Jump to content

மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு!


Recommended Posts

மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு! (வீடியோ)

மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு! (வீடியோ)

 

மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.

அதனடிப்படையில் நாளை (10) முதல் 75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் 198 ரூபாய் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 60 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணம் 200 வீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது 600 ரூபாவை விட குறைந்த தொகையாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 90 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 276 வீத அதிகரிப்பை மின்சார சபை கோரியிருந்த போதிலும், 125 வீத அதிகரிப்பிற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமையைப் பயன்படுத்தி சூரிய மின் கலம் பொருத்துபவர்களும் விலையை தாறுமாறாக உயர்த்தி வைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அடுத்த நெருக்கடி: மின் கட்டணம் 75% அதிகரிப்பு - ரணில் அரசுக்கு எதிராக மீண்டும் கொந்தளிப்பு

  • ரஞ்சன் அருண் பிரசாத்;
  • பிபிசி தமிழுக்காக
40 நிமிடங்களுக்கு முன்னர்
 

மின் கட்டணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் இன்று முதல் மின்சார கட்டணத்தை 75 சதவிகிதம் அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவிகிதம் அதிகரிக்கப்படுகின்றது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் மின்சார கட்டண திருத்தம் சுமார் 9 வருடங்களில் பின்னர் இவ்வாறு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2014ம் ஆண்டு 25 சதவிகித மின்சார கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 75 வீதத்தால் அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

பூஜ்ஜியம் முதல் 30 அலகுகளுக்கு (யூனிட்) மாதம் ஒன்றிற்கு 198 ரூபா செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

31 முதல் 60 வரையான அலகுகளுக்கு மாதமொன்றிற்கு 599 ரூபாவும், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 1,467 ரூபாவும் செலுத்த வேண்டும்.

மேலும், 91 முதல் 120 வரையான அலகுகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில், 2,976 ரூபாவும், 121 முதல் 180 வரையான அலகுகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில் 5,005 ரூபாவும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 48 லட்சம் மக்கள் 90 அலகுகளுக்கு குறைவாகவே மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

30 வரையான அலகுகளுக்கு இதுவரை காணப்பட்ட 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 8 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

ஜனக்க ரத்நாயக்க

பட மூலாதாரம்,PUBLIC UTILITIES COMMISSION

அத்துடன், 31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 61 முதல் 90 அலகுகளுக்கு இடையில், ஒரு அலகுக்கு காணப்பட்ட 7 ரூபா 85 சதமான கட்டணம், தற்போது 16 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

91 முதல் 180 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 27 ரூபா காணப்பட்ட நிலையில், அது தற்போது 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறைக்கான அனுமதிக்கப்பட்ட மின்சார கட்டண அதிகரிப்பில் 50 வீத கட்டண அதிகரிப்பை மூன்று மாதங்களின் பின்னர் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி துறைகளின் மின்சார கட்டணத்தை டாலரின் செலுத்தும் பட்சத்தில், அதற்கு 1.5 சதவிகித நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 60 முதல் 65 வீதம் வரையான மின்சாரம், எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

அனல் மின் உற்பத்திகளுக்கு தேவையான கரியை, கடந்த ஜனவரி மாதம் 143 டாலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதுடன், அதே கரியை தற்போது 321 முதல் 350 டாலர் வரை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கின்றார்.

 

மின் கட்டணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி வரையான காலப் பகுதிக்கு தேவையான கரி மாத்திரமே தற்போது களஞ்சியத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, 6 மாதங்களுக்கு முன்னதாக 90 ரூபாவிற்கு கிடைத்த மசகு எண்ணெய், தற்போது 419 ரூபாவிற்கு கொள்வனவு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் வகைகளுக்கு 350 சதவிகித விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, விருப்பமின்றியேனும், இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்றார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை மின்சார உற்பத்திக்காக 160 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

 

ரணில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையிலுள்ள நிறுவனங்கள், தமது வருமானத்தில் 60 வீதத்திற்கு அதிகமான தொகையை அந்நிய நிதியில் பெற்றுக்கொள்ளுமாக இருந்தால், அந்த நிறுவனங்கள் கட்டாயமாக டாலரின் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு

பொதுமக்களினால் இந்த கட்டண அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாது என மின்சார தொழிற்சங்க ஒன்றிய கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜித் ஜயலால் தெரிவிக்கின்றார்.

மக்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர, அவர்களினால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மின் கட்டணம் அதிகரிக்கப்பட கூடாது என அவர் குறிப்பிடுகின்றார்.

246 ரூபா சமையல் எரிவாயு விலையை குறைத்து, 75 சதவிகிதம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 

நாடாளுமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதேவேளை, தமது தொழில்துறை மேலும் நட்டம் அடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை சிறு தொழில்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார தெரிவிக்கின்றார்.

மூலப் பொருட்கள் இல்லாமல், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தமது தொழில்துறை மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், மின்சார கட்டண அதிகரிப்பானது, தொழில்துறையை முழுமையாக மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அனைத்து தொழில்துறைகளிலும் விலை அதிகரிப்பு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதே தவிர, மாற்று திட்டங்கள் குறித்து சிந்திக்கவில்லை என அவர் குற்றஞ்சுமத்துகின்றனர்.

எதிர்கட்சிகள் எதிர்ப்பு

மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் தமக்கு விவாதமொன்று அவசியம் என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கோரிக்கை விடுத்தது.

விவாதமொன்றிற்கு அல்லது விளக்கமளிப்பதற்கு தாம் தயார் என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, சபையில் அறிவித்தார்.

இதன்படி, இன்றைய தினம் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62490011

Link to comment
Share on other sites

செய்தியின் தலைப்பு அதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை.

75 வீத அதிகரிப்பு சிறு நிறுவனங்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே.

பொதுமக்களுக்கு 200 வீதத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Quote

 

அத்துடன், 31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 61 முதல் 90 அலகுகளுக்கு இடையில், ஒரு அலகுக்கு காணப்பட்ட 7 ரூபா 85 சதமான கட்டணம், தற்போது 16 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது 90 அலகுகளுக்குக் குறைவாக பயன்படுத்துபவர்கள் இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதியினர். 

கீழுள்ள பிரெஞ்சுச் செய்தியில் பொதுமக்களுக்கு 264 % வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.leparisien.fr/international/au-sri-lanka-les-tarifs-delectricite-en-hausse-de-264-09-08-2022-2HB52BJB2ZGILJC5NNHYX2BXCU.php

Link to comment
Share on other sites

Sri Lanka hikes electricity prices 75-pct after soft-peg collapse

 
By DULYA DE SILVA

Tuesday August 9, 2022 1:01 pm

 

ECONOMYNEXT – The Public Utilities Commission of Sri Lanka (PUCSL) has approved a proposal by the Ceylon Electricity Board (CEB) to increase monthly electricity charges by an average of 75 percent, effective Wednesday August 10.

PUCSL Chairman Janaka Ratnayake announced the tariff hike on Tuesday August 09, noting that different price plans will be applicable to different numbers of units consumed.

Ratnayake said the CEB is now permitted to increase rates by 264 percent to consumers who use below 30 units up to a maximum of 198 rupees, and from 30 units to 60 units by 211 percent to a maximum of 599 rupees. From 60 to 90 units, the increase will be by 125 percent.

This will be the first time electricity rates are increased in nine years. The CEB has faced steep cost increases since 2001 with rupee depreciation adding to costs. CEB diesel rupee cost went up 350% since 2013, coal rupee cost went up 650% ad furnace oil rupee cost went up 410%.

 

In June 2022, the CEB requested PUCSL approval to raise tariffs by 229 percent.

The PUCSL has imposed a number of conditions on the CEB for the rate hike. These include the opening of a bulk supply transaction account, conducting an independent dispatch audit for 2021, renewing and revising purchase and sales agreements and payment of interest for security deposits obtained from consumers.

The PUCSL had requested that no bonuses should be given for CEB staff until finances become stabilised.

The CEB has also been instructed to charge only a monthly fixed amount for retail consumers with solar rooftops under the Net Metering and Net Accounting schemes.

Ratnayake said 100 million US dollars is needed to import coal after October. Base power is provided by coal, he said.

Furnace costs have also risen, he said, noting that Sri Lanka currently generates 30 to 35 percent of electricity using fuel.

“With the rising global prices and the war situation we need to increase tariffs because we produce a lot of electricity by burning fuel,” he said.

Meanwhile, local electricity suppliers have to be paid 20 billion rupees, he added.

The new tariffs are made according to the least cost based method. The tourism industry will get tariff hikes in two stages, due to the precarious situation of the industry.

People who earn more than 60 percent of income in forex will have to pay electricity bills with dollars, said Ratnayake. The consumers who fall under this scheme will get a 1.5% discount on their bills.

“Power cuts are going on, the dollar has gone up, we are getting oil for high prices without a proper plan…so we cannot justify [raising prices as CEB had earlier proposed],” he said.

He claimed that in the CEB will be able to cover costs in the next six months, as the revenue requirement filed by CEB was 505 billion rupees, while the expected revenue increase due to the new tariffs is expected to be 512 billion rupees including LECO sales.

The Treasury had allocated 85 billion rupees to the CEB, he added.

“Till next January we might be able to manage the situation with less than three hour power cuts, depending on several factors” he said, commenting on the ongoing scheduled power cuts.

Ratnayake said Sri Lanka has 7.8 million electricity users, 6.7 million of which are domestic consumers. 1.1 million are general purpose, while 1.4 million consume under 30 units.

1.7 million use 90 units, while 4.8 million use fewer than 90 units each month, he said. (Colombo/Aug09/2022)

https://economynext.com/sri-lanka-hikes-electricity-prices-75-pct-after-soft-peg-collapse-98364/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பணத்தை உருவி எடுக்க முடிவு பண்ணிட்டானுகள் ஏற்கனவே நாட்டு மக்கள் கோவணத்துடன் என்று தெரியவில்லை போல 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.