Jump to content

ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசு!

ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு!

ரஷ்யாவில்... 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான, குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புடின் வெளியிட்டுள்ள ஆணையில், ‘ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் 1 மில்லியன் ரூபிள் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும்.

தகுதி பெற்ற பெண்களுக்கு அவர்களின் 10ஆவது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் இவ்விருது கிடைக்கும். போர், தீவிரவாத செயல், உடல் நலக்குறைவு, விபத்து சூழல் காரணமாக ஒரு குழந்தையை இழந்தாலும் அவர்கள் விருதுக்கு தகுதி பெறுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவில் பிறப்பு வீதம் குறைந்து வருவதாலும், கொரோனா உயிரிழப்பு- உக்ரைனுடனான போர் போன்ற காரணங்களால் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியில் ரஷ்யாவுக்கு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த உயிரிழப்பை ஈடுசெய்ய ரஷ்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ரஷ்ய பெண்களுக்கு பெரும் தொகையுடன் ‘மதர் ஹீரோயின்’ என்ற கவுர பட்டம் சோவியத் ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்டத்தினை சுமார் 4 லட்சம் தாய்மார்கள் அப்போது பெற்றனர். 1992ஆம் ஆண்டு சோவித் ஒன்றியம் வீழ்ந்த பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.

https://athavannews.com/2022/1295309

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு!
  • கருத்துக்கள உறவுகள்

sheperd putin | Vladimir Putin | Know Your Meme

மாண்புமிகு  பெரு மதிப்பிற்குரிய அதி உத்தம தன் இன கரிசனையாளர் புட்டின் அவர்களின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் சகல இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியில் மக்கள் செல்வமும் பல்கி பெருக வாழ்த்துகின்றேன்.

அதிலும் ரஷ்ய மக்களுக்கு என விளித்து கூறியது இன்னும் வரவேற்க தக்கதே. இல்லையேல் பிள்ளை பெறுவதில் ஜாம்பவன்களான அரபு உலகை சார்ந்தோர்  அகதி எனும் பெயரில் அடாத்தாக உட்புகுந்து ஏட்டிக்கு போட்டியாக சந்ததியை பெருக்கி விடுவர்.

வாழ்க மாண்புமிகு புட்டின் ,வளர்க உங்கள் கொள்கை, உயர்க உங்கள் நாமம். 💪🏼

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதிலும் ரஷ்ய மக்களுக்கு என விளித்து கூறியது இன்னும் வரவேற்க தக்கதே. இல்லையேல் பிள்ளை பெறுவதில் ஜாம்பவன்களான அரபு உலகை சார்ந்தோர்  அகதி எனும் பெயரில் அடாத்தாக உட்புகுந்து ஏட்டிக்கு போட்டியாக சந்ததியை பெருக்கி விடுவர்.

வாழ்க மாண்புமிகு புட்டின் ,வளர்க உங்கள் கொள்கை, உயர்க உங்கள் நாமம். 💪🏼

GIFs for Twitter — The 4C Summit

அதி உத்தம  ஜனாதிபதி புட்டின் அவர்களின்.. தூர நோக்கு பார்வையை, 
பாராட்ட வார்த்தைகளே இல்லை 💐.  அதிலும்... Cow Boy அமெரிக்கன் போல்... 
கண்டவன், நிண்டவன், வாறவன், போறவன்.. எல்லாருக்கும் 
அமெரிக்கன் குடியுரிமை  குடுத்து... சனத் தொகையை உயர்த்திக் காட்டுற... 
ஊத்தை வேலையை... மாண்புமிகு அதி உத்தமர் புட்டின் அவர்கள், செய்யவில்லை. 👍

ஒறிஜினல்  ரஷ்யனுக்கே அந்தப் பெருமையை கொடுப்பதன் மூலம் 
தன் இனத்தையும், நாட்டையும்  எவ்வளவு நேசிக்கின்றார் என்பது புரியும். ❤️

அதி உத்தம புட்டின் அவர்களின் கொள்கைகளை... யாழ்ப்பாண பாடசாலைகளில் 
ஒரு பாடமாக கற்பித்து,  மாணவர்களுக்கு... நாட்டுப் பற்றையும், இனப் பற்றையும்... 
ஊட்டி, வளர்க்க வேண்டும். 🥰

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

GIFs for Twitter — The 4C Summit

அதி உத்தம  ஜனாதிபதி புட்டின் அவர்களின்.. தூர நோக்கு பார்வையை, 
பாராட்ட வார்த்தைகளே இல்லை 💐.  அதிலும்... Cow Boy அமெரிக்கன் போல்... 
கண்டவன், நிண்டவன், வாறவன், போறவன்.. எல்லாருக்கும் 
அமெரிக்கன் குடியுரிமை  குடுத்து... சனத் தொகையை உயர்த்திக் காட்டுற... 
ஊத்தை வேலையை... மாண்புமிகு அதி உத்தமர் புட்டின் அவர்கள், செய்யவில்லை. 👍

ஒறிஜினல்  ரஷ்யனுக்கே அந்தப் பெருமையை கொடுப்பதன் மூலம் 
தன் இனத்தையும், நாட்டையும்  எவ்வளவு நேசிக்கின்றார் என்பது புரியும். ❤️

அதி உத்தம புட்டின் அவர்களின் கொள்கைகளை... யாழ்ப்பாண பாடசாலைகளில் 
ஒரு பாடமாக கற்பித்து,  மாணவர்களுக்கு... நாட்டுப் பற்றையும், இனப் பற்றையும்... 
ஊட்டி, வளர்க்க வேண்டும். 🥰

15 இலிருந்து 64 வயது வரையான வயதெல்லை உடையவர்களை உழைக்கும் சனத்தொகை என்பார்கள்.

இந்த எல்லைக்குள் இல்லாத மக்களை தங்கி வாழ்வோர் என அழைப்பார்கள், 60/40 எனும் விகிதத்தில் இருப்பது நல்லது என்பதாக நினைவில் உள்ளது ( தரவு மிக சரியாக நினைவில் இல்லை).

தங்கி வாழ்வோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பொருளாதாரம் அழுத்தத்திற்குள்ளாகும்.

இதனால்தான் அபிவிருத்தியடைந்த நாடுகள் வெளிநாடுகளிலிருந்து உழைக்கும் மக்களை குடிவரவின் மூலம் பெறுகிறார்கள்.

ஒரு குழந்தை உழைக்கும் வய்தெல்லையினை அடைவதற்கான மொத்த செலவு அவுஸ்ரேலியாவில் 400000 (2010 தரவு, தரவு சரியாக நினைவில் இல்லை) டொலராகவுள்ளது, இதற்கு பதில் வெளிநாட்டிலிருந்து உழைக்கும் மக்களை பெறுவது இலாபம்.

தற்போது அவுஸ்ரேலியாவில் உழைக்கும் சனத்தொகையினை விட தங்கிவாழ்வோரின் சனத்தொகை அதிகமாகவுள்ளது, அவுஸ்ரேலிய பொருளாதாரம் முன்னேற வேண்டுமானால் உழைக்கும் சனத்தொகையினரினை வெளிநாடுகளிலிருந்து பெறவேண்டும், கடந்த காலங்களில் அரசியலில் வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கெதிரான பழமைவாதக்கட்சிகளின் அடிப்படை வாதம் நீண்டகால அடிப்படையில் அவுஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு முட்டுகட்டையாக உள்ளது.

அவுஸ்ரேலியாவும் இரஸ்சியாவும் அடிப்படையில் மிக குறைவான முன்னெடுப்பில் மீளப்பயன்படுத்தக்கூடிய சக்தியினை பயன்படுத்தும் நாடுகளாகவுள்ளன (மின் கார்கள்).

இதற்குக்காரணம் அரசியல் தலைவர்களின் தொலை நோக்கற்ற சிந்தனை மட்டுமல்ல, தெளிவற்ற மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தக்கூடிய தலமையின்மையும் காரணம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, vasee said:

15 இலிருந்து 64 வயது வரையான வயதெல்லை உடையவர்களை உழைக்கும் சனத்தொகை என்பார்கள்.

இந்த எல்லைக்குள் இல்லாத மக்களை தங்கி வாழ்வோர் என அழைப்பார்கள், 60/40 எனும் விகிதத்தில் இருப்பது நல்லது என்பதாக நினைவில் உள்ளது ( தரவு மிக சரியாக நினைவில் இல்லை).

தங்கி வாழ்வோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பொருளாதாரம் அழுத்தத்திற்குள்ளாகும்.

இதனால்தான் அபிவிருத்தியடைந்த நாடுகள் வெளிநாடுகளிலிருந்து உழைக்கும் மக்களை குடிவரவின் மூலம் பெறுகிறார்கள்.

ஒரு குழந்தை உழைக்கும் வய்தெல்லையினை அடைவதற்கான மொத்த செலவு அவுஸ்ரேலியாவில் 400000 (2010 தரவு, தரவு சரியாக நினைவில் இல்லை) டொலராகவுள்ளது, இதற்கு பதில் வெளிநாட்டிலிருந்து உழைக்கும் மக்களை பெறுவது இலாபம்.

தற்போது அவுஸ்ரேலியாவில் உழைக்கும் சனத்தொகையினை விட தங்கிவாழ்வோரின் சனத்தொகை அதிகமாகவுள்ளது, அவுஸ்ரேலிய பொருளாதாரம் முன்னேற வேண்டுமானால் உழைக்கும் சனத்தொகையினரினை வெளிநாடுகளிலிருந்து பெறவேண்டும், கடந்த காலங்களில் அரசியலில் வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கெதிரான பழமைவாதக்கட்சிகளின் அடிப்படை வாதம் நீண்டகால அடிப்படையில் அவுஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு முட்டுகட்டையாக உள்ளது.

அவுஸ்ரேலியாவும் இரஸ்சியாவும் அடிப்படையில் மிக குறைவான முன்னெடுப்பில் மீளப்பயன்படுத்தக்கூடிய சக்தியினை பயன்படுத்தும் நாடுகளாகவுள்ளன (மின் கார்கள்).

இதற்குக்காரணம் அரசியல் தலைவர்களின் தொலை நோக்கற்ற சிந்தனை மட்டுமல்ல, தெளிவற்ற மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தக்கூடிய தலமையின்மையும் காரணம்.

மத்திய கிலக்கு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ, ஆட்சிக் கலைப்பு, கிளர்ச்சி நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளின்  இந்த உழைக்கும் வலுவுடையோர் தேவை மிகவும் முக்கியமான காரணியாக இருந்தது /இருக்கிறது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

sheperd putin | Vladimir Putin | Know Your Meme

மாண்புமிகு  பெரு மதிப்பிற்குரிய அதி உத்தம தன் இன கரிசனையாளர் புட்டின் அவர்களின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் சகல இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியில் மக்கள் செல்வமும் பல்கி பெருக வாழ்த்துகின்றேன்.

அதிலும் ரஷ்ய மக்களுக்கு என விளித்து கூறியது இன்னும் வரவேற்க தக்கதே. இல்லையேல் பிள்ளை பெறுவதில் ஜாம்பவன்களான அரபு உலகை சார்ந்தோர்  அகதி எனும் பெயரில் அடாத்தாக உட்புகுந்து ஏட்டிக்கு போட்டியாக சந்ததியை பெருக்கி விடுவர்.

வாழ்க மாண்புமிகு புட்டின் ,வளர்க உங்கள் கொள்கை, உயர்க உங்கள் நாமம். 💪🏼

👇👆

அண்ணைமார் இது சரியில்லை.

நீங்களே எல்லா ஜோக்கையும் அடித்து - புட்ஸ்சை இந்த வாரு வாரிவிட்டால் பிறகு நான் என்னத்தை வைத்து கிண்டலாய் எழுதுவது🤣.

 

6 hours ago, தமிழ் சிறி said:

GIFs for Twitter — The 4C Summit

அதி உத்தம  ஜனாதிபதி புட்டின் அவர்களின்.. தூர நோக்கு பார்வையை, 
பாராட்ட வார்த்தைகளே இல்லை 💐.  அதிலும்... Cow Boy அமெரிக்கன் போல்... 
கண்டவன், நிண்டவன், வாறவன், போறவன்.. எல்லாருக்கும் 
அமெரிக்கன் குடியுரிமை  குடுத்து... சனத் தொகையை உயர்த்திக் காட்டுற... 
ஊத்தை வேலையை... மாண்புமிகு அதி உத்தமர் புட்டின் அவர்கள், செய்யவில்லை. 👍

ஒறிஜினல்  ரஷ்யனுக்கே அந்தப் பெருமையை கொடுப்பதன் மூலம் 
தன் இனத்தையும், நாட்டையும்  எவ்வளவு நேசிக்கின்றார் என்பது புரியும். ❤️

அதி உத்தம புட்டின் அவர்களின் கொள்கைகளை... யாழ்ப்பாண பாடசாலைகளில் 
ஒரு பாடமாக கற்பித்து,  மாணவர்களுக்கு... நாட்டுப் பற்றையும், இனப் பற்றையும்... 
ஊட்டி, வளர்க்க வேண்டும். 🥰

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

மத்திய கிலக்கு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ, ஆட்சிக் கலைப்பு, கிளர்ச்சி நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளின்  இந்த உழைக்கும் வலுவுடையோர் தேவை மிகவும் முக்கியமான காரணியாக இருந்தது /இருக்கிறது.

 

 

மேற்கு நாடுகளின் ஒவ்வொரு  இராணுவ நடவடிக்கையிலும் அரசியல் பொருளாதார நன்மை அடிப்படையிலேயே மேற்கொண்டார்கள், போருக்கு தேவையான பொருளாதார பலத்தினை வழங்க உழைக்கும் குடியேறிகளும் காரணம்தான் எனும் உங்கள் கூற்றினை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியில் ரஷ்யாவுக்கு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த உயிரிழப்பை ஈடுசெய்ய ரஷ்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ரஷ்ய பெண்களுக்கு பெரும் தொகையுடன் ‘மதர் ஹீரோயின்’ என்ற கவுர பட்டம் சோவியத் ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்டத்தினை சுமார் 4 லட்சம் தாய்மார்கள் அப்போது பெற்றனர். 1992ஆம் ஆண்டு சோவித் ஒன்றியம் வீழ்ந்த பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது இத்திட்டத்தினை புதின் ஏன் அறிவித்தார்? ரஷ்யா படைகள் அதிகம் இறந்து விட்டார்களா?   அப்படியானால் யார் அவர்களை கொன்றார்கள்? மேலும் இத்திட்டம் வெற்றி அளிக்காது. ஏனெனில் ஸ்டாலின் காலத்தில் பரிசு  கொடுக்கமாலே  10 பிள்ளைகள் பெறுவார்கள்   இன்று பணம் /பரிசு கொடுத்தாலும் ஓன்றுஅல்லது இரண்டு மட்டுமே பெறுவார்கள்    அன்றைய காலத்தில் கருத்தடை மாத்திரைகள் இல்லை இன்று நிறையவே உண்டு”   அடுத்த பிரச்சனை ஆண்கள் எல்லாம் போரில் இறக்கிறார்கள்.   பெண்கள் தனியாக ஆண்கள் இன்றி பிள்ளைப்பெறமுடியுமா? முடியாது இல்லையா?. எனவே… கௌரவ மேன்மைமிகுந்த தரமிஸ்டர்  .........புதின் அவர்கள் போரை எவ்வாறு தொடங்கினாரோ அவ்வண்ணம்  போரை முடித்து வைக்கவும். உங்கள் நாட்டுக்கு மக்கள் தேவை என்றால் இலங்கை தமிழர்களை குடியோற்றலாம். 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

இப்போது இத்திட்டத்தினை புதின் ஏன் அறிவித்தார்? ரஷ்யா படைகள் அதிகம் இறந்து விட்டார்களா?   அப்படியானால் யார் அவர்களை கொன்றார்கள்? மேலும் இத்திட்டம் வெற்றி அளிக்காது. ஏனெனில் ஸ்டாலின் காலத்தில் பரிசு  கொடுக்கமாலே  10 பிள்ளைகள் பெறுவார்கள்   இன்று பணம் /பரிசு கொடுத்தாலும் ஓன்றுஅல்லது இரண்டு மட்டுமே பெறுவார்கள்    அன்றைய காலத்தில் கருத்தடை மாத்திரைகள் இல்லை இன்று நிறையவே உண்டு”   அடுத்த பிரச்சனை ஆண்கள் எல்லாம் போரில் இறக்கிறார்கள்.   பெண்கள் தனியாக ஆண்கள் இன்றி பிள்ளைப்பெறமுடியுமா? முடியாது இல்லையா?. எனவே… கௌரவ மேன்மைமிகுந்த தரமிஸ்டர்  .........புதின் அவர்கள் போரை எவ்வாறு தொடங்கினாரோ அவ்வண்ணம்  போரை முடித்து வைக்கவும். உங்கள் நாட்டுக்கு மக்கள் தேவை என்றால் இலங்கை தமிழர்களை குடியோற்றலாம். 🤣🤣

இரஸ்சியா தற்போதய உலக பொருளாதார தடைக்கு பின்னரே சில தமது பொருளாதாரத்தினை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள், தொழில்னுட்பதுறை, மீழ உருவாக்கும் சக்தி போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாகக்கூறுகிறார்கள் அதன் நீட்சியாக எதிர்கால பொருளாதார நோக்கில் இத்திட்டத்தினை அறிவித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

புதின் அவர்கள் போரை எவ்வாறு தொடங்கினாரோ அவ்வண்ணம்  போரை முடித்து வைக்கவும். உங்கள் நாட்டுக்கு மக்கள் தேவை என்றால் இலங்கை தமிழர்களை குடியோற்றலாம். 🤣🤣

புதினுக்கு நன்றாக தெரியும் இலங்கை தமிழர்கள் போன்று தன் மீதும், ரஷ்யா மீதும் பாசம் கொண்டவர்கள் வேறு யாரும் கிடையாது என்பது. ஆனால் இலங்கை தமிழர்கள் தன் நாட்டில் வந்து குடியேறுகிறார்கள் இல்லையே என்ற பெரிய கவலை தான் அவருக்கு.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புதினுக்கு நன்றாக தெரியும் இலங்கை தமிழர்கள் போன்று தன் மீதும், ரஷ்யா மீதும் பாசம் கொண்டவர்கள் வேறு யாரும் கிடையாது என்பது. ஆனால் இலங்கை தமிழர்கள் தன் நாட்டில் வந்து குடியேறுகிறார்கள் இல்லையே என்ற பெரிய கவலை தான் அவருக்கு.

இரஸ்சியாவுடன் இலங்கையினை ஒப்பிடும் போது இலங்கையிலுள்ள மக்களுக்கு இரஸ்சியா மிக நல்ல தெரிவுதான், ஆனால் இரஸ்சியா இலங்கை மக்களை எடுக்குமா தெரியவில்லை.

கந்தையாவும் நீங்களும் நகைசுவையாக சொன்னாலும் அது ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

மத்திய கிலக்கு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ, ஆட்சிக் கலைப்பு, கிளர்ச்சி நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளின்  இந்த உழைக்கும் வலுவுடையோர் தேவை மிகவும் முக்கியமான காரணியாக இருந்தது /இருக்கிறது.

 

 

இதை நான் ஏற்கவில்லை. குடியேறிகள் தேவை எண்டால் “வாங்கோ” எண்டு கூப்பிட்டால் ஒட்டு மொத்த இலங்கையும் வாசலில் வந்து நிக்கும்🤣.

அதுவும் தேவையான தகுதியுடன் அல்லது தகுதி இல்லாமல் வடிவாக screening செய்து எடுக்கலாம். 

வருவோர்கு அகதிகளுக்கு கொடுக்க கூடிய கொடுப்பனவும் கொடுக்கத்தேவையில்லை.

அவர்களை பல மில்லியன் செலவழித்து, சட்ட போராட்டம் நடத்தி ருவாண்டா அனுப்ப முயற்சிக்கவும் தேவையில்லை.

மேற்கு நாடுகளின் தொழிலும், போரும் இனி தானியங்கி மயப்பட்டே இருக்கும்.

இப்போதே வேல்சில் வேலை இல்லாமல் அடிப்படை சம்பளம் (universal income) கொடுக்கும் மாதிரி திட்டம் (pilot) அமலாகிவிட்டது.

இப்போ இருக்கும் சனத்தொகையை அப்படியே வைத்துகொண்டால் மேற்குக்கு போதும்.

1 hour ago, vasee said:

மேற்கு நாடுகளின் ஒவ்வொரு  இராணுவ நடவடிக்கையிலும் அரசியல் பொருளாதார நன்மை அடிப்படையிலேயே மேற்கொண்டார்கள், போருக்கு தேவையான பொருளாதார பலத்தினை வழங்க உழைக்கும் குடியேறிகளும் காரணம்தான் எனும் உங்கள் கூற்றினை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

இரஸ்சியாவுடன் இலங்கையினை ஒப்பிடும் போது இலங்கையிலுள்ள மக்களுக்கு இரஸ்சியா மிக நல்ல தெரிவுதான், ஆனால் இரஸ்சியா இலங்கை மக்களை எடுக்குமா தெரியவில்லை.

கந்தையாவும் நீங்களும் நகைசுவையாக சொன்னாலும் அது ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

ஜோக்கடிக்காதேங்கோ வசி. இலங்கையில் இருந்து ஸ்டூடன் விசாவில் போறவையே அங்கு முழு நேர வேலை செய்தாலும் அவர்களின் செலவை கூட பார்ப்பது கஸ்டம்.

மேற்கில் இருந்து அல்லது இலங்கையில் இருந்து காசு அனுப்ப வேண்டும் (டியூசன் பீஸ் நீங்கலான வாழ்க்கை செலவு). 

மொஸ்கோவிலேயே தனியாக இருட்டிய பின் போவதில்லை.

கறுப்புத்தோலுக்கு அவ்வளவு மவுசு🤣

ஆரம்பத்தில் இந்திய, ஆபிரிக்க மாணவருக்கு உக்ரேனில் நடந்தது நினைவிருக்கும்.

ரஸ்யாவும் அதிக வித்தியாசமில்லை.

இதனால்தான் சவுதிக்கு போனாலும் இலங்கையர் ரஸ்யா போவதில்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கவலை பிரபாகரன் இருந்து இந்த கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவந்தால் முகநூளில் எப்படி படம் போடுவார்கள் என்றுதான் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புதினுக்கு நன்றாக தெரியும் இலங்கை தமிழர்கள் போன்று தன் மீதும், ரஷ்யா மீதும் பாசம் கொண்டவர்கள் வேறு யாரும் கிடையாது என்பது. ஆனால் இலங்கை தமிழர்கள் தன் நாட்டில் வந்து குடியேறுகிறார்கள் இல்லையே என்ற பெரிய கவலை தான் அவருக்கு.

இலங்கை தமிழன் அல்ல. புலம்பெயர் இலங்கை தமிழன்.

தான்மை மிகு புட்ஸ் அவர்களுக்கு நாம் வெளியில் இருந்து மட்டும் ஆதரவு அளிப்போம்.

அடி மடியில் கையை வைக்கப்படாது..ஆங்🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

மொஸ்கோவிலேயே தனியாக இருட்டிய பின் போவதில்லை.

கறுப்புத்தோலுக்கு அவ்வளவு மவுசு🤣

ஆரம்பத்தில் இந்திய, ஆபிரிக்க மாணவருக்கு உக்ரேனில் நடந்தது நினைவிருக்கும்.

ரஸ்யாவும் அதிக வித்தியாசமில்லை.

இதனால்தான் சவுதிக்கு போனாலும் இலங்கையர் ரஸ்யா போவதில்லை.

ஓமோம் கறுப்பருக்கு அமெரிக்காவிலையும் ஐரோப்பாவிலையும் பெரிய ராஜ மரியாதை தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஓமோம் கறுப்பருக்கு அமெரிக்காவிலையும் ஐரோப்பாவிலையும் பெரிய ராஜ மரியாதை தானே?

ஒப்பீட்டளவில் பரவாயில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இலங்கை தமிழன் அல்ல. புலம்பெயர் இலங்கை தமிழன்.

தான்மை மிகு புட்ஸ் அவர்களுக்கு நாம் வெளியில் இருந்து மட்டும் ஆதரவு அளிப்போம்.

அடி மடியில் கையை வைக்கப்படாது..ஆங்🤣

என்னதான் இருந்தாலும் ஐரோப்பாவுக்கு வாறதுக்கு ஏரோபுளொட்டும் டச் பண்ணி வர மொஸ்கோவும் உங்கை கன பேருக்கு தேவைப்பட்டிருக்கு....இப்ப உவாக்....உவாக் 🤪

3 minutes ago, goshan_che said:

ஒப்பீட்டளவில் பரவாயில்லை.

 

எனவே மற்றவன் ஊத்தைகளை தொட்டு மணக்கப்படாது. அத விட உங்க அபிமான மேற்குலகின் ஊத்தைகள் படு மோசம் கண்டியளோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

என்னதான் இருந்தாலும் ஐரோப்பாவுக்கு வாறதுக்கு ஏரோபுளொட்டும் டச் பண்ணி வர மொஸ்கோவும் உங்கை கன பேருக்கு தேவைப்பட்டிருக்கு....இப்ப உவாக்....உவாக் 🤪

அதான் சொல்லுறன்.

மாஸ்கோவில் இறங்கி, பனிகுள்ளால போடர் நடந்து கடந்து (அதில பலர் பனியில் கால் கை முறிய அப்படியே சாக விட்ட சம்பவங்களும் உண்டு) மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடி வரும் அளவுக்கு வெளிநாட்டவர் குடியேற ஏற்ற நாடு, சொக்கத்தங்கம், சொக்கதங்கம் ரஸ்சியா🤣.

7 minutes ago, குமாரசாமி said:

எனவே மற்றவன் ஊத்தைகளை தொட்டு மணக்கப்படாது. அத விட உங்க அபிமான மேற்குலகின் ஊத்தைகள் படு மோசம் கண்டியளோ

ஒப்பீட்டளவு அண்ணை. 

இஞ்ச அடியள் விழுந்தாலும் ஹம் அம்மாலாட்சிக்கு கோபுரம் கட்டி, தேர் இழுக்கும் அளவுக்கு சுதப்திரமும் இருக்கெல்லே.  

பிகு

ரஸ்யாவில் இருக்கும் உள் வீட்டு ஜனநயகம் = மேற்கில் இருக்கும் உள்வீட்டு ஜனநாயகம் என  இன்னொரு திரியில் நீங்கள் வாதாடியது போலத்தான் அண்ணை இதுவும்.

உங்கள் கருத்து உங்களது அதை சொல்ல உங்களுக்கு பூரண உரிமை உண்டு.

ஆனால் இதை வாசிப்பவர்களும் எம்மை போலவே ஒத்த வாழ்க்கை அனுபவத்தை உடையோர் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

சனம், நீங்கள் சும்மா விதண்டாவாதம் பண்ணுறியள் என நினைக்ககூடாது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

அதான் சொல்லுறன்.

மாஸ்கோவில் இறங்கி, பனிகுள்ளால போடர் நடந்து கடந்து (அதில பலர் பனியில் கால் கை முறிய அப்படியே சாக விட்ட சம்பவங்களும் உண்டு) மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடி வரும் அளவுக்கு வெளிநாட்டவர் குடியேற ஏற்ற நாடு, சொக்கத்தங்கம், சொக்கதங்கம் ரஸ்சியா🤣.

ஒப்பீட்டளவு அண்ணை. 

இஞ்ச அடியள் விழுந்தாலும் ஹம் அம்மாலாட்சிக்கு கோபுரம் கட்டி, தேர் இழுக்கும் அளவுக்கு சுதப்திரமும் இருக்கெல்லே.  

பிகு

ரஸ்யாவில் இருக்கும் உள் வீட்டு ஜனநயகம் = மேற்கில் இருக்கும் உள்வீட்டு ஜனநாயகம் என  இன்னொரு திரியில் நீங்கள் வாதாடியது போலத்தான் அண்ணை இதுவும்.

உங்கள் கருத்து உங்களது அதை சொல்ல உங்களுக்கு பூரண உரிமை உண்டு.

ஆனால் இதை வாசிப்பவர்களும் எம்மை போலவே ஒத்த வாழ்க்கை அனுபவத்தை உடையோர் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

சனம், நீங்கள் சும்மா விதண்டாவாதம் பண்ணுறியள் என நினைக்ககூடாது.

நான் விதண்டாவாதம் செய்ய வரவில்லை. அவர்கள் பக்கத்திலும் நியாயங்கள் தர்மங்கள் உண்டு என்பதை சொல்லவருகின்றேன்.

எங்களுக்கு ஒரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி என்ற நிலை இருக்கக்கூடாது.


எம்மவரை வைத்து ஒரு விடயத்தை கணக்கு போடாதீர்கள்.
அநேகமான எம்மவர் ரஷ்யா ஊடாக  ஜேர்மனிக்கு வந்து பிரான்ஸ்,டென்மார்க்,லண்டன் என மற்ற நாடுகளுக்கு பாய்ந்து ஓடியவர்கள் தான். ஏன் வந்த எல்லோரும் ஜேர்மனியில் தங்கவில்லை?  ஜேர்மனியில் இருந்து விட்டு தனி கப்பல் பிடித்து கனடா சென்றதெல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றதா? ஜேர்மனியிலிருந்தவர்கள் கனடா சென்றபின் எம்மை பார்த்து சிரித்தார்கள். விசா புதிப்பிக்க சென்ற போதெல்லாம் நீ கனடாவுக்கு செல்லவில்லையா என நக்கலாக கேட்டார்கள்

ஜேர்மனிக்கு வந்தார்கள்.....இங்கிருந்து லண்டன் சென்றார்கள்...  இப்போது லண்டனிலிருந்து கனடா அவுஸ்ரேலியா  செல்கிறார்கள். இதில் எனது உறவினர்களும் அடக்கம்.

இதுதான் அகதியாக வந்த சித்திரம். இதற்குள் எம்மவர்களுக்கு ரஷ்யா பிடிக்க வில்லையாம். சனநாயக நாடில்லையாம். கோவில் கட்டேலாதாம். ஜேர்மனி ஜனநாயக நாடில்லையோ? 🤣

அன்றைய லட்சக்கணக்கான வியட்நாம் அகதிகள் இன்றும் ரஷ்யாவில் வாழ்கின்றார்கள்.எம்மவர்களுக்கு இத்தாலியே சரிவரவில்லை.ஆபிரிக்காவில் எத்தனையோ ஜனநாயக நாடுகளில் தங்கியிருந்துதானே எம்மவர்கள் மேற்குலகம் நோக்கி வந்தார்கள்.😁

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நான் விதண்டாவாதம் செய்ய வரவில்லை. அவர்கள் பக்கத்திலும் நியாயங்கள் தர்மங்கள் உண்டு என்பதை சொல்லவருகின்றேன்.

எங்களுக்கு ஒரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி என்ற நிலை இருக்கக்கூடாது.


எம்மவரை வைத்து ஒரு விடயத்தை கணக்கு போடாதீர்கள்.
அநேகமான எம்மவர் ரஷ்யா ஊடாக  ஜேர்மனிக்கு வந்து பிரான்ஸ்,டென்மார்க்,லண்டன் என மற்ற நாடுகளுக்கு பாய்ந்து ஓடியவர்கள் தான். ஏன் வந்த எல்லோரும் ஜேர்மனியில் தங்கவில்லை?  ஜேர்மனியில் இருந்து விட்டு தனி கப்பல் பிடித்து கனடா சென்றதெல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றதா? ஜேர்மனியிலிருந்தவர்கள் கனடா சென்றபின் எம்மை பார்த்து சிரித்தார்கள். விசா புதிப்பிக்க சென்ற போதெல்லாம் நீ கனடாவுக்கு செல்லவில்லையா என நக்கலாக கேட்டார்கள்

ஜேர்மனிக்கு வந்தார்கள்.....இங்கிருந்து லண்டன் சென்றார்கள்...  இப்போது லண்டனிலிருந்து கனடா அவுஸ்ரேலியா  செல்கிறார்கள். இதில் எனது உறவினர்களும் அடக்கம்.

இதுதான் அகதியாக வந்த சித்திரம். இதற்குள் எம்மவர்களுக்கு ரஷ்யா பிடிக்க வில்லையாம். சனநாயக நாடில்லையாம். கோவில் கட்டேலாதாம். ஜேர்மனி ஜனநாயக நாடில்லையோ? 🤣

எம்மவர்களை மட்டும் இல்லை. ஒட்டு மொத்த குடியேறிகளையும் வைத்தே நான் சொல்கிறேன்.

சும்மா கதையாதங்கோ அண்ணை. எத்தனை வேறு நாட்டவர் வாழ என ரஸ்யாவை தேர்ந்து செல்கிறார்கள்?

இன்னொரு திரியில் கந்தையா அண்ணையும் கேட்டிருந்தார். ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்துக்கு போவார்கள் அதேபோல் ஒத்த அளவில் இங்கிருந்து உங்கே வருவார்கள்.

ஆனால் ரஸ்யாவில் இருந்து? 1000 பேர் வந்தால் 10 பேர் போவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

மாஸ்கோவில் இறங்கி, பனிகுள்ளால போடர் நடந்து கடந்து (அதில பலர் பனியில் கால் கை முறிய அப்படியே சாக விட்ட சம்பவங்களும் உண்டு) மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடி வரும் அளவுக்கு வெளிநாட்டவர் குடியேற ஏற்ற நாடு, சொக்கத்தங்கம், சொக்கதங்கம் ரஸ்சியா🤣.

இலங்கையர்கள் ரஷ்யாவில் அகதி விண்ணப்பம் கோரினார்களா?

2 minutes ago, goshan_che said:

இன்னொரு திரியில் கந்தையா அண்ணையும் கேட்டிருந்தார். ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்துக்கு போவார்கள் அதேபோல் ஒத்த அளவில் இங்கிருந்து உங்கே வருவார்கள்.

ஆனால் ரஸ்யாவில் இருந்து? 1000 பேர் வந்தால் 10 பேர் போவார்கள்.

நான் இப்போது கதைப்பது தமிழர்களை குறித்து......பிற நாட்டவர்களை பற்றியல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஜோக்கடிக்காதேங்கோ வசி. இலங்கையில் இருந்து ஸ்டூடன் விசாவில் போறவையே அங்கு முழு நேர வேலை செய்தாலும் அவர்களின் செலவை கூட பார்ப்பது கஸ்டம்.

மேற்கில் இருந்து அல்லது இலங்கையில் இருந்து காசு அனுப்ப வேண்டும் (டியூசன் பீஸ் நீங்கலான வாழ்க்கை செலவு). 

 

ஒரு குத்துமதிப்பாக சொன்னேன், சரியான தரவுகள் தெரியாமையினால் தவறான கருத்தாக இருக்கலாம்.

1 hour ago, goshan_che said:

மொஸ்கோவிலேயே தனியாக இருட்டிய பின் போவதில்லை.

கறுப்புத்தோலுக்கு அவ்வளவு மவுசு🤣

ஆரம்பத்தில் இந்திய, ஆபிரிக்க மாணவருக்கு உக்ரேனில் நடந்தது நினைவிருக்கும்.

ரஸ்யாவும் அதிக வித்தியாசமில்லை.

இதனால்தான் சவுதிக்கு போனாலும் இலங்கையர் ரஸ்யா போவதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இரஸ்சியரை சந்தித்தேன் மிக மோசமான நிறவெறி கொண்டவர் அவுஸ்ரேலியாவில் ( அவுஸ்ரேலியர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களை விட நிற வெறி கொண்டவர்கள்) கூட அவ்வாறான நிறவெறி கொண்டவர்களை சந்தித்ததில்லை. அதனை மனதில் வைத்தே இரஸ்சியா இலங்கையரை ஏற்குமா எனக்குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இலங்கையர்கள் ரஷ்யாவில் அகதி விண்ணப்பம் கோரினார்களா?

ரஸ்யாவில் கோரவில்லை. ஏன்?

ஏன் வடகொரியாவில், ஈரானில், துருக்கியில் கோருவதில்லையோ அதே காரணம்தான். 

உடல்/உடமை பாதுகாப்பின்மை (physical security), கூடிய இன ஒதுக்கல், மனிதாபிமான சட்டங்களின் செயலற்ற நிலை, பொருளாதார, கல்வி வாய்புகள் மறுக்கபடும் என்ற யதார்த நிலை.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.