Jump to content

கோட்டாவின்... பிரத்தியேக ஜெட் விமானத்திற்கான,  பணத்தினை... செலுத்திய இலங்கை அரசாங்கம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

கோட்டாவின்... பிரத்தியேக ஜெட் விமானத்திற்கான,  பணத்தினை... செலுத்திய இலங்கை அரசாங்கம்?

முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

அவர் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளார்.

இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, ஆம் என பதில் வழங்கியிருந்தார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவிக்கு அத்தகைய வரப்பிரசாதங்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாக அறிகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, இராஜதந்திர கட்வுச்சீட்டை கொண்டுள்ளார் எனவும், அதனால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294920

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப் பணமே... என்கின்றார் கோட்டா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது என அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் இருப்பதாக கூறினார்.

இருப்பினும் முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்காக அரசாங்கம் பணத்தினை செலவிடுகிறது என செய்திகள் வெளியாகிய நிலையில் அரசாங்கம் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது.

இதேவேளை தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாகவும் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1294983

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டபாயவின் வெளிநாட்டு செலவீனங்களுக்கு அரசு பொறுப்பில்லை - அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்

By T. Saranya

17 Aug, 2022 
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு செலவீனங்களானது அவரது தனிப்பட்ட நிதியாகும். அரசாங்கம் ஒருபோதும் அந்த  செலவீனங்களை ஏற்கவோ பொறுப்புக்கூறவோ தீர்மானித்தது இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்,  முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு பயன்படுத்திய பிரத்தியேக விமானத்திற்கு இலங்கை அரசாங்கமே பணம் செலுத்தியுள்ளது. அவ்வாறெனில் முன்னாள் ஜனாதிபதி தற்போதும் சிறப்புரிமைகளுடனா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, சட்டத்தின் பிரகாரம் சிறப்புரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது என்று பதிலளித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும் அமைச்சர் பேச்சாளர் குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் தவறான புரிதல்களுடன் செய்திகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்கவினால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார்.

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றது என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன  அதற்கு பதிலளித்தார். அவர் கூறிய அந்த கூற்றை முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்காக அரசாங்கம் பணத்தினை செலவிடுகிறது என்று கருத்து புலப்படும் வகையில் சில ஊடகங்கள் செய்திகள் பிரசுரித்திருந்தன. இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/133761

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.