Jump to content

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

14 August 2022, 9:58 am

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் திரு. எஸ்.செல்வேந்திரா அவர்களுடன் நான் அவரைச் சந்தித்தேன். அந்த தருணத்தில் கௌரவ பிரதமரும் உடனிருந்தார்.

மாகாண ஆளுநர்களுக்கு அதிக பொறுப்பதிகாரத்தை வழங்கும் பாராளுமன்ற ஆளுகைக் குழுவை உள்ளடக்கிய தனது ஆட்சித் திட்டத்தை ஜனாதிபதி எமக்கு விரிவாக விளக்கினார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அந்தந்த மாகாண ஆளுநர்களின் தலைமையில் பணி செய்ய வேண்டும் என்பது அவரது யோசனை. மேற்படி திட்ட யோசனைக்கு ஆஸ்திரியா நாட்டை உதாரணமாகக் குறிப்பிட்டார். (இந்த இடத்தில் அவரது உதாரணம் பொருத்தமற்றது. ஏனெனில் ஆஸ்திரியா ஒரு கூட்டாட்சி நாடு).

மேலும், மத்திய அரசாங்க அமைச்சுக்களால் மாகாணங்களில் காணிகளை அபகரிப்பது தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி, அமைச்சுக்களால் அபகரிக்கப்பட்ட வன நிலங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு மாகாண அமைச்சுக்களும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார். தேவைப்பட்டால் அதிகபட்சம் 2 ஏக்கர் நிலத்தை மாத்திரம் அரசு கையகப்படுத்தலாம் என்றும் கூறினார்.

அதற்கு நான், “அந்தந்த மாகாண அரசாங்கத்தின் சம்மதத்தினையும், அனுமதியினையும் பெறாமல் , மாகாணங்களில் மத்திய அரசாங்கத்தால் எந்தவொரு காணியும் சுவீகரிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்” என்றேன். இதற்கு ஜனாதிபதி அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தேசியப் பாடசாலைகள் குறித்து அவர் கூறுகையில், நாட்டிற்கு 1,000 தேசியப் பாடசாலைகள் தேவையில்லை, 50 தேசியப் பாடசாலைகள் போதும். எனக்கூறினார். இதன் போது நான், “எந்தவொரு மாகாண பாடசாலைகளையும் மத்திய அரசால் கையகப்படுத்த முடியாது எனவும், இது தொடர்பில் எமது கூட்டணி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதையும்” சுட்டிக் காட்டினேன்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்காக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்களை தனது அரசின் வலைக்குள் விழ வைத்து அதனை ஜெனிவாவிற்கு காட்டி தப்பித்துக் கொள்வதற்கான நாடகம் போன்றே எமக்கு தோன்றினாலும் நான் அதனை விமர்சிக்கவில்லை. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் 46/1 என்ற கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் ஜெனிவாவின் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அரசு ஏற்கனவே நிராகரித்திருந்தமையினால் ஆகும். 

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் மூலம் எவ்வாறு நாட்டிற்கு நிதி உதவி செய்ய முடியும் என்பது குறித்த ஆவணத்தை குறிப்புக்களுடன் முன்வைக்குமாறு என்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து முழு நாட்டினதும் மத்திய நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்துவதே அவரது மறைமுக நோக்கம் என்பதை அவருடன் கலந்துரையாடிய போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

“தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவராலும் முன்வைக்கப்படும்  கோரிக்கைகளும், இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை. இனை செயற்படுத்தஅரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகார செயற்பாடுகளை உடன் நிறுத்துவதுடன், இராணுவத்தின் உதவியுடன் தமிழர் தாயக நிலங்களில் பௌத்த விகாரைகளை கட்ட முயலும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இவையே தற்போது எமக்கு தேவையானவை என்பதை நான் மிகவும் வலியுறுத்திக் கூறினேன்.

தமிழர்கள் தமது மாகாணங்களில் அரசியல் தலைமைத்துவத்தையும், ஆட்சியையும் பெற்றுக் கொள்வதற்கு திருப்திகரமான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எமது தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் பகிர்வு ஏற்படுத்தப்படும் வரை மேற்கொள்ளப்படும்  13வது திருத்த அமுலாக்க செயற்பாடுகளில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் என கௌரவ ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இது நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்ற பொருள் அல்ல.

எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததுடன், எம்மை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே அவருக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம்.

இறுதியாக ஜனாதிபதிஎம்மிடம் கேட்டிருந்த முன்மொழிவு ஆவணத்தை கையளிப்பதாக உறுதியளித்து எம்மை அழைத்தற்கு நன்றி தெரிவித்து விட பெற்றோம்.- என்றுள்ளது.

https://samugammedia.com/the-geneva-meeting-is-more-important-to-the-president-than-solving-the-problems-of-tamils-wigneswaran-pointed-out/#

 

டிஸ்கி

3 minutes ago, goshan_che said:

மாகாண ஆளுநர்களுக்கு அதிக பொறுப்பதிகாரத்தை வழங்கும் பாராளுமன்ற ஆளுகைக் குழுவை உள்ளடக்கிய தனது ஆட்சித் திட்டத்தை ஜனாதிபதி எமக்கு விரிவாக விளக்கினார்.

தேர்தல் மூலம் தெரிவாகும் மாகாண அரசை ஒதுக்கி, மத்திய அரசின் நியமன ஆளுனர் தலைமையில் ஒரு கண்துடைப்பு அதிகார பகிர்வை சிவி யிடம் விற்க நரி முயன்றுள்ளது.

 

5 minutes ago, goshan_che said:

அதற்கு நான், “அந்தந்த மாகாண அரசாங்கத்தின் சம்மதத்தினையும், அனுமதியினையும் பெறாமல் , மாகாணங்களில் மத்திய அரசாங்கத்தால் எந்தவொரு காணியும் சுவீகரிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்” என்றேன். இதற்கு ஜனாதிபதி அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

நரி பதில் எப்படி சொல்லும். பிறகு அடாத்தாக குடியேற்றம் செய்வது தடைப்படுமா இல்லையா?

Edited by goshan_che
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் மூலம் எவ்வாறு நாட்டிற்கு நிதி உதவி செய்ய முடியும் என்பது குறித்த ஆவணத்தை குறிப்புக்களுடன் முன்வைக்குமாறு என்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து முழு நாட்டினதும் மத்திய நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்துவதே அவரது மறைமுக நோக்கம் என்பதை அவருடன் கலந்துரையாடிய போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

அதாவது காசு மட்டும்தாங்கோ அதிகாரம் எல்லாம் கேட்காதேங்கோ.

இந்தியாவிடம் பெற்றோலை யாசகம் பெற்று விட்டு, சீன கப்பலை வர விடும் அதே அணுகுமுறை. 

8 minutes ago, goshan_che said:

இறுதியாக ஜனாதிபதிஎம்மிடம் கேட்டிருந்த முன்மொழிவு ஆவணத்தை கையளிப்பதாக உறுதியளித்து எம்மை அழைத்தற்கு நன்றி தெரிவித்து விட பெற்றோம்.- என்றுள்ளது.

ஒரு சந்திப்பின் பின் இப்படியான வெளிப்படை அறிக்கை விடுவது வரவேற்க வேண்டியது.

சும், சாணக்கியன் போல் படத்தை மட்டும் போட்டு, என்னை மதுரையில கேட்டாக, மாயவரத்தில கேட்டாக என சீன் காட்டாமல்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ரனிலுக்கு இவர் வாக்களித்து பெற்றுக்கொண்டது.

1. இந்த சந்திப்பை வாக்களிக்க முன் செய்து. பின்னர் இதை காரணம் காட்டி வாக்களிக்காமல் விட்டு இருக்கலாம்.

2. வாக்களித்த பின். இப்போ செய்வது போல, தொடர்ந்தும் வெளியில் இருந்து ஆதரவு. முன் மொழிவுகளை கையளிப்பு. ஆனால் சமரசமில்லாமல் அதிகார பகிர்வு, ஜெனிவா விடயத்தை கையாளலாம்.

இதில் 1ம் தெரிவை விட சில சமயம் 2ம் தெரிவு பலனளிக்குமோ?

Link to comment
Share on other sites

12 minutes ago, goshan_che said:

1. இந்த சந்திப்பை வாக்களிக்க முன் செய்து. பின்னர் இதை காரணம் காட்டி வாக்களிக்காமல் விட்டு இருக்கலாம்.

2. வாக்களித்த பின். இப்போ செய்வது போல, தொடர்ந்தும் வெளியில் இருந்து ஆதரவு. முன் மொழிவுகளை கையளிப்பு. ஆனால் சமரசமில்லாமல் அதிகார பகிர்வு, ஜெனிவா விடயத்தை கையாளலாம்.

இதில் 1ம் தெரிவை விட சில சமயம் 2ம் தெரிவு பலனளிக்குமோ?

முன்போ பின்போ டீல் இல்லாமல் எதற்கும் ஒப்புதல் அளிக்க கூடாது. குறிப்பாக சிங்கள கட்சிகள் ஏமாற்று பேர்வழிகள். கடந்த காலத்தில் இருந்தாவது கற்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

முன்போ பின்போ டீல் இல்லாமல் எதற்கும் ஒப்புதல் அளிக்க கூடாது. குறிப்பாக சிங்கள கட்சிகள் ஏமாற்று பேர்வழிகள். கடந்த காலத்தில் இருந்தாவது கற்க வேண்டும்.

100%

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அதாவது காசு மட்டும்தாங்கோ அதிகாரம் எல்லாம் கேட்காதேங்கோ.

3 hours ago, goshan_che said:

ஒரு சந்திப்பின் பின் இப்படியான வெளிப்படை அறிக்கை விடுவது வரவேற்க வேண்டியது.

சும், சாணக்கியன் போல் படத்தை மட்டும் போட்டு, என்னை மதுரையில கேட்டாக, மாயவரத்தில கேட்டாக என சீன் காட்டாமல்.

உண்மை. 

இன்னும் அதிக எச்சரிக்கையுடன் செயற்படவேண்டிய நேரம். 

விக்கியின் அறிக்கை TNA க்குத்தான் பிரச்சனையைக் கொடுக்கும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

விக்கியின் அறிக்கை TNA க்குத்தான் பிரச்சனையைக் கொடுக்கும்

புரியவில்லை,  எந்தவகையில் பிரச்சனையை கொடுக்கும் என்று. தான் ஏன் அழைக்கப்பட்டேன்? என்ன பேசினேன்? ஏன் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது? எமது எதிர்பார்ப்பு என்ன? தேவை என்ன? என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார், தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்களின் பிரதிநிதியாய். இது பூட்டின அறைக்குள், என்ன பேசினார்கள்? எவ்வளவு கைமாறினார்கள் என்பது ஒன்றும் தெரியாது. நாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்! எங்களால் மட்டுமே மக்களை வைத்து பேரம் பேச முடியும் என்று கூவித்திரிவார்கள். பிறகு பாத்தால்; அரசு பதவி முடியும்போது த .தே .கூட்டமைப்பு தமிழரின் பிரச்சனைகளை தீர்க்க முயலவில்லை, தீர்க்கமான பேச்சுக்களை எடுக்கவில்லை என்று அவர்கள் பக்கம் அறிக்கை விடுவார்கள். இவர்களோ; நாங்கள் பேசினோம், அரைவாசி வரைபு படுத்தப்பட்டுவிட்டது, அதற்கிடையில் பதவி இழந்து விட்டார்கள் என்று சப்புகொட்டுவார்கள்.              

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

14 August 2022, 9:58 am

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் திரு. எஸ்.செல்வேந்திரா அவர்களுடன் நான் அவரைச் சந்தித்தேன். அந்த தருணத்தில் கௌரவ பிரதமரும் உடனிருந்தார்.

மாகாண ஆளுநர்களுக்கு அதிக பொறுப்பதிகாரத்தை வழங்கும் பாராளுமன்ற ஆளுகைக் குழுவை உள்ளடக்கிய தனது ஆட்சித் திட்டத்தை ஜனாதிபதி எமக்கு விரிவாக விளக்கினார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அந்தந்த மாகாண ஆளுநர்களின் தலைமையில் பணி செய்ய வேண்டும் என்பது அவரது யோசனை. மேற்படி திட்ட யோசனைக்கு ஆஸ்திரியா நாட்டை உதாரணமாகக் குறிப்பிட்டார். (இந்த இடத்தில் அவரது உதாரணம் பொருத்தமற்றது. ஏனெனில் ஆஸ்திரியா ஒரு கூட்டாட்சி நாடு).

மேலும், மத்திய அரசாங்க அமைச்சுக்களால் மாகாணங்களில் காணிகளை அபகரிப்பது தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி, அமைச்சுக்களால் அபகரிக்கப்பட்ட வன நிலங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு மாகாண அமைச்சுக்களும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார். தேவைப்பட்டால் அதிகபட்சம் 2 ஏக்கர் நிலத்தை மாத்திரம் அரசு கையகப்படுத்தலாம் என்றும் கூறினார்.

அதற்கு நான், “அந்தந்த மாகாண அரசாங்கத்தின் சம்மதத்தினையும், அனுமதியினையும் பெறாமல் , மாகாணங்களில் மத்திய அரசாங்கத்தால் எந்தவொரு காணியும் சுவீகரிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்” என்றேன். இதற்கு ஜனாதிபதி அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தேசியப் பாடசாலைகள் குறித்து அவர் கூறுகையில், நாட்டிற்கு 1,000 தேசியப் பாடசாலைகள் தேவையில்லை, 50 தேசியப் பாடசாலைகள் போதும். எனக்கூறினார். இதன் போது நான், “எந்தவொரு மாகாண பாடசாலைகளையும் மத்திய அரசால் கையகப்படுத்த முடியாது எனவும், இது தொடர்பில் எமது கூட்டணி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதையும்” சுட்டிக் காட்டினேன்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்காக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்களை தனது அரசின் வலைக்குள் விழ வைத்து அதனை ஜெனிவாவிற்கு காட்டி தப்பித்துக் கொள்வதற்கான நாடகம் போன்றே எமக்கு தோன்றினாலும் நான் அதனை விமர்சிக்கவில்லை. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் 46/1 என்ற கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் ஜெனிவாவின் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அரசு ஏற்கனவே நிராகரித்திருந்தமையினால் ஆகும். 

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் மூலம் எவ்வாறு நாட்டிற்கு நிதி உதவி செய்ய முடியும் என்பது குறித்த ஆவணத்தை குறிப்புக்களுடன் முன்வைக்குமாறு என்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து முழு நாட்டினதும் மத்திய நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்துவதே அவரது மறைமுக நோக்கம் என்பதை அவருடன் கலந்துரையாடிய போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

“தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவராலும் முன்வைக்கப்படும்  கோரிக்கைகளும், இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை. இனை செயற்படுத்தஅரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகார செயற்பாடுகளை உடன் நிறுத்துவதுடன், இராணுவத்தின் உதவியுடன் தமிழர் தாயக நிலங்களில் பௌத்த விகாரைகளை கட்ட முயலும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இவையே தற்போது எமக்கு தேவையானவை என்பதை நான் மிகவும் வலியுறுத்திக் கூறினேன்.

தமிழர்கள் தமது மாகாணங்களில் அரசியல் தலைமைத்துவத்தையும், ஆட்சியையும் பெற்றுக் கொள்வதற்கு திருப்திகரமான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எமது தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் பகிர்வு ஏற்படுத்தப்படும் வரை மேற்கொள்ளப்படும்  13வது திருத்த அமுலாக்க செயற்பாடுகளில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் என கௌரவ ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இது நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்ற பொருள் அல்ல.

எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததுடன், எம்மை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே அவருக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம்.

இறுதியாக ஜனாதிபதிஎம்மிடம் கேட்டிருந்த முன்மொழிவு ஆவணத்தை கையளிப்பதாக உறுதியளித்து எம்மை அழைத்தற்கு நன்றி தெரிவித்து விட பெற்றோம்.- என்றுள்ளது.

https://samugammedia.com/the-geneva-meeting-is-more-important-to-the-president-than-solving-the-problems-of-tamils-wigneswaran-pointed-out/#

 

டிஸ்கி

தேர்தல் மூலம் தெரிவாகும் மாகாண அரசை ஒதுக்கி, மத்திய அரசின் நியமன ஆளுனர் தலைமையில் ஒரு கண்துடைப்பு அதிகார பகிர்வை சிவி யிடம் விற்க நரி முயன்றுள்ளது.

 

நரி பதில் எப்படி சொல்லும். பிறகு அடாத்தாக குடியேற்றம் செய்வது தடைப்படுமா இல்லையா?

ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பை...  விக்னேஸ்வரன் அவர்கள்,
ஊடக அறிக்கை மூலம், தமிழ் மக்களுக்கு தெரியப் படுத்தியமை..
ஒரு முன்மாதிரியான செயல்.

இதனை... மற்றக் கட்சிகளும், ஒழிவு மறைவு இல்லாமல் பின்பற்ற வேண்டும்.   

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

புரியவில்லை,  எந்தவகையில் பிரச்சனையை கொடுக்கும் என்று. தான் ஏன் அழைக்கப்பட்டேன்? என்ன பேசினேன்? ஏன் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது? எமது எதிர்பார்ப்பு என்ன? தேவை என்ன? என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார், தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்களின் பிரதிநிதியாய். இது பூட்டின அறைக்குள், என்ன பேசினார்கள்? எவ்வளவு கைமாறினார்கள் என்பது ஒன்றும் தெரியாது. நாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்! எங்களால் மட்டுமே மக்களை வைத்து பேரம் பேச முடியும் என்று கூவித்திரிவார்கள். பிறகு பாத்தால்; அரசு பதவி முடியும்போது த .தே .கூட்டமைப்பு தமிழரின் பிரச்சனைகளை தீர்க்க முயலவில்லை, தீர்க்கமான பேச்சுக்களை எடுக்கவில்லை என்று அவர்கள் பக்கம் அறிக்கை விடுவார்கள். இவர்களோ; நாங்கள் பேசினோம், அரைவாசி வரைபு படுத்தப்பட்டுவிட்டது, அதற்கிடையில் பதவி இழந்து விட்டார்கள் என்று சப்புகொட்டுவார்கள்.              

வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதனால் TNA எதனையும் மறைக்க முயன்றால் அது அவர்களுக்கு பாதகமாய் முடியும். 

இத்தனை காலமும் வெளிப்படைத்தன்மையின்றி இருந்ததன் பயனை அறுவடை செய்யும் நேரம் TNA க்கு நெருங்குகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதனால் TNA எதனையும் மறைக்க முயன்றால் அது அவர்களுக்கு பாதகமாய் முடியும். 

இத்தனை காலமும் வெளிப்படைத்தன்மையின்றி இருந்ததன் பயனை அறுவடை செய்யும் நேரம் TNA க்கு நெருங்குகிறது.  

இதுவரைகாலமும் ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத  TNA அழிந்து போகட்டும். புதிய முகங்களுக்கும் புதிய சிந்தனைகளும் வெளிவரட்டும்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதனால் TNA எதனையும் மறைக்க முயன்றால் அது அவர்களுக்கு பாதகமாய் முடியும். 

இத்தனை காலமும் வெளிப்படைத்தன்மையின்றி இருந்ததன் பயனை அறுவடை செய்யும் நேரம் TNA க்கு நெருங்குகிறது.  

வழமைபோல விக்கினேஸ்வரன் மேல் குற்றச்சாட்டுக்களை அடுக்குவார்கள். முரண்டு பிடிக்கிறார், கோபமூட்டுகிறார், இணங்கிப்போக மறுக்கிறார், இனவாதத்தை தூண்டுகிறார்  இப்படிப்பல அடுக்குவார்கள். இனி உதெல்லாம் எடுபடாது.  சரி நீங்கள் இணங்கி, விட்டுக்கொடுத்து எழுபது வருடங்களாக எதை வாங்கினீர்கள் என்று கேட்டால்; எல்லாம் கிரமமாக காரியமாற்றுகிறோம் என்பார்கள். விக்கினேஸ்வரனின் அரசியல் வருகையை வெறுப்பதற்கு முதற்காரணம், அவரின் வெட்டு ஒன்று துண்டு இரண்டு, விட்டுக்கொடுப்பு இல்லை புடுங்கினதை தா என்று சுத்து மாத்து இல்லாமல்  வெளிப்படையாக பேசுவது. 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

. விக்கினேஸ்வரனின் அரசியல் வருகையை வெறுப்பதற்கு முதற்காரணம், அவரின் வெட்டு ஒன்று துண்டு இரண்டு, விட்டுக்கொடுப்பு இல்லை புடுங்கினதை தா என்று சுத்து மாத்து இல்லாமல்  வெளிப்படையாக பேசுவது. 

100% உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

இதுவரைகாலமும் ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத  TNA அழிந்து போகட்டும். புதிய முகங்களுக்கும் புதிய சிந்தனைகளும் வெளிவரட்டும்.

 

56 minutes ago, குமாரசாமி said:

இதுவரைகாலமும் ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத  TNA அழிந்து போகட்டும். புதிய முகங்களுக்கும் புதிய சிந்தனைகளும் வெளிவரட்டும்.

 

37 minutes ago, satan said:

வழமைபோல விக்கினேஸ்வரன் மேல் குற்றச்சாட்டுக்களை அடுக்குவார்கள். முரண்டு பிடிக்கிறார், கோபமூட்டுகிறார், இணங்கிப்போக மறுக்கிறார், இனவாதத்தை தூண்டுகிறார்  இப்படிப்பல அடுக்குவார்கள். இனி உதெல்லாம் எடுபடாது.  சரி நீங்கள் இணங்கி, விட்டுக்கொடுத்து எழுபது வருடங்களாக எதை வாங்கினீர்கள் என்று கேட்டால்; எல்லாம் கிரமமாக காரியமாற்றுகிறோம் என்பார்கள். விக்கினேஸ்வரனின் அரசியல் வருகையை வெறுப்பதற்கு முதற்காரணம், அவரின் வெட்டு ஒன்று துண்டு இரண்டு, விட்டுக்கொடுப்பு இல்லை புடுங்கினதை தா என்று சுத்து மாத்து இல்லாமல்  வெளிப்படையாக பேசுவது. 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான காலம் முடிந்து விட்டதாகவே நானும் உணர்கிறேன். அங்கே இருக்கும் ஒருவரை கூட இதயசுத்தி உள்ளவராக காண முடியவில்லை.

இதைவிட அதிகம் வேறுபட்டவர்கள் அல்ல சைக்கிள் காரரும்.

சி வி வெளிப்படைத்தன்மை, பொறுப்பு கூறல்,  அடிப்படை கோரிக்கைகளை எப்போதும் வலியுறுத்துவதில் நன்றாக செயல்பட்டலும், வினைதிறன் அற்றவர் என்பதாக படுகிறது. அல்லது அப்படி ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. சுரேஸ் போன்றவர்கள் அவரை வைத்து லாபம் அடைய முனைவதும் உண்மை.

அடிப்படை கோரிக்கைகளை விட்டு கொடாமல், ரணில் போன்ற ஒருவருடன் டீல் பண்ணுவது மிக கடினமான பணி.

தலைவரின் பலத்தின் அடிப்படையில் பாலா அண்ணை போன்ற ஒரு ஆளுமை கூட ரணிலை சமாளிக்க பலத்த பிரயத்தன பட வேண்டி இருந்தது.

சி வி தன்னை சுற்றி நேர்மையாளரை வைத்து கொண்டு, வெளிப்படைதன்மையாக செயல்படுவது இன்றி அமையாதது.

புலம் பெயர் அமைபுக்களும் கூட சைக்கிள்காரரை விட்டு விட்டு, கோரிக்கைகள் அடிப்படையில் சீவியுடன் இணைந்து அவரது பாதையை தீர்மானிக்கும் சக்திகளாக வரவேண்டும்.

ஒரு புதிய தலைமையாக வர முடியாவிட்டாலும் அதற்கு வழி சமைத்து கொடுத்தவராக இருக்கும் தகுதி சிவிக்கு உண்டு.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான காலம் முடிந்து விட்டதாகவே நானும் உணர்கிறேன். அங்கே இருக்கும் ஒருவரை கூட இதயசுத்தி உள்ளவராக காண முடியவில்லை.

இதைவிட அதிகம் வேறுபட்டவர்கள் அல்ல சைக்கிள் காரரும்.

சி வி வெளிப்படைத்தன்மை, பொறுப்பு கூறல்,  அடிப்படை கோரிக்கைகளை எப்போதும் வலியுறுத்துவதில் நன்றாக செயல்பட்டலும், வினைதிறன் அற்றவர் என்பதாக படுகிறது. அல்லது அப்படி ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. சுரேஸ் போன்றவர்கள் அவரை வைத்து லாபம் அடைய முனைவதும் உண்மை.

அடிப்படை கோரிக்கைகளை விட்டு கொடாமல், ரணில் போன்ற ஒருவருடன் டீல் பண்ணுவது மிக கடினமான பணி.

தலைவரின் பலத்தின் அடிப்படையில் பாலா அண்ணை போன்ற ஒரு ஆளுமை கூட ரணிலை சமாளிக்க பலத்த பிரயத்தன பட வேண்டி இருந்தது.

சி வி தன்னை சுற்றி நேர்மையாளரை வைத்து கொண்டு, வெளிப்படைதன்மையாக செயல்படுவது இன்றி அமையாதது.

புலம் பெயர் அமைபுக்களும் கூட சைக்கிள்காரரை விட்டு விட்டு, கோரிக்கைகள் அடிப்படையில் சீவியுடன் இணைந்து அவரது பாதையை தீர்மானிக்கும் சக்திகளாக வரவேண்டும்.

ஒரு புதிய தலைமையாக வர முடியாவிட்டாலும் அதற்கு வழி சமைத்து கொடுத்தவராக இருக்கும் தகுதி சிவிக்கு உண்டு.

நல்ல கருத்துக்கள்.

புதிய தலைமுறையை உருவாக்காமலும்,புதிய அணுகுமுறைகளை கடைப்பிடிக்காமலும் பழையதையே பேசிப் பேசி காலத்தை கடத்துகின்றார்கள்.மூன்று சந்ததியாக  இவர்களை தமிழ் அரசியல் தலைவர்களாக முன்னிறுத்தியது ஈழத்தமிழர்களின் தூர நோக்கற்ற பார்வையையே காட்டுகின்றது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரனை  தனிமைப்படுத்தி, எடுத்ததற்கெல்லாம் குற்றஞ்சாட்டி, விமர்சிப்பதை விடுத்து எல்லோரும் அவரோடு  இணைந்து சுயநலமில்லாமல் உழைத்தால் நிறைய சாதிக்கலாம். ஆனால் சுயநலவாதிகள், இனவாதிகள் ஒன்றுபட விடமாட்டார்கள், தனித்து அழைத்து கொன்று விழுங்கி ஏப்பம் விடவே முயற்சிப்பார்கள். அவரிடம் அறிவு உண்டு ஆனால் அரசியல் நுணுக்கங்கள், சூழ்ச்சிகள் குறைவு ஆகவே எல்லோரும் சேர்ந்து ஒருவர்கையை மற்றவர் பலப்படுத்தாவிட்டால் குள்ளநரிகள் இடையில் புகுந்து நீலிக்கண்ணீர் விட்டு, உபதேசித்தபடியே விழுங்கவிடும் மந்தையை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை ஆயுதம் ஏந்த உந்தியவர்கள் தாங்கள் தப்பித்துக்கொண்டதோடு, அவர்களை ஏதோ வன்முறையாளராக சித்திரிப்பது மிக கேவலம் இவருக்கு. ஜனநாயக வழியில் போட்டியிடு மக்களுக்கு எதை பெற்றுக்கொடுத்தார்கள்? அவர்களின் அடிமை வாழ்வை களைந்தார்களா? கோத்தா சொல்லிச்சே; புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள், இனிமேல் தமிழருக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை, அவர்கள் வாழ விரும்பினால் எங்கள் சட்ட திட்டங்களுக்கு அமைந்து வாழலாம், தீர்வு என்று எதையும் கேட்க முடியாது. பொன்சேகா சொன்னார்; தமிழர் வந்தேறு குடிகள், அவர்களுக்கு தீர்வு கேட்கும் உரிமையில்லை. அப்போ எதற்கு புலிகள் இருக்கும்போது தீர்வு தருவதாக ஏன் பேச்சுக்களை நடத்தினர்? மனித உரிமைகளை, ஜனநாயகத்தை  மீறியதால் புலிகள் அழிக்கப்பட்டனராம். வாய் கூசாமல் சொல்கிறார் அந்த மக்களை நடுத்தெருவில் விட்டு தலைவர். அப்படியென்றால் இன்று, இந்த நாட்டுக்கு இந்த அவல நிலை வர காரணம் என்ன? யார் காரணம் என்பதையும் தெளிவு படுத்துவாரா? இவர் அன்று அவர் சொன்னதை, இன்று அவர் சிஷ்யன் திருப்பி கூறுகிறார். உறுதிப்படுத்துகிறார். கேவலமான அரசியல்வாதிகள்!                           

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.