Jump to content

டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டஸ்மானியப் புலி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த டஸ்மானியப் புலி. இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.

90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டஸ்மானியன் புலி என்று அழைக்கப்படும் இந்த உயிரினத்தின் முறைப்படியான பெயர் 'தைலசைன்' என்பதாகும். இந்த இனத்தில் மிச்சம் இருந்த கடைசி விலங்கு 1930களில் இறந்துபோனது.

ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இன்னும் 10 ஆண்டுகளில் முதல் தைலசைன் விலங்கினை உருவாக்கி காட்டில் விட முடியும் என்று இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள வல்லுநர்கள் கூறுகிறார்கள். அழிந்த உயிரினங்களை மீட்கும் இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளதுதான் என்கிறார்கள் இவர்கள்.

 

ஆனால், அழிந்துபோன உயிரினத்தை மீட்பது சாத்தியமா என்பது குறித்து மற்ற விஞ்ஞானிகள் சந்தேகம் கொள்கிறார்கள். இதெல்லாம் அறிவியல் புதினம் போன்ற கற்பனையே என்பது அவர்களது கருத்து.

உடலின் மேற்பகுதியில் புலிக்கு உள்ளதைப் போல கோடுகள் இருப்பதால் இந்த விலங்குக்கு டஸ்மானியன் புலி என்ற புனைபெயர் வந்தது. ஆனால், உண்மையில் இது மர்சூபியல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பைம்மா இனத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். ஆஸ்திரிலியாவில் பெரிதும் காணப்படும் பைம்மா பாலூட்டி இன விலங்குகளுக்கு வயிற்றின் வெளிப்புறம் பை போன்ற ஒரு அமைப்பு இருக்கும். கங்காருவுக்கு இருக்குமே அதைப் போன்ற இந்தப் பையில் இந்த விலங்குகள் தங்கள் குட்டிகளை வைத்து வளர்க்கும்.

எப்படி மீண்டும் உருவாக்குவார்கள்?

 

ஜீன் எடிட்டிங். வரைகலை.

பட மூலாதாரம்,MARK GARLICK/SCIENCE PHOTO LIBRARY

 

படக்குறிப்பு,

மரபணுவில் பட்டி டிங்கரிங் - வரைகலை

டஸ்மானிய புலி இனத்தைப் போலவே இருக்கும் வாழும் பைம்மா இன விலங்கு ஒன்றின் டி.என்.ஏ.வை எடுத்து அதை ஜீன் எடிட்டிங் முறையில் மாற்றியமைத்து அழிந்துபோன டஸ்மானிய புலிகளை மீண்டும் உருவாக்குவதற்கு அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இப்படி உருவாக்கப்படும் விலங்கு மிகச்சரியாக டஸ்மானிய புலியாகவோ அல்லது அதைப் போல மிக நெருக்கமாகக் காணப்படுவதாகவோ இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

பல விஞ்ஞானத் தடைகளை உடைத்துதான் இந்த விலங்கினை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டியிருக்கும். அப்படி அதை செய்து முடிக்கும்போது அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

"கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட இந்த தைலசைன் இனக் குட்டி ஒன்றை 10 ஆண்டுகளில் உயிரோடு உருவாக்கிவிட முடியும் என்று நம்புகிறேன்," என்கிறார் இந்த ஆய்வுத் திட்டத்துக்குத் தலைமை ஏற்கும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ பாஸ்க்.

ஆஸ்திரேலியாவுக்கு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வந்து சேர்ந்ததில் இருந்து டஸ்மானியப் புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. டிங்கோஸ் எனப்படும் ஒரு காட்டு நாய் இனம் உருவானபோது மீண்டும் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

நடந்து முடிந்தால் பெரிய அதிசயம்

கடைசியாக டஸ்மானிய தீவில் மட்டுமே இந்த விலங்குகள் சுதந்திரமாகத் திரிந்தன. ஆனால், அங்கேயும் பிறகு வேட்டையாடி அழிக்கப்பட்டன. ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த உலகின் கடைசி டஸ்மானியப் புலி 1936ல் இறந்தது.

இந்த டஸ்மானியப் புலிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால், அழிந்துபோன பிறகு மீட்டெடுக்கப்படும் முதல் உயிரினமாக டஸ்மானியப் புலி இனம் இரு்கும். ஆனால், இந்த திட்டத்தில் இடம்பெறாத பல விஞ்ஞானிகள் இதற்கான சாத்தியம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளார்கள்.

 

உயிரியல் ஆய்வு

பட மூலாதாரம்,ANDREW BROOKES/GETTY

"அழிந்த உயிரினத்தை மீட்டெடுப்பது என்பது ஒரு கற்பனைக் கதை," என்று சிட்னி மார்னிங் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பழங்கால டி.என்.ஏ. தொடர்பான ஆஸ்திரேலிய மையத்தை சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜெரமி ஆஸ்டின்.

"இந்த திட்டம் விஞ்ஞானிகளுக்கு ஊடக வெளிச்சம் தருவதே தவிர, உண்மையில் காத்திரமான அறிவியல் பணி தொடர்பானது அல்ல" என்றும் அவர் கடுமையான மொழியில் விமர்சித்துள்ளார்.

டஸ்மானியப் புலிகளை மீட்டெடுக்கும் யோசனை 20 ஆண்டுகளாக உள்ளதுதான். 1999ல் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் இந்த விலங்கை குளோன் செய்யும் திட்டத்தை தொடங்கியது. இந்த விலங்கின் மாதிரிகளில் இருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுக்கவும், மறு கட்டுமானம் செய்யவும் பல முயற்சிகள் விட்டுவிட்டு நடந்தன.

டஸ்மானிய புலிகளை மீட்கும் தற்போதைய திட்டத்தை மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் டெக்சாஸ் நகரில் இருந்து இயங்கும் கொலோசல் நிறுவனமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

பல ஊழிகளுக்கு முன்பு அழிந்துபோன மாமத யானைகளை உயிரோடு மீட்பதற்கு ஒரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது கொலாசஸ் நிறுவனம். ஆனால், இந்த முயற்சியில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.

https://www.bbc.com/tamil/science-62572295

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

ஆங்கிலேய துரைமாருக்கு… புலி வேட்டை, யானை வேட்டை என்று….
துப்பாக்கியால்… சுட்டு விளையாடுவது ஒரு பொழுது போக்கு.
அவர்களே பல உயிரினங்களை அழித்து விட்டு,
அழிந்து போச்சுது என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.. பிளடி இங்கிலிஷ்காரன். 😂

Link to comment
Share on other sites

32 minutes ago, குமாரசாமி said:

டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

 

21 minutes ago, தமிழ் சிறி said:

ஆங்கிலேய துரைமாருக்கு… புலி வேட்டை, யானை வேட்டை என்று….
துப்பாக்கியால்… சுட்டு விளையாடுவது ஒரு பொழுது போக்கு.
அவர்களே பல உயிரினங்களை அழித்து விட்டு,
அழிந்து போச்சுது என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.. பிளடி இங்கிலிஷ்காரன். 😂

 

கற்பனையில் பொய்யான தகவல்களை எழுத வேண்டாம்.

நாய்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வர ஆரம்பித்தபோதே இந்த இனம் அழியத் தொடங்கியது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் வேட்டையும் காரணம். ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது. 1792 இல் தான் ஐரோப்பியர்கள் இதனை அபூர்வமாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

https://en.wikipedia.org/wiki/Thylacine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

 

 

கற்பனையில் பொய்யான தகவல்களை எழுத வேண்டாம்.

நாய்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வர ஆரம்பித்தபோதே இந்த இனம் அழியத் தொடங்கியது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் வேட்டையும் காரணம். ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது. 1792 இல் தான் ஐரோப்பியர்கள் இதனை அபூர்வமாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

https://en.wikipedia.org/wiki/Thylacine

நாங்கள் கற்பனையில் எதுவும் எழுதவில்லை. உங்களைப்போல் வாசித்த அளவை வைத்த வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.கற்பனைக்கதைகள் எழுத வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதே போல் தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்ததுமில்லை..நாங்களோ நீங்கள் சார்ந்தவர்களோ பிறக்கும் போதே எல்லாம் தெரிந்து வந்தவர்கள் அல்ல. எல்லாம் படித்த படிப்பை வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.. எடுத்த வாக்கில் கற்பனை என மற்றவர் கருத்தை தூக்கியெறிவதில்லை.
இணைய உலகிலிருந்து நீங்கள் ஆதாரங்களை நிறுவும் முனையும் போது நாங்களும் இணைய ஆதாரங்களை இணைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

டஸ்மானி புலிகள் ஆடுகளை வேட்டையாடிய படியால் அவைகள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.

https://www.google.com/search?q=Beutelwolf&rlz=1C1NMEO_deDE982DE982&sourceid=chrome&ie=UTF-8

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

23 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் கற்பனையில் எதுவும் எழுதவில்லை. உங்களைப்போல் வாசித்த அளவை வைத்த வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.கற்பனைக்கதைகள் எழுத வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதே போல் தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்ததுமில்லை..நாங்களோ நீங்கள் சார்ந்தவர்களோ பிறக்கும் போதே எல்லாம் தெரிந்து வந்தவர்கள் அல்ல. எல்லாம் படித்த படிப்பை வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.. எடுத்த வாக்கில் கற்பனை என மற்றவர் கருத்தை தூக்கியெறிவதில்லை.
இணைய உலகிலிருந்து நீங்கள் ஆதாரங்களை நிறுவும் முனையும் போது நாங்களும் இணைய ஆதாரங்களை இணைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

டஸ்மானி புலிகள் ஆடுகளை வேட்டையாடிய படியால் அவைகள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.

https://www.google.com/search?q=Beutelwolf&rlz=1C1NMEO_deDE982DE982&sourceid=chrome&ie=UTF-8

வெள்ளையர்கள் குடியேற ஆரம்பித்தது 1770 ற்குப் பின். 1800 அளவில்தான் சில ஆயிரக்கணக்கானவர்கள் குடியேறினர். அத்போது இந்த விலங்கு மிக அபூர்வமாகி விட்டது. சுட்டு வேட்டையாடியதால் அது அழிந்தது என்று எங்காவது உள்ளதா ? 3000 வருடங்களுக்கு முன் இது அவுஸ்திரேலியா முழுவதும் பரவியிருந்தது. நான் மேலே குறிப்பிட்டதுபோல் மனிதர்கள் வேட்டையாடியதும் ஒரு காரணம். அது வெள்ளைக்காரன் அல்ல. சில ஆயிரக்கணக்கானோர் வேடையாடி அழிக்க அவுஸ்திரேலிய ஒன்றும் சிறிய தீவு அல்ல.

நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர். உங்கள் ஆதாரங்களை நன்றாக வாசித்துப் பாருங்கள். ஐரோப்பியர்கள் குடியேறியது 18 ஆம் நூற்றாண்டு இறுதியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிபீடியாவில் யாரும் எழுதலாம். நானும் எழுதலாம். அந்த ஆசாமிகளும் எழுதலாம்.

https://en.wikipedia.org/wiki/History_of_Australia_(1851–1900)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர்.

In the 1950s, the government turned to biocontrol. They released rabbits infected with myxoma—a rabbit-specific virus—into southeastern Australia. The myxoma virus was the first ever virus to be purposefully introduced to the wild to eradicate an animal. Australian scientist Peter Kerr said of this release, “Thus, inadvertently, began one of the great experiments in natural selection, conducted on a continental scale.” The myxoma virus leads to myxomatosis, a disease that only kills rabbits. Although the myxoma virus did lead to the deaths of many of the rabbits in Australia, the rabbits eventually developed an immunity to the virus, rendering it ineffective. If the scientists wanted to eradicate these invasive rabbits, they were going to have to try something else.

https://education.nationalgeographic.org/resource/how-european-rabbits-took-over-australia

வெள்ளைக்காரர் அவுசுக்குள் குடியேறிய நேரம் 5௦௦௦ புலிகள் அளவில் உள்ளதாக சொல்கிறார்கள் வெள்ளைகளுடன் குடியேறிய கால் நடைகளை இந்த புலிகள் அழித்து விடும் எண்ணத்தில் இவற்றை அழித்தார்கள் என்று சொல்கிறார்கள் .

In Australia, the settlers brought dogs with them. It’s likely the dogs also contributed to the Tasmanian tigers’ decline through direct competition and by introducing new diseases. There were reports that a distemper-like disease was killing many Tasmanian tigers right before the wild population winked out of existence.

https://untamedscience.com/biodiversity/tasmanian-tiger/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர்.

அப்படி பொய்யான தகவல்களை யுடியுப்பர் சொல்வார்கள் ஆனால் நேரே பெட்டிசம் போடலாம் முன்பு போல் இல்லை இப்பவெல்லாம் உடனே தூக்கி விடுவார்கள் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பெருமாள் said:

அப்படி பொய்யான தகவல்களை யுடியுப்பர் சொல்வார்கள் ஆனால் நேரே பெட்டிசம் போடலாம் முன்பு போல் இல்லை இப்பவெல்லாம் உடனே தூக்கி விடுவார்கள் .

இந்த திரியின் தலையங்கம் 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கினத்தை என தொடங்குகின்றது.

Quote

டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா?

இணையவன் ஐரோப்பியர்கள் வரும் முன்னே இந்த இனம் ஏறத்தாள  முற்றாக அழிந்து விட்டது என தகவல் தருகின்றார்.

6 hours ago, இணையவன் said:

ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது.

வெள்ளையர்கள் அங்கு குடியேறவில்லை. பெரிய பிரித்தானியாவின் பெரும் குற்றவாளி கைதிகளை நாடு கடத்த பயன்படுதப்பட்ட தீவுதான் அவுஸ்ரேலியா எனும் முன்னாள் சிறைச்சாலை. இது இணையத்தகவல் அல்ல.அரசியல் பாடத்தில் உள்ளது..

4 hours ago, இணையவன் said:

வெள்ளையர்கள் குடியேற ஆரம்பித்தது 1770 ற்குப் பின். 1800 அளவில்தான் சில ஆயிரக்கணக்கானவர்கள் குடியேறினர். அத்போது இந்த விலங்கு மிக அபூர்வமாகி விட்டது. சுட்டு வேட்டையாடியதால் அது அழிந்தது என்று எங்காவது உள்ளதா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இந்த திரியின் தலையங்கம் 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கினத்தை என தொடங்குகின்றது.

இணையவன் ஐரோப்பியர்கள் வரும் முன்னே இந்த இனம் ஏறத்தாள  முற்றாக அழிந்து விட்டது என தகவல் தருகின்றார்.

வெள்ளையர்கள் அங்கு குடியேறவில்லை. பெரிய பிரித்தானியாவின் பெரும் குற்றவாளி கைதிகளை நாடு கடத்த பயன்படுதப்பட்ட தீவுதான் அவுஸ்ரேலியா எனும் முன்னாள் சிறைச்சாலை. இது இணையத்தகவல் அல்ல.அரசியல் பாடத்தில் உள்ளது..

 

யுடுப்பர் பற்றிய பார்வை முன்பு போல் இல்லை அதை அவர் மாற்றி கொள்ளனும் பொய்யான தகவல் ஆகா இருந்தால் உடனே ஆப்பு கொடுக்கலாம் அதனால் தமிழ் யுடியுப்பர் இனி வருபவர்கள் இருப்பவர்கள் உண்மையே சொல்வார்கள் .

இங்கு சிலர் தங்களின் கருத்துக்கு விக்கியையும் யுடிப்பையும் ஆதாரத்துக்கு கொண்டு வரும்போது அதை பிழை என்று வாதிடுபவர்கள் அதே அவர்கள் இணைக்கும்போது சொல்லும்போது சரி என்பது என்ன நியாயம் ?

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

யுடுப்பர் பற்றிய பார்வை முன்பு போல் இல்லை அதை அவர் மாற்றி கொள்ளனும் பொய்யான தகவல் ஆகா இருந்தால் உடனே ஆப்பு கொடுக்கலாம் அதனால் தமிழ் யுடியுப்பர் இனி வருபவர்கள் இருப்பவர்கள் உண்மையே சொல்வார்கள் .

இங்கு சிலர் தங்களின் கருத்துக்கு விக்கியையும் யுடிப்பையும் ஆதாரத்துக்கு கொண்டு வரும்போது அதை பிழை என்று வாதிடுபவர்கள் அதே அவர்கள் சொல்லும்போது சரி என்பது என்ன நியாயம் ?

நீங்கள் கூறுவது போல் முன்னரைப்போல் யூ ரியூப்பில் சேட்டைகளோ பொய்யான தகவல்களையோ பகிரமுடியாது.. எனக்கு தெரிய பல யூ ரியூப் தகவல் தளங்களை தடை செய்து விட்டார்கள்.பல மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட தமிழ் தகவல் யூ ரியூப் ஊடகங்கள் உள்ளன. அவர்கள் அவ்வளவு சுலபமாக அவர்களை ஏமாற்றி தகவல் தர முடியாது என நினைக்கின்றேன். இருப்பினும் சினிமா,அரசியல்,செய்தி,சமையல்,ஊர் சுற்றுதல் போன்ற யூ ரியூப் தளங்களை ஆசாமி தளங்கள் என சொல்லலாம்.

விக்கிபிடியாவில் நானும் தகவல்களை  எழுதலாம்.
இன்றைய உலகில் தொலைக்காட்சி ஊடகங்களைப்போல் யூ ரியூப் தளங்களும் முன்னேறி விட்டன.தொலைக்காட்சி ஊடகங்களும் இப்போது யுரியூப்பில் நேரடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.எனவே யூ ரியூப்பில் வரும் அனைத்தையும் ஆசாமிகள் தளம் என ஒதுக்கிவிட முடியாது.

.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் கூறுவது போல் முன்னரைப்போல் யூ ரியூப்பில் சேட்டைகளோ பொய்யான தகவல்களையோ பகிரமுடியாது.. எனக்கு தெரிய பல யூ ரியூப் தகவல் தளங்களை தடை செய்து விட்டார்கள்.பல மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட தமிழ் தகவல் யூ ரியூப் ஊடகங்கள் உள்ளன. அவர்கள் அவ்வளவு சுலபமாக அவர்களை ஏமாற்றி தகவல் தர முடியாது என நினைக்கின்றேன். இருப்பினும் சினிமா,அரசியல்,செய்தி,சமையல்,ஊர் சுற்றுதல் போன்ற யூ ரியூப் தளங்களை ஆசாமி தளங்கள் என சொல்லலாம்.

விக்கிபிடியாவில் நானும் தகவல்களை  எழுதலாம்.
இன்றைய உலகில் தொலைக்காட்சி ஊடகங்களைப்போல் யூ ரியூப் தளங்களும் முன்னேறி விட்டன.தொலைக்காட்சி ஊடகங்களும் இப்போது யுரியூப்பில் நேரடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.எனவே யூ ரியூப்பில் வரும் அனைத்தையும் ஆசாமிகள் தளம் என ஒதுக்கிவிட முடியாது.

.

இணையம் தினம்தோறும் மாறிக்கொண்டு தன்னை புதுபுத்திகொண்டு உள்ளது  எங்களின் கற்பனைக்கு மேலாக .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.