Jump to content

ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சி

ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.

இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 30 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1294629

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

பாப்ஸ் கொடுத்தது பாப்கோணுக்கு.

8 hours ago, தமிழ் சிறி said:

ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

சேத விபரங்களுக்கு ஏற்றால் போல வழங்கியதாக நேற்றைய செய்தி சொன்னது/காட்டினார்கள்

1. உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள்

2. அங்கவீனராக்கப்பட்டவர்கள்

3. சிறிய காயங்களுக்குள்ளானவர்கள் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சேத விபரங்களுக்கு ஏற்றால் போல வழங்கியதாக நேற்றைய செய்தி சொன்னது/காட்டினார்கள்

1. உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள்

2. அங்கவீனராக்கப்பட்டவர்கள்

3. சிறிய காயங்களுக்குள்ளானவர்கள் 

தகவலுக்கு நன்றி தனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

நட்ட ஈடு கொடுக்கவேண்டிய கோத்தா நாட்டை விட்டு ஓடிவிட்டார். போப்பாண்டவர் தயவு பண்ணி கொடுத்துள்ளார். தானத்துக்கு  உழுத மாட்டின் பல்லை பிடிச்சு பாக்க கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2022 at 06:13, தமிழ் சிறி said:
இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 30 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

36 மில்லியன் நன்கொடை என்று ஆரம்பத்தில போட்டிட்டு.. 28 மில்லியனுக்கு தான் கணக்குக் காட்டி இருக்கு. மிச்சம் 8 மில்லியன்..??!

அதுசரி.. நவாலி தேவாலயம் உட்பட வடக்குக் கிழக்கில் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு.. பாப்பரசர் கருணை காட்டமாட்டாரோ..??! பாவம் ஜேசு நாதருக்கு விசயம் தெரியல்லப் போல. 

மதமும் வியாபாரமாகிவிட்டது. ஆனாலும் பக்கத்தில் இருக்கும் ஹிந்து நாடு.. ஈழத்தில் இந்துக்களை கொன்று குவித்ததை விட பாப்பரசரின் உலகம் பறவாயில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

போப்பாண்டவர் தயவு பண்ணி கொடுத்துள்ளார். தானத்துக்கு  உழுத மாட்டின் பல்லை பிடிச்சு பாக்க கூடாது!

அட சும்மா போங்க சாத்ஸ். 

நீங்க அந்தோணியாரை விட மோசமா இருக்கிறீங்க🤣.

நான் சும்மா தமாசுக்கு சொன்னேன். ஆனாலும் பாப்ஸ்சிடம் இருக்கும் சொத்துக்கு ஒரு ரவுண்ட் பிகரா ஒரு மில்லியன் ஈரோவாவது கொடுத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பிகரா ஒரு மில்லியன் ஈரோவாவது கொடுத்திருக்கலாம்

அடுத்தமுறை இன்னும் பல தேவாலயங்களில் அச்சமில்லாமல் குண்டு வெடிக்கும், பணம் வருமில்லே! அதே வியாபாரமாக்கிவிடுவார்கள், தமிழர் கொல்லப்பட சர்வதேசங்கள் அள்ளிக்கொடுத்தனவே! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவப்போய்,  போப்பாண்டவரே குண்டுத்தாக்குதலை  ஊக்குவித்ததா பிரச்சாரம் செய்யப்படும், முடிச்சுப்போடப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2022 at 21:23, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திக்கானிலும், உலகெங்கும் இருக்கும் கத்தோலிக்கத் திருச்சபைகளிலும் காலம் காலமாக நடைபெற்றுவரும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் பலாத்காரங்களை மூடி மறைக்கவும், நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவும், நீதிமன்ற வழக்காடும் செலவுகளுக்குச் செலுத்தவும் இவர்கள் கொடுக்கும் பணத்துடன் ஒப்பிடும்பொழுது இது ஒரு துளி கூட கிடையாது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பாப்ஸே தனது நெருங்கிய மத குரு ஒருவரின் பாலியல் கொடுமைகளை தனது அதிகாரத்தைப்பாவித்து மறைத்து வந்தார் என்பதுதான்.

கேவலமானவர்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உதவி செய்யாமலே இருந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2022 at 12:23, goshan_che said:

இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

👆👇

16 minutes ago, satan said:

அவர் உதவி செய்யாமலே இருந்திருக்கலாம்

100,000 ஈரோவில் 70,000 இறந்தவர்களுக்கு என வைப்போம்.

269 பேர் இறந்தனர் - 70,000/269 = இறந்த வரின் குடும்பத்துக்கு தலா 260 ஈரோ. அண்ணளவாக ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். எனது கணக்கின் படி இது 300 வெட்டுபாண்கள் வாங்கும் விலை. பாப்பரசர் கொடுத்த பணத்தை வைத்து ஒரு குடும்பம் ஒரு வருடத்துக்கு தனியே பாண் கூட வாங்க முடியாது.

மிகுதி 20,000 காயப்பட்டோர், 10,000 சிறு காயங்களுக்கு உள்ளானோருக்கு என்றாலும் அவர்களுக்கு கிடைப்பது இதை விட சிறிய தொகையே.

இங்கேதான் மேலே ரஞ்சித் சொன்ன பாதிரிமாரின் ஈன செயலுக்கு நட்ட ஈடு உட்பட வத்திகனின் ஏனைய செலவுகளுடன் ஒப்பிடும் தேவை ஏற்படுகிறது.

இங்கே பாப்ஸ் கொடுப்பது தானமும் அல்ல. கொல்லபட்டவர்கள் திருச்சபை உறுப்பினர்கள். இதுவே குண்டு வெடிப்பு ஒரு கோவிலில் நடந்து இருந்தால் இந்த பணமும் கிடைத்திராது. ஆகவே இது திருச்சபை தனது உறுப்பினர்கள் தனது வளாகத்தில் கொல்லபட்டதை முடிந்தளவு ஈடு செய்ய கொடுக்கப்படும் பணம். தானம் அல்ல.

பாப்ரசரின் வீட்டு காசல்ல இது. சபையின் காசு. சபை உறுப்பினர்க்கு போகிறது.

அதை கொஞ்சம் மரியாதையான தொகையாக கொடுத்திருக்கலாம்.

பிகு

மல்கம் இலங்கையில் எவரினதோ கைப்பாவையாக இயங்குகிறார் என்பதும், அதை ஒட்டியே அவரின் பாஸ் இந்த பணத்தை கொடுத்துள்ளார் என்ற அரசியலை நான் கதைக்கவில்லை. கொடுப்பனவின் அளவை பற்றியே எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காசு பல்லுக் குத்தவே காணாது. 

உண்மையில் இந்தக் குண்டுவெடிப்பை திட்டமிட்ட உந்தியாவும் மேற்குலக அரசுகளும்தான் நட்ட ஈட்யைக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களின் திட்டத்தை நடாத்தி முடித்த ஸஹறான் குடும்பங்களிற்கும் உதவி செய்ய வேண்டும்.

😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவும்,

இலங்கையில் வன்முறைகளை அழித்து விட்டோம்குண்டுகளை ஒழித்துவிட்டோம் என்று கூறியவர்களே, குண்டுகளை வைத்து மக்களை அழித்து லாபம் அடைந்தார்கள். நட்ட ஈடு கொடுத்தார்களா? ஏற்றுக்கொண்டார்களா? மன்னிப்பு கேட்டார்களா? தன் நாட்டில் நடந்த  வன்முறைகளுக்கு கர்தினால் ஆவது மன்னிப்பு கேட்டாரா? இளகின இரும்பை கண்டவர் பின்பக்கத்தை தூக்கி  தூக்கி அடித்தாராம்.

19 hours ago, ரஞ்சித் said:

இந்த பாப்ஸே தனது நெருங்கிய மத குரு ஒருவரின் பாலியல் கொடுமைகளை தனது அதிகாரத்தைப்பாவித்து மறைத்து வந்தார் என்பதுதான்

உங்களது பணத்தை, பதவியை பாவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்து விட்டு வந்து விமர்சியுங்கள் ஏற்றுக்கொள்ளலாம். வெறும் காழ்ப்புணர்ச்சி வேண்டாமே.. காய்த்த மரத்திற்குத்தான் கல்லெறி விழும். இதுவரை யாரும் அந்த மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை, யாரும் விமர்சிக்கவுமில்லை. ஒருவர் விருந்து  வைத்தாராம், அழைத்தவர்க்கெல்லாம் ஒரு தொகைப்பணத்தை அன்பளிப்பாக கொடுத்தாராம், பெற்றுக்கொண்ட ஒருவர் சொன்னாராம் "சும்மா இருந்த என்னை அழைத்து இவ்வளவு தொகையை தந்தார், அவருக்கு எவ்வளவு பெரிய மனது" என்றாராம். பெற்றுக்கொண்ட இன்னொருவர் சொன்னாராம் "அவருக்கு இருக்கிற பணத்தில் இது ஒரு துளியே, இன்னும் கொஞ்சம் அதிகமாக  தந்திருக்கலாம், இது தந்ததற்கு அவர் தாராமலே இருந்திருக்கலாம்" என்றாராம். பெறுபவரின் பண்பு, தேவையை பொறுத்தே பெறுமதி பார்க்கப்படுகிறது. உதவியை பெற்றவர், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கொடுக்கப்பட்ட தொகையை விமர்சித்ததாக தெரியவில்லை.

12 hours ago, goshan_che said:

சபையின் காசு.

அதற்குரிய தேவைகள், காரணங்கள், முடிவுகள் அந்தச் சபையாலேயே எடுக்கப்படுகின்றன. இது பாப்பரசரின் தனிப்பட்ட பணமல்ல, தனித்து முடிவெடுப்பதற்கு. ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

12 hours ago, goshan_che said:

பாப்ரசரின் வீட்டு காசல்ல இது

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

அதற்குரிய தேவைகள், காரணங்கள், முடிவுகள் அந்தச் சபையாலேயே எடுக்கப்படுகின்றன. இது பாப்பரசரின் தனிப்பட்ட பணமல்ல, தனித்து முடிவெடுப்பதற்கு. ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

நிச்சயமாக.

சரி பாப்பரசரை விட்டு விடுவோம். சபையாவது கொஞ்சம் அதிகம் கொடுத்திருக்கலாம்.

2022ம் ஆண்டில் ஒரு மரணத்துக்கு நஸ்ட ஈடாக 260 ஈரோவை வழங்கும் நிலையில்தான் சபையின் முடிவு எடுக்கும் மனநிலை இருக்கிறது என்றால் அதை விமர்சிப்பது தப்பில்லை என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூர இருந்து பாத்தால் எல்லாம் பச்சையாகவே தெரியும். சபைக்கு எங்கிருந்து பணம் வருகிறது? அங்கத்தவர்கள் தங்களை ஒறுத்து கொடுக்கும் பணத்தில் அவர்கள் ஏற்கெனவே ஒதுக்கி தமது திட்டமிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள். கைவிடப்பட்டவர்கள்,முதியோர், பாடசாலை, வைத்தியசாலை பராமரிப்புகள் அடங்கும். இப்போ உலக சூழ்நிலை கொள்ளைநோய், போர், வறுமை இதனால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சபையின் அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தேவைகளும் அதிகரித்திருக்கும், வரவும் குறைந்திருக்கும். அப்படியிருக்கும்போது அவர்கள் வரும் வருவாயில் திட்டமிட்ட செயற்பாடுகளை கொண்டுசெல்ல முடியாத நிலை தோன்றலாம். உதாரணத்திற்கு இலங்கையில் இருப்பவர்கள் நினைக்கலாம் வெளிநாட்டில் இருக்கும் உறவுகளிடம் நிறைய பணம் இருக்கிறது அவர்கள் கூடுதலாக உதவலாம் என. ஆனால் அங்கும் தொழில் இழப்பு, நோயின் தாக்கம், விலையுயர்வு, தேவை என அவர்களும் சந்திக்கிறார்கள். இருந்தாலும் உதவி பெறுபவரின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.   காரணம்கொடுப்பவரின்  தோற்றப்பாடு, வதிவிடம்,  அவர்கள் உதவி செய்ய முன்வந்தமை. இருப்பதனாலே கொடுக்கிறார் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருக்கலாம் என அங்கலாய்க்கும், அவர்கள் தங்கள் தேவையை, குறைவை மட்டும் சிந்திப்பதால். ஆனால் அவர்கள் எவ்வளவு பாடுபட்டு, தம்மை ஒறுத்து இந்தப்பணத்தை அனுப்பினார்கள் என்பது அனுப்புபவர்களுக்கு மட்டுமே தெரியும். சும்மா தோற்றப்பாட்டை வைத்து நாம் யாரையும் கணிப்பிட முடியாது. மக்களின் வரியை சுரண்டும் அரசாங்கங்களே திணறும் போது மக்களின் பெருந்தன்மையில், உதவியில் வாழும் இந்தச் சபை எங்கே போகும்?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.