Jump to content

அழகான அதிபர் உரை-பா .உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


அழகான அதிபர் உரை-பா .உதயன்

அழகான அதிபர் உரை 
என்றாராம்
அனைவரும் வாழ்த்து 
சொன்னாராம்

நேற்று வரை தூற்றி 
நின்றவரும்
அழகப்பெருமாளை 
ஆள வைக்க 
நினைத்தவரும்
இன்று அவர் காலடியில் 
விழுந்தாராம்

இதுவெல்லோ நாட்டுக்கு 
தேவையென்றாராம்
சும்மாவா ரணில் என்றால் 
நரி என்றும் சிலர் 
சொன்னாராம்

அனைவருமே 
இன் நாட்டு மக்கள் 
என்றாராம் 

இருள் கடந்து 
வெளிச்சம் வரும் 
என்றாராம் 
அது தனக்கு தெரிகிறது 
என்றாராம் 

அனைவருக்கும் 
வெளிச்சம் வர
செய்வாராம் 

முன்பு ஆறு தடவை 
பிரதமராய் இருந்தாராம் 
அப்பவெல்லாம் 
ஏன் இவற்றை 
செய்ய மறந்தாராம் 

ஆட்டத்திலே இழந்தாலும்
அசையாராம் 
எந்தப் பதவியையும் 
எப்போதும் 
விட்டு இவர் 
விலகாராம் 

அந்த நரி போல 
தந்திரங்கள் 
செய்வாராம் 
தேர்தல் ஒன்றும் வைக்காமல் 
தெரிவானாராம் 

தனியத் தான் வந்தாராம் 
இப்போ பதவிக்காக
பலரும் இப்போ 
இவர் பின்னாலாம்

இன்னும் இரண்டு வருடம் 
இலங்கையை இவர் 
ஆளப்போறாராம் 

இருந்து பார்ப்போம்
என்ன செய்யப்போறாராம்
எல்லோருக்கும் வெளிச்சம் 
தெரிய வைப்பாரா
இல்லை இவரும் 
வீட்ட போவாரா.

பா .உதயன் ✍️
 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

 இரண்டு வருடத்துக்குள் (இவர் ஆட்சியில் இருந்தால்) ஒரு பிரளயம் செய்யாமல் போகமாட்டார். 

கவிதைக்கு நன்றி , உதயன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, uthayakumar said:

நேற்று வரை தூற்றி 
நின்றவரும்
அழகப்பெருமாளை 
ஆள வைக்க 
நினைத்தவரும்
இன்று அவர் காலடியில் 
விழுந்தாராம்.

-----

முன்பு ஆறு தடவை 
பிரதமராய் இருந்தாராம் 
அப்பவெல்லாம் 
ஏன் இவற்றை 
செய்ய மறந்தாராம் 

ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா

அழகப்பெருமாளை, ஆள வைக்க  நினைத்தவர்... சுமந்திரன் தானே. 😁
நல்ல ஒரு கவிதைக்கு நன்றி உதயன். 👍 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்,தமிழ் சிறி உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வெளிச்சத்தை மக்கள் தாமாகத்தான் தேட வேண்டும்.......!

கவிதைக்கு நன்றி உதயன்.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.