திக்..... படிப்பிடிப்புக்கு வந்தால், ரூமை பூட்டிக்கொண்டு, தண்ணி, வேறு.... என்று படப்பிடிப்புக்கு வெளியே வராமல் படுத்து விடுவார். சந்தையினை இழந்தார்..... 

அறிவு சொல்வது.... ஒரு பக்கம். அவர் புறக்கணிக்கப்படுவராகின், அதுக்கு என்ன காரணம் மறுபக்கம் வைத்திருக்கிறார்கள் என்று அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அப்படி சொல்ல முடியமா என்ன?

இளையராஜா, எந்த அடி மட்டத்தில் இருந்து வந்து, தனது திறமையால் நம்மை எல்லாம் கட்டிப்போட்டார்....

ஆகவே.... திறமை.... அது திமிறிக்கொண்டு வெளியே வரும், வந்தே தீரும் என்பது எனது பார்வை.

தவறானால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

***

சிலர், குறை சொல்வார்கள். நெருங்கி போய் விசாரித்தால்.... குறித்த நபர் திறமையாளர் தான், சந்தேகமே இல்லை. ஆனால், அய்யோ.... அவருடன் வேலை செய்ய நான் பட்ட பாடு, நாய் பாடப்பாடு என்று அழுவார்கள். இவர் அப்படி ஒருவராக இருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

உதாரணமாக, சிறந்த நடிகர் கார்த்திக்..... படிப்பிடிப்புக்கு வந்தால், ரூமை பூட்டிக்கொண்டு, தண்ணி, வேறு.... என்று படப்பிடிப்புக்கு வெளியே வராமல் படுத்து விடுவார். சந்தையினை இழந்தார்..... 

அறிவு சொல்வது.... ஒரு பக்கம். அவர் புறக்கணிக்கப்படுவராகின், அதுக்கு என்ன காரணம் மறுபக்கம் வைத்திருக்கிறார்கள் என்று அறிய ஆவல்.

எத்தனை இளையராஜாவைக் கண்டுள்ளீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

எத்தனை இளையராஜாவைக் கண்டுள்ளீர்கள்? 

ஒன்று போதாதா, என்ன?

மேலும் நான் எனது பார்வையை தான் சொன்னேன், அதில் தவறு இருக்கலாம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோஷ் நாராயணன் ட்வீட் பண்ணி உள்ளார்.

அறிவு, தான், தீ என்னும் இன்னுமொருவர் சேர்ந்தே உருவாக்கினோம். அவர் மட்டுமல்ல.

எனக்கான வரிகளுக்கு தீயும், அறிவின் இடங்களுக்கு நானும், இசையமைக்க, பாடலை அறிவு எழுதினார்.

இது ஒரு கூட்டு முனைவு. வருமானம் சமமாக பங்கிடப்படுகிறது.

அறிவு அமெரிக்காவில் இருப்பதால், இந்த நிகழ்வில் பங்கு கொள்ள முடியவில்லை.

இறுதியாக, அதே பாடல் மெட்டில், 'வாங்கோ, வாங்கோ ஒன்னாகி' என்று அறிவை அழைக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

தவறானால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

தவறு. திருத்தி கொள்ளுங்கள்.

சும்மா பகிடியாகத்தான்.

இதில் எனக்கு உள்வீட்டு விடயங்கள் தெரியாது ஆனால் இந்த பாடலில் உழைப்பு கணிசமானது அறிவுடையது.  அவரை புறம்தள்ளி இவர்கள் இந்த பாடலில் அவருக்கு இடம் கூட கொடாமல் வெளியிட்டது பின்னர் திருத்தி கொண்டது சரியல்ல. பாடல் உரிமை அவரிடம் இல்லை என நினைக்கிறேன். அவருடன் சேர்ந்து பாடவேண்டும் என்பதல்ல ஆனால் ஒரு கிரெடிட் கூட கொடுக்காமல் மழுங்கடிப்பது அறிவினை ஒதுக்க எண்டே படுகிறது.

அடுத்தது அறிவு சொல்லும் ஜெய்பீம் அரசியல் சந்தோஸ் நாராயணன் வகையறாக்களை நெருடுவது வழமைதான். 

இளையராஜா ஒரு விதிவிலக்கு. அவர் தன்னை இந்துவாக, ரமண மஹரிசி சிஸ்யனாக, கடைசியில் மோடி பக்தகானக சித்தரிதே பல உயரங்களை எட்ட முடிந்தது.

அப்படி இல்லாமல் வரிக்கு வரி ஜெய்பீம் என சொல்லுபவரை இவர்கள் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க மாட்டார்கள்.

Castless Collection நிகழ்சியில் அனிருத்தை விருந்தினராக அழைத்து சமூக நீதி பாடல்கள் பாடி இருப்பார்கள். மிக தெளிவாக பாடலின் பொருளை பற்றி ஒரு வார்த்தை உதிர்க்காமல் பாட்டின் ஏனைய விடயங்களை பாராட்டி பேசி இருப்பார்.

அனிருத், வைஜி, கமல், பாலசந்தர், சங்கர், மணி ரத்னம், எஸ்வி சேகர், சுஜாதா, சோ, குருமூர்த்தி, மதுவந்தி, காயத்திரி ரகுராம் எல்லாரும் ஒரே சிந்தனையுள்ளோர்தான், வெளிபடும் விதம், நாசூக்கு வேறுபடும்.

சந்தோஸ்நாராயணன் வேறு மாதிரி இருப்பார் என எதிர்பார்த்தேன். அப்படி இல்லை போல தெரிகிறது.

இதில் ரஹ்மான் பங்கு அதிகம் இல்லை.

இது என் கருத்து மட்டுமே.

 

5 minutes ago, Nathamuni said:

சந்தோஷ் நாராயணன் ட்வீட் பண்ணி உள்ளார்.

அறிவு, தான், தீ என்னும் இன்னுமொருவர் சேர்ந்தே உருவாக்கினோம். அவர் மட்டுமல்ல.

எனக்கான வரிகளுக்கு தீயும், அறிவின் இடங்களுக்கு நானும், இசையமைக்க, பாடலை அறிவு எழுதினார்.

இது ஒரு கூட்டு முனைவு. வருமானம் சமமாக பங்கிடப்படுகிறது.

அறிவு அமெரிக்காவில் இருப்பதால், இந்த நிகழ்வில் பங்கு கொள்ள முடியவில்லை.

இறுதியாக, அதே பாடல் மெட்டில், 'வாங்கோ, வாங்கோ ஒன்னாகி' என்று அறிவை அழைக்கிறார்.

யார் மீதும் எடுத்தவுடன் இனவாதி, சாதிவாதி என தூக்கி போடுவது தவறு. ஆனால் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றை புறம்தள்ளவும் முடியாது.

சந்தோஸ்நாராயணன் இதை சுமூகமாக முடித்து வைப்பார் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

தவறு. திருத்தி கொள்ளுங்கள்.

சும்மா பகிடியாகத்தான்.

இதில் எனக்கு உள்வீட்டு விடயங்கள் தெரியாது ஆனால் இந்த பாடலில் உழைப்பு கணிசமானது அறிவுடையது.  அவரை புறம்தள்ளி இவர்கள் இந்த பாடலில் அவருக்கு இடம் கூட கொடாமல் வெளியிட்டது பின்னர் திருத்தி கொண்டது சரியல்ல. பாடல் உரிமை அவரிடம் இல்லை என நினைக்கிறேன். அவருடன் சேர்ந்து பாடவேண்டும் என்பதல்ல ஆனால் ஒரு கிரெடிட் கூட கொடுக்காமல் மழுங்கடிப்பது அறிவினை ஒதுக்க எண்டே படுகிறது.

அடுத்தது அறிவு சொல்லும் ஜெய்பீம் அரசியல் சந்தோஸ் நாராயணன் வகையறாக்களை நெருடுவது வழமைதான். 

இளையராஜா ஒரு விதிவிலக்கு. அவர் தன்னை இந்துவாக, ரமண மஹரிசி சிஸ்யனாக, கடைசியில் மோடி பக்தகானக சித்தரிதே பல உயரங்களை எட்ட முடிந்தது.

அப்படி இல்லாமல் வரிக்கு வரி ஜெய்பீம் என சொல்லுபவரை இவர்கள் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க மாட்டார்கள்.

Castless Collection நிகழ்சியில் அனிருத்தை விருந்தினராக அழைத்து சமூக நீதி பாடல்கள் பாடி இருப்பார்கள். மிக தெளிவாக பாடலின் பொருளை பற்றி ஒரு வார்த்தை உதிர்க்காமல் பாட்டின் ஏனைய விடயங்களை பாராட்டி பேசி இருப்பார்.

அனிருத், வைஜி, கமல், பாலசந்தர், சங்கர், மணி ரத்னம், எஸ்வி சேகர், சுஜாதா, சோ, குருமூர்த்தி, மதுவந்தி, காயத்திரி ரகுராம் எல்லாரும் ஒரே சிந்தனையுள்ளோர்தான், வெளிபடும் விதம், நாசூக்கு வேறுபடும்.

சந்தோஸ்நாராயணன் வேறு மாதிரி இருப்பார் என எதிர்பார்த்தேன். அப்படி இல்லை போல தெரிகிறது.

இதில் ரஹ்மான் பங்கு அதிகம் இல்லை.

இது என் கருத்து மட்டுமே.

 

மேலே, சந்தோஷ் கருத்தினை பார்த்தீர்களா?

எனக்கு, பாடல் தயாரிப்பு குறித்த உள் வீட்டு விடயங்கள் தெரியாது.

பாடலை முழுவதுமாக கேட்கவும் இல்லை.

ஆனால் ஒருவர் குறை சொல்லும் போது.... மறுபக்கம் வேறு கருத்து இருக்கும் என்று நினைத்தேன்.

இது சாதி பிரச்சனை போல தெரியவில்லை. பங்குப் பிரச்சனை போலவே படுகிறது. அதாவது, எனது வேலை கூட.... அல்லது பாடல் என்னது.... எனக்கு கூட பங்கு வேணும்....... 😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மேலே, சந்தோஷ் கருத்தினை பார்த்தீர்களா?

எனக்கு, பாடல் தயாரிப்பு குறித்த உள் வீட்டு விடயங்கள் தெரியாது.

பாடலை முழுவதுமாக கேட்கவும் இல்லை.

ஆனால் ஒருவர் குறை சொல்லும் போது.... மறுபக்கம் வேறு கருத்து இருக்கும் என்று நினைத்தேன்.

இது சாதி பிரச்சனை போல தெரியவில்லை. பங்குப் பிரச்சனை போலவே படுகிறது. அதாவது, எனது வேலை கூட.... எனக்கு கூட பங்கு வேணும்....... 😜

அறிவுக்கு இது பெரிய காசு ஆனால் சந்தோசுக்கு இல்லை. ஆகவே பணம் காரணம் என நான் நினைக்கவில்லை.

சந்தோசின் அண்மைய பதிவு பற்றிய என் கருத்து மேலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அறிவுக்கு இது பெரிய காசு ஆனால் சந்தோசுக்கு இல்லை. ஆகவே பணம் காரணம் என நான் நினைக்கவில்லை.

சந்தோசின் அண்மைய பதிவு பற்றிய என் கருத்து மேலே.

ஓகே... என்சாமி.... சுமந்திரன் பொங்கிறார்.... என்னெண்டு பார்த்துட்டு வாறன்.... திண்ணயில லிங்க்...🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இளையராஜா ஒரு விதிவிலக்கு. அவர் தன்னை இந்துவாக, ரமண மஹரிசி சிஸ்யனாக, கடைசியில் மோடி பக்தகானக சித்தரிதே பல உயரங்களை எட்ட முடிந்தது.

இளையராஜா தனித்து நின்று முன்னுக்கு வந்த பின்னரே  ரமண மஹரிஷி முதல் அனைவரும் அவரை   வேறு பாதையில் அழைத்து சென்றனர்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இளையராஜா தனித்து நின்று முன்னுக்கு வந்த பின்னரே  ரமண மஹரிஷி முதல் அனைவரும் அவரை   வேறு பாதையில் அழைத்து சென்றனர்.

80 வயதுக்கு பின்னரே, மோடி துதி பாடி, எம்பியானார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

80 வயதுக்கு பின்னரே, மோடி துதி பாடி, எம்பியானார்.

அதுவும் தலித் என அடையாளம் காட்டி.... எம்பி ஆக்கப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அதுவும் தலித் என அடையாளம் காட்டி.... எம்பி ஆக்கப்பட்டார்.

இளையராஜா, ஜனாதிபதி ஆகும் கனவில், துதி பாடினார் என்பது எனது கணிப்பு. அதனால், தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லாடலை கண்டுகொள்ளவில்லை.

அடுத்த ஜனாதிபதி நீங்கள் தான், இப்போது எம்பியாகுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இளையராஜா தனித்து நின்று முன்னுக்கு வந்த பின்னரே  ரமண மஹரிஷி முதல் அனைவரும் அவரை   வேறு பாதையில் அழைத்து சென்றனர்.

உண்மைதான். அது அவரின் அபரிமிதமான ஆற்றலின் விளைவு.

ஆனாலும் தனித்து என்றும் சொல்ல முடியாது அவரின் அண்ணர் மற்றும் பாரதிராஜா உட்பட பலரும் அவருடன் கூடவே பயணித்து ஒருவரை ஒருவர் ஆதரித்து கொண்டார்கள்.

ஆனால் எனது பார்வையில் ஆரம்பம் முதலே அவர் தன்னை தலித் என்று சொல்வதை விரும்பாதவராக இருந்தார். கிட்டதட்ட மைக்கேல் ஜாக்சன் தோல் நிறத்தை மாற்றியது போல ஒரு மனநிலை.

ஒருவகையான சுயம் மறுத்தல். புதிதாக மதம் மாறுவோருக்கு இருக்கும் மனநிலை.

பாரதிராஜ கூட சில வருடங்கள் முன் “அவனுக்கு எப்படியாவது பிராமணன் ஆகிவிட வேண்டும் என்ற தவிப்பு”என்று பொருள்பட சொல்லி இருந்தார்.

 

12 minutes ago, Nathamuni said:

80 வயதுக்கு பின்னரே, மோடி துதி பாடி, எம்பியானார்.

 

10 minutes ago, குமாரசாமி said:

அதுவும் தலித் என அடையாளம் காட்டி.... எம்பி ஆக்கப்பட்டார்.

விளக்கம் மேலே. மோடி துதி இப்போதுதான் பாடினார் ஆனால் அவர் எப்போதும் அந்த மனநிலையில்தான் இருந்தார் என்பது என் அவதானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனாலும் தனித்து என்றும் சொல்ல முடியாது அவரின் அண்ணர் மற்றும் பாரதிராஜா உட்பட பலரும் அவருடன் கூடவே பயணித்து ஒருவரை ஒருவர் ஆதரித்து கொண்டார்கள்.

அவரின் அண்ணா பாஸ்கர் ஆரம்பத்திலேயே காலமாகி விட்டார். பாரதிராஜா நல்ல இயக்குனர்தான். ஆனாலும் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையுமே  பாரதிராஜாவின் படங்களுக்கு 90 வீதம் மெருகூட்டியது. இளையராஜாவின் விலகலுக்கு பின்  பாரதிராஜாவின் திரைப்படங்கள் பெரிதாக எடுபடவில்லை.பாடல்களும் பெரிதாக அமையவில்லை.

6 minutes ago, goshan_che said:

ஆனால் எனது பார்வையில் ஆரம்பம் முதலே அவர் தன்னை தலித் என்று சொல்வதை விரும்பாதவராக இருந்தார். கிட்டதட்ட மைக்கேல் ஜாக்சன் தோல் நிறத்தை மாற்றியது போல ஒரு மனநிலை.

சாதியே இல்லையென நினைப்பவன் நான். என்னை இங்கே கறுப்பன் என சில வெள்ளைகள் சொல்லும் போது மனம் நெருடும். பாதிப்பு வந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும்.

9 minutes ago, goshan_che said:

ஒருவகையான சுயம் மறுத்தல். புதிதாக மதம் மாறுவோருக்கு இருக்கும் மனநிலை

சுயம் வேறு. மதம் மாறுவது வேறு.

10 minutes ago, goshan_che said:

பாரதிராஜ கூட சில வருடங்கள் முன் “அவனுக்கு எப்படியாவது பிராமணன் ஆகிவிட வேண்டும் என்ற தவிப்பு”என்று பொருள்பட சொல்லி இருந்தார்.

அதில் என்ன தவறு??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இளையராஜா, ஜனாதிபதி ஆகும் கனவில், துதி பாடினார் என்பது எனது கணிப்பு. அதனால், தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லாடலை கண்டுகொள்ளவில்லை.

அடுத்த ஜனாதிபதி நீங்கள் தான், இப்போது எம்பியாகுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.

இதெல்லாம் பாரதீய ஜனாதா கட்சியின்  அரசியல் சித்து விளையாட்டுக்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அவரின் அண்ணா பாஸ்கர் ஆரம்பத்திலேயே காலமாகி விட்டார். பாரதிராஜா நல்ல இயக்குனர்தான். ஆனாலும் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையுமே  பாரதிராஜாவின் படங்களுக்கு 90 வீதம் மெருகூட்டியது. இளையராஜாவின் விலகலுக்கு பின்  பாரதிராஜாவின் திரைப்படங்கள் பெரிதாக எடுபடவில்லை.பாடல்களும் பெரிதாக அமையவில்லை.

இதில் நான் சொல்ல வருவது இளையராஜ திறமைசாலி இல்லை என்றோ அல்லது ஏனையோர் அவரை திறமைக்கு மேலாக தூக்கி விட்டார்கள் என்பதோ அல்ல.

இளையராஜா முதல் பாடலுக்கு இசை அமைக்க முன்னம் பல படிகளைதாண்டி வந்தார் - அதில் பலது அவரின் அண்ணர் போட்டது - அவை இல்லாவிடின் முதல்பட வாய்ப்பே இல்லாமல் அவர் வாழ்க்கை போயிருக்கலாம் என்பதை அவரே சொல்லியுள்ளார்.

ஆகவே ஒருவரின் எழுச்சியை அவரின் முதலாவது வெற்றியில் இருந்து பார்த்து அவர் சுயம்பு என சொல்ல முடியாது. இதுதான் நான் சொல்லுவது.

ஆனால் இளையராஜாவுக்கு இருக்கும் “அடிமை மனநிலை” அவருக்கு பலகாலமாகவே இருந்தது - அதன் பலனாக அவர் தன்னை பிராமணரின் எதிரி ஆக்காமல் காத்து கொண்டார்.

ஒரு நாளும் ஜெய்பீம் என்ற பதத்தை உதிர்காத, ஜனனி, ஜனனி என உருகும் ராஜாவையும், மேடைக்கு மேடை இந்துதுவாவை விமர்சிக்கும் அறிவையும் பிராமணிய மேலதிக்க சிந்தனை ஒரே மாதிரி அணுகும் என்ற ஒப்பீடு முற்றிலும் தவறானது என்பதே என் வாதம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

விளக்கம் மேலே. மோடி துதி இப்போதுதான் பாடினார் ஆனால் அவர் எப்போதும் அந்த மனநிலையில்தான் இருந்தார் என்பது என் அவதானம்.

நீங்கள் முதலில் குறிப்பிட்டது இளையராஜா துதி பாடித்தான் பல உயரங்களை தொட்டார் என்பது. அதற்கு எனது பதிலின் சாரம்சம் அவர் ஏற்கனவே பல உயரங்களை தொட்டு விட்டார் என்பது. அவர் உயரத்திற்கு வந்த பின்னரே மோடி அரசிற்கும் அவரை தெரிந்ததது.மகரிசிக்கும் அதே நிலைதான்

8 minutes ago, goshan_che said:

ஆகவே ஒருவரின் எழுச்சியை அவரின் முதலாவது வெற்றியில் இருந்து பார்த்து அவர் சுயம்பு என சொல்ல முடியாது. இதுதான் நான் சொல்லுவது.

அப்படி பார்த்தால் கங்கை அமரனுக்கும் பங்குண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

இளையராஜா ஒரு விதிவிலக்கு. அவர் தன்னை இந்துவாக, ரமண மஹரிசி சிஸ்யனாக, கடைசியில் மோடி பக்தகானக சித்தரிதே பல உயரங்களை எட்ட முடிந்தது.

அப்படி இல்லாமல் வரிக்கு வரி ஜெய்பீம் என சொல்லுபவரை இவர்கள் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க மாட்டார்கள்.

இல்லை நான் அப்படி எழுதவில்லை.

நீங்கள் அப்படி வாசித்கிருக்க கூடும் (மேலே பார்க்கவும்).

மோடிக்கும் பிஜேபி க்கும் ராஜாவை இப்போதான் தெரியும் (ராஜா உயரங்களை தொட்ட போது பிஜேபி க்கு டெல்லியில் 1 சீட் என நினைக்கிறேன்). 

ஆனால் “மச்சான பார்தீங்களா” காலத்திலேயே இளையராஜா “ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே” என பாடி இருந்தால், தமிழ் சினிமாவில் பரவி கிடக்கும் பிராமண லாபி, அவரை அடுத்த படத்துக்கு நகர விட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.

அந்த காலத்திலேயே அவாளுக்கு அடங்கி போகும், பிராமணரை உயர்வாக சித்தரிக்கும், இந்துவாக அடையாளபடுத்தி, மறந்தும் தலித் அடையாளத்தை சொல்லாமல் விட்ட அணுகுமுறையை ராஜா எடுத்திராவிடால், மாறாக தலித் விடுதலை பற்றி, சமூக நீதி பற்றி அவர் பேசி இருந்தால் - இப்போ அறிவிக்கு நடப்பது முதல் படத்தின் பின்னே அவருக்கும் நடந்திருக்கும்.

“பிழையான சாதியில்” பிறந்த எத்தனையோ ஏகலைவர்களை விரைவெட்டி விரட்டிய துறை தமிழ் சினிமா.

ஆகவே ஆரம்பம் முதலே ராஜாவின் பிராமண துதிபாடும் அணுகுமுறை அவரை பல உயரங்களை அடைய உதவியது.

இந்த அணுகுமுறை இல்லாவிட்டால் எவ்வளவு திறமை இருந்தாலும் அவர் வெட்டி விடப்பட்டிருப்பார்.

ராஜாவுக்கு மட்டும் அல்ல. ரஜனிக்கும் இது பொருந்தும். 

14 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் முதலில் குறிப்பிட்டது இளையராஜா துதி பாடித்தான் பல உயரங்களை தொட்டார் என்பது. அதற்கு எனது பதிலின் சாரம்சம் அவர் ஏற்கனவே பல உயரங்களை தொட்டு விட்டார் என்பது. அவர் உயரத்திற்கு வந்த பின்னரே மோடி அரசிற்கும் அவரை தெரிந்ததது.மகரிசிக்கும் அதே நிலைதான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆனால் “மச்சான பார்தீங்களா” காலத்திலேயே இளையராஜா “ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே” என பாடி இருந்தால், தமிழ் சினிமாவில் பரவி கிடக்கும் பிராமண லாபி, அவரை அடுத்த படத்துக்கு நகர விட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.

கவனிக்க.......
இளையராஜா  புரட்சி செய்ய சினிமாவிற்கு வரவில்லை என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

கவனிக்க.......
இளையராஜா  புரட்சி செய்ய சினிமாவிற்கு வரவில்லை என நினைக்கின்றேன். 

நிச்சயமாக இல்லை. 

அவர் அப்படி செய்திருக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை.

அவர் சினிமாவுக்கு வந்தது தன் திறமையை வெளிகொணர, அதன் மூலம் பொருள், பலம், புகழ் ஈட்ட.

ஆனால் அதை அவர் அடைய அவரின் தலித் அடையாளம், நிச்சயம் ஒரு தடையாக இருந்திருக்கும். அவர் சமூக புரட்சி அரசியல் செய்திருந்தால் அடித்தே நூத்திருப்பார்கள்.

ஆகவே நான் ஆரம்பத்தில் சொன்னபடி,

இளையராஜ ஒரு விதிவிலக்கு. “பிராமண சேவகன்” மனநிலையை வெளிகாட்டிய அவரை பிராமண லாபி வளர விட்டது என்பதை வைத்து “ஜெய்பீம்” அரசியல் செய்யும் அறிவையும் அதே போல வளரவிடும் என சொல்ல முடியாது.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை. 

அவர் அப்படி செய்திருக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை.

அவர் சினிமாவுக்கு வந்தது தன் திறமையை வெளிகொணர, அதன் மூலம் பொருள், பலம், புகழ் ஈட்ட.

ஆனால் அதை அவர் அடைய அவரின் தலித் அடையாளம், நிச்சயம் ஒரு தடையாக இருந்திருக்கும். அவர் சமூக புரட்சி அரசியல் செய்திருந்தால் அடித்தே நூத்திருப்பார்கள்.

ஆகவே நான் ஆரம்பத்தில் சொன்னபடி,

இளையராஜ ஒரு விதிவிலக்கு. “பிராமண சேவகன்” மனநிலையை வெளிகாட்டிய அவரை பிராமண லாபி வளர விட்டது என்பதை வைத்து “ஜெய்பீம்” அரசியல் செய்யும் அறிவையும் அதே போல வளரவிடும் என சொல்ல முடியாது.

 

இளையாராவை ரமண மகரிஷி அழைக்கும் வரை சினிமாக்காரன் மாதிரியே ஒரு சில கிசு கிசுக்களுடன் வாழ்ந்தார்.மகரிஷி  ஒரு கோவில் கோபுரம் கட்டுவதற்காக இசை நிகழ்ச்சி நடாத்தி நிதி சேகரித்து தரும்படி வேண்டிக்கொண்ட பின்னரே உருத்திராட்ச மாலை அணியத்தொடங்கினார் என நினைக்கின்றேன். மற்றும் படி இளையராஜா பிறப்பில் ஒரு கிறிஸ்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அறிவு திட்டமிட்டே சாதிய அடிப்படையில் புறக்கணிக்கபடுவதாக எனக்கு படுகிறது.

பெரியாரின் திராவிட/திராவிட மொடல் நாட்டில் சாதி இன்னும் இருக்கா? 

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

இளையாராவை ரமண மகரிஷி அழைக்கும் வரை சினிமாக்காரன் மாதிரியே ஒரு சில கிசு கிசுக்களுடன் வாழ்ந்தார்.மகரிஷி  ஒரு கோவில் கோபுரம் கட்டுவதற்காக இசை நிகழ்ச்சி நடாத்தி நிதி சேகரித்து தரும்படி வேண்டிக்கொண்ட பின்னரே உருத்திராட்ச மாலை அணியத்தொடங்கினார் என நினைக்கின்றேன். மற்றும் படி இளையராஜா பிறப்பில் ஒரு கிறிஸ்தவர்.

இளையராஜா மட்டுமா?

சினிமாவில் பிராமணர் எங்கே ஆதிக்கம் செலுத்தினார்கள்?

கே பாலசந்தர், விசு தவிர, கருணாதி முதல், எம்ஜிஆர், சிவாஜி, மெய்யப்ப செட்டியார், பாரதிராஜா, பாக்யராஜ், பா ரஞ்சித் என்று அடித்தட்டிலிருந்து வந்தவர்கள் லிஸ்ட் அதிகமே.... 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.