Jump to content

இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிப்பு- சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்கிய நிலையில்.. அதனை தற்போதைய அமைச்சர் அலி சப்ரி ரத்து செய்வது, இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் என குறிப்பிட்டார்.

கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்தார். (நன்றி கேசரி)

இதேவேளை யுவான் வோங் கப்பல் விவகாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அழுத்தம் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகின்றதோடு இந்தியா மற்றும் அமெரிக்காவின் யுத்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் போது... சீனா, ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்

https://athavannews.com/2022/1294654

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர
  • கருத்துக்கள உறவுகள்

Bild

 

Bild

இலங்கைக்கு... நேர்ந்த நிலைமையை... 
அழகாக கருத்து ஓவியம் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
பார்க்க சிரிப்பு வந்தாலும், உண்மை அதுதான்.  😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர

உங்களுக்கு என்ன கொள்கை இருக்குது எண்டு சொன்னியளெண்டால் போற வழிக்கு புண்ணியமாய் போகும் 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாறிப்போன இறையாண்மை என்பான்,  எங்கை இருக்குதெண்டு கேக்காதையுங்கோ.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் ஆனா கடன் மட்டும் கெளரவமாக வேண்டுவாங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

         நாட்டை காட்டி ஒவ்வொரு நாட்டிடமும் கையேந்துவது, பிறகு கடனில் இருக்கும் நாட்டிற்கு இறையாண்மை தேடுவது,   இதைத்தான் வரட்டுக்கவுரவம்  என்பது. கடன் குடுக்க வழியில்லை என்று தெரிந்தும் தொடர்ந்து கடன் கேட்டுக்கொண்டே இருப்பது இவர்களின் கொள்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

         நாட்டை காட்டி ஒவ்வொரு நாட்டிடமும் கையேந்துவது, பிறகு கடனில் இருக்கும் நாட்டிற்கு இறையாண்மை தேடுவது,   இதைத்தான் வரட்டுக்கவுரவம்  என்பது. கடன் குடுக்க வழியில்லை என்று தெரிந்தும் தொடர்ந்து கடன் கேட்டுக்கொண்டே இருப்பது இவர்களின் கொள்கை.

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழரை அழிக்க… அயல் நாடுகளின் உதவியை பெறுவதற்காக… 
அவன் ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து… இலங்கையை தனது அடிமையாகி விட்டான்.
தமிழருடன்… ஒற்றுமையாக போயிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காதே.
ஆனால்… அதனை ஒப்புக் கொள்ள சிங்கள இனவாதம் இடம் கொடுக்க வில்லை.
இப்ப.. வந்தவனை எப்படி கையாளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
இப்ப… எல்லோரும், உரிமை கோரும்… விபச்சார நிலையில் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  வெட்கங்கெட்டு பகிரங்கமாக சொல்கிறார்கள், நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்பதற்காக புலம்பெயர்ந்த தமிழரின் உதவி வேண்டுமாம், அவர்களுக்கு தடை விதித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து உதவி பெறமுடியாதாகையால் தடையை நீக்குகிறார்களாம். ஆக தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மட்டும் தமிழர் தேவை. தேவை முடிந்தவுடன் புலம் பெயர் புலிகள் நாட்டை துண்டாட முயற்சிக்கிறார்கள் என்று மாத்திபோடுவான். இதே தமிழர் போரால் சிதைந்த தம் இனத்தை தூக்கி நிறுத்த முன்வந்ததாலேயே அதை முடக்கும் வகையில் அவர்களுக்கு தடை விதித்தது. இப்போ அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு வேண்டும், அங்கேயும் தமிழருக்கு எதுவும் செல்லாமல், தன்னிறைவு அடையாமல் பாத்துக்கொள்வார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழரை அழிக்க… அயல் நாடுகளின் உதவியை பெறுவதற்காக… 
அவன் ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து… இலங்கையை தனது அடிமையாகி விட்டான்.
தமிழருடன்… ஒற்றுமையாக போயிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காதே.
ஆனால்… அதனை ஒப்புக் கொள்ள சிங்கள இனவாதம் இடம் கொடுக்க வில்லை.
இப்ப.. வந்தவனை எப்படி கையாளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
இப்ப… எல்லோரும், உரிமை கோரும்… விபச்சார நிலையில் உள்ளார்கள்.

எப்ப சிங்களவன் தமிழரிலை கை வைக்க தொடங்கினானோ அப்ப அழிய வெளிக்கிட்ட நாடுதான் சிறிலங்கா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எப்ப சிங்களவன் தமிழரிலை கை வைக்க தொடங்கினானோ அப்ப அழிய வெளிக்கிட்ட நாடுதான் சிறிலங்கா....

 இப்ப தமிழன்தான் கைகொடுத்து கட்டியெழுப்ப வேண்டுமாம், ஏனென்றால் எங்களாலதான் கடன் வேண்டினவையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. தமிழர்களை அழிக்க அமெரிக்கா.. ஹிந்தியா.. எல்லாம் கூட்டா நின்று செய்த உதவிக்கு கிடைக்கப் பெற்ற நன்றிக்கடனாக இந்த சிங்களத்தின் உண்மை முகம் அமைவது.. சிறப்பு.

தொடர்ந்து இப்படியே பேசிக்கிட்டிருங்க. அப்ப தான்.. புலிகளை அழிச்சம் என்ற இறுமாப்பில் சிங்களவனோடு சேர்ந்து நின்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டோரின் கொட்டம் அடங்கும். 

அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் மிக மோசமான இராஜதந்திரத் தோல்வியை சந்தித்திருக்குது. இது புலி அழிப்பின் விளைவு என்பதை அவர்கள் விளங்கிக் கொண்டாலும்.. வெளியில் காட்டிக்க முடியாத நிலை. ஹிந்தியாவுக்கும் அதே. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

விளையாட்டு இன்னும் முடியவில்லை நெடுக்ஸ். இப்பொழுது தான் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழருக்கு எதுவும் கிடைக்காது என்பது தான் இப்போதைய நிலை.அப்படியான வித்துவான்களை தமிழர்கள் தெரிந்து விட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

உங்கடையை பார்க்க போறான் என்றால் மூடி வையுங்களேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.