Jump to content

100 பந்துப் பரிமாற்ற கிரிக்கெட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

132ad020-c3b2-11eb-a54e-fb2ebe3e59b0.png

The Hundred

இங்கிலாந்தில் முதன்மைக் கழகங்களுக்கிடையே தற்போது பிரசித்தி பெற்ற கிரிக்கெட்டாக உருவெடுத்திருக்கிறது 100 கிரிக்கெட்.

இந்த கிரிக்கெட்டில் ஒரு போட்டில் விளையாடும் இரண்டு அணிகளுக்கும் தலா 100 பந்துப் பரிமாற்றங்கள் வழங்கப்படும். இதில் அதிகூடிய ஓட்டமெடுக்கும் அணி வென்றதாகக் கருதப்படும்.

இந்தப் போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் 5 அல்லது 10 பந்துப் பரிமாற்றங்களை தொடர்ந்து செய்யலாம். மொத்தம் ஒரு பந்து வீச்சாளர் 25 பந்துப் பரிமாற்றங்களே செய்ய முடியும்.

ரி20 க்கு போட்டியாக உருவான இந்த 100 கிரிக்கெட்.. தற்போது மெதுமெதுவாக பிரசித்தம் பெற்று வருவதோடு நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 

இதில் ஆண்களுக்கான அணிகள்.. பெண்களுக்கான அணிகள் கொண்ட தொடர்கள் விளையாடப்பட்டு வருகின்றன.

யாழ் களத்தில் பலருக்கு இது தெரிந்திருக்கலாம். அறியாத உறவுகளுக்காகவும் நடப்புத்தொடர் பற்றிய செய்திகள் இங்கு எதுவுமே இடப்படாததாலும் இப்பதிவு இடப்படுகிறது. 

எதிர்காலத்தில் இந்தக் கிரிக்கெட் வடிவம் பிரசித்தி பெறும் வாய்ப்புள்ளது.. ஏனெனில் கிரிக்கெட் என்றால் மணித்தியாலக்கணக்காக ஆடுவாங்கள்.. அலுப்புத்தட்டும் என்ற நிலை மாறி பந்துக்கு பந்து விறுவிறுப்பூட்டும் ஆட்டமாக அது மாறி வருவதுதான். 

https://www.bbc.co.uk/sport/live/cricket/60182184

Edited by nedukkalapoovan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுமையாக இருக்கிறது.

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2022 at 00:35, ஈழப்பிரியன் said:

புதுமையாக இருக்கிறது.

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

இது போன‌ வ‌ருட‌ம் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து அண்ணா

இது இர‌ண்டாவ‌து தொட‌ர்

10 ஓவ‌ர்
100 வ‌ந்து என்று கிரிக்கேட்டில் இப்ப‌டி ப‌ல‌ போட்டிக‌ளை அறிமுக‌ம் செய்து இருக்கின‌ம் , ஆனால் ம‌க்க‌ள் ம‌த்தியில் 20 ஓவ‌ர் விளையாட்டு தான் வ‌ர‌வேற்ப்பு  பெற்று இருக்கு , 

நான் 100ப‌ந்து விளையாட்டை பெரிசா பார்க்கிறேல‌ , 

100 ப‌ந்து விளையாட்டில் ம‌ற்ற‌ விளைட்டுக்க‌ளை விட‌ விதிமுறைக‌ள் அதிக‌ம் 😏

Edited by பையன்26
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.