Jump to content

மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம் - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம் - என்ன நடந்தது?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

சிறுவன் மாற்றுத்திறனாளி

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை பேருந்து நடத்துநரும் ஓட்டுநரும் நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற விவகாரத்தில் அந்த இரு பேருந்து ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகட்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ,வாணி ஸ்ரீ தம்பதி. ஆட்டோ ஓட்டுநரான கோபாலகிருஷ்ணனுக்கு மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஹரி பிரசாத் என்ற மகன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் மூவரும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக அரசு பேருந்தில் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேருந்து நடத்துநர் "இந்த பேருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லாது. கீழே இறங்குங்கள்," என்று கூறி பாதி வழியிலேயே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது 16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்க முடியாமல் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கோபாலகிருஷ்ணன் தூக்கி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில், பாதி வழியிலேயே இந்த குடும்பத்தினர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் இறக்கி விடப்பட்ட சம்பவம் சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுத்தனர்.

 

இதையடுத்து என்ன நடந்தது என்று சிறுவனின் தந்தை கோபாலகிருஷ்ணனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

"எனது மகனுக்கு பிறப்பிலிருந்து மன வளர்ச்சி குறைபாடு உள்ளது. அவனால் நடக்க முடியாது. அடிக்கடி வலிப்பு வரும். அதனால் என் மகனுக்கு மாற்றுத் திறனாளி நிதி உதவி வழங்கவும் பட்டா ஒதுக்குமாறும் கோரும் மனுவோடு கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீஸுக்கு மனு கொடுக்க ஒசூரில் இருந்து தருமபுரி செல்லும் அரசு பேருந்தில் ஏறினோம்," என்றார்.

 

மாற்றுத்திறனாளி மகன்

பேருந்தில் ஏறும்போதே கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுதான் ஏறினோம் ஆனால் கிருஷ்ணகிரி நெருங்கியவுடன் இந்த பேருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக அல்லாது மேம்பாலத்தில் ஏறி செல்லும். எனவே இங்கேயே இறங்கிக் கொள்ளுங்கள் என்று நடத்துநர் கூறினார். உடனே நான் மாற்றுத்திறனாளியான மகனை வயதான என்னால் எப்படி தூக்கிச் செல்ல முடியும் என எனது கஷ்டத்தை சொன்னேன். ஆனால், அதர்கு காது கொடுக்காத நடத்துநர் நடு வழிலே இறக்கி விட்டு, விட்டுச் சென்று விட்டார் என்றார் கோபாலகிருஷ்ணன்.

பிறகு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே வந்து ஆட்சியருக்கு மனு கொடுத்தோம் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தருமபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினத்திடம் பேசினோம்.

"சம்பவம் நடந்தது உண்மை தான். நடத்துநரும் ஓட்டுநரும் அதை ஒப்புக் கொண்டுள்ளனர். அதனால் பேருந்து ஓட்டுநரையும் நடத்துநரையும் பணி இடைநீக்கம் செய்துள்ளோம்," என்று ஜீவரத்தினம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62661544

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசு பணியாளர் என்றாலே கொம்பு முளைப்பது வழமையான ஒன்றுதான்..😢

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.