Jump to content

சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பது ஏன்?

  • முரளிதரன் காசி விஸ்நாதன்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

செஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பதை நீக்க வேண்டும் என இந்து மதம் சார்ந்த கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்திருக்கும் கருத்து சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகிவருகிறது. ராஜாவின் தலையில் சிலுவைக் குறி வைப்பது எப்போது துவங்கியது?

சமீபத்தில் வீடியோ நேர்காணல் ஒன்றில் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பதை மாற்ற வேண்டுமெனக் கூறியிருந்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், "செஸ் காயின்களில் குறிப்பாக ராஜாவின் அடையாளமாக ஏன் சிலுவை வந்தது! சிவன் காலம்தொட்டே ஆடப்படும் ஆட்டத்தில் எப்படி ராஜாவின் அடையாளமாக சிலுவை வந்தது! மிஷனரிகளின் நரித்தனமான வேலையே இது!" என்றும் கூறியிருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அர்ஜுன் சம்பத்தின் இந்தக் கருத்து சமூகவலைதளங்களில் பரவலாக கேலிசெய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படும் சதுரங்க ஆட்டம், இங்கிருந்து பெர்ஷியாவுக்கும் (தற்போதைய ஈரான்) அங்கிருந்து பிற அரேபிய இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவியது. அங்கிருந்து ஸ்பெயினுக்கும் ஸ்பெயினிலிருந்து தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் இந்த ஆட்டம் பரவியது.

 

சதுரங்க விளையாட்டைப் பொறுத்தவரை, எல்லா விளையாட்டுகளைப் போலவும் அவையும் தொடர்ந்து மாறி வந்திருக்கின்றன. சதுரங்கக் காய்களின் உருவமும் தொடர்ந்து மாறியிருக்கிறது. இந்தியாவில் துவக்கத்தில் இந்த ஆட்டம் விளையாடப்பட்டபோது, காய்களுக்கு மிருகங்கள், மனிதர்களின் உருவங்கள் இருந்தன. ஆனால், அரேபிய நாடுகளில் இந்த ஆட்டம் பரவியபோது, அவை சிலைகளைப்போல கருதப்படக்கூடும் காய்கள் அரூப வடிவத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால், ஐரோப்பாவிற்கு ஆட்டம் பரவியபோது இந்தக் காய்களுக்கு மீண்டும் மனிதர்களின் உருவம் அளிக்கப்பட்டது.

12ஆம் நூற்றாண்டுவாக்கில், சதுரங்கத்தின் எல்லாக் காய்களுக்கும் ராஜா, ராணி, வீரர்கள் என மனிதர்களின் உருவம் கொடுக்கப்பட்டுவிட்டது. 13ஆம் நூற்றாண்டுவாக்கில், ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதிகளில், சதுரங்கக் காய்களின் வீரர்களுக்கு knight வீரர்களின் உருவம் அளிக்கப்பட்டது.

 

செஸ்

பட மூலாதாரம்,DISHANT_S

18ஆம் நூற்றாண்டுவாக்கில் சதுரங்க ஆட்டமும் அவற்றுக்கான விதிகளும் உலகம் முழுவதும் நிலைபெற்றுவிட்ட நிலையில், சதுரங்கக் காய்கள் அவை ஆடப்படும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் இருந்தன. பல சமயங்களில் இது குழப்பங்களையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், உலகம் முழுவதும் சதுரங்க ஆட்டதை விளையாடக்கூடிய வீரர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையிலான காய்களை லண்டனைச் சேர்ந்த 'ஜான் ஜாக் ஆஃப் லண்டன்' என்ற விளையாட்டு பொருட்களை தயாரித்து விற்கும் நிறுவனம் வெளியிட்டது. 1849ல் வெளியிடப்பட்ட இந்த காய்களுக்கு 'ஸ்டாண்டன் சதுரங்கம்' (Staunton Chess set) எனப் பெயரிடப்பட்டது.

இந்த ஸ்டாண்டனின் முழுப் பெயர் ஹோவர்ட் ஸ்டாண்டன் (1810 - 1874). இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 1843லிருந்து 1851வரை மிக வலுவான சதுரங்க ஆட்டக்காரராக இருந்தவர். இவர் ஒரு எழுத்தாளரும்கூட. மிகப் புகழ்பெற்ற சதுரங்க ஆட்டக்காரர் என்பதால் அவருடைய பெயர் அந்த புதிய வடிவமைப்பிற்குச் சூட்டப்பட்டது. ஆனால், இந்த புதிய வடிவத்தில் காய்களை உருவாக்கியவர் நதேனியர் கூக்.

இந்த புதிய வடிவமைப்பில்தான் ராஜாவைக் குறிக்க க்ரீடமும் அந்தக் க்ரீடத்தில் சிலுவையும் பொறிக்கப்பட்டது. இந்த வடிவமைப்பிற்கான காப்புரிமை அந்த ஆண்டிலேயே இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வடிவமைப்பில் காய்கள் எளிதில் அடையாளம் காணும்வகையில் இருப்பதால், உலகம் முழுவதும் எளிதில் பரவியது. இதையடுத்து பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) இந்த வடிவமைப்பில் உள்ள காய்களையே, தரநிலைப்படுத்தப்பட்ட காய்களாக அங்கீகரித்தது.

https://www.bbc.com/tamil/india-62488263

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பதை நீக்க வேண்டும் என இந்து மதம் சார்ந்த கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்திருக்கும் கருத்து சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகிவருகிறது.

லூசுகள் உள்ள நாடாய் மாறிக்கொண்டு வருது....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமாளைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். 

🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.