Jump to content

சுயலாபம் அற்று சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துங்கள்- தமிழ் தரப்புக்களுக்கு டக்ளஸ் பகிரங்க அழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

By VISHNU

12 AUG, 2022 | 05:17 PM
image

 

 

சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துமாறு தமிழ் அரசியல் தரப்பினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பல்வேறு முரற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இன்னும் சில தினங்களில் குறித்த விவகாரத்திற்கு தீர்வினை வழங்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  கொள்கைப் பிரகடன உரை தொடர்பாக நாடாளுமன்றில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

"இருண்டிருந்த ஒரு யுகத்தில், அதை சபித்துக் கொண்டிராமல், ஒரேயோரு விளக்காக இருந்து, இந்த நாட்டுக்கே ஒளி தருவதற்கு முன்வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என்பதை யாவரும் அறிவோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள், இந்த நாடு முகங்கொடுத்திருந்த நெருக்கடி நிலைமையில், இந்த அரசுக்கெதிராக எழுந்திருந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்த நாட்டின் பிரதமர் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்வருமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளிடமும்.

கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆசையிருந்தும், அச்சம் காரணமாக பலரும் பின்;வாங்கியும், நிபந்தனைகளை விடுத்தும், தப்பித்தும் கொண்டும் இருந்த நிலையில், இந்த சவாலை தைரியமாக ஏற்று முன்வந்தவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.

எந்தவொரு விடயம் குறித்தும் நடைமுறைச் சாத்தியமாக சிந்தித்து, முடிவெடுக்கும் நாம், இந்த நாட்டின் சவால்கள் மிகுந்த இக்காலகட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் ஆற்றல் குறித்து திடமான நம்பிக்கைக் கொண்டிருந்தோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் அரசியல் சதி காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்யவிருந்த நிலையில், பதில் ஜனாதிபதியாகவும் இடைக்கால ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்று எமது நாடு முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினைத் தேடித் தரக் கூடியவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே என்ற உறுதியான நம்பிக்கை எம்மிடம் இருந்ததால், எமது ஆதரவினை பகிரங்கமாகவே அவருக்கு வழங்க முன்வந்திருந்தோம்.

நாம் சுயலாபம் கருதி பொது நோக்கை வெறுத்து அலையும் கூட்டம் அல்ல… பொது நோக்கு கருதி சுயலாபங்களை வெறுக்கும் நாட்டம் கொண்டவர்கள் நாம்… நாம் வெல்லும் பக்கம் நிற்பவர்கள் அல்ல… நிற்கும் பக்கத்தின் வெற்றிக்காக நாம் உழைப்பவர்கள்… அவரை இவரை நம்புவது என்பதற்கு அப்பால் கனிந்து வந்திருக்கும் சூழலை சரிவரபயன்படுத்தி எமது இலக்கை நாமே எட்டிவிட எம்மை நாமமே நாம் முழுமையாக நம்புகிறோம்.

நாடாளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெல்வாரா இல்லையா என்பதற்கு அப்பால்... எமது தேசத்தின் இன்றைய பொருளாதார சவால்களை அவரே வெல்வார் என்றே அவரை நாம் அரசியல் துணிச்சலோடு ஆதரித்தோம். நாம் விரும்பியது போல் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே ஜனாதிபதியாக சிம்மாசனம் எறியிருக்கின்றார்…தனது சிம்மாசன உரையில் அவர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண சர்வகட்சி அரசுக்கான அழைப்பை விடுத்துள்ளார்... இது ஒரு அரிய வாய்ப்பு... சகல தரப்புடனும் இணைந்து சக தமிழ் தரப்பும் இதை சரிவரப்பயன்படுத்த முன்வரவேண்டும்,..

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடக்கம், அதை ஏற்றவர்கள், ஏற்காதவர்கள் உட்பட... வரலாறெங்கும் இதுவரை காலம் எமக்கு கிடைத்த அறிய வாய்ப்புகள் யாவும் பன்றிகளுக்கு முன்னாள் போடப்பட்ட முத்தாகவே கடந்து போய் விட்டன... இன்று கனிந்துள்ள அரிய வாய்ப்பையாவது சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து சரிவர பயன்படுத்த முன்வருமாறு சக தமிழ் தரப்பினருக்கு மீண்டும் நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்...

ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஐம்பது அம்ச திட்டத்தை  முன்மொழிந்திக்கிறார்... அதில் தமிழ் பேசும் மக்கள் சார்பாக நாம் முன்வைத்திருக்கும் பத்து அம்ச கோரிக்கைகளும் உள்ளடங்கியிருக்கின்றன...இவைகளை நடைமுறைப்படுத்த அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்து செயலாற்ற முன்வருமாறு நான் சகல கட்சிகளையும் அழைக்கின்றேன்,..

இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டில் நிலவுகின்ற சவால்களுக்கு முகங்கொடுத்து, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இருப்போரில் சிறந்த தேர்வு கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே என நாம் நம்புகின்றோம். எமது தீர்க்கதரிசனமான முடிவு இறுதியில் வென்றது. அது எமது நடைமுறைச் சாத்தியமான வழிமுறைக்கு கிடைத்த மேலுமொரு வெற்றியாகும். அதேபோன்று எமது தேசிய நல்லிணக்கம் நோக்கிய பயணத்திற்கு மேலும் வலு சேர்ப்பதற்கு இத் தெரிவு சாதகமானதாகும்.

11. ஜனாதிபதி தெரிவில் தமது ஆதரவினை நாளை சொல்கிறோம், நாளை மறுநாள் சொல்கிறோம், வாக்கெடுப்புக்கு முன் சொல்கிறோம், பின்னர் சொல்கிறோம் என நாங்கள் சாக்குப் போக்கு கூறவில்லை.

சகல தமிழ் அரசியல் தரப்பினர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டுவிட்டு, இப்போது கறுப்பாடுகளைத் தேடுவதாக பாசாங்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி அவர்களது வெற்றியில் தமிழ் அரசியல் தரப்புகளின் பங்களிப்பும் காத்திரமாக இருந்திருந்தால், அது எமது மக்களின் நலன்களுக்கு மேலும் வாய்ப்பாக அமையும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

வழமையாக செய்கின்ற எமது மக்களுக்கான துரோகத்தனத்தையே இம்முறையும் சக தமிழ் அரசியல் தரப்புகள் செய்துவிட்டு, இன்று கறுப்பாடு அரசியலை முன்னெடுத்து வருகின்றன. புலித் தோல் போர்த்திய ஆடுகளாகத் தம்மைக் காட்டிக் கொள்கின்ற கறுப்பாடுகளும், கறுப்பாடுகளான கறுப்பாடுகளும், கறுப்பாடுகளைத் தேடுவதாகக் கூறுகின்றன. இந்த கறுப்பாட்டு அரசியல் அநேகமாக அடுத்த ஏதாவது ஒரு தேர்தல் வரை மேய்ந்து கொண்டேயிருக்கும் என எமது மக்கள் முணுமுணுக்கின்றதையும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.

இன்று, எமது நாடு முகங்கொடுத்திருக்கும் தலையாய பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்ப்பதற்கான நம்பிக்கை தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அனைத்துப் பிரச்சினைகளும் முழுமையாகத் தீர இன்னும் சில காலம் எடுக்கும். இந்தப் பிச்சினைகளிருந்து மக்கள் பிரதிநிதிகளான நாம் ஒளிந்திருக்கவோ, அல்லது, தட்டிக் கழித்துச் செல்லவோ முடியாது.

அந்த வகையில் நான், என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடற்றொழில் அமைச்சு சார்ந்து நாடாளாவிய ரீதியில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்களை நேரில் சந்திப்பதற்கென அந்தந்த பகுதிகளுக்கும் சென்று வருகின்றேன். இந்த நாட்டில் 10 இலட்சத்திற்கும் அதிகமான கடற்றொழிலார்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 60 ஆயிரம் வரையிலான நன்னீர் வேளாண்மை செய்கையாளர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அடிப்படை வசதிகள் ரீதியில், பொருளாதார ரீதியில், பொருத்தமான சந்தை வாய்ப்பு ரீதியில், சமூக ரீதியில், கல்வி, சுகாதார ரீதியில் என பல வழிகளிலும் இவர்களுக்கு உதவ வேண்டும். அதேநேரம், இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமான போசாக்கினையும் உறுதிபடுத்த வேண்டும்.

அந்த வகையில், கடந்த வாரங்களில் தென் மாகாணம், மேல் மாகாணம், வடமேல் மாகாணம், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்திலும் பல கடற்றொழில் பகுதிகளுக்குச் சென்று, கடற்றொழிலாளர்களை நேரில் சந்தித்து வருகின்றேன்.

தற்போதைய நிலையில், எரிபொருள் பிரச்சினை காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழில் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு, மூன்று மாதங்களாக தொழிலின்மையால் அவர்கள் வாழ்க்கையில் விரக்கதியடைந்திருப்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது. அந்த விரக்தி சில நேரங்களில் ஆக்ரோசமாகவும் வெளிப்படுகின்றன. அது இயல்பு.

எனவே, எமது கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நான் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றேன். இன்னும் சில தினங்களில் அப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த சபையில் முன்வைக்கின்றேன்.

இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற நிலையில், எமது ஜனாதிபதி அவர்கள் தனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசிய உற்பத்தியை அதிகரித்து, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதுடன், அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கும், உணவுப் பாதுகாப்பினை உறுதிபடுத்திக் கொள்வதற்கும், நாட்டு மக்களின் போசாக்கு நிலையை உறுதிப்படுத்துவதற்கும், உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான நியாயமான விலையை பேணுவதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்புகின்றேன்.

இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் மேம்பாட்டினை பிரதிபலிப்பதாகவே ஜனாதிபதி அவர்களின் கொள்கைப் பிரகடன உரை அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தமிழ் மக்கள் பல காலமாக முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதானது அதில் ஒரு முக்கிய விடயம். எமது மக்களின் அன்றாட, அத்தியாவசிய பிரச்சினைகளை நாம் எம்மால் முடிந்தளவு தீர்த்து வருகின்ற அதே நேரம் சமகாலத்திலேயே அரசியல் தீர்வு குறித்தும் முயற்சித்து வருகின்றோம்.

அந்த வகையில் எம்மால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டிருந்த எமது அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்நோக்கிச் செல்வதற்கும், மேலும் காலத்தை வீணடிக்காமல் சக தமிழ் தரப்பினரும் முன்வர வேண்டுமேன மீண்டும் பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றேன.

மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களது உரையில் விசேட அவதானம் செலுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பல்லாண்டு காலமாக அம்மக்கள் முகங்கொடுத்து வருகின்ற சமூக, பொருளதார மற்றும் அடிப்படை வசதிகள் சார்ந்து அம்மக்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இன, மத, கட்சி போன்ற அனைத்து பேதங்களையும் கடந்து, திறமை மற்றும் தகுதி அடிப்படையில் மக்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கின்ற அடிப்படையினை உறுதிப்படுத்துவதானது மிக முக்கியமான விடயமாகும். இது, இந்த நாட்டின் சிறந்ததொரு எதிர்காலத்திற்கான முன்னேற்பாடாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், எமது புலம்பெயர் உறவுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்வது, தடைசெய்யப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மீதான தடைகளை அகற்றுவது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போன உறவுகளுக்கான பரிகாரம், எமது மக்களின் காணி, நிலங்களை விடுவித்துக் கொள்வது உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடியும் வருகின்றேன்.

அதே நேரம், ஜனாதிபதி அவர்கள் பகிரங்கமாக விடுத்திருக்கின்ற சர்வ கட்சி அரசாங்கம் குறித்த அழைப்பினை அனைத்து தரப்பினரும் ஏற்க முன்வருவது காலத்தின் அவசியமாகும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது மக்கள் மீண்டும் சுதந்திரமானதும், அனைத்து உரிமைகளையும் பெற்ற, நியாயமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவர்களாக வாழ்வதற்கான எதிர்கால அடிப்படையினை நாம் உருவாக்க வேண்டும்.

கடந்த கால தவறுகள் அனைத்தும் திருத்தப்படல் வேண்டும்.

அந்த வகையில், ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன் கருதி எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் நாம் பக்க பலமாக இருப்போம் என்பதைத் கூறிக்கொண்டு, இந்த சபையில் எமது அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கும் நாடாளுமன்றத்தின் அதிகாரமுறைமைக்கிடையிலான சமபலத்தை பேணக்கூடிய வகையில் 22 ஆவது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டிருகிறது. அதேபோல இந்த வருடத்திற்கான மீளாய்வு வரவு செலவு திட்டமும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சின், கடல் தொழில் அமைச்சின் முன்னுரிமையாக உணவு பாதுகாப்பையும், கடல் தொழில் சார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து உயர்த்துவதையும், அதேவேளை இந்த கடல் தொழில் கைத்தொழிலினை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பிற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளேன்.

கடைசியாக,  கஜேந்திரனது நாடாளுமன்ற உரையில் தனது தம்பி யுத்தகாலத்தில் அரச படைகலால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் அதில் எனது பெயரைக் குறிப்பிட்டு எனக்கு சம்மந்தம் இருப்பதாகவும் வெளிப்படுத்தியிருந்தார். அது உண்மை தான். அவரது தம்பி மாத்திரம் அல்ல பல நூற்றுக்கணக்கானவர்களை நான் விடுவித்திருக்கின்றேன். அந்த வகையில் அதை வெளிப்படுத்திய அவரிற்கு நன்றியைக் கூறிக் கொண்டு, ஆனால் துரதிஸ்டவசமாக அவரது குழுவினரால் காணாமல் ஆக்கப்பட்டோரில் எனது தம்பி உட்பட எனது பாசத்திற்குரிய பல உறவுகளை இன்றுவரையிலும் நான் தேடிக்கொண்டே இருக்கின்றேன் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

சுயலாபம் அற்று சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துங்கள்- தமிழ் தரப்புக்களுக்கு டக்ளஸ் பகிரங்க அழைப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பல்வேறு முரற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இன்னும் சில தினங்களில் குறித்த விவகாரத்திற்கு தீர்வினை வழங்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இவர், கோத்தா அரசை சிறப்பித்த வேளையில்,  கோத்தா தப்பியோடுவதற்கு முன், எமது அரசு இன்னும் சில தினங்களில் எல்லாப்பிரச்னைக்கும் தீர்வு காணும் என்று பேட்டி கொடுத்திருந்தார். அந்த சில தினங்களில் கோத்தா காணாமல் போய்விட்டார். ரணில் என்னாவாவாரோ?

11 hours ago, பிழம்பு said:

தமிழ் பேசும் மக்கள் சார்பாக நாம் முன்வைத்திருக்கும் பத்து அம்ச கோரிக்கைகளும் உள்ளடங்கியிருக்கின்றன

ரணிலுக்கு சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டும் சாதிக்கவில்லையே அது ஏன்?  ஆமா ..... இவ்வளவு வீர சூரரை தாங்கள் கடந்த காலங்களில் தேர்ந்தெடுத்து ஆதரவளிக்காமல், தப்பியோடுபவரோடு ஒட்டியுறவாடியதன் நோக்கம் என்னவோ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிகாரம் இருந்தபோது தமிழருக்கு ஒன்றும் செய்யாதவர் இப்போ செய்யபோகிறாராம் என்று ரொம்ப வாலை ஆட்டி மாயை வசனம் பேசுது இந்த ஜந்து! என்ன .... தன்னை நிரந்தரமாக வைத்திருக்கச்சொல்லி புகழுது. நரி தன் வேலை முடிய தான் யார் என்பதை புரிய வைக்கும் இவருக்கு.  அது சரி... தமிழருக்கு நல்லது செய்ய விரும்பும் ரணில் அதற்குள் இதை ஏன் அழைத்தார்? தான் குழப்பியடிக்காமல் குழப்பி ஒன்று வேண்டும் என்றோ அல்லது தீர்வு கேட்ப்பவரை இல்லாமல் செய்வதற்கு உதவி கையோடு வைத்திருப்பது நல்லது என்று நினைத்தாரோ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அவரின் சுயலாபத்துக்கு அமைச்சுப் பதவி கொடுத்திட்டால் போதும்.. மற்றவைக்கு சுயலாபமற்ற.. அட்வைஸ் வேற சுலபமாக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியர் அறிக்கை விடுவ்தற்கான தேவை ஏதும்  இப்போது  ஏற்பட்டதா ? இல்லையே. பிறகேன் இவர் அறிக்கைமேல் அறிக்கை  விடுகிறார்?

உள்ளேன் ஐயா ! வகையறாககள். அம்புட்டுதே..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இவருக்கு அவரின் சுயலாபத்துக்கு அமைச்சுப் பதவி கொடுத்திட்டால் போதும்.. மற்றவைக்கு சுயலாபமற்ற.. அட்வைஸ் வேற சுலபமாக. 

மீன்பிடி அமைச்சு கொடுத்தால் போதும்...இலை இலையாக கொண்டுவரலாம்..

Edited by alvayan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.