Jump to content

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல், சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல், சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீனாவின் யுவான் வேங் – 5 (Yuan Wang 5) அதி தொழில்நுட்ப ஆய்வு, கண்காணிப்பு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சீனக் கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது.

சீனாவின் யுவான் வாங் 5 என்ற கப்பல் அந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வகைக் கப்பலின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்ததோடு இந்த வகையான ஏழு கப்பல்களை சீனா கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த வகைக் கப்பல்களில் செயற்கைக் கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல், தகவல் தொடர்பாடல், மின்னணு வலையமைப்பு ஆகிய செயற்பாடுகளை கண்காணிக்கும் போன்ற வசதிகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

https://athavannews.com/2022/1294829

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

 

May be a cartoon

 

May be an image of train and railroad

 

Bild

சீனக் கப்பல் வருகையும், அதற்கு இந்தியாவின் சந்தேகமும்... 
ஸ்ரீலங்காவின் நிலைமையையும்,   
அழகாக.. கருத்தோவியத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்கள். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய உளவு விமானம் என்ன ஓய்வெடுக்குதா..??!

ஹிந்தியாவுக்கு இது நல்ல சுதந்திர தினப் பரிசு. ஹிந்திய ராஜதந்திரம் படுதோல்வியில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது.

இதென்ன இது? இவ்வளவு வாக்குவாதப்பட்டு வந்து வந்தவேகத்திலேயே கிளம்புறார். ஓகோ .... இந்தியாவின் வயித்தில் புளியை கரைக்கத்தான் வந்தாரோ? நீ எவ்வளவு அள்ளிக்கொட்டினாலும் எனது வருகையை உன்னால் கட்டுப்படுத்த முடியாது என்கிற செய்தியை சொல்லிப்போக வந்தாராக்கும். வந்தவர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு போயிருந்தால் இந்தியா கொஞ்ச  நாள் தூங்காமல் பகவத் கீதை படித்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதென்ன இது? இவ்வளவு வாக்குவாதப்பட்டு வந்து வந்தவேகத்திலேயே கிளம்புறார். ஓகோ .... இந்தியாவின் வயித்தில் புளியை கரைக்கத்தான் வந்தாரோ? நீ எவ்வளவு அள்ளிக்கொட்டினாலும் எனது வருகையை உன்னால் கட்டுப்படுத்த முடியாது என்கிற செய்தியை சொல்லிப்போக வந்தாராக்கும். வந்தவர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு போயிருந்தால் இந்தியா கொஞ்ச  நாள் தூங்காமல் பகவத் கீதை படித்திருக்கும்.

எப்பிடியோ... இந்தியாவுக்கு, ஒரு விமானம் நட்டம். ஸ்ரீலங்கா... ஆயுத கிடங்கிலை ஒரு விமானம் அதிகரிப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

ஹிந்திய உளவு விமானம் என்ன ஓய்வெடுக்குதா..??!

ஹிந்தியாவுக்கு இது நல்ல சுதந்திர தினப் பரிசு. ஹிந்திய ராஜதந்திரம் படுதோல்வியில். 

இந்தியா விமானம் கொடுத்தாலும்….இலங்கை விமானிக்கு வாந்திபேதி, வயித்து போக்கு என்று ஏதாவது சொல்லி விமானத்தை கட்டுநாயக்காவில் கட்டி போட்டிருக்கும், சீன கப்பல் வெளியேறும் வரை.

ஐயருக்கு நல்ல தகடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல், சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

அப்பாடா ரொம்பவும் நிம்மதியாக இருக்கிறது.

இந்திய சுதந்திர தினத்துக்கு பரிசு கொடுக்கவென்றே திட்டம் போட்டு வந்திருக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த சீன கப்பலுக்குள் செல்ல எவருக்கும் அனுமதியில்லை.

By T YUWARAJ

16 AUG, 2022 | 09:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை,இந்தியா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவான் வான் -05 அறிவியல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல் இன்று காலை 08. மணியளவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டது.

இவ்வாரம் இறுதி வரை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் குறித்த கப்பலுக்குள் செல்வதற்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

298867211_461021139213020_24060712788817

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலை வரவேற்கும் நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றது.

இலங்கைக்கான சீன தூதுவர் கி-சென்ஹொங்,கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினர்களான அட்மிரல் சரத் வீரசேகர,விமல் வீரவன்ச,கெவிந்து குமாரதுங்க,வாசுதேவ நாணயக்கார,அதுரலியே ரத்ன தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இன்று காலை 08.மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த யுவான் வான் கப்பலை துறைமுக வளாகத்தில் கூடியிருந்தவர்கள் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தேசிய கொடியினை அசைத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து சகலரும் எழுந்து நின்று கப்பலை வரவேற்றனர்.

299576779_480541903408547_87116772521838

யுவான் வாங் 05 என்ற கப்பலானது 2007ஆம் ஆண்டு சீனாவின் தேசிய கொடியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆய்வு, கண்காணிப்பு கப்பலாகும். இந்த கப்பல் 11000 மெற்றிக்தொன் எடையுடைய பொருட்களை ஏற்றிச் செல்ல கூடியதுடன் 222 மீட்டர் நீளமும் 25.2 மீட்டர் அகலமும் உடையது.

சீனாவின் விண்கல கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-05 லொன்ங் மார்ச்-5 பி ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல்சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்க பயன்படுத்தப்படுகிறது

சீனாவின் ஜியாங்ஜின் துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த யுவான் வான் கப்பல் கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய திட்டமிட்டிருந்தது.

300049730_1219678365454355_6262630025163

இருப்பினும் இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதால் தமது நாட்டின் இரகசிய தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து யுவான் வான் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை தற்காலிகமாக பிற்போடுமாறு இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அறிவித்தது.

அதற்கமைய யுவான் கப்பல் கடந்த 11ஆம் திகதி திட்டமிட்ட வகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதை தாமதப்படுத்தியது.

யுவான் கப்பல் விவகாரம் குறித்து இராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினை தொடர்;ந்து குறித்த கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் தானியங்கி அடையாள அமைப்பு முறைமைகளை பேணுதல்,மற்றும் இலங்கை கடற்பரப்பில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள கூடாது என பாதுகாப்பு அமைச்சு நிபந்தனை விதித்ததை தொடர்ந்து யுவான் வான் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.எரிபொருள் மற்றும் உணவு பொருட்கள் இடைப்பட்ட காலத்தில் பெற்றுக்கொள்ள யுவான் வான் கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்திருக்கும்.

30 நாட்களாக கடலில் நாட்களை கடத்திய யுவான் கப்பல் பல சவால்களுக்கு மத்தியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கைக்கும்,சீனாவிற்கும் இடையிலான நட்புறவினை பலப்படுத்தும் வகையில் இந்த கப்பலின் பிரவேசம் அமைந்துள்ளது என இலங்கைக்கான சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த சீன கப்பலுக்குள் செல்ல எவருக்கும் அனுமதியில்லை | Virakesari.lk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

எப்பிடியோ... இந்தியாவுக்கு, ஒரு விமானம் நட்டம். ஸ்ரீலங்கா... ஆயுத கிடங்கிலை ஒரு விமானம் அதிகரிப்பு. 

சீனக்கப்பல் இலங்கைக்கு வரும் ஒவ்வொரு தடவையும் இந்தியா,  இலங்கைக்கு விமானம் அன்பளிப்பாக வழங்குமா? இந்திய விமானங்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்த பின் தான் சீன தன் ஆராய்ச்சியை  ஆரம்பிக்குமாமில்லே!

5 hours ago, பிழம்பு said:

இன்று காலை 08.மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த யுவான் வான் கப்பலை துறைமுக வளாகத்தில் கூடியிருந்தவர்கள் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தேசிய கொடியினை அசைத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து சகலரும் எழுந்து நின்று கப்பலை வரவேற்றனர்.

நல்ல சம்பிரதாயப்படிதான் வரவேற்கிறார்கள்! இந்திய விமானத்தை தண்ணீர் பீச்சியடித்து வரவேற்றார்கள், இது தண்ணீருக்குள் நிக்கிறபடியால் கொடியை அசைத்து வரவேற்றிருக்கிறார்கள் போல். இங்கு வரவேற்பு கூட்டம் அதிகம் போல்தெரிகிறது. சரத் வீர சேகர கையை நீட்டுகிறார் கப்பலை பார்வையிட நினைத்தாரோ என்னவோ, சீனன் கையை உயர்த்தி தடை விதிக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

298867211_461021139213020_24060712788817

 

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சீன கப்பலின், இலங்கை வருகையை அடுத்து... இந்திய கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்!

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த நிலையிலேயே, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல், சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நுழையும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1295012

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2022 at 00:06, satan said:

சரத் வீர சேகர கையை நீட்டுகிறார் கப்பலை பார்வையிட நினைத்தாரோ என்னவோ, சீனன் கையை உயர்த்தி தடை விதிக்கிறார். 

https://www.facebook.com/100001504539901/videos/593839742474847

அமைச்சர்  சரத் வீரசேகரவுக்கு... கை கொடுக்க மறுத்த, சீன கப்பல் தளபதி.
இதனைத்தான்... "பல்பு" வாங்குவது என்று சொல்வார்கள். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

https://www.facebook.com/100001504539901/videos/593839742474847

அமைச்சர்  சரத் வீரசேகரவுக்கு... கை கொடுக்க மறுத்த, சீன கப்பல் தளபதி.
இதனைத்தான்... "பல்பு" வாங்குவது என்று சொல்வார்கள். 🤣

இந்திய விமானம் நன்கொடை என்றதால் அங்கே போனோருக்கு மரியாதை கொடுத்தார்கள்.

சீனாவின் துறைமுகத்துக்கு, சீனா தன் கப்பலை கொண்டு வரும் போது சும்மா விடுப்பு பார்க்க போன முன்னாள் அமைச்சருக்கு இந்த “மரியாதையே” அதிகம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

https://www.facebook.com/100001504539901/videos/593839742474847

அமைச்சர்  சரத் வீரசேகரவுக்கு... கை கொடுக்க மறுத்த, சீன கப்பல் தளபதி.
இதனைத்தான்... "பல்பு" வாங்குவது என்று சொல்வார்கள். 🤣

தமிழனுக்கு கை கொடுக்க மாட்டானுகள்.

சீனனுக்கு விழுந்தடித்து ஓடிப் போனார்.

ஐயாவுக்கு வேணும்.

வெல்டண் சீனன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்திய விமானம் நன்கொடை என்றதால் அங்கே போனோருக்கு மரியாதை கொடுத்தார்கள்.

சீனாவின் துறைமுகத்துக்கு, சீனா தன் கப்பலை கொண்டு வரும் போது சும்மா விடுப்பு பார்க்க போன முன்னாள் அமைச்சருக்கு இந்த “மரியாதையே” அதிகம்🤣

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

தமிழனுக்கு கை கொடுக்க மாட்டானுகள்.

சீனனுக்கு விழுந்தடித்து ஓடிப் போனார்.

ஐயாவுக்கு வேணும்.

வெல்டண் சீனன்.

வீரசேகர… முதலில், ஆங்கில முறையில் கை கொடுக்க…
சீனன் அதனை ஏற்காமல், கை காட்டுகிறார்.
தன் முயற்சியில்… சற்றும் மனம் தளராத வீரசேகர…
ஓரு அடி பின் நகர்ந்து… இரண்டு கையையும் கூப்பி,  “ஆய் போவன்” 😜 சொல்கிறார். 🤣
சீனன்… அப்பவும், “ஆய் போவன்” சொல்லவே இல்லை. 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அப்பவும், “ஆய் போவன்” சொல்லவே இல்லை

எனக்கு பார்த்தால்…நீ ஆயி போரெண்டா அங்காலா போவன், இஞ்ச ஏன் வந்தனி? எண்டு சொன்னமாதிரி கிடக்கு🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300049730_1219678365454355_6262630025163

 

Bild

கப்பல் பார்க்கப் போன சரத் வீரசேகரவுக்கு... கப்பல் தளபதி கொடுத்த மரியாதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

300049730_1219678365454355_6262630025163

 

Bild

கப்பல் பார்க்கப் போன சரத் வீரசேகரவுக்கு... கப்பல் தளபதி கொடுத்த மரியாதை. 

rbHqaj.gif

டிஸ்கி 

கிந்தியனுக்கு இதையும் விட அவமானம் தோழர்..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

rbHqaj.gif

டிஸ்கி 

கிந்தியனுக்கு இதையும் விட அவமானம் தோழர்..😊

ஆமா .... ஐயா இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தீர்கள்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

rbHqaj.gif

டிஸ்கி 

கிந்தியனுக்கு இதையும் விட அவமானம் தோழர்..😊

கண்டது மகிழ்ச்சி தோழர்........!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

ஆமா .... ஐயா இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தீர்கள்?

 

5 hours ago, suvy said:

கண்டது மகிழ்ச்சி தோழர்........!   

 தாய் சேய் அனைவரும் நலம் தோழர்..👌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 தாய் சேய் அனைவரும் நலம் தோழர்..👌

வாழ்த்துக்கள்! பதவியுயர்வு ....? 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.