Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அம்பாறை மாவட்டத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எமது உறவுகளுக்கான நீதி கிடைக்கும்வரை இந்தப் போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை. 138 பேரை அம்பாறை மாவட்டத்தில் இழந்து இருக்கின்றோம்.

காணாமல் போனோரின் அலுவலகத்தினை 8 மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் வேண்டாம் என்று உறுதியாக நிற்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலம் வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ்வாறு செயற்படுவதானது எமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.
இவ்வாறான அலுவலகங்களை எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று ஊக்குவிப்பதற்கான காரணம் என்ன?

கூட்டமைப்பினர் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னரெ அது கிடைத்திருக்கும். ஆனால் நீங்களோ கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்துடன் சேரந்து உழைக்கின்றீர்கள்.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.

இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையை தொடர்ந்து இலங்கை பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நாங்கள் இன்று சர்வதேசத்தை நாடி இருக்கின்றோம்.

அதற்கான காரணத்தையும் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூறி இருக்கின்றோம்.

இந்த உள்ளக பொறிமுறை விசாரணையை ஏன் விரும்பவில்லை என்ற காரணத்தையும் அங்கு தெளிவாக கூறியுள்ளோம்.

இன்று அரசாங்கத்துடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர்.

இதில் அவர்களுக்கு அரசியல் இலாபம் உண்டு. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள்.

செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் தினமும் நம்பி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம்.- என்றார்.

https://athavannews.com/2022/1295043

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

கேடு கெட்ட அரசியல் வியாபாரிகளை நாட்டை விட்டே துரத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

கேடு கெட்ட அரசியல் வியாபாரிகளை நாட்டை விட்டே துரத்துங்கள்.

போர்...உக்கிரமாக நடக்கும் போது, இந்தியாவில் இருந்து கொண்டு... 
தொலைபேசியை அனைத்து வைத்திட்டு இருந்த ஆக்கள் இவர்கள்.  
தமிழருக்காக அரசியல் செய்கிறார்களாம். வெட்கம் கெட்டவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

போர்...உக்கிரமாக நடக்கும் போது, இந்தியாவில் இருந்து கொண்டு... 
தொலைபேசியை அனைத்து வைத்திட்டு இருந்த ஆக்கள் இவர்கள்.  
தமிழருக்காக அரசியல் செய்கிறார்களாம். வெட்கம் கெட்டவர்கள். 

உதுகளை பற்றி யோசிச்சாலே தேவையில்லாத ரென்சன் தான் வரும் 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பினர் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னரெ அது கிடைத்திருக்கும். ஆனால் நீங்களோ கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்துடன் சேரந்து உழைக்கின்றீர்கள்.

 

1 hour ago, தமிழ் சிறி said:

அவர்களுக்கு அரசியல் இலாபம் உண்டு. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள்.

கிட்டத்தட்டக் காலிலை கிடக்கிறதாலை களட்டிச் சாத்தின மாதிரிக் கிடக்குது. இதுக்குப் பிறகும் கூத்தமைப்பு எந்த முகத்தோடை திரியப்போகுதோ தெரியேல்லை.

37 minutes ago, தமிழ் சிறி said:

போர்...உக்கிரமாக நடக்கும் போது, இந்தியாவில் இருந்து கொண்டு... 
தொலைபேசியை அனைத்து வைத்திட்டு இருந்த ஆக்கள் இவர்கள்.  
தமிழருக்காக அரசியல் செய்கிறார்களாம். வெட்கம் கெட்டவர்கள். 

அது ஏதோ நெற் கோளாறாலையாம் எடுக்கேல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nochchi said:

அது ஏதோ நெற் கோளாறாலையாம் எடுக்கேல்லை. 

அந்த நேரம்… முள்ளிவாய்க்காலில் இருந்து பலர்,
தமிழகத்தில் உள்ள சிலரிடம் தொடர்பில் இருந்தார்கள்.
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான்… நெற்கோளாறு வந்திட்டுதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள்

கூட்டமைப்பு இதுவரை செய்த உருப்படியான வேலை தான் என்ன?

யாராவது விடை தெரிந்தால் பட்டியலிடுங்கள் பிளீஸ்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கூட்டமைப்பு இதுவரை செய்த உருப்படியான வேலை தான் என்ன?

யாராவது விடை தெரிந்தால் பட்டியலிடுங்கள் பிளீஸ்.

இவர் தேவையில்லாத கேள்வி கேக்கிறார். மைக்கை  அங்க குடுங்க......🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மக்கள் நிலைதான் எங்கள் நிலையும் பிரச்சினையை தீர்த்து வைத்தால் இவர்களால் அரசியல் செய்யமுடியாது இவர்களால்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் தேவையில்லை என்று கூறும்போது வேறு திட்டம் ஏதும் வைத்திருக்கின்றனரா? 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது (திட்டம்) strategy  என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

அரசியல்வாதிகள் தேவையில்லை என்று கூறும்போது வேறு திட்டம் ஏதும் வைத்திருக்கின்றனரா? 

இவர்களின் திட்டம் என்ன? சும்மா இருந்த இளைஞர்களை உசுப்பி, ஆயுதம் ஏந்த வைத்து, பயங்கரவாதிகள் முத்திரை குத்தி, அழிய வைத்து, உறவுகளை தெருவில் அலையவைத்து, வெளிநாட்டு தூதுவர்களோடு மூடிய கதவுக்குள்ளும், அரசோடு பின்கதவாலும் புகுந்து விளையாடுவதா? அவர்கள் அலைகிறார்கள், இவர்கள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிகிறார்கள். அரசியல்வாதிகள் இந்த ஏதிலிகள் விடயத்தில் என்ன கரிசனை காட்டினார்கள்? என்ன ஆறுதல் படுத்தினார்கள்? ஒருநாளாவது அவர்களோடு போராட்டத்தில் கலந்து கொண்டார்களா?  இங்கிலாந்த்துப்பிரதமர் வந்தபோது ஏன் பின்கதவால் ஓடினார்கள்? அந்த மக்களின் பிரதிநிதிகள் அவர்களோடு இருந்து அவர்களின் துயரங்களை விளக்கியிருக்க வேண்டுமோ இல்லையோ? கேள்வி கேட்கும் நீங்களாவது ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? அவர்கள் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா எனக் கேட்டாவது கூறுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:

இவர்களின் திட்டம் என்ன? சும்மா இருந்த இளைஞர்களை உசுப்பி, ஆயுதம் ஏந்த வைத்து, பயங்கரவாதிகள் முத்திரை குத்தி, அழிய வைத்து, உறவுகளை தெருவில் அலையவைத்து, வெளிநாட்டு தூதுவர்களோடு மூடிய கதவுக்குள்ளும், அரசோடு பின்கதவாலும் புகுந்து விளையாடுவதா? அவர்கள் அலைகிறார்கள், இவர்கள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிகிறார்கள். அரசியல்வாதிகள் இந்த ஏதிலிகள் விடயத்தில் என்ன கரிசனை காட்டினார்கள்? என்ன ஆறுதல் படுத்தினார்கள்? ஒருநாளாவது அவர்களோடு போராட்டத்தில் கலந்து கொண்டார்களா?  இங்கிலாந்த்துப்பிரதமர் வந்தபோது ஏன் பின்கதவால் ஓடினார்கள்? அந்த மக்களின் பிரதிநிதிகள் அவர்களோடு இருந்து அவர்களின் துயரங்களை விளக்கியிருக்க வேண்டுமோ இல்லையோ? கேள்வி கேட்கும் நீங்களாவது ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? அவர்கள் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா எனக் கேட்டாவது கூறுங்கள்!

பெருமாள்,

இது வேண்டாம் என்று கூறினால் எது வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். அதைத்தான் கேட்டேன். இதில் தவறு என்ன இருக்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது-

இது அவர்களின் வேணவா. கடந்த  பத்து வருடங்கள் பாத்து எதிர் பாத்து ஏமாந்து விட்டார்கள், அவர்களுக்கு ஒரு திட்டம் கண்டிப்பாக இருக்கும், இருந்தாலும் இவர்களில் நம்பிக்கை வைப்பதற்கு இனி ஏதுமில்லை  இவர்களிடம். தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ளட்டும்! ஆமா... பெருமாளில அப்படியென்ன காதல் உங்களுக்கு?

13 minutes ago, Kapithan said:

பெருமாள்,

இது வேண்டாம் என்று கூறினால் எது வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். அதைத்தான் கேட்டேன். இதில் தவறு என்ன இருக்கிறது? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

பெருமாள்,

2 minutes ago, satan said:

ஆமா... பெருமாளில அப்படியென்ன காதல் உங்களுக்கு?

 

ஹரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதார் வாயில் மண்ணு என பொன்னியின் செல்வனின் கல்கி எழுதினார்.

இது என்ன நம்ம கற்பஸ்

பெருமாளும், சாத்தானும் ஒன்று அதை அறியாதார் வாயில பன்னு என்கிறார்😆.

# சும்மா தாமாசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

இது வேண்டாம் என்று கூறினால் எது வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். அதைத்தான் கேட்டேன். இதில் தவறு என்ன இருக்கிறது? 

கூத்தமைப்பு இதுவரை எதுவுமே செய்யவில்லை என்கிறோம். 

Marudhamalai Vadivelu GIF - Marudhamalai Vadivelu Surprised - Discover &  Share GIFs

நீங்கள் இவர்கள் போனால் அடுத்தது யார் என்கிறீர்கள்.இவர்கள் வழி விட்டால் இன்னொரு வழி வரும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 

இது என்ன நம்ம கற்பஸ்

பெருமாளும், சாத்தானும் ஒன்று அதை அறியாதார் வாயில பன்னு என்கிறார்😆.

# சும்மா தாமாசு

இப்போ பெருமாள் துயிலெழுப்பி வந்து, என்ன சொல்கிறார் என்று பொறுத்திருந்து பாப்போம்! 

என்னது ....  நம்ம கற்பஸா?அப்போ... கபித்தானும் கோஷானும் ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கூத்தமைப்பு இதுவரை எதுவுமே செய்யவில்லை என்கிறோம். 

Marudhamalai Vadivelu GIF - Marudhamalai Vadivelu Surprised - Discover &  Share GIFs

நீங்கள் இவர்கள் போனால் அடுத்தது யார் என்கிறீர்கள்.இவர்கள் வழி விட்டால் இன்னொரு வழி வரும்.

அதுதான்  கேட்டேன்  உறவுகளின் strategy  என்னவென்று? 

இது  சாதாரண விடயம் அல்லவே. உடை மாற்றுவது போல மாற்றுவதற்கு? 

அரசியல்வாதிகளைத் தவிர்த்தல் எனும் முடிவு சாதாரண முடிவு அல்ல. எனவே வேறு என்ன தெரிவை அல்லது திட்டத்தைக் கொண்டுள்ளார்கள்? 

3 hours ago, satan said:

இது அவர்களின் வேணவா. கடந்த  பத்து வருடங்கள் பாத்து எதிர் பாத்து ஏமாந்து விட்டார்கள், அவர்களுக்கு ஒரு திட்டம் கண்டிப்பாக இருக்கும், இருந்தாலும் இவர்களில் நம்பிக்கை வைப்பதற்கு இனி ஏதுமில்லை  இவர்களிடம். தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ளட்டும்! ஆமா... பெருமாளில அப்படியென்ன காதல் உங்களுக்கு?

 

காதல், காதல், காதல்....

சாத்தான் உணர்த்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல, காதல் அல்ல, காதல் அல்...ல.....

அதயு.....ம் தாண்டிப் புனிதமானது. 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

காதல், காதல், காதல்....

சாத்தான் உணர்த்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல, காதல் அல்ல, காதல் அல்...ல.....

அதயு.....ம் தாண்டிப் புனிதமானது. 

😉

தெய்வீகக்காதல் எண்டு சொல்லுங்கோ! நான் பெருமாள் வந்து என்ன சொல்லப்போறார் என்றுதான் ஆவலோடு காத்திருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தெய்வீகக்காதல் எண்டு சொல்லுங்கோ! நான் பெருமாள் வந்து என்ன சொல்லப்போறார் என்றுதான் ஆவலோடு காத்திருக்கிறன்.

ஆளுக்கு ஒரு @பெருமாள்போட்டு கேளுங்கோ அப்பதான் கண்ணில் படும்😆.

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.