Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அம்பாறை மாவட்டத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எமது உறவுகளுக்கான நீதி கிடைக்கும்வரை இந்தப் போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை. 138 பேரை அம்பாறை மாவட்டத்தில் இழந்து இருக்கின்றோம்.

காணாமல் போனோரின் அலுவலகத்தினை 8 மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் வேண்டாம் என்று உறுதியாக நிற்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலம் வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ்வாறு செயற்படுவதானது எமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.
இவ்வாறான அலுவலகங்களை எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று ஊக்குவிப்பதற்கான காரணம் என்ன?

கூட்டமைப்பினர் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னரெ அது கிடைத்திருக்கும். ஆனால் நீங்களோ கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்துடன் சேரந்து உழைக்கின்றீர்கள்.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.

இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையை தொடர்ந்து இலங்கை பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நாங்கள் இன்று சர்வதேசத்தை நாடி இருக்கின்றோம்.

அதற்கான காரணத்தையும் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூறி இருக்கின்றோம்.

இந்த உள்ளக பொறிமுறை விசாரணையை ஏன் விரும்பவில்லை என்ற காரணத்தையும் அங்கு தெளிவாக கூறியுள்ளோம்.

இன்று அரசாங்கத்துடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர்.

இதில் அவர்களுக்கு அரசியல் இலாபம் உண்டு. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள்.

செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் தினமும் நம்பி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம்.- என்றார்.

https://athavannews.com/2022/1295043

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

கேடு கெட்ட அரசியல் வியாபாரிகளை நாட்டை விட்டே துரத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

கேடு கெட்ட அரசியல் வியாபாரிகளை நாட்டை விட்டே துரத்துங்கள்.

போர்...உக்கிரமாக நடக்கும் போது, இந்தியாவில் இருந்து கொண்டு... 
தொலைபேசியை அனைத்து வைத்திட்டு இருந்த ஆக்கள் இவர்கள்.  
தமிழருக்காக அரசியல் செய்கிறார்களாம். வெட்கம் கெட்டவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

போர்...உக்கிரமாக நடக்கும் போது, இந்தியாவில் இருந்து கொண்டு... 
தொலைபேசியை அனைத்து வைத்திட்டு இருந்த ஆக்கள் இவர்கள்.  
தமிழருக்காக அரசியல் செய்கிறார்களாம். வெட்கம் கெட்டவர்கள். 

உதுகளை பற்றி யோசிச்சாலே தேவையில்லாத ரென்சன் தான் வரும் 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பினர் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னரெ அது கிடைத்திருக்கும். ஆனால் நீங்களோ கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்துடன் சேரந்து உழைக்கின்றீர்கள்.

 

1 hour ago, தமிழ் சிறி said:

அவர்களுக்கு அரசியல் இலாபம் உண்டு. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள்.

கிட்டத்தட்டக் காலிலை கிடக்கிறதாலை களட்டிச் சாத்தின மாதிரிக் கிடக்குது. இதுக்குப் பிறகும் கூத்தமைப்பு எந்த முகத்தோடை திரியப்போகுதோ தெரியேல்லை.

37 minutes ago, தமிழ் சிறி said:

போர்...உக்கிரமாக நடக்கும் போது, இந்தியாவில் இருந்து கொண்டு... 
தொலைபேசியை அனைத்து வைத்திட்டு இருந்த ஆக்கள் இவர்கள்.  
தமிழருக்காக அரசியல் செய்கிறார்களாம். வெட்கம் கெட்டவர்கள். 

அது ஏதோ நெற் கோளாறாலையாம் எடுக்கேல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nochchi said:

அது ஏதோ நெற் கோளாறாலையாம் எடுக்கேல்லை. 

அந்த நேரம்… முள்ளிவாய்க்காலில் இருந்து பலர்,
தமிழகத்தில் உள்ள சிலரிடம் தொடர்பில் இருந்தார்கள்.
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான்… நெற்கோளாறு வந்திட்டுதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள்

கூட்டமைப்பு இதுவரை செய்த உருப்படியான வேலை தான் என்ன?

யாராவது விடை தெரிந்தால் பட்டியலிடுங்கள் பிளீஸ்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கூட்டமைப்பு இதுவரை செய்த உருப்படியான வேலை தான் என்ன?

யாராவது விடை தெரிந்தால் பட்டியலிடுங்கள் பிளீஸ்.

இவர் தேவையில்லாத கேள்வி கேக்கிறார். மைக்கை  அங்க குடுங்க......🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மக்கள் நிலைதான் எங்கள் நிலையும் பிரச்சினையை தீர்த்து வைத்தால் இவர்களால் அரசியல் செய்யமுடியாது இவர்களால்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் தேவையில்லை என்று கூறும்போது வேறு திட்டம் ஏதும் வைத்திருக்கின்றனரா? 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது (திட்டம்) strategy  என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

அரசியல்வாதிகள் தேவையில்லை என்று கூறும்போது வேறு திட்டம் ஏதும் வைத்திருக்கின்றனரா? 

இவர்களின் திட்டம் என்ன? சும்மா இருந்த இளைஞர்களை உசுப்பி, ஆயுதம் ஏந்த வைத்து, பயங்கரவாதிகள் முத்திரை குத்தி, அழிய வைத்து, உறவுகளை தெருவில் அலையவைத்து, வெளிநாட்டு தூதுவர்களோடு மூடிய கதவுக்குள்ளும், அரசோடு பின்கதவாலும் புகுந்து விளையாடுவதா? அவர்கள் அலைகிறார்கள், இவர்கள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிகிறார்கள். அரசியல்வாதிகள் இந்த ஏதிலிகள் விடயத்தில் என்ன கரிசனை காட்டினார்கள்? என்ன ஆறுதல் படுத்தினார்கள்? ஒருநாளாவது அவர்களோடு போராட்டத்தில் கலந்து கொண்டார்களா?  இங்கிலாந்த்துப்பிரதமர் வந்தபோது ஏன் பின்கதவால் ஓடினார்கள்? அந்த மக்களின் பிரதிநிதிகள் அவர்களோடு இருந்து அவர்களின் துயரங்களை விளக்கியிருக்க வேண்டுமோ இல்லையோ? கேள்வி கேட்கும் நீங்களாவது ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? அவர்கள் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா எனக் கேட்டாவது கூறுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:

இவர்களின் திட்டம் என்ன? சும்மா இருந்த இளைஞர்களை உசுப்பி, ஆயுதம் ஏந்த வைத்து, பயங்கரவாதிகள் முத்திரை குத்தி, அழிய வைத்து, உறவுகளை தெருவில் அலையவைத்து, வெளிநாட்டு தூதுவர்களோடு மூடிய கதவுக்குள்ளும், அரசோடு பின்கதவாலும் புகுந்து விளையாடுவதா? அவர்கள் அலைகிறார்கள், இவர்கள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிகிறார்கள். அரசியல்வாதிகள் இந்த ஏதிலிகள் விடயத்தில் என்ன கரிசனை காட்டினார்கள்? என்ன ஆறுதல் படுத்தினார்கள்? ஒருநாளாவது அவர்களோடு போராட்டத்தில் கலந்து கொண்டார்களா?  இங்கிலாந்த்துப்பிரதமர் வந்தபோது ஏன் பின்கதவால் ஓடினார்கள்? அந்த மக்களின் பிரதிநிதிகள் அவர்களோடு இருந்து அவர்களின் துயரங்களை விளக்கியிருக்க வேண்டுமோ இல்லையோ? கேள்வி கேட்கும் நீங்களாவது ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? அவர்கள் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா எனக் கேட்டாவது கூறுங்கள்!

பெருமாள்,

இது வேண்டாம் என்று கூறினால் எது வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். அதைத்தான் கேட்டேன். இதில் தவறு என்ன இருக்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது-

இது அவர்களின் வேணவா. கடந்த  பத்து வருடங்கள் பாத்து எதிர் பாத்து ஏமாந்து விட்டார்கள், அவர்களுக்கு ஒரு திட்டம் கண்டிப்பாக இருக்கும், இருந்தாலும் இவர்களில் நம்பிக்கை வைப்பதற்கு இனி ஏதுமில்லை  இவர்களிடம். தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ளட்டும்! ஆமா... பெருமாளில அப்படியென்ன காதல் உங்களுக்கு?

13 minutes ago, Kapithan said:

பெருமாள்,

இது வேண்டாம் என்று கூறினால் எது வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். அதைத்தான் கேட்டேன். இதில் தவறு என்ன இருக்கிறது? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

பெருமாள்,

2 minutes ago, satan said:

ஆமா... பெருமாளில அப்படியென்ன காதல் உங்களுக்கு?

 

ஹரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதார் வாயில் மண்ணு என பொன்னியின் செல்வனின் கல்கி எழுதினார்.

இது என்ன நம்ம கற்பஸ்

பெருமாளும், சாத்தானும் ஒன்று அதை அறியாதார் வாயில பன்னு என்கிறார்😆.

# சும்மா தாமாசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

இது வேண்டாம் என்று கூறினால் எது வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். அதைத்தான் கேட்டேன். இதில் தவறு என்ன இருக்கிறது? 

கூத்தமைப்பு இதுவரை எதுவுமே செய்யவில்லை என்கிறோம். 

Marudhamalai Vadivelu GIF - Marudhamalai Vadivelu Surprised - Discover &  Share GIFs

நீங்கள் இவர்கள் போனால் அடுத்தது யார் என்கிறீர்கள்.இவர்கள் வழி விட்டால் இன்னொரு வழி வரும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 

இது என்ன நம்ம கற்பஸ்

பெருமாளும், சாத்தானும் ஒன்று அதை அறியாதார் வாயில பன்னு என்கிறார்😆.

# சும்மா தாமாசு

இப்போ பெருமாள் துயிலெழுப்பி வந்து, என்ன சொல்கிறார் என்று பொறுத்திருந்து பாப்போம்! 

என்னது ....  நம்ம கற்பஸா?அப்போ... கபித்தானும் கோஷானும் ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கூத்தமைப்பு இதுவரை எதுவுமே செய்யவில்லை என்கிறோம். 

Marudhamalai Vadivelu GIF - Marudhamalai Vadivelu Surprised - Discover &  Share GIFs

நீங்கள் இவர்கள் போனால் அடுத்தது யார் என்கிறீர்கள்.இவர்கள் வழி விட்டால் இன்னொரு வழி வரும்.

அதுதான்  கேட்டேன்  உறவுகளின் strategy  என்னவென்று? 

இது  சாதாரண விடயம் அல்லவே. உடை மாற்றுவது போல மாற்றுவதற்கு? 

அரசியல்வாதிகளைத் தவிர்த்தல் எனும் முடிவு சாதாரண முடிவு அல்ல. எனவே வேறு என்ன தெரிவை அல்லது திட்டத்தைக் கொண்டுள்ளார்கள்? 

3 hours ago, satan said:

இது அவர்களின் வேணவா. கடந்த  பத்து வருடங்கள் பாத்து எதிர் பாத்து ஏமாந்து விட்டார்கள், அவர்களுக்கு ஒரு திட்டம் கண்டிப்பாக இருக்கும், இருந்தாலும் இவர்களில் நம்பிக்கை வைப்பதற்கு இனி ஏதுமில்லை  இவர்களிடம். தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ளட்டும்! ஆமா... பெருமாளில அப்படியென்ன காதல் உங்களுக்கு?

 

காதல், காதல், காதல்....

சாத்தான் உணர்த்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல, காதல் அல்ல, காதல் அல்...ல.....

அதயு.....ம் தாண்டிப் புனிதமானது. 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

காதல், காதல், காதல்....

சாத்தான் உணர்த்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல, காதல் அல்ல, காதல் அல்...ல.....

அதயு.....ம் தாண்டிப் புனிதமானது. 

😉

தெய்வீகக்காதல் எண்டு சொல்லுங்கோ! நான் பெருமாள் வந்து என்ன சொல்லப்போறார் என்றுதான் ஆவலோடு காத்திருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தெய்வீகக்காதல் எண்டு சொல்லுங்கோ! நான் பெருமாள் வந்து என்ன சொல்லப்போறார் என்றுதான் ஆவலோடு காத்திருக்கிறன்.

ஆளுக்கு ஒரு @பெருமாள்போட்டு கேளுங்கோ அப்பதான் கண்ணில் படும்😆.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.