Jump to content

ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

By Rajeeban

09 Aug, 2022 | 10:37 AM
image

ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் மனித உரிமை கண்காணிப்பகம் தனது முக்கிய மனித உரிமை கரிசனைகளை வெளியிட்டுள்ளது.

பொருளாதாரத்தை முறையாக கையாளமை, ஊழலிற்கு எதிராக பல மாதங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி பதவி விலகியதை தொடர்ந்து ஜூலை 21 ம் திகதி ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.

பலவருட தவறான நிர்வாகம் மனித உரிமை மீறல்களின் பின்னர் இலங்கை அரசியல் பொருளாதார மனித உரிமை நெருக்கடியின் மத்தியில் சிக்குண்டுள்ளது.

உரிய சமூக பாதுகாப்பு நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 

நாட்டில் காணப்படும் ஊழலிற்குதீர்வை காண்பதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களை நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

அதேவேளை கருத்துசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளை மதிக்கவேண்டும் ஆயுதப்படையினரின் துஸ்பிரயோகத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல சவால்களை எதிர்கொண்டுள்ளார், ஆனால் மிக கொடுரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆர்ப்பாட்ட தலைவர்களை அரசியல் நோக்கத்தின் கீழ்  கைதுசெய்வது செயற்பாட்டு குழுக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் போன்றவை இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பிரச்சினைகளிற்கு தீர்வை காண உதவாது   என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பின்பற்றினால் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினால் நெருக்கடிகளிற்கான அடிப்படைகளிற்கு தீர்வை கண்டால் மாத்திரமே சர்வதேச உதவிகள் பயனுள்ளவையாக காணப்படும் என இலங்கையின் சகாக்கள் தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/133196

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல சவால்களை எதிர்கொண்டுள்ளார், ஆனால் மிக கொடுரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆர்ப்பாட்ட தலைவர்களை அரசியல் நோக்கத்தின் கீழ்  கைதுசெய்வது செயற்பாட்டு குழுக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் போன்றவை இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பிரச்சினைகளிற்கு தீர்வை காண உதவாது   என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

பச்சைப்பிள்ளை மாதிரி சிரிச்சுக்கொண்டே கழுத்தறுக்கும் முகமூடியை கிழித்தெறிந்தாயிற்று. இனி உண்மை முகத்தை மறைக்க முடியாது,. சண்டித்தனம், எச்சரிக்கை விடுவார்!

2 hours ago, கிருபன் said:

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பின்பற்றினால் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினால் நெருக்கடிகளிற்கான அடிப்படைகளிற்கு தீர்வை கண்டால் மாத்திரமே சர்வதேச உதவிகள் பயனுள்ளவையாக காணப்படும்

சும்மா எச்சரித்து காலத்தை கடத்தாமல் செயலில் காட்டுங்கோ. நாட்டின் இந்த இழிநிலைக்கு சர்வதேசத்தின் கேள்வியற்ற உதவிகளுமே காரணம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.