Jump to content

லிபியாவில்... அரசியல் பிரிவுகளுக்கு இடையே, மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!

லிபியாவில்... அரசியல் பிரிவுகளுக்கு இடையே, மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!

லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர் முஸ்தபா பராக்காவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், கிழக்குப் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்ற ஃபாத்தி பாஷாகாவிற்கு விசுவாசமான போராளிகளின் தொடரணியை பின்னுக்குத் தள்ள முயன்ற போது இந்த மோதல் வெடித்தது.

இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பல்வேறு கட்டடங்கள், வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தலைநகரின் பல பகுதிகளில் சிறிய ரக துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர் முழுவதும் கரும் புகை எழுவதைக் காண முடிந்தது.

பல மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. சண்டையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஐ.நா ஆதரவு தேசிய ஒற்றுமை அரசாங்கம், தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், ‘ஜாவியா வீதி பகுதியில் சென்ற ஒரு இராணுவக் குழுவானது, திரிபோலிக்கு மேற்கே 27வேது வாயிலில் ஆயுதக் குழுக்கள் கூடிக்கொண்டிருந்த போது, ஒரு இராணுவக் குழு சீரற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்த மோதல்கள் தூண்டப்பட்டன’ என தெரிவித்துள்ளது.

லிபிய செஞ்சிலுவைச் சங்கம், ஒரு ட்வீட்டில் அனைத்து தரப்பினரையும் ‘லிபிய ரெட் கிரசண்ட் அணிகள் நகரத்திற்குள் தங்கள் மனிதாபிமான பணிகளைச் செய்ய ஆதரவளிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வன்முறையை ‘உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.
லிபியாவிற்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் பி. நோர்லாண்ட், ‘திரிபோலியில் வன்முறை மோதல்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் என்று லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வளம் மிக்க வட ஆபிரிக்காவில் உள்ள லிபியா, ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அதன் செழுமைக்கு வழிவகுத்த ஸ்திரத்தன்மை தற்போது சிதைந்துவிட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு மொஅம்மர் கடாபிக்கு எதிரான நேட்டோ ஆதரவு கிளர்ச்சியைத் தொடர்ந்து லிபியா 2014ஆம் ஆண்டு முதல் போரிடும் பிரிவுகளுக்கு இடையே பிளவுபட்டுள்ளது.

https://athavannews.com/2022/1296488

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வட ஆபிரிக்காவில் உள்ள லிபியா, ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தது.

மேற்குக் கூட்டணியால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுப் போட்டிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு சிதைக்கப்பட்டுவரும் நாடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nochchi said:

மேற்குக் கூட்டணியால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுப் போட்டிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு சிதைக்கப்பட்டுவரும் நாடு. 

ஒரு நாடு நன்றாக இருந்தால்… மேற்குலகுக்கு, வயித்தெரிச்சல் ஆரம்பித்து விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எண்ணெய் வளம் மிக்க வட ஆபிரிக்காவில் உள்ள லிபியா, ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அதன் செழுமைக்கு வழிவகுத்த ஸ்திரத்தன்மை தற்போது சிதைந்துவிட்டது.

அன்று ரஷ்யா மேற்குலகிற்கு ஒத்துழைத்ததின் விளைவு. கிலாரியின் கழுத்தை திருக உண்மைகள் வெளிவரும்.இன்று டொனால்ட் ரம்ப் பழிவாங்கப்படுவதற்கு  இதுவும் ஒரு காரணம். உண்மைகள் வெளிவந்திடுமோ என பைடன் நிர்வாகம் பயப்பிடுகின்றது.

Link to comment
Share on other sites

ஒரு சர்வாதிகாரி எப்படி அந்நாட்டில் பிறக்கும்  ஒவ்வொரு  குழந்தைக்கும் ங்கியில் அக்குழந்தையின் கல்விக்காக வங்கியில் பணம் இட்டார்?

லிபியாவை குட்டிச்சுவராக்கியது அமெரிக்கா  தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உபயம்; அமெரிக்கா + ஐரோப்பிய யூனியன் + இஸ்ரேல். 

☹️

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு செய்த பைத்தியகாரத்தனங்களிலேயே முதன்மையானது சதாமையும், கடாபியையும் அழித்ததுதான்.

குறிப்பாக கடாபி - கடைசி காலங்களில் எல்லாவற்றையும் கைவிட்டு மேற்கின் உற்ற தோழன் ஆகி விட்டார். பிளேர் கடாபியின் டெண்ட்டில் போய் டீ குடிக்கும் அளவுக்கு நெருக்கம்.

கடாபியும், சதாமும் இருந்திருதால் - ஐசில் தலை தூக்கி இராது. சவுதி அடக்கி வாசித்திருக்கும்.

இவர்களை நீக்கிய பின் அதனால் மேற்கு பெரும் இலாபத்தை அடைந்தது என்றும் சொல்லமுடியாது.

நீண்ட, குறுகிய கால நோக்கில் எப்படி பார்த்தாலும் - இவர்கள் இருவரையும் அகற்றியது மேற்குக்கு பின்னடைவே.

சதாம் - புஷ்சின் பழிவாங்கும் குணம் மட்டுமே காரணம் என நினைக்கிறேன்.

கடாபி - காரணம் தெளிவில்லை, சிலவேளை ஹிலரியுடன் எண்ணை வியாபாரிகள் டீல் போட்டிருக்கலாம்.

தேர்தலில் சாயிப் கடாபி போட்டியிட போவதாக சொன்னார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

மேற்கு செய்த பைத்தியகாரத்தனங்களிலேயே முதன்மையானது சதாமையும், கடாபியையும் அழித்ததுதான்.

இது போன்ற   தெளிவான பிந்திய ஞானோதயம் உக்கல் உக்ரேன் விடயத்திலும் 5/6 வருடங்களுக்கு பின் நிச்சயம் வரும். அது வரை காத்திருங்கள்.

9 minutes ago, goshan_che said:

குறிப்பாக கடாபி - கடைசி காலங்களில் எல்லாவற்றையும் கைவிட்டு மேற்கின் உற்ற தோழன் ஆகி விட்டார். பிளேர் கடாபியின் டெண்ட்டில் போய் டீ குடிக்கும் அளவுக்கு நெருக்கம்.

இது போலவே புட்டினும் மேற்கின் உற்ற தோழனாக இருந்தார்.தொடர்ந்து இருக்க விரும்பினார்.

11 minutes ago, goshan_che said:

கடாபியும், சதாமும் இருந்திருதால் - ஐசில் தலை தூக்கி இராது. சவுதி அடக்கி வாசித்திருக்கும்.

இவர்கள் இருவரும் இருந்திருந்தால் ஐரோப்பாவிற்கு இவ்வளவு பொருளாதார/அரசியல் அகதி வருகைகள் இருந்திருக்காது.

12 minutes ago, goshan_che said:

இவர்களை நீக்கிய பின் அதனால் மேற்கு பெரும் இலாபத்தை அடைந்தது என்றும் சொல்லமுடியாது.

இவர்களின் அழிப்பின் பின்னரே எரிபொருள் ஏற்றம் ஏறத்தொடங்கியது. இவர்கள் காலத்தில் ஒரு பெரல் மசகு எண்ணை 60 டொலர் மட்டுமே.

14 minutes ago, goshan_che said:

நீண்ட, குறுகிய கால நோக்கில் எப்படி பார்த்தாலும் - இவர்கள் இருவரையும் அகற்றியது மேற்குக்கு பின்னடைவே.

இதே போல்தான் புட்டினை அழிக்க நினைக்க வெளிக்கிட்டு உலக பொருளாதாரமே தள்ளாட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

சதாம் - புஷ்சின் பழிவாங்கும் குணம் மட்டுமே காரணம் என நினைக்கிறேன்.

நான் தொடர்ந்து இருக்கின்றேன். அமெரிக்காவில் வந்து வந்து போகின்றார்கள் என்ற சதாமின் நக்கல்....

17 minutes ago, goshan_che said:

கடாபி - காரணம் தெளிவில்லை, சிலவேளை ஹிலரியுடன் எண்ணை வியாபாரிகள் டீல் போட்டிருக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தை போல் அரபு ஒன்றியம் உருவாக்க முயற்சித்தார்.

18 minutes ago, goshan_che said:

தேர்தலில் சாயிப் கடாபி போட்டியிட போவதாக சொன்னார்கள். 

போட்டியிடுகின்றார். ஆனால் பாவம்.

⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியத்தை போல் அரபு ஒன்றியம் உருவாக்க முயற்சித்தார்.

 

அமெரிக்கன் டொலருக்கு இணையாக ஆபிரிக்கன் டொலரை உருவாக்க முற்பட்டதன் விளைவே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

இது போன்ற   தெளிவான பிந்திய ஞானோதயம் உக்கல் உக்ரேன் விடயத்திலும் 5/6 வருடங்களுக்கு பின் நிச்சயம் வரும். அது வரை காத்திருங்கள்.

39 minutes ago, goshan_che said:

இல்லை நான் ஈராக் யுத்தம் போகும் போதே அதை எதிர்த்தேன். நான் மட்டும் அல்ல 1.5 மில்லியன் மக்கள் லண்டனில் இறங்கி போராடினார்கள் யுத்தம் வேண்டாம் என.

மேற்கு செய்யும் எல்லாமுமே நல்லது இல்லை, எல்லாமுமே கெட்டதும் இல்லை.

ஒரு யுத்தத்துக்கு ஆயிரம் காரணம் இருக்கும் ஆனால் அடிப்படை காரணம் வலுவாக, வழுவற்றதாக இருக்க வேண்டும்.

பொஸ்னிய தலையீடு, கொசொவோ, 1ம் வளைகுடா யுத்தம், உக்ரேன் போன்றவை அடிப்படை காரணம் சரியான யுத்தங்கள்.

34 minutes ago, குமாரசாமி said:

இது போலவே புட்டினும் மேற்கின் உற்ற தோழனாக இருந்தார்.தொடர்ந்து இருக்க விரும்பினார்.

43 minutes ago, goshan_che said:

இதை பற்றி முன்பே நாம் போதுமானளவு உரையாடிவிட்டதால் தவிர்கிறேன்.

 

35 minutes ago, குமாரசாமி said:

இதே போல்தான் புட்டினை அழிக்க நினைக்க வெளிக்கிட்டு உலக பொருளாதாரமே தள்ளாட்டம்.

இது தவிர்க்க முடியாத விலை. ஆனால் இப்போ ஜேர்மனி 86% எரிவாயு கொள் அளவை அடைந்து விட்டது. ஒரு குறுகியகால எரிபொருள், பணவீக்கம் ஏற்றம் இருந்தாலும் - அதை காரணமாக்கி பூச்சிய காபன் பொருளாதாரததை நீண்ட கால நோக்கில் எழுப்புகிறார்கள்.

31 minutes ago, குமாரசாமி said:

நான் தொடர்ந்து இருக்கின்றேன். அமெரிக்காவில் வந்து வந்து போகின்றார்கள் என்ற சதாமின் நக்கல்....

இதில் கோபப்பட என்ன இருக்கிறது. வந்து வந்து போவதுதான் நாம் ஒரு மேம்பட்ட நாகரிகம் என்பதன் அடையாளம். புஷ் ஜூனியர் ஒரு கழண்ட கேஸ்🤣.

32 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியத்தை போல் அரபு ஒன்றியம் உருவாக்க முயற்சித்தார்.

இதையெல்லாம் கடைசியில் கைவிட்டு விட்டார் என நினைக்கிறேன். பிளேர் போய் சந்திக்கும் போது - அவர் முற்றாக சொல்வழி கேட்டு நடக்கும் பிள்ளை.

லொக்கபி வழக்கை கூட ஒரு மாரி ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டிருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பொஸ்னிய தலையீடு, கொசொவோ, 1ம் வளைகுடா யுத்தம், உக்ரேன் போன்றவை அடிப்படை காரணம் சரியான யுத்தங்கள்.

கொசோவோ பிரிவு முற்றிலும் சூழ்ச்சி அரசியல் கொண்டது.
கொசோவோ நிலப்பரப்பு சேர்பியாவுக்கு சொந்தமானது. மார்ஷல் டிட்டோ காலத்தில் அல்பேனியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு குடியிருக்க/தங்க உதவிசெய்ய்ப்பட்ட நிலம். ஆனால் அவர்கள் மக்கள் தொகையால் பல்கி பெருகி தமது நிலம் நாடு என போராட ஆரம்பித்தவர்கள். மேற்குலகு சேர்பியர்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியால் கொசோவோ தனிநாடு என அங்கீகரித்து விட்டது.
இன்றும் கோசோவோகாரரகள் தங்களை கோசோவோ என தனிப்பட சொல்ல மாட்டார்கள். கொசோவோ அல்பேனியர் என்று சேர்த்து விளிப்புடன் குறிப்பிடுவார்கள். 

13 minutes ago, goshan_che said:

இது தவிர்க்க முடியாத விலை. ஆனால் இப்போ ஜேர்மனி 86% எரிவாயு கொள் அளவை அடைந்து விட்டது. ஒரு குறுகியகால எரிபொருள், பணவீக்கம் ஏற்றம் இருந்தாலும் - அதை காரணமாக்கி பூச்சிய காபன் பொருளாதாரததை நீண்ட கால நோக்கில் எழுப்புகிறார்கள்.

நீங்கள் நினைப்பது போல் ஜேர்மனி நிலவரம் சுலபமானதாக இல்லை.அரசியல் வட்டத்திற்குள் பல குமுறல்கள் இருக்கின்றது.ஏதோ பூசி மெழுகிக்கொண்டு இருக்கின்றார்கள். எப்போது வெடிக்குமென தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

கொசோவோ பிரிவு முற்றிலும் சூழ்ச்சி அரசியல் கொண்டது.
கொசோவோ நிலப்பரப்பு சேர்பியாவுக்கு சொந்தமானது. மார்ஷல் டிட்டோ காலத்தில் அல்பேனியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு குடியிருக்க/தங்க உதவிசெய்ய்ப்பட்ட நிலம். ஆனால் அவர்கள் மக்கள் தொகையால் பல்கி பெருகி தமது நிலம் நாடு என போராட ஆரம்பித்தவர்கள். மேற்குலகு சேர்பியர்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியால் கொசோவோ தனிநாடு என அங்கீகரித்து விட்டது.
இன்றும் கோசோவோகாரரகள் தங்களை கோசோவோ என தனிப்பட சொல்ல மாட்டார்கள். கொசோவோ அல்பேனியர் என்று சேர்த்து விளிப்புடன் குறிப்பிடுவார்கள். 

உலகில் எல்லா அரசியலுமே சூழ்சி மயப்பட்டதுதான்.

கொசோவோ பாரம்பரியமாக சேர்பிய பகுதி என்பது உண்மை. அங்கே சேர்பியாவின் பல வரலாற்று சின்னங்கள் இருப்பதும் உண்மை.

ஆனால் டிட்டோ காலத்துக்கு முன்பே, பல நூற்றாண்டுகளாக அல்பேனியர் அங்கே குடியேற ஆரம்பித்து விட்டார்கள்.

உண்மையில் டிட்டோ அல்பேனியர்களை துருக்கிக்கி நாடு மாற்றும், துருக்கியில் படிபிக்கும் turkfication நடைமுறையை கைக்கொண்டார்.

கொசொவோவில் பெரும்பான்மை இனமாக அல்பேனியர்கள் உள்ளமைக்கு காரணம் அவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். 

டிட்டோ காலத்தில் மிக சொற்ப அளவு அல்பேனியரே அல்பேனியாவில் இருந்து கொசொவோ வந்தார்கள்.

இது வரலாறு. ஆனால், மிலோசவிச் காலத்தில் கொசாவோவுக்கு இருந்த சுய ஆட்சியையும் அவர் பறித்தார்.

எது எப்படியோ பல நூற்றாண்டுகளாக அது அல்பேனிய பெரும்பான்மை மண்.

அங்கே சேர்பிய படைகளை அனுப்பினார்.

இப்படி இல்லாமல் - நிகழ்காலத்தில் கொசோவோ எந்த பெரும்பான்மை என பார்த்து, அவர்களுக்கு ஒரு சுயாட்சியை மிலோசவிச் கொடுத்திருந்தால், போரும் வந்திராது. கொசோவோவும் பிரிந்திராது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொசாவோவில் கையில் எடுக்க பட்டது right to protect எனப்படும் உருவாகி வருவதாக சொல்லப்படும் சர்வதேச சட்டம்.

இலங்கையிலும் இதை பயன்படுத்துமாறுதான் நாம் 2008-9 இல் கோரினோம்.

ஆனால் இவர்கள் பயன்படுத்தவில்லை.

எமக்கு பயன்படுத்தவில்லை என்பதால் கொசோவோவில் பயன்படுத்தியது தவறு என கூற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை நான் ஈராக் யுத்தம் போகும் போதே அதை எதிர்த்தேன். நான் மட்டும் அல்ல 1.5 மில்லியன் மக்கள் லண்டனில் இறங்கி போராடினார்கள் யுத்தம் வேண்டாம் என.

மேற்கு செய்யும் எல்லாமுமே நல்லது இல்லை, எல்லாமுமே கெட்டதும் இல்லை.

ஒரு யுத்தத்துக்கு ஆயிரம் காரணம் இருக்கும் ஆனால் அடிப்படை காரணம் வலுவாக, வழுவற்றதாக இருக்க வேண்டும்.

பொஸ்னிய தலையீடு, கொசொவோ, 1ம் வளைகுடா யுத்தம், உக்ரேன் போன்றவை அடிப்படை காரணம் சரியான யுத்தங்கள்.

இதை பற்றி முன்பே நாம் போதுமானளவு உரையாடிவிட்டதால் தவிர்கிறேன்.

 

இது தவிர்க்க முடியாத விலை. ஆனால் இப்போ ஜேர்மனி 86% எரிவாயு கொள் அளவை அடைந்து விட்டது. ஒரு குறுகியகால எரிபொருள், பணவீக்கம் ஏற்றம் இருந்தாலும் - அதை காரணமாக்கி பூச்சிய காபன் பொருளாதாரததை நீண்ட கால நோக்கில் எழுப்புகிறார்கள்.

இதில் கோபப்பட என்ன இருக்கிறது. வந்து வந்து போவதுதான் நாம் ஒரு மேம்பட்ட நாகரிகம் என்பதன் அடையாளம். புஷ் ஜூனியர் ஒரு கழண்ட கேஸ்🤣.

இதையெல்லாம் கடைசியில் கைவிட்டு விட்டார் என நினைக்கிறேன். பிளேர் போய் சந்திக்கும் போது - அவர் முற்றாக சொல்வழி கேட்டு நடக்கும் பிள்ளை.

லொக்கபி வழக்கை கூட ஒரு மாரி ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டிருந்தார்கள். 

வளைகுடா யுத்தம் சரியான முடிவா? 🥺

18 minutes ago, goshan_che said:

கொசாவோவில் கையில் எடுக்க பட்டது right to protect எனப்படும் உருவாகி வருவதாக சொல்லப்படும் சர்வதேச சட்டம்.

இலங்கையிலும் இதை பயன்படுத்துமாறுதான் நாம் 2008-9 இல் கோரினோம்.

ஆனால் இவர்கள் பயன்படுத்தவில்லை.

எமக்கு பயன்படுத்தவில்லை என்பதால் கொசோவோவில் பயன்படுத்தியது தவறு என கூற முடியாது.

use and throw ? 

😏


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

வளைகுடா யுத்தம் சரியான முடிவா? 🥺

1ம் வளைகுடா யுத்தம் - குவைத் அமரிக்காவின்   நேசநாடு, அதை ஆக்கிரமித்தால் அமெரிக்கா உதவிக்கு போகும் என்ற அளவில் சரிதான். குவைத்தை அமெரிக்கா மீட்டிருக்காவிட்டால் use and throw என குற்றம் சாட்டி இருப்போம்.

சதாம் செய்த பேய் வேலை குவைத்தை ஆக்கிரமித்தது. என்ன காரணம் இருந்தாலும் - ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் போது பலதை யோசிக்க வேண்டும். இது அமெரிக்கா கூட வியட்நாமில் கற்ற பாடம்தான். 

சீனா தைவானில் இறங்க ஏன் யோசிக்கிறது?

இந்தியா ஏன் மறுபடியும் இலங்கையில் இறங்குவதை முடிந்தளவு தவிர்கிறது?

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க முன் இந்த நிதானம் மிக முக்கியம். இல்லாவிட்டால் ஆப்பிழுத்த நிலை வரக்கூடும்.

 

21 minutes ago, Kapithan said:

use and throw ? 

yes but we also can do the same, in our own way.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

கொசொவோவில் பெரும்பான்மை இனமாக அல்பேனியர்கள் உள்ளமைக்கு காரணம் அவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். 

டிட்டோ காலத்தில் மிக சொற்ப அளவு அல்பேனியரே அல்பேனியாவில் இருந்து கொசொவோ வந்தார்கள்.

என்னது பல நூற்றாண்டு காலமாகவா??????? சுத்த உருட்டுதான்...

ஐயோ சாமி எனக்கு உப்பிடி உருட்ட வராது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

என்னது பல நூற்றாண்டு காலமாகவா??????? சுத்த உருட்டுதான்...

ஐயோ சாமி எனக்கு உப்பிடி உருட்ட வராது. 😎

1389 முஸ்லிம் ஒட்டமான் சாம்ராஜ்ஜத்தின் சேர்பியா (ஸ்லாவிக், கிறீஸ்தவ) மீதான படை எழுப்பும் - அதில் ஒட்டமான்கள் வெற்றி கொண்ட battle of Kosovo வோடு ஆரம்பிக்கிறது கொசோவாவில் முஸ்லிம் அல்பேனியர்கள் வருகை. இதன் பின் பல நூற்றாண்டு காலமாக அருகில் இருந்த அல்பேனியாவில் இருந்து கொசோவா நிலப்பரப்பில் அல்பேனியரகள் குடியேறினர்.

1948 குடிசன வகை எடுப்பில் கொசோவாவில் அல்பேனியர் - 68.5%.

சேர்பியர் - 23.6% என்கிறது விக்கி.

https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Kosovo

மார்சல் டிட்டோ ஆட்சிக்கு வந்தது 1953.

ஆகவே டிட்டோவுக்கு முன்பே அல்பேனியர்கள் கொசோவோவில் அறுதி பெரும்பான்மை ஆகி விட்டனர் என்பதும், ஒரு பாரம்பரிய சேர்பிய மண்ணில் அவர்கள் இப்படி காலூன்ற நூற்றாண்டுகள் சென்றிருக்கும் என்பதும் வெளிப்படை தானே அண்ணை.

#உருப்படியா வரலாறை படித்தால் உருட்டுக்களுக்கு அஞ்சவேண்டியதில்லை. 

 

 

 

 

Link to comment
Share on other sites

சதாம், கடாபியின் நிலை நிச்சயமாக தனக்கு வரும் என சிரிய தலைவர் அசாட் முற்பாதுகாப்பாக தன்னை காப்பாற்ற ரஸ்யாவின் உதவியை நாடினார். அங்கும் நாறடித்தது மேற்கு.

அசாட் எப்படிப்பட்ட தலைவர் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது.( who cares)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

1948 குடிசன வகை எடுப்பில் கொசோவாவில் அல்பேனியர் - 68.5%.

சேர்பியர் - 23.6% என்கிறது விக்கி.

https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Kosovo

விக்கியில் யாரும் எப்படியும் எழுதலாம். அது உண்மை வரலாறு ஆகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

விக்கியில் யாரும் எப்படியும் எழுதலாம். அது உண்மை வரலாறு ஆகாது.

அது உண்மைதான் அண்ணை. நானும் விக்கியை ஆதாரமா காட்டுவதை விரும்புவதில்லைதான் ஆனால் ஓட்டமன் காலத்தில் இருந்து அல்பேனியர் கொசவோவில் வாழ தொடங்கி விட்டார்கள் என்பது வெளிப்படையாக எல்லாரும் ஏற்க்கும் ஒன்று.

இருங்கோ உங்களுக்கு நல்ல ஆதராம்மாய் தேடி எடுத்துதாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இருங்கோ உங்களுக்கு நல்ல ஆதராம்மாய் தேடி எடுத்துதாறன்.

The Serbs and Albanians are divided by the two most important defining elements of national identity in the Balkans: language and religion. The Albanians speak Albanian and are mainly Muslims, the Serbs speak Serbian and are mainly Orthodox Christians. The Albanians are descendants of the ancient Illyrians who were living in the southeast Balkans as far back as 700 BC. The Serbs arrived as part of the huge movement of Slavs in the sixth or seventh centuries. Some Serb historians claim that the Albanians in fact only moved into Kosovo in the 17th and 18th centuries. The Albanians maintain that they have been there ever since Illyrian times.[1] In any event, the two national groups have rarely lived together in peace and harmony. Moreover, the relationship between them has for centuries been one of barely disguised hatred punctuated by occasional outbursts of violence.

………

The importance of Kosovo to the Serbs is explained in large part by a battle fought there in 1389. The Battle of Kosovo Polje (or Kosovo Field) was fought chiefly between the Serbs and the Turks. The Turks won and as a consequence established their rule over the Serbs for the next five centuries.

………

While Kosovo has clear historical significance for the Serbs, it also has some importance to the Albanians. It was in Kosovo that the Albanian national revival started with the establishment in 1878 of the League of Prizren.[7]But when the modern Albanian state was created in 1912, it did not include Kosovo, which was instead to become part of Yugoslavia. The status of Kosovo has been disputed ever since. Kosovo did briefly become a part of Albania during World War II. Having taken over Albania, Italy created a nascent Greater Albania including Kosovo and some Macedonian and Montenegrin territory.[8] After the war, the victorious Yugoslav partisan leader, Tito, emerged predominant: Kosovo was returned to Yugoslavia.

……..

https://www.refworld.org/docid/3ae6a6b9c.html

 

மேலே உள்ளதன் சுருக்கம்.

1. அல்பேனியர்கள் தாம் கொசோவோவில் 700 BC முதல் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சேர்பிய வரலாற்று ஆசிரியர்கள் அவர்கள் 17, 18ம் நூற்றாண்டில் வந்ததாக சொல்லிறார்கள் (சேர்பியர்களே அவர்கள் நூற்றாண்டுகளாக கொசோவோவில் இருப்பதை ஏற்கிறார்கள்).

2. நூற்றாண்டுகளாக கொசாவோவில் சேர்பிய, அல்பேனிய உறவுகள் மோசமாக இருந்தன.

3. அல்பேனிய தேசிய இன மீள் எழுச்சியானது கொசோவோவில் 1878 இல் ஆரம்பமாகியது.

4. இரெண்டாம் உலக யுத்தத்தின் போது இத்தாலி, கொசோவோவை (இன்னும் சில பகுதிகளை சேர்த்து) அல்பேனியாவுடன் சேர்த்தது.

இதில் இருந்து கொசோவோவில் அல்பேனியர் வருகையும், இருப்பும் நூற்றாண்டுகாளாய் நடந்தது என்பது தெளிவாகிறது.

30 minutes ago, குமாரசாமி said:

விக்கியில் யாரும் எப்படியும் எழுதலாம். அது உண்மை வரலாறு ஆகாது.

 

நான் தந்த ஆதாரம் நம்பகமானது என்பதற்கு ஆதாரம்👇.

https://www.unhcr.org/uk/news/latest/2007/6/4671697f4/unhcr-relaunches-refworld-state-of-art-online-protection-tool.html

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
    • 40 இல் (பாண்டிச்சேரி உட்பட) எதுவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,  வாக்குச்சாவடிக்குப் போய் போட்டால்தான் வாக்கை எண்ணுவார்கள்.😉  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.