Jump to content

புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள்  மீதான தடையை நீக்கியுள்ளது.

உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழீழம் கிடைச்சிடும் எண்டுறீயள்?

🤣

இந்த நரியை நம்ப முடியாது,  முன்னரைவிட தபோது அதிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். . 🧐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அப்ப தமிழீழம் கிடைச்சிடும் எண்டுறீயள்?

🤣

இந்த நரியை நம்ப முடியாது,  முன்னரைவிட தபோது அதிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். . 🧐

நம்பினால் அவ்வளவுதான் சொல்ல  முடியும் பிரச்சினை தீர்ந்த பிறகு மொத்தமாக சொருகிடுவாங்கள் அவர்கள் பெளத்த குடைக்குள் நின்றே வலைவீசுகிறார்கள் இழுக்கும் வரைக்கும் இழுத்து சட்டிக்குள் போட்டிடுவார்கள் விளங்கினால் சரி

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

ஏன் இவரை மட்டும் தனியாக பெயரிடுகிறார்கள்? சுமந்திரன் சொல்லியிருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

image

புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள்  மீதான தடையை நீக்கியுள்ளது.

உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc

இவர்கள் எல்லாம் அவர்கள் ஆட்கள். சோனியாகாந்தி தன்னுடன் தமிழர்பிரச்சினை தொடர்பாக கனிவோடுபேசினார் என்று அறிக்கை விட்டவர்தான் இந்த சுரேந்திரன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அப்ப தமிழீழம் கிடைச்சிடும் எண்டுறீயள்?

🤣

இந்த நரியை நம்ப முடியாது,  முன்னரைவிட தபோது அதிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். . 🧐

இந்த நரி 2009 பின்னர் தந்திரங்களை மட்டுமே சிந்தித்து பல திட்டங்களை தீட்டியிருக்கும். அதன் முதல் படி திட்டம் தான் ஜனாதிபதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரியின் போக்கில் நரியாகி நாமும் பிழைச்சுக் கொள்ள வேண்டியதுதானே தவிர நரிக்கு பனங்காட்டு சலசலப்புக் காட்டி நாம் எதையும் சாதிக்க முடியாது. கள நிலவரத்திற்கு ஏற்ப தந்திரோபாயம் மாறனும் இல்லைன்னா.. முள்ளிவாய்க்கால் தான் கதி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இ  லங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.                                                                                                                                                                                                                      அப்ப கனடாத் தெருத் திருவிழாவிற்கு...கண்டியன் நடனமும்....ரூபவாகினியும் வரும்  என்கிறியள்....  அப்ப சுமந்து குழுவுடன் ரணிலும் வருவாரோ...வந்தால் டொலராப் பொறுக்கலாம்..           

Edited by alvayan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி தேடி தட்டிய கதவுகள் திறக்க மறுத்துவிட்டன, வேறு வழியில்லை நரியாருக்கு, புலம்பெயர்ந்தோர் கதவை தட்ட வேண்டிய கட்டாயம் வேறொன்றுமில்லை. விட்டில் பூச்சிகள் வந்து விழும்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இ  லங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.           

அவை ஏற்கனவே உள்ளுக்குள்ளால் நல்ல உறவு இன்று சண்டே ஈலிங் அம்மன் தேர் இரண்டு கொட்டகை போட்டு இருக்கினம் BTF காரர் உண்டியல் குலுக்கிரம் வந்த காசுடன் கொழும்பு போறம் தமிழ் ஈழத்துகாண பேச்சு வார்த்தையை தொடங்கிரம் ஈழத்தை வாங்கிறம் .....😀

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்பினால் அவ்வளவுதான் சொல்ல  முடியும் பிரச்சினை தீர்ந்த பிறகு மொத்தமாக சொருகிடுவாங்கள் அவர்கள் பெளத்த குடைக்குள் நின்றே வலைவீசுகிறார்கள் இழுக்கும் வரைக்கும் இழுத்து சட்டிக்குள் போட்டிடுவார்கள் விளங்கினால் சரி

அது விளங்குபவர்களுக்கு விளங்கனுமே ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே சுமந்திரன் உந்த புலம்பெயர்ந்தோரை வளைத்துப்போட ஓடுப்பட்டு திரிஞ்சவர் கண்டியளோ! யாராவது வந்தால் சுரேந்திரனையும் சேர்த்து இழுத்து வரலாம் என்று, ஒருவரும் மாட்டுப்படேல்லை, காத்திருந்து வேறு வழியில்லாமல் இப்போ சுரேந்திரன் தலைமை எடுக்குது, தன்னை பாத்து யாராவது தொடருவினை என்று. சர்வதேசமே ஒதுங்கும்போது இவர்கள் வந்து முறியப்போகினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, satan said:

ஏற்கெனவே சுமந்திரன் உந்த புலம்பெயர்ந்தோரை வளைத்துப்போட ஓடுப்பட்டு திரிஞ்சவர் கண்டியளோ! யாராவது வந்தால் சுரேந்திரனையும் சேர்த்து இழுத்து வரலாம் என்று, ஒருவரும் மாட்டுப்படேல்லை, காத்திருந்து வேறு வழியில்லாமல் இப்போ சுரேந்திரன் தலைமை எடுக்குது, தன்னை பாத்து யாராவது தொடருவினை என்று. சர்வதேசமே ஒதுங்கும்போது இவர்கள் வந்து முறியப்போகினம். 

ஒருமுறை Javaharlal Neru பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை  தொடர்பாக  பின்வருமாறு கூறினார் (சாராம்சம் ). "கை குலுக்குவதில் உள்ள நன்மை, கை குலுக்குபவர் (Pakisthan)  தனது கையை விட்டாலோ அல்லது  மற்றையவரது (India) கையைத் திருகினாலோ திருகுபவரது (Pakisthan) கை மற்றவரது(India ) பிடியில் உள்ளது" என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

image

புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள்  மீதான தடையை நீக்கியுள்ளது.

உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc

 

நல்ல விடயம். தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இலங்கையின் வடக்கு, கிழக்கில் மக்கள் குடியிருப்புக்களில் அடாத்தாக நிலைகொண்டுள்ள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்படவேண்டும். சகல இனங்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நல்லதொரு சுமுகமான சூழலை எற்படுத்தவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ! இந்தமுறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான குரல்கள் ஒலிக்காது என்கிறீர்கள். அதுதான் புலம்பெயர்ந்தோரை வளைத்து பிடித்தாச்சே, நரிபுத்தி! கோத்தபாய மனித உரிமைகளின் பிதா என்று நிறுவுவார் நரியார் ஜெனிவாவில். மீண்டும் மீண்டும் ஏமாறும் முட்டாள்கூட்டம். சுமந்திரன் இருக்கும்வரை சிங்களம் எல்லாவற்றையும் வெடியாளும். பிரதம மந்திரி பதவி பேரம்பேசப்படலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்பினால் அவ்வளவுதான் சொல்ல  முடியும் பிரச்சினை தீர்ந்த பிறகு மொத்தமாக சொருகிடுவாங்கள் அவர்கள் பெளத்த குடைக்குள் நின்றே வலைவீசுகிறார்கள் இழுக்கும் வரைக்கும் இழுத்து சட்டிக்குள் போட்டிடுவார்கள் விளங்கினால் சரி

உண்மை!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

உதவி தேடி தட்டிய கதவுகள் திறக்க மறுத்துவிட்டன, வேறு வழியில்லை நரியாருக்கு, புலம்பெயர்ந்தோர் கதவை தட்ட வேண்டிய கட்டாயம் வேறொன்றுமில்லை. விட்டில் பூச்சிகள் வந்து விழும்!

 

23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்பினால் அவ்வளவுதான் சொல்ல  முடியும் பிரச்சினை தீர்ந்த பிறகு மொத்தமாக சொருகிடுவாங்கள் அவர்கள் பெளத்த குடைக்குள் நின்றே வலைவீசுகிறார்கள் இழுக்கும் வரைக்கும் இழுத்து சட்டிக்குள் போட்டிடுவார்கள் விளங்கினால் சரி

சிறிலங்கா அரசை ஏதோ அரசியல் அறத்தின் மீதான அரசாக எண்ணினால் மட்டுமே இந்த நகர்வை அதிசயிக்க வேண்டும். அறமற்ற அரசுகளால் வந்த போராட்டத்தை போரறத்தை மீறி (அதனை சிங்களத்திடம் எதிர்பார்க்கலாமா?) அழித்துவிட்டோம் இனிச் சிறிலங்கா சொர்கப்புரியாகுமென எண்ணி ஏமாந்த சிங்கள அன்றாடங்காய்ச்சிகளான மத்தியதரவர்க்கத்தின் போராட்டம் கொடுத்த அரசு. அதன் ஆழ்மன ஓட்டத்தில் பௌத்த சிங்கள இனவாதம் ஒடுங்கிவிடவில்லை, ஓய்வெடுக்கிறது. தற்போது பசியாறும் காலமாகும். மீணடும் அது வீச்சோடு வாளெடுக்கும். வர்த்தமானிகள் மாறும். தமிழர் ஒரு இனமாக நிதானமாகச் சிந்திக்க வேண்டிய காலம். இடையிலே வெட்டி ஆடல்கள் தொடங்கிவிட்டது. சும் யேர்மனியில் நிற்பதாக ஒரு அரசியற் செயற்பாட்டாளர் கூறினார். எனவே தமிழினத்தினுள் உள்ள சிங்களத்தின் ஏவலாளர்களும் காவலர்களும் களத்தில் சத்தமின்றி இறக்கிவிடப்பட்டுள்ளனர். மக்கள் ஏமாறாமல் இருப்பதே முதலில் நன்மை பயக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

சும் யேர்மனியில் நிற்பதாக ஒரு அரசியற் செயற்பாட்டாளர் கூறினார்.

சாமியார், சிறியர் அறியவில்லையா? கொஞ்சம் கொடுத்து விடுகிறது..... நான் டொலரை சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

சாமியார், சிறியர் அறியவில்லையா? கொஞ்சம் கொடுத்து விடுகிறது..... நான் டொலரை சொன்னேன்.

ஓம்....ஆளை வீட்டை கூட்டிக்கொண்டு வந்து இருத்தி வைச்சு குடுப்பன்😁

17 minutes ago, nochchi said:

இடையிலே வெட்டி ஆடல்கள் தொடங்கிவிட்டது. சும் யேர்மனியில் நிற்பதாக ஒரு அரசியற் செயற்பாட்டாளர் கூறினார்.

ஆள் எங்கை நிக்கிறாராம்? dortmund  பக்கமாய்த்தானிருக்கும் 🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

சாமியார், சிறியர் அறியவில்லையா? கொஞ்சம் கொடுத்து விடுகிறது..... நான் டொலரை சொன்னேன்.

தெற்கு ஜேர்மனியில்… இல்லை. அப்படி… கூட்டம் வைத்தால், 
அவுஸ்திரேலியா, கனடாவில் கொடுத்த பூசை மாதிரி கொடுப்பார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

தெற்கு ஜேர்மனியில்… இல்லை. அப்படி… கூட்டம் வைத்தால், 
அவுஸ்திரேலியா, கனடாவில் கொடுத்த பூசை மாதிரி கொடுப்பார்கள்.

கூடுதலாய் ஜேர்மனியிலை பப்பிளிக்காய் திரிஞ்சார் எண்டால் தர்ம அடி நிச்சயம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கூடுதலாய் ஜேர்மனியிலை பப்பிளிக்காய் திரிஞ்சார் எண்டால் தர்ம அடி நிச்சயம். 

ஓம்… சுமந்திரன் அந்தளவுக்கு, ஊத்தை வேலை செய்து… எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   யாராவது இரகசியமாய் அழைத்து, பூட்டிய அறையில் வைத்து போஷிப்பினம் ..... சே.... பேசுவினம். அவர் பிரதம மந்திரி கனவோடு வேலை செய்யிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓம்....ஆளை வீட்டை கூட்டிக்கொண்டு வந்து இருத்தி வைச்சு குடுப்பன்😁

ஆள் எங்கை நிக்கிறாராம்? dortmund  பக்கமாய்த்தானிருக்கும் 🧐

ஆம், அப்படித்தான் தகவல். டோட்முன்ட் பகுதியில் உள்ள ஒரு தமிழ் யேர்மனிய அரசியல்வாதியின் அனுசரனையோடுதான் வந்துள்ளதாக அறிந்தேன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   ஐயையோ ....... எல்லாத்தையும் சொல்லிப்புட்டாங்களே, சுமந்திரன் தொலைஞ்சார்ரா.  அவரை தொட்டு உங்கட கையை அழுக்காக்காதீங்கோ! அங்கை வைக்கிற ஓலம் இலங்கையில வந்துதான் நிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தெற்கு ஜேர்மனியில்… இல்லை. அப்படி… கூட்டம் வைத்தால், 
அவுஸ்திரேலியா, கனடாவில் கொடுத்த பூசை மாதிரி கொடுப்பார்கள்.

பந்தயம் கட்டுறன்.

ஜேர்மன் தமிழ் ஆக்கள் சும்மா வாய் மட்டும்தான்🤣

2 hours ago, குமாரசாமி said:

கூடுதலாய் ஜேர்மனியிலை பப்பிளிக்காய் திரிஞ்சார் எண்டால் தர்ம அடி நிச்சயம். 

 

  • Haha 3
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.