Jump to content

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில்... வட்டமிடும், சீன கப்பல்: அனுமதிக்காக... காத்திருப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில்... வட்டமிடும், சீன கப்பல்: அனுமதிக்காக... காத்திருப்பு !

சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ள போதிலும் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்காது என துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 மைல் தூரத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதற்காக அனுமதியை அவர்கள் கோரவில்லை என துறைமுக அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சிக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது,

எனினும் இந்த முடிவை மாற்றியமைக்கும் வரை அந்த கப்பல் அங்கேயே வட்டமிடும் என இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டன.

எவ்வாறாயினும் இராஜதந்திர ரீதியில் எபிச்சுவார்தைகளை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்பிற்கு சீன தூதரகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

https://athavannews.com/2022/1294438

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லக் சொல்லக்கேட்காமல் அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன விமானங்கள் தாய்வான் எல்லைக்குள் பறந்ததும் ,தாய்வன் எல்லையோரங்களில் சீனக்கடற்படை உயிர்க்குண்டுகளைப் பாவித்து பயிற்சிகளில் ஈடுபட்டுப்மிரட்டியதைப் போல அதே விளையாட்டை இந்தியா காட்டப் போகின்றது.இண்டியா! வெயிற்றிங்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஏன் அனுமதி கேக்க வேணும்.😆

ஒரு மரியாதைக்காக 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஏன் அனுமதி கேக்க வேணும்.😆

அதானே அவங்க நாடுதானே இது🤭🤭

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில்..... வட்டிகாசை வரக்காட்டும். இல்லாட்டி உள்ள வரப்போறன்.... உந்த சேட்டையெல்லாம் இந்தியாவோட இருக்கட்டும்.

உள்ள வந்தா, வட்டியும், முதலும் வாங்காம நகரன்..... சொல்லியாச்சு....🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானாவுக்கு முதல் என்று நினைக்கிறேன் சீன சர்வாதிகாரி சீ ஜின்பிங்கிற்கு தமிழ்நாட்டில் வைத்து பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து  இந்தியா வரவேற்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கொரானாவுக்கு முதல் என்று நினைக்கிறேன் சீன சர்வாதிகாரி சீ ஜின்பிங்கிற்கு தமிழ்நாட்டில் வைத்து பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து  இந்தியா வரவேற்றது.

  பெரியவரே! ஒருவரை சர்வாதிகாரி என எந்த அடிப்படையில் வைத்து  கணிக்க முடியும்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வாதிகாரி என எந்த அடிப்படையில் வைத்து  கணிக்க முடியும்? 

சிறந்த நாடுகளில் எப்படி நடை பெறுகிறதோ அதற்கு எதிர்மாறாக செயல்படுவதை வைத்து கணிப்பிடலாம்.
உதாரணத்திற்கு யேர்மனியை எடுத்தால் மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சிகள் பல பாராளுமன்றத்தில் உள்ளன. திரு Scholz எப்படி அந்த நாட்டின் தலைவர் ஆனார் என்பதையும், சீனாவில் ஒரே ஒரு கட்சி கம்யுனிஸ்ட் கட்சி அந்த கட்சி அடக்கி ஒடுக்கி மேய்பதற்காக  அங்கே வாழ்பவர்கள்  சீன மக்கள். அந்த கட்சிக்கு சகலதுமாக நிரந்திர தவைனாக சீ ஜின்பிங் இருப்பதையும்...

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சிறந்த நாடுகளில் எப்படி நடை பெறுகிறதோ அதற்கு எதிர்மாறாக செயல்படுவதை வைத்து கணிப்பிடலாம்.
உதாரணத்திற்கு யேர்மனியை எடுத்தால் மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சிகள் பல பாராளுமன்றத்தில் உள்ளன. திரு Scholz எப்படி அந்த நாட்டின் தலைவர் ஆனார் என்பதையும், சீனாவில் ஒரே ஒரு கட்சி கம்யுனிஸ்ட் கட்சி அந்த கட்சி அடக்கி ஒடுக்கி மேய்பதற்காக  அங்கே வாழ்பவர்கள்  சீன மக்கள். அந்த கட்சிக்கு சகலதுமாக நிரந்திர தவைனாக சீ ஜின்பிங் இருப்பதையும்...

அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,கனடா,இந்தியா,ஜேர்மனி,அவுஸ்ரேலியா போன்ற   சனநாயக  நாடுகளில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கின்றது. புதியவர்கள் வருகின்றார்கள். ஆனால் ஒரே உள்ளாட்டு கொள்கை. ஒரே வெளிநாட்டு கொள்கை.  இதுதான் சீனாவிலும் ரஷ்யாவிலும் நடக்கின்றது..    மேற்குலக தேர்தல் பிரச்சாரங்களில் மட்டும் வெவ்வேறு கொள்கை கொண்டவர்கள் போல் தெரியும். மற்றும் படி ஆட்சிக்கு வந்தபின்  எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

சீனா கம்யூனிச/சர்வாதிகார ஆட்சி என்றாலும் அதன் வளர்ச்சி மிக மிகப் பெரியது.இன்று முழு உலகிலுமே அவர்கள் தயாரிப்புகள் இல்லாத நாடுகளே இல்லை எனலாம்.தொழில் நுட்ப வளர்ச்சியில் அவர்களும் உச்சத்திற்கு சென்று விட்டார்கள்.இவையெல்லாம் ஒரு தலைமையின் கீழ் மூலமே சாத்தியம்.

👉சீனா சர்வாதிகார ஆட்சி போல் தோன்றினாலும் பொருளாதாரத்தில் தாராளமயமாகவே நடந்து கொள்கின்றது. உலகில் ஒரு சில இன மக்கள் உள்ள நாடுகளுக்கு சட்டங்கள்,திட்டங்கள்,பொருளாதாரத்தை கட்டுப்பாடாக வைத்திருக்க சர்வாதிகாரம் போன்ற அரசியலும் அதற்கேற்ற ஒரு தலைமையும் அவசியம் தேவை.👈

ஜேர்மனியில் யுத்தத்தின் பின்னரான ஆட்சிக்காலங்களில்  சில தலைவர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் காலத்திலேயே நாடு அதிக பட்சமாக முன்னேறியது. ஏனைய தலைவர்கள் கட்டி முடித்த வீட்டை பராமரிப்பவர்கள் போல் நாட்டை ஆட்சி செய்தார்கள் / செய்கின்றார்கள்.

மேற்குலக நாடுகள் தங்களுக்குள் கட்டிப்பிடித்து ஒற்றுமை என படம் காட்டினாலும்  பல்லாயிரம் கருத்து வேறுபாடுகளுடனேயே வண்டியை ஓட்டுகின்றார்கள்.

பெருமதிப்புக்குரிய சிரிலங்காவும் ஜனநாயக நாடுதான்.கிரமமாக தேர்தலும் நடக்குதுதான். ஆனால் கொள்கையில் ஒரு துளி மாற்றமுமில்லை. அதுவும் கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

  பெரியவரே! ஒருவரை சர்வாதிகாரி என எந்த அடிப்படையில் வைத்து  கணிக்க முடியும்? 😎

மிக சுலபமாக கண்டு பிடிக்கும் வழி:

1. ஈழத்தமிழன் எங்கே சுயவிருப்பில் ஓடிப்போய், செட்டில் ஆகி, கோவில் கட்டி, வியாபாரம், கல்வி, தொழில் என சகல துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறானோ அவை ஜனநாயக நாடுகள் (அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, யூகே, ஈயூ, நோர்வே, சுவிஸ், சிங்கப்பூர்)

2. அதே ஈழத்தமிழன் எங்கே படிக்க, வேலைக்கு என்று போனாலும் கூட, வந்த வேலை முடிந்ததும் நாட்டை விட்டு எஸ் ஆகிறானோ அவை சர்வாதிகார அல்லது குறை-ஜனநாயக நாடுகள் (ரஸ்யா, இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், நைஜீரியா).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,கனடா,இந்தியா,ஜேர்மனி,அவுஸ்ரேலியா போன்ற   சனநாயக  நாடுகளில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கின்றது. புதியவர்கள் வருகின்றார்கள். ஆனால் ஒரே உள்ளாட்டு கொள்கை. ஒரே வெளிநாட்டு கொள்கை.  இதுதான் சீனாவிலும் ரஷ்யாவிலும் நடக்கின்றது..    மேற்குலக தேர்தல் பிரச்சாரங்களில் மட்டும் வெவ்வேறு கொள்கை கொண்டவர்கள் போல் தெரியும். மற்றும் படி ஆட்சிக்கு வந்தபின்  எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

சீனா கம்யூனிச/சர்வாதிகார ஆட்சி என்றாலும் அதன் வளர்ச்சி மிக மிகப் பெரியது.இன்று முழு உலகிலுமே அவர்கள் தயாரிப்புகள் இல்லாத நாடுகளே இல்லை எனலாம்.தொழில் நுட்ப வளர்ச்சியில் அவர்களும் உச்சத்திற்கு சென்று விட்டார்கள்.இவையெல்லாம் ஒரு தலைமையின் கீழ் மூலமே சாத்தியம்.

👉சீனா சர்வாதிகார ஆட்சி போல் தோன்றினாலும் பொருளாதாரத்தில் தாராளமயமாகவே நடந்து கொள்கின்றது. உலகில் ஒரு சில இன மக்கள் உள்ள நாடுகளுக்கு சட்டங்கள்,திட்டங்கள்,பொருளாதாரத்தை கட்டுப்பாடாக வைத்திருக்க சர்வாதிகாரம் போன்ற அரசியலும் அதற்கேற்ற ஒரு தலைமையும் அவசியம் தேவை.👈

ஜேர்மனியில் யுத்தத்தின் பின்னரான ஆட்சிக்காலங்களில்  சில தலைவர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் காலத்திலேயே நாடு அதிக பட்சமாக முன்னேறியது. ஏனைய தலைவர்கள் கட்டி முடித்த வீட்டை பராமரிப்பவர்கள் போல் நாட்டை ஆட்சி செய்தார்கள் / செய்கின்றார்கள்.

மேற்குலக நாடுகள் தங்களுக்குள் கட்டிப்பிடித்து ஒற்றுமை என படம் காட்டினாலும்  பல்லாயிரம் கருத்து வேறுபாடுகளுடனேயே வண்டியை ஓட்டுகின்றார்கள்.

பெருமதிப்புக்குரிய சிரிலங்காவும் ஜனநாயக நாடுதான்.கிரமமாக தேர்தலும் நடக்குதுதான். ஆனால் கொள்கையில் ஒரு துளி மாற்றமுமில்லை. அதுவும் கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சி தான்.

இல்லை. வெளியுறவு கொள்கை ஒரே மாதிரியாக இருந்தாலும். உள்நாட்டு, பொருளாதார கொள்கைகள் பல சமயங்களில் 180 பாகை எதிராகவே இருக்கும்.

2019 யூகே தேர்தலில் ஜோன்சனும், கோபினும் எதிரும் புதிருமான கொள்கைகளை முன் வைத்தனர். ஆகவே கோபின் வென்று இருந்தால் அது (வெளியுறவு கொள்கை தவிர) தெரேசா மேயின் அரசில் இருந்து முற்றிலும் வேறு பட்ட கொள்கையுடைய அரசையே தந்திருக்கும்.

அதே போல் இரு பெரிய கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையில் அதிக வித்தியாசம் இல்லை என்ற நிலை இருந்தாலும், உதிரியாய் இருக்கும் ஜேர்மனியின் AfD, பிரான்சின் புரண்ட் நேஷனல் போன்ற கட்சிகள் பலத்த வேறுபாடுடைய கொள்கைகளையே கொண்டிருக்கும்.

ஆகவே மக்களுக்கு எல்லா விதமான கொள்கைகள் உள்ள கட்சிகளையும் தேரும் “தெரிவு” இங்கே இருக்கிறது. மக்கள் இவற்றை தவிர்த்து, அரசியலில் மத்தியமாக இருக்கும் வலது-மத்தி, இடது-மத்தி (centre-right, centre-left) கட்சிகளை மாறி, மாறி தேரக்காரணம் - மக்களின் அரசியல் நிலைப்பாடு மத்தியமாக (centrist) இருப்பதே.

ஆனால் எப்போதும் இப்படி இராது, நாட்டின் பிரதமர், பெரும்பாலான ஆளும் கட்சி எம்பிகள், எதிர்கட்சி தலைவர், எதிர்கட்சி எம்பிகள் அநேகர், மூன்றாவது, நான்காவது கட்சியினர் சகலரும் எதிர்த்த போதும் யூகே யில் மக்கள் பிரெக்சிற்றை ஆதரித்து வாக்கு போட்டார்கள். அதை நடைமுறைபடுத்தவும் வேண்டி இருந்தது.

சிரிப்பு காட்டாமல் சொல்லுங்கள்:

பிரெக்சிற், ஸ்கொட்லாந்து, கியூபெக் பிரியும் வாக்கெடுப்பு போல, ரஸ்யா செச்னியாவிலோ, அல்லது சீனா தாய்வானிலோ நடத்த முன் வருமா?

எதிர்கட்சி தலைவரை நஞ்சூட்டும் நாடு ரஸ்யா. அலிபாபா அதிபர் ஜக்மா கொஞ்சம் மெல்லிதாக விமர்சித்த படியால் ஆளை காணாமல் ஆக்கிய நாடு சீனா.

இந்த நாடுகளில் நடப்பதும், மேற்கில் நடப்பதும் (கவனிக்க வெளியுறவு கொள்கையில் அல்ல) ஒன்றே என்று எழுதுபவர்கள்;

ஒன்றில்

1. கண் முன்னால் நடப்பதை கூட உய்துணர முடியாது உள்ளார்கள்.

அல்லது

2. நெஞ்சார பொய் கற்கிறார்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

கொரானாவுக்கு முதல் என்று நினைக்கிறேன் சீன சர்வாதிகாரி சீ ஜின்பிங்கிற்கு தமிழ்நாட்டில் வைத்து பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து  இந்தியா வரவேற்றது.

சர்வாதிகாரி ? 

கண்ணிருந்தும் குருடர் 🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இல்லை. வெளியுறவு கொள்கை ஒரே மாதிரியாக இருந்தாலும். உள்நாட்டு, பொருளாதார கொள்கைகள் பல சமயங்களில் 180 பாகை எதிராகவே இருக்கும்.

2019 யூகே தேர்தலில் ஜோன்சனும், கோபினும் எதிரும் புதிருமான கொள்கைகளை முன் வைத்தனர். ஆகவே கோபின் வென்று இருந்தால் அது (வெளியுறவு கொள்கை தவிர) தெரேசா மேயின் அரசில் இருந்து முற்றிலும் வேறு பட்ட கொள்கையுடைய அரசையே தந்திருக்கும்.

அதே போல் இரு பெரிய கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையில் அதிக வித்தியாசம் இல்லை என்ற நிலை இருந்தாலும், உதிரியாய் இருக்கும் ஜேர்மனியின் AfD, பிரான்சின் புரண்ட் நேஷனல் போன்ற கட்சிகள் பலத்த வேறுபாடுடைய கொள்கைகளையே கொண்டிருக்கும்.

ஆகவே மக்களுக்கு எல்லா விதமான கொள்கைகள் உள்ள கட்சிகளையும் தேரும் “தெரிவு” இங்கே இருக்கிறது. மக்கள் இவற்றை தவிர்த்து, அரசியலில் மத்தியமாக இருக்கும் வலது-மத்தி, இடது-மத்தி (centre-right, centre-left) கட்சிகளை மாறி, மாறி தேரக்காரணம் - மக்களின் அரசியல் நிலைப்பாடு மத்தியமாக (centrist) இருப்பதே.

ஆனால் எப்போதும் இப்படி இராது, நாட்டின் பிரதமர், பெரும்பாலான ஆளும் கட்சி எம்பிகள், எதிர்கட்சி தலைவர், எதிர்கட்சி எம்பிகள் அநேகர், மூன்றாவது, நான்காவது கட்சியினர் சகலரும் எதிர்த்த போதும் யூகே யில் மக்கள் பிரெக்சிற்றை ஆதரித்து வாக்கு போட்டார்கள். அதை நடைமுறைபடுத்தவும் வேண்டி இருந்தது.

சிரிப்பு காட்டாமல் சொல்லுங்கள்:

பிரெக்சிற், ஸ்கொட்லாந்து, கியூபெக் பிரியும் வாக்கெடுப்பு போல, ரஸ்யா செச்னியாவிலோ, அல்லது சீனா தாய்வானிலோ நடத்த முன் வருமா?

எதிர்கட்சி தலைவரை நஞ்சூட்டும் நாடு ரஸ்யா. அலிபாபா அதிபர் ஜக்மா கொஞ்சம் மெல்லிதாக விமர்சித்த படியால் ஆளை காணாமல் ஆக்கிய நாடு சீனா.

இந்த நாடுகளில் நடப்பதும், மேற்கில் நடப்பதும் (கவனிக்க வெளியுறவு கொள்கையில் அல்ல) ஒன்றே என்று எழுதுபவர்கள்;

ஒன்றில்

1. கண் முன்னால் நடப்பதை கூட உய்துணர முடியாது உள்ளார்கள்.

அல்லது

2. நெஞ்சார பொய் கற்கிறார்கள்

எந்த சிந்தனைமுறைகளும் உயர்ந்தவையோ தாழ்ந்தவையோ / நிரந்தரமானவையோ அல்ல. 

யுத்தங்கள் என்பது சித்தாங்களின் மோதல் என கூறுபவர்களும் உள்ளனர். 

நடைமுறையில் கடந்த 30 ஆண்டுகளில் சீனா 600 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளத. ஆனால் இந்தியாவில் வறுமை ஒழிப்பு என்பது இன்னமும் எட்டாக்கனிதான. 

இவையெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல,  ஆனாலும்  விதண்டாவாதத்திற்கு மல்லுக்கட்டுவீர்கள். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சர்வாதிகாரி ? 

கண்ணிருந்தும் குருடர் 🤦🏼‍♂️

உங்கள் பார்வையில் ஒற்றை கட்சி ஆட்சியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவால் மட்டுமே தெரிவு செய்யபட்ட தலைவரை எப்படி அழைப்பீர்கள்? ஜனநாயகவாதி என்றா?

சர்வாதிகாரி என்றால் ஒரு நாட்டின் மீது பூரண அதிகாரம் செலுத்தும் ஒருவர்.

சீனாவில் உண்மையில் அதிபர் பதவி என்பது சம்பிராயபூர்வமானதே. உண்மையில் அதிகாரம் உள்ள பதவியின் பெயர் paramount leader, அல்லது supreme leader, சீனத்தில் 最高领导人. 

இதன் தமிழ் அர்த்தம் சர்வ அதிகாரம் உடையவர் என கொள்ளலாம் என நினைக்கிறேன். 

最高领导人 பதவியில் இருப்பவர்தான் பெரும்பாலும் (தற்போதும்) சீன அரசின், சீன மக்கள் இராணுவத்தின், சீன அரசாங்கத்தின், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயளாலராக, சீன இராணுவ ஆணையகத்தின் தலைவராகவும் இருப்பார்கள்.

இவை எல்லாம் ஏனைய சீன அதிபர்களுக்கும் பொருந்தினாலும். இத்தனை முறைதான் ஜனாதிபதியாகலாம் என்ற கோட்பாட்டை தனக்காக மாற்றி அமைத்து அனைவரிலும் விட அதிக சர்வாதிகாரியாக துலங்குகிறார் Xi.

நீடித்து பதவியில் இருக்க முனைவது ஒரு சர்வாதிகாரிக்குரிய அடிப்படை இயல்பு. புட்டின், முகாபே, ஸ்டாலின், மகிந்த, சந்திரிகா, ஜே ஆர் இப்படி இதை செய்பவர்கள் எல்லாரையும் பார்த்தாலே இது புரியும்.

மறுவளமாக, வாசிங்டன், மண்டேலா, காந்தி என பதவிக்குரிய காலத்தை மட்டும் அல்லது பதவியையே விலத்தி நடந்தவர்களும் உண்டு.

அமெரிக்காவில் கூட முதலில் இரு தரம் மட்டும்தான் என்பது ஒரு கனவான் ஒப்பந்தமாகவே இருந்தது ரூசவேல்ட் என நினைக்கிறேன் அதை மீறிய பின், அரசியல் சட்டம் இவ்வாறு மாற்றப்பட்டது.

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

எந்த சிந்தனைமுறைகளும் உயர்ந்தவையோ தாழ்ந்தவையோ / நிரந்தரமானவையோ அல்ல. 

யுத்தங்கள் என்பது சித்தாங்களின் மோதல் என கூறுபவர்களும் உள்ளனர். 

நடைமுறையில் கடந்த 30 ஆண்டுகளில் சீனா 600 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளத. ஆனால் இந்தியாவில் வறுமை ஒழிப்பு என்பது இன்னமும் எட்டாக்கனிதான. 

இவையெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல,  ஆனாலும்  விதண்டாவாதத்திற்கு மல்லுக்கட்டுவீர்கள். 

🤣

அப்படி என்றால் ஆண்டான் அடிமை முறையும், வர்ணாசிரமும் கூட சிந்தனைகள்தானே? அவையும் சித்தாந்தங்கள் தானே?

அவையும் குறைந்தவை இல்லை என்பீர்களா?

இதுவரை அறியப்பட்ட வேறு எந்த சித்தாந்ததுடனும் ஒப்பிடும் போது தேர்தல் ஜனநாயக முறை மிக முன்னேற்றகரமானது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

அதற்காக அது சிறப்பானது என்பதல்ல. எல்லா நாடுகளும் சமூக கூர்ப்பில் அதற்கு தயாராகவும் இல்லை (ஆப்கானிஸ்தான்). ஆனால் உள்ளதில் நல்லது. not a perfect system but better than the rest.

இந்தியாவில் வறுமை இருக்கலாம் ஆனால் சீனாவை விட பல சுதப்திரங்கள் அங்கே ஒப்பீட்டளவில் உண்டு. தவிரவும் சீனாவின் வறுமை ஒழிப்பு என்பது வலுகட்டாயமாக ஒரு பிள்ளை பெறு எண்டு ஏற்படுத்தப்பட்டது.

அத்தோடு இந்தியா ஊழல் மிகுந்த ஒரு குறை ஜனநாயக நாடு.

நீங்கள் வறுமை ஒழிப்பை ஒப்பிடுவதாயின் சீனாவுடன் சிங்கபூரை அல்லது தென் கொரியாவை ஒப்பிட வேண்டும். 

இதில் எனக்கு கிஞ்சித்தும் ஐயம் இல்லை. வாதத்துக்காக இல்லை. பல தவறுகள் இருந்தாலும், ஜனநாயகத்துக்கு ஈடான மாற்று கண்டுபிடிக்கபடும் வரை - இதுவே உள்ளதில் சிறந்தது.

சோழர் காலத்து குடவோலை தொட்டு இதில் எமது பங்கும் உண்டு, இது தனியே ஐரோப்பிய  முதுசமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உங்கள் பார்வையில் ஒற்றை கட்சி ஆட்சியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவால் மட்டுமே தெரிவு செய்யபட்ட தலைவரை எப்படி அழைப்பீர்கள்? ஜனநாயகவாதி என்றா?

சர்வாதிகாரி என்றால் ஒரு நாட்டின் மீது பூரண அதிகாரம் செலுத்தும் ஒருவர்.

சீனாவில் உண்மையில் அதிபர் பதவி என்பது சம்பிராயபூர்வமானதே. உண்மையில் அதிகாரம் உள்ள பதவியின் பெயர் paramount leader, அல்லது supreme leader, சீனத்தில் 最高领导人. 

இதன் தமிழ் அர்த்தம் சர்வ அதிகாரம் உடையவர் என கொள்ளலாம் என நினைக்கிறேன். 

最高领导人 பதவியில் இருப்பவர்தான் பெரும்பாலும் (தற்போதும்) சீன அரசின், சீன மக்கள் இராணுவத்தின், சீன அரசாங்கத்தின், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயளாலராக, சீன இராணுவ ஆணையகத்தின் தலைவராகவும் இருப்பார்கள்.

இவை எல்லாம் ஏனைய சீன அதிபர்களுக்கும் பொருந்தினாலும். இத்தனை முறைதான் ஜனாதிபதியாகலாம் என்ற கோட்பாட்டை தனக்காக மாற்றி அமைத்து அனைவரிலும் விட அதிக சர்வாதிகாரியாக துலங்குகிறார் Xi.

நீடித்து பதவியில் இருக்க முனைவது ஒரு சர்வாதிகாரிக்குரிய அடிப்படை இயல்பு. புட்டின், முகாபே, ஸ்டாலின், மகிந்த, சந்திரிகா, ஜே ஆர் இப்படி இதை செய்பவர்கள் எல்லாரையும் பார்த்தாலே இது புரியும்.

மறுவளமாக, வாசிங்டன், மண்டேலா, காந்தி என பதவிக்குரிய காலத்தை மட்டும் அல்லது பதவியையே விலத்தி நடந்தவர்களும் உண்டு.

அமெரிக்காவில் கூட முதலில் இரு தரம் மட்டும்தான் என்பது ஒரு கனவான் ஒப்பந்தமாகவே இருந்தது ரூசவேல்ட் என நினைக்கிறேன் அதை மீறிய பின், அரசியல் சட்டம் இவ்வாறு மாற்றப்பட்டது.

 

 

 

 

 சர்வாதிகாரி என்பதற்கு விளங்க நினைப்பவர் கொடுக்கும் வலு/நிறை க்கும்,  நீங்கள் கூறும் விளக்க சர்வாதிகாரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மிக சுலபமாக கண்டு பிடிக்கும் வழி:

1. ஈழத்தமிழன் எங்கே சுயவிருப்பில் ஓடிப்போய், செட்டில் ஆகி, கோவில் கட்டி, வியாபாரம், கல்வி, தொழில் என சகல துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறானோ அவை ஜனநாயக நாடுகள் (அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, யூகே, ஈயூ, நோர்வே, சுவிஸ், சிங்கப்பூர்)

அது பொருளாதார அகதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அது ஜனநாயகம் சம்பந்தப்பட்டது அல்ல. இங்கே வந்த குறுந்தலைப்பு சர்வாதிகாரியை எப்படி கண்டு பிடிப்பது?

10 hours ago, goshan_che said:

2. அதே ஈழத்தமிழன் எங்கே படிக்க, வேலைக்கு என்று போனாலும் கூட, வந்த வேலை முடிந்ததும் நாட்டை விட்டு எஸ் ஆகிறானோ அவை சர்வாதிகார அல்லது குறை-ஜனநாயக நாடுகள் (ரஸ்யா, இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், நைஜீரியா).

ஈழத்தமிழன் உலகெங்கும் பரவியிருக்கின்றான். அவையெல்லாம் மேற்குலக சார்பு நாடுகளல்ல. அப்பம் என்றால் அதை இனி பிரித்தெல்லாம் காட்ட முடியாது.

9 hours ago, goshan_che said:

2019 யூகே தேர்தலில் ஜோன்சனும், கோபினும் எதிரும் புதிருமான கொள்கைகளை முன் வைத்தனர். ஆகவே கோபின் வென்று இருந்தால் அது (வெளியுறவு கொள்கை தவிர) தெரேசா மேயின் அரசில் இருந்து முற்றிலும் வேறு பட்ட கொள்கையுடைய அரசையே தந்திருக்கும்.

மன்னிக்கவும்..... கோபின் வந்திருந்தால் அதன் நன்மைகள் பற்றி  அடியேனுக்கு சிறு விளக்கம் வேண்டும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அதே போல் இரு பெரிய கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையில் அதிக வித்தியாசம் இல்லை என்ற நிலை இருந்தாலும், உதிரியாய் இருக்கும் ஜேர்மனியின் AfD, பிரான்சின் புரண்ட் நேஷனல் போன்ற கட்சிகள் பலத்த வேறுபாடுடைய கொள்கைகளையே கொண்டிருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் வரை எந்த நாஷி கட்சியும் எதையும் புதிதாக வெட்டி புடுங்க முடியாது. எல்லாவற்றுக்கும் வரையறை சட்டங்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நீங்கள் வறுமை ஒழிப்பை ஒப்பிடுவதாயின் சீனாவுடன் சிங்கபூரை அல்லது தென் கொரியாவை ஒப்பிட வேண்டும். 

சிங்கப்பூரும்,தென்கொரியாவும் ஒரு வளர்ச்சியை எட்டும் வரை சர்வாதிகார ஆட்சி போலவே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 சர்வாதிகாரி என்பதற்கு விளங்க நினைப்பவர் கொடுக்கும் வலு/நிறை க்கும்,  நீங்கள் கூறும் விளக்க சர்வாதிகாரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

சர்வாதிகாரி (dictator) என்பதற்கான ஏற்று கொள்ளபட்ட அர்தத்தை நான் மேலே கொடுத்துள்ளேன்.

அதை விளங்க நினைப்பவன் என்ன அர்தத்தில் கொடுத்தார் என்பதை நீங்கள் என்ன அர்த்தத்தில் விளங்கி கொண்டீர்கள் என்பதை நான் அறிய முடியாதுதானே.

ஆனால் சர்வாதிகாரி என்றால் உலகெங்கும் ஒரே அர்த்தம்தான்.

1 hour ago, குமாரசாமி said:

அது பொருளாதார அகதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அது ஜனநாயகம் சம்பந்தப்பட்டது அல்ல. இங்கே வந்த குறுந்தலைப்பு சர்வாதிகாரியை எப்படி கண்டு பிடிப்பது?

பொருளாதார அகதிகள் ஏன் குவைத், கட்டார், சவுதி, டுபாய் போன்ற இதர செல்வம் கொழிக்கும் நாடுகளை தவிர்கிறார்கள்?

நீங்களே சொன்னபடி எல்லா வளமும் உள்ளேயே இருக்கும் நாடு ரஸ்யா அதை ஏன் தவிர்கிறார்கள்.

இங்கேதான் இருக்கிறது ஜனநாயகத்தின் சூட்சுமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழன் உலகெங்கும் பரவியிருக்கின்றான். அவையெல்லாம் மேற்குலக சார்பு நாடுகளல்ல. அப்பம் என்றால் அதை இனி பிரித்தெல்லாம் காட்ட முடியாது.

உகன்டாவிலும், பப்போ நுயுகினியிலும்தான் இருக்கிறார்கள். அதனால்தான் கோவில் கட்டி, சகல துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் படி என எழுதினேன்.

இப்படி சீனாவிலும், ரஸ்யாவிலும் இல்லைதானே? அப்போ இப்படி மேற்கில் ஈழத்தமிழன் உயர எது காரணமாகியது?

தனி மனித சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், குறித்த காலத்தின் பின் நிரந்தர வசிக்கும் உரிமை, குடியுரிமை, இந்த நாட்டின் சுதேசிகளுக்கு நிகரான சம வாய்பு இவைதானே?

இவைதான் ஒரு ஜனநாயக நாட்டுக்கும், சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் உள்ள வித்தியாசம்.

இதனால்தான் ஒவ்வொரு ஈழத்தமிழனும் தான் மட்டும் வந்ததோடு நில்லாமல் தனது கிராமத்தையே இந்த நாடுகளுக்கு கூட்டி வந்து உய்வித்தான்.

ரஸ்யா, சீனா வுக்கு படிக்க போனவர்கள் கூட அங்கே நிலைப்பதில்லை - எப்படியாவது மேற்குக்கு வந்து விடுவார்கள்.

இதற்கு அடிப்படை காரணம் மேற்கின் பல்லின, ஒப்பீடளவில் சகிப்புதன்மை, சட்டத்தின் ஆளுமை உள்ள ஜனநாயக கட்டமைப்பே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

உகன்டாவிலும், பப்போ நுயுகினியிலும்தான் இருக்கிறார்கள். அதனால்தான் கோவில் கட்டி, சகல துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் படி என எழுதினேன்.

இப்படி சீனாவிலும், ரஸ்யாவிலும் இல்லைதானே? அப்போ இப்படி மேற்கில் ஈழத்தமிழன் உயர எது காரணமாகியது?

ஒரு இன மக்கள் தொகையினரை வைத்தே கோவில்கள் கட்டப்படும். கடைகள் திற்க்கப்படும். பள்ளிகளும் ஆரம்பிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மன்னிக்கவும்..... கோபின் வந்திருந்தால் அதன் நன்மைகள் பற்றி  அடியேனுக்கு சிறு விளக்கம் வேண்டும்? 

அவரின் தேர்தல் அறிக்கை படி, செல்வந்தர்களுக்கு அதிக வரி, உழைக்கும், நடுதர மக்களுக்கு சலுகைகள், தனியார் மயமான ஏரிசக்தி, நீர், ரயில் துறைகள் மீள அரசமயம். இப்படி பல.

அதாவது மே, ஜோன்சன் இருவரின் உள்நாட்டு கொள்கைக்கும் கிட்டதட்ட நேரெதிர் கொள்கையை கோபின் முன்வைத்தார்.

 

 

 

1 hour ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் வரை எந்த நாஷி கட்சியும் எதையும் புதிதாக வெட்டி புடுங்க முடியாது. எல்லாவற்றுக்கும் வரையறை சட்டங்கள் உண்டு.

AfD ஜேர்மனியில் தனித்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்து விட்டால் - ஜேர்மன் மக்களை Gerxit நோக்கி தள்ள அதிக காலம் எடாது.

5 minutes ago, குமாரசாமி said:

ஒரு இன மக்கள் தொகையினரை வைத்தே கோவில்கள் கட்டப்படும். கடைகள் திற்க்கப்படும். பள்ளிகளும் ஆரம்பிக்கப்படும்.

ஓம் ஆனால் அந்த இடம் நோக்கி மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக  நகர ஏது காரணம்?

நான் மேலே கூறிய ஜனநாயக பண்புகள்தானே?

டுபாய் முழுக்க இந்துக்களால் நிரம்பி வழிகிறது. ஒருக்கால் தேர் இழுத்து பார்ப்போமா?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

தனி மனித சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், குறித்த காலத்தின் பின் நிரந்தர வசிக்கும் உரிமை, குடியுரிமை, இந்த நாட்டின் சுதேசிகளுக்கு நிகரான சம வாய்பு இவைதானே?

இவைதான் ஒரு ஜனநாயக நாட்டுக்கும், சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் உள்ள வித்தியாசம்.

இதனால்தான் ஒவ்வொரு ஈழத்தமிழனும் தான் மட்டும் வந்ததோடு நில்லாமல் தனது கிராமத்தையே இந்த நாடுகளுக்கு கூட்டி வந்து உய்வித்தான்.

ரஸ்யா, சீனா வுக்கு படிக்க போனவர்கள் கூட அங்கே நிலைப்பதில்லை - எப்படியாவது மேற்குக்கு வந்து விடுவார்கள்.

இதற்கு அடிப்படை காரணம் மேற்கின் பல்லின, ஒப்பீடளவில் சகிப்புதன்மை, சட்டத்தின் ஆளுமை உள்ள ஜனநாயக கட்டமைப்பே.

அரச உதவியில் மேற்படிப்பிற்காக வந்தவர்களை சீனா,ரஷ்யா போன்ற நாடுகள்  தங்களிடம் வைத்திருப்பதில்லை. படித்த படிப்பை பிறந்த நாட்டுக்கே உதவ வேண்டுமென நினைப்பவர்கள்.

ஆனால் சுரண்டல்வாத மேற்குலகம் திறமையானவர்களை வளைத்துப்போட்டு  படித்தவர்களின் பலாபலன்களை சுலபமாக பெற்றுவிடுவார்கள்.இந்த மேற்குலகம் அன்று நாடு நாடாக சென்று களவெடுத்து பிழைத்தார்கள். இன்றோ வறுமையில் சித்தித்தவிக்கும் நாடுகளில் உள்ள மூளைசாலிகளை களவெடுக்கின்றார்கள்.

5 minutes ago, goshan_che said:

அவரின் தேர்தல் அறிக்கை படி, செல்வந்தர்களுக்கு அதிக வரி, உழைக்கும், நடுதர மக்களுக்கு சலுகைகள், தனியார் மயமான ஏரிசக்தி, நீர், ரயில் துறைகள் மீள அரசமயம். இப்படி பல.

அதாவது மே, ஜோன்சன் இருவரின் உள்நாட்டு கொள்கைக்கும் கிட்டதட்ட நேரெதிர் கொள்கையை கோபின் முன்வைத்தார்.

இதெல்லாம் சமதர்ம நாடுகளுக்குத்தான் சரிவரும். பிரபுத்துவ நாடுகளுக்கு சரிவராது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.