Jump to content

சர்வகட்சி அரசாங்கம் தீர்வைத் தருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வகட்சி அரசாங்கம் தீர்வைத் தருமா?

எம்.எஸ்.எம். ஐயூப்

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைத் தாம் உருவாக்கப் போவதாகவும், அதில் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தக் கடிதமும் சர்வகட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவும், இப்போது அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் அரசியல்வாதிகளுக்கு இடையேயும் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 

ரணில் விக்கிரமசிங்க, சிங்கள மக்களின் துரோகி என்றும் நாட்டை புலிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்க முற்பட்டவர் என்றும் ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடி என்றும் கூறி வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் அரசாங்கத்தில் சேர முயல்வதாகத் தெரிகிறது. 

அதேவேளை, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்காமல், அக்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியதன் மூலம், அக்கட்சிகளுக்குள் பிரச்சினைகளை உருவாக்க முயல்வதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. 

அது நியாயமான குற்றச்சாட்டாகும். ஏனெனில், தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவ்வாறான கடிதங்கள் அனுப்புவதன் மூலம், அந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அமைச்சர் பதவிகளுக்கான ஆசை ஊட்டப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் தத்தமது கட்சித் தலைமையை புறக்கணித்து, அரசாங்கத்தில் இணைய முற்படலாம். அது அக்கட்சிகளுக்குள் பல்வேறு பிரச்சினைகள் உருவாகக் காரணமாகலாம். 

உண்மையிலேயே சர்வகட்சி அரசாங்கம் என்பது, சகல கட்சிகளினது தலைவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் கிடைக்கும் அரசாங்கம் என்றதொரு  கருத்தையே கொடுக்கிறது. எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படும் செய்தியைக் கேட்ட உடனேயே, அக்கட்சியின் தலைவர்களும் அமைச்சர் பதவிகளை ஏற்கப் போகிறார்கள் என்றதோர் எண்ணமே மனதில் உருவாகிறது. நடைமுறையில் ஓர்  அரசாங்கம், சர்வகட்சி அரசாங்கம் என்று கூறுவதற்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை.

இம்முறை, சர்வகட்சி அரசாங்கம் என்ற கருத்து நாடு எதிர்நோக்கி இருக்கும் சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியாக எடுத்துக் காட்டப்பட்ட போதிலும், அது, அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திலேயே முதன்முதலில் முன்வைக்கப்பட்டது. இன்றும் பல சிறிய கட்சிகளின் நோக்கம் அதுவேயாகும்.

கடந்த மார்ச் மாதம் இரண்டாம் திகதி தலவத்துகொடையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, அமைச்சர்களான விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் அரசாங்கத்தை விமர்சித்ததை அடுத்து, மூன்றாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவ்விருவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். 

அந்நாள்களில், பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, நாளுக்கு நாள் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வந்தன. அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது தத்தளித்தது. மார்ச் மாதம் 31 ஆம் திகதி, மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் சொந்த இல்லத்தின் முன்னால், பாரியதோர் ஆரப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வாறான பின்னணியில், விமலும் கம்மன்பிலவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேலும் எட்டு சிறிய கட்சிகளின் தலைவர்களும், ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதியுடன் நாட்டு நிலைமையைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, நாட்டில் அவசர பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, விரைவில் பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்தை, அச்சிறிய கட்சிகள் முன்வைத்தன.

இவ்வாறுதான், சர்வகடசி அரசாங்கம் என்ற எண்ணக்கரு தோன்றியது. சகல கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்ற கேள்வி இங்கே எழுகிறது. சில அரசியல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவிகள் இல்லாமல் வாழவே முடியாது. அவ்வாறான சில தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இந்த விடயத்திலும் தாம் இழந்த அமைச்சர் பதவிகளை மீண்டும் அடைவதே விமல், கம்மன்பில ஆகியோரின் நோக்கமாகியது. 

அப்போது, கோட்டாபயவின் அரசாங்கம், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு இலக்காகியது. அந்த நிலையில், சகல கட்சிகளும் அரசாங்கத்தில் இணைந்தால், எவரும் தமது அரசாங்கத்தை விமர்சிக்க மாட்டார்கள் என்று நினைத்தோ என்னவோ, கோட்டாவும் அந்த ஆலோசனையை ஏற்று, ஏப்ரல் மூன்றாம் திகதி தமது சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தவிர, ஏனைய சகல அமைச்சர்களையும் இராஜினாமாச் செய்யுமாறு பணித்தார். பின்னர், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை நிறுவ முன்வருமாறு, நாடாளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொண்டார். 

ஆனால், மூன்றாம் திகதி சமூக வலைத்தளங்கள் மூலம் அழைக்கப்பட்டு, கொழும்பில் பாரியதோர் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனவே, சர்வகட்சி அரசாங்கம் என்ற கருத்தை முன்வைத்த சிறு கட்சிகளும் கூட,  அரசாங்கத்தில் இணையத் தயங்கின. எனினும், இந்தக் கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த சகல கட்சிகளும், நாடாளுமன்றத்தில் இதனை ஏற்றுக் கொண்டன. “நாம் இவ்வாறான அரசாங்கத்தில் சேர்வதில்லை; ஆனால், இதற்கு ஒத்துழைப்போம்” என மக்கள் விடுதலை முன்னணி கூறியது.

நாட்டில், நிலவும் பெரும் சமூகப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே, சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சகல கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், தீர்வு எவ்வாறு வரும் என்ற கேள்விக்கு எந்தவொரு கட்சியும் பதிலளிப்பதில்லை. 

தீர்வு என்பது, உடல் உழைப்பால் காணக்கூடியதல்ல; அறிவால் காணவேண்டியதாகும். நாடாளுமன்றத்தில் சகல கட்சிகளும் ஆளும் கட்சியாக ஒன்று சேர்ந்து கலந்துரையாடினால், தீர்வைக் காணமுடியும் என்றால் அதே கட்சிகள், நாடாளுமன்ற கூட்டங்களின் போது கலந்துரையாடி ஏன் தீர்வு காண முடியாது? நாடாளுமன்றத்தில் முடியாது; ஆளும் கட்சிக் கூட்டத்தில் தான் முடியும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு? 

சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரில், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலமைப்பின் பிரகாரம் அது தேசிய அரசாங்கமாகவே அழைக்கப்படும். அரசியலமைப்பின் படி சாதாரண நிலைமையின் கீழ் அரசாங்கத்தில் 30 அமைச்சர்கள் தான் இருக்க முடியும். ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்றில் அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. எனவே, சர்வகட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஒன்றிணைய, குறிப்பாக சிறுகட்சிகள் விரும்புகின்றன. 

நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் என்றால், எந்தவொரு கட்சியும் அமைச்சுப் பதவிகளைப் பற்றி அக்கறை செலுத்தத் தேவையில்லை. அமைச்சர் பதவிகளைப் பெறாமலே, அரசாங்கத்தில் இணைய சிறு கட்சிகள் முன்வர வேண்டும். அல்லது, அக்கட்சிகளின் திறமையானவர்களுடன் அந்த 30 அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள பெரிய கட்சிகள் தயாராக வேண்டும். அதற்கு சிறிய, பெரிய கட்சிகள் தயாரில்லை என்றால், சர்வகட்சி அரசாங்கம் என்பது அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்கும் அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியேயன்றி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சி அல்ல. 

ஆளும் கட்சி, ஏனைய கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கினால் தான், அக்கட்சிகள் ஆளும் கட்சியோடு இணையும் என்றால், அது இலஞ்சமேயன்றி வேறொன்றுமல்ல. எனினும், தேசிய அரசாங்கத்தை நிறுவ அவ்வாறு இலஞ்சம் வழங்குவதையும் பெறுவதையும் அரசியலமைப்பு அங்கிகரிக்கிறது. அதனால் தான், தேசிய அரசாங்கம் என்றால் அமைச்சர் பதவிகளை 30 மேலாக அதிகரிக்க இடமளிக்கிறது. 

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில்  கட்சிகள் ஒன்றிணைவதாக இருந்தால் அவ்வாறு இணைவதற்கான கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாடொன்று இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவ்வாறான கூட்டுகள் வெறும் சந்தர்ப்பவாத கூட்டுகளேயாகும். அங்கே, பிரதான கட்சி விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவும் ஏனைய கட்சிகள் அமைச்சர் பதவிகளுக்காகவும் ஏனைய உயர் மட்ட பதவிகளுக்காகவுமே ஒன்றிணைகின்றன.

தற்போதைய நிலையில், நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாக இருந்தால், முதலில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களும் நிபுணர்களும் கலந்துரையாடி, தீர்வைத் திட்டமிட வேண்டும். தீர்வுத் திட்டம் இல்லாததால்த்தான், இலங்கைக்கு நிதி உதவி, தற்போதைக்கு வழங்கப் போவதில்லை என்று உலக வங்கியும் கூறியுள்ளது. 

கட்சிகள் அவ்வாறானதொரு திட்டத்தை வகுத்துக் கொண்டால், பின்னர் அத்திட்டத்தை நிறைவேற்ற அரசியல் ரீதியாக ஒன்றிணையலாம். தீர்வு தேடும் முயற்சி தோல்வியடைந்தால், சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். முதலில், சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவி, அமைச்சர் பதவிகளை அதிகரித்து தம்மிடையே பகிர்ந்து கொண்ட பின்னர், தீர்வு தேடும் முயற்சி தோல்வியடைந்தாலும் பட்டம், பதவிகள் காரணமாக இக்கூட்டுகள் கலைவதில்லை. அதிகரிக்கும் பட்டம், பதவிகளுக்காக மக்களின் வரிப் பணமே செலவாகும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வகட்சி-அரசாங்கம்-தீர்வைத்-தருமா/91-301640

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.