Jump to content

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது.

குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட புகலிடம் வழங்கவில்லை

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் | Countries Did Not Offer Asylum For Gota

 

கோட்டாபய ராஜபக்ச குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட அவருக்கு புகலிடம் வழங்கவில்லை. அத்துடன் இந்தியா தனது நாட்டுக்கு வரவும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அங்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க விசா அனுமதி கோரியிருந்தார்.

 

இந்த கோரிக்கையின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்கம், அவரது விசா அனுமதி காலத்தை நீடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.

கோட்டாபயவை இலங்கை வரவழைக்க முயற்சித்து வரும் ரணில்

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் | Countries Did Not Offer Asylum For Gota

 

முதலில் மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் - தமிழ்வின் (tamilwin.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  இருக்கவே இருக்கிறது சீனா கொத்தாவுக்கு உதவ. அங்கு புகலிடம் கேட்கலாம்தானே !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

  இருக்கவே இருக்கிறது சீனா கொத்தாவுக்கு உதவ. அங்கு புகலிடம் கேட்கலாம்தானே !!

ஏன் முயற்சிக்கவில்லை? அவர்களாக கூப்பிடட்டும் என்று நினைக்கிறாரோ? சீன, அவர்களுக்கு தேவையென்றால் விண்ணப்பிக்கட்டும் என்று காத்திருக்கும். விருந்தினர், அழைப்பிதழ் பிரச்சனை. சீனா அடுத்த நாடுகளை சுரண்டும் நாடு, இவரை சும்மா வைத்து பராமரிக்க விரும்புமா?

3 hours ago, nochchi said:

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. 

ரணில் அவரை இலங்கைக்கு கொண்டுவந்தால்; அவரை காட்டி கலகக்காரரை அடக்கலாம், கலகக்காரரை காட்டி கோத்தாவை அடக்கி சுலபமாய் தன் அரசியலை நகர்த்தலாம் என நினைக்கிறதோ நரி! ஏதோ ஒரு தந்திரமில்லாமல் இதன் வால் சும்மா ஆடாது.  

4 hours ago, nochchi said:

இந்த கோரிக்கையின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்கம், அவரது விசா அனுமதி காலத்தை நீடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதான் சிங்கப்பூர்! சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று. பணம் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி கொத்தாவுக்கு புனையபட்ட செய்தி போல் உள்ளது . சிங்கபூர் வந்ததும் வராததுமாக எங்கட நாடுபாய் ந்த கூட்டம் கொரட்டையில் இருந்து எழும்பி கொத்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு கொடுத்தவையாம் இதெல்லாம் மீண்டும் கோத்தா இலங்கையில் ராஜ மரியாதையுடன் இறங்குவதற்கான அடித்தளம் எந்த சிங்களவரால் அடித்து துரத்த பட்டரோ அதே சிங்களவரால் தமிழரை வென்றவர் அவருக்கு உலகில் இருக்க நாடு இல்லை எனும் அனுதாப பார்வையில் மீண்டும் தரை இறங்குவார் இலங்கையில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஆக்கள் கொடுக்கிற  முட்டிற்த்தான் சிங்களம் சோர்ந்து போகாமல் இன்னும் தனித்து நிமிர்ந்து நிக்குது. இருந்தாலும், வீழ்ந்தாலும், வீழ்த்தினாலும் சளைக்காமல், தந்திரமில்லாமல், முட்டு கொடுக்கும் வள்ளல்கள் நம்மவர்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2022 at 00:05, satan said:

சீனா அடுத்த நாடுகளை சுரண்டும் நாடு, இவரை சும்மா வைத்து பராமரிக்க விரும்புமா?

சுரண்டல் சர்வாதிகார சீனா மற்றய நாடுகளை சுரண்டி எடுத்த பணத்தில் தனக்கு தேவை என்றால் அவரை வைத்து பராமரிக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

சுரண்டல் சர்வாதிகார சீனா மற்றய நாடுகளை சுரண்டி எடுத்த பணத்தில் தனக்கு தேவை என்றால் அவரை வைத்து பராமரிக்கும்.

கோத்தாவை நாட்டுக்குள் எடுத்து வீண் வம்பில மாட்டிக்கொள்ள எந்த நாடும் விரும்பாது. இனிமேல் இவரை பராமரிப்பதில் யாருக்கும் எந்த பயனுமில்லை. ஏற்கெனவே அறிவித்து விடடார்கள் சீனாவுக்கு அதாவது ஒரு அரசாங்கத்தோடு போடப்படும் உடன்படிக்கை அந்த அரசு பதவி  முடிந்தவுடன் அந்த உடன்படிக்கையும் காலவாதியாகிவிடும் என்று. ஒருவேளை கோத்தாவை வைத்து நாட்டை கைப்பற்ற திட்டம் வகுக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சுரண்டல் சர்வாதிகார சீனா மற்றய நாடுகளை சுரண்டி எடுத்த பணத்தில் தனக்கு தேவை என்றால் அவரை வைத்து பராமரிக்கும்.

சுரண்டலை சீனா மட்டும்தான் செய்ததா அல்லது செய்கிறதா? 

பிரித்தானியா இந்தியாவைச் சுரண்டி 3 trillion பவுண்ஸ்சுக்கும் மேல்  ஆட்டையைப் போட்டதாக 

அண்மையில் இந்திய அரசியல்வாதி சசிதரூர் சொல்லியதாக நினைவு

வரலாறு முக்கியம்  அமைச்சரே  😉

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.