Jump to content

திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு

அ. அச்சுதன் 

இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருக்கோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது திருக்கோணேஸ்வரம். 

மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருப்பதால் திருக்கோணமலை என்று இந்த நகரம் பெயர்பெற்றது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் கோணேஸ்வரம் ஆதலால் திருகோணமலை எனவும் இந்த நகரம் பெயர் பெறுகின்றது. 

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களின் திருத்தலமாகிய திருக்கோணேஸ்வரம் புனிதஷேத்திரமாக இருந்து வந்ததைப் புராண இதிகாச வரலாறுகள் கூறுகின்றன. எனவே இந்தத் தலத்தின் இயல்பான தெய்வீக விசேடத்தினாலே இந்நகரம் திருக்கோணமலை என்ற பெயரால் வழங்கி வருகின்றது.

தெட்சண கயிலாயம் என்று திருக்கோணேஸ்வரம் போற்றப்பட்டு வருகின்றது வடக்கே இமயக்கொடுமுடியில் கயிலாய சிகரத்தில் கயிலை நாதன் எழுந்தருளியிருப்பது போல தெற்கே திருக்கோணமலையில் கோணேசப்பெருமான் அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றார். பூகோள அமைப்பில் இந்த இரண்டு தலங்களும் ஒரு அட்சரரேகையில் அமைந்திருப்பதையும் இவையிரண்டுக்கும் நடுவே தில்லைத் திருத்தலம் அமைந்திருப்பதையும் திருமூல நாயனார் திருமந்திரத்திலே குறிப்பிடுகின்றார். இந்தத் தலங்கள் அமைந்திருக்கும் பாங்கை விஞ்ஞானரீதியாகவும் ஆராய்வது மேலும் திருக்கோணேஸ்வரத்தின் மகிமையை அறிவதற்கு உதவியாயிருக்கும்.

image_c9bf889cbd.jpg

குளக்கோட்டு மன்னனால் திருப்பணிகள் செய்யப்பட்ட சரித்திரி முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோணேஸ்வரர் திருத்தலத்தை பாதுகாப்பதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் அக்கறை செலுத்தவேண்டும் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் 2008க்குப் பின் அவசர அவசரமாக வீதியின் இருமருங்கிலும் தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எந்த உத்தரவும் இன்றி தற்காலிக கடைகளை அமைத்தனர். அக்கடைகள் தற்போது 58ஆக அதிகரித்துவிட்டன. இக்கடைகள் அமைப்பவர்களுக்கும் திருக்கோணேஸ்வரர் கோயிலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. திட்டமிட்டு ஆலயச்சூழலை ஆக்கிரமிப்பது போல் இக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகம் பல இடங்களிலும் முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

தற்போது திருக்கோணேஸ்வரம் செல்லும் பாதைக்கு அருகில் கோவில் சமதரையில் இவர்களுக்கு நிரந்தர கட்டடம் அமைக்க தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டு வருகின்றது. 03- 08-2022 இல் தொல்லியல் திணைக்களத்தினால் திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகசபை தலைவர், செயலாளரும் அழைக்கப்பட்டு தெருவோரம் வர்த்தகம் செய்வோருக்கு கோவிலுக்கு சமீபமாக நிரந்தர கட்டடம் அமைக்க தங்களுக்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி அளித்துள்ளதாகவும் அதற்கு ஆலய நிர்வாகம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

image_933f4cc113.jpg

கடந்த சில வருடங்களாக தொல்லியல் திணைக்களம் கோணேஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகளை தடுத்து வருவதை அனைவரும் அறிவர். தேரோடும் வீதியை அகலிக்க தடுத்தனர். வாசலில் பெருங்கோபுரம் கட்டுவதற்கு திணைக்களம் இடையூறுகளை விளைவித்து வருகிறது. தற்போது இந்திய அரசாங்கத்திடம் திருக்கோணேஸ்வரத்தின் பாரிய திருப்பணி வேலைகளை நிறைவேற்றித் தருமாறு ஆலய அறங்காவலர் சபையும், இந்து சமய நிறுவனங்களும் வேண்டுதல் விடுத்து அவை சாதகமாக அமைய உள்ள நேரத்தில் திட்டமிட்டு ஆலய சுற்றாடலை அபகரிக்கும் நோக்கில் நிரந்தர கடைகளை கட்டுவதற்கு முயற்சி எடுக்கின்றனர். இவ்விடயத்தை கருத்தில் கொண்டு சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும்.

இதேவேளை தொல்லியல் திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம், மூதூர் பிரசேச இந்து குருமார் சங்கம் ஆகியன கடும் கண்டனத்தை வெளியிட்டு உள்ளன.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் சிவாலயத்தை சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சி தீவிர மடைந்திருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பியான செல்வராஜா கஜேந்திரன் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

image_fa204b4eae.jpg

உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் அங்கமாக உள்ள தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தமிழ் மக்களின் பாரம்பரியங்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்காலிகமாக வழங்கப்பட்ட கடை தொகுதியை நிரந்தரமாக வழங்க தொல்பொருள் திணைக்களம் முயற்சிப்பது முற்றிலும் தவறானது. திருக்கோணேஸ்வரத்தை பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலை உடன்நிறுத்த வேண்டும் என்றார் கஜேந்திரன் எம்.பி.
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சுற்றாடலில் திருக்கோணேஸ்வரர் ஆலய திருப்பணியை மட்டும் தொல்லியல் திணைக்களம் தலையீடு செய்து திருப்பணிகளை தடுத்து வருகின்றது. திருக்கோணேஸ்வரம் இந்திய மக்களுடனும் தொடர்புடைய கோயில் இந்திய அரசாங்கமும் திருக்கோணேஸ்வரர் திருப்பணி தொடர்பாக விரைவில் செயற்படுவதற்கு பிரதமரும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன் அக்கறை செலுத்தவேண்டும்.

 

 

https://www.tamilmirror.lk/temple/திட்டமிட்டு-கோவில்-சூழல்-கடைகளால்-ஆக்கிரமிப்பு/64-302862

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் வாய்  திறந்து பேச மாட்டாரா? தனது தொகுதியில் நடைபெறும் அராஜகங்களை தட்டி கேட்க மாட்டாரா?
அவரது கட்சியாவது  தட்டிக்கேட்கலாமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடைகளினது எண்ணிக்கை மட்டுமல்ல, வில்வம் பழம், இலைகளுடன் சிவனை தரிசிக்க வரும் சிங்கள பக்தர்களின் எண்ணிக்கை முன்னரை விட அதிகமாக இருந்ததை 2018ல் போன பொழுது காண முடிந்தது. கதிர்காமம் போல இதையும் மாற்றிவிடுவார்களோ என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருக்கோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது திருக்கோணேஸ்வரம். 

இணைப்புக்கு நன்றி கிருபன்.

2015இல் இலங்கை சுற்றுலா சென்ற போது இந்த கோவிலுக்கும் போயிருந்தேன்.

இங்கு கடைத் தெருக்களைப் பார்த்தால் சிங்கள மக்களே கூடுதலானவர்களாக தெரிந்தார்கள்.மனதுக்கு ஏதோ நெருடலாக இருந்தது.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கடைகளினது எண்ணிக்கை மட்டுமல்ல, வில்வம் பழம், இலைகளுடன் சிவனை தரிசிக்க வரும் சிங்கள பக்தர்களின் எண்ணிக்கை முன்னரை விட அதிகமாக இருந்ததை 2018ல் போன பொழுது காண முடிந்தது. கதிர்காமம் போல இதையும் மாற்றிவிடுவார்களோ என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. 

 

அதே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் வாய்  திறந்து பேச மாட்டாரா? தனது தொகுதியில் நடைபெறும் அராஜகங்களை தட்டி கேட்க மாட்டாரா?
அவரது கட்சியாவது  தட்டிக்கேட்கலாமே??

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் கோமாவில் இருப்பதால்…
இப்படியான ஆக்கிரமிப்புகள், நடப்பது… தெரியாமல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் கோமாவில் இருப்பதால்…
இப்படியான ஆக்கிரமிப்புகள், நடப்பது… தெரியாமல் இருக்கின்றது.

அந்தாளுக்கு இப்ப திருகோணமலை தன்ரை தொகுதி எண்டதையே மறந்து போயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அந்தாளுக்கு இப்ப திருகோணமலை தன்ரை தொகுதி எண்டதையே மறந்து போயிருக்கும்.

எதிர்கட்சி தலைவராக வந்த பின்…. தனக்கு கொம்பு முளைச்சிட்டுது என்ற நினைப்பில்…
விட்டேத்தி குணமாக இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விசேட நாட்களை தவிர்த்து மற்றைய நாட்களில் அதிகளவில் சிங்கள மக்களே வருகிறார்கள்.

ஆலயத்தை நோக்கிச் செல்லும் போது வலது பக்கத்தில் கடைசியாக ஆலய நிர்வாகத்தினால் நடாத்தப்படும் கடை உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு தொன்மம்

By Digital Desk 5

22 Aug, 2022 | 11:00 AM
image

(ஆர்.ராம்)

அன்று ஆகஸ்ட் 3ஆம் திகதி, கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்திற்கு அழைக்கப்படுகின்றனர் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் திலகரட்ணம் துஷ்யந்தன் மற்றும் செயலாளர் பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன் “ஆலயத்தினை அண்மித்துள்ள கீழ் பகுதி சமதரையில் 58 வியாபார நிலையங்களை நிரந்தரமாக அமைக்கவுள்ளோம். அவற்றுக்கு மின்சார மற்றும் நீர் வழங்கல் வசதிகளையும் வழங்கவுள்ளோம்” என்ற தகவலை பரிமாற்றுகிறார் தொல்பொருளியல் திணைக்களத்தின் திருமலை மாவட்ட அதிகாரி. 

“அவ்வாறான தீர்மானமொன்று எங்குமே எடுக்கப்படவே இல்லையே”என்று பதிலுரைகின்றனர் ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் மற்றும் செயலாளர். 

அச்சமயத்தில், “நாங்கள் உங்களிடத்தில் அனுமதி கோரவில்லை. அவ்வாறு கோர வேண்டிய அவசியமும் இல்லை. சம்பிரதாயபூர்வமாக உங்களுக்கு தகவலொன்றை பரிமாற்றுகின்றோம்”என்று பதிலளிக்கின்றார் தொல்பொருளியல் திணைக்களத்தின் அந்த அதிகாரி. 

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் திலகரட்ணம் துஷ்யந்தன், ஒரு சட்டத்தரணி. ஆதலால் அவர், “தொல்பொருளியல்  சட்டத்தின் சரத்து 20இன் பிரகாரம், அடையாளப்படுத்தப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளதே தவிரவும், அங்கு நிர்மாணங்களைச் செய்ய முடியாதல்லவா” என்று வாதிடுகின்றார். 

ஆனால் அவரது  வாதம் வெற்றிபெறவில்லை. ஏனென்றால், பிராந்திய அதிகாரி வெறுமனே 'அம்பு' மட்டும் தான். 'தொல்பொருளியலின் பெயரால் தமிழின தொன்மைகளை ஆக்கிரமிக்கும் தென்னிலங்கையின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்' என்ற வில்லால் எய்யப்பட்ட அம்பேமாவட்ட அதிகாரி. அதனால் தர்க்கம் செய்வதால் பயனில்லை. 

தொல்பொருள் பிரகடனம்

தமிழர் தேசத்தின் தலைநகரான திருகோணேமலையில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் பதிகம்பாடப்பெற்ற திருத்தலமாகவும், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் திகழ்வது திருக்கோணஸ்வரம். இவ்வாலயத்தின் வரலாற்ற சிறப்பம்சங்களின் பட்டியல் நெடியது. 

அத்துணை பெருமைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த ஆலயம் 1981ஆம் ஆண்டு மிகப்பெறுமதியான தொல்பொருளியல் பகுதியாக அடையாளம் காணப்பட்டு வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. 

அன்றிலிருந்து, இந்த ஆலயத்தில் சிறுகல்லொன்றை அகற்றுவது கூட சட்டத்திற்கு முரணான விடயமாகும். இதனை, நன்குணர்ந்த பரிபாலன சபையினர் அதன்பிராகரமே ஆலயத்தை நிருவகித்தும் வந்துகொண்டிருக்கின்றனர்.

அளவிடை

அவ்வாறிருக்க, திருகோணேஸ்வர ஆலயம் இரண்டு பிரதான பகுதிகளைக் கொண்டது. அதில் முதலாவது பிரதான ஆலயம் அமைந்திருக்கும் பகுதியாகும். இந்தப் பகுதி 18ஏக்கர்கள் ஒரு ரூட் 29பேர்ச்சஸ் அளவு நிலப்பரப்பைக் கொண்டதாகும். 

3.jpg

இரண்டாவது, பாவநாசம் தீர்த்தத்தை அண்மித்துள்ள 3ஏக்கர் 2ரூட் ஒருபேர்ச் அளவு நிலப்பரப்பைக் கொண்டதாகும். இதனைவிடவும், பிரதான ஆலயத்தின் கீழ்பகுதியில் உள்ள கோட்டை வாசலில் 26பேர்ச்ஸ் நிலப்பரப்பு ஆலயத்திற்குச் சொந்தமானதாகவே உள்ளது. 

ஆலயத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பு பற்றிய விபரங்கள், 1971ஆம் ஆண்டு, அப்போதைய பரிபாலனத் தலைவர் எம்.கே.செல்வராசாவின் பெயரில் காணப்படும் ‘உரித்து வரைபடத்தில்’ மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

‘நிலமே’யும் கடைகளும்

இந்நிலையில், 2008ஆம் ஆண்டு ஐ.தே.க.விலிருந்து வெளியேறிய சுசந்த புஞ்சிநிலமே சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளவும், அவர் தேர்தலில் களமிறங்குவதற்கு திருகோணமலை தொகுதி வழங்கப்படுகின்றது. 

4.jpg

இரத்தினபுரியில் இருந்து ஆதரவாளர்களுடன் வந்து திருமலை கச்சேரிக்கு அருகில் தங்கியிருந்த காலத்தில், அவரது ஆதரவுக்குழாத்தில் இருந்த பெரும்பான்மை சமூகத்தவர்களால் ஆலய வளாகத்தினுள் மூன்று வியாபார நிலையங்கள் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது, நகரசபையிடத்தில் எவ்விதமான அனுமதியையும் குறித்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் பெற்றிருக்கவில்லை. அப்போதைய ஆலய நிருவாகத்தினரும், அந்த விடயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 'வயிற்றுப்பிழைப்புக்காகத்தானே' என்ற மனோநிலையில் பொருட்டாக அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அதன்விளைவு, அவை 58 வியாபார நிலையங்களாக விரிவடைந்து நிற்கின்றது. அதுமட்டுமன்றி அத்தனை வியாபார நிலையங்களினதும் உரிமையாளர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்கள். 

ஆரம்பித்த தலையிடி

வியாபர நிலையத்தை அடியொற்றி ஆலயப்பகுதிக்குள் பெரும்பான்மை சமூகத்தினரின் அதீதமான பிரசன்னம் ஏற்படவும், யதார்த்தத்தை உணர்ந்த பரிபாலன சபையினர், கடைகளை அகற்றுவதற்கு காய்களை நகர்த்தினார்கள். அதனால், வியாபார நிலைய உரிமையாளர்கள் மல்லுக்கட்ட ஆரம்பித்தனர். 

பின்னர் இவ்விடயம் 2018இல் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் எதிர்கட்சித்தலைராக இருந்த சம்பந்தனும் அவருடன் நல்லுறவில் இருக்கும் சுசந்த புஞ்சிநிலமேயும் பிரசன்னமாகியிருந்தனர். 

அவர்களின் முன்னிலையில் விடயம் ஆராயப்பட்டு, குறித்த வியாபரா நிலையங்களை ஆலயத்தின் முகப்பில் உள்ள ‘கிளிப் கொட்டேஜ்’ பகுதிக்கு இடமாற்றுவதெனவும், அங்கு நகரசபையினரால் வியாபார நிலையங்களுக்கான நிர்மாணம் செய்யப்பட்டு கையளிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

துரத்திய துரதிஷ்டம்

ஆனால், குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டன. முதலில் நகரசபையிடத்தில் போதிய நிதி காணப்பட்டிருக்கவில்லை. பின்னர், ஆலயம் அதற்கான நிதியை நகரசபைக்கு வழங்குவதற்கு முன்வந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, மத்திய அரசில் ஆட்சிக்குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன. பின்னர் கொரோனா நிலைமைகள் என்று காலம் கடந்துவிட்டது. 

தலைதூக்கிய நெருக்கடி

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ‘இந்தியா’ திட்ட வரைவுகளை அண்மையில் கோரியிருந்தது. 

அதற்கு அமைவாக, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனால் வழங்கப்பட்ட வரைவில், 'திருக்கோணஸ்வரத்துக்கான இராஜகோபுர முன்மொழிவும்' செய்யப்பட்டிருந்தது. 

கோணஸ்வரத்திற்கான இராஜகோபுரத்தினை அமைப்பதற்கு இந்தியத் தரப்பில் சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அண்மையில் சிற்பசிற்பாசாரிகள் ஆலயத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.  

சிற்பாசாரிகளின் விஜயம், ஆலயப்பகுதியில் வியாபார நிலையங்களை கொண்டிருப்பவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.  தமது, வியாபார நிலையங்கள் அகற்றப்படப்போகின்றன என்பதை குறிப்பால் உணர்ந்துள்ளனர். 

அதன்பின்னரே, ஆலயத்தின் தலைவரும், செயலாளரும், தொல்பொருளியல் திணைக்கள மாவட்ட அதிகாரியால் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் தொல்பொருளியல் திணைக்களத்தின் வகிபாகம் என்னவென்பது வெளிச்சமாகின்றது. 

முரண்நகை

அண்மைய காலங்களில் தேரோடும் வீதி விஸ்தரிப்பதற்கும்  ஆலயத்தின் உட்பகுதியில் உள்ள அழிந்துபோன அன்னதான மடத்தினை மீளமமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தொல்பொருளியில் திணைக்களம் அனுமதிகளை வழங்கவில்லை.  ஆலமரக்கிளையொன்று அகற்றப்பட்டதற்காக ஆலய பரிபாலன சபையினருக்கு 'தொன்மங்களை சீர்குலைத்தால் சட்டநடவடிக்கை' என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், தொன்மங்களை உடைய ஆலயப்பகுதியில் வியாபார நிலையங்களை நிரந்தமாக அமைத்துக்கொடுப்பதற்கும் அப்பணியை தானே முன்னெடுப்பதற்கும் தொல்பொருளியல் திணைக்களம் எவ்வாறு இணங்கியது. அச்செயற்பாட்டை அத்திணைக்களம் எந்த சட்ட அதிகாரத்தின் கீழ் மேற்கொள்கின்றது என்பது பிரதான கேள்வியாகிறது. 

பூச்சியநிலை  

அண்மைக்காலமாகவே, கோணேஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிகள் முன்னெடுப்பதற்கு தொல்பொருளியல் திணைகளம் முட்டுக்கட்ட போட்டுவருகின்றது. இந்த நிலையில், இராஜகோபுர நிர்மாணம் சாத்தியமாகுமா என்ற ஐயப்பாடுகளும் அதிகரித்துள்ளன. 

திருகோணேஸ்வர ஆலய நிலைமைகள் குறித்து கரிசனை கொள்ளுமாறு, சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும் செஞ்சொற்செல்வருமான கலாநிதி.ஆறு.திருமுருகன், ஆகியோர் பிரதமர் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் கோரியுள்ளனர். 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்றிலும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் பொது வெளியிலும் நிலைமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் எந்தவிரதமான பிரதிபலிப்புக்களும் இதுவரையில் கிடைக்கவில்லை. பூச்ச நிலைமையே நீடிக்கின்றது. 

பேராபத்தான திட்டங்கள்

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் வியாபார நிலையங்களை நிர்மாணத்தல் என்ற விடயம் தான் தற்போதைக்கு வெளிப்பட்டாலும், இதன் பின்னால் பேராபத்தான திட்டங்கள் மறைந்துள்ளன.

அதாவது, கோணேஸ்வர ஆலத்திற்கு கீழ்ப்பகுதியில் சங்கமித்த விகாரை காணப்படுகின்றது. இதுவரலாற்று முக்கியத்துவமானதாக கூறப்படுகின்றது. ஆனால் கோணேஸ்வரர் ஆலயத்தினை மையப்படுத்தியே வீதி நிர்மாணங்கள் செய்யப்பட்டிருப்பதால் குறித்த விகாரை பிரசித்தமடையாது காணப்படுகின்றது என்ற சிந்தனை விகாராதிபதி உள்ளிட்டவர்களுக்கு உண்டு. 

எனவே, கோட்டைவாசல் அருகிலிருக்கும் இராணுவ முகாம் ஊடாக சங்கமித்த விகாரைக்கு செல்கின்ற போக்குவரத்து ஏற்பாடுகளை தவிர்த்து, விகாரையை நேரடியாக மையப்படுத்தும் வீதியை பிரதானப்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

குறித்த வீதி பிரதானப்படுத்தப்பட்டால், கோட்டை வாசல் பாதுகாப்பு காரணங்களை காண்பித்து நிரந்தரமாக மூடப்படும். அதன்பின்னர் சங்கமித்த விகாரைக்கான வீதியே பிரதானப்படுத்தப்படும். பின்னர், தொல்பொருளியல் திணைக்களத்தால் முன்மொழியப்பட்டுள்ள வியாபார நிலையங்கள் அமைக்கப்படும் பகுதியை குறித்த வீதியூடாக பயணித்து, படிகள் மூலமாகவே ஆலயத்திற்குள் பிரவேசிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அவ்வாறாயின், சங்கமிதத விகாரையைக் கடந்தே கோணேஸ்வரை அடையவது நியதியாகிவிடும். இதுதான் திட்டத்தின் முதலாவது அங்கம். 

இரண்டாவது, சங்கமித்த விகாரைக்கான குறித்த வீதியை விஸ்தரித்து கடற்கரை வீதியுடன் இணைப்பதாகும். இதன்மூலமாக, ஏற்கனவே, மத்தறை, காலி மற்றும் தங்கல்ல ஆகிய பகுதியில் இருந்து வருகை தந்து 'கொரியாவத்த' என்னும் பெயரில் உருவாகியுள்ள சிங்கள மீனவக்கிராமத்துடன் தொடர்புபடுத்த முடியும். அத்துடன், அக்கிராமத்துக்கு அருகில் உள்ள ஏனைய வெற்றுநிலங்களில், கோணேஸ்வரர் ஆலய வியாபார நிலையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இதர தரப்பினர்களுக்கான குடியேற்றங்களையும் தாரளமாகவே மேற்கொள்ள முடியும். 

RAM_6-05.jpg

ஆக, தமிழரின் தொன்மம் நிறைந்த பகுதியில்  வாழ்வாதரத்தின் பெயரால் வியாபார நிலையங்களை அமைத்து, ஆக்கிரமிப்புக்கான வாழிடங்களை உருவாக்குவாக்குவதற்கு, தொல்பொருளியல் திணைக்களம் தூபமிடுகின்றது என்பது தான் அப்பட்டமான உண்மை.
 

https://www.virakesari.lk/article/133982

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2022 at 22:51, MEERA said:

இங்கு விசேட நாட்களை தவிர்த்து மற்றைய நாட்களில் அதிகளவில் சிங்கள மக்களே வருகிறார்கள்.

ஆலயத்தை நோக்கிச் செல்லும் போது வலது பக்கத்தில் கடைசியாக ஆலய நிர்வாகத்தினால் நடாத்தப்படும் கடை உள்ளது.

 

பறி போகும் திருகோணமலை கோவில் என யாரோ விரிவாக எழுதியது கொஞ்ச நாட்கள் முகநூலில் சுற்றியது

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.