Jump to content

ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஏர்ஃப்ரையர் Vs ஓவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஏர் ஃப்ரையர்களை வாங்குவது 400 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஏர் ஃப்ரையரில் மிகக் குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தியோ அல்லது எண்ணெய் இன்றியோ பொரிக்க முடிகிறது. எனவே இது மற்ற சமையல் முறைகளை விட ஆரோக்கியமானது எனக் கருத முடியுமா?

வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் இவ்வேளையில், ஏர்ஃப்ரையர், மின்சாரம் அல்லது ஆற்றல் நுகர்வை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்தோ அதற்கு ஆகும் செலவு குறித்தோ சிந்திக்க வேண்டியுள்ளது.

கிரெக் ஃபுட், பிபிசி ரேடியோ 4 இன் 'ஸ்லைஸ்ட்-பிரெட்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவர் இது தொடர்பாக இரண்டு நிபுணர்களுடன் பேசி, ஏர்ஃப்ரையர்களின் நன்மைகள் மற்றும் வரையறைகளைப் புரிந்து கொள்ள முயன்றார்.

 

உணவின் நாலாபக்கங்களிலிருந்தும் வெப்பக்காற்றைப் பாய்ச்சி உணவைச் சமைக்கிறது ஏர் ஃப்ரையர்

ஏர்ஃப்ரையர் சுமாராக ப்ரெட் டோஸ்டர் அளவிலானது. சமையலறை மேடையில் பொருந்துகிறது. அது உள்ளே வைக்கப்பட்டுள்ள உணவைச் சுற்றி, மிக அதிக வேகத்தில் மிக வெப்பமான காற்றைப் பாய்ச்சி, சுற்றியடிக்கிறது.

ஜேக்கப் ராட்ஜிகோவ்ஸ்கி லண்டன் இம்பீரியல் கல்லூரியில் சமையல் கல்வி வடிவமைப்பாளராக உள்ளார். "இது அடிப்படையில் மிகவும் வலுவான மற்றும் மிகவும் வெப்பமான காற்று. நீங்கள் அதை ஒரு ஹேர் ட்ரையர் போல் நினைக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

 

ஏர்ஃப்ரையர் Vs ஓவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இது அடிப்படையில் விசிறி-அடுப்பு போன்றது. ஆனால் அளவில் சிறியது. இதன் உள்ளே இருக்கும் மின்விசிறி மிக வேகமாகச் சுழலும்."

கன்வென்ஷன் ஓவனைவிட விரைவில் உணவு சமைக்கிறது ஏர் ஃப்ரையர்

"ஏர்ஃப்ரையரின் விசிறி மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அதன் பெட்டி மிகவும் சிறியது, மேலும் இந்த முழு சாதனமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 20 நிமிடங்களில் ஏர்ஃப்ரையரில் சிக்கன் லெக் பீஸை சமைக்க முடியும். அதை அடுப்பில் சமைக்க இன்னும் அதிக நேரம் ஆகும்." என்கிறார் ஜேக்கப்.

பெரிய கன்வென்ஷன் ஓவனில் சமைக்க, ப்ரீ ஹீட் செய்யவே அதிக நேரம் பிடிக்கும்.

ஆனால் உணவுப் பொருட்களை வைத்துச் சமைக்கும் இடவசதி மிகவும் குறைவாக இருப்பதால் ஒரே நேரத்தில் குறைந்த அளவு உணவை மட்டுமே சமைக்க முடியும்.

"நீங்கள் நான்கு அல்லது ஆறு நபர்களுக்கு சமைக்கிறீர்கள் என்றால், அது நேரத்தை மிச்சப்படுத்தாது, ஏனெனில் சிறிய அளவில் மீண்டும் மீண்டும் உணவை ஃப்ரையரில் வைத்துச் சமைக்க வேண்டியிருக்கும்," என்பது உணவு ஆய்வாளர்களின் கருத்து.

மொறு மொறு உணவு வகைகளுக்கு ஏர் ஃப்ரையர் ஏற்றது

பொதுவாக நாம் விளம்பரங்களில் பார்க்கும் பெரும்பாலான ஏர்ஃப்ரையர் மாடல்கள் சிக்கன் மற்றும் ஃப்ரைஸ் செய்வதாகவே காணப்படுகின்றன, ஏனெனில் நீங்கள் மொறு மொறு உணவுவகைகளைச் சாப்பிட விரும்பும் போது இந்தச் சாதனம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த உபகரணங்கள் உணவை மொறு மொறுப்பாக ஆக்குகின்றன என்று ஜேக்கப் கூறுகிறார். எனவே நீங்கள் மிகவும் கர கர மொறு மொறு உணவு வகைகளைச் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், இந்த உபகரணங்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.

 

ஏர்ஃப்ரையர் Vs ஓவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது ஆரோக்கியத்திற்கு ஏற்றதா?

நிறைய சூடான எண்ணெயில் டீப்-ஃப்ரை செய்து சமைப்பதை விட ஏர்ஃப்ரையரில் சமைப்பது ஆரோக்கியமானது என்கிறார் ஜேக்கப்.

கன்வென்ஷனல் ஓவனில் சமைப்பதை விடவும் கூட இது ஆரோக்கியமானதாக இருக்கும்.

உருளைக்கிழங்கில் எண்ணெய் தெளித்துச் சமைத்தால் கூட, கிழங்கு அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும். ஆனால் ஏர்ஃப்ரையர்களைப் பொறுத்தவரை, எண்ணெய் ஒரு வடிதட்டின் மூலம் கீழே சென்று விடுகிறது.

"ஏர்ஃப்ரையரில் அதிக எண்ணெய் இருந்தால், அது தானாகவே வடிகட்டியில் விழுந்து தங்கி விடும். உங்கள் உணவில் வராது."

ஆனால் இதுவே ஆரோக்கியமான சமையல் முறை என்று கூறமுடியாது. நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண விரும்பினால், ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிபிசியின் குட் ஃபுட் இதழின் ஆசிரியர் அன்யா கில்பர்ட் கூறுகையில், சில புதிய மாடல் ஏர்ஃப்ரையர்களில் 15 விதமான செயல்பாடுகள் உள்ளன. இது அந்த சாதனத்தை இன்னும் சிறப்பாக்குகிறது என்கிறார்.

 

ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஓவனை விடக் குறைவான மின் நுகர்வு

இந்த முடிவுக்கு வரும் முன்னர், சைமன் ஹோபன் (பிபிசியின் ஸ்லைஸ்டு ப்ரெட் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்) ஒருவருக்கான கோழிக்கால் மற்றும் ஃப்ரைஸ் சமைக்க முயற்சித்தார். முதலில் அடுப்பில் வைத்துச் சமைத்த பிறகு அதே அளவு, ஏர்ஃப்ரையரில். சமைத்துப் பார்த்தார். இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டபோது மற்ற அனைத்து மின்சாதனங்களும் அணைக்கப்படுவதையும் அவர் உறுதி செய்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த இரண்டு வெவ்வேறு சாதனங்களில் உணவு சமைக்க எவ்வளவு மின்சாரம் செலவழிக்கப்பட்டது என்பதை மின் மீட்டரில் சரிபார்த்தார்.

"ஓவனில் சிக்கன் சமைக்க சுமார் 35 நிமிடங்கள் ஆனது, மீட்டரைப் பார்த்தபோது, 1.05 கிலோவாட்-ஹவர் மின்சாரத்தைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பிரையரில் அதே சிக்கனை சமைக்க 20 நிமிடங்கள் ஆனது, நான் பார்த்தேன். மீட்டரில், 0.43 கிலோவாட்-ஹவர் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது."

இது தவிர, ஃப்ரைஸ் செய்யும் போது, ஓவனில் சரியாக சுமார் ஒரு மணி நேரம் ஆகும். இதில் 1.31 கிலோவாட் மணி நேரம் மின்சாரம் செலவிடப்பட்டது.

அதேசமயம் ஃப்ரையரில் ஃப்ரைஸ் மிகக் குறுகிய நேரத்தில் தயாராகிவிட்டது.

சிமோனின் கூற்றுப்படி, "35 நிமிடங்களில் ஃப்ரைஸ் தயாராகிவிட்டன. இது ஒரு மணி நேரத்திற்கு 0.55 கிலோ வாட் என்ற விகிதத்தில் மின்சாரத்தை உட்கொண்டது."

ஓவனுடன் ஒப்பிடும்போது ஏர்ஃப்ரையரில் உணவு சமைக்கச் செலவாகும் மின்சாரம் பாதிக்கும் குறைவானது என்ற முடிவுக்கு வருகிறார் கிரெக்.

ஏர் ஃப்ரையர்,ஒவனுக்கு மாற்றாகாது ஆனால், அதிக செயல்திறன் மிக்கது

இருப்பினும், ஏர்ஃப்ரையர் ஓவனுக்கு முழுமையான மாற்றாகும் என்ற் ஜேக்கப் கருதவில்லை. "நிச்சயமாக... நீங்கள் ஒரு முழு கோழியை அல்லது டர்க்கியை ஏர்ஃப்ரையரில் சமைக்க முடியாது." என்கிறார் அவர்.

"ஆனால் இது மிகவும் அருமையான கண்டுபிடிப்பு என்று நான் நினைக்கிறேன். என்னிடம் ஒன்று உள்ளது, நான் அதை அதிகம் பயன்படுத்துகிறேன். அடுப்பு இல்லாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள விஷயம் என்று நான் நினைக்கிறேன்."

https://www.bbc.com/tamil/science-62371025

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி ஏராளன் .......!  👍

நான் இப்ப வளவு துப்பரவாக்கும் பொழுது நிறைய விறகுகள் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆறு மாதத்துக்கு போதும் எனக்கு.......மனிசிமார் வழக்கம்போல கரண்ட் அடுப்புதான்....... விறகுக்கு கிட்டவும் வராயினம்......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?

ரஷ்யன் காஸ்ல் சமைச்சால் சாப்பாடு ருசியாய் இருக்கும். சுத்தமானது,சுகாதாரமானது, தரமானது மலிவானது.கண்ணுக்கு குளிர்ச்சியானது. பக்க விளைவுகள் இல்லாதது. 😎

Does the Nord Stream 1 shutdown show Europe can't survive the winter  without Russia gas exports? | Euronews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ரஷ்யன் காஸ்ல் சமைச்சால்

உருசிய எரிவாயுவை சொல்கிறீர்களா அண்ணை😉😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020 ஐக்கிய இராச்சிய இரெண்டாம் பொது முடக்க நேரத்தில் திண்ணையிலும் சமையல் திரி ஒன்றிலும் இந்த “காற்று-பொரியி” (😜) பற்றி பிரஸ்தாபி….மன்னிக்கவும் எடுத்து கூறி இருந்தேன். 

அன்றில் இருந்து எங்கள் வீட்டில் சமையல் இதில்தான். தனியே பொரிக்க மட்டும் இன்றி, அவிக்கவும், சமைக்கவும், வெதுப்பவும் வசதிகள் உள்ள பொரியிகள் சந்தையில் உளன.

அதிக லீட்டர் கன அளவு அண்டாவை வாங்கினால் 5 பேருக்கு சமைக்கலாம்.

பிகு.

லீட்டருக்கு என்ன தமிழ்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ரஷ்யன் காஸ்ல் சமைச்சால் சாப்பாடு ருசியாய் இருக்கும். சுத்தமானது,சுகாதாரமானது, தரமானது மலிவானது.கண்ணுக்கு குளிர்ச்சியானது. பக்க விளைவுகள் இல்லாதது. 😎

குமாரசாமி அய்யா... தயவு செய்து,  கொஞ்ச நாளைக்கு... 
ஆங்கிலம் கலக்காமல் எழுதும்படி, வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 🙏

1 hour ago, goshan_che said:

உருசிய எரிவாயுவை சொல்கிறீர்களா அண்ணை😉😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அய்யா... தயவு செய்து,  கொஞ்ச நாளைக்கு... 
ஆங்கிலம் கலக்காமல் எழுதும்படி, வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 🙏

நான் சொல்லவந்ததை அங்கை ஒராள் தான் விளங்கிக்கொள்ள பஞ்சிப்படுறார் எண்டால்  சிறித்தம்பி நீங்களுமா?🤣

எனவே நான் பத்து தென்னம்பிள்ளை நடுற திட்டம்  உறுதியாகிக்கொண்டு வருது😂

Plant Library

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

2020 ஐக்கிய இராச்சிய இரெண்டாம் பொது முடக்க நேரத்தில் திண்ணையிலும் சமையல் திரி ஒன்றிலும் இந்த “காற்று-பொரியி” (😜) பற்றி பிரஸ்தாபி….மன்னிக்கவும் எடுத்து கூறி இருந்தேன். 

அன்றில் இருந்து எங்கள் வீட்டில் சமையல் இதில்தான். தனியே பொரிக்க மட்டும் இன்றி, அவிக்கவும், சமைக்கவும், வெதுப்பவும் வசதிகள் உள்ள பொரியிகள் சந்தையில் உளன.

அதிக லீட்டர் கன அளவு அண்டாவை வாங்கினால் 5 பேருக்கு சமைக்கலாம்.

பிகு.

லீட்டருக்கு என்ன தமிழ்

@நன்னிச் சோழன்  னுக்கு... வேலை வந்திட்டுது.
உடனை இங்கை  ஓடியாங்கோ... கோசான் என்னவோ  கேட்கிறார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
10 minutes ago, தமிழ் சிறி said:

@நன்னிச் சோழன்  னுக்கு... வேலை வந்திட்டுது.
உடனை இங்கை  ஓடியாங்கோ... கோசான் என்னவோ  கேட்கிறார். 😂

ஆத்தி... இதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா... 

(லீட்டருக்கு லீட்டர் தானுங்கோ.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அய்யா... தயவு செய்து,  கொஞ்ச நாளைக்கு... 
ஆங்கிலம் கலக்காமல் எழுதும்படி, வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 🙏

 

51 minutes ago, குமாரசாமி said:

நான் சொல்லவந்ததை அங்கை ஒராள் தான் விளங்கிக்கொள்ள பஞ்சிப்படுறார் எண்டால்  சிறித்தம்பி நீங்களுமா?🤣

எனவே நான் பத்து தென்னம்பிள்ளை நடுற திட்டம்  உறுதியாகிக்கொண்டு வருது😂

Plant Library

😂 எமக்கு வந்தால் இரத்தம், அதுவே பிறர்கு என்றால் தக்காளி சுவைகூட்டி என்பதாக இருக்க கூடாது என்பதை நகைச்சுவையாக சுட்டவே அப்படி எழுதினேன்.

தமிழுடன் ஆங்கிலமும் பேசும் அனைவரும் தம்மை உயர்த்தி காட்டவோ, மமதையிலோ, அல்லது தாம் படித்தவர்கள் என்பதை காட்டவோ அப்படி பேசுவதில்லை.

என்னை பொறுத்தவரை இப்படி யோசிப்பது ஒரு வகை தாழ்வுமனசிக்கல் என்றே நினைக்கிறேன்.

தம்மை மேட்டுகுடி அல்லாதவராக, மொழி பற்றாளர்களாக, ஆசாரவாதிகளாக பாவனை செய்வோரும் கூட இந்த வழக்கத்துக்கு மாறில்லை என்பதுதான் உண்மை.

ஆங்கிலத்தை ஆங்கில எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ எழுதினாலும் அது ஆங்கிலம்தான். 

மொத்தத்தில் மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். சொல்ல வருவதை முடிந்தளவு விளக்கமாக கேட்பவருக்கு சொல்லுவதே அதன் பிரதான இலக்கு.

ஆகவே உக்ரேன் யுத்தத்தை பற்றிய கருத்து பரிமாற்றத்தில் சக கருத்தாளர் ஆங்கிலம் கலந்து எழுதுவதை தூக்கி பிடித்து, அதை இன்னும் ஓரிருவர் வந்து ஒரு நகைச்சுவை ஆக்காமல் கடந்து போனால் - தென்னம்பிள்ளை நடும் அவசியம் எழாது🙏.

(யாவும் சிரித்து கொண்டே எழுதப்பட்டது)

 

53 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆத்தி... இதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா... 

(லீட்டருக்கு லீட்டர் தானுங்கோ.)

நன்றி நன்னி.

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. லீட்டரை, கொக்கோகோலாவை, மக்டொனால்ஸ்சை அப்படியே பாவிக்க முடிந்தால் ஏன் டிவிட்டரை, வாட்சப்பை, பேஸ்புக்கை மொழி மாற்ற வேண்டும்.

கருவிகளை, வலைத்தளம், இணையம், சமூகவலை போன்றவற்றை மொழிமாற்றுவது ஏற்றுகொள்ள கூடியதே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

😂 எமக்கு வந்தால் இரத்தம், அதுவே பிறர்கு என்றால் தக்காளி சுவைகூட்டி என்பதாக இருக்க கூடாது என்பதை நகைச்சுவையாக சுட்டவே அப்படி எழுதினேன்.

தமிழுடன் ஆங்கிலமும் பேசும் அனைவரும் தம்மை உயர்த்தி காட்டவோ, மமதையிலோ, அல்லது தாம் படித்தவர்கள் என்பதை காட்டவோ அப்படி பேசுவதில்லை.

என்னை பொறுத்தவரை இப்படி யோசிப்பது ஒரு வகை தாழ்வுமனசிக்கல் என்றே நினைக்கிறேன்.

தம்மை மேட்டுகுடி அல்லாதவராக, மொழி பற்றாளர்களாக, ஆசாரவாதிகளாக பாவனை செய்வோரும் கூட இந்த வழக்கத்துக்கு மாறில்லை என்பதுதான் உண்மை.

ஆங்கிலத்தை ஆங்கில எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ எழுதினாலும் அது ஆங்கிலம்தான். 

மொத்தத்தில் மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். சொல்ல வருவதை முடிந்தளவு விளக்கமாக கேட்பவருக்கு சொல்லுவதே அதன் பிரதான இலக்கு.

ஆகவே உக்ரேன் யுத்தத்தை பற்றிய கருத்து பரிமாற்றத்தில் சக கருத்தாளர் ஆங்கிலம் கலந்து எழுதுவதை தூக்கி பிடித்து, அதை இன்னும் ஓரிருவர் வந்து ஒரு நகைச்சுவை ஆக்காமல் கடந்து போனால் - தென்னம்பிள்ளை நடும் அவசியம் எழாது🙏.

(யாவும் சிரித்து கொண்டே எழுதப்பட்டது)

அதெப்படி தாங்கள் எழுதினால் நகைச்சுவை மற்றவன் எழுதினால் நகைச்சுவையாக தெரிவதில்லை? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதெப்படி தாங்கள் எழுதினால் நகைச்சுவை மற்றவன் எழுதினால் நகைச்சுவையாக தெரிவதில்லை? 😁

😆 எனக்கு அப்படித்தன் தெரிகிறது. உங்களுக்கும் அப்படித்தான் என்றால் - நோ பிராப்ளம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, goshan_che said:

நன்றி நன்னி.

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. லீட்டரை, கொக்கோகோலாவை, மக்டொனால்ஸ்சை அப்படியே பாவிக்க முடிந்தால் ஏன் டிவிட்டரை, வாட்சப்பை, பேஸ்புக்கை மொழி மாற்ற வேண்டும்.

கருவிகளை, வலைத்தளம், இணையம், சமூகவலை போன்றவற்றை மொழிமாற்றுவது ஏற்றுகொள்ள கூடியதே.

நான் அப்படி எழுதியதில்லை. நான்,

  • Facebook - வேசுபுக்கு 
  • Twitter - துவிட்டர்
  •  ........

என்று வேற்றுமொழி பெயர்மொழிகளை தமிழ் இலக்கணத்திற்கு ஏற்பவே எழுதுபவன். அவற்றை மொழிபெயர்ப்பது கிடையாது. ஒருவரின்/ஒன்றின் பெயரை நாம் மொழிபெயர்த்தல் கூடாது என்பது எனது கொள்கை. 

 

 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

😂 எமக்கு வந்தால் இரத்தம், அதுவே பிறர்கு என்றால் தக்காளி சுவைகூட்டி என்பதாக இருக்க கூடாது என்பதை நகைச்சுவையாக சுட்டவே அப்படி எழுதினேன்.

தமிழுடன் ஆங்கிலமும் பேசும் அனைவரும் தம்மை உயர்த்தி காட்டவோ, மமதையிலோ, அல்லது தாம் படித்தவர்கள் என்பதை காட்டவோ அப்படி பேசுவதில்லை.

என்னை பொறுத்தவரை இப்படி யோசிப்பது ஒரு வகை தாழ்வுமனசிக்கல் என்றே நினைக்கிறேன்.

தம்மை மேட்டுகுடி அல்லாதவராக, மொழி பற்றாளர்களாக, ஆசாரவாதிகளாக பாவனை செய்வோரும் கூட இந்த வழக்கத்துக்கு மாறில்லை என்பதுதான் உண்மை.

ஆங்கிலத்தை ஆங்கில எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ எழுதினாலும் அது ஆங்கிலம்தான். 

மொத்தத்தில் மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். சொல்ல வருவதை முடிந்தளவு விளக்கமாக கேட்பவருக்கு சொல்லுவதே அதன் பிரதான இலக்கு.

ஆகவே உக்ரேன் யுத்தத்தை பற்றிய கருத்து பரிமாற்றத்தில் சக கருத்தாளர் ஆங்கிலம் கலந்து எழுதுவதை தூக்கி பிடித்து, அதை இன்னும் ஓரிருவர் வந்து ஒரு நகைச்சுவை ஆக்காமல் கடந்து போனால் - தென்னம்பிள்ளை நடும் அவசியம் எழாது🙏.

(யாவும் சிரித்து கொண்டே எழுதப்பட்டது)

 

நன்றி நன்னி.

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. லீட்டரை, கொக்கோகோலாவை, மக்டொனால்ஸ்சை அப்படியே பாவிக்க முடிந்தால் ஏன் டிவிட்டரை, வாட்சப்பை, பேஸ்புக்கை மொழி மாற்ற வேண்டும்.

கருவிகளை, வலைத்தளம், இணையம், சமூகவலை போன்றவற்றை மொழிமாற்றுவது ஏற்றுகொள்ள கூடியதே.

 

பெயர்  மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை. 

ஆ.ஆனால் பூவைப் பூ என்றும் கூறலாம், புஸ்ட்பம் என்றும் கூறலாம்...

அதுக்காக உனது அப்பா என்ன  தமிழ்ப் பண்டிதரா என்றெல்லாம் கேட்கக் கூடாது  சரியா.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நன்னிச் சோழன் said:

நான் அப்படி எழுதியதில்லை. நான்,

  • Facebook - வேசுபுக்கு 
  • Twitter - துவிட்டர்
  •  ........

என்று வேற்றுமொழி பெயர்மொழிகளை தமிழ் இலக்கணத்திற்கு ஏற்பவே எழுதுபவன். அவற்றை மொழிபெயர்ப்பது கிடையாது. ஒருவரின்/ஒன்றின் பெயரை நாம் மொழிபெயர்த்தல் கூடாது என்பது எனது கொள்கை. 

 

 

 

 

நன்றி. நான் பொதுவாகவே சொன்னேன்.  நீங்கள் எழுதியதாக பொருள் கொள்ள வேண்டாம்🙏

5 minutes ago, Kapithan said:

பெயர்  மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை. 

ஆ.ஆனால் பூவைப் பூ என்றும் கூறலாம், புஸ்ட்பம் என்றும் கூறலாம்...

அதுக்காக உனது அப்பா என்ன  தமிழ்ப் பண்டிதரா என்றெல்லாம் கேட்கக் கூடாது  சரியா.....🤣

அப்ப நீங்க பண்டிதரா எண்டு கேட்ப்போம்🤣.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நன்றி. நான் பொதுவாகவே சொன்னேன்.  நீங்கள் எழுதியதாக பொருள் கொள்ள வேண்டாம்🙏

அப்ப நீங்க பண்டிதரா எண்டு கேட்ப்போம்🤣.

பண்டி....த...ர் என்று திட்டாதவரைக்கும் ஓகே..🤣

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.