Jump to content

ஜோசப் ஸ்டாலின் கைது - ஐநா கவலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் ஸ்டாலின் கைது - ஐநா கவலை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார். 

மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற  கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன்.

mary_low.jpg

ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின்  செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் - தண்டிக்ககூடாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

 

https://www.virakesari.lk/article/132844

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

 இதைவிட இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்!

3 hours ago, கிருபன் said:

ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார். 

இவைக்கு என்ன நடந்தாலும் உடனை கவலை அறிக்கை. பிறகு கண்டன அறிக்கை. பிறகு மனித உரிமை மீறல் அறிக்கை. மரணவிசாரணை அறிக்கை. கடைசியாக  மரணத்தை விசாரிக்க 'விசாரணைக் குழு' அமைத்ததையிட்டு  ஐநாவின் விசேட அறிக்கையாளர் அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்து அறிக்கை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்க மறியல்!: 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட அவர் நேற்றைய தினம் மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது இவரை விளக்க மறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்று பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/ஜோசப்-ஸ்டாலினுக்கு-விளக்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றங்கள்… கொள்ளை அடித்தவனை பாராளுமன்றத்தில் வைத்திருந்து கொண்டு,
நீதி கேட்டு… போராடியவனை கைது பண்ணுகிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

On 4/8/2022 at 03:08, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

அது எங்கட கதிர்காமர் ஐயா வெளியுறவுத்துறை அமைச்சரா இருக்கேக்க விட்ட எச்சரிக்கை எல்லோ!

Link to comment
Share on other sites

Just now, ஏராளன் said:

அது எங்கட கதிர்காமர் ஐயா வெளியுறவுத்துறை அமைச்சரா இருக்கேக்க விட்ட எச்சரிக்கை எல்லோ!

ஓம். யார் சொன்னாலும் ஐ நாவுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

நம்ம கதிர்காமர் திருவாய் மலர்ந்தருளியது அது. ஐ. நா. நுளம்புக்கு மருந்தடிப்பதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் என்றால் பாருங்கோவேன் நம்மட ஆளின்ர திமிரை!

On 4/8/2022 at 17:08, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

மற்றவர்களுக்காக கவலைப்படுவதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சபை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

 

28 minutes ago, nunavilan said:

ஓம். யார் சொன்னாலும் ஐ நாவுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

 

19 minutes ago, satan said:

நம்ம கதிர்காமர் திருவாய் மலர்ந்தருளியது அது. ஐ. நா. நுளம்புக்கு மருந்தடிப்பதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் என்றால் பாருங்கோவேன் நம்மட ஆளின்ர திமிரை!

மற்றவர்களுக்காக கவலைப்படுவதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சபை. 

இதை விட... கேவலமாக வேறு நாட்டுக்காரன், ஐ.நா. வை சொல்லியிருக்க மாட்டான். 😂
அப்படியிருந்தும், சுரணை வரவில்லையே... 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

இப்ப அதுக்கும் லாயக்கில்லை. கொரோனா பின்னியெடுத்துட்டுது :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

 

அதுக்கு கூட  இப்ப நல்லா மருந்து  அடிப்பவர்கள்  வந்து  விட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

(எம்.நியூட்டன்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

IMG-20220805-WA0007.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

IMG-20220805-WA0008.jpg

மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதைக் வன்மையாக கண்டிக்கிறோம், ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய், ஸ்ரீலங்கா அரசின் பாசிசவாதத்தை எதிர்த்து நாம் தொடர்ந்தும் போராடுவோம் போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

IMG-20220805-WA0003.jpg

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

IMG-20220805-WA0004.jpg

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 4ம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வலுத்த ஆசிரியர்களின் திடீர் போராட்டம்

  • யு.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஜோசப் ஸ்டாலின்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 28ஆம் தேதி நீதிமன்ற உத்தரவை மீறி, ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், நேற்று முன்தினம் ஜோசப் ஸ்டாலினை பொலிஸார் கைது செய்தனர்.

அரசாங்கத்துக்கு எதிரான 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தின் 50ஆவது தினத்தையொட்டி, கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜோசப் ஸ்டாலின் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

பல முனைகளில் எதிர்ப்பு

இந்த நிலையில் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் காப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

 

ஜோசப் ஸ்டாலின்

'ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமை பாதுகாவலர்களின் பணி, முன்னெப்போதையும் விடவும் சமீப வாரங்களில் முக்கியமானது' என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மேரி லோலர்; 'மனித உரிமைப் பாதுகாவலர்களின் இத்தகைய செயல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமேயொழிய, தண்டிக்கப்படக் கூடாது' எனவும் தெரிவித்துள்ளார்.

ஜோசப் ஸ்டாலின் கைது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், "அரசாங்கத்துக்கு எதிரான போட்டங்களை வழிநடத்திய தலைவர்களை தற்போது அரசாங்கம் வேட்டையாடுகிறது," என்றார்.

"கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் - முன்னிலையிலிருந்து செயற்படுகின்றதொரு தொழிற்சங்க வீரர். அவரைக் கைது செய்தமையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான கைதுகள் மூலம், தற்போதைய பொருளாதார பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது" எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. ராதாகிருஷ்ணன், இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

"ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்" என தெரிவித்தார்.

கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

 

ஜோசப் ஸ்டாலின்

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிக்குமாறு கோரியும், நாட்டின் பல பாகங்களிலும் நேற்றைய தினம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறன ஆர்ப்பாடங்கள் இடம்பெற்றன.

கொழும்பு - கோட்டே ரயில் நிலையத்துக்கு முன்பாகவும் தொழிற்சங்கங்கள் இணைந்து, ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டன.

ஜோசப் ஸ்டான் கைது செய்யப்பட்டமை அரச பயங்கரவாதச் செயற்பாடு எனத் தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தமது செயலாளரை விடுவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு எதிராக விமர்சனம்

இது இவ்வாறிருக்க, ஜோசப் ஸ்டாரின் கைது விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கோரமான இரட்டை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார் என, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்துள்ளார்.

"கடந்த மே மாதம் 28ஆம் தேதி 'அரகலய' (போராட்டம்) 50ஆம் நாள் நிறைவையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை காரணம் காட்டி, இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சமன் ரத்னபிரிய என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியொன்றை வழங்கியுள்ளார்," என அஸீஸ் நிஸாருத்தீன் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜோசப் ஸ்டாலின்

"சமன் ரத்னப்பிரிய என்பவர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் சுகாதார தொழிற் சங்கத் தலைவாராக உள்ளார்.

இவர் சில தினங்களுக்கு முன்னா் ரணில் விக்ரமசிங்கவினால், 'ஜனாதிபதி தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம்' எனும் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் ஸ்டாலினை கைது செய்துள்ள ரணிலின் காவல்துறை, ரத்ன பிரியவையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு உயர் பதவி ஒன்றை ரணில் வழங்கினார்.

இது தவிர, கொரோனா காலத்தில் 2021ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் - அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தில் கைது செய்யப்பட்ட போது, ரணில் கொதித்தெழுந்தார். ஜோசப் ஸ்டானின் கைதுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினார்.

'ஜோசப் போன்றவா்களை கைது செய்வதால் இந்நாட்டுக்கு சா்வதேசத்தின் உதவிகள் கிடைக்காமல் போகும், ஜிஎஸ்பி பிளஸ் சலுகையும் இல்லாமல் போகும் என்று நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு- கோட்டா அரசாங்கத்தை கடுமையாக ரணில் விமர்சித்தார்.

ஆனால் அவரே தற்போது பிரபல தொழிற் சங்கவாதியான ஜோசப் ஸ்டாலினை கைது செய்து - ஜனநாயகத்துக்கு எதிராக தனது மற்றுமொரு நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளார்" என, அஸீர் நிஸாருத்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை போராட்டம்

'அரகலய'வின் (போராட்டத்தின்) புண்ணியத்தால் - தந்திரமாக ஆட்சியைப் பிடித்துக் கொண்ட ரணில், பதவிப் பித்து தலைக்கேறி செயற்பட்டு வருகிறார் எனக் குறிப்பிட்டுள்ள நிஸாருத்தீன்; "நிறைவேற்று அதிகாரம் ரணிலுக்கு கிடைத்திருப்பது குரங்கின் கைக்கு கத்தி ஒன்று கிடைத்ததற்கு ஒப்பானதாகும்" எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஜோசப் ஸ்டாலினை கைது செய்திருப்பதன் மூலம், ரணிலின் இரட்டை கோர முகமும், அவரின் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் நிஸாருத்தின் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம்

இலங்கை ஆசிரியர் சங்கம் 1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக ஜயந்த பெனாண்டோ என்பவரும், பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலினும் பணியாற்றி வருகின்றனர்.

இலங்கை ஆசியர் சங்கமானது ஆசிரியர் நலன்களுக்காக உழைப்பதோடு நின்றுவிடாமல், இலங்கையிலுள்ள அரச ஊழியர்களின் தொழிற் சங்கங்களுடன் இணைந்து, அவர்களின் நலன்களுக்காகவும் பணியாற்றி வருவதாக, அச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ. அபாஜுல்பான் கூறுகிறார்.

"இலங்கை மக்களின் நலன்களுக்காக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கை ஆசிரியர் சங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால், எமது சங்கம் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதது" எனவும் அபாஜுல்பான் குறிப்பிட்டார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62440444

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்" என தெரிவித்தார்.

அது வேற வாய். இது நாறல் வாய்..
சிறையில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிப்பேன் என்பதும் இதே போல் ஒரு சுத்துமாத்து தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

அது வேற வாய். இது நாறல் வாய்..
சிறையில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிப்பேன் என்பதும் இதே போல் ஒரு சுத்துமாத்து தான்.

இவர் கடந்த இரண்டு மாதத்தில் கூறிய அத்தனை கருத்துக்களும்…
ஜனாதிபதி ஆகியவுடன், நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இவரைப் பற்றி நன்கு தெரிந்த, “முதுகு எலும்பு இல்லாத, கூட்டமைப்பும்”…
மீண்டும் மீண்டும்…. இவர் விரித்த வலையில் போய் விழுகுது.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சுரணை வரவில்லையே

அவர்களிடம் அது இருந்தாற்தானே வருவதற்கு?

3 hours ago, nunavilan said:

விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்" என தெரிவித்தார்.

பதவி பெறும்வரை பணிவு, பெருந்தன்மை. அது வந்துவிட்டால் அதை தக்க வைப்பதற்கு அதிகாரத்தை பயன்படுத்துவார்கள். ஸ்ராலினை கைது செய்வதன் மூலம் ஆசிரியர் மாணவர்களை போராட்டத்திலிருந்து விலகியிருக்கச் செய்தல், ஆனால் இவர்களின் செயற்பாடு எல்லோரையும் சினமடையச் செய்து நிலைமையை மோசமாக்கும் என்பதை உணர பதவிஆசை விடாது.

உண்மையான குற்றவாளிகளை கைது, செய்து நீதியை நிலை நாட்டியிருந்தால் நாட்டுக்கு இந்தநிலை வந்திராது. நீதியின் குரலை நசுக்குகின்ற செயற்பாடுகளையே கையறுந்த நீதிமன்றங்கள் செய்கின்றன. அதை விமர்சிப்பதை அதுவும் தண்டிக்கிறது, தன்னை திருத்திக்கொள்ள மறுக்கிறது. எங்கே முறையிடுவது? அங்கும் ஊழல், எங்கும் ஊழல். குற்றவாளிகளை காப்பாற்ற, அப்பாவிகளை தண்டிக்கிறது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2022 at 03:08, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

நான் அறிய 45 வருசமா கவலைப்பட்டு அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்....சந்தோசமான் அறிக்கை இது வரை விடவில்லை 

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.