Jump to content

கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும் - ஹாபிஸ் நஸீர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

By T YUWARAJ

10 AUG, 2022 | 06:19 AM
image

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும். அத்துடன்  மறைமுகமாக ஜனாதிபதியை சந்தித்து அமைச்சு பதவியை கேட்பதை விடுத்து அமைச்சுப் பதவிகள் மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளையும் கேட்டுப்பெற அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வரலாற்றில் நடக்காத ஒன்றை நிலைநாட்டியுள்ளார். அது அவரது சாணக்கியத்தையும் அரசியல் அனுபவத்தையும் காட்டுகிறது. 134 எம்.பிகளினால் அவர் தெரிவாகியுள்ளார்.

அனைத்து கட்சிகளில் இருந்தும் அவருக்கு வாக்கு அளிக்கப்பட்டன. அதில் ஒரு கட்சி மாத்திரம் தான் தனது 3 வாக்குகளையும் எதிராக வாக்களித்தது.

அத்துடன் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க அவர் அழைப்பு விடுத்துள்ளார். எந்தத் தரப்பில் இருந்தாலும் குட்டிச்சுவராக இருக்கும் நாட்டைகட்டியெழுப்ப எதிரணி பங்களிக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி கூறியிருந்தார்.சாணக்கியன் எம்.பிக்கு  மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியுடன் நிறைய தொடர்பு இருந்ததாக சுமந்திரன் கூறியிருந்தார்.இதனை தவறாக பார்க்கவில்லை. அவர்களின் காய்நகர்த்தல்களை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும்.

அத்துடன் அவர்கள் ஆட்சியில் உள்ளவர்களை எதிர்த்துப் பேசினாலும் ஆட்சியில் உள்ளவர்களுடன் சாணக்கியத்துடன் நிதானமாக காய்நகர்த்தினார்கள்.

முஸ்லிம் கட்சி தலைவர்கள் தவிர அநேக எம்.பிகள் ஜனாதிபதிக்காக வாக்களித்தார்கள். இவர்கள் மறைமுகமாக ஜனாதிபதியை சந்தித்து அமைச்சு பதவியை கேட்பதை விடுத்து அமைச்சுப் பதவிகள் மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளையும் கேட்டுப் பெற அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்று கோருகிறேன்.

அது ரிசாத் எம்.பியாக இருந்தாலும் சரி ஹக்கீம் எம்.பியாக இருந்தாலும் சரி அவர்கள் நேரடியாக வந்து பேச வேண்டும்.

ஹக்கீமும் நிசாம் காரியப்பரும் ஜனாதிபதியை சந்திப்பதாக அறிந்தேன்.பல விடயங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கையின் நாடு இருக்கும் நிலையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர  தீர்வு காண்பதற்கும் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட வேண்டும்.

வெறுமனே போராட்டங்களின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.போராட்டம் நியாயமாக இருந்தாலும் பிரச்சினைகளை  உரிய அமைச்சர்களுக்கு முன்வைத்து தீர்வு காண முற்பட வேண்டும்.என்றார்.

கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும் -  ஹாபிஸ் நஸீர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிழம்பு said:

கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும் - ஹாபிஸ் நஸீர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி கூறியிருந்தார்.   சாணக்கியன் எம்.பிக்கு  மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியுடன், நிறைய தொடர்பு இருந்ததாக சுமந்திரன் கூறியிருந்தார்.

😂 வடிவேலு Images naveenkumar - ShareChat ...

இன்னுமா.. இந்த உலகம், எங்களை நம்புது. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

இந்தள் வேற.......😏

இவரைத்தானே… சம்பந்தன், கிழக்கின் முதலமைச்சராக்கி அழகு பார்த்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும். 

எண்ட வாப்பா.....🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

ஜனாதிபதி வரலாற்றில் நடக்காத ஒன்றை நிலைநாட்டியுள்ளார். அது அவரது சாணக்கியத்தையும் அரசியல் அனுபவத்தையும் காட்டுகிறது. 134 எம்.பிகளினால் அவர் தெரிவாகியுள்ளார்.

முந்தாநாள்தானே ரணிலை மூச்சுக்கு முன்னூறு தடவை கரிச்சுகொட்டியும், ராஜ பக்ஷக்களை வானளாவ புகழ்ந்தும் அறிக்கை விட்டவர் அதற்கிடையில் இப்படி மாறிவிட்டாரே!

4 hours ago, பிழம்பு said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி கூறியிருந்தார்.சாணக்கியன் எம்.பிக்கு  மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியுடன் நிறைய தொடர்பு இருந்ததாக சுமந்திரன் கூறியிருந்தார்.இதனை தவறாக பார்க்கவில்லை.

தான் பதவி பெறுவதற்காக, இவர்களை பலி கொடுத்து,  தான் கடந்தகாலங்களில் ஐ. தே. கட்சியை விமர்சித்ததை  மறைத்து கொள்ள வெளிக்கிட்டு தன்னைத்தானே பகிரங்கப்படுத்திக்கொள்கிறார். "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி." சாணக்கியனோடை  பழைய கறள் இருக்கு இவருக்கு. காரணம்; இவரின் தில்லு முல்லுகளை இவரின் இனத்துக்கு வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.

4 hours ago, பிழம்பு said:

அவர்களின் காய்நகர்த்தல்களை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும்.

"இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை."

4 hours ago, பிழம்பு said:

எந்தத் தரப்பில் இருந்தாலும் குட்டிச்சுவராக இருக்கும் நாட்டைகட்டியெழுப்ப எதிரணி பங்களிக்க வேண்டும்.

அடேங்கப்பா ...... என்னே பெருந்தன்மை இவருக்கு! கைக்கு வந்த பதவி கையோடேயே பறிபோய் விடுமோ என்று தவிக்கிறார் இவர். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.