Jump to content

கலைச்செல்வி: 'லித்தியம் பேட்டரிகளுடன் 25 ஆண்டுகள்' - சி.எஸ்.ஐ.ஆர். தலைவரான விஞ்ஞானியின் உத்வேகப் பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலைச்செல்வி: 'லித்தியம் பேட்டரிகளுடன் 25 ஆண்டுகள்' - சி.எஸ்.ஐ.ஆர். தலைவரான விஞ்ஞானியின் உத்வேகப் பயணம்

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பேட்டரி

இந்தியாவின் சிஎஸ்ஐஆர் என்றழைக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் 4500 விஞ்ஞானிகள் பணியாற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு இவர் தலைமை வகிப்பார் என்பதும் இந்த மையத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள கலைச்செல்வியுடன் பிபிசி தமிழ் பேசியது.

கேள்வி: நீங்கள் செய்த முதல் ப்ராஜெக்ட் என்ன ?

பதில்: மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானியாக 1997ஆம்ஆண்டு பெற்றதிலிருந்து லித்தியம் பேட்டரி சார்ந்த ஆய்வுகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்.

 

லித்தியம் பேட்டரியில் தொடங்கி அதில் ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சியடைந்து ஒரு ஆனோட், ஒரு கேத்தோட், ஒரு எலக்ட்ரோலைட் என மூன்று பரிமாணங்களில் ஆய்வுகள் எடுத்துச் சென்று லித்தியம் பேட்டரி குறித்து முழுமையான புரிதலில் ஒரு சிறிய பகுதியை அனுபவபூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன்.

கேள்வி: தலைமை இயக்குராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்ற செய்தி கேட்டதும் உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?

பதில்: தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் சொன்ன போது உண்மையிலேயே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. அந்த மகிழ்ச்சியையும் தாண்டி நான் உணர்ந்து விஷயம் என்னவென்றால் கடமையும், பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது என்பது. இது நிதர்சனமான உண்மை.

 

பேட்டரி

பட மூலாதாரம்,KALAISELVI

கேள்வி: லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்கள் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவதால், லித்தியம் பேட்டரி பாதுகாப்பானதா?

தற்போது லித்தியம் பேட்டரி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தீ விபத்து. எந்த ஒரு தொழில்நுட்பமும் துவங்குகின்ற காலத்தில் அது குறித்து முழுமையான புரிதல் இல்லாத காரணத்தால் இது போன்ற பயம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதில் லித்தியம் பேட்டரி தொழில்நுட்பமும் ஒன்று.

லித்தியம் பேட்டரி குறித்த புரிதல் அனைத்து நாடுகளிலும் ஒரு மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுள்ள காரணத்தால் தான் நம் நாட்டில் அதற்கான தேடலும் புரிதலும் வேகமாக அதிகரித்து வருகிறது.

 

பேட்டரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்துவது குறித்த பயம், புரிதலும் குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.

கேள்வி: இந்தியாவில் பெண் விஞ்ஞானிகளின் வளர்ச்சி எப்படி உள்ளது.

பதில்: சமீப காலத்தில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. பெண்கள் அiனைத்து துறையிலும் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கான தேடல் அதிகரித்துள்ளது. இதனை முழுமையாக உணர்ந்து கொண்டதால் பெண்கள் ஆராய்ச்சி துறையில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமீப காலங்களில் உயரிய பதவி வைக்கின்ற ஆண்களின் மொத்த விகிதத்தைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை விகிதம் உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலும் உலக அளவிலும் நடந்து வருகிறது.

 

பேட்டரி

சிஎஸ்ஐஆர் நிறுவனம் இதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. முன்பை விட தற்போது பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.

கேள்ளி: குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் தமிழ் வழி கல்வியில் பயின்று முதன்மை இயக்குநராக பணி அமர்த்தப்பட்ட உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் எழுபதுகளில் பள்ளியில் படிக்கும் போது தமிழ் வழிக் கல்வி மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ், ஆங்கிலம் என இரு வழிகளிலும் குழந்தைகள் கல்வி பயிலும் வசதி உள்ளது.

நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றால் 'நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை அளவு சரியாக பயன்படுத்தலாம் என்பதற்கான புரிதல் இருக்குமேயானால்' அது நிச்சயம் இளைய சமுதாயத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

கேள்வி: ஒரு பெண் விஞ்ஞானி ஆக நீங்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் என்னென்ன ?

பதில்: 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ப்ராஜக்ட் குறித்து நோடல் விஞ்ஞானியாக நான் பிரசன்டேஷன் செய்த போது என்னுடைய சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் மிகவும் வியந்து பாராட்டினார்.

அப்போது அவர் சொன்ன வார்த்தை 'சரியான நபர் சரியான வேலையில் இருக்கிறார்' என்று. ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு எந்த ஒரு வாய்ப்பு மறுக்கப் பட்டதாக ஒருபோதும் நான் உணரவில்லை மாறாக ஒரு பெண் இவ்வளவு திறமையாக அவளுடைய எண்ணங்களை பிரதிபலிக்க முடிகிறது என்பதை ஆண்கள் அதிகமாக இருக்கும் சமுதாயத்தில் வியந்து பாராட்டியதை பலமுறை அனுபவித்துள்ளேன்.

கேள்வி: கூடுதலாக பெண் விஞ்ஞானிகளை இணைக்க திட்டம் உள்ளதா?

பதில்: சிஎஸ்ஐஆர் டெல்லி உள்ளிட்ட தலைமை நிறுவனத்தில் அதிக அளவு பெண்கள் பணியாற்றி வருகிறோம். நான் தலைமை ஏற்கக்கூடிய 37 ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகப்படுத்துவேன்.

கேள்வி: உங்களுடைய பொழுதுபோக்கு என்ன? தற்போது நீங்கள் வகிக்கும் பதவியில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

பதில்: நான் சிஎஸ்ஐஆர் விஞ்ஞானியாக பொறுப்பேற்ற காலத்திலிருந்து நான் தொலைக்காத ஒரே விஷயம் என்னுடைய புன்னகை மட்டுமே. நான் என்னுடைய பேச்சையும், குணத்தையும் இதுவரை மாற்றிக் கொண்டதில்லை. அதனால்தான் எவ்வளவு பெரிய பொறுப்புக்கு சென்றாலும் அதே அளவிற்கு மன நிம்மதியோடு மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருவதாக நான் நம்புகின்றேன்.

என்னுடைய இலக்கு தாய்த்திரு நாட்டையும் நான் சார்ந்துள்ள இந்த சிஎஸ்ஐஆர் குழுமத்தையும் உலக அரங்கிலே பெரிய உயரத்துக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தொட செய்ய வேண்டும் என்பதே அதை நான் நிச்சம் செய்து காட்டுவேன் என்றார். https://www.bbc.com/tamil/india-62514967

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.