Jump to content

இலங்கைக்கு... சீன கப்பல் : பாதுகாப்பை தீவிரப்படுத்தியது தமிழகம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

இலங்கைக்கு... சீன கப்பல் : பாதுகாப்பை தீவிரப்படுத்தியது தமிழகம்.

சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கரையோரத்தில் உள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி பல பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு முக்கிய நிறுவனங்களிலும் போதுமான ஆட்களை அனுப்பவும், கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளில் சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்தக் கப்பல் கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே கடலோர கண்காணிப்பை தமிழகம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இலங்கை மக்கள் பலர் தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்துவருகின்ற நிலையில் கடலோர பாதுகாப்பை தமிழக அரசாங்கம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1293383

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.