Jump to content

டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டஸ்மானியப் புலி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த டஸ்மானியப் புலி. இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.

90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டஸ்மானியன் புலி என்று அழைக்கப்படும் இந்த உயிரினத்தின் முறைப்படியான பெயர் 'தைலசைன்' என்பதாகும். இந்த இனத்தில் மிச்சம் இருந்த கடைசி விலங்கு 1930களில் இறந்துபோனது.

ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இன்னும் 10 ஆண்டுகளில் முதல் தைலசைன் விலங்கினை உருவாக்கி காட்டில் விட முடியும் என்று இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள வல்லுநர்கள் கூறுகிறார்கள். அழிந்த உயிரினங்களை மீட்கும் இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளதுதான் என்கிறார்கள் இவர்கள்.

 

ஆனால், அழிந்துபோன உயிரினத்தை மீட்பது சாத்தியமா என்பது குறித்து மற்ற விஞ்ஞானிகள் சந்தேகம் கொள்கிறார்கள். இதெல்லாம் அறிவியல் புதினம் போன்ற கற்பனையே என்பது அவர்களது கருத்து.

உடலின் மேற்பகுதியில் புலிக்கு உள்ளதைப் போல கோடுகள் இருப்பதால் இந்த விலங்குக்கு டஸ்மானியன் புலி என்ற புனைபெயர் வந்தது. ஆனால், உண்மையில் இது மர்சூபியல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பைம்மா இனத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். ஆஸ்திரிலியாவில் பெரிதும் காணப்படும் பைம்மா பாலூட்டி இன விலங்குகளுக்கு வயிற்றின் வெளிப்புறம் பை போன்ற ஒரு அமைப்பு இருக்கும். கங்காருவுக்கு இருக்குமே அதைப் போன்ற இந்தப் பையில் இந்த விலங்குகள் தங்கள் குட்டிகளை வைத்து வளர்க்கும்.

எப்படி மீண்டும் உருவாக்குவார்கள்?

 

ஜீன் எடிட்டிங். வரைகலை.

பட மூலாதாரம்,MARK GARLICK/SCIENCE PHOTO LIBRARY

 

படக்குறிப்பு,

மரபணுவில் பட்டி டிங்கரிங் - வரைகலை

டஸ்மானிய புலி இனத்தைப் போலவே இருக்கும் வாழும் பைம்மா இன விலங்கு ஒன்றின் டி.என்.ஏ.வை எடுத்து அதை ஜீன் எடிட்டிங் முறையில் மாற்றியமைத்து அழிந்துபோன டஸ்மானிய புலிகளை மீண்டும் உருவாக்குவதற்கு அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இப்படி உருவாக்கப்படும் விலங்கு மிகச்சரியாக டஸ்மானிய புலியாகவோ அல்லது அதைப் போல மிக நெருக்கமாகக் காணப்படுவதாகவோ இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

பல விஞ்ஞானத் தடைகளை உடைத்துதான் இந்த விலங்கினை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டியிருக்கும். அப்படி அதை செய்து முடிக்கும்போது அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

"கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட இந்த தைலசைன் இனக் குட்டி ஒன்றை 10 ஆண்டுகளில் உயிரோடு உருவாக்கிவிட முடியும் என்று நம்புகிறேன்," என்கிறார் இந்த ஆய்வுத் திட்டத்துக்குத் தலைமை ஏற்கும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ பாஸ்க்.

ஆஸ்திரேலியாவுக்கு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வந்து சேர்ந்ததில் இருந்து டஸ்மானியப் புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. டிங்கோஸ் எனப்படும் ஒரு காட்டு நாய் இனம் உருவானபோது மீண்டும் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

நடந்து முடிந்தால் பெரிய அதிசயம்

கடைசியாக டஸ்மானிய தீவில் மட்டுமே இந்த விலங்குகள் சுதந்திரமாகத் திரிந்தன. ஆனால், அங்கேயும் பிறகு வேட்டையாடி அழிக்கப்பட்டன. ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த உலகின் கடைசி டஸ்மானியப் புலி 1936ல் இறந்தது.

இந்த டஸ்மானியப் புலிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால், அழிந்துபோன பிறகு மீட்டெடுக்கப்படும் முதல் உயிரினமாக டஸ்மானியப் புலி இனம் இரு்கும். ஆனால், இந்த திட்டத்தில் இடம்பெறாத பல விஞ்ஞானிகள் இதற்கான சாத்தியம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளார்கள்.

 

உயிரியல் ஆய்வு

பட மூலாதாரம்,ANDREW BROOKES/GETTY

"அழிந்த உயிரினத்தை மீட்டெடுப்பது என்பது ஒரு கற்பனைக் கதை," என்று சிட்னி மார்னிங் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பழங்கால டி.என்.ஏ. தொடர்பான ஆஸ்திரேலிய மையத்தை சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜெரமி ஆஸ்டின்.

"இந்த திட்டம் விஞ்ஞானிகளுக்கு ஊடக வெளிச்சம் தருவதே தவிர, உண்மையில் காத்திரமான அறிவியல் பணி தொடர்பானது அல்ல" என்றும் அவர் கடுமையான மொழியில் விமர்சித்துள்ளார்.

டஸ்மானியப் புலிகளை மீட்டெடுக்கும் யோசனை 20 ஆண்டுகளாக உள்ளதுதான். 1999ல் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் இந்த விலங்கை குளோன் செய்யும் திட்டத்தை தொடங்கியது. இந்த விலங்கின் மாதிரிகளில் இருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுக்கவும், மறு கட்டுமானம் செய்யவும் பல முயற்சிகள் விட்டுவிட்டு நடந்தன.

டஸ்மானிய புலிகளை மீட்கும் தற்போதைய திட்டத்தை மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் டெக்சாஸ் நகரில் இருந்து இயங்கும் கொலோசல் நிறுவனமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

பல ஊழிகளுக்கு முன்பு அழிந்துபோன மாமத யானைகளை உயிரோடு மீட்பதற்கு ஒரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது கொலாசஸ் நிறுவனம். ஆனால், இந்த முயற்சியில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.

https://www.bbc.com/tamil/science-62572295

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

ஆங்கிலேய துரைமாருக்கு… புலி வேட்டை, யானை வேட்டை என்று….
துப்பாக்கியால்… சுட்டு விளையாடுவது ஒரு பொழுது போக்கு.
அவர்களே பல உயிரினங்களை அழித்து விட்டு,
அழிந்து போச்சுது என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.. பிளடி இங்கிலிஷ்காரன். 😂

Link to comment
Share on other sites

32 minutes ago, குமாரசாமி said:

டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

 

21 minutes ago, தமிழ் சிறி said:

ஆங்கிலேய துரைமாருக்கு… புலி வேட்டை, யானை வேட்டை என்று….
துப்பாக்கியால்… சுட்டு விளையாடுவது ஒரு பொழுது போக்கு.
அவர்களே பல உயிரினங்களை அழித்து விட்டு,
அழிந்து போச்சுது என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.. பிளடி இங்கிலிஷ்காரன். 😂

 

கற்பனையில் பொய்யான தகவல்களை எழுத வேண்டாம்.

நாய்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வர ஆரம்பித்தபோதே இந்த இனம் அழியத் தொடங்கியது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் வேட்டையும் காரணம். ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது. 1792 இல் தான் ஐரோப்பியர்கள் இதனை அபூர்வமாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

https://en.wikipedia.org/wiki/Thylacine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

 

 

கற்பனையில் பொய்யான தகவல்களை எழுத வேண்டாம்.

நாய்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வர ஆரம்பித்தபோதே இந்த இனம் அழியத் தொடங்கியது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் வேட்டையும் காரணம். ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது. 1792 இல் தான் ஐரோப்பியர்கள் இதனை அபூர்வமாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

https://en.wikipedia.org/wiki/Thylacine

நாங்கள் கற்பனையில் எதுவும் எழுதவில்லை. உங்களைப்போல் வாசித்த அளவை வைத்த வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.கற்பனைக்கதைகள் எழுத வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதே போல் தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்ததுமில்லை..நாங்களோ நீங்கள் சார்ந்தவர்களோ பிறக்கும் போதே எல்லாம் தெரிந்து வந்தவர்கள் அல்ல. எல்லாம் படித்த படிப்பை வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.. எடுத்த வாக்கில் கற்பனை என மற்றவர் கருத்தை தூக்கியெறிவதில்லை.
இணைய உலகிலிருந்து நீங்கள் ஆதாரங்களை நிறுவும் முனையும் போது நாங்களும் இணைய ஆதாரங்களை இணைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

டஸ்மானி புலிகள் ஆடுகளை வேட்டையாடிய படியால் அவைகள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.

https://www.google.com/search?q=Beutelwolf&rlz=1C1NMEO_deDE982DE982&sourceid=chrome&ie=UTF-8

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

23 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் கற்பனையில் எதுவும் எழுதவில்லை. உங்களைப்போல் வாசித்த அளவை வைத்த வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.கற்பனைக்கதைகள் எழுத வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதே போல் தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்ததுமில்லை..நாங்களோ நீங்கள் சார்ந்தவர்களோ பிறக்கும் போதே எல்லாம் தெரிந்து வந்தவர்கள் அல்ல. எல்லாம் படித்த படிப்பை வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.. எடுத்த வாக்கில் கற்பனை என மற்றவர் கருத்தை தூக்கியெறிவதில்லை.
இணைய உலகிலிருந்து நீங்கள் ஆதாரங்களை நிறுவும் முனையும் போது நாங்களும் இணைய ஆதாரங்களை இணைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

டஸ்மானி புலிகள் ஆடுகளை வேட்டையாடிய படியால் அவைகள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.

https://www.google.com/search?q=Beutelwolf&rlz=1C1NMEO_deDE982DE982&sourceid=chrome&ie=UTF-8

வெள்ளையர்கள் குடியேற ஆரம்பித்தது 1770 ற்குப் பின். 1800 அளவில்தான் சில ஆயிரக்கணக்கானவர்கள் குடியேறினர். அத்போது இந்த விலங்கு மிக அபூர்வமாகி விட்டது. சுட்டு வேட்டையாடியதால் அது அழிந்தது என்று எங்காவது உள்ளதா ? 3000 வருடங்களுக்கு முன் இது அவுஸ்திரேலியா முழுவதும் பரவியிருந்தது. நான் மேலே குறிப்பிட்டதுபோல் மனிதர்கள் வேட்டையாடியதும் ஒரு காரணம். அது வெள்ளைக்காரன் அல்ல. சில ஆயிரக்கணக்கானோர் வேடையாடி அழிக்க அவுஸ்திரேலிய ஒன்றும் சிறிய தீவு அல்ல.

நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர். உங்கள் ஆதாரங்களை நன்றாக வாசித்துப் பாருங்கள். ஐரோப்பியர்கள் குடியேறியது 18 ஆம் நூற்றாண்டு இறுதியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிபீடியாவில் யாரும் எழுதலாம். நானும் எழுதலாம். அந்த ஆசாமிகளும் எழுதலாம்.

https://en.wikipedia.org/wiki/History_of_Australia_(1851–1900)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர்.

In the 1950s, the government turned to biocontrol. They released rabbits infected with myxoma—a rabbit-specific virus—into southeastern Australia. The myxoma virus was the first ever virus to be purposefully introduced to the wild to eradicate an animal. Australian scientist Peter Kerr said of this release, “Thus, inadvertently, began one of the great experiments in natural selection, conducted on a continental scale.” The myxoma virus leads to myxomatosis, a disease that only kills rabbits. Although the myxoma virus did lead to the deaths of many of the rabbits in Australia, the rabbits eventually developed an immunity to the virus, rendering it ineffective. If the scientists wanted to eradicate these invasive rabbits, they were going to have to try something else.

https://education.nationalgeographic.org/resource/how-european-rabbits-took-over-australia

வெள்ளைக்காரர் அவுசுக்குள் குடியேறிய நேரம் 5௦௦௦ புலிகள் அளவில் உள்ளதாக சொல்கிறார்கள் வெள்ளைகளுடன் குடியேறிய கால் நடைகளை இந்த புலிகள் அழித்து விடும் எண்ணத்தில் இவற்றை அழித்தார்கள் என்று சொல்கிறார்கள் .

In Australia, the settlers brought dogs with them. It’s likely the dogs also contributed to the Tasmanian tigers’ decline through direct competition and by introducing new diseases. There were reports that a distemper-like disease was killing many Tasmanian tigers right before the wild population winked out of existence.

https://untamedscience.com/biodiversity/tasmanian-tiger/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர்.

அப்படி பொய்யான தகவல்களை யுடியுப்பர் சொல்வார்கள் ஆனால் நேரே பெட்டிசம் போடலாம் முன்பு போல் இல்லை இப்பவெல்லாம் உடனே தூக்கி விடுவார்கள் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பெருமாள் said:

அப்படி பொய்யான தகவல்களை யுடியுப்பர் சொல்வார்கள் ஆனால் நேரே பெட்டிசம் போடலாம் முன்பு போல் இல்லை இப்பவெல்லாம் உடனே தூக்கி விடுவார்கள் .

இந்த திரியின் தலையங்கம் 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கினத்தை என தொடங்குகின்றது.

Quote

டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா?

இணையவன் ஐரோப்பியர்கள் வரும் முன்னே இந்த இனம் ஏறத்தாள  முற்றாக அழிந்து விட்டது என தகவல் தருகின்றார்.

6 hours ago, இணையவன் said:

ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது.

வெள்ளையர்கள் அங்கு குடியேறவில்லை. பெரிய பிரித்தானியாவின் பெரும் குற்றவாளி கைதிகளை நாடு கடத்த பயன்படுதப்பட்ட தீவுதான் அவுஸ்ரேலியா எனும் முன்னாள் சிறைச்சாலை. இது இணையத்தகவல் அல்ல.அரசியல் பாடத்தில் உள்ளது..

4 hours ago, இணையவன் said:

வெள்ளையர்கள் குடியேற ஆரம்பித்தது 1770 ற்குப் பின். 1800 அளவில்தான் சில ஆயிரக்கணக்கானவர்கள் குடியேறினர். அத்போது இந்த விலங்கு மிக அபூர்வமாகி விட்டது. சுட்டு வேட்டையாடியதால் அது அழிந்தது என்று எங்காவது உள்ளதா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இந்த திரியின் தலையங்கம் 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கினத்தை என தொடங்குகின்றது.

இணையவன் ஐரோப்பியர்கள் வரும் முன்னே இந்த இனம் ஏறத்தாள  முற்றாக அழிந்து விட்டது என தகவல் தருகின்றார்.

வெள்ளையர்கள் அங்கு குடியேறவில்லை. பெரிய பிரித்தானியாவின் பெரும் குற்றவாளி கைதிகளை நாடு கடத்த பயன்படுதப்பட்ட தீவுதான் அவுஸ்ரேலியா எனும் முன்னாள் சிறைச்சாலை. இது இணையத்தகவல் அல்ல.அரசியல் பாடத்தில் உள்ளது..

 

யுடுப்பர் பற்றிய பார்வை முன்பு போல் இல்லை அதை அவர் மாற்றி கொள்ளனும் பொய்யான தகவல் ஆகா இருந்தால் உடனே ஆப்பு கொடுக்கலாம் அதனால் தமிழ் யுடியுப்பர் இனி வருபவர்கள் இருப்பவர்கள் உண்மையே சொல்வார்கள் .

இங்கு சிலர் தங்களின் கருத்துக்கு விக்கியையும் யுடிப்பையும் ஆதாரத்துக்கு கொண்டு வரும்போது அதை பிழை என்று வாதிடுபவர்கள் அதே அவர்கள் இணைக்கும்போது சொல்லும்போது சரி என்பது என்ன நியாயம் ?

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

யுடுப்பர் பற்றிய பார்வை முன்பு போல் இல்லை அதை அவர் மாற்றி கொள்ளனும் பொய்யான தகவல் ஆகா இருந்தால் உடனே ஆப்பு கொடுக்கலாம் அதனால் தமிழ் யுடியுப்பர் இனி வருபவர்கள் இருப்பவர்கள் உண்மையே சொல்வார்கள் .

இங்கு சிலர் தங்களின் கருத்துக்கு விக்கியையும் யுடிப்பையும் ஆதாரத்துக்கு கொண்டு வரும்போது அதை பிழை என்று வாதிடுபவர்கள் அதே அவர்கள் சொல்லும்போது சரி என்பது என்ன நியாயம் ?

நீங்கள் கூறுவது போல் முன்னரைப்போல் யூ ரியூப்பில் சேட்டைகளோ பொய்யான தகவல்களையோ பகிரமுடியாது.. எனக்கு தெரிய பல யூ ரியூப் தகவல் தளங்களை தடை செய்து விட்டார்கள்.பல மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட தமிழ் தகவல் யூ ரியூப் ஊடகங்கள் உள்ளன. அவர்கள் அவ்வளவு சுலபமாக அவர்களை ஏமாற்றி தகவல் தர முடியாது என நினைக்கின்றேன். இருப்பினும் சினிமா,அரசியல்,செய்தி,சமையல்,ஊர் சுற்றுதல் போன்ற யூ ரியூப் தளங்களை ஆசாமி தளங்கள் என சொல்லலாம்.

விக்கிபிடியாவில் நானும் தகவல்களை  எழுதலாம்.
இன்றைய உலகில் தொலைக்காட்சி ஊடகங்களைப்போல் யூ ரியூப் தளங்களும் முன்னேறி விட்டன.தொலைக்காட்சி ஊடகங்களும் இப்போது யுரியூப்பில் நேரடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.எனவே யூ ரியூப்பில் வரும் அனைத்தையும் ஆசாமிகள் தளம் என ஒதுக்கிவிட முடியாது.

.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் கூறுவது போல் முன்னரைப்போல் யூ ரியூப்பில் சேட்டைகளோ பொய்யான தகவல்களையோ பகிரமுடியாது.. எனக்கு தெரிய பல யூ ரியூப் தகவல் தளங்களை தடை செய்து விட்டார்கள்.பல மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட தமிழ் தகவல் யூ ரியூப் ஊடகங்கள் உள்ளன. அவர்கள் அவ்வளவு சுலபமாக அவர்களை ஏமாற்றி தகவல் தர முடியாது என நினைக்கின்றேன். இருப்பினும் சினிமா,அரசியல்,செய்தி,சமையல்,ஊர் சுற்றுதல் போன்ற யூ ரியூப் தளங்களை ஆசாமி தளங்கள் என சொல்லலாம்.

விக்கிபிடியாவில் நானும் தகவல்களை  எழுதலாம்.
இன்றைய உலகில் தொலைக்காட்சி ஊடகங்களைப்போல் யூ ரியூப் தளங்களும் முன்னேறி விட்டன.தொலைக்காட்சி ஊடகங்களும் இப்போது யுரியூப்பில் நேரடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.எனவே யூ ரியூப்பில் வரும் அனைத்தையும் ஆசாமிகள் தளம் என ஒதுக்கிவிட முடியாது.

.

இணையம் தினம்தோறும் மாறிக்கொண்டு தன்னை புதுபுத்திகொண்டு உள்ளது  எங்களின் கற்பனைக்கு மேலாக .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.