Jump to content

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா?

26 நிமிடங்களுக்கு முன்னர்
 

கோட்டாபய

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திற்கு செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரச எதிர்ப்பு போராட்டம் வலுப் பெற்று, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தமது பொறுப்பிற்கு கடந்த ஜுலை மாதம் 9ம் தேதி எடுத்திருந்தனர்.

இதையடுத்து, தலைமறைவான அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் ஜுலை மாதம் 13ம் தேதி மாலத்தீவு நோக்கி பயணித்திருந்தார்.

மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் நோக்கி பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

 

சுற்றுலா விசாவின் மூலம் சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஸவின் விஸாவை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அவர் மீண்டும் இலங்கைக்கு வருகைத் தருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு வருகைத் தருவதற்கு இது சரியான தருணம் கிடையாது என புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மனைவியுடன், தாய்லாந்து நோக்கி பயணிக்க எதிர்பார்த்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலம் அமெரிக்க பிரஜாவுரிமையை பெற்றிருந்தார்.

 

கோட்டாபய

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க பிரஜாவுரிமையுடனேயே கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தார்.

வெளிநாட்டு பிரஜாவுரிமையை கொண்டவர்கள், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி பதவிகளுக்கு தெரிவாக முடியாது என்ற வகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலப் பகுதியில் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தார்.

தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்து, ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்ஸவின், மகன் மற்றும் மகனின் குடும்பம் இன்றும் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ நிரந்தரமாக செல்வதற்கு நாடொன்று இல்லாமல், சிங்கப்பூரில் தங்கியிருந்ததுடன், தற்போது தாய்லாந்து நோக்கி பயணிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62492624

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதம் 14திகதி, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து போகிறார், கோத்தா

இலங்கையில் இருந்து தப்பி ஓடி, ஒருமாதம் சிங்கப்பூரில் தங்கி இருந்த, இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தா, தாய்லாந்து செல்ல இருக்கிறார்.

இது தொடர்பில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு அதிகாரி, 'no comment' என்று பதிலளித்துள்ளார்.

https://www.dailymirror.lk/top_story/Sri-Lankas-ousted-president-expected-to-go-to-Thailand-sources/155-242793

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாவிற்கு... தாய்லாந்து செல்ல, விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

90 நாள் விசாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து செல்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1294279

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே முடியுமோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே முடியுமோ 🤣

நாட்டு நிர்வாகத்தால், ஒரே தலைவலி....

தல தெறிக்க ஓடியதால்..... உடல் வலி...

போய்.... உடல் உபாதைகளை குறைத்து, வரட்டுமே... 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாயவிற்கு அனுமதியளித்துள்ளோம் - தாய்லாந்து பிரதமர்

By RAJEEBAN

10 AUG, 2022 | 05:50 PM
image

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையில்தாய்லாந்தில்  தங்குவதற்கு இடமளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர்பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மனிதாபிமான கரிசனைகளின் அடிப்படையிலானது,இது தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதிதான் என்ற  வாக்குறுதியை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாயவிற்கு அனுமதியளித்துள்ளோம் - தாய்லாந்து பிரதமர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

நாட்டு நிர்வாகத்தால், ஒரே தலைவலி....

தல தெறிக்க ஓடியதால்..... உடல் வலி...

போய்.... உடல் உபாதைகளை குறைத்து, வரட்டுமே... 😁

ஏற்கனவே போய் வீடியோ வந்த பந்துலவிடமும் ஆலோசனை கேட்கலாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஏற்கனவே போய் வீடியோ வந்த பந்துலவிடமும் ஆலோசனை கேட்கலாம்🤣

பந்துல வீடியோவை பார்த்தேன். அவர்… காசை, விசுக்கும் விதமும்…
கடைசியில் அந்த… சிரிப்பும், ஓகோ… ரகம்.
தாய்லாந்துப் பெண்… பந்துல வயித்தில்,
விரலால்… மேலிருந்து, கீழே தொட்டுக் கொண்டு வந்ததுக்குத்தான் அந்தக் காசு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு செய்தியா? 

அந்த மனுசன் எக்கேடுகெட்டுப்போனால்தான் எங்களுக்கு என்ன? 

7 hours ago, goshan_che said:

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே முடியுமோ 🤣

 

அடிச்ச காசெல்லாத்தையும் தான் அனுபவிக்காமல் அடுத்தடுத்த தலைமுக்றைக்கு விட்டுச் செல்ல அவரென்ன கெளதம புத்தரோ ? 

🤣

 

1 hour ago, தமிழ் சிறி said:

பந்துல வீடியோவை பார்த்தேன். அவர்… காசை, விசுக்கும் விதமும்…
கடைசியில் அந்த… சிரிப்பும், ஓகோ… ரகம்.
தாய்லாந்துப் பெண்… பந்துல வயித்தில்,
விரலால்… மேலிருந்து, கீழே தொட்டுக் கொண்டு வந்ததுக்குத்தான் அந்தக் காசு. 🤣

என்ர ஈமெயில் அற்ரஸ் சிறியரிடம் இருக்கிறதா ? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

என்ர ஈமெயில் அற்ரஸ் சிறியரிடம் இருக்கிறதா ? 

🤣

முகநூலில் அந்தக் காணொளியை…. தற்செயலாக பார்த்தேன்.
மீண்டும் கண்ணில் பட்டால், நிச்சயம் இணைத்து விடுகின்றேன். 🙂
எதுக்கும்… @goshan_che யிடமும் சொல்லி வையுங்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

சுற்றுலா விசாவின் மூலம் சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஸ

7 hours ago, goshan_che said:

ஹா…ஹா..தாய்லாந்து happy ending ற்கு பெயர் போன நாடு. கோட்டவின் கதையும் அப்படியே

கோத்தா உப்புடியே நாடு நாடாய் சுத்துறது எண்டு முடிவெடுத்துட்டார் போல கிடக்கு..... ஒரு யூரியூப் சனல் தொடங்கியிருந்தார் எண்டால் கைச்செலவுக்கு கொஞ்ச காசாவது வந்திருக்கும்..........🤣

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையில்தாய்லாந்தில்  தங்குவதற்கு இடமளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர்பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானமே இல்லாமல் மக்களை கொன்று குவித்தவர், மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை இக்கட்டில் விட்டு தப்பியோடியவருக்கு மனிதாபிமானமா? அல்லது கொள்ளையடித்த பணத்தை தங்கள் நாட்டிலே செலவழிக்க, செய்து கொடுக்கும் வசதியா? அவரின் வினையை உங்களால் தீர்க்க முடியாது, வெளிக்கிட்டால் உங்கள் நாடும் தீப்பற்றி எரியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and outdoors

ஒருவரைப் போல... ஆறு பேர், உலகில் இருப்பார்கள் என்று பகிடியாக சொல்வார்கள். 😜
அதில் ஒருவர்.... எண்ணை  வாங்க நிற்கிறார். 😂

சிலவேளை... அவர் தானோ, இவரோ தெரியாது.  எதுக்கும் உசாராக இருங்கள். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் – ஜனாதிபதி

நவம்பர் மாதம்... இலங்கை திரும்புகின்றார், கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இன்று தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாய ராஜாக்ஷவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியியிருந்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜபக்ஷவின் சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரையும் அவரது மனைவியையும் ஏற்றிச் செல்ல விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1294331

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுப்போன சனாதிபதியாக நான் பதவி விலகமாட்டேன்..எனது பதவிக் காலத்தை நிறைவு செய்தே வெளியேறுவேன் அல்லது தொடர்ந்து தேர்தலில் நின்று வெல்வேன் என்று இறுமாப்புப் பேசிக் கொண்டிருந்தவர்..

இன்று... தோற்று ஓடிப்போன முன்னாள் சனாதிபதி மட்டுமல்ல.. அகதியாக அலைகிறார்.

ஆனால்.. இந்த இனக்கொலைஞனுக்கு.. மனிதாபிமான உதவி செய்ய தாய்லாந்துக்கு எப்படி மனசு வந்திச்சோ. இவர் மீது ஐநா அமைப்பும் போர்க்குற்றம் சுமத்தியுள்ளதை தாய்லாந்து பிரதமர் அறிவாரா..?!

தாய்லாந்து பேச்சுக்கள் தான் புலிகளின் கடைசிப் பேச்சாகவும் அமைந்தது.. தாய்லாந்தில் வைச்சுத்தான் புலி அழிப்புச் சதியே தீட்டப்பட்டது. தாய்லாந்துக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் மறைமுக தொடர்புகளும் உள்ளன.. என்ற சந்தேகம் இப்போ தீவிரமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

தாய்லாந்து பேச்சுக்கள் தான் புலிகளின் கடைசிப் பேச்சாகவும் அமைந்தது.. தாய்லாந்தில் வைச்சுத்தான் புலி அழிப்புச் சதியே தீட்டப்பட்டது. தாய்லாந்துக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் மறைமுக தொடர்புகளும் உள்ளன.. என்ற சந்தேகம் இப்போ தீவிரமாகிறது.

குமரன் பத்மநாதனும்… தாய்லாந்து பெண்ணை கலியாணம் கட்டி,
தாய்லாந்தில்… பலவருடமாக இருந்தவர்.

பின்பு மலேசியாவில்… வலிய பிடிபட்டு,
ஶ்ரீலங்காவில், கோத்தாவின் விருந்தாளியாக இருந்தவர்.
இப்ப சத்தமில்லாமல்  இருக்கிறார்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

கோத்தா உப்புடியே நாடு நாடாய் சுத்துறது எண்டு முடிவெடுத்துட்டார் போல கிடக்கு..... ஒரு யூரியூப் சனல் தொடங்கியிருந்தார் எண்டால் கைச்செலவுக்கு கொஞ்ச காசாவது வந்திருக்கும்..........🤣

 

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

அந்த, வெள்ளை வானுக்கு... வேறை கலர், அடியுங்க சார். 😂

பிற் குறிப்பு: உங்களது யூ ரியூப்  சனலில்  கதைக்கும் போது, 
அடிக்கடி... ஆக்சுவலி, செமயா இருக்கு, வேற லெவல்... என்ற சொற்களையும்,
வீதி ஓர கடைகளில்... ஏதாவது வாங்கி சாப்பிடும் போது...
தலையை... ஆடு, மாடு மாதிரி.. இரண்டு பக்கமும் ஆட்டி சாப்பிடவும். 
அதுதான்..    யூ ரியூப்  சனலின், எழுதப் படாத  விதி. 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

 முடியல. 🤣பகிடிக்கில்லை. சிறிலங்கா திரும்ப முதல் ஒரு பில்டபோடு தான் வருவார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று!

போர்க் குற்றச்சாட்டை... கையிலெடுத்த, சிங்கப்பூர்: சற்று முன்னர் வெளியேறினா... கோட்டா !

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பாங்கொக் செல்லும் விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவரது விசா இன்றுடன் காலாவதியாயாகிய நிலையில் சிங்கப்பூரில் இருந்து செல்லவேண்டிய நிலை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1294419

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அந்த, வெள்ளை வானுக்கு... வேறை கலர், அடியுங்க சார். 😂

பிற் குறிப்பு: உங்களது யூ ரியூப்  சனலில்  கதைக்கும் போது, 
அடிக்கடி... ஆக்சுவலி, செமயா இருக்கு, வேற லெவல்... என்ற சொற்களையும்,
வீதி ஓர கடைகளில்... ஏதாவது வாங்கி சாப்பிடும் போது...
தலையை... ஆடு, மாடு மாதிரி.. இரண்டு பக்கமும் ஆட்டி சாப்பிடவும். 
அதுதான்..    யூ ரியூப்  சனலின், எழுதப் படாத  விதி. 🤣

முடியாது, முடியாது கோட்டவின் தனித்துவ அடையாளமே (unique selling point) அந்த வெள்ளை வான் தான் 🤣.

அவரது சானலுக்கு கூட “வெள்ளைவானில் ஒரு மொள்ளமாரி” என்றுதான் பெயர் வைக்க உள்ளாராம்🤣.

நீங்கள் சொன்ன சொற்பதங்களோடு, “மொத்தமா தூக்கி முதலைக்கு போடு”, “செத்தாண்டா”, போன்ற தனக்கே உரிய பதங்களையும் கோட்ட பாவிக்க உள்ளார்.

 

2 hours ago, தமிழ் சிறி said:

தலையை... ஆடு, மாடு மாதிரி.. இரண்டு பக்கமும் ஆட்டி சாப்பிடவும். 

இல்லை அவர் அருகில் நின்று தலையாட்ட சில தமிழர்களை நியமிக்க உள்ளார்🤣

1 hour ago, nunavilan said:

 முடியல. 🤣பகிடிக்கில்லை. சிறிலங்கா திரும்ப முதல் ஒரு பில்டபோடு தான் வருவார் என நினைக்கிறேன்.

ஓம்… இனி அரசியலுக்கு வரும் எண்ணம் இராது என்று நினைக்கிறேன்…அமெரிக்காவும் போக முடியாது எனில், எதாவது செய்து திரும்பி வர சாரகமான நிலையை உருவாக்கவே முனைவார். வந்தால் கொழும்பில் ஒரு ஜனாதிபதிக்குரிய சலுகை, பாதுகாப்போடு வாழலாம்.

அதுவரை பாங்கொங், புக்கட், பட்டாயா என்று காலம் க(ளி)ழிக்கலாம்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய?

By T YUWARAJ

11 AUG, 2022 | 06:31 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தாய்லாந்து வெளிவிவகார அமைச்சும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைகலம் வழங்கும் வரை, தமது நாட்டில் அவருக்கு தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக அறிய முடிகிறது. இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், ராஜதந்திர கடவூச்சீட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய? | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தாய்லாந்து வெளிவிவகார அமைச்சும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைகலம் வழங்கும் வரை, தமது நாட்டில் அவருக்கு தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் பட்ட  அவலங்களை  கோத்தாவும் அனுபவிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

குமரன் பத்மநாதனும்… தாய்லாந்து பெண்ணை கலியாணம் கட்டி,
தாய்லாந்தில்… பலவருடமாக இருந்தவர்.

பின்பு மலேசியாவில்… வலிய பிடிபட்டு,
ஶ்ரீலங்காவில், கோத்தாவின் விருந்தாளியாக இருந்தவர்.
இப்ப சத்தமில்லாமல்  இருக்கிறார்.

குமரன் பத்மநாதனும்… இவர் தான் இப்ப கோத்தாவை பாதுகாக்கிறாரோ யார் அறிவார். இவரை கோத்தா பாதுகாத்த நன்றிக்கடனுக்கு. தமிழர்கள் தங்களை அழிப்பவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதில் வல்லவர்களாச்சே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் கோத்தபாய.....

Bild

Bild

Bild

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.