Jump to content

சீன தயாரிப்பு பாகிஸ்தான் யுத்தக் கப்பல் இலங்கையில் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 AUG, 2022 | 11:20 AM
image

சீனாவினால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் யுத்தக் கப்பலான பி.என்.எஸ். தைமூர் ( PNS Taimur )இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளது.

பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இலங்கை அரசாங்கம்  அனுமதி வழங்கிய நிலையிலேயே குறித்த கப்பல் இன்று காலை வந்தடைந்தள்ளது.

FZ70LTPacAEGWmE.jpg

சீனாவில் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த போர்க்கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண அடிப்படையில் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே பாகிஸ்தானின் கராச்சி நோக்கி திரும்புகிறது.

ஷாங்காயில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல், கராச்சிக்கு தனது  முதல் பயணத்தை மேற்கொள்கிறது.

கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு  துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை வந்துள்ளது.

இன்று வருகை தந்த இந்த கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

FZ70KOSaQAIR89p.jpg

இதேவேளை, சீனாவின் யுவான் வோங் - 5 என்ற உளவுக் கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜதந்திர ரீதியில் சிறு இடைவெளியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, சீன இராணுவத்தின் மூலோபாய  ஆதரவுப் படைக்கு சொந்தமான  அறிவியல் ஆய்வுக் கப்பலான ' யுவான் வாங் 5' எனும் கப்பல், நேற்று ( 11)  அம்பாந்தோட்டையை அடைய திட்டமிட்டிருந்த போதும், அக்கப்பல் நேற்று நள்ளிரவு வரை   இலங்கையின் கடல் எல்லைக்குள்  நுழையவில்லை என அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ' யுவான் வாங் 5'  கப்பல் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர அனுமதி கோரப்பட்டிருக்கவில்லை எனவும், தனது  அனுமதி இல்லாமல் எந்த கப்பலும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைய முடியாது என  துறை முக மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

FZ4L0y3aUAEk2Jo.jpg

அதன்படி, இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்த சீனாவின் ' யுவான் வாங் 5'  கப்பல்,  இலங்கையிலிருந்து சுமார் 550 இறுகும் 600 இற்கும் இடைப்பட்ட கடல் மைல் தூரத்தில், அம்பாந்தோட்டையை நோக்கி பயணிக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் அக்கப்பலின்  பயணப் பாதை தொடர்பிலான ஏனைய விபரங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறுள்ளபோது சீன தயாரிப்பு பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பலின் இலங்கை வருகை தற்போது அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

சீன தயாரிப்பு பாகிஸ்தான் யுத்தக் கப்பல் இலங்கையில் ! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட… பாகிஸ்தான் இராணுவ கப்பலை,
ஶ்ரீலங்காதான் வலிய கூப்பிட்டு, இந்தியாவுக்கு கடுப்பு ஏத்தியிருக்கு. 

அப்படி இருந்தும்,  கணபதி ஐயர்… இலங்கைக்கு,
உளவு விமானம் கொடுத்து… குஷிப் படுத்தி உள்ளார்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

அட… பாகிஸ்தான் இராணுவ கப்பலை,
ஶ்ரீலங்காதான் வலிய கூப்பிட்டு, இந்தியாவுக்கு கடுப்பு ஏத்தியிருக்கு. 

அப்படி இருந்தும்,  கணபதி ஐயர்… இலங்கைக்கு,
உளவு விமானம் கொடுத்து… குஷிப் படுத்தி உள்ளார்.

கணவதி ஐயர் பட்டும் திருந்திற பிளான் இல்லைப் போல கிடக்கு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

கணவதி ஐயர் பட்டும் திருந்திற பிளான் இல்லைப் போல கிடக்கு.....

பெரிய நாடுகளை எல்லாம்…. லாகவகமாக சுழித்து கையாளும்,
சிங்களவன் கெட்டிக்காரன் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

பெரிய நாடுகளை எல்லாம்…. லாகவகமாக சுழித்து கையாளும்,
சிங்களவன் கெட்டிக்காரன் தான்.

உக்ரேனை மாதிரி அவங்களும் கெட்டிக்காரர் தான்.....😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உக்ரேனை மாதிரி அவங்களும் கெட்டிக்காரர் தான்.....😎

தமிழ் அரசியல் வாதிகள்… சிங்களவனிடம், ஒரு செம்பு  “இளநீர்” வாங்கி,
மடக்கு, மடக்கு… என்று, நாக்கில் படாமல் குடிக்க வேணும்.🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வெளியுறக்கொள்கை படுதோல்வியடைந்துள்ளது. இந்தியாவின் வெளியுறத்துறையை முற்றாகப் புதுகப்பிக்கபட்வேண்டும். இப்போதிருக்கும் மலையாளிகளைப் பெரும்பானமையமாக் கொண்ட வெளியுறவுத்துறையை வீட்டுக்கு அனுப்பி விட்டு லையும்தோல்விக்கான காரணங்களுக்காக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். முற்றிலும் தமிழர்களைக் கொண்ட வெளியுறவுத்துறை அமைக்கப்பட வேண்டம். தமிழர்களின் பாதுகாப்பே இந்தியாவின் பாதுகாப்பு.இந்தியா இதனை உணராத வரைக்கும் சீனக்கப்பலையும் பாகிஸ்தான் கப்hலையும் தமிழர்கள் வரவேற்பார்கள். புலிகள் இருந்தவரை எந்தநாட்டுக்கப்பலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தை எட்டியும்பார்க்கவில்லை.என்பதை இந்தியா உணரவேண்டும். இது இந்தியாவின் துரோகத்தின் பரிசு.

4 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல் வாதிகள்… சிங்களவனிடம், ஒரு செம்பு  “இளநீர்” வாங்கி,
மடக்கு, மடக்கு… என்று, நாக்கில் படாமல் குடிக்க வேணும்.🤣

இளநீர் இள என்பதற்கு சிறு என்று பொருள்கோடலாமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அட… பாகிஸ்தான் இராணுவ கப்பலை,
ஶ்ரீலங்காதான் வலிய கூப்பிட்டு, இந்தியாவுக்கு கடுப்பு ஏத்தியிருக்கு. 

அப்படி இருந்தும்,  கணபதி ஐயர்… இலங்கைக்கு,
உளவு விமானம் கொடுத்து… குஷிப் படுத்தி உள்ளார்.


சோனியாவினுடைய முந்தானையில் தொங்கிய கொள்கைதான் இலங்கை நோக்கிய பார்வையில் கணபதி ஐயனின் நகர்வும் உள்ளது.பெயர்தான் வேறு. (காங்கிரஸ் - பா.ஜ.க) பிறகு எப்படியாம் வெளியுறவுக் கொள்கைமாறும். ஈழத்தீவினுள் இந்தியப்படை புகுந்ததில் இருந்து இன்றுவரை தமிழீழ மக்கள் தொடர்பாக கிந்தியா எதையாவது சாதகமாச் சிந்தித்திருக்கிறதா? சிறிலங்காவைக்காத்து அவமானப்படும் ஒரே நாடு கிந்தியா மட்டுமே. 

6 hours ago, குமாரசாமி said:

கணவதி ஐயர் பட்டும் திருந்திற பிளான் இல்லைப் போல கிடக்கு.....

ஈழத் தமிழினம் இல்லாது போனால் சாத்தியம்.

5 hours ago, தமிழ் சிறி said:

பெரிய நாடுகளை எல்லாம்…. லாகவகமாக சுழித்து கையாளும்,
சிங்களவன் கெட்டிக்காரன் தான்.

2500ஆண்டுகளாக ஒரு திட்டுமிட்ட அடிப்படையில் ஒரே சிந்தனையோடு, ஆனால் சிங்களவனுக்கு வக்காளத்துவாக்கித் தடுத்தாடிக் காப்பற்றவே பல தமிழ்க்கூட்டுகள் உள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனன் சுழியன் ஐயருக்கு அம்பாந்தோட்டையில வெள்ளி காட்டிப்போட்டு, கொழும்புக்குள்ள பாகிஸ்தான் பெயரில தன்ர இன்னொரு கப்பலை இறக்கீட்டான்🤣.

ஜெய் சங்கர்வாழ் தோழமை நாடான அமரிக்கனுக்கு கெத்துகாட்டத்தான் லாயக்கு😆. சீனன் வெட்டி ஆடிப்போடுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு  துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை வந்துள்ளது.

நான் நினைக்கிறன், இலங்கை வேண்டுமென்றே இந்தியாவை சீண்டி வேடிக்கை பாக்குதென்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

நான் நினைக்கிறன், இலங்கை வேண்டுமென்றே இந்தியாவை சீண்டி வேடிக்கை பாக்குதென்று.

இந்தியா தானும் பருத்தித்துறை பக்கம் ஒரு கப்பலை ஏன் விடக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

இந்தியா தானும் பருத்தித்துறை பக்கம் ஒரு கப்பலை ஏன் விடக்கூடாது?

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது." என்று சின்ன வயதில் படித்திருப்பீர்கள். ஏற்கெனவே புலிகளிடம் வாங்கிக்கட்டிய அனுபவம், அதிலும் வந்திருக்கிறது ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்கள், இலங்கை வேண்டுமென்றே வரவழைத்திருப்பதுபோல் தெரிகிறது. சும்மா எச்சரித்துக்கொண்டு காலத்தை கழிப்பவரை  சுத்தி வளைச்சு அடிச்சால் தப்பி ஓடவும் வழியிருக்க வேணுமே. இலங்கையோ இந்தியாவுக்கும் பெப்பே, சீனாவுக்கும் பெப்பே காட்டி விளையாடுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது." என்று சின்ன வயதில் படித்திருப்பீர்கள். ஏற்கெனவே புலிகளிடம் வாங்கிக்கட்டிய அனுபவம், அதிலும் வந்திருக்கிறது ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்கள், இலங்கை வேண்டுமென்றே வரவழைத்திருப்பதுபோல் தெரிகிறது. சும்மா எச்சரித்துக்கொண்டு காலத்தை கழிப்பவரை  சுத்தி வளைச்சு அடிச்சால் தப்பி ஓடவும் வழியிருக்க வேணுமே. இலங்கையோ இந்தியாவுக்கும் பெப்பே, சீனாவுக்கும் பெப்பே காட்டி விளையாடுது.

சீனாவும் இந்தியாவும் எங்களுக்கு இரண்டு கண்கள் எண்டு சிங்களம் கதை விட்டால் என்ன செய்யிறது? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சீனாவும் இந்தியாவும் எங்களுக்கு இரண்டு கண்கள் எண்டு சிங்களம் கதை விட்டால் என்ன செய்யிறது? 😁

இந்தியா, கண் தப்பினால் போதும் என்று கண்ணைப் பொத்திக்கொண்டு திரும்பிப்பாக்காமல் ஓடுவதே சிறந்தது, அல்லது சீனாவோடு ஒத்துப்போவதை தவிர வேறு வழியில்லை அதற்கு. இருந்த ஒரு சிறந்த வழியையம் அதே அடைத்து தனக்கு வினையை தானே தேடிக்கொண்டது. சிங்களத்தை விட தமிழரை அழிப்பதில் தீவிரம் காட்டியது இந்தியாவே, இலங்கை வெறும் கருவியே. பொன்சேகா கூறியது "எங்களது புலிகளுக்கெதிரான  தாக்குதலை கிளிநொச்சியோடு நிறுத்திக்கொள்ள தீர்மானித்தோம், ஆனால் இந்தியாவே எங்களை மேற்கொண்டு போரை தொடர வற்புறுத்தியது." மஹிந்தா சொன்னது  "புலிகளுக்கெதிரான இந்தியாவின் போரையே நாங்கள் செய்தோம், நாங்கள் கேட்க்காமலேயே எல்லா உதவிகளையும் எங்களுக்கு அளித்து, போரை முடித்துவைக்க இந்தியா உதவியது." பேராசிரியர் பத்திரன சொன்னது "அதிகார பரவலாக்கல் வரைபை வகுக்கும்படி மஹிந்தா தன்னை பணித்து, தான் அதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இந்தியா தன்னை அழைத்து, அதெல்லாம் செய்ய வேண்டாம், உங்கள் முயற்சியை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று தடுத்தது." எரிக் சொல்ஹெய்ம் என்ன சொன்னார், ஏன் ஒவ்வொருதடவையும் இலங்கைக்கு விஜயம் செய்து விட்டு நாடு திரும்பும் போதெல்லாம் இந்தியாவுக்கு சென்றார் என்பதை அவரே விளக்கியிருந்தார். இத்தனை உயிரை பலி எடுத்து தனக்குத்தானே ஆபத்தை தேடி அழைத்துக்கொண்டது. இந்தியாவுக்கு தான் சவால் விடுமளவுக்கு தன்னில் நம்பிக்கையில்லை. எதை கண்டாலும் பயம், அதனாலேயே வலிய போய் முட்டி மண்டையை உடைத்துக்கொள்கிறது. வெகுவிரைவில் அதன் பலனை அனுபவிக்கும்.  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.