Jump to content

யாழ்ப்பாணத்தில் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image_3b0b0232c6.jpg

பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொரு பிரதேசங்களில் வித்தியாசமாகக் நடத்தப்படும்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற  பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி, மேளதாள வாத்தியங்கள்,  சகிதம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் பவனியாக மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.

தென் பகுதியில் இருந்து  யானை மற்றும் கதகளி கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு இந் நிகழ்வு இடம்பெற்றது. இந்  நிலையில் அதனை காண்பதற்காக பெருமளவு மக்கள் ஒன்றுகூடினர். ( நிதர்ஷன் வினோத்)

image_a0e1a9718c.jpgimage_413b8687d2.jpgimage_1f2d3c83e3.jpgimage_125f7b575f.jpgimage_fd54add33d.jpg

Tamilmirror Online || வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Hana

இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி  வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது. உதுக்கு அனுப்பி

நிலாமதி

பிள்ளை   மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ  திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பா

குமாரசாமி

குப்பன்:- என்ன இதுக்கை நிண்டு  ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கிறாய்? சுப்பன்:- கன நாளைக்கு பிறகு பொடியள் அந்த மாதிரி இழுத்து தேத்தண்ணி ஆத்துறாங்கள் அதுதான் நிண்டு பாக்கிறன்.  

  • கருத்துக்கள உறவுகள்

கால நேரம் தெரியாமல்… ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 😡
மனச்சாட்சி இல்லாத, மிகவும் அருவருப்பான… கொழுப்பு முத்தின செயல்.😡

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

கால நேரம் தெரியாமல்… ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 😡
மனச்சாட்சி இல்லாத, மிகவும் அருவருப்பான… கொழுப்பு முத்தின செயல்.😡

இங்கு எனது இடத்திற்கு அருகாமையில் இருக்கும் எனது நண்பன் நேற்றிரவு என்னுடன் தொலைபேசியில் கதைத்தான். பல சம்பவங்களை கதைத்துக்கொண்டிருக்கும் போது இலங்கை பணபரிவர்த்தனை பற்றி கதைக்கும் போது தான் அண்மையில் இலங்கையில் இருக்கும் தன் சகோதரன் மகளின் சாமத்திய சடங்கிற்கு 35 லட்சம் ரூபாய் அனுப்பியதாக கூறினான்.(கெப்பர்)

இப்போது நான் சொல்ல வருவது என்னவெனில் கொழுப்பு எங்கிருந்து உருவாக்கப்படுகின்றது என  யோசித்து பாருங்கள்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இங்கு எனது இடத்திற்கு அருகாமையில் இருக்கும் எனது நண்பன் நேற்றிரவு என்னுடன் தொலைபேசியில் கதைத்தான். பல சம்பவங்களை கதைத்துக்கொண்டிருக்கும் போது இலங்கை பணபரிவர்த்தனை பற்றி கதைக்கும் போது தான் அண்மையில் இலங்கையில் இருக்கும் தன் சகோதரன் மகளின் சாமத்திய சடங்கிற்கு 35 லட்சம் ரூபாய் அனுப்பியதாக கூறினான்.(கெப்பர்)

இப்போது நான் சொல்ல வருவது என்னவெனில் கொழுப்பு எங்கிருந்து உருவாக்கப்படுகின்றது என  யோசித்து பாருங்கள்.

வெளிநாட்டில் உள்ளவர்களால் தான், அங்கு உள்ளவர்கள் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள்.
அந்த  35 லட்சம் ரூபாயில் தான்... இந்தச் சாமத்திய சடங்கு நடக்குதோ யாருக்குத் தெரியும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

இங்கு எனது இடத்திற்கு அருகாமையில் இருக்கும் எனது நண்பன் நேற்றிரவு என்னுடன் தொலைபேசியில் கதைத்தான். பல சம்பவங்களை கதைத்துக்கொண்டிருக்கும் போது இலங்கை பணபரிவர்த்தனை பற்றி கதைக்கும் போது தான் அண்மையில் இலங்கையில் இருக்கும் தன் சகோதரன் மகளின் சாமத்திய சடங்கிற்கு 35 லட்சம் ரூபாய் அனுப்பியதாக கூறினான்.(கெப்பர்)

இப்போது நான் சொல்ல வருவது என்னவெனில் கொழுப்பு எங்கிருந்து உருவாக்கப்படுகின்றது என  யோசித்து பாருங்கள்.

இப்ப ஒரு வளவு காணி வாங்க முடியல எல்லாம் கோடிக்கணக்கில்  போகிறது  நேற்று சொன்னேனே ஒரு கல்யாணம் அது நம்ம நெருங்கிய சொந்ததுக்குத்தான் .

இலங்கை அரசினால் கூட இவ்வளவு நெருக்குதல் இல்ல  ஒரு சமயம் ஆறுதலாக இருக்கு ஒரு சமயம் அவங்க தகுத்திக்கு இல்லையே என்ற  ஏக்கமும் இருக்கும் இது  ( இதற்குள் யாழுக்குள் இருக்கும் எந்த உறவுகளும் அடக்கம் இல்லை)  

மன்னிக்கவும் எனக்கு எந்த கோபமும் இல்லை  பணக்காரர்கள் பக்குவமாக இருக்கிறார்கள்  சிலர் திமிர்த்தனமாக இப்படியும் நடக்கிறார்கள் சம்பவங்களும் நடக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கடவுளே இந்தக் காசை கொண்டு நானுறு பேருக்கு  உணவு கொடுத்திருந்தால் அந்த குடும்பத்துக்கு புண்ணியமாய் போகும்.  இவர்கள்    திருந்தாயினம்.  காசனுப்பினவர் எத்தனை துன்ப பட்டு அனுப்பினரோ ....? இதெல்லாம் பகட்டுக்கு  செய்வது. நாய் வாலை நிமித்த முடியாது. 

Edited by நிலாமதி
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வீட்டில் சொல்ல அவர்கள் சொன்னது  " பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்..

இவர்களை எப்படி திருத்துவது? (சொன்னது இரண்டும் பொம்பிளைகள் )

Edited by பகிடி
Link to comment
Share on other sites

இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி  வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது.

17 minutes ago, நிலாமதி said:

 கடவுளே இந்தக் காசை கொண்டு நானுறு பேருக்கு  உணவு கொடுத்திருந்தால் அந்த குடும்பத்துக்கு புண்ணியமாய் போகும்.  இவர்கள்    திருந்தாயினம்.  காசனுப்பினவர் எத்தனை துன்ப பட்டு அனுப்பினரோ ....? இதெல்லாம் பகட்டுக்கு  செய்வது. நாய் வாலை நிமித்த முடியாது. 

உதுக்கு அனுப்பினார் என்றவர் என்றால் அவர் ஒரு முட்டாள் அல்லது பவிசு வந்து குடை பிடிக்கிறார். அவர் துன்பப்படத்தான் வேணும்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பகிடி said:

இதை வீட்டில் சொல்ல அவர்கள் சொன்னது  " பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்..

இவர்களை எப்படி திருத்துவது? (சொன்னது இரண்டும் பொம்பிளைகள் )

பிள்ளை   மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ  திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பார்க்க "ஷோ "....காட்டும் செயல்

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக உழைத்து சேமித்த காசை ஒருவரும் ஆடம்பர செலவுகளில் வீணடிப்பதில்லை.

கண்டறியாததைக் கண்டவன் பாக்கு பாக்காய் பீச்சுவான் என்பது முதுமொழி. 

😏

47 minutes ago, பகிடி said:

இதை வீட்டில் சொல்ல அவர்கள் சொன்னது  " பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்..

இவர்களை எப்படி திருத்துவது? (சொன்னது இரண்டும் பொம்பிளைகள் )

என்ன, எனது பெண் பிள்ளைகள் கரு......க்கு ஆயத்தமாகிவிட்டனர் என்று ஊருக்கு தம்பட்டமடிப்பது அன்பின் காரணமாகவா ? 

சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சடங்குகளைச் செய்வதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. 

சந்தணம் மிஞ்சினால் ................ தடவவல்லோ வேணும். 

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

image_3b0b0232c6.jpg

 

அடடே,

ஈழத்தமிழர்கள் தமது மலையாள மரபுரிமையின் வேர்களை மீள தேடுகிறார்கள் போலுள்ளதே🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

அடடே,

ஈழத்தமிழர்கள் தமது மலையாள மரபுரிமையின் வேர்களை மீள தேடுகிறார்கள் போலுள்ளதே🤣

அப்படியே.. சோழரின் யானைப்படையையும் பாண்டியரின் குதிரைப்படையையும் இழுத்து வந்துள்ளனர். மூவேந்தர்களும் கூடிக் குதூகலிக்கிறார்கள்.

இதற்கு பட்டகடன் எத்தனையோ யார் அறிவார். எந்த கிரடிட் காட் கொம்பனி கோல் பண்ணிக் கொண்டிருக்கோ...??! எந்த வங்கி கடனைக் கொடுத்திட்டு முழியப் போகுதோ..??!

Lycamobile has not paid any corporation tax for several years in the United Kingdom though the company put aside £9.5 million to cover "a potential liability of unpaid taxes" including "interest and penalties" in its 2015 accounts. Lycamobile's 2015 accounts were filed seven months late, appearing after Companies House threatened to strike Lycamobile off; such an action would have prevented the company from conducting business in the UK.[47] Lycamobile had previously been threatened with being struck off in 2012; its accounts were filed two years late that year.[48] Some suggest it is because Lycamobile is a significant donor to the British Conservative Party, having donated £1.3 million since 2011, including £500,000 in 2015.[47] They also donated use of a call centre to Boris Johnson during his 2012 London mayoral election campaign.[49]

இவர்களின் ஐரோப்பிய இளவரசரே இந்த நிலையில்.. இருக்கிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் தொடர்ச்சியா மேலுள்ளது ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசுகள்.. இப்படி ஊருக்கு படம் காட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் எவரும் இன்று நன்றாய் இல்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Hana said:

உதுக்கு அனுப்பினார் என்றவர் என்றால் அவர் ஒரு முட்டாள் அல்லது பவிசு வந்து குடை பிடிக்கிறார். அவர் துன்பப்படத்தான் வேணும்.

 சரியாகச் சொன்னீர்கள்.

1 hour ago, நிலாமதி said:

பிள்ளை   மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ  திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பார்க்க "ஷோ "....காட்டும் செயல்

!00 வீதம் உண்மை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை ஏதோ அவர்கள் வசதிக்கு, செய்து இருக்கினம்.

உங்கை சுவிசிலயும், கனடாவிலையும், பிரான்சிலையும் ஹெலியிலை வந்து இறங்கினது தெரியுமோ, தெரியாதோ?

லைக்கா முனாவின் அம்மாவின் 75 வது பிறந்தநாள், லண்டன் உலகப்புகழ் மிக்க O2 மண்டபம் எடுக்கப்பட்டு, £250,000 செலவில் பல ஆயிரம் விருந்தினர்களுடன் நடந்தேறியது.

பல்லு இருப்பவன் பாக்கு சப்புறான் எண்டு சொல்லிப்போட்டு போகவேண்டியது தான்.

 

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அப்படியே.. சோழரின் யானைப்படையையும் பாண்டியரின் குதிரைப்படையையும் இழுத்து வந்துள்ளனர். மூவேந்தர்களும் கூடிக் குதூகலிக்கிறார்கள்.

இதற்கு பட்டகடன் எத்தனையோ யார் அறிவார். எந்த கிரடிட் காட் கொம்பனி கோல் பண்ணிக் கொண்டிருக்கோ...??! எந்த வங்கி கடனைக் கொடுத்திட்டு முழியப் போகுதோ..??!

Lycamobile has not paid any corporation tax for several years in the United Kingdom though the company put aside £9.5 million to cover "a potential liability of unpaid taxes" including "interest and penalties" in its 2015 accounts. Lycamobile's 2015 accounts were filed seven months late, appearing after Companies House threatened to strike Lycamobile off; such an action would have prevented the company from conducting business in the UK.[47] Lycamobile had previously been threatened with being struck off in 2012; its accounts were filed two years late that year.[48] Some suggest it is because Lycamobile is a significant donor to the British Conservative Party, having donated £1.3 million since 2011, including £500,000 in 2015.[47] They also donated use of a call centre to Boris Johnson during his 2012 London mayoral election campaign.[49]

இவர்களின் ஐரோப்பிய இளவரசரே இந்த நிலையில்.. இருக்கிறார். 🤣

கோழி ஒரு முட்டை இட்டபின் ஊரெல்லாம் கூவும். ஆமை நூறு முட்டையிட்டபின்னரும் அமைதியாகச் செல்லும். 

😏

3 hours ago, goshan_che said:

அடடே,

ஈழத்தமிழர்கள் தமது மலையாள மரபுரிமையின் வேர்களை மீள தேடுகிறார்கள் போலுள்ளதே🤣

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாட்டுக்கு கதகளி ஆடியிருப்பினமோ ? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த அளவில் கொண்டாட்டம் செய்கின்றார்கள். வாட்சப்பில் பார்த்தேன். என்னத்தை சொல்வது.. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச் சடங்கு,  அமளி அடங்க… “வாள் வெட்டு கோஷ்டி”  போய், 
“மொய் பணத்தை” சுருட்டிக் கொண்டு போனாலும்… ஆச்சரியம் இல்லை.
அந்தளவுக்கு… உலகம் முழுக்க, வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு...10 யானை பிடித்திருந்தால் சனம்... இல்லாத குறையை மூடியிருக்கும் ...இல்லையன்றல் 10 குதிரை வண்டியை பிடிச்சு ஆட்களை ஏத்தியிருக்கலாம்...தென்பகுதி குமுறும்...பாணுக்கு நாம லயினிலை நிற்க இவன்களுக்கு சாமத்தியம் கேட்குது...ரணிலைப் பொறுத்தவரை..டொலர் வந்தால் சரி..

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில  கல்யாண  வீடுகள்  கோயில்களில்  
சிலது  மண்டபங்களில்  நிறைய  பேருடன்  
சிலது  ஆபிஸில  ரெண்டு  சாட்சியோட   மாத்திரம்  

மற்றவை  எங்க  கோட்டை  கிழிக்கிறது  என்பதனை 
அவரவருக்கு  விட்டு  விட்டு  
எங்கட  கோடுகளைப்   பற்றி  நாம் 
எப்ப  தான்  
கவலைப்  படப்  போறம்  

போகேக்குள்ள  ஒண்டும்   
கொண்டு  
போகப் 
போறதில்லை  

1 hour ago, alvayan said:

இன்னுமொரு...10 யானை பிடித்திருந்தால் சனம்... இல்லாத குறையை மூடியிருக்கும் ...இல்லையன்றல் 10 குதிரை வண்டியை பிடிச்சு ஆட்களை ஏத்தியிருக்கலாம்...தென்பகுதி குமுறும்...பாணுக்கு நாம லயினிலை நிற்க இவன்களுக்கு சாமத்தியம் கேட்குது...ரணிலைப் பொறுத்தவரை..டொலர் வந்தால் சரி..

நீங்க கிட்டடியில திரைப் படம் ஏதும் பார்த்து என்ஜோய் பண்ணினனீங்களே ??
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் காசு அல்லது அவர்கள் உறவினர் அனுப்பிய காசில் இந்த விழாவை எடுத்திருக்கின்றார்கள். உலகத்தில் எந்தவொரு பெண்ணுக்கும் நிகழாத அற்புதமான பூப்பு இப் பெண்பிள்ளைக்கு நிகழ்ந்திருக்கின்றது. எனவே ஊரைக்கூட்டி கொடி, குடை, ஆலவட்டம், சாமரம், விசிறி எல்லாம் பிடித்து தம்பட்டம் அடிப்பதில் என்ன தவறு இருந்துவிடப் போகின்றது? இதில் எமக்கு ஏன் வயிறு எரிகின்றது?

இங்க கனடாவில நாங்கள் போகாத வக்கேசனா? கொலிடேயா? செய்யாத பார்ட்டிகளா?

அதுவும் ஆன்டிமார் இனி எப்ப சிறிலங்கா போறது, இந்த சந்தர்ப்பத்தில போனால் போனதுதான் இதுதான் சிறிலங்காவுக்கு போற கடைசி எண்டு “புல்டா போண்டா கஞ்சா கப்ஸா” விடுவினம்.

அவரவர் தத்தமது ஸ்டேட்டஸுக்கு ஏற்ப செலவு செய்யினம், ஏனென்றால் அவர்கள் அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இதில் நான் மேலதிகமாக சொல்ல வேற என்ன இருக்கு?!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாட்டில் உள்ளவர்களால் தான், அங்கு உள்ளவர்கள் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள்.
அந்த  35 லட்சம் ரூபாயில் தான்... இந்தச் சாமத்திய சடங்கு நடக்குதோ யாருக்குத் தெரியும். 

சீச்சீ.....இல்லை .படத்த காட்டி விசாரிச்சனான். அது வேறை இது வேறை. ஆனால் 35லச்சம் சாமத்திய வீட்டுக்கு அனுப்பினது உண்மை. :cool:

Best Senthil Goundamani GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சீச்சீ.....இல்லை .படத்த காட்டி விசாரிச்சனான். அது வேறை இது வேறை. ஆனால் 35லச்சம் சாமத்திய வீட்டுக்கு அனுப்பினது உண்மை. :cool:

Best Senthil Goundamani GIFs | Gfycat

அப்ப... அவர்கள், அந்த 35 லட்சத்தை... 
பிள்ளையின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துள்ளார்கள் போலுள்ளது.  👍

ஊதாரித்தனமாக செலவு செய்து, மற்றவர்களிடம் திட்டு வாங்குவதை விட...
சேமிப்பு நல்ல விடயம் தானே. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அப்ப... அவர்கள், அந்த 35 லட்சத்தை... 
பிள்ளையின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துள்ளார்கள் போலுள்ளது.  👍

ஆசை தோசை அப்பளம் வடை....🙃
இப்ப அங்கை சாமான் சக்கட்டையள் நெருப்பு விலையெல்லோ? அதால தான் 35 லச்சம்🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
    • அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே ........!  😍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.