Jump to content

இலங்கையும் வல்லரசுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் வல்லரசுகளும்

By DIGITAL DESK 5

13 AUG, 2022 | 12:13 PM
image

லோகன் பரமசாமி

தமிழ்தேச  மக்கள் மத்தியில் இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற  அரசியல் பொருளாதார நெருக்கடி மாற்றங்களை சிங்கள தேசத்தோடு இணைந்து கூட்டாக ஒரு குடையின் கீழ் அணிவகுத்து நின்று பார்ப்பது பொருத்தமற்றது என்ற நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.  

தமிழ் மக்கள் தம்மை இறைமையுள்ள ஒருதேச மக்களாக  நிலைநிறுத்தி வைத்துக்கொள்ளவே அதிகளவில் பிரயத்தனம் செய்கின்றனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாக பரிணமித்துள்ளது. ஆட்சித்தலைவர்களை மக்கள் நாட்டை விட்டு தப்பியோடும் அளவிற்கு வேட்கை கொண்டதாக உள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள ஆட்சியாளரையும் பதவி விலகுமாறு கோரும் வலியுறுத்தல்களும் தீவிரமடைந்து வருகின்றன. 

எனினும், பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டின் பணவீக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் பொருட்களின் விலைவாசி அதிகரித்துச் செல்கின்றது. அத்துடன், அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லாத நிலைமையில் தீவு தேசம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. 

இந்த நிலையிலும், உலக வல்வரசுகள் இலங்கை ஆட்சி நிர்வாகத்தில்  தமது செல்வாக்கை வலுப்படுத்தி கொள்வதில் இருந்து  சற்றும் விலகவில்லை என்பது முக்கியமான விடயமாகும். இது தீவு தேசத்தில் மேலும் பதற்றமான நிலைமையை அதிகரிப்பிற்கான காரணியாகவே அமையும் என்பது பலரதும் கரிசனையாகவுள்ளது. 

இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு முதல் இருந்தே இந்தியா அரச நிர்வாகக் கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் கடன் உதவிகளை வழங்கியிருந்தது.  ஏறத்தாழ 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை இது வரையில் புதுடில்லி தனது உதவித்தொகையாக வழங்கியுள்ளது. இந்த உதவிக்தொகை உணவு, எரிபொருள், மருந்துவகைகள், மற்றும் பயிர்செய்கைக்கான உர வகைகளை இறுக்கமதி செய்யும் நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது. 

இதற்கும் மேலாக இந்தியா, கடன் அடிப்படையிலும் நாணய பரிமாற்று அடிப்படையிலும் 3.8பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிதொகையைக் காட்டியிருக்கிறது. இதன்மூலம் கொழும்பு நிர்வாகத்துக்கு எப்பொழுதும் எத்தகைய நிலையிலும் புதுடில்லி தனது முதன்மை நிலையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.  

புதுடில்லியின் இந்தச் செயற்பாடுகளுக்கு ஈடுசெய்யும் வகையில பீஜிங் தனது உதவித்தொகையாக சுமார் 500மில்லியன் யுவான்களை (75மில்லியன் டொலர்கள்) வழங்கியுள்ளது. பீஜிங், உதவியாக கொடுத்துள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கு கடன் பெற்று தரும் விவகாரத்தில் ஆக்கபூர்வமான வகையில் நடந்து கொள்வதாக உறுதிமொழி அளித்துள்ளது . 

ஆக, இந்தியாவும் சீனாவும் இலங்கையில் உள்ள ஆட்சி நிர்வாகத்துடன்- அது எந்த ஆட்சியாளராக இருந்தாலும் தமது செல்வாக்கை வலுப்படுத்தி கொள்வதில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. 

ஆனால், இலங்கையில் சீனாவின் அதிகரித்த முதலீடுகளும் தனது சொந்த வியாபார வசதிக்கேற்ப பாரிய உட்கட்டமைப்புகள் மீதான அதிகரித்த ஈடுபாடும் இலங்கையை சீனாவின் கைகளில் இருந்து நழுவமுடியாத நிலைக்கு தற்போதுதள்ளிவிட்டுள்ளது.  

உதாரணமாக சீன உதவியுடன் கட்டப்பட்ட வீதி கட்டமைப்புக்களும் துறைமுகக் கட்டமைப்புக்களும், விமான நிலையங்களும்  மின்நிலைய கட்டமைப்புக்களும் சீன ஆதிக்கத்தை இலங்கைத்தீவில் உறுதி செய்துள்ளது. 

இந்த நிலையிலேயே அரசியல், நிர்வாக சமநிலை, பொருளாதார காரணங்களால் தளம்பலைக் கண்டுள்ளது. சீனாவின் செல்வாக்கு நிலையை குலைப்பது மட்டுமல்லாது. இலங்கைத் தீவிலிருந்து சீனாவை வெளியேற்றித் தனது நிலையை தக்க வைத்து கொள்வதற்கு சீன போட்டியாளர்களான அமெரிக்க இந்திய யப்பானிய பெருவல்லரசுகள்  நகர்வுகளில் ஈடுபடும் நிலைக்கு வந்துள்ளன.

சீனா தனது பார்வையில் ‘கடன் பொறி இராஜதந்திரம்’ என்ற சொல்லை மேலை நாடுகள் பயன்படுத்தி தனது வியாபார அபிவிருத்தி திட்டங்களை தீய நோக்கம் கொண்டவையாக சித்தரிக்க முனைகிண்றன என்று கூறி வருகிறது. 

அதேவேளை இலங்கையில் போராட்டங்களில் ஈடுபடும் போராட்டகாரர்களை கைது செய்வது ஜனநாயக விரோதச்செயலாகும் என்று அமெரிக்க தூதரகம் நேரடியாகவே அழுத்தம் பிரையோகித்துள்ளது. சர்வதேசங்களில் மனித உரிமை ஜனநாயகம், சர்வதேச நிறுவனங்கள் ஊடான கடன் உதவித்திட்டம், ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்தும் வகையில் அமெரிக்கா செயற்படுவது வழக்கம். தனக்கு சாதகமான அரசியல் நிலையை உருவாக்கும் வரை மேலைதேய உதவிகள் போராட்டக்காரர்களுக்கு இருக்கும். தேவை முடிந்ததும் பலரும் அரச இயந்திரத்திடம் பலிக்கடாக்களாக ஆக்கப்படுவர் 

இந்தியா உள்ளகப் பொறிமுறைகளை உபயோகப்படுத்தும் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் நிதி உதவிகளும் உறுதி மொழிகளும் உற்சாக வார்த்தைகளும் வழங்கப்பட்டு வருவதை பல்வேறு அரசியல் தலைவர்களின் பேச்சுகளும் உறுதி செய்கின்றன.

ஆக வல்லரசுகள் தமது இலக்கை அடைவதற்கு ஏற்ற வகையில் தமது செல்வாக்கின் அடிப்படையில் உள்@ர் கூறுகளை நகர்த்துவதில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை உள்@ரில் உள்ள கூறுகளும் தமது இருப்பையும் நலன்களையும் உறுதி செய்வதில் கவனம் கொண்டுள்ளன.

முதலில் அரசாங்கம் தனது இருப்பை உறுதி செய்யும் வகையில் போராட்டகாரர்களை கட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்தில் பாதுகாப்புப்படைகளை உபயோகிப்பதில் மும்முரமாக செய்பட்டு வருகிறது.  

அடுத்ததாக புதிதாக பதவியில் அமர்ந்துள்ள ஆட்சியாளர்களை ஆசீர்வதிக்கும், ஆலோசனை வழங்கும் பௌத்த பீடங்கள் போராட்டக்காரர்கள் மத்தியிலும் தமது பிரசன்னத்தைக்காட்ட தயங்கவில்லை.  ஒருவேளை போராட்டம் காரணமாக ஏதாவது மாற்றம் ஏற்பட்டு விட்டாலும் அங்கே தாமும் நின்றோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. 

ஆக, எந்த பகுதியிலும் பேரினவாதத்தின் செல்வாக்கை வைத்திருக்க வேண்டும் என்பதில்  பௌத்த பீடங்கள் கவனமாக செயற்பட்டு வருகிறன. மேலும் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் மேலத்தேய முத்திரை குத்தப்பட்ட சர்வதேச அமைப்புகளினால் இனங்காணப்பட்டு உள்ளனர். இவர்கள் இன்னமும் ஜனநாயகத்தின் போர்வையில் போராடி வருகின்றனர். 

போராட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி வன்முறையை தூண்டும் பணிகளில் ஈடுபடக் கூடியவர்கள் பலர் தலைமறைவாக சென்ற விட்டனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இலங்கை அரச பாதுகாப்பு படைகள் இது வரைகாலமும்  பொறுப்புக்கூறலில் இருந்த பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த யுத்த காலத்தில் உதிரிகளை இல்லாது அழிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றனர் என்பதை மறந்து விடலாகாது. 

இலங்கை அரசியல் தலைவர்கள் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதில் தயக்கம் காட்டி வருவதையும் கூட காணகூடியதாக உள்ளது. வங்குரோத்து நிலையில் அரசியல் செய்வது என்பது இலாபமற்ற பொதுச்சேவை அரசியலே செய்ய வேண்டிய கட்டத்தில் பல சிங்கள அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த வகையில் பொறுப்புகள் அதிகமாகும் நிலை காணப்படுவதால் பலரும் தயக்கம் காட்டும் தன்மை உள்ளது.

இவை அனைத்துக்கும் மத்தியில் எரியும் வீட்டில் பிடிங்கினால் அமைச்சர் பதவி, எட்டாப்பழம் புளிக்கும் என்ற நிலையில் பதவி  கிடைக்காவிட்டால் தமிழ் தேசியவாதி என்ற வகையில் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும் நடமாடி வருகின்றனர். 

ஆனால் இங்கே பொருளாதார முடக்கத்தால் அடிபட்டு போயிருப்பது அன்றாடம் உழைத்து வாழும் அப்பாவி சிங்கள மக்களே ஆகும்.  இருந்த பொழுதிலும் தமிழினத்தை இன அழிப்பிற்குள் உள்ளாக்கியது தொடர்பான பொறுப்பு ஒட்டுமொத்த சிங்கள தேசத்திற்கும் ஒருசமுதாய பொறுப்பாக உள்ளது என்பதை மறந்து விடலாகாது. 

இலங்கையும் வல்லரசுகளும் | Virakesari.lk

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.