Jump to content

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: ஆர்டிஐ பதில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: ஆர்டிஐ பதில்

  • பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக
14 ஆகஸ்ட் 2022
 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

"குடிசைகளைத் தவிர நீர்நிலைகளில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்திருக்கக்கூடிய பெரிய கட்டடங்களை பாரபட்சம் பார்க்காமல் அகற்றுவதற்கு அரசு முன்வருமா?" என்று கேள்வி எழுப்புகிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 925 ஏரிகள் உள்ளன. அவற்றில் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த அனைத்து ஏரிகளும் கால்வாய்களின் மூலமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக மற்றொரு ஏரிக்குத் தண்ணீர் போகும். அந்த ஏரியும் நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் செல்லும். அதைத் தொடர்ந்து ஆறுகள், குளங்கள் இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரை ஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டிருந்தன.

 

அந்த வகையில் கீழ் பாலாறு வடிநில கோட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் அடையாறு ஆறுகளில் மட்டும் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

1px transparent line

 

1px transparent line

அடையாறில் 17,168 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய 381 ஏரிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு 2,122 ஆக உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய 528 ஏரிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு சுமார் 14,842 ஆக உள்ளது. சென்னை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய 16 ஏரிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு சுமார் 4,500 ஆக உள்ளது.

அடையாறில் மட்டும் 34 இடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக அடையாறு நதி கடந்து செல்லும் நீர்வழிப் பாதையில் மட்டும் 17,168 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன.

நான்கு கட்டங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூரில் தொடங்கும் அடையாறு நதி, செங்கல்பட்டு மாவட்டம் வழியாக சென்னை மாவட்டத்தில், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக பட்டினப்பாக்கம் வரை சுமார் 42 கி.மீ தூரம் பயணிக்கிறது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை மனிதத் தவறுதலால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திற்குப் பிறகு அடையாறு செல்லும் நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நான்கு கட்டங்களாகப் பிரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

நீர்நிலை ஆக்கிரமிப்பு

அந்த வகையில் முதல் கட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம் பகுதியில் 1019 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம் பகுதியில் மட்டும் 1060 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இருக்கின்றன.

மூன்றாம் கட்டமாக ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கநல்லூர், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் 5320 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நான்காம் கட்ட நடவடிக்கையில் ஆலந்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் 9769 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

மொத்தமாக அடையாறு நதி செல்லும் நீர் வழியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகள் நீர்வரத்து பாதைகள் என 17,168 இடங்கள் ஆக்கிரமிப்பு என கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பொதுப்பணித் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

மதுரவாயில் ஏரியில் 727 ஆக்கிரமிப்புகள்

இதேபோல் கொற்றலை ஆறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட மாதாவரம் ஏரி, புத்தகரம் ஏரி, சடையன் குப்பம் ஏரி, மஞ்சம்பாக்கம் ஏரி, கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, கொளத்தூர் ஏரி, போரூர் ஏரி, மதுரவாயல் ஏரிகளில் மொத்தம் 1252 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக மதுரவாயில் ஏரியில் 727 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் பெற்றுள்ளார்.

துணை போன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்

இன்று சென்னையில் பெரும்பாலான ஏரிகளைக் காணவில்லை. அவற்றோடு இணைந்திருந்த கால்வாய்களும் காணாமல் போய்விட்டன. சிங்கார சென்னையின் பெரும் வளர்ச்சிக்கும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும் ஏற்ப விவசாய நிலம் முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முன்பே காணாமல் போனவை நீர்நிலைகள் தான்," என்கிறார் ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன்.

இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "ஒரு ஏரியின் கரைகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பிறகு தொடர்ச்சியாக நகரத்தின் பெரும்பகுதி நீர்நிலைகளை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளுக்கு தாராளமாய் அனுமதி வழங்கியது அரசு அதிகாரிகள் தான். எனவே ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இனி வரும் காலங்களில் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும்," என்றார்.

 

ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன்

 

படக்குறிப்பு,

"இந்த ஆக்கிரமிப்புகளுக்கு தாராளமாய் அனுமதி வழங்கியது அரசு அதிகாரிகள் தான்" என்கிறார் ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன்

அதோடு, "முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள கொளத்தூர் ஏரியில் எவ்வளவு ஆக்கிரமிப்பு இருக்கின்றது என்கின்ற விவரங்களை அதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்கள். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்," என்கிறார் காசிமாயன்.

குடிசைகளைத் தவிர நீர்நிலைகளில் பெரியளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கக்கூடிய பெரிய கட்டடங்களை பாரபட்சம் பார்க்காமல் அரசு அகற்ற முன்வருமா என்று கேள்வியெழுப்புகிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் குடிசைகளால் மட்டுமே பெரும் வெள்ளம் வருவது கிடையாது. நீர்நிலைப் பாதைகளில் கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய கட்டடங்களால் தான் வெள்ளம் ஏற்படுகிறது. ஆறும் கடலும் ஒன்று சேரும் இடத்தில் 4000 ஏக்கருக்கு மேல் அரசு நிறுவனங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருக்கின்றன. இவற்றை அகற்ற அரசு முன்வருமா?" என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், "சென்னையின் நதியோரங்களில் வசித்து வந்த ஏழை மக்களை ஆக்கிரமிப்பு எனக் கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தி செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் குடியமர்த்தினார்கள். அந்த இடங்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சார்ந்த இடங்கள். ஒரு நீர்நிலையில் ஆக்கிரமிப்பு எனக் கூறி அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தி மற்றொரு நீர்நிலையில் குடியமர்த்துகிறார்கள். மேலும் வளர்ச்சி என்ற பெயரில் எவ்வளவு ஏரிகளை அரசே திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்பதை நினைவு கூற வேண்டும். ஏழைகளாக இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். அதுவே அரசாக இருந்தால் ஒன்றும் செய்யக்கூடாது என்கிற நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

 

படக்குறிப்பு,

"நீர்நிலைப் பாதைகளில் கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய கட்டடங்களால் தான் வெள்ளம் ஏற்படுகிறது," என்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்

வளர்ச்சி என்கின்ற பெயரில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாய் மண் இருந்த இடங்கள் தற்போது கான்க்ரீட் கட்டடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் மழைத்துளி மண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதில்லை. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாய் மாறுகிறது. ஆற்றின் கொள்ளளவு தாண்டி நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சூழ்ந்து விடுகிறது.

இனி வரும் காலங்களில் வெள்ளத்தோடு தான் நம் வாழ்ந்தாக வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது சென்னைக்கு உண்டான பிரச்னை மட்டுமல்லாது ஏரிகள் எங்கெல்லாம் வளர்ச்சி என்கிற பெயரில் மூடப்படுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பிரச்னை இருக்கிறது," என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது வில்லங்கம் பார்க்கவேண்டும்

"நல்ல வீட்டுமனையைத் தேர்வுசெய்ய கீழ்கண்டவற்றை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்," என்கிறார் ஓய்வு பெற்ற தாசில்தார் வெற்றிவேல்.

  • மனையின் மூலப்பத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு வழக்குரைஞர்களிடம் கலந்தாலோசித்து, வீட்டுமனைக்கான பத்திரம் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இடத்தின் மீது குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வீட்டுமனையின் உரிமையாளர் சட்டப்படி சரியான நபர்தானா என்பதை எப்போதும் உறுதிசெய்ய வேண்டும். பவர் மட்டும் உள்ளவர் என்றால் அந்தப் பவர் ஆஃப் அட்டர்னி செல்லுபடியாகுமா என்பதை வழக்குரைஞர் மூலம் சரிபார்க்க வேண்டும்.
 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

  • நேரடியாக சம்பந்தப்பட்ட தாசில்தார் அல்லது கிராம நிர்வாக அலுவலரையே தொடர்புகொண்டு வீட்டுமனை இருக்கும் நிலத்தின் தன்மை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வீட்டுமனைக்கு பட்டா கிடைக்குமா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
  • அரசு இணையதளங்கள் வாயிலாக வீட்டுமனைக்கு சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அப்ரூவல் உள்ளதாக என உறுதிப்படுத்தலாம். அதில், காட்டப்பட்டுள்ள திட்டப்படி வீட்டுமனை அமைந்துள்ளதா, சர்வே எண் சரியா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை பலமுறை தொடர்புகொண்டும் பதில் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை பகுதிவாரியாகப் பிரித்து அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாகவும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விரைவில் நீர் நிலைகளில் இருக்கக்கூடிய அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62539340

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.