Jump to content

ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஏர்ஃப்ரையர் Vs ஓவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஏர் ஃப்ரையர்களை வாங்குவது 400 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஏர் ஃப்ரையரில் மிகக் குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தியோ அல்லது எண்ணெய் இன்றியோ பொரிக்க முடிகிறது. எனவே இது மற்ற சமையல் முறைகளை விட ஆரோக்கியமானது எனக் கருத முடியுமா?

வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் இவ்வேளையில், ஏர்ஃப்ரையர், மின்சாரம் அல்லது ஆற்றல் நுகர்வை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்தோ அதற்கு ஆகும் செலவு குறித்தோ சிந்திக்க வேண்டியுள்ளது.

கிரெக் ஃபுட், பிபிசி ரேடியோ 4 இன் 'ஸ்லைஸ்ட்-பிரெட்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவர் இது தொடர்பாக இரண்டு நிபுணர்களுடன் பேசி, ஏர்ஃப்ரையர்களின் நன்மைகள் மற்றும் வரையறைகளைப் புரிந்து கொள்ள முயன்றார்.

 

உணவின் நாலாபக்கங்களிலிருந்தும் வெப்பக்காற்றைப் பாய்ச்சி உணவைச் சமைக்கிறது ஏர் ஃப்ரையர்

ஏர்ஃப்ரையர் சுமாராக ப்ரெட் டோஸ்டர் அளவிலானது. சமையலறை மேடையில் பொருந்துகிறது. அது உள்ளே வைக்கப்பட்டுள்ள உணவைச் சுற்றி, மிக அதிக வேகத்தில் மிக வெப்பமான காற்றைப் பாய்ச்சி, சுற்றியடிக்கிறது.

ஜேக்கப் ராட்ஜிகோவ்ஸ்கி லண்டன் இம்பீரியல் கல்லூரியில் சமையல் கல்வி வடிவமைப்பாளராக உள்ளார். "இது அடிப்படையில் மிகவும் வலுவான மற்றும் மிகவும் வெப்பமான காற்று. நீங்கள் அதை ஒரு ஹேர் ட்ரையர் போல் நினைக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

 

ஏர்ஃப்ரையர் Vs ஓவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இது அடிப்படையில் விசிறி-அடுப்பு போன்றது. ஆனால் அளவில் சிறியது. இதன் உள்ளே இருக்கும் மின்விசிறி மிக வேகமாகச் சுழலும்."

கன்வென்ஷன் ஓவனைவிட விரைவில் உணவு சமைக்கிறது ஏர் ஃப்ரையர்

"ஏர்ஃப்ரையரின் விசிறி மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அதன் பெட்டி மிகவும் சிறியது, மேலும் இந்த முழு சாதனமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 20 நிமிடங்களில் ஏர்ஃப்ரையரில் சிக்கன் லெக் பீஸை சமைக்க முடியும். அதை அடுப்பில் சமைக்க இன்னும் அதிக நேரம் ஆகும்." என்கிறார் ஜேக்கப்.

பெரிய கன்வென்ஷன் ஓவனில் சமைக்க, ப்ரீ ஹீட் செய்யவே அதிக நேரம் பிடிக்கும்.

ஆனால் உணவுப் பொருட்களை வைத்துச் சமைக்கும் இடவசதி மிகவும் குறைவாக இருப்பதால் ஒரே நேரத்தில் குறைந்த அளவு உணவை மட்டுமே சமைக்க முடியும்.

"நீங்கள் நான்கு அல்லது ஆறு நபர்களுக்கு சமைக்கிறீர்கள் என்றால், அது நேரத்தை மிச்சப்படுத்தாது, ஏனெனில் சிறிய அளவில் மீண்டும் மீண்டும் உணவை ஃப்ரையரில் வைத்துச் சமைக்க வேண்டியிருக்கும்," என்பது உணவு ஆய்வாளர்களின் கருத்து.

மொறு மொறு உணவு வகைகளுக்கு ஏர் ஃப்ரையர் ஏற்றது

பொதுவாக நாம் விளம்பரங்களில் பார்க்கும் பெரும்பாலான ஏர்ஃப்ரையர் மாடல்கள் சிக்கன் மற்றும் ஃப்ரைஸ் செய்வதாகவே காணப்படுகின்றன, ஏனெனில் நீங்கள் மொறு மொறு உணவுவகைகளைச் சாப்பிட விரும்பும் போது இந்தச் சாதனம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த உபகரணங்கள் உணவை மொறு மொறுப்பாக ஆக்குகின்றன என்று ஜேக்கப் கூறுகிறார். எனவே நீங்கள் மிகவும் கர கர மொறு மொறு உணவு வகைகளைச் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், இந்த உபகரணங்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.

 

ஏர்ஃப்ரையர் Vs ஓவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது ஆரோக்கியத்திற்கு ஏற்றதா?

நிறைய சூடான எண்ணெயில் டீப்-ஃப்ரை செய்து சமைப்பதை விட ஏர்ஃப்ரையரில் சமைப்பது ஆரோக்கியமானது என்கிறார் ஜேக்கப்.

கன்வென்ஷனல் ஓவனில் சமைப்பதை விடவும் கூட இது ஆரோக்கியமானதாக இருக்கும்.

உருளைக்கிழங்கில் எண்ணெய் தெளித்துச் சமைத்தால் கூட, கிழங்கு அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும். ஆனால் ஏர்ஃப்ரையர்களைப் பொறுத்தவரை, எண்ணெய் ஒரு வடிதட்டின் மூலம் கீழே சென்று விடுகிறது.

"ஏர்ஃப்ரையரில் அதிக எண்ணெய் இருந்தால், அது தானாகவே வடிகட்டியில் விழுந்து தங்கி விடும். உங்கள் உணவில் வராது."

ஆனால் இதுவே ஆரோக்கியமான சமையல் முறை என்று கூறமுடியாது. நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண விரும்பினால், ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிபிசியின் குட் ஃபுட் இதழின் ஆசிரியர் அன்யா கில்பர்ட் கூறுகையில், சில புதிய மாடல் ஏர்ஃப்ரையர்களில் 15 விதமான செயல்பாடுகள் உள்ளன. இது அந்த சாதனத்தை இன்னும் சிறப்பாக்குகிறது என்கிறார்.

 

ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஓவனை விடக் குறைவான மின் நுகர்வு

இந்த முடிவுக்கு வரும் முன்னர், சைமன் ஹோபன் (பிபிசியின் ஸ்லைஸ்டு ப்ரெட் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்) ஒருவருக்கான கோழிக்கால் மற்றும் ஃப்ரைஸ் சமைக்க முயற்சித்தார். முதலில் அடுப்பில் வைத்துச் சமைத்த பிறகு அதே அளவு, ஏர்ஃப்ரையரில். சமைத்துப் பார்த்தார். இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டபோது மற்ற அனைத்து மின்சாதனங்களும் அணைக்கப்படுவதையும் அவர் உறுதி செய்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த இரண்டு வெவ்வேறு சாதனங்களில் உணவு சமைக்க எவ்வளவு மின்சாரம் செலவழிக்கப்பட்டது என்பதை மின் மீட்டரில் சரிபார்த்தார்.

"ஓவனில் சிக்கன் சமைக்க சுமார் 35 நிமிடங்கள் ஆனது, மீட்டரைப் பார்த்தபோது, 1.05 கிலோவாட்-ஹவர் மின்சாரத்தைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பிரையரில் அதே சிக்கனை சமைக்க 20 நிமிடங்கள் ஆனது, நான் பார்த்தேன். மீட்டரில், 0.43 கிலோவாட்-ஹவர் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது."

இது தவிர, ஃப்ரைஸ் செய்யும் போது, ஓவனில் சரியாக சுமார் ஒரு மணி நேரம் ஆகும். இதில் 1.31 கிலோவாட் மணி நேரம் மின்சாரம் செலவிடப்பட்டது.

அதேசமயம் ஃப்ரையரில் ஃப்ரைஸ் மிகக் குறுகிய நேரத்தில் தயாராகிவிட்டது.

சிமோனின் கூற்றுப்படி, "35 நிமிடங்களில் ஃப்ரைஸ் தயாராகிவிட்டன. இது ஒரு மணி நேரத்திற்கு 0.55 கிலோ வாட் என்ற விகிதத்தில் மின்சாரத்தை உட்கொண்டது."

ஓவனுடன் ஒப்பிடும்போது ஏர்ஃப்ரையரில் உணவு சமைக்கச் செலவாகும் மின்சாரம் பாதிக்கும் குறைவானது என்ற முடிவுக்கு வருகிறார் கிரெக்.

ஏர் ஃப்ரையர்,ஒவனுக்கு மாற்றாகாது ஆனால், அதிக செயல்திறன் மிக்கது

இருப்பினும், ஏர்ஃப்ரையர் ஓவனுக்கு முழுமையான மாற்றாகும் என்ற் ஜேக்கப் கருதவில்லை. "நிச்சயமாக... நீங்கள் ஒரு முழு கோழியை அல்லது டர்க்கியை ஏர்ஃப்ரையரில் சமைக்க முடியாது." என்கிறார் அவர்.

"ஆனால் இது மிகவும் அருமையான கண்டுபிடிப்பு என்று நான் நினைக்கிறேன். என்னிடம் ஒன்று உள்ளது, நான் அதை அதிகம் பயன்படுத்துகிறேன். அடுப்பு இல்லாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள விஷயம் என்று நான் நினைக்கிறேன்."

https://www.bbc.com/tamil/science-62371025

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி ஏராளன் .......!  👍

நான் இப்ப வளவு துப்பரவாக்கும் பொழுது நிறைய விறகுகள் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆறு மாதத்துக்கு போதும் எனக்கு.......மனிசிமார் வழக்கம்போல கரண்ட் அடுப்புதான்....... விறகுக்கு கிட்டவும் வராயினம்......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?

ரஷ்யன் காஸ்ல் சமைச்சால் சாப்பாடு ருசியாய் இருக்கும். சுத்தமானது,சுகாதாரமானது, தரமானது மலிவானது.கண்ணுக்கு குளிர்ச்சியானது. பக்க விளைவுகள் இல்லாதது. 😎

Does the Nord Stream 1 shutdown show Europe can't survive the winter  without Russia gas exports? | Euronews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ரஷ்யன் காஸ்ல் சமைச்சால்

உருசிய எரிவாயுவை சொல்கிறீர்களா அண்ணை😉😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020 ஐக்கிய இராச்சிய இரெண்டாம் பொது முடக்க நேரத்தில் திண்ணையிலும் சமையல் திரி ஒன்றிலும் இந்த “காற்று-பொரியி” (😜) பற்றி பிரஸ்தாபி….மன்னிக்கவும் எடுத்து கூறி இருந்தேன். 

அன்றில் இருந்து எங்கள் வீட்டில் சமையல் இதில்தான். தனியே பொரிக்க மட்டும் இன்றி, அவிக்கவும், சமைக்கவும், வெதுப்பவும் வசதிகள் உள்ள பொரியிகள் சந்தையில் உளன.

அதிக லீட்டர் கன அளவு அண்டாவை வாங்கினால் 5 பேருக்கு சமைக்கலாம்.

பிகு.

லீட்டருக்கு என்ன தமிழ்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ரஷ்யன் காஸ்ல் சமைச்சால் சாப்பாடு ருசியாய் இருக்கும். சுத்தமானது,சுகாதாரமானது, தரமானது மலிவானது.கண்ணுக்கு குளிர்ச்சியானது. பக்க விளைவுகள் இல்லாதது. 😎

குமாரசாமி அய்யா... தயவு செய்து,  கொஞ்ச நாளைக்கு... 
ஆங்கிலம் கலக்காமல் எழுதும்படி, வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 🙏

1 hour ago, goshan_che said:

உருசிய எரிவாயுவை சொல்கிறீர்களா அண்ணை😉😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அய்யா... தயவு செய்து,  கொஞ்ச நாளைக்கு... 
ஆங்கிலம் கலக்காமல் எழுதும்படி, வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 🙏

நான் சொல்லவந்ததை அங்கை ஒராள் தான் விளங்கிக்கொள்ள பஞ்சிப்படுறார் எண்டால்  சிறித்தம்பி நீங்களுமா?🤣

எனவே நான் பத்து தென்னம்பிள்ளை நடுற திட்டம்  உறுதியாகிக்கொண்டு வருது😂

Plant Library

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

2020 ஐக்கிய இராச்சிய இரெண்டாம் பொது முடக்க நேரத்தில் திண்ணையிலும் சமையல் திரி ஒன்றிலும் இந்த “காற்று-பொரியி” (😜) பற்றி பிரஸ்தாபி….மன்னிக்கவும் எடுத்து கூறி இருந்தேன். 

அன்றில் இருந்து எங்கள் வீட்டில் சமையல் இதில்தான். தனியே பொரிக்க மட்டும் இன்றி, அவிக்கவும், சமைக்கவும், வெதுப்பவும் வசதிகள் உள்ள பொரியிகள் சந்தையில் உளன.

அதிக லீட்டர் கன அளவு அண்டாவை வாங்கினால் 5 பேருக்கு சமைக்கலாம்.

பிகு.

லீட்டருக்கு என்ன தமிழ்

@நன்னிச் சோழன்  னுக்கு... வேலை வந்திட்டுது.
உடனை இங்கை  ஓடியாங்கோ... கோசான் என்னவோ  கேட்கிறார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
10 minutes ago, தமிழ் சிறி said:

@நன்னிச் சோழன்  னுக்கு... வேலை வந்திட்டுது.
உடனை இங்கை  ஓடியாங்கோ... கோசான் என்னவோ  கேட்கிறார். 😂

ஆத்தி... இதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா... 

(லீட்டருக்கு லீட்டர் தானுங்கோ.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அய்யா... தயவு செய்து,  கொஞ்ச நாளைக்கு... 
ஆங்கிலம் கலக்காமல் எழுதும்படி, வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 🙏

 

51 minutes ago, குமாரசாமி said:

நான் சொல்லவந்ததை அங்கை ஒராள் தான் விளங்கிக்கொள்ள பஞ்சிப்படுறார் எண்டால்  சிறித்தம்பி நீங்களுமா?🤣

எனவே நான் பத்து தென்னம்பிள்ளை நடுற திட்டம்  உறுதியாகிக்கொண்டு வருது😂

Plant Library

😂 எமக்கு வந்தால் இரத்தம், அதுவே பிறர்கு என்றால் தக்காளி சுவைகூட்டி என்பதாக இருக்க கூடாது என்பதை நகைச்சுவையாக சுட்டவே அப்படி எழுதினேன்.

தமிழுடன் ஆங்கிலமும் பேசும் அனைவரும் தம்மை உயர்த்தி காட்டவோ, மமதையிலோ, அல்லது தாம் படித்தவர்கள் என்பதை காட்டவோ அப்படி பேசுவதில்லை.

என்னை பொறுத்தவரை இப்படி யோசிப்பது ஒரு வகை தாழ்வுமனசிக்கல் என்றே நினைக்கிறேன்.

தம்மை மேட்டுகுடி அல்லாதவராக, மொழி பற்றாளர்களாக, ஆசாரவாதிகளாக பாவனை செய்வோரும் கூட இந்த வழக்கத்துக்கு மாறில்லை என்பதுதான் உண்மை.

ஆங்கிலத்தை ஆங்கில எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ எழுதினாலும் அது ஆங்கிலம்தான். 

மொத்தத்தில் மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். சொல்ல வருவதை முடிந்தளவு விளக்கமாக கேட்பவருக்கு சொல்லுவதே அதன் பிரதான இலக்கு.

ஆகவே உக்ரேன் யுத்தத்தை பற்றிய கருத்து பரிமாற்றத்தில் சக கருத்தாளர் ஆங்கிலம் கலந்து எழுதுவதை தூக்கி பிடித்து, அதை இன்னும் ஓரிருவர் வந்து ஒரு நகைச்சுவை ஆக்காமல் கடந்து போனால் - தென்னம்பிள்ளை நடும் அவசியம் எழாது🙏.

(யாவும் சிரித்து கொண்டே எழுதப்பட்டது)

 

53 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆத்தி... இதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா... 

(லீட்டருக்கு லீட்டர் தானுங்கோ.)

நன்றி நன்னி.

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. லீட்டரை, கொக்கோகோலாவை, மக்டொனால்ஸ்சை அப்படியே பாவிக்க முடிந்தால் ஏன் டிவிட்டரை, வாட்சப்பை, பேஸ்புக்கை மொழி மாற்ற வேண்டும்.

கருவிகளை, வலைத்தளம், இணையம், சமூகவலை போன்றவற்றை மொழிமாற்றுவது ஏற்றுகொள்ள கூடியதே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

😂 எமக்கு வந்தால் இரத்தம், அதுவே பிறர்கு என்றால் தக்காளி சுவைகூட்டி என்பதாக இருக்க கூடாது என்பதை நகைச்சுவையாக சுட்டவே அப்படி எழுதினேன்.

தமிழுடன் ஆங்கிலமும் பேசும் அனைவரும் தம்மை உயர்த்தி காட்டவோ, மமதையிலோ, அல்லது தாம் படித்தவர்கள் என்பதை காட்டவோ அப்படி பேசுவதில்லை.

என்னை பொறுத்தவரை இப்படி யோசிப்பது ஒரு வகை தாழ்வுமனசிக்கல் என்றே நினைக்கிறேன்.

தம்மை மேட்டுகுடி அல்லாதவராக, மொழி பற்றாளர்களாக, ஆசாரவாதிகளாக பாவனை செய்வோரும் கூட இந்த வழக்கத்துக்கு மாறில்லை என்பதுதான் உண்மை.

ஆங்கிலத்தை ஆங்கில எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ எழுதினாலும் அது ஆங்கிலம்தான். 

மொத்தத்தில் மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். சொல்ல வருவதை முடிந்தளவு விளக்கமாக கேட்பவருக்கு சொல்லுவதே அதன் பிரதான இலக்கு.

ஆகவே உக்ரேன் யுத்தத்தை பற்றிய கருத்து பரிமாற்றத்தில் சக கருத்தாளர் ஆங்கிலம் கலந்து எழுதுவதை தூக்கி பிடித்து, அதை இன்னும் ஓரிருவர் வந்து ஒரு நகைச்சுவை ஆக்காமல் கடந்து போனால் - தென்னம்பிள்ளை நடும் அவசியம் எழாது🙏.

(யாவும் சிரித்து கொண்டே எழுதப்பட்டது)

அதெப்படி தாங்கள் எழுதினால் நகைச்சுவை மற்றவன் எழுதினால் நகைச்சுவையாக தெரிவதில்லை? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதெப்படி தாங்கள் எழுதினால் நகைச்சுவை மற்றவன் எழுதினால் நகைச்சுவையாக தெரிவதில்லை? 😁

😆 எனக்கு அப்படித்தன் தெரிகிறது. உங்களுக்கும் அப்படித்தான் என்றால் - நோ பிராப்ளம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, goshan_che said:

நன்றி நன்னி.

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. லீட்டரை, கொக்கோகோலாவை, மக்டொனால்ஸ்சை அப்படியே பாவிக்க முடிந்தால் ஏன் டிவிட்டரை, வாட்சப்பை, பேஸ்புக்கை மொழி மாற்ற வேண்டும்.

கருவிகளை, வலைத்தளம், இணையம், சமூகவலை போன்றவற்றை மொழிமாற்றுவது ஏற்றுகொள்ள கூடியதே.

நான் அப்படி எழுதியதில்லை. நான்,

  • Facebook - வேசுபுக்கு 
  • Twitter - துவிட்டர்
  •  ........

என்று வேற்றுமொழி பெயர்மொழிகளை தமிழ் இலக்கணத்திற்கு ஏற்பவே எழுதுபவன். அவற்றை மொழிபெயர்ப்பது கிடையாது. ஒருவரின்/ஒன்றின் பெயரை நாம் மொழிபெயர்த்தல் கூடாது என்பது எனது கொள்கை. 

 

 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

😂 எமக்கு வந்தால் இரத்தம், அதுவே பிறர்கு என்றால் தக்காளி சுவைகூட்டி என்பதாக இருக்க கூடாது என்பதை நகைச்சுவையாக சுட்டவே அப்படி எழுதினேன்.

தமிழுடன் ஆங்கிலமும் பேசும் அனைவரும் தம்மை உயர்த்தி காட்டவோ, மமதையிலோ, அல்லது தாம் படித்தவர்கள் என்பதை காட்டவோ அப்படி பேசுவதில்லை.

என்னை பொறுத்தவரை இப்படி யோசிப்பது ஒரு வகை தாழ்வுமனசிக்கல் என்றே நினைக்கிறேன்.

தம்மை மேட்டுகுடி அல்லாதவராக, மொழி பற்றாளர்களாக, ஆசாரவாதிகளாக பாவனை செய்வோரும் கூட இந்த வழக்கத்துக்கு மாறில்லை என்பதுதான் உண்மை.

ஆங்கிலத்தை ஆங்கில எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ எழுதினாலும் அது ஆங்கிலம்தான். 

மொத்தத்தில் மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். சொல்ல வருவதை முடிந்தளவு விளக்கமாக கேட்பவருக்கு சொல்லுவதே அதன் பிரதான இலக்கு.

ஆகவே உக்ரேன் யுத்தத்தை பற்றிய கருத்து பரிமாற்றத்தில் சக கருத்தாளர் ஆங்கிலம் கலந்து எழுதுவதை தூக்கி பிடித்து, அதை இன்னும் ஓரிருவர் வந்து ஒரு நகைச்சுவை ஆக்காமல் கடந்து போனால் - தென்னம்பிள்ளை நடும் அவசியம் எழாது🙏.

(யாவும் சிரித்து கொண்டே எழுதப்பட்டது)

 

நன்றி நன்னி.

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. லீட்டரை, கொக்கோகோலாவை, மக்டொனால்ஸ்சை அப்படியே பாவிக்க முடிந்தால் ஏன் டிவிட்டரை, வாட்சப்பை, பேஸ்புக்கை மொழி மாற்ற வேண்டும்.

கருவிகளை, வலைத்தளம், இணையம், சமூகவலை போன்றவற்றை மொழிமாற்றுவது ஏற்றுகொள்ள கூடியதே.

 

பெயர்  மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை. 

ஆ.ஆனால் பூவைப் பூ என்றும் கூறலாம், புஸ்ட்பம் என்றும் கூறலாம்...

அதுக்காக உனது அப்பா என்ன  தமிழ்ப் பண்டிதரா என்றெல்லாம் கேட்கக் கூடாது  சரியா.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நன்னிச் சோழன் said:

நான் அப்படி எழுதியதில்லை. நான்,

  • Facebook - வேசுபுக்கு 
  • Twitter - துவிட்டர்
  •  ........

என்று வேற்றுமொழி பெயர்மொழிகளை தமிழ் இலக்கணத்திற்கு ஏற்பவே எழுதுபவன். அவற்றை மொழிபெயர்ப்பது கிடையாது. ஒருவரின்/ஒன்றின் பெயரை நாம் மொழிபெயர்த்தல் கூடாது என்பது எனது கொள்கை. 

 

 

 

 

நன்றி. நான் பொதுவாகவே சொன்னேன்.  நீங்கள் எழுதியதாக பொருள் கொள்ள வேண்டாம்🙏

5 minutes ago, Kapithan said:

பெயர்  மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை. 

ஆ.ஆனால் பூவைப் பூ என்றும் கூறலாம், புஸ்ட்பம் என்றும் கூறலாம்...

அதுக்காக உனது அப்பா என்ன  தமிழ்ப் பண்டிதரா என்றெல்லாம் கேட்கக் கூடாது  சரியா.....🤣

அப்ப நீங்க பண்டிதரா எண்டு கேட்ப்போம்🤣.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நன்றி. நான் பொதுவாகவே சொன்னேன்.  நீங்கள் எழுதியதாக பொருள் கொள்ள வேண்டாம்🙏

அப்ப நீங்க பண்டிதரா எண்டு கேட்ப்போம்🤣.

பண்டி....த...ர் என்று திட்டாதவரைக்கும் ஓகே..🤣

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.