Jump to content

ஜோசப் ஸ்டாலின் கைது - ஐநா கவலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் ஸ்டாலின் கைது - ஐநா கவலை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார். 

மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற  கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன்.

mary_low.jpg

ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின்  செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் - தண்டிக்ககூடாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

 

https://www.virakesari.lk/article/132844

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

 இதைவிட இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்!

3 hours ago, கிருபன் said:

ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார். 

இவைக்கு என்ன நடந்தாலும் உடனை கவலை அறிக்கை. பிறகு கண்டன அறிக்கை. பிறகு மனித உரிமை மீறல் அறிக்கை. மரணவிசாரணை அறிக்கை. கடைசியாக  மரணத்தை விசாரிக்க 'விசாரணைக் குழு' அமைத்ததையிட்டு  ஐநாவின் விசேட அறிக்கையாளர் அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்து அறிக்கை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்க மறியல்!: 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட அவர் நேற்றைய தினம் மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது இவரை விளக்க மறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்று பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/ஜோசப்-ஸ்டாலினுக்கு-விளக்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றங்கள்… கொள்ளை அடித்தவனை பாராளுமன்றத்தில் வைத்திருந்து கொண்டு,
நீதி கேட்டு… போராடியவனை கைது பண்ணுகிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

On 4/8/2022 at 03:08, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

அது எங்கட கதிர்காமர் ஐயா வெளியுறவுத்துறை அமைச்சரா இருக்கேக்க விட்ட எச்சரிக்கை எல்லோ!

Link to comment
Share on other sites

Just now, ஏராளன் said:

அது எங்கட கதிர்காமர் ஐயா வெளியுறவுத்துறை அமைச்சரா இருக்கேக்க விட்ட எச்சரிக்கை எல்லோ!

ஓம். யார் சொன்னாலும் ஐ நாவுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

நம்ம கதிர்காமர் திருவாய் மலர்ந்தருளியது அது. ஐ. நா. நுளம்புக்கு மருந்தடிப்பதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் என்றால் பாருங்கோவேன் நம்மட ஆளின்ர திமிரை!

On 4/8/2022 at 17:08, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

மற்றவர்களுக்காக கவலைப்படுவதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சபை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

 

28 minutes ago, nunavilan said:

ஓம். யார் சொன்னாலும் ஐ நாவுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

 

19 minutes ago, satan said:

நம்ம கதிர்காமர் திருவாய் மலர்ந்தருளியது அது. ஐ. நா. நுளம்புக்கு மருந்தடிப்பதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் என்றால் பாருங்கோவேன் நம்மட ஆளின்ர திமிரை!

மற்றவர்களுக்காக கவலைப்படுவதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சபை. 

இதை விட... கேவலமாக வேறு நாட்டுக்காரன், ஐ.நா. வை சொல்லியிருக்க மாட்டான். 😂
அப்படியிருந்தும், சுரணை வரவில்லையே... 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

இப்ப அதுக்கும் லாயக்கில்லை. கொரோனா பின்னியெடுத்துட்டுது :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

 

அதுக்கு கூட  இப்ப நல்லா மருந்து  அடிப்பவர்கள்  வந்து  விட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

(எம்.நியூட்டன்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

IMG-20220805-WA0007.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

IMG-20220805-WA0008.jpg

மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதைக் வன்மையாக கண்டிக்கிறோம், ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய், ஸ்ரீலங்கா அரசின் பாசிசவாதத்தை எதிர்த்து நாம் தொடர்ந்தும் போராடுவோம் போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

IMG-20220805-WA0003.jpg

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

IMG-20220805-WA0004.jpg

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 4ம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வலுத்த ஆசிரியர்களின் திடீர் போராட்டம்

  • யு.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஜோசப் ஸ்டாலின்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 28ஆம் தேதி நீதிமன்ற உத்தரவை மீறி, ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், நேற்று முன்தினம் ஜோசப் ஸ்டாலினை பொலிஸார் கைது செய்தனர்.

அரசாங்கத்துக்கு எதிரான 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தின் 50ஆவது தினத்தையொட்டி, கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜோசப் ஸ்டாலின் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

பல முனைகளில் எதிர்ப்பு

இந்த நிலையில் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் காப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

 

ஜோசப் ஸ்டாலின்

'ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமை பாதுகாவலர்களின் பணி, முன்னெப்போதையும் விடவும் சமீப வாரங்களில் முக்கியமானது' என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மேரி லோலர்; 'மனித உரிமைப் பாதுகாவலர்களின் இத்தகைய செயல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமேயொழிய, தண்டிக்கப்படக் கூடாது' எனவும் தெரிவித்துள்ளார்.

ஜோசப் ஸ்டாலின் கைது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், "அரசாங்கத்துக்கு எதிரான போட்டங்களை வழிநடத்திய தலைவர்களை தற்போது அரசாங்கம் வேட்டையாடுகிறது," என்றார்.

"கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் - முன்னிலையிலிருந்து செயற்படுகின்றதொரு தொழிற்சங்க வீரர். அவரைக் கைது செய்தமையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான கைதுகள் மூலம், தற்போதைய பொருளாதார பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது" எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. ராதாகிருஷ்ணன், இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

"ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்" என தெரிவித்தார்.

கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

 

ஜோசப் ஸ்டாலின்

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிக்குமாறு கோரியும், நாட்டின் பல பாகங்களிலும் நேற்றைய தினம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறன ஆர்ப்பாடங்கள் இடம்பெற்றன.

கொழும்பு - கோட்டே ரயில் நிலையத்துக்கு முன்பாகவும் தொழிற்சங்கங்கள் இணைந்து, ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டன.

ஜோசப் ஸ்டான் கைது செய்யப்பட்டமை அரச பயங்கரவாதச் செயற்பாடு எனத் தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தமது செயலாளரை விடுவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு எதிராக விமர்சனம்

இது இவ்வாறிருக்க, ஜோசப் ஸ்டாரின் கைது விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கோரமான இரட்டை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார் என, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்துள்ளார்.

"கடந்த மே மாதம் 28ஆம் தேதி 'அரகலய' (போராட்டம்) 50ஆம் நாள் நிறைவையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை காரணம் காட்டி, இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சமன் ரத்னபிரிய என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியொன்றை வழங்கியுள்ளார்," என அஸீஸ் நிஸாருத்தீன் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜோசப் ஸ்டாலின்

"சமன் ரத்னப்பிரிய என்பவர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் சுகாதார தொழிற் சங்கத் தலைவாராக உள்ளார்.

இவர் சில தினங்களுக்கு முன்னா் ரணில் விக்ரமசிங்கவினால், 'ஜனாதிபதி தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம்' எனும் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் ஸ்டாலினை கைது செய்துள்ள ரணிலின் காவல்துறை, ரத்ன பிரியவையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு உயர் பதவி ஒன்றை ரணில் வழங்கினார்.

இது தவிர, கொரோனா காலத்தில் 2021ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் - அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தில் கைது செய்யப்பட்ட போது, ரணில் கொதித்தெழுந்தார். ஜோசப் ஸ்டானின் கைதுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினார்.

'ஜோசப் போன்றவா்களை கைது செய்வதால் இந்நாட்டுக்கு சா்வதேசத்தின் உதவிகள் கிடைக்காமல் போகும், ஜிஎஸ்பி பிளஸ் சலுகையும் இல்லாமல் போகும் என்று நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு- கோட்டா அரசாங்கத்தை கடுமையாக ரணில் விமர்சித்தார்.

ஆனால் அவரே தற்போது பிரபல தொழிற் சங்கவாதியான ஜோசப் ஸ்டாலினை கைது செய்து - ஜனநாயகத்துக்கு எதிராக தனது மற்றுமொரு நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளார்" என, அஸீர் நிஸாருத்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை போராட்டம்

'அரகலய'வின் (போராட்டத்தின்) புண்ணியத்தால் - தந்திரமாக ஆட்சியைப் பிடித்துக் கொண்ட ரணில், பதவிப் பித்து தலைக்கேறி செயற்பட்டு வருகிறார் எனக் குறிப்பிட்டுள்ள நிஸாருத்தீன்; "நிறைவேற்று அதிகாரம் ரணிலுக்கு கிடைத்திருப்பது குரங்கின் கைக்கு கத்தி ஒன்று கிடைத்ததற்கு ஒப்பானதாகும்" எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஜோசப் ஸ்டாலினை கைது செய்திருப்பதன் மூலம், ரணிலின் இரட்டை கோர முகமும், அவரின் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் நிஸாருத்தின் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம்

இலங்கை ஆசிரியர் சங்கம் 1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக ஜயந்த பெனாண்டோ என்பவரும், பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலினும் பணியாற்றி வருகின்றனர்.

இலங்கை ஆசியர் சங்கமானது ஆசிரியர் நலன்களுக்காக உழைப்பதோடு நின்றுவிடாமல், இலங்கையிலுள்ள அரச ஊழியர்களின் தொழிற் சங்கங்களுடன் இணைந்து, அவர்களின் நலன்களுக்காகவும் பணியாற்றி வருவதாக, அச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ. அபாஜுல்பான் கூறுகிறார்.

"இலங்கை மக்களின் நலன்களுக்காக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கை ஆசிரியர் சங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால், எமது சங்கம் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதது" எனவும் அபாஜுல்பான் குறிப்பிட்டார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62440444

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்" என தெரிவித்தார்.

அது வேற வாய். இது நாறல் வாய்..
சிறையில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிப்பேன் என்பதும் இதே போல் ஒரு சுத்துமாத்து தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

அது வேற வாய். இது நாறல் வாய்..
சிறையில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிப்பேன் என்பதும் இதே போல் ஒரு சுத்துமாத்து தான்.

இவர் கடந்த இரண்டு மாதத்தில் கூறிய அத்தனை கருத்துக்களும்…
ஜனாதிபதி ஆகியவுடன், நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இவரைப் பற்றி நன்கு தெரிந்த, “முதுகு எலும்பு இல்லாத, கூட்டமைப்பும்”…
மீண்டும் மீண்டும்…. இவர் விரித்த வலையில் போய் விழுகுது.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சுரணை வரவில்லையே

அவர்களிடம் அது இருந்தாற்தானே வருவதற்கு?

3 hours ago, nunavilan said:

விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்" என தெரிவித்தார்.

பதவி பெறும்வரை பணிவு, பெருந்தன்மை. அது வந்துவிட்டால் அதை தக்க வைப்பதற்கு அதிகாரத்தை பயன்படுத்துவார்கள். ஸ்ராலினை கைது செய்வதன் மூலம் ஆசிரியர் மாணவர்களை போராட்டத்திலிருந்து விலகியிருக்கச் செய்தல், ஆனால் இவர்களின் செயற்பாடு எல்லோரையும் சினமடையச் செய்து நிலைமையை மோசமாக்கும் என்பதை உணர பதவிஆசை விடாது.

உண்மையான குற்றவாளிகளை கைது, செய்து நீதியை நிலை நாட்டியிருந்தால் நாட்டுக்கு இந்தநிலை வந்திராது. நீதியின் குரலை நசுக்குகின்ற செயற்பாடுகளையே கையறுந்த நீதிமன்றங்கள் செய்கின்றன. அதை விமர்சிப்பதை அதுவும் தண்டிக்கிறது, தன்னை திருத்திக்கொள்ள மறுக்கிறது. எங்கே முறையிடுவது? அங்கும் ஊழல், எங்கும் ஊழல். குற்றவாளிகளை காப்பாற்ற, அப்பாவிகளை தண்டிக்கிறது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2022 at 03:08, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

நான் அறிய 45 வருசமா கவலைப்பட்டு அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்....சந்தோசமான் அறிக்கை இது வரை விடவில்லை 

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.