Jump to content

மாதவிடாய் தேதி அட்டையை வீட்டு கதவில் மீரட் பெண்கள் தொங்க விடுவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாதவிடாய் தேதி அட்டையை வீட்டு கதவில் மீரட் பெண்கள் தொங்க விடுவது ஏன்?

  • ஷாபாஸ் அன்வர்
  • பிபிசி இந்திக்காக
14 ஆகஸ்ட் 2022
 

பெண்கள் - மாதவிடாய் தேதி அட்டவணை

பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR

உத்தர பிரதேசத்தின் மீரட்டின் ஹாஷிம்புராவில் வசிக்கும் அல்ஃபிஷானின் வீட்டிற்கு உள்ளே ஒரு கதவில் மாதவிடாய் தேதியின் அட்டவணை தொங்க விடப்பட்டுள்ளது. அவருடைய அண்ணனும் அப்பாவும் கூட அதே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். அவர்களின் கண்களும் இந்த அட்டவணையை அவ்வப்போது பார்க்கும். ஆனால் இப்போது அது சாதாரணமாகிவிட்டது. அவர்கள் அதைப் பார்த்து விட்டு நகர்கிறார்கள்.

"பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எரிச்சல், பலவீனம் மற்றும் பல பிரச்னைகள் இருக்கும். இந்த அட்டவணையை நான் வீட்டிற்குள் வைத்ததால், என் மாதவிடாய் எப்போது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. என்னை நானே கவனித்துக் கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வருகிறதா என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது," என்று அல்ஃபிஷான் பிபிசியிடம் தெரிவித்தார்.

மீரட்டில் வசிக்கும் ஆலிமாவும் அத்தகைய ஓர் அட்டவணையை தனது அறையின் கதவில் ஒட்டியுள்ளார். ஆலிமாவின் வீட்டில் அண்ணன், தங்கை, அப்பா என மொத்தம் ஏழு பேர் இருக்கின்றனர். தற்போது ஆலிமாவின் மாதவிடாய் தேதி, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிகிறது.

"நான் ஓர் ஆசிரியை. நான் வீட்டிற்கு வெளியே சென்று பணிபுரிகிறேன். அதனால் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை நான் அறிவேன். மாதவிடாய் அட்டவணையை ஒட்டியபிறகு குறைந்த பட்சம் வீட்டில் உள்ள அனைவருக்கும் என் மாதவிடாய் தேதி தெரிவதால், அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இது மிகவும் வசதியானதாகவும், இனிமையாகவும் உள்ளது,"என்று ஆலிமா கூறுகிறார்.

 
 

பெண்கள் - மாதவிடாய் தேதி அட்டவணை

பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC

இயக்கத்தால் ஏற்பட்ட மாற்றமா?

இன்றைய காலகட்டத்தில் மீரட்டில் பல்வேறு இடங்களில் சுமார் 65 முதல் 70 வீடுகளில் பீரியட் சார்ட்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் எப்படி திடீரென்று சாத்தியமானது, திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களும் இந்த அட்டவணையை தங்கள் வீடுகளின் பொது இடங்களில் எப்படி வைக்க துணிகிறார்கள்?. இந்த கேள்விக்கு 'செல்ஃபி வித் டாட்டர் அறக்கட்டளை' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சுனில் ஜக்லான் பதிலளிக்கிறார்.

"எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பெண்களின் நலன்களுக்காக நாங்கள் பல பணிகளைச் செய்துள்ளோம். ஆனால் மாதவிடாய் அட்டவணையைப் பொருத்தவரை 2020 ஆம் ஆண்டு முதல் நாங்கள் வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய இடங்களில் செயலில் உள்ளோம்." என்று அவர் கூறினார்.

"எங்கள் அமைப்பு மகளிருக்கு கல்வி, சுகாதாரம், உரிமைகள் மற்றும் பொருளாதார ரீதியிலான சுதந்திரத்திற்காக பாடுபடுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

" மாதவிடாய் காலகட்டங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். வீட்டில் இருக்கும் பெண் உறுப்பினர்களின் பிரச்சனைகளை நான் பார்த்திருக்கிறேன். எனவே இதற்காக நாம் ஏன் சிறப்பாக எதையாவது செய்யக்கூடாது என்று மனதில் தோன்றியது. அதன்பிறகுதான் சில சக மருத்துவர்களிடம் பேசி ஆலோசனை பெற்ற பிறகு பீரியட் சார்ட் இயக்கம் தொடங்கப்பட்டது,"என்று சுனில் ஜக்லான் தெரிவித்தார்.

 

பெண்கள் - மாதவிடாய் தேதி அட்டவணை

பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC

250 அட்டவணைகளில் 180 கிழிக்கப்பட்டன

மீரட்டில் பீரியட் அட்டவணையின் பிரசாரம், 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் தொடர்பு கொண்டு மாணவிகளிடம் உரையாடல் நடத்தப்பட்டது.

"2021 டிசம்பரில் மீரட்டில் இந்த இயக்கத்தை தொடங்கினோம். பல மாநிலங்களிலும் பணிபுரிந்த 30-35 பெண்கள் எங்கள் குழுவில் இருந்தனர். நாங்கள் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளைத் தொடர்புகொண்டோம். லாடோ பஞ்சாயத்து என்று அழைக்கப்படும் பஞ்சாயத்தில் சிறுமிகளை வரவழைத்தோம். வீடு, வீடாகவும் சென்றோம். அவர்களது மொபைல் எண்களை பெற்று வாட்ஸ்அப் குரூப்களையும் உருவாக்கினோம். பல இடங்களில் ஆண்களும் எங்களுக்கு உதவ முன்வந்தனர்,"என்று சுனில் ஜக்லான் கூறினார்.

 

பெண்கள் - மாதவிடாய் தேதி அட்டவணை

பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC

"நாங்கள் ஆரம்பத்தில் 250 பீரியட் அட்டவணைகளை வீடுகளில் உள்ள பெண்களுக்கு விநியோகித்தோம். ஆனால் எங்கள் குழு உறுப்பினர்கள் பின்னர் வீடுகளில் சுற்றிப் பார்த்தபோது, இந்த அட்டவணைகளை 65 முதல் 70 வீடுகளில் மட்டுமே பார்க்கமுடிந்தது. பெரும்பாலான வீடுகளில் இந்த அட்டவணைகள் கிழிக்கப்பட்டன அல்லது அவற்றை மாட்ட சிறுமிகள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சில வீடுகளில் பெண்களின் மாதவிடாய் தேதிகளை அந்த வீட்டின் உறுப்பினர்கள் அறிந்திருப்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். அந்த பெண்களுக்கு அங்கு உதவி கிடைக்கிறது என்று நம்புகிறேன். விழிப்புணர்வு அதிகரிக்கும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்."

இந்த பீரியட் அட்டவணைகளுக்கு எல்லா பிரிவு மக்களிடையேயும் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது என்றார் அவர்.

மாதவிடாய் அட்டவணையால் மகள்கள் ஆரோக்கியமாக இருப்பார்களா?

பீரியட் சார்ட் இயக்கத்தின் நோக்கம் பெண்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது ஆகும் என்று சுனில் ஜாகான் குறிப்பிடுகிறார்.

"பெண்களுக்கு மாதவிடாய் வரும் போது, அந்த நேரத்தில் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எரிச்சல், பலவீனம், சோர்வு மற்றும் உடல்வலி மற்றும் வேறு சில அறிகுறிகள் உள்ளன. அந்த நேரத்தில் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் உதவி அவர்களுக்கு தேவை. அவர்களின் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.பல பெண்களுக்கு மாதவிடாய் சீராக இருப்பதில்லை. இந்த அட்டவணை மூலம் அது பற்றியும் தெரிய வருகிறது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"அட்டவணையில் மாதவிடாய் தேதியைக் குறிப்பிடும் பெண்களிடமிருந்து முழு ஆண்டுக்கான அட்டவணை பெறப்படும். மாதவிடாய் தேதிகளில் ஏதேனும் சீரற்றதன்மை கண்டறியப்பட்டால், அவர்களின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்படும். இதன் மூலம், ஆஷா சகோதரிகள் மற்றும் ஆங்கன்வாடி பணியாளர்களின் உதவியுடன் அத்தகைய பெண்கள் சிகிச்சை பெற முடியும்."

பல இடங்களில் எதிர்ப்பு, பெண்கள் பற்றி அநாகரீகமான கருத்துக்கள்

வட இந்தியாவின் பல மாநிலங்களில், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் அட்டவணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆன்லைன் லாடோ பஞ்சாயத்து நடத்தப்பட்டது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பத்து நேரடி பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டன. இவை தவிர மேலும் பல பஞ்சாயத்துகள் ஆன்லைனில் செய்யப்பட்டன.

 

பெண்கள் - மாதவிடாய் தேதி அட்டவணை

பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC

"பல இடங்களில் எதிர்ப்பு காணப்பட்டது. பெண்கள், சிறுமிகள் குறித்து அநாகரீகமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டன. இது தொடர்பாக எல்லா மதத்தலைவர்களின் உதவியும் நாடப்பட்டது. அவர்களில் பலர் முழு ஆதரவையும் அளித்தனர்,"என்றார் அவர்.

"ஆரம்பத்தில் தைரியம் இருக்கவில்லை, இப்போது பழகிவிட்டது"

வீடுகளுக்குள் பொது இடங்களில் மாதவிடாய் அட்டவணைகள் போடப்பட்டபோது பல பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகவும் சங்கடமாக உணர்ந்தனர்.

"நான் ஒரு இல்லத்தரசி. என் கணவரைத் தவிர, வீட்டில் மைத்துனர், மாமனார் மற்றும் பல ஆண் உறவினர்கள் அடிக்கடி வந்துபோவார்கள். பீரியட் சார்ட் பற்றித்தெரிந்தபோது ஆரம்பத்தில் அது எப்படி சாத்தியம் என்று யோசித்தேன். இதை என் கணவரிடம் விவாதித்த போது அவர் எனக்கு தைரியம் அளித்தார். அதன் பிறகு மாமியாரிடம் சொன்னேன். அவரும் சம்மதித்தார்,"என்று மீரட்டைச் சேர்ந்த திருமணமான பெண் ஆலியா பிபிசியிடம் தெரிவித்தார்.

பீரியட் சார்ட்டை பகிரங்கப்படுத்த்திய பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று அவரிடம் வினவப்பட்டது. "ஆமாம். அதைப் பற்றி தெரியாதபோது அவர்கள் என்னைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை. இப்போது என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்," என்று பதிலளித்தார்.

இது குறித்துப்பேசிய மற்றொரு பெண் மனீஷா, "இது நமது உடல் நலம் சம்பந்தப்பட்டது. குடும்பத்தில் உள்ள அனைவரும் மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பெண்கள் உடல் உபாதைகள் காரணமாக சண்டையிடுவார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சிடுசிடுப்பு ஏற்படும் என்று தெரியவரும்போது சுற்றி உள்ளவர்கள் அவர்கள் மீது அனுதாபம் காட்டுவார்கள். அவர்களின் கடுமையான தொனியை புறக்கணிப்பார்கள்," என்றார்.

'நான் என் மனைவியிடம் சொன்னேன், அட்டவணையை கதவில் மாட்டு'

மீரட்டின் ஹாஷிம்புராவில் வசிக்கும் ஃஜுபைர் அகமது, மாதவிடாய் அட்டவணையை வெளிப்படையாக ஆதரிக்கிறார்.அவர் சலூன் கடை நடத்தி வருகிறார். " மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் தரக்கூடாது.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பெண்கள் நினைக்கக்கூடாது. யாராவது ஒருவர் ஆரம்பித்து வைக்கத்தானே வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

 

பெண்கள் - மாதவிடாய் தேதி அட்டவணை

பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR/BBC

"தயக்கம் ஏதுமின்றி வீட்டின் எந்த கதவிலும் மாதவிடாய் தேதி அட்டவணையை வைக்கலாம் என்று என் மனைவியிடம் சொன்னேன். பல நண்பர்களையும் இதில் நான் இணைத்திருக்கிறேன்."

ஹிமாச்சல பிரதேசத்தின் ரிஷ்தா, 'பீரியட் அட்டவணையின் தூதர்'

மாதவிடாய் அட்டவணையைப் பற்றி ஒரு குறும்படமும் எடுக்கப்பட்டுள்ளது. படச் செலவுகளை 'செல்ஃபி வித் டாட்டர்' அமைப்பின் இயக்குநர் சுனில் ஜக்லான் ஏற்றுக்கொண்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷ்தா இந்தப் படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.

" பீரியட் சார்ட் பற்றிய ஒரு குறும்படத்தில் பணிபுரியும் வாய்ப்பு. 2021 ஏப்ரலில் எனக்குக் கிடைத்தது. நான் ஒப்புக்கொண்டேன். நான் ஸ்கிரிப்டைப் படித்தபோது அது என்னை மேலும் கவர்ந்தது. நான் சுனில் ஜக்லானுடன் இது பற்றி உரையாடினேன். இந்த பிரச்சாரத்தில் என்னையும் இணைத்த அவர் இந்த இயக்கத்தின் தூதராக என்னை ஆக்கினார். இப்போது இது தொடர்பாக பல மாநிலங்களில் உள்ள பெண்களை நான் சந்தித்துப்பேசுகிறேன்," என்று ரிஷ்தா பிபிசியிடம் தெரிவித்தார்.

 

https://www.bbc.com/tamil/india-62534945

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.