Jump to content

மலக்குடலை அறுத்ததாக புகார் - தாய், சேயுடன் சிகிச்சைக்கு அலைந்த உறவினர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலக்குடலை அறுத்ததாக புகார் - தாய், சேயுடன் சிகிச்சைக்கு அலைந்த உறவினர்கள்

9 ஆகஸ்ட் 2022, 08:25 GMT
புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்
 

பிரசவத்தின்போது தவறான சிகிச்சை அளித்ததாக புகார்

 

படக்குறிப்பு,

சுசிசந்திரிகா

தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே பிரசவத்தின் போது கவனக்குறைவாக கர்ப்பிணிக்கு அளித்த சிகிச்சையால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி, பெண்ணின் உறவினர்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில், மருத்துவரின்றி செவிலியரே தனியாக பிரசவம் பார்த்ததாகவும், குழந்தையை பிரசவித்த பின்னர் தாயின் மலக்குடலை செவிலியர் கத்தரித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இந்த கூற்றை தலைமை மருத்துவ அலுவலர் மறுக்கிறார். என்ன நடந்தது வாணியம்பாடியில்?

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (26). இவர் மனைவி சுசிசந்திரிகா (25). இவருக்கு முதல் பிரசவத்திற்காக உதயேந்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31.07.2022 அன்று அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரசவத்தின் போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர் 2,000 ரூபாய் பணம் கேட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியரே சுகப்பிரசவம் பார்த்தபோது குழந்தை பிறக்கும் சமயத்தில் சதையை கத்தரித்துக் குழந்தையை வெளியே எடுத்து பின்னர் தையல் போட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.பிரசவத்துக்கு இரு தினங்களுக்குப் பிறகு தையல் பிரிந்ததால் சசிசந்திரிகாவின் உடல்நிலை மோசமாகியுள்ளது.

அவரை மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இரு நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுசிசந்திரிகா அனுமதிக்கப்பட்டார்.

 

அரசு பேருந்தை சிறைப்பிடித்த உறவினர்கள்

அங்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இதனால் சுசிசந்திரிகா உயிருக்குப் போராடி வருவதாகவும் முறையாக சிகிச்சையளிக்காத ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுசிசந்திரிகாவின் உறவினர்கள் வாணியம்பாடி - கைலாசகிரி சாலையில் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் செய்தனர்.

 

உறவினர்கள் போராட்டம்

இதையடுத்து போாரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாணியம்பாடி கிராம காவல்துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து வட்டார தலைமை மருத்துவர் அலுவலர் பசுபதி கூறுகையில், "சுசிசந்திரிகா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மிகுந்த உடல் சோர்வு ஏற்பட்டதாகவும் மலக்குடல் ஏதும் கத்தரிக்கப்படவில்லை. செவிலியர் பிரசவத்திற்கு 2,000 ரூபாய் பணம் பெற்றது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்றார்.

மலக்குடலை அறுத்ததாக சந்தேகம்

இது குறித்து மருத்துவர் பசுபதியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 90% செவிலியர்கள் தான் பிரசவம் பார்க்கிறார்கள். தையல் போடப்பட்ட இடத்தில் காயம் ஆறாததால் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகும் சசிசந்திரிகா உடல் சுகவீனமாக இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு அவர் பரிந்துரைக்கப்ட்டார். அங்குள்ள அவரது நிலையை கண்காணிக்க ஒரு மருத்துவர் குழு அனுப்பியுள்ளோம்," என்று கூறினார்.

ஆனால், பிரசவத்துக்குப் பிறகு தையல் போட்ட பகுதியில் சதை கிழிந்ததாகவும் இரண்டாவது முறையாக போட்ட தையலும் பிரிந்ததாக உறவினர்கள் கூறினர்.

"மூன்றாவது முறையாக அதே மருத்துவ நிலையத்துக்கு சுசிசந்திரிகாவை அழைத்துச் சென்றோம். அப்போது அங்கிருந்த மருத்துவர் சுசிசந்திரிகாவை முழுமையாக பரிசோதனை செய்த பிறகு தையல் போட்ட செவிலியரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் இருந்த செவிலியரிடம் மலக்குடலை நீங்கள் கத்தரித்து விட்டீர்கள் என மருத்துவர் கூறியிருக்கிறார். அப்போதுதான் தான் சசிசந்திரிகாவின் மலக்குடலை கத்திரித்ததாக அந்த செவிலியருக்கே தெரியவந்துள்ளது," என்று பெண்ணின் உறவினர் சசிகலா கூறுகிறார்.

மேலும், "2,000 ரூபாய் பணம் வாங்குவது குறித்து வீட்டில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். பிரசவம் முடிந்த பிறகு மூன்று நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து சுசிசந்திரிகாவை மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கும் இரண்டு நாள் சிகிச்சை பார்த்த பிறகு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இங்கும் சிகிச்சை அளிக்க முடியாது, மேல் சிகிச்சைக்காக சென்னை செல்லுங்கள் எனக் கூறினர். பிஞ்சுக் குழந்தையை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று கூறிய பிறகே, அடுக்கம்பாறை மருத்துவமனையிலேயே சுசிசந்திரிகாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்னர்," என்கிறார் சசிகலா. https://www.bbc.com/tamil/india-62475300

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.