Jump to content

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம் - உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

By RAJEEBAN

15 AUG, 2022 | 12:48 PM
image

2014 முதல் தடையும் தடைநீக்கமும் தொடர்கின்றது நாங்கள் தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும் 2015 பொறுப்புக்கூறும் தீர்மானம் குறித்தும்   தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்

2014 இல் என்னையும் உலக தமிழர் பேரவையையும் தடை செய்தார்கள்,2015இல் தடையை நீக்கினார்கள் 2021 இல் மீண்டும் தடை விதித்தார்கள் 2022 இல் தடையை நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும் 2015 பொறுப்புக்கூறும் தீர்மானம் குறித்தும்  தாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார் என ஐலண்ட் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒவ்வொரு தடவையும் ராஜபக்சாக்கள் அது மகிந்தவாகயிருந்தாலும் சரி கோத்தபாயவாகயிருந்தாலும் சரி தங்கள் சீற்றத்துடனான எதிர்வினைக்காக எங்களை தடை செய்வார்கள் என சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பின்னர் எந்த அரசாங்கமோ இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த முற்போக்கானவர்கள் உட்பட சர்வதேச அமைப்போ பரந்துபட்ட ஊடகங்களோ இந்த தடையை அங்கீகரிக்கவில்லை என்பதை பின்னர் உணருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னர் ஆட்சியில் உள்ளவர்கள் எங்கள் மீதான தடையை நீக்குவார்கள்  2014 முதல் இது இடம்பெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகமும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் அடங்கிய பங்குதாரர்களும் இந்த தடையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதனை அலட்சியம் செய்தமைக்காக உலக தமிழர் பேரவை நன்றியுடையதாக உள்ளது என சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

2014 முதல் 2021 வரையிலான இந்த தடை காரணமாக இலங்கை இழந்த அந்நிய செலவாணி குறித்து நாங்கள் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளோம் வருடாந்தம் 300 மில்லியன் டொலர்களிற்கு மேல் இலங்கை இழந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ண முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் மற்றும் மோசமான பயங்கரவாத நிபுணர் ரோகன் குணரட்ண ஆகியோர் இந்த இழப்பிற்கான காரணத்தை ஏற்கவேண்டும்,தன்னிச்சையான முடிவுகளிற்காக அவர்கள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்,இந்த தடைகளால் என்ன பயன் என்பதை அவர்கள் தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்புகளையும் தனிநபர்களையும் தடை செய்யும் நடவடிக்கை முழுவதும் தன்னிச்சையானது அர்த்தமற்றது இலங்கைக்குள் மாத்திரமல்ல சர்வதேச அளவில் உடன்பட மறுத்தலை கருத்துசுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கமாக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம் - உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளது என்ன? | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை பேரவை அமர்வு முடிய மீண்டும் தடை  தொடரும்? இல்லை, அவர்களுக்கு இப்போ கைதூக்கிவிட தமிழரின் கரம் வேண்டும்! தமிழரை அழித்து நாட்டை நாசப்படுத்த போட்டி  போட்டுகொண்டு ஓடியோடி உதவினார்கள், இப்போ தூக்கிவிட  ஒருவரும் முன்வர மறுக்கிறார்கள். விழுத்தப்பட்ட தழிழன் கரம் வேண்டுமாம். ஓடியாங்கோ தூங்குங்கோ மூச்சு நிக்கப்போகுது!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.