Jump to content

இலங்கை தமிழ் அகதிகள் குடும்பத்திற்கு நிரந்தர விசாவை வழங்கியது அவுஸ்திரேலிய அரசாங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை இன்று தெரிவித்துள்ளனர்.

இன்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள்  இலங்கை தமிழ் குடும்பத்திற்கு  நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர்.

nadesh_priya.jpg

2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள் கைதுசெய்து கொண்டுசென்று மெல்பேர்ன் தடுப்பு முகாமிலும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமிலும் தடுத்துவைத்திருந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் பேர்த்தில் சமூக தடுப்பில் வாழ்ந்தனர்,இந்த நிலையில் இந்த வருடம் ஜூன் மாதம் அவர்களிற்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டு அவர்கள் குயின்ஸ்லாந்தின் பயோலாவிற்கு திரும்பினர்.

மீண்டும் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தமை குறித்து தமிழ் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இரண்டு சிறுமிகளும் பாடசாலை செல்கின்றனர்,நடேஸ் மீண்டும் வேலைக்கு செல்லவுள்ளார்.

நிரந்தர விசா குறித்த செய்தியால் தமிழ் குடும்பத்தின் நண்பர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

297441944_1788511471491983_7965426515705

அந்த குடும்பத்துடன் சமூகத்தி;ல் இணைக்கும் நடவடிக்கைகளை அல்பெனிஸ் அரசாங்கம் மிக துரிதமாக மேற்கொண்டமைக்காக நான் அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக உள்ளோம்- சமூகத்தில் இணைவதற்காக அந்த குடும்பத்தினர் கடுமையாக போராடினார்கள் என தெரிவித்த ப்ரோன்வின் டென்டில் என்பவர் நிரந்தர வாழ்க்கையால் மாத்திரம் கிடைக்ககூடிய அமைதியை இறுதியாக அந்த குடும்பத்தினர் அனுபவிக்கப்போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் அகதிகள் குடும்பத்திற்கு நிரந்தர விசாவை வழங்கியது அவுஸ்திரேலிய அரசாங்கம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய தலைப்பு செய்தி.  😂
இலங்கையிலிருந்து, பல வள்ளங்கள்… “அவுஸ்” நோக்கி பயணம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நாளைய தலைப்பு செய்தி.  😂
இலங்கையிலிருந்து, பல வள்ளங்கள்… “அவுஸ்” நோக்கி பயணம். 🤣

அடுத்தநாள்...கொழும்புத்  துறைமுகத்தில் அவுஸ்த்திரேலிய கப்பல் ஆட்களை கொத்துக் கொத்தாக இறக்கியது...அடுத்தநள் ஸே௹ஈ..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே  05 August அவுஸ்ரேலியாவில் இருந்து 46 இலங்கையர்கள் அவுஸ்ரேலியா எல்னல படை கப்பலில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

https://www.dailymirror.lk/breaking_news/46-illegal-Sri-Lankan-migrants-deported-from-Australia-arrived/108-242533

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.