Jump to content

புங்குடுதீவில் நாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பலில் இருவர் கைது ; ஒருவர் தலைமறைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தார்.

நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியது.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இந்தச் சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் இன்று இரவு ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்திய கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த தொலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

மிருக வதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினார்.

நாயை வெட்டிக் கொன்றவர்களில் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகிறார்.

சந்தேக நபர்கள் உண்மையை கூர மறுப்பதுடன் மாறுபட்ட தகவல்களை வழங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புங்குடுதீவில் நாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பலில் இருவர் கைது ; ஒருவர் தலைமறைவு  | Virakesari.lk

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாயை வெட்டிக்கொல்வது  குற்றமாகிய  நாட்டில்👋

மக்களைக்கொன்றவர்களுக்கு பதவி  உயர்வுகள்?😡

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

நாயை வெட்டிக்கொல்வது  குற்றமாகிய  நாட்டில்👋

மக்களைக்கொன்றவர்களுக்கு பதவி  உயர்வுகள்?😡

நீங்கள் சொல்வது சரி, ஆனால் நாயை கொடூரமாகக் கொன்றவர்களை இதனைக் கூறி நியாயப்படுத்த முடியாது. கண்டிப்பாக தண்டனை கொடுத்து ஆக வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

நீங்கள் சொல்வது சரி, ஆனால் நாயை கொடூரமாகக் கொன்றவர்களை இதனைக் கூறி நியாயப்படுத்த முடியாது. கண்டிப்பாக தண்டனை கொடுத்து ஆக வேண்டும்.

நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒரு கை தட்டலும் போட்டிருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு கராஜில் வேலை செய்யும்பொழுது அங்கே ஒரு பெரிய மாமரம் இருந்தது.....( யாழ் இந்து மைதானத்துக்கு எதிரில்)......ஒருநாள் நானும் நண்பனும் அதில் ஏறி நிறைய மாங்காய்களை பிடுங்கி பின் அவற்றை ஒரு ஏ. 40 காரின் டிக்கிக்குள் வைத்து விட்டோம்.....அடுத்த நாள் முதலாளி வந்து கீழே மாம்பிஞ்சுகள்  காய்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அப்படியே கார் டிக்கியையும் திறந்தார்....அங்கேயும் நிறைய காய்கள்.....எங்களைத் தவிர வேறு யாரும் உந்த வேலை செய்ய மாட்டினம் என்று அவருக்கு தெரியும்.....நாங்கள்தான் இரவு கராஜில் படுப்பது......உடனே எங்களை கூப்பிட்டு...... சீச்சீ ....காதில பிடிச்சு இழுத்து வந்து இண்டைக்கு இவ்வளவு மாங்காயையும் நீங்கள் ரெண்டுபேரும் சாப்பிட்டு விட்டுத்தான் இங்கால வரவேணும் என்று சொல்லி விட்டார் ........!

இவர்கள் மூன்று பேரையும் பிடித்து அப்படிச்  சாப்பிட விட்டிருக்கலாம் .......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

நான் முன்பு கராஜில் வேலை செய்யும்பொழுது அங்கே ஒரு பெரிய மாமரம் இருந்தது.....( யாழ் இந்து மைதானத்துக்கு எதிரில்)......ஒருநாள் நானும் நண்பனும் அதில் ஏறி நிறைய மாங்காய்களை பிடுங்கி பின் அவற்றை ஒரு ஏ. 40 காரின் டிக்கிக்குள் வைத்து விட்டோம்.....அடுத்த நாள் முதலாளி வந்து கீழே மாம்பிஞ்சுகள்  காய்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அப்படியே கார் டிக்கியையும் திறந்தார்....அங்கேயும் நிறைய காய்கள்.....எங்களைத் தவிர வேறு யாரும் உந்த வேலை செய்ய மாட்டினம் என்று அவருக்கு தெரியும்.....நாங்கள்தான் இரவு கராஜில் படுப்பது......உடனே எங்களை கூப்பிட்டு...... சீச்சீ ....காதில பிடிச்சு இழுத்து வந்து இண்டைக்கு இவ்வளவு மாங்காயையும் நீங்கள் ரெண்டுபேரும் சாப்பிட்டு விட்டுத்தான் இங்கால வரவேணும் என்று சொல்லி விட்டார் ........!

இவர்கள் மூன்று பேரையும் பிடித்து அப்படிச்  சாப்பிட விட்டிருக்கலாம் .......!  😂

சேனாதி மாஸ்றர் வீடோ அல்லது சிவனேசராசா மாஸ்ரர் வீடோ சுவியர்? அல்லது ரத்தின வாசாவோ?

Link to comment
Share on other sites

18 hours ago, விசுகு said:

நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒரு கை தட்டலும் போட்டிருக்கிறேன் 

கை தட்டும் போது கொஞ்சம் சத்தமாகத் தட்டினால் தானே கேட்கும்.... 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

கை தட்டும் போது கொஞ்சம் சத்தமாகத் தட்டினால் தானே கேட்கும்.... 😀

 

புரியுது?

நீங்க  ஊர்ப்பெயரை  பார்த்து விட்டீர்கள்  என்று?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

சேனாதி மாஸ்றர் வீடோ அல்லது சிவனேசராசா மாஸ்ரர் வீடோ சுவியர்? அல்லது ரத்தின வாசாவோ?

இல்லை....வைரவர் கோவில் பக்கம் வீதியை கடந்து மைதான மதிலுக்கு முன்பாக......பேக்கரிக்கும் தமிழ் பள்ளிக்கூடத்துக்கும் நடுவில்.....!   😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் கொலை- புங்குடுதீவு சந்தேக நபர் வாக்குமூலம்!

போதைப்பொருளுக்கு அடிமையாகி ஊரில் திருட்டுக்குச் செல்லும் போது தம்மை பார்த்து குலைப்பதனால்தான் நாயைக் கொலை செய்ததாக சந்தேக நபர்களில் ஒருவர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

நாயை கைக்கோடாரியினால் வெடிக் கொலை செய்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அதனை காணொளி பதிவு செய்தவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் நேற்றுமுன்தினம் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்தி கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த அலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.

“போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் ஊரில் திருட்டுகளில் ஈடுபட்டோம். எம்மைக் கண்டவுடன் நாய் குலைத்து காட்டிக்கொடுத்துவிடும்.

இதனால் அங்கு இடம்பெறும் திருட்டுகளுடன் எமக்குத் தொடர்பு உண்டு என பொலிஸார் விசாரணைக்கு அழைப்பார்கள். அதனால்தான் அந்த நாயைக் கொலை செய்தோம்.

கைக்கோடாரியினால் வெட்டி கொலை செய்தவர் அன்றைய தினம் போதையில் இருந்தார். சில நாள்களுக்கு முன்பாகவே நாயை கொலை செய்துவிட்டோம்.

அதன் காணொளி சகோதரனின் அலைபேசியில் இருந்தது. அவர் தவறுதலாக ரிக்ரொக்கில் பதிவேற்றப்பட்டுவிட்டது” என்று காணொளி பதிவெடுத்தவர் விசாரணைகளில் தெரிவித்தார்.

சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாய் கொலை- புங்குடுதீவு சந்தேக நபர் வாக்குமூலம்! (newuthayan.com)

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
    • தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.