Jump to content

சீன கப்பலுக்கு சிவப்பு கொடி எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image_5bb0c8da86.jpg

இந்தியாவின் பாதுகாப்பானது  இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து  பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக  தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன  ஆய்வு கப்பல் வருவது தொடர்பில் தற்போது  பல்வேறு சர்ச்சைகள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளன. குறிப்பாக சீன கப்பலின் இலங்கை விஜயத்தை இந்தியா வன்மையாக எதிர்த்து வருவதுடன், அதனை நிறுத்த இராஜதந்திர ரீதியில் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

எனினும் ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளதுடன், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த சர்ச்சையை நட்பு ரீதியில் கையாளலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவொன்றை இட்டுள்ளது. அதில் இந்தியப் பெருங்கடல் மற்றொரு மோதல்  புள்ளியாக மாறுகிறதா, அங்கு இந்தியாவின் ஆதிக்கத்தை அதன் சொந்த கொல்லைப்புறமே   சவால் விடுகிறதா? என்ற பதிவையும் இட்டுள்ளது.

 

Tamilmirror Online || சீன கப்பலுக்கு சிவப்பு கொடி எச்சரிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளதுடன், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த சர்ச்சையை நட்பு ரீதியில் கையாளலாம் என தெரிவித்திருந்தார்

 

நம்பிட்டம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளதுடன், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த சர்ச்சையை நட்பு ரீதியில் கையாளலாம் என தெரிவித்திருந்தார்

 

நம்பிட்டம்???

சிங்களத்திடமும், சீனாக்காரனிடமும் ஆப்பு வாங்கும் இந்திய உளவுத்துறை.... சிங்களவனுக்கு செய்யும் பெரும் சேவையை பாருங்கோ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தன்னுடைய துறைமுகத்துக்கு கப்பலை கொண்டுவருது. அதுக்கு மூண்டாம் ஆக்களுக்கு என்ன பிரச்சினை?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாலி said:

சீனா தன்னுடைய துறைமுகத்துக்கு கப்பலை கொண்டுவருது. அதுக்கு மூண்டாம் ஆக்களுக்கு என்ன பிரச்சினை?

அமெரிக்கன் ஸ்பீக்கர், சும்மா, ஒரு டீயை குடிச்சு போவம் எண்டு தானே தைவான் போனா. அதில சீனாவுக்கு என்ன பிரச்சனையோ, அதே தான் இந்தியாவுக்கும் இருந்திருக்க வேணும், உளவுக் கப்பல் வரேக்க...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் இரண்டொரு நாளுக்கு முன்னர் ரணிலுக்கு எதிராக முழங்கினார். அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டது.

அவரே கூத்தமைப்பின் ஏனைய உறுப்பினர்களுக்காக, மொழிபெயர்ப்பு வழக்கமாக செய்பவர்.

இவரது முக்கியத்துவத்தை குறைக்க, நரியார், பாராளுமன்ற,மொழி பெயர்ப்பாளர்களை பயன்படுத்தி உள்ளார்.

ஆக, சுமந்திரன்,தனது கருத்துக்களை மட்டுமே சொல்ல முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

சீனா தன்னுடைய துறைமுகத்துக்கு கப்பலை கொண்டுவருது. அதுக்கு மூண்டாம் ஆக்களுக்கு என்ன பிரச்சினை?

அதுதானே! மூடிட்டு படுக்க வேண்டியதுதானே! கோவணம் கடயே வழியில்லையாம் இதற்குள் சிவப்புக் கொடி காட்டப் போகினமாம்.. முதலில் இந்திய வெளியுறவுத்துறையை முற்றாகக் கலைத்து விட்டு தமழிர்கள் தலைமயில் இந்திய வெளியுறவுக் கொள்கையை அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் போகா விட்டால், இதை கேளுங்கள். சிரிப்பு  நிச்சயம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டியது எந்த சிவப்புக் கொடி?

நிச்சயமா இதாக இருக்காது !!  Flag of China

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை உள்ளபோது ஒரு கப்பலுக்கு அடிக்கும் அளவுக்கு எரிபொருள் இலங்கைக்கு எங்கிருந்து கிடைத்தது.

பாவத்துக்கு இரங்கி இந்தியா கொடுக்கும் எண்ணையை சீனனுக்கு விற்கிறதா இலங்கை அரசு.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இது கானாது.இன்னும் நிறைய எதிர் பாக்கிறம்.ரெயிலுறுக்கே இப்படி அலறினால் மெயின் பிக்சருக்கு நினைக்கவே இனிக்குதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2022 at 02:27, Nathamuni said:

அமெரிக்கன் ஸ்பீக்கர், சும்மா, ஒரு டீயை குடிச்சு போவம் எண்டு தானே தைவான் போனா. அதில சீனாவுக்கு என்ன பிரச்சனையோ, அதே தான் இந்தியாவுக்கும் இருந்திருக்க வேணும், உளவுக் கப்பல் வரேக்க...

தாய்வான் சீனாவின் ஆட்சியில் 5000 ஆண்டுகள்.மேல் இருந்தது...என நாங்கள் சொல்லுவோமல்ல எங்கன்ட சிவப்பு சிந்தனை சொல்ல வைக்குமல்ல

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

நேரம் போகா விட்டால், இதை கேளுங்கள். சிரிப்பு  நிச்சயம். 

இதெல்லாம் ஊடகங்களின் சல்ஜாப்பு ஆனால் சொல்லி வைத்துகொண்டு விளையாடுவார்கள் சீனா இந்தியா அமேரிக்கா சிலோன் நாங்க வழக்கம் போல் பொங்கி கொண்டு இருப்பம் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக வீட்டுக்கு வேலை முடிந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவேன் ....சில நேரங்களில் கொஞ்சம் பிந்தி வந்தா மனைவி பிள்ளைகள் கேட்பினம் ஏன் அப்பா இன்று வேலை முடிய லேட்டா என்று...நான் "சீ சீ பெற்றொல் அடிக்க போனேன், அது தான் " 
பெற்றோல் டாங்க் ஏற்கனவே நிரம்பி தான் இருக்கும்..... நான் எனக்கு உற்சாக பாணம் வாங்க போன கதை எனக்கு மட்டும் தான் தெரியும் ...

ஒரு நாள் மாட்டுப்பட்டு போனேன் ..முதல் நாள் மணைவி காரை கொண்டு போய் பெற்றோல் அடிச்சு இருக்கின்றார் எனக்கு அது தெரியாது ...அடுத்த நாள் வேலையால்  வரும் பொழுது என்ட உற்சாக பானத்தை வாங்கி கொண்டு வந்து லேட்டாக வந்தமைக்கு காரணத்தை சொன்னேன் " ஐயோ நான் நேற்று தானே பெற்ரோல் அடிச்சனான் ஏன் இன்றும் நீங்கள் அடிச்சனீங்கள் .....வேலைக்கு போகாமால் வேறு ஏங்காவது டெ ரிப் போனீங்களோ" என பத்திரகாளியாக மாறினால்....
உடனே நான் "கூல் கூல் எல்லாவற்றையும் நட்பு ரீதியாக பேசி தீர்த்து கொள்ளலாம் என சமாதனபடுத்தினேன்"
இனி நான் வேறு காரணம் சொல்ல வேணும் ...தேடிக்கொண்டிருக்கிரேன் 🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தாய்வான் சீனாவின் ஆட்சியில் 5000 ஆண்டுகள்.மேல் இருந்தது...என நாங்கள் சொல்லுவோமல்ல எங்கன்ட சிவப்பு சிந்தனை சொல்ல வைக்குமல்ல

இந்த சிவப்பு சிந்தனை என்ன பாடுபடுத்துகிறது முற்காலத்தில் சீன எம்பசி தமிழில் புத்தகம் அடித்து பரப்பியதாம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

வழமையாக வீட்டுக்கு வேலை முடிந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவேன் ....சில நேரங்களில் கொஞ்சம் பிந்தி வந்தா மனைவி பிள்ளைகள் கேட்பினம் ஏன் அப்பா இன்று வேலை முடிய லேட்டா என்று...நான் "சீ சீ பெற்றொல் அடிக்க போனேன், அது தான் " 
பெற்றோல் டாங்க் ஏற்கனவே நிரம்பி தான் இருக்கும்..... நான் எனக்கு உற்சாக பாணம் வாங்க போன கதை எனக்கு மட்டும் தான் தெரியும் ...

ஒரு நாள் மாட்டுப்பட்டு போனேன் ..முதல் நாள் மணைவி காரை கொண்டு போய் பெற்றோல் அடிச்சு இருக்கின்றார் எனக்கு அது தெரியாது ...அடுத்த நாள் வேலையால்  வரும் பொழுது என்ட உற்சாக பானத்தை வாங்கி கொண்டு வந்து லேட்டாக வந்தமைக்கு காரணத்தை சொன்னேன் " ஐயோ நான் நேற்று தானே பெற்ரோல் அடிச்சனான் ஏன் இன்றும் நீங்கள் அடிச்சனீங்கள் .....வேலைக்கு போகாமால் வேறு ஏங்காவது டெ ரிப் போனீங்களோ" என பத்திரகாளியாக மாறினால்....
உடனே நான் "கூல் கூல் எல்லாவற்றையும் நட்பு ரீதியாக பேசி தீர்த்து கொள்ளலாம் என சமாதனபடுத்தினேன்"
இனி நான் வேறு காரணம் சொல்ல வேணும் ...தேடிக்கொண்டிருக்கிரேன் 🤣

கோயில் வீதியிலை புல்லு புடுங்க(சிரமதானம்) போனனான் எண்டு சொல்லி பாருங்கோ...:cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கோயில் வீதியிலை புல்லு புடுங்க(சிரமதானம்) போனனான் எண்டு சொல்லி பாருங்கோ...:cool:

ஒருவருடைய அனுபவம் பகிரும்போது இன்னொருவருக்கு உதவலாம் ஆனால் சம்பந்தப்பட்டவர்களும் களத்தில் உலாவினால் சொன்னவரும் கேட்டவரும் பரிதாப நிலையில். அநேகமாக பெண்கள் காலம்நேரம் இல்லாமல் கோயில் வீதி வலம் வருகிறவர்கள் நாலுபக்கமும் பாத்துவிட்டு சொல்லுங்கோ! மீண்டும் மாட்டுப்பட்டு  முழிக்காமல்.

 

15 hours ago, vanangaamudi said:

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை உள்ளபோது ஒரு கப்பலுக்கு அடிக்கும் அளவுக்கு எரிபொருள் இலங்கைக்கு எங்கிருந்து கிடைத்தது.

அவர் நாட்டு மக்களுக்கு அடிச்சு விடுகிற மாதிரி இதுவும் ஒன்று.

15 hours ago, vanangaamudi said:

பாவத்துக்கு இரங்கி இந்தியா கொடுக்கும் எண்ணையை சீனனுக்கு விற்கிறதா இலங்கை அரசு.?

 தான் புத்திசாலி என்கிற நினைப்பு பந்துல குணவர்த்தனாவுக்கு! இவற்ற வாயால் இனி வருகிற உதவிக்கும் உலை வைத்தாயிற்று.            

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணமா?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலாகும்.

 

படக்குறிப்பு,

யுவான் வாங் 5 என்பது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலாகும்.

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

'யுவான் வாங் 5' என்பது, சீன விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலாகும். இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரலாம் என்று உத்தேசிக்கப்பட்டு இருந்தது.

2007ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல், அது நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து 750 கிமீ தூரம் கொண்ட பகுதிகளை கண்காணிக்கவும் பரந்த வான்வழி நோக்குடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கும் பயன்படுத்தலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த கப்பல் இலங்கைக்கு வருவது, அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலாகும் என இந்தியாவில் உள்ள பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையிலேயே, சீன அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தும் வரை அந்த கண்காணிப்பு கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே இந்தியா அரசாங்கம் அதன் கவலையை இலங்கையிடம் தெரிவித்திருந்தது. மேலும், இலங்கை பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கியிருக்கும் சூழலில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.

 

ஹம்பாந்தோட்டையில் நடைமுறையில் எந்த பொருளாதார நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

எச்சரிக்கை விடுத்த இந்தியா, அமெரிக்கா

 

இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

பட மூலாதாரம்,SRI LANKA DEFENCE MINISTRY

முன்னதாக, சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்து வெளியிட்டது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீன கப்பல் பராமரிப்புப் பணிகளை நிறைவு செய்து கொண்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி தனதுஅதன் பயணத்தைத் தொடரும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

இதையடுத்து இந்த வார தொடக்கத்தில், இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாடு காவல்துறை அதன் எல்லைக்குட்பட்ட கடலோர பாதுகாப்பை பலப்படுத்தியது. சர்வதேச கடல் எல்லை பகுதியில் இந்திய கடற்படையும் இந்திய கடலோர காவல் படையும் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தின.

இதேவேளை, சீன கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகலாம் என்று இந்திய உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW) இலங்கைக்கு எச்சரிக்கை குறிப்பை அனுப்பியது.

"இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை கவனத்தில் கொண்டு" இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய தூதரக பணியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ லெப்டிணன்ட் கர்னல் புனீத் சுஷீல் மற்றும் அதிகாரிகள், இந்திய துணைத்தூதர் திபின் தலைமையில் ஹம்பந்தோட்டா துறைமுக அதிகாரிகளையும் இலங்கை கடற்படை தென் பிராந்திய தளபதி மற்றும் ராணுவ உயரதிகாரிகளை சந்தித்துப் பேசினார்கள். அப்போதும் இந்தியாவின் கவலை இலங்கை தரப்பிடம் பதிவு செய்யப்பட்டது.

 

இலங்கை கடற்படை

 

இந்திய அதிகாரிகள் ஹம்பாந்தோட்டை

 

இலங்கை ஹம்பாந்தோட்டை

இதேபோல, 'யுவான் வாங் 5' கப்பல் சீனா ராணுவத்தின் (பிஎல்ஏ) ஆதரவு அமைப்பால் இயக்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகனும் கூறியது.

இந்த அழுத்தங்கள் காரணமாகவே, ஆகஸ்ட் 5ஆம் தேதி வாய்மொழி குறிப்பு மூலமும் பின்னர் எழுத்துபூர்வமாகவும் இந்த பிரச்னையில் மேலதிக ஆலோசனைகள் செய்யப்படும் வரை, யுவான் வாங் 5 கப்பலின் வருகை தேதியை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வெளியுறவுத்துறை கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

யுவான் வாங் 5 - ஏன் அச்சப்பட வேண்டும்?

ஆராய்ச்சி பணிக்காக வடிவமைக்கப்பட்ட யுவான் வாங் 5 கப்பல், 2007இல் கட்டப்பட்டது. 11 ஆயிரம் டன்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த கப்பல், ஜூலை 13ஆம் தேதி சீனாவின் ஜியாங்யினில் இருந்து புறப்பட்டது. தற்போது தைவானுக்கு அருகே இந்த கப்பல் பயணம் செய்து வருகிறது.

ஏற்கெனவே தைவானுக்கு அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, சில தினங்களுக்கு முன்பு சீன தடையை மீறி பயணம் செய்தார். அப்போது தைவானை அச்சுறுத்தும் விதமாக இதே கப்பலை தைவான் கடல் பகுதி நோக்கிப் பயணம் செய்ய வைத்தது சீனா.

 

சீன கப்பல்

அந்த கடல் பகுதியில் சீனா அதன் வான் படை மற்றும் கடற்படை, ராணுவ கூட்டு ஒத்திகையை கடந்த இரு தினங்களாக நடத்திய விவகாரம் சர்ச்சையானது. மரைன் டிராஃபிக் வலைதள தரவுகளின்படி, யுவான் வாங் 5 கப்பல், தற்போது கிழக்கு சீன கடலில் தெற்கு ஜப்பான் மற்றும் தைவானின் வடகிழக்கு இடையே உள்ளது.சீன கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமான கடல் படுகை வரைபடத்தை தயாரிக்க இந்த யுவான் வாங் 5-ஆல் முடியும். ஆனால், தரவுகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சிக் கப்பலாக இது காட்டப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதனாலேயே ஹம்பாந்தோட்டையில் சீன கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலாக அமையலாம் என்ற கவலை நிலவுகிறது.

இந்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டால் அது இலங்கையுடனான சீன உறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கான சீன தூதர் கூறியிருந்தார். இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் கர்னல் நளின் ஹேரத், சீன கப்பலுக்கு எரிபொருள் நிரப்ப மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்தியாவின் கவலைகள்

யுவான் வாங் 5 கப்பல், சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க ராணுவ பயன்பாட்டு வசதிகளை இந்த கப்பல் கொண்டுள்ளது.

 

இலங்கை கடற்படை

இந்த கப்பல் மலாக்காவின் பரபரப்பான நீரிணையைத் தவிர்த்து மற்ற இந்தோனீசிய ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலில் நுழைய திட்டமிடப்பட்டது.

யுவான் வாங் 5 சீன கப்பல், இந்திய பெருங்கடலின் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டால், ஒடிஷா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை இந்தக் கப்பலால் கண்காணிக்க முடியும்.

இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதன் மூலம், ஏவுகணைகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் துல்லியமான ஆற்றல் பற்றிய தகவல்களை சீனாவால் சேகரிக்க முடியும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவுக்கு பெரும் தொகையை செலுத்த வேண்டிய இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்தியா சந்தேக கண்ணோட்டத்துடனேயே அணுகி வருகிறது.

அந்த நாட்டில் கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் பாதைகளில் அமைந்துள்ள துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு இலங்கை 2017இல் வழங்கியது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், இலங்கையில் உள்ள துறைமுக வசதிகளை அனுபவிக்கும் வகையில் தமது செல்வாக்கை இலங்கை மீது செலுத்த இந்த கப்பல் பயணத்தை சீனா வாய்ப்பாக பயன்படுத்தலாம் என இந்தியா கருதுகிறது.

இதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டில், சீன நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. அப்போதும் இந்தியா அந்த கப்பல்கள் குறித்த தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டது. அதன் பின்னர் இலங்கை துறைமுகங்களுக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை எதுவும் பதிவாகவில்லை.

https://www.bbc.com/tamil/sri-lanka-62450326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனக்கப்பல் எரிபொருள் நிரப்பத்தான் வருகிறது. இடையில் வரவேண்டாம் என்று சொன்னால் நடுக்கடலில் கப்பல் தத்தளிக்கும். அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பேச்சைக்கேட்டு சீனாவுடன் பகைத்தால்இப்பொழுது தாய்வானைச் சுற்றி நடக்கும் வாணவேடிக்கைகளை சுpனா காட்டும். இதெல்லாம் தேவையா? சீனா நினைத்தால் இலங்கையின் கடனை சுலபமாக அடைத்து விடும். சரி ஒரு பேச்சுக்கு இலங்க இந்தக்கப்பலை இப்பொழுது நிறுத்தினாலும் அது தற்காலிகமானதே. சுpனக்கப்பல் இலங்கைக்கு வரத்தான் போகிறது. இந்தியாவுக்ககும் மேற்குக்கும் ஒரே ஒரு தெரிவு தான் இருக்கிறது. அது தமிழர்களைக்கையாளுதல்.தமிழர்களும் இந்தியா மேற்குலகம் சீனா மூன்றையும் கையாளுதல் வேண்டும்.இப்பொழுது இருக்கும் தமிழ்த்தலைமகளான சம்சும் கொம்பனி அதற்கு சரிப்பட்டு வராது. அவர்கள் இந்தியாவுக்கு வாலை ஆட்டுபவர்கள். அடுத்துவரும் தேர்தலல்களிலாவது தமழர்கள் பூகோள அரசிளலைக் சரியாகக் கையாளும் தமிழ்தலைமைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

இந்தியாவுக்ககும் மேற்குக்கும் ஒரே ஒரு தெரிவு தான் இருக்கிறது. அது தமிழர்களைக்கையாளுதல்.தமிழர்களும் இந்தியா மேற்குலகம் சீனா மூன்றையும் கையாளுதல் வேண்டும்.இப்பொழுது இருக்கும் தமிழ்த்தலைமகளான சம்சும் கொம்பனி அதற்கு சரிப்பட்டு வராது. அவர்கள் இந்தியாவுக்கு வாலை ஆட்டுபவர்கள். அடுத்துவரும் தேர்தலல்களிலாவது தமழர்கள் பூகோள அரசிளலைக் சரியாகக் கையாளும் தமிழ்தலைமைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

பூகோள அரசியலின் முக்கியத்துவத்தை தலைவர் பிரபாகரன் அன்றே கூறிவிட்டார்.
இருந்தாலும் இன்றிருக்கும் எமது சாக்கடை சோம்பேறி அரசியல்வாதிகள் ஆரோக்கியமில்லாத அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இழுவான் கோஷ்டிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

ஒருவருடைய அனுபவம் பகிரும்போது இன்னொருவருக்கு உதவலாம் ஆனால் சம்பந்தப்பட்டவர்களும் களத்தில் உலாவினால் சொன்னவரும் கேட்டவரும் பரிதாப நிலையில். அநேகமாக பெண்கள் காலம்நேரம் இல்லாமல் கோயில் வீதி வலம் வருகிறவர்கள் நாலுபக்கமும் பாத்துவிட்டு சொல்லுங்கோ! மீண்டும் மாட்டுப்பட்டு  முழிக்காமல்.

நாங்கள் ஐடியா ஐயாத்துரையள் கண்டியளோ.....ஒருக்கால் போன பாதையாலை இன்னொருக்கால் போக மாட்டம் :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை அழிக்க என்று இந்த இரு முக அணுகுமுறையை கதிர்காமர் தான் சந்திரிக்காவுக்கு அறிமுகப்படுத்தினார். அதாவது சீனாவை காட்டி ஹிந்தியாவை பணிய வைப்பது.. ஹிந்தியாவை காட்டி சீனாவை பணிய வைப்பது. 

சீனாவுக்கும் ஹிந்தியாவுக்கும் ஏன் உலக வல்லாதிக்க சக்திகளுக்கும்.. பாக்குநீரினையில்.. அவர்கள் நினைப்பதை செய்ய புலிகள் தடையாக இருந்ததால்.. அந்த விடயத்தில் கதிர்காமரின் நரித்தனம் வெற்றி பெற்றது என்னவோ உண்மை தான்.

ஆனால்.. வொய்ஸ் ஒவ் அமெரிக்காவோடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்திரா காந்தி அம்மையார் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஊக்குவித்து அதனை ஆயுதப் போராட்டமாக மாற்றி அமைத்தது போல் அன்றி.. சீனாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து ஹிந்திய ஆட்சியாளர்கள் இந்திரா அம்மையார் அளவுக்கு செயற்படாமை.. ஈழத்தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை சிங்கள அரசு தனக்கு சாதமாக்கிக் கொண்டுள்ளது. 

அதன்படி...தராசு இப்போ சிங்கள அரசுக்கும் சீனத்துக்கும் சார்ப்பாக தான் உள்ளதே தவிர ஹிந்தியாவுக்கு சார்ப்பாக கிடையாது. எனி பிராந்திய இராணுவச் சமநிலை என்பது ஹிந்தியாவுக்கு சாதகமாக வேண்டின் பிராந்தியத்தில் ஹிந்தியா தனக்கு சார்பான சக்திகளை வளர்த்தெடுக்க வேண்டும். அதில் ஒன்று தமிழீழம் அமைவதுமாகும். 

சீனாவை கட்டுப்படுத்த தாய்வானின் சுதந்திர தாகத்தை அமெரிக்கா எப்படி பாவிக்கிறது என்பது ஹிந்தியாவுக்கு நல்ல உதாரணம். ஆனால் அந்தளவு திறமை தற்போதைய ஹிந்திய ஆட்சியாளர்களுக்கோ.. உளவு அமைப்புகளுக்கோ கிடையாது. றோ இன்னும் புலி பிடிப்பதில் தான் கவனம். 

றோ ஒரு தோற்றுப் போன ஹிந்திய உளவு அமைப்பு. ஹிந்திய எல்லையை ஒட்டிய சீன ஊடுருவலை.. தடுக்க எந்த வகையிலும் செயற்பட முடியாத ஹிந்திய பாதுகாப்பை பற்றி எந்த அக்கறையும் அற்ற ஒரு தோற்றுப்போன அமைப்பே றோ. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.