Jump to content

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா?

26 நிமிடங்களுக்கு முன்னர்
 

கோட்டாபய

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திற்கு செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரச எதிர்ப்பு போராட்டம் வலுப் பெற்று, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தமது பொறுப்பிற்கு கடந்த ஜுலை மாதம் 9ம் தேதி எடுத்திருந்தனர்.

இதையடுத்து, தலைமறைவான அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் ஜுலை மாதம் 13ம் தேதி மாலத்தீவு நோக்கி பயணித்திருந்தார்.

மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் நோக்கி பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

 

சுற்றுலா விசாவின் மூலம் சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஸவின் விஸாவை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அவர் மீண்டும் இலங்கைக்கு வருகைத் தருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு வருகைத் தருவதற்கு இது சரியான தருணம் கிடையாது என புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மனைவியுடன், தாய்லாந்து நோக்கி பயணிக்க எதிர்பார்த்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலம் அமெரிக்க பிரஜாவுரிமையை பெற்றிருந்தார்.

 

கோட்டாபய

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க பிரஜாவுரிமையுடனேயே கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தார்.

வெளிநாட்டு பிரஜாவுரிமையை கொண்டவர்கள், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி பதவிகளுக்கு தெரிவாக முடியாது என்ற வகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலப் பகுதியில் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தார்.

தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்து, ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்ஸவின், மகன் மற்றும் மகனின் குடும்பம் இன்றும் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ நிரந்தரமாக செல்வதற்கு நாடொன்று இல்லாமல், சிங்கப்பூரில் தங்கியிருந்ததுடன், தற்போது தாய்லாந்து நோக்கி பயணிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62492624

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதம் 14திகதி, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து போகிறார், கோத்தா

இலங்கையில் இருந்து தப்பி ஓடி, ஒருமாதம் சிங்கப்பூரில் தங்கி இருந்த, இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தா, தாய்லாந்து செல்ல இருக்கிறார்.

இது தொடர்பில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு அதிகாரி, 'no comment' என்று பதிலளித்துள்ளார்.

https://www.dailymirror.lk/top_story/Sri-Lankas-ousted-president-expected-to-go-to-Thailand-sources/155-242793

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாவிற்கு... தாய்லாந்து செல்ல, விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

90 நாள் விசாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து செல்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1294279

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே முடியுமோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே முடியுமோ 🤣

நாட்டு நிர்வாகத்தால், ஒரே தலைவலி....

தல தெறிக்க ஓடியதால்..... உடல் வலி...

போய்.... உடல் உபாதைகளை குறைத்து, வரட்டுமே... 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாயவிற்கு அனுமதியளித்துள்ளோம் - தாய்லாந்து பிரதமர்

By RAJEEBAN

10 AUG, 2022 | 05:50 PM
image

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையில்தாய்லாந்தில்  தங்குவதற்கு இடமளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர்பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மனிதாபிமான கரிசனைகளின் அடிப்படையிலானது,இது தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதிதான் என்ற  வாக்குறுதியை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாயவிற்கு அனுமதியளித்துள்ளோம் - தாய்லாந்து பிரதமர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

நாட்டு நிர்வாகத்தால், ஒரே தலைவலி....

தல தெறிக்க ஓடியதால்..... உடல் வலி...

போய்.... உடல் உபாதைகளை குறைத்து, வரட்டுமே... 😁

ஏற்கனவே போய் வீடியோ வந்த பந்துலவிடமும் ஆலோசனை கேட்கலாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஏற்கனவே போய் வீடியோ வந்த பந்துலவிடமும் ஆலோசனை கேட்கலாம்🤣

பந்துல வீடியோவை பார்த்தேன். அவர்… காசை, விசுக்கும் விதமும்…
கடைசியில் அந்த… சிரிப்பும், ஓகோ… ரகம்.
தாய்லாந்துப் பெண்… பந்துல வயித்தில்,
விரலால்… மேலிருந்து, கீழே தொட்டுக் கொண்டு வந்ததுக்குத்தான் அந்தக் காசு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு செய்தியா? 

அந்த மனுசன் எக்கேடுகெட்டுப்போனால்தான் எங்களுக்கு என்ன? 

7 hours ago, goshan_che said:

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே முடியுமோ 🤣

 

அடிச்ச காசெல்லாத்தையும் தான் அனுபவிக்காமல் அடுத்தடுத்த தலைமுக்றைக்கு விட்டுச் செல்ல அவரென்ன கெளதம புத்தரோ ? 

🤣

 

1 hour ago, தமிழ் சிறி said:

பந்துல வீடியோவை பார்த்தேன். அவர்… காசை, விசுக்கும் விதமும்…
கடைசியில் அந்த… சிரிப்பும், ஓகோ… ரகம்.
தாய்லாந்துப் பெண்… பந்துல வயித்தில்,
விரலால்… மேலிருந்து, கீழே தொட்டுக் கொண்டு வந்ததுக்குத்தான் அந்தக் காசு. 🤣

என்ர ஈமெயில் அற்ரஸ் சிறியரிடம் இருக்கிறதா ? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

என்ர ஈமெயில் அற்ரஸ் சிறியரிடம் இருக்கிறதா ? 

🤣

முகநூலில் அந்தக் காணொளியை…. தற்செயலாக பார்த்தேன்.
மீண்டும் கண்ணில் பட்டால், நிச்சயம் இணைத்து விடுகின்றேன். 🙂
எதுக்கும்… @goshan_che யிடமும் சொல்லி வையுங்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

சுற்றுலா விசாவின் மூலம் சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஸ

7 hours ago, goshan_che said:

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே

கோத்தா உப்புடியே நாடு நாடாய் சுத்துறது எண்டு முடிவெடுத்துட்டார் போல கிடக்கு..... ஒரு யூரியூப் சனல் தொடங்கியிருந்தார் எண்டால் கைச்செலவுக்கு கொஞ்ச காசாவது வந்திருக்கும்..........🤣

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையில்தாய்லாந்தில்  தங்குவதற்கு இடமளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர்பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானமே இல்லாமல் மக்களை கொன்று குவித்தவர், மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை இக்கட்டில் விட்டு தப்பியோடியவருக்கு மனிதாபிமானமா? அல்லது கொள்ளையடித்த பணத்தை தங்கள் நாட்டிலே செலவழிக்க, செய்து கொடுக்கும் வசதியா? அவரின் வினையை உங்களால் தீர்க்க முடியாது, வெளிக்கிட்டால் உங்கள் நாடும் தீப்பற்றி எரியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and outdoors

ஒருவரைப் போல... ஆறு பேர், உலகில் இருப்பார்கள் என்று பகிடியாக சொல்வார்கள். 😜
அதில் ஒருவர்.... எண்ணை  வாங்க நிற்கிறார். 😂

சிலவேளை... அவர் தானோ, இவரோ தெரியாது.  எதுக்கும் உசாராக இருங்கள். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் – ஜனாதிபதி

நவம்பர் மாதம்... இலங்கை திரும்புகின்றார், கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இன்று தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாய ராஜாக்ஷவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியியிருந்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜபக்ஷவின் சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரையும் அவரது மனைவியையும் ஏற்றிச் செல்ல விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1294331

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுப்போன சனாதிபதியாக நான் பதவி விலகமாட்டேன்..எனது பதவிக் காலத்தை நிறைவு செய்தே வெளியேறுவேன் அல்லது தொடர்ந்து தேர்தலில் நின்று வெல்வேன் என்று இறுமாப்புப் பேசிக் கொண்டிருந்தவர்..

இன்று... தோற்று ஓடிப்போன முன்னாள் சனாதிபதி மட்டுமல்ல.. அகதியாக அலைகிறார்.

ஆனால்.. இந்த இனக்கொலைஞனுக்கு.. மனிதாபிமான உதவி செய்ய தாய்லாந்துக்கு எப்படி மனசு வந்திச்சோ. இவர் மீது ஐநா அமைப்பும் போர்க்குற்றம் சுமத்தியுள்ளதை தாய்லாந்து பிரதமர் அறிவாரா..?!

தாய்லாந்து பேச்சுக்கள் தான் புலிகளின் கடைசிப் பேச்சாகவும் அமைந்தது.. தாய்லாந்தில் வைச்சுத்தான் புலி அழிப்புச் சதியே தீட்டப்பட்டது. தாய்லாந்துக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் மறைமுக தொடர்புகளும் உள்ளன.. என்ற சந்தேகம் இப்போ தீவிரமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

தாய்லாந்து பேச்சுக்கள் தான் புலிகளின் கடைசிப் பேச்சாகவும் அமைந்தது.. தாய்லாந்தில் வைச்சுத்தான் புலி அழிப்புச் சதியே தீட்டப்பட்டது. தாய்லாந்துக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் மறைமுக தொடர்புகளும் உள்ளன.. என்ற சந்தேகம் இப்போ தீவிரமாகிறது.

குமரன் பத்மநாதனும்… தாய்லாந்து பெண்ணை கலியாணம் கட்டி,
தாய்லாந்தில்… பலவருடமாக இருந்தவர்.

பின்பு மலேசியாவில்… வலிய பிடிபட்டு,
ஶ்ரீலங்காவில், கோத்தாவின் விருந்தாளியாக இருந்தவர்.
இப்ப சத்தமில்லாமல்  இருக்கிறார்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

கோத்தா உப்புடியே நாடு நாடாய் சுத்துறது எண்டு முடிவெடுத்துட்டார் போல கிடக்கு..... ஒரு யூரியூப் சனல் தொடங்கியிருந்தார் எண்டால் கைச்செலவுக்கு கொஞ்ச காசாவது வந்திருக்கும்..........🤣

 

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

அந்த, வெள்ளை வானுக்கு... வேறை கலர், அடியுங்க சார். 😂

பிற் குறிப்பு: உங்களது யூ ரியூப்  சனலில்  கதைக்கும் போது, 
அடிக்கடி... ஆக்சுவலி, செமயா இருக்கு, வேற லெவல்... என்ற சொற்களையும்,
வீதி ஓர கடைகளில்... ஏதாவது வாங்கி சாப்பிடும் போது...
தலையை... ஆடு, மாடு மாதிரி.. இரண்டு பக்கமும் ஆட்டி சாப்பிடவும். 
அதுதான்..    யூ ரியூப்  சனலின், எழுதப் படாத  விதி. 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

 முடியல. 🤣பகிடிக்கில்லை. சிறிலங்கா திரும்ப முதல் ஒரு பில்டபோடு தான் வருவார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று!

போர்க் குற்றச்சாட்டை... கையிலெடுத்த, சிங்கப்பூர்: சற்று முன்னர் வெளியேறினா... கோட்டா !

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பாங்கொக் செல்லும் விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவரது விசா இன்றுடன் காலாவதியாயாகிய நிலையில் சிங்கப்பூரில் இருந்து செல்லவேண்டிய நிலை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1294419

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அந்த, வெள்ளை வானுக்கு... வேறை கலர், அடியுங்க சார். 😂

பிற் குறிப்பு: உங்களது யூ ரியூப்  சனலில்  கதைக்கும் போது, 
அடிக்கடி... ஆக்சுவலி, செமயா இருக்கு, வேற லெவல்... என்ற சொற்களையும்,
வீதி ஓர கடைகளில்... ஏதாவது வாங்கி சாப்பிடும் போது...
தலையை... ஆடு, மாடு மாதிரி.. இரண்டு பக்கமும் ஆட்டி சாப்பிடவும். 
அதுதான்..    யூ ரியூப்  சனலின், எழுதப் படாத  விதி. 🤣

முடியாது, முடியாது கோட்டவின் தனித்துவ அடையாளமே (unique selling point) அந்த வெள்ளை வான் தான் 🤣.

அவரது சானலுக்கு கூட “வெள்ளைவானில் ஒரு மொள்ளமாரி” என்றுதான் பெயர் வைக்க உள்ளாராம்🤣.

நீங்கள் சொன்ன சொற்பதங்களோடு, “மொத்தமா தூக்கி முதலைக்கு போடு”, “செத்தாண்டா”, போன்ற தனக்கே உரிய பதங்களையும் கோட்ட பாவிக்க உள்ளார்.

 

2 hours ago, தமிழ் சிறி said:

தலையை... ஆடு, மாடு மாதிரி.. இரண்டு பக்கமும் ஆட்டி சாப்பிடவும். 

இல்லை அவர் அருகில் நின்று தலையாட்ட சில தமிழர்களை நியமிக்க உள்ளார்🤣

1 hour ago, nunavilan said:

 முடியல. 🤣பகிடிக்கில்லை. சிறிலங்கா திரும்ப முதல் ஒரு பில்டபோடு தான் வருவார் என நினைக்கிறேன்.

ஓம்… இனி அரசியலுக்கு வரும் எண்ணம் இராது என்று நினைக்கிறேன்…அமெரிக்காவும் போக முடியாது எனில், எதாவது செய்து திரும்பி வர சாரகமான நிலையை உருவாக்கவே முனைவார். வந்தால் கொழும்பில் ஒரு ஜனாதிபதிக்குரிய சலுகை, பாதுகாப்போடு வாழலாம்.

அதுவரை பாங்கொங், புக்கட், பட்டாயா என்று காலம் க(ளி)ழிக்கலாம்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய?

By T YUWARAJ

11 AUG, 2022 | 06:31 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தாய்லாந்து வெளிவிவகார அமைச்சும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைகலம் வழங்கும் வரை, தமது நாட்டில் அவருக்கு தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக அறிய முடிகிறது. இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், ராஜதந்திர கடவூச்சீட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய? | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தாய்லாந்து வெளிவிவகார அமைச்சும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைகலம் வழங்கும் வரை, தமது நாட்டில் அவருக்கு தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் பட்ட  அவலங்களை  கோத்தாவும் அனுபவிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

குமரன் பத்மநாதனும்… தாய்லாந்து பெண்ணை கலியாணம் கட்டி,
தாய்லாந்தில்… பலவருடமாக இருந்தவர்.

பின்பு மலேசியாவில்… வலிய பிடிபட்டு,
ஶ்ரீலங்காவில், கோத்தாவின் விருந்தாளியாக இருந்தவர்.
இப்ப சத்தமில்லாமல்  இருக்கிறார்.

குமரன் பத்மநாதனும்… இவர் தான் இப்ப கோத்தாவை பாதுகாக்கிறாரோ யார் அறிவார். இவரை கோத்தா பாதுகாத்த நன்றிக்கடனுக்கு. தமிழர்கள் தங்களை அழிப்பவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதில் வல்லவர்களாச்சே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் கோத்தபாய.....

Bild

Bild

Bild

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.