Jump to content

உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு

15 பிப்ரவரி 2018
புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்
 

காதல் நிறைந்த துணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது.

ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர்.

அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

''பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை'' என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

 

84 வயதான நபர் ஒருவர், 85 வயதான பவுலின் என்ற பெண்ணை தனது நான்காம் மனைவியாக 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

தாங்கள் வாரத்திற்கு இரு முறை பாலுறவு கொள்வதாக அவர் கூறுகிறார்.

''இதில் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்'' என்கிறார் அவர்.

தானும், தனது மனைவியும் வழக்கமாக உடற்பயிற்சி செய்து, தங்களை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும், இதுவே ஒருவர் மீது மற்றொருவர் ஈர்ப்புடன் இருக்க உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.

 

துணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

''நான் நேரடியாக செல்கிறேன். இளம் பெண்ணான உங்களுக்கு, பெரிய தொப்பையுடன் புகைபிடித்துக்கொண்டிருக்கும் உங்களது கணவரை பார்த்தால் என்ன தோன்றும்? அவர் மீது ஈர்ப்பு வருமா?'' என்கிறார் அவர்.

80 வயதை கடந்தவர்களில், 6-ல் ஒருவர் மட்டுமே தங்களது பாலுறவு போதுமானதாக இருந்ததாக உணர்ந்தாக தெரிவித்துள்ளனர்.

போதிய வாய்ப்புகள் கிடைக்காததாலே, தங்களது பாலுறவு தடைப்படுவதாக 65 வயதைக் கடந்தவர்களில் 6-ல் ஒருவர் கூறுகிறார்.

''பலர் நினைப்பதை விட, அதிக வயது முதியவர்கள் பாலுறவுவில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர்'' என சுதந்திர வயது தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் லூசி ஹார்மேர் கூறுகிறார்.

முதுமை காதல் நிறைந்த உறவுகளை வைத்துக்கொள்ளச் சுதந்திர வயது தொண்டு நிறுவனம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

  • நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உங்களது துணையிடம் பேசுங்கள். விஷயங்களை அவர்களது பார்வையில் இருந்து பார்க்க முயலுங்கள்.
  • பாலுறவில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்ன தேவை? என்பதை இருவரும் பேசுங்கள்.
  • உடலை பற்றி நம்பிக்கையுடன் இருங்கள்

https://www.bbc.com/tamil/global-43060453

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

பாலுறவில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்ன தேவை? என்பதை இருவரும் பேசுங்கள்.

ஹலோ இளம் பொடியளே! கேட்டியளே? பிபிசியே சொல்லீட்டுது.
நீங்கள் 20,25 வயதிலையே பாதாம் பருப்பு அந்தப்பருப்பு இந்தப்பருப்பு எண்டு தேடிக்கொண்டிருக்கிறியள்.

இஞ்சை பாருங்கோ50s,60s கிட்ஸ் எல்லாம் இப்பவும் தேக்குமரங்கள் கண்டியளோ 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கூத்து?

இந்த ஆய்வு, தரவுகளின் நம்பத்தன்மை என்ன..?

 

1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ50s,60s கிட்ஸ் எல்லாம் இப்பவும் தேக்குமரங்கள் கண்டியளோ 😂

அந்த வயசுக்கு வரும்போது அனுபவத்தில் உணரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஹலோ இளம் பொடியளே! கேட்டியளே? பிபிசியே சொல்லீட்டுது.
நீங்கள் 20,25 வயதிலையே பாதாம் பருப்பு அந்தப்பருப்பு இந்தப்பருப்பு எண்டு தேடிக்கொண்டிருக்கிறியள்.

இஞ்சை பாருங்கோ50s,60s கிட்ஸ் எல்லாம் இப்பவும் தேக்குமரங்கள் கண்டியளோ 😂

 

அது தானே?
அதையும் நீங்க  சொல்லும்போது.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வேலைகள் எதுவும் இல்லை. இருக்கிற வேலையைத்தானே செய்ய முடியும்  🧐

அதுசரி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த வயதினருடன் பாலுறவு கொள்ள விரும்புகின்றனர் என்று  BBC சொல்கிறதா ? 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதிலை…. கோயில், குளத்துக்கு போறது…
பேரக் குழந்தைகளுடன் விளையாடுறது…
அதை விட்டுட்டு… சாகும் மட்டும், புணர்ந்து… கொண்டு இருக்க வேணுமா. 🤣

பொல்லு… பிடிக்கிற வயசிலை, பொ**…  போட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இதென்ன கூத்து?

இந்த ஆய்வு, தரவுகளின் நம்பத்தன்மை என்ன..?

உப்புடியான ஆய்வு ஆராய்ச்சிகள் ஐரோப்பாவிலை எக்கச்சக்கம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இதென்ன கூத்து?

இந்த ஆய்வு, தரவுகளின் நம்பத்தன்மை என்ன..?

இந்த இடத்தில் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காதுக்கு இனிமையாகவும், மூளைக்கு சுகமாகவும் இருந்தால் அப்படியே நம்பவேண்டியதுதான். 

இதென்ன உக்ரேன் யுத்தமா சண்டை பிடிக்க.

.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

இந்த வயதிலை…. கோயில், குளத்துக்கு போறது
 

 

அங்க  போய்  பார்த்தா தானே  ராசா  இன்னும் பொத்துக்கொண்டு  வருகுது??😝

1 minute ago, Kapithan said:

இந்த இடத்தில் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காதுக்கு இனிமையாகவும், மூளைக்கு சுகமாகவும் இருந்தால் அப்படியே நம்பவேண்டியதுதான். 

இதென்ன உக்ரேன் யுத்தமா சண்டை பிடிக்க.

.🤣

அது தானே??😂

27 minutes ago, குமாரசாமி said:

உப்புடியான ஆய்வு ஆராய்ச்சிகள் ஐரோப்பாவிலை எக்கச்சக்கம் 🤣

ஆராய்ச்சி செய்யினம் என்றாலே அதிகம் ஆட்கள்  செயலில் இருக்கினம் என்றுதானே  அர்த்தம் அண்ணை?🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இந்த இடத்தில் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காதுக்கு இனிமையாகவும், மூளைக்கு சுகமாகவும் இருந்தால் அப்படியே நம்பவேண்டியதுதான். 

இதென்ன உக்ரேன் யுத்தமா சண்டை பிடிக்க.

.🤣

அப்போ, பழனியில் ஏழு தலைமுறை வைத்தியர் சிவராஜ் வகையறா, சொல்வதையும் நம்ப வேண்டி வருமே..? 🤔 😛

சிறு வயதில் கிராமத்து சலூன் கடைகளில், தினத்தந்தியில் இவ்வைத்தியரின் 'வாரத்தின் ஒவ்வொரு நாளும் முக்கிய தமிழக நகரங்களுக்கு விஜயம்' என விளம்பரம் வரும், வாசித்திருக்கிறேன், அப்பொழுது பொருளடக்கம் அவ்வளவாக புரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வயதில் தங்கியிருக்கவில்லை மாறாக உடல் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளது   அந்தக் காலத்தில் சொந்தப்பிள்ளையுடன்.  போட்டி போட்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்கள் நமது முததையார்கள். இங்கே வயது என்பது எண்ணிக்கை மட்டுமே   எனவே… 60....70.....80.....வயதானவர்கள். கூட.  உடல்ஆரோக்கியமிருப்பின்.  சந்தர்ப்பம் கிடைக்கும் போது நன்றாக உடலுறவு கொள்ள முடியும்....

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

இது வயதில் தங்கியிருக்கவில்லை மாறாக உடல் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளது   அந்தக் காலத்தில் சொந்தப்பிள்ளையுடன்.  போட்டி போட்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்கள் நமது முததையார்கள். இங்கே வயது என்பது எண்ணிக்கை மட்டுமே   எனவே… 60....70.....80.....வயதானவர்கள். கூட.  உடல்ஆரோக்கியமிருப்பின்.  சந்தர்ப்பம் கிடைக்கும் போது நன்றாக உடலுறவு கொள்ள முடியும்....

கந்தையர் எப்பவுமே சீரியஸ்தான். 😡

13 minutes ago, ராசவன்னியன் said:

அப்போ, பழனியில் ஏழு தலைமுறை வைத்தியர் சிவராஜ் வகையறா, சொல்வதையும் நம்ப வேண்டி வருமே..? 🤔 😛

சிறு வயதில் கிராமத்து சலூன் கடைகளில், தினத்தந்தியில் இவ்வைத்தியரின் 'வாரத்தின் ஒவ்வொரு நாளும் முக்கிய தமிழக நகரங்களுக்கு விஜயம்' என விளம்பரம் வரும், வாசித்திருக்கிறேன், அப்பொழுது பொருளடக்கம் அவ்வளவாக புரியாது.

நம்பினால் போயிற்று. இதென்ன காசா பணமா இழப்பதற்கு.......ம் 😉

சிவராஜ் வைத்தியர் வகையறாக்களிடம் போற எண்ணம் போலும். மெலிதாக ஆலோசனை கேட்பதுபோல உள்ளது  உங்கள் எழுத்து ..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இது வயதில் தங்கியிருக்கவில்லை மாறாக உடல் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளது   அந்தக் காலத்தில் சொந்தப்பிள்ளையுடன்.  போட்டி போட்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்கள் நமது முததையார்கள். இங்கே வயது என்பது எண்ணிக்கை மட்டுமே   எனவே… 60....70.....80.....வயதானவர்கள். கூட.  உடல்ஆரோக்கியமிருப்பின்.  சந்தர்ப்பம் கிடைக்கும் போது நன்றாக உடலுறவு கொள்ள முடியும்....

அனுபவம்??

அப்படிப்போடு அரிவாளையண்ணை?🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

 

அங்க  போய்  பார்த்தா தானே  ராசா  இன்னும் பொத்துக்கொண்டு  வருகுது??😝

அது தானே??😂

ஆராய்ச்சி செய்யினம் என்றாலே அதிகம் ஆட்கள்  செயலில் இருக்கினம் என்றுதானே  அர்த்தம் அண்ணை?🤣

மிருகங்கள் கூட…. இனப் பெருக்கம் செய்வதற்காக,  
குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே,  உடலுறவு கொள்கின்றன.
உதாரணத்துக்கு நாய்… கார்த்திகை மாதத்திலும், 🐕‍🦺
பூனை… மாசி மாதத்திலும் உடலுறவு கொள்ளும்.  🐈

இந்த மனுசனுக்கு மட்டும்… வருசம் 365 நாளும் உறவு கொண்டது காணாது என்று,
65 வயதுக்கு மேலேயும்… உறவு கொள்ளும் ஆசை, விட்டுப் போகவில்லை. 😂

வேலை செய்தால்… பென்சன் எடுக்கிற மாதிரி, 😎
இந்த விளையாட்டுக்கும்… சுய கட்டுப்பாட்டுடன்  பென்சன் எடுக்கலாம்  தானே. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

இந்த விளையாட்டுக்கும்… சுய கட்டுப்பாட்டுடன்  பென்சன் எடுக்கலாம்  தானே

நீங்கள் எனது வங்கி இலக்கத்துக்கு பென்சன் அனுப்பினால்....எடுத்து கொள்ளுகிறேன....😂🤝

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

..சிவராஜ் வைத்தியர் வகையறாக்களிடம் போற எண்ணம் போலும். மெலிதாக ஆலோசனை கேட்பதுபோல உள்ளது  உங்கள் எழுத்து ..🤣

index.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வேறு வேலைகள் எதுவும் இல்லை. இருக்கிற வேலையைத்தானே செய்ய முடியும்  🧐

அதுசரி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த வயதினருடன் பாலுறவு கொள்ள விரும்புகின்றனர் என்று  BBC சொல்கிறதா ? 

😉

சட்டப்படி எந்த வயதினருடனும்  கலந்துரையாடலாம் என நினைக்கின்றேன். 🤪

43 minutes ago, தமிழ் சிறி said:

மிருகங்கள் கூட…. இனப் பெருக்கம் செய்வதற்காக,  
குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே,  உடலுறவு கொள்கின்றன.
உதாரணத்துக்கு நாய்… கார்த்திகை மாதத்திலும், 🐕‍🦺
பூனை… மாசி மாதத்திலும் உடலுறவு கொள்ளும்.  🐈

அப்படியாகவா? 😂
மனிதர்களுக்கு எந்த மாதம்  இனப்பெருக்கத்துக்கு உகந்தது சார்? 🤣

46 minutes ago, தமிழ் சிறி said:

இந்த மனுசனுக்கு மட்டும்… வருசம் 365 நாளும் உறவு கொண்டது காணாது என்று,
65 வயதுக்கு மேலேயும்… உறவு கொள்ளும் ஆசை, விட்டுப் போகவில்லை. 😂

65 வயதுக்கு மேல இருமல்,காய்ச்சல்,கொட்டாவி, அது இது எல்லாம் நிண்டால் நானும் அதை நிறுத்த தயார் 😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

மிருகங்கள் கூட…. இனப் பெருக்கம் செய்வதற்காக,  
குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே,  உடலுறவு கொள்கின்றன.
உதாரணத்துக்கு நாய்… கார்த்திகை மாதத்திலும், 🐕‍🦺
பூனை… மாசி மாதத்திலும் உடலுறவு கொள்ளும்.  🐈

இந்த மனுசனுக்கு மட்டும்… வருசம் 365 நாளும் உறவு கொண்டது காணாது என்று,
65 வயதுக்கு மேலேயும்… உறவு கொள்ளும் ஆசை, விட்டுப் போகவில்லை. 😂

வேலை செய்தால்… பென்சன் எடுக்கிற மாதிரி, 😎
இந்த விளையாட்டுக்கும்… சுய கட்டுப்பாட்டுடன்  பென்சன் எடுக்கலாம்  தானே. 😁

 

எனது  வன்மையான  கண்டனங்களை கந்தையா  அண்ணை  சார்பில்  தெரிவித்துக்கொள்கின்றேன்😝

முந்தித்தான்  வேலை  வேலை  என  அலைந்தோம்

இப்ப  சும்மா  இருக்கும் நேரத்திலும்  சுரண்டிப்பார்க்கமுடியாதது என்றால் யாம் என்ன  செய்வோம்??

நாங்க  பாவம்  ராசா🤪

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த வயதிலை…. கோயில், குளத்துக்கு போறது…
பேரக் குழந்தைகளுடன் விளையாடுறது…
அதை விட்டுட்டு… சாகும் மட்டும், புணர்ந்து… கொண்டு இருக்க வேணுமா. 🤣

பொல்லு… பிடிக்கிற வயசிலை, பொ**…  போட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. 😂

சிவ சிவா அப்பனே முருகா பிள்ளையாரப்பா எண்டு கோயிலுக்கு போறதாலை தானே பிள்ளைப்பாக்கியம் கூடிக்கொண்டு போகுது.....🥰
நான் என்ன செய்யட்டும்??????? 🙃

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சட்டப்படி எந்த வயதினருடனும்  கலந்துரையாடலாம் என நினைக்கின்றேன். 🤪

ஒரு  கட்டு  வைக்கோலை தூக்கமுடியுமென்றால் நீங்கள்  எந்த  வயதினருடனும் கலந்து உரையாடலாம்? என்கிறது  தமிழரது  ஆரம்ப  கால  ஆராய்ச்சி?😜

Just now, குமாரசாமி said:

சிவ சிவா அப்பனே முருகா பிள்ளையாரப்பா எண்டு கோயிலுக்கு போறதாலை தானே பிள்ளைப்பாக்கியம் கூடிக்கொண்டு போகுது.....🥰
நான் என்ன செய்யட்டும்??????? 🙃

அதிலேயும் நம்ம முருகனிடம்  போனால் பக்கத்து  வீட்டுக்கும் கலக்கச்சொல்லுதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

இந்த விளையாட்டுக்கும்… சுய கட்டுப்பாட்டுடன்  பென்சன் எடுக்கலாம்  தானே. 😁

பிபிசி சொன்னாப் பிறகும் முரண்டு பிடிக்கப்படாது 🤣

2 minutes ago, விசுகு said:

ஒரு  கட்டு  வைக்கோலை தூக்கமுடியுமென்றால் நீங்கள்  எந்த  வயதினருடனும் கலந்து உரையாடலாம்? என்கிறது  தமிழரது  ஆரம்ப  கால  ஆராய்ச்சி?😜

கருங்காலி எப்ப வைரம் பெறும் எண்டு தெரியும் தானே விசுகர் 🏋🏼‍♂️ 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

அதிலேயும் நம்ம முருகனிடம்  போனால் பக்கத்து  வீட்டுக்கும் கலக்கச்சொல்லுதே?

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பிபிசி சொன்னாப் பிறகும் முரண்டு பிடிக்கப்படாது 🤣

கருங்காலி எப்ப வைரம் பெறும் எண்டு தெரியும் தானே விசுகர் 🏋🏼‍♂️ 😁

 

நம்ம  சிறியருக்கு  காலில  தானே  அண்ணை காயம் பட்டது?🤣

4 minutes ago, குமாரசாமி said:

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்....

 

சும்மா  சிலிர்க்குதில்ல?😜

(இணையவன் வாறதுக்குள்ள ஓடிவிடுவம்?😅

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையிலே அமிர்தமே இருந்தாலும் ....
அதைவிட சுவையானது எங்கே அன்று அலைவதே மனித மனம்.
அதுதான் இந்த மனிதன் இந்த அழகான பூமியையே அழித்துக்கொண்டு இருக்க காரணம் 

கையிலே சக்கரை கிடைத்தாலே ....
அமிர்தம் என்ற அளவுக்கு கொண்டாட தெரிந்தால் 
மனதை வென்று ஒரு கொண்டாட்ட நிலையிலேயே வாழ்ந்து கொள்ளலாம் 

வயதில் ஒரு பக்குவம் வருவது மனதுக்கு  மட்டுமல்ல வாழ்வுக்கும் அவசியமான ஒன்று 
பெண்கள்  பறவைகள் மிருகங்கள் காடுகள் மலைகள் போன்ற இயற்கை எவ்வளவு 
அழகானது என்ற ஆழமான ரசனை கண்களில் தெளிவு இருந்தாலே தெரிய தொடங்கும் 

மத நம்பிக்கை கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு 
மதங்களின் சார அம்சம் தெளிவான அறிவிலேயே புரிய தொடங்கும் 
அல்லாஹ் சிவன் கிறிஸ்து போன்றவர்கள் எங்குமே இல்லாதவர்கள் ... இல்லாமையிலேயே எல்லாம் 
இருக்கிறது என்பதைத்தான் மதங்கள் சொல்கின்றன என்ற புரிதல் வரும் 
அப்போ மூட நம்பிக்கைகள் கலைந்து போகும் ... 
அது இல்லாதவர்களுக்கு சமூக பணி நற்பணிகளின் பலா பலன் புரியத்தொடங்கும் 

அவசர வாழ்க்கையில் ஏமாற்றங்கள்.... பிறருடனான உறவுகள் கடமைகள் 
அடுத்தவரின் அலங்கோல வாழ்க்கையினால் வரும் கோபம் தாபம் போன்றவை 
ஒரு முட்டு கட்டையாக இருந்துகொண்டே இருக்கும் 

காமத்தில் கற்பனையை கடந்துவிட்டால் ... அதை கடந்து அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை 
வீண் கற்பனைகள்தான் முழு சிக்கலுக்கும் காரணம் ஆகிறது என்ற தெளிவு ஆறுபதில் 
வரவில்லை என்றால் வாழ்க்கை பெரும் சிக்கலாவே அமையும். இந்த வாழ்வை திருப்திகரமாக முடித்து  
சாவை மகிழ்ச்சியுடன் அணைக்கும் பாக்யம் கைதவறி போகும்   

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.