Jump to content

ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சி

ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.

இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 30 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1294629

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

பாப்ஸ் கொடுத்தது பாப்கோணுக்கு.

8 hours ago, தமிழ் சிறி said:

ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

சேத விபரங்களுக்கு ஏற்றால் போல வழங்கியதாக நேற்றைய செய்தி சொன்னது/காட்டினார்கள்

1. உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள்

2. அங்கவீனராக்கப்பட்டவர்கள்

3. சிறிய காயங்களுக்குள்ளானவர்கள் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சேத விபரங்களுக்கு ஏற்றால் போல வழங்கியதாக நேற்றைய செய்தி சொன்னது/காட்டினார்கள்

1. உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள்

2. அங்கவீனராக்கப்பட்டவர்கள்

3. சிறிய காயங்களுக்குள்ளானவர்கள் 

தகவலுக்கு நன்றி தனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

நட்ட ஈடு கொடுக்கவேண்டிய கோத்தா நாட்டை விட்டு ஓடிவிட்டார். போப்பாண்டவர் தயவு பண்ணி கொடுத்துள்ளார். தானத்துக்கு  உழுத மாட்டின் பல்லை பிடிச்சு பாக்க கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2022 at 06:13, தமிழ் சிறி said:
இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 30 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

36 மில்லியன் நன்கொடை என்று ஆரம்பத்தில போட்டிட்டு.. 28 மில்லியனுக்கு தான் கணக்குக் காட்டி இருக்கு. மிச்சம் 8 மில்லியன்..??!

அதுசரி.. நவாலி தேவாலயம் உட்பட வடக்குக் கிழக்கில் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு.. பாப்பரசர் கருணை காட்டமாட்டாரோ..??! பாவம் ஜேசு நாதருக்கு விசயம் தெரியல்லப் போல. 

மதமும் வியாபாரமாகிவிட்டது. ஆனாலும் பக்கத்தில் இருக்கும் ஹிந்து நாடு.. ஈழத்தில் இந்துக்களை கொன்று குவித்ததை விட பாப்பரசரின் உலகம் பறவாயில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

போப்பாண்டவர் தயவு பண்ணி கொடுத்துள்ளார். தானத்துக்கு  உழுத மாட்டின் பல்லை பிடிச்சு பாக்க கூடாது!

அட சும்மா போங்க சாத்ஸ். 

நீங்க அந்தோணியாரை விட மோசமா இருக்கிறீங்க🤣.

நான் சும்மா தமாசுக்கு சொன்னேன். ஆனாலும் பாப்ஸ்சிடம் இருக்கும் சொத்துக்கு ஒரு ரவுண்ட் பிகரா ஒரு மில்லியன் ஈரோவாவது கொடுத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பிகரா ஒரு மில்லியன் ஈரோவாவது கொடுத்திருக்கலாம்

அடுத்தமுறை இன்னும் பல தேவாலயங்களில் அச்சமில்லாமல் குண்டு வெடிக்கும், பணம் வருமில்லே! அதே வியாபாரமாக்கிவிடுவார்கள், தமிழர் கொல்லப்பட சர்வதேசங்கள் அள்ளிக்கொடுத்தனவே! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவப்போய்,  போப்பாண்டவரே குண்டுத்தாக்குதலை  ஊக்குவித்ததா பிரச்சாரம் செய்யப்படும், முடிச்சுப்போடப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2022 at 21:23, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திக்கானிலும், உலகெங்கும் இருக்கும் கத்தோலிக்கத் திருச்சபைகளிலும் காலம் காலமாக நடைபெற்றுவரும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் பலாத்காரங்களை மூடி மறைக்கவும், நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவும், நீதிமன்ற வழக்காடும் செலவுகளுக்குச் செலுத்தவும் இவர்கள் கொடுக்கும் பணத்துடன் ஒப்பிடும்பொழுது இது ஒரு துளி கூட கிடையாது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பாப்ஸே தனது நெருங்கிய மத குரு ஒருவரின் பாலியல் கொடுமைகளை தனது அதிகாரத்தைப்பாவித்து மறைத்து வந்தார் என்பதுதான்.

கேவலமானவர்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உதவி செய்யாமலே இருந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2022 at 12:23, goshan_che said:

இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

👆👇

16 minutes ago, satan said:

அவர் உதவி செய்யாமலே இருந்திருக்கலாம்

100,000 ஈரோவில் 70,000 இறந்தவர்களுக்கு என வைப்போம்.

269 பேர் இறந்தனர் - 70,000/269 = இறந்த வரின் குடும்பத்துக்கு தலா 260 ஈரோ. அண்ணளவாக ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். எனது கணக்கின் படி இது 300 வெட்டுபாண்கள் வாங்கும் விலை. பாப்பரசர் கொடுத்த பணத்தை வைத்து ஒரு குடும்பம் ஒரு வருடத்துக்கு தனியே பாண் கூட வாங்க முடியாது.

மிகுதி 20,000 காயப்பட்டோர், 10,000 சிறு காயங்களுக்கு உள்ளானோருக்கு என்றாலும் அவர்களுக்கு கிடைப்பது இதை விட சிறிய தொகையே.

இங்கேதான் மேலே ரஞ்சித் சொன்ன பாதிரிமாரின் ஈன செயலுக்கு நட்ட ஈடு உட்பட வத்திகனின் ஏனைய செலவுகளுடன் ஒப்பிடும் தேவை ஏற்படுகிறது.

இங்கே பாப்ஸ் கொடுப்பது தானமும் அல்ல. கொல்லபட்டவர்கள் திருச்சபை உறுப்பினர்கள். இதுவே குண்டு வெடிப்பு ஒரு கோவிலில் நடந்து இருந்தால் இந்த பணமும் கிடைத்திராது. ஆகவே இது திருச்சபை தனது உறுப்பினர்கள் தனது வளாகத்தில் கொல்லபட்டதை முடிந்தளவு ஈடு செய்ய கொடுக்கப்படும் பணம். தானம் அல்ல.

பாப்ரசரின் வீட்டு காசல்ல இது. சபையின் காசு. சபை உறுப்பினர்க்கு போகிறது.

அதை கொஞ்சம் மரியாதையான தொகையாக கொடுத்திருக்கலாம்.

பிகு

மல்கம் இலங்கையில் எவரினதோ கைப்பாவையாக இயங்குகிறார் என்பதும், அதை ஒட்டியே அவரின் பாஸ் இந்த பணத்தை கொடுத்துள்ளார் என்ற அரசியலை நான் கதைக்கவில்லை. கொடுப்பனவின் அளவை பற்றியே எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காசு பல்லுக் குத்தவே காணாது. 

உண்மையில் இந்தக் குண்டுவெடிப்பை திட்டமிட்ட உந்தியாவும் மேற்குலக அரசுகளும்தான் நட்ட ஈட்யைக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களின் திட்டத்தை நடாத்தி முடித்த ஸஹறான் குடும்பங்களிற்கும் உதவி செய்ய வேண்டும்.

😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவும்,

இலங்கையில் வன்முறைகளை அழித்து விட்டோம்குண்டுகளை ஒழித்துவிட்டோம் என்று கூறியவர்களே, குண்டுகளை வைத்து மக்களை அழித்து லாபம் அடைந்தார்கள். நட்ட ஈடு கொடுத்தார்களா? ஏற்றுக்கொண்டார்களா? மன்னிப்பு கேட்டார்களா? தன் நாட்டில் நடந்த  வன்முறைகளுக்கு கர்தினால் ஆவது மன்னிப்பு கேட்டாரா? இளகின இரும்பை கண்டவர் பின்பக்கத்தை தூக்கி  தூக்கி அடித்தாராம்.

19 hours ago, ரஞ்சித் said:

இந்த பாப்ஸே தனது நெருங்கிய மத குரு ஒருவரின் பாலியல் கொடுமைகளை தனது அதிகாரத்தைப்பாவித்து மறைத்து வந்தார் என்பதுதான்

உங்களது பணத்தை, பதவியை பாவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்து விட்டு வந்து விமர்சியுங்கள் ஏற்றுக்கொள்ளலாம். வெறும் காழ்ப்புணர்ச்சி வேண்டாமே.. காய்த்த மரத்திற்குத்தான் கல்லெறி விழும். இதுவரை யாரும் அந்த மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை, யாரும் விமர்சிக்கவுமில்லை. ஒருவர் விருந்து  வைத்தாராம், அழைத்தவர்க்கெல்லாம் ஒரு தொகைப்பணத்தை அன்பளிப்பாக கொடுத்தாராம், பெற்றுக்கொண்ட ஒருவர் சொன்னாராம் "சும்மா இருந்த என்னை அழைத்து இவ்வளவு தொகையை தந்தார், அவருக்கு எவ்வளவு பெரிய மனது" என்றாராம். பெற்றுக்கொண்ட இன்னொருவர் சொன்னாராம் "அவருக்கு இருக்கிற பணத்தில் இது ஒரு துளியே, இன்னும் கொஞ்சம் அதிகமாக  தந்திருக்கலாம், இது தந்ததற்கு அவர் தாராமலே இருந்திருக்கலாம்" என்றாராம். பெறுபவரின் பண்பு, தேவையை பொறுத்தே பெறுமதி பார்க்கப்படுகிறது. உதவியை பெற்றவர், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கொடுக்கப்பட்ட தொகையை விமர்சித்ததாக தெரியவில்லை.

12 hours ago, goshan_che said:

சபையின் காசு.

அதற்குரிய தேவைகள், காரணங்கள், முடிவுகள் அந்தச் சபையாலேயே எடுக்கப்படுகின்றன. இது பாப்பரசரின் தனிப்பட்ட பணமல்ல, தனித்து முடிவெடுப்பதற்கு. ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

12 hours ago, goshan_che said:

பாப்ரசரின் வீட்டு காசல்ல இது

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

அதற்குரிய தேவைகள், காரணங்கள், முடிவுகள் அந்தச் சபையாலேயே எடுக்கப்படுகின்றன. இது பாப்பரசரின் தனிப்பட்ட பணமல்ல, தனித்து முடிவெடுப்பதற்கு. ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

நிச்சயமாக.

சரி பாப்பரசரை விட்டு விடுவோம். சபையாவது கொஞ்சம் அதிகம் கொடுத்திருக்கலாம்.

2022ம் ஆண்டில் ஒரு மரணத்துக்கு நஸ்ட ஈடாக 260 ஈரோவை வழங்கும் நிலையில்தான் சபையின் முடிவு எடுக்கும் மனநிலை இருக்கிறது என்றால் அதை விமர்சிப்பது தப்பில்லை என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூர இருந்து பாத்தால் எல்லாம் பச்சையாகவே தெரியும். சபைக்கு எங்கிருந்து பணம் வருகிறது? அங்கத்தவர்கள் தங்களை ஒறுத்து கொடுக்கும் பணத்தில் அவர்கள் ஏற்கெனவே ஒதுக்கி தமது திட்டமிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள். கைவிடப்பட்டவர்கள்,முதியோர், பாடசாலை, வைத்தியசாலை பராமரிப்புகள் அடங்கும். இப்போ உலக சூழ்நிலை கொள்ளைநோய், போர், வறுமை இதனால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சபையின் அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தேவைகளும் அதிகரித்திருக்கும், வரவும் குறைந்திருக்கும். அப்படியிருக்கும்போது அவர்கள் வரும் வருவாயில் திட்டமிட்ட செயற்பாடுகளை கொண்டுசெல்ல முடியாத நிலை தோன்றலாம். உதாரணத்திற்கு இலங்கையில் இருப்பவர்கள் நினைக்கலாம் வெளிநாட்டில் இருக்கும் உறவுகளிடம் நிறைய பணம் இருக்கிறது அவர்கள் கூடுதலாக உதவலாம் என. ஆனால் அங்கும் தொழில் இழப்பு, நோயின் தாக்கம், விலையுயர்வு, தேவை என அவர்களும் சந்திக்கிறார்கள். இருந்தாலும் உதவி பெறுபவரின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.   காரணம்கொடுப்பவரின்  தோற்றப்பாடு, வதிவிடம்,  அவர்கள் உதவி செய்ய முன்வந்தமை. இருப்பதனாலே கொடுக்கிறார் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருக்கலாம் என அங்கலாய்க்கும், அவர்கள் தங்கள் தேவையை, குறைவை மட்டும் சிந்திப்பதால். ஆனால் அவர்கள் எவ்வளவு பாடுபட்டு, தம்மை ஒறுத்து இந்தப்பணத்தை அனுப்பினார்கள் என்பது அனுப்புபவர்களுக்கு மட்டுமே தெரியும். சும்மா தோற்றப்பாட்டை வைத்து நாம் யாரையும் கணிப்பிட முடியாது. மக்களின் வரியை சுரண்டும் அரசாங்கங்களே திணறும் போது மக்களின் பெருந்தன்மையில், உதவியில் வாழும் இந்தச் சபை எங்கே போகும்?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.