Jump to content

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கிய கடன் குறித்து சீனாவின் ஆச்சரிய முடிவு


Recommended Posts

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கிய கடன் குறித்து சீனாவின் ஆச்சரிய முடிவு

 

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார்.

அண்மையில் செனகலில் நடைபெற்ற சீன-ஆபிரிக்கா ஒத்துழைப்பு மன்றத்தின் 8வது அமைச்சர்கள் மாநாட்டில் சீன இராஜாங்க அமைச்சர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலான பொதுவான அபிவிருத்திக்கான புதிய சகாப்தத்திற்கான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

2021 நவம்பரில் செனகலின் டாக்கரில் நடைபெற்ற சீனா-ஆபிரிக்க ஒத்துழைப்புக்கான மன்றத்தின் அமைச்சர்கள் மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்குறுதியளிக்கப்பட்ட 10 பில்லியன் டொலர்களில் 3 பில்லியனுக்கும் அதிகமான கடன் வசதிகள் ஆபிரிக்க நிதி மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆபிரிக்காவின் முன்னுரிமை திட்டங்களுக்கு கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளின் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய சீன இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியதாவது:

“பல்வேறு சிரமங்கள் இருந்தபோதிலும், அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் செயல்படுத்துவதில் சீனா தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆபிரிக்க நிதி நிறுவனங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட $10 பில்லியன் கடன் வசதிகளில் $3 பில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. 7 மாதங்களுக்குள், சீனாவின் ஆபிரிக்க பொருட்களின் இறக்குமதி 70% ஆக அதிகரித்தது. சீன நிறுவனங்கள் ஆபிரிக்காவில் $2.7 பில்லியன் முதலீடு செய்துள்ளன. ஆபிரிக்காவுக்கு 10 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை சீனா ஊக்குவிக்கும்.

இந்த ஆண்டு இதுவரை, சீனா தனது ஏற்றுமதியில் 98% வரிகளை தள்ளுபடி செய்ய 12 ஆபிரிக்க நாடுகளுடன் கடிதங்களை பரிமாறிக்கொண்டது. எத்தியோப்பியா, ஜிபூட்டி, சோமாலியா மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு அவசரகால உணவு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,000 கிராமங்களில் உள்ள 100 நிறுவனங்களுக்கு விவசாயத் துறையில் முதலீடுகளை அதிகரித்து, வறுமையைக் குறைக்கவும், ஆபிரிக்காவில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் வேலைகளை உருவாக்கவும் சீனா தொடர்ந்து உதவும்.
ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக அதிக வளங்களைத் தொடர்ந்து திரட்டுவோம். சீன மற்றும் ஆப்பிரிக்க மக்களுக்கு இடையேயான நட்புறவை ஆழமாக்குவதற்கும், பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/203598

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார்.

ஐயே!  கொஞ்சம் சிங்கார சிரிலங்காவயும் கவனியுங்களன்....😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஐயே!  கொஞ்சம் சிங்கார சிரிலங்காவயும் கவனியுங்களன்....😁

ஸ்ரீலங்கா... சேதன உரத்தை திருப்பி அனுப்பியது, முதல் குற்றம்.
இரண்டாவது... சீனனுக்கு  சொந்தமான அம்பாந்தோட்டை  துறைமுகத்துக்கு,
அவனுடைய... கப்பல் வரும் போது, இப்ப வரவேண்டாம் என்று சொன்னது எல்லாம்...
சீனாவை புண்படுத்தி இருக்கும். அதனால்... கடன் தள்ளுபடி இல்லை.🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

இந்த அப்பிடிக்க நாடுகள், சீனாவுடன் மட்டுமே பேரத்தை நடத்தியவை.

சில நிபந்தனைகள் இருக்கும் என்று நினைக்கிறன், உண்மையில் இது IMF க்கும், கிந்தியாவுக்கும் பலத்த அடி.

ஏனெனில், இதன் வழியாக, சீன காட்டி உள்ளது, கடன்களை  வைத்து, நாளாந்த தேவைகள், முக்கியமாக அத்தியாவசிய தேவைகளை நெருக்கடிக்குள் தள்ளி, சீன கடன்களை அறவிடாது.

மாறாக, அடந்த நெருக்கடிகளை ஏற்றப்படுத்தாமல், இரு தரப்பும் இங்க கூடிய கடன் மறு சீரமைப்புக்கு சென்னை வந்தடையும் என்று.

மேற்றக்கால், imf ஆல் இஹை செய்ய முடியாது.

பந்து சொறி சிங்களத்தின் கையில் என்ற சீன அறிவிப்பின் பின்னணியும் இது போன்றதே, சீனாவுடன் மட்டும் சொறி சிங்களம் பேரம் நடத்தினால், வாய்ப்புகள் இருக்கிறது என்பது.

சிங்களம் மேற்கை தள்ளிவைக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது சீனா.

சீனாவின் இந்த முடிவு, G7 ஆல் அண்மையில் அறிவிக்கப்பட்ட ஒன்றுமே இல்லாத 600 billon, சீனாவின் பட்டுப் பாதை   போன்ற திட்டத்துக்கும், மறைமுக அடி.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா... சேதன உரத்தை திருப்பி அனுப்பியது, முதல் குற்றம்.
இரண்டாவது... சீனனுக்கு  சொந்தமான அம்பாந்தோட்டை  துறைமுகத்துக்கு,
அவனுடைய... கப்பல் வரும் போது, இப்ப வரவேண்டாம் என்று சொன்னது எல்லாம்...
சீனாவை புண்படுத்தி இருக்கும். அதனால்... கடன் தள்ளுபடி இல்லை.🤣

இப்பத்தான் ஒரு வீடியோ பார்த்துட்டு வாறன்.

தலைவர் பிரபாகரன், இந்தியா ஒருபோதுமே தமிழீழத்துக்கு ஆதரவு தரப்போவதில்லை என்று நம்பியதால், இறுதிக்கணம் வரை போராட தீர்மானித்தார் என்று.

அது உண்மையாக இருக்கலாம்.

இன்று சீனாக்காரன் அடித்த ஆப்பு, அதனை பொய்யாக்க போகிறது. ஆனாலும் இந்தியா எதுவுமே செய்யமுடியாத கையறுநிலைக்கு போய் விட்டது.

இப்போது, மேற்கு, சீனா மட்டுமே களத்தில். இந்தியா பவலியனில் இருந்து குச்சி ஐஸ் ருசித்தபடி, பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். 🤗

காரணம், சீனா உள்ள புகுந்து இவ்வளவு ஆழமாக வேரூன்றும் வரை, சிங்கள காது குத்தல்களை கேட்டுக் கொண்டு இருந்து, தலைக்கு மேலே வெள்ளம் புக விட்டமையும், இலங்கைத்தீவில், இந்தியாவின் பரிதாபமான புலனாய்வுத் திறமை குறித்த மேலை நாடுகளின் மதிப்பீடும்.   😔

இந்தியாவின் முக்கிய பிரச்சனையே, அதனை தமிழனும் நம்பப்போவதில்லை, சிஙகளவனும் நம்பப்போவதில்லை. 🙄

இதனை ஊரில் சொல்வார்கள், வளவள உறவிலும் பார்க்க, வைரம் பாய்ந்த பகை நல்லது என்று.

இந்தியா சிங்களத்துடன் வைத்திருப்பது வளவள உறவு.

சீனா சிங்களத்துடன் வைத்திருப்பது வைரம் பாய்ந்த உறவு. 😔

சீன கப்பலை இப்ப வரவேண்டாம் என்று சொன்னதை, நாமே நம்பவில்லை. அது சும்மா என்று எங்களுக்கே தெரியுமே.

ஆனா, இந்தியா நம்பீடும். ஏனெண்டா அது சிங்கள ஸ்பெஷல் காது குத்தல் ஊத்தப்பம்... 😁

Edited by Nathamuni
  • Like 3
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பந்து சொறி சிங்களத்தின் கையில் என்ற சீன அறிவிப்பின் பின்னணியும் இது போன்றதே, சீனாவுடன் மட்டும் சொறி சிங்களம் பேரம் நடத்தினால், வாய்ப்புகள் இருக்கிறது என்பது.

 

இதுதான் சீனாவின் செய்தி.

ஆனால் இலங்கை சீனாவிடம் மட்டும் கடன் வாங்கவில்லை.

சர்வதேச சந்தை, ஜப்பான், இந்தியா இவையும் சீனாவுக்கு நிகராக கொடுத்துள்ளன.

சீனா தனது கடனை தள்ளுபடி செய்வதோடு இலங்கையின் ஏனைய கடன்களையும் அடைக்க உதவ வேண்டும். 

உதவ கூடிய நிலையில் சீனா இருக்கிறதா?

இருந்தாலும் இந்தியா இன்னும் வெள்ளி பார்த்தபடியே இருக்குமா?

சீனாவில் இப்போ பொருளாதாரம் அவ்வளவு நன்றாக இல்லை என்கிறார்கள்👇.

https://www.theguardian.com/business/2022/aug/28/crunch-time-china-tries-to-fend-off-property-crash-global-economy

43 minutes ago, Nathamuni said:

இப்போது, மேற்கு, சீனா மட்டுமே களத்தில். இந்தியா பவலியனில் இருந்து குச்சி ஐஸ் ருசித்தபடி, பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். 🤗

 

நான் நினைக்கிறேன் இப்போ நடந்து கொண்டிருப்பது ஒரு கூட்டணி உருவாக்கத்தின் ஆரம்ப நிலை (early stages of alliance building). 

மேற்கு பிளஸ் (யுஎஸ், யூகெ, ஈயு, ஜப்பான், கனடா, தென்கொரியா, தைவான், அவுஸ், நியூசி)

மேற்கு மைனஸ் ( ரஸ்யா, சீனா, வடகொரியா, ஈரான்)

நடுநிலை நாடுகள் - இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா

இதில் மேற்கு+ கூட்டணி வலுவான உறவில் உள்ளது (நேட்டோ, 5 eyes). 

ஆனால் மேற்கு மைனஸ் கூட்டணியில் ரஸ்யாவா, சீனாவா தலைவர் என்பதில் போட்டி.

அத்தோடு இதில் சைனாவின் தலைமையை ஏற்க இந்தியாவுக்கு விருப்பம் இல்லை. ரஸ்யா தலைமையை பகிர தயார் (ஐரோப்பாவில் ரஸ்யா, ஆசியாவில் சீனா) என்றாலும், சீனா போட்டியை சீனா vs அமெரிக்கா என வைத்திருக்கவே விரும்புகிறது.

இதில் இந்தியா தனித்து சீனாவை இலங்கையில் எதிர்க்கவும் முடியாது. அதேசமயம் இலங்கையை ஒட்டு மொத்தமாக சீனாவிடம் கைகழுவுவது இந்திய நலனுக்கு பேராபத்து.

ஆகவே இலங்கையின் கடனை சீனா அடைத்து, இலங்கை சீனாவின் வசமாகும் நிலை வந்தால் - இந்தியா மேற்கின் உதவியுடன் இலங்கையில் இறங்கும். அப்போ சீனா ஒரு பெரும் கடற்போருக்கும், எல்லைகளில் நிலப்போருக்கும் தயாராகவேண்டும்.

சீனா இப்போதைக்கு அதை விரும்பவில்லை.

மேலும் இப்படி இந்தியாவை boxed in to a corner ஆக்கி, வேறு வழியில்லாமல் மேற்கிடம் சேரவைக்க இப்போதைக்கு சீனா விரும்பவில்லை. 

ஆகவேதான் இலங்கையை சீனா கொஞ்சம் தள்ளி நின்று டீல் பண்ணுகிறது. 

கால ஓட்டத்தில் இந்த கூட்டணி இறுதியாகும்.

யார் கண்டது - இலங்கையில் சீனா தலையிட கூடாது, அருணாசல பிரதேச எல்லையில் ஒரு சுமூக உடன்பாடு என்ற ஒப்பந்த அடிப்படையில் சீனாவின் கூட்டுக்குள் இந்தியாவே போக கூடும்.

 

“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு”.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது விசவிளையாட்டு 

சீனா நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் 😷?

ஏழை மக்களை இவ்வாறு ஏமாற்றி அடிமையாக்கும் திட்டமே நவீன காலணித்துவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது விசவிளையாட்டு 

சீனா நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் 😷?

ஏழை மக்களை இவ்வாறு ஏமாற்றி அடிமையாக்கும் திட்டமே நவீன காலணித்துவம் 

சீனாவுக்குள் பல எதிர்மறையான பொருளாதார நிகழ்வுகள் நடப்பதாக சொல்கிறார்கள்.

அத்தோடு இங்கே மேற்கில் ரிசெசன் (பொருளாதார பின்னடைவு நிலை) வரப்போகுதாம். 2 வருடம் வரைக்கும் நிலைக்குமாம்.

அப்படி வந்தால் முதலில் சனம் வெட்ட போவது?

உணவை அல்ல, வாழிட செலவை அல்ல. 

சீனாவில் இருந்து வரும் போன், டிவி, சப்பாத்து, உடுப்பு, சோப்பு, சீப்பைத்தான்.

ஆகவே இது செலவீனங்களை அறவிட முடியா கடனாக அறிவித்து, சீனா தற்காலிகமாக தனது உலக விஸ்தரிப்பை கைவிடும் நகர்வாயும் இருக்கலாம்.

எந்த சாம்ராஜ்யத்துக்கும் உள்நாட்டில் அமைதி, ஸ்திரதன்மை முக்கியம். குறிப்பாக சீனா போன்ற ஒரு சர்வச்திகார, ஒற்றையாட்சி நாட்டுக்கு. 

உள்நாட்டை ஸ்திரப்படுத்த வெளி விடயங்களில் சீனா தன் ஈடுபாட்டை குறைப்பதன் ஒரு அங்கமாயும் இது இருக்கலாம்.

ஒரு காலத்தில் இலங்கையில் இருந்து சோழ படைகள் வெளியேறவும் இப்படி ஒரு நிலையே காரணமாக இருந்தது (ஈழத்தை விட சோழத்தை தக்க வைப்பது முக்கியமாகி போனது).

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

சீனா தனது கடனை தள்ளுபடி செய்வதோடு இலங்கையின் ஏனைய கடன்களையும் அடைக்க உதவ வேண்டும். 

உதவ கூடிய நிலையில் சீனா இருக்கிறதா?

சீன சொல்லுவது, அதன் கடனை, IMF மற்றும் மேற்கு கடன்களுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்பது.  


மற்றவர்களிடம், அதுவும் சொறி சிங்களம் இறைமை (isb - international sovereign bonds) என்று அடகு வைத்து வந்த கடனை சீனவுக்கு தொடர்பு இல்லாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

இது விசவிளையாட்டு 

சீனா நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்பது எல்லாம் 😷?

ஏழை மக்களை இவ்வாறு ஏமாற்றி அடிமையாக்கும் திட்டமே நவீன காலணித்துவம் 

விசுகர்,

நாங்கள் யாரினது/ எந்த system த்தினது  அடிமை?

19 hours ago, goshan_che said:

சீனாவுக்குள் பல எதிர்மறையான பொருளாதார நிகழ்வுகள் நடப்பதாக சொல்கிறார்கள்.

அத்தோடு இங்கே மேற்கில் ரிசெசன் (பொருளாதார பின்னடைவு நிலை) வரப்போகுதாம். 2 வருடம் வரைக்கும் நிலைக்குமாம்.

அப்படி வந்தால் முதலில் சனம் வெட்ட போவது?

உணவை அல்ல, வாழிட செலவை அல்ல. 

சீனாவில் இருந்து வரும் போன், டிவி, சப்பாத்து, உடுப்பு, சோப்பு, சீப்பைத்தான்.

ஆகவே இது செலவீனங்களை அறவிட முடியா கடனாக அறிவித்து, சீனா தற்காலிகமாக தனது உலக விஸ்தரிப்பை கைவிடும் நகர்வாயும் இருக்கலாம்.

எந்த சாம்ராஜ்யத்துக்கும் உள்நாட்டில் அமைதி, ஸ்திரதன்மை முக்கியம். குறிப்பாக சீனா போன்ற ஒரு சர்வச்திகார, ஒற்றையாட்சி நாட்டுக்கு. 

உள்நாட்டை ஸ்திரப்படுத்த வெளி விடயங்களில் சீனா தன் ஈடுபாட்டை குறைப்பதன் ஒரு அங்கமாயும் இது இருக்கலாம்.

ஒரு காலத்தில் இலங்கையில் இருந்து சோழ படைகள் வெளியேறவும் இப்படி ஒரு நிலையே காரணமாக இருந்தது (ஈழத்தை விட சோழத்தை தக்க வைப்பது முக்கியமாகி போனது).

 

ஆசை யாரைத்தான் விட்டது கோசான் ?

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

விசுகர்,

நாங்கள் யாரினது/ எந்த system த்தினது  அடிமை

😉

உள்ளதில் ஒன்றைத் தான் தெரிவு செய்யமுடியும்

எனக்கு கொஞ்சமாவது ஜனநாயக பண்புகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்யக்கூடிய நிலைப்பாடு சரியாக தெரிவாகும்.

நான் பிரான்ஸை விரும்புவதும் அந்த அடிப்படையில் தான். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

சீன சொல்லுவது, அதன் கடனை, IMF மற்றும் மேற்கு கடன்களுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்பது.  


மற்றவர்களிடம், அதுவும் சொறி சிங்களம் இறைமை (isb - international sovereign bonds) என்று அடகு வைத்து வந்த கடனை சீனவுக்கு தொடர்பு இல்லாதது. 

ஓம். அப்படித்தான் சொல்கிறது - ஆனால் இப்படி தொடர்பு படுத்தாமல் சீனாவின் கடனை தனியே இலங்கை டீல் பண்ணி, அதை சீனா தள்ளி வைக்க - சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது எதை?

ஏனென்றால் எல்லாருடமும் கடன் வாங்கியுள்ள இலங்கை ஒருவரோடு மட்டும் சலுகை முறையில் டீல் பண்ணினால் மற்றயவர்கள் குழம்பிவிடுவார்கள்.

அப்படி அவர்கள் குழம்பினால் போகட்டும் என இலங்கை தன்னோடு 100% வரட்டும் (வடகொரியா போல்) என சீனா எதிர்பார்கிறதா?

1 hour ago, Kapithan said:

 

ஆசை யாரைத்தான் விட்டது கோசான் ?

😉

சீரியசா கதைச்சு கொண்டு நிக்கிறம், தள்ளிபோய் விளையாடுங்கோ.

On 29/8/2022 at 14:54, goshan_che said:

யார் கண்டது - இலங்கையில் சீனா தலையிட கூடாது, அருணாசல பிரதேச எல்லையில் ஒரு சுமூக உடன்பாடு என்ற ஒப்பந்த அடிப்படையில் சீனாவின் கூட்டுக்குள் இந்தியாவே போக கூடும்.

👆 இதையும் எனது ஆசை என்பீர்களா கற்ப்ஸ்?

இதைதான் அப்போதே சொன்னேன் ஒரு விசயத்தை நுட்பமாக பாருங்கள் என்று (nuanced approach). 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆசை யாரைத்தான் விட்டது கோசான் ?

சீனாவில் இருக்கும் பிரச்சனைகளை மேற்கு ஊடகங்கள்  ஊதி  காட்டுகின்றன.

ஆய்வுகளை மேற்கு ஊடகங்கள் தவிர்க்கின்றன, அல்லது அவை தமது அனுபவ கண்ணாடி ஊடாகவே பார்க்கின்றன.   

ஜப்பானிய ஊடகங்கள், அவர்களின் வீட்டு கிரெடிட் பிரச்சனை  மற்றும் தொலைந்த தசாப்த கண்ணாடி  ஊடக பார்க்கின்றனர் (இதை விளக்க வேறு பதிவு வேண்டும்).

சீன இந்த ஏற்றுமதியில் பிரச்சனை வரலாம் என்பதை கையாள்வதற்காக dual circulation policy என்று  2020 இல் இருந்து தொடங்கி விட்டது.

உ.ம். 2010 us இன் உள்ளக சந்தை 1.8 tr , சீனாவின் உள்ளக சந்தை இதிலும் குறைவு 2010 இல். 2020 இல், us இன் உள்ளக சந்தை 4.8 tr, சீனாவின் 6.8 tr.

இது சுருக்கமாக எனது தனிப்பட்ட புரிதல், குறிப்பாக சீனா வீட்டு சந்தை நெருக்கடி.

குறிப்பாக இந்த வீட்டு சந்தை நெருக்கடிக்கு சீன அரசே காரணம், ஏனெனில் சீன அரசு unproductive credit ஐ குறைக்க முயற்சிக்கிறது (GUARDIAN உம் இதை சொல்கிறது). 

2008 - 2009 இ மேற்கில் வீட்டு கடனில் (mortgage)   தொடங்கிய credit crunch க்கும், சீனாவின்  இப்போதை வீடு சந்தை, விலை நெருக்கடிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கிறது.

வெளிப்பைடையாக பார்த்தால், சீன அரசு (unproductive) credit ஐ குறைக்கும் கொள்கையை கையில் எடுத்து இருக்கிறது, ஆனாலும், interbank lending பாதிக்கப்படவில்லை.

2008 -2009 மேற்கு    நிலையை ஒப்பிட்டால், மேற்கு அரசுகள் உறுதி மொழி வழங்கியும் interbank lending முடங்கி, banking system குலையும் நிலைக்கு வந்து,  மேலும் நிலை மோசமாவதை தடுப்பதற்கு  QE யும் தொடங்கி, நீண்டு, துர்பிரோயகம் செய்யப்படும் நிலைக்கு வந்தது  , அதையும் மேற்கு அரசுகள், மத்திய வங்கிகள் நியாயப்படுத்தின.   

மேற்கு நிலைக்கு காரணம், கடன்கள் வழங்கப்பட மற்றும் அவை package செய்யப்படு அதன் அடிப்படையில் credit  default swap க்கு வங்கிகள் தமக்கிடையே கொடுத்த உத்தரவாதம். இதனால், எதாவது ஒரு வங்கி credit default swap உத்தரவாதத்தை உறுதிபடுத்த முடியாமல் போனால் அல்லது வங்கி ககுலைந்தால், முழு (interbank) system மும் குலையும் நிலைக்கு வந்தது. 

சீன வங்கிகள் வீட்டு கடன்களில் தாராளம் காட்டியது, அனால் மேலே சொன்ன மேற்கின் முறையில் அல்ல. கடன் வழங்கும் நிபந்தனைகளில் தனிப்பட்ட வடிக்கையாளர் கிரெடிட் ரேட்டிங் அடிப்படையில்  தாராளம் காட்டியது.

மேற்கில் போல, கிரெடிட் ரேட்டிங் மிக மோசமான கடன்களையும், கிரெடிட் ரேட்டிங் மிக கூடிய மற்றும் மத்திம கடன்களையும் சிறிய  பகுதிகளாக பிரித்து கலந்து, அதன் அடிப்படையில் credit default swap ஐ உருவாக்கவில்லை சீன வங்கிகள்.   

மற்றது, சீனாவில் எந்த வீடு கடன்களும் ஆக குறைந்து 30%, கடன்பெறுபவர்கள் முற்பணமாக (DEPOSIT) ஆக போட வேண்டும்.   மேற்கில் நடந்த, 0% முற்பணம், வருமாமனம்  தேவை இல்லாத வீடு கடன் பெருவாரியாக நடக்கவில்லை. ஆயினும், கிரெடிட்தாராளமாக இருந்த வேளையில் ஆங்காங்கே இப்படி   (0% முற்பணம், வருமாமனம்  தேவை இல்லாத) சீனாவில் நடந்து இருக்கலாம்.

சீன அரசு இவ்வளவு கொள்கை அடிப்படையில் கட்டுப்படுத்தியும், கறாராக இருந்தும், சீனாவில் வீடு விலை சராசரயாக 30% குறைந்து உள்ளது, பங்குகள் 50% discounted ஆக  உள்ளது.

இதில் பிரச்னை, வீடு கட்டி விற்கும் கம்பனிகள், தொடர்புபட்ட வங்கிகள், மற்றும் வடிக்கையாளர்களுக்கே.

Aggregate அடிப்படையில், சீன அரசு கட்டுப்படுத்த முயசிஸ்க்கும் (unproductive) கிரெடிட் (இப்போதைய சராசரி வீடு விலை அடிப்படையில், மொத்த கிரெடிட் இல் 30% என்ற  எடுகோள் அடிப்படையில்) வேறு productive துறைகளுக்கு வந்தடையும் அல்லது சீன அரசு திசை திருப்பி விடும், முக்கியமாக அதி உயர் தொழில் நுட்பம, விஞ்ஞானம், ஆராய்ச்சி,  சக்தி, உணவு தன்னிறைவு, தேசிய கட்டுமானம் போன்றவை.

மற்றது, பங்கு சந்தை திரியில் ஓர் youtube பதிவு செய்து  இருந்தேன்,அதில் சீன நிதி ஒழுங்குமுறையாளர்கள் (regulators) எவ்வளவு விழிப்பாக இருக்கிறார்கள் என்பது, குறிப்பாக வங்கித்துறை, நிதி துறை மீது வீடு கடன், கிரெடிட், விலை போன்றவற்றின் சடுதியான தாக்கம் பற்றி.

சீனாவின், வீடு விலை, கடன் நெருக்கடி மேற்றகில் தாக்கத்தை ஏற்படுதக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில், பல சீனர்கள், சீனாவில் வீட்டை வைத்து கடன் எடுத்து, மேற்கில் வீடு வாங்கி உள்ளார்கள். அறிந்த வரை, சிங்கப்பூர் இல் இருந்த சிலநிதி நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருந்தது.     

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kadancha said:

சீனாவில் இருக்கும் பிரச்சனைகளை மேற்கு ஊடகங்கள்  ஊதி  காட்டுகின்றன.

ஆய்வுகளை மேற்கு ஊடகங்கள் தவிர்க்கின்றன, அல்லது அவை தமது அனுபவ கண்ணாடி ஊடாகவே பார்க்கின்றன.   

ஜப்பானிய ஊடகங்கள், அவர்களின் வீட்டு கிரெடிட் பிரச்சனை  மற்றும் தொலைந்த தசாப்த கண்ணாடி  ஊடக பார்க்கின்றனர் (இதை விளக்க வேறு பதிவு வேண்டும்).

சீன இந்த ஏற்றுமதியில் பிரச்சனை வரலாம் என்பதை கையாள்வதற்காக dual circulation policy என்று  2020 இல் இருந்து தொடங்கி விட்டது.

உ.ம். 2010 us இன் உள்ளக சந்தை 1.8 tr , சீனாவின் உள்ளக சந்தை இதிலும் குறைவு 2010 இல். 2020 இல், us இன் உள்ளக சந்தை 4.8 tr, சீனாவின் 6.8 tr.

இது சுருக்கமாக எனது தனிப்பட்ட புரிதல், குறிப்பாக சீனா வீட்டு சந்தை நெருக்கடி.

குறிப்பாக இந்த வீட்டு சந்தை நெருக்கடிக்கு சீன அரசே காரணம், ஏனெனில் சீன அரசு unproductive credit ஐ குறைக்க முயற்சிக்கிறது (GUARDIAN உம் இதை சொல்கிறது). 

2008 - 2009 இ மேற்கில் வீட்டு கடனில் (mortgage)   தொடங்கிய credit crunch க்கும், சீனாவின்  இப்போதை வீடு சந்தை, விலை நெருக்கடிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கிறது.

வெளிப்பைடையாக பார்த்தால், சீன அரசு (unproductive) credit ஐ குறைக்கும் கொள்கையை கையில் எடுத்து இருக்கிறது, ஆனாலும், interbank lending பாதிக்கப்படவில்லை.

2008 -2009 மேற்கு    நிலையை ஒப்பிட்டால், மேற்கு அரசுகள் உறுதி மொழி வழங்கியும் interbank lending முடங்கி, banking system குலையும் நிலைக்கு வந்து,  மேலும் நிலை மோசமாவதை தடுப்பதற்கு  QE யும் தொடங்கி, நீண்டு, துர்பிரோயகம் செய்யப்படும் நிலைக்கு வந்தது  , அதையும் மேற்கு அரசுகள், மத்திய வங்கிகள் நியாயப்படுத்தின.   

மேற்கு நிலைக்கு காரணம், கடன்கள் வழங்கப்பட மற்றும் அவை package செய்யப்படு அதன் அடிப்படையில் credit  default swap க்கு வங்கிகள் தமக்கிடையே கொடுத்த உத்தரவாதம். இதனால், எதாவது ஒரு வங்கி credit default swap உத்தரவாதத்தை உறுதிபடுத்த முடியாமல் போனால் அல்லது வங்கி ககுலைந்தால், முழு (interbank) system மும் குலையும் நிலைக்கு வந்தது. 

சீன வங்கிகள் வீட்டு கடன்களில் தாராளம் காட்டியது, அனால் மேலே சொன்ன மேற்கின் முறையில் அல்ல. கடன் வழங்கும் நிபந்தனைகளில் தனிப்பட்ட வடிக்கையாளர் கிரெடிட் ரேட்டிங் அடிப்படையில்  தாராளம் காட்டியது.

மேற்கில் போல, கிரெடிட் ரேட்டிங் மிக மோசமான கடன்களையும், கிரெடிட் ரேட்டிங் மிக கூடிய மற்றும் மத்திம கடன்களையும் சிறிய  பகுதிகளாக பிரித்து கலந்து, அதன் அடிப்படையில் credit default swap ஐ உருவாக்கவில்லை சீன வங்கிகள்.   

மற்றது, சீனாவில் எந்த வீடு கடன்களும் ஆக குறைந்து 30%, கடன்பெறுபவர்கள் முற்பணமாக (DEPOSIT) ஆக போட வேண்டும்.   மேற்கில் நடந்த, 0% முற்பணம், வருமாமனம்  தேவை இல்லாத வீடு கடன் பெருவாரியாக நடக்கவில்லை. ஆயினும், கிரெடிட்தாராளமாக இருந்த வேளையில் ஆங்காங்கே இப்படி   (0% முற்பணம், வருமாமனம்  தேவை இல்லாத) சீனாவில் நடந்து இருக்கலாம்.

சீன அரசு இவ்வளவு கொள்கை அடிப்படையில் கட்டுப்படுத்தியும், கறாராக இருந்தும், சீனாவில் வீடு விலை சராசரயாக 30% குறைந்து உள்ளது, பங்குகள் 50% discounted ஆக  உள்ளது.

இதில் பிரச்னை, வீடு கட்டி விற்கும் கம்பனிகள், தொடர்புபட்ட வங்கிகள், மற்றும் வடிக்கையாளர்களுக்கே.

Aggregate அடிப்படையில், சீன அரசு கட்டுப்படுத்த முயசிஸ்க்கும் (unproductive) கிரெடிட் (இப்போதைய சராசரி வீடு விலை அடிப்படையில், மொத்த கிரெடிட் இல் 30% என்ற  எடுகோள் அடிப்படையில்) வேறு productive துறைகளுக்கு வந்தடையும் அல்லது சீன அரசு திசை திருப்பி விடும், முக்கியமாக அதி உயர் தொழில் நுட்பம, விஞ்ஞானம், ஆராய்ச்சி,  சக்தி, உணவு தன்னிறைவு, தேசிய கட்டுமானம் போன்றவை.

மற்றது, பங்கு சந்தை திரியில் ஓர் youtube பதிவு செய்து  இருந்தேன்,அதில் சீன நிதி ஒழுங்குமுறையாளர்கள் (regulators) எவ்வளவு விழிப்பாக இருக்கிறார்கள் என்பது, குறிப்பாக வங்கித்துறை, நிதி துறை மீது வீடு கடன், கிரெடிட், விலை போன்றவற்றின் சடுதியான தாக்கம் பற்றி.

சீனாவின், வீடு விலை, கடன் நெருக்கடி மேற்றகில் தாக்கத்தை ஏற்படுதக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில், பல சீனர்கள், சீனாவில் வீட்டை வைத்து கடன் எடுத்து, மேற்கில் வீடு வாங்கி உள்ளார்கள். அறிந்த வரை, சிங்கப்பூர் இல் இருந்த சிலநிதி நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருந்தது.     

நன்றி கடஞ்சா,

குறிப்பாக மேற்கின் subprime சிக்கலில் இருந்து சீனாவின் தற்போதைய சிக்கல் எப்படி வேறு படுகிறது என விளக்கியமைக்கு.

அதேபோல் ஜப்பானில் நிகழ்ந்த stagflation அதே போல் சீனாவில் நடக்கும் என்பதும் இல்லைத்தான்.

ஆனாலும் எல்லா முதலாளிதுவ சந்தையிலும் boom and bust தவிர்க்க முடியாதது என  நான் எண்ணுகிறேன். கிட்டதட்ட 1995/96 இல் இருந்து சீனா boom மட்டும்தான். எப்படியோ விரைவில் ஒரு bust வரவேண்டியது நியதி என நீங்கள் கருதவில்லையா?

இது சீனாவுக்கு மரண அடி என நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு bust அல்லது downturn சீனாவை அதன் வெளிவிவகாரத்தில் சற்றே நிதானிக்க செய்யலாம் என எண்ணுகிறேன்.

அமெரிக்காவும் இதை முன்பு செய்துள்ளது. isolationist கொள்கை என்பார்கள். உள்நாட்டில் கவனத்தை அதிகம் வைத்திருத்தல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் fact உடன் விளக்கமாக தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

இன்னொருவர் தனது சுய விருப்பையும் சேர்த்து கருத்தை முன்வைக்கிறார். 

நான் வேடிக்கை பார்க்கிறேன். அம்புட்டுதே 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

 

நான் வேடிக்கை பார்க்கிறேன். அம்புட்டுதே 😉

அவரவருக்கு இயலுமானதை செய்வதுதான் சிறப்பு.

இதை யாரும் தப்பு கூற முடியாது. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அவரவருக்கு இயலுமானதை செய்வதுதான் சிறப்பு.

இதை யாரும் தப்பு கூற முடியாது. 

நானும் தப்பு கூறவில்லை. 😀

உங்கள் இருவருக்கும் இடையிலான ஆரோக்கியமான   கருத்துப்பரிமாற்றத்தைக் குழப்ப விரும்பவில்லை. ஆதலால் சின்ன இடைவெளி...👋

3 hours ago, விசுகு said:

உள்ளதில் ஒன்றைத் தான் தெரிவு செய்யமுடியும்

எனக்கு கொஞ்சமாவது ஜனநாயக பண்புகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்யக்கூடிய நிலைப்பாடு சரியாக தெரிவாகும்.

நான் பிரான்ஸை விரும்புவதும் அந்த அடிப்படையில் தான். 

பிரான்சை விரும்பும் உங்கள் காரணம் நியாயமானதே. 

ஆனால், கொச்சையாகச் சொன்னால், 

முன்னர் மேற்கு எங்களைத் தேடிவந்து அடிமையாக வேலை வாங்கியது. 

ஆனால், தற்போது நாங்களாக அவர்களைத் தேடிப்போய் அடிமைகளாய் இருக்கிறோம். இதுதான் நவீன காலனித்துவம். 

கொஞ்சம் நோகாமல் கூறினால், 

மேற்கு எம்மைத் தேடி வந்து, எம்மைக் கொண்டு உழைத்தது. தற்போது , நாம் மேற்கைத் தேடிப்போய், அவர்களுக்காக உழைக்கிறோம். இதுதான்  நவகாலனித்துவம். 

😀

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

பிரான்சை விரும்பும் உங்கள் காரணம் நியாயமானதே. 

ஆனால், கொச்சையாகச் சொன்னால், 

முன்னர் மேற்கு எங்களைத் தேடிவந்து அடிமையாக வேலை வாங்கியது. 

ஆனால், தற்போது நாங்களாக அவர்களைத் தேடிப்போய் அடிமைகளாய் இருக்கிறோம். இதுதான் நவீன காலனித்துவம். 

கொஞ்சம் நோகாமல் கூறினால், 

மேற்கு எம்மைத் தேடி வந்து, எம்மைக் கொண்டு உழைத்தது. தற்போது , நாம் மேற்கைத் தேடிப்போய், அவர்களுக்காக உழைக்கிறோம். இதுதான்  நவகாலனித்துவம். 

😀

மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள்

இப்படி என்றால் அப்படி

அப்படி என்றால் இப்படி

நான் இயந்திரம் பற்றி குறிப்பிட்டதன் அடுத்த கட்ட விபரம் இது.

பிரான்சினதும் சீனாவினதும் ஜனநாயக தனிமனித விழும்பியங்கள் பற்றி உங்களுக்கு நான் எழுத வேண்டிய அவசியம் இல்லை

இருந்தாலும் மனித மனம்.....?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள்

இப்படி என்றால் அப்படி

அப்படி என்றால் இப்படி

நான் இயந்திரம் பற்றி குறிப்பிட்டதன் அடுத்த கட்ட விபரம் இது.

பிரான்சினதும் சீனாவினதும் ஜனநாயக தனிமனித விழும்பியங்கள் பற்றி உங்களுக்கு நான் எழுத வேண்டிய அவசியம் இல்லை

இருந்தாலும் மனித மனம்.....?

சனனாயகம் என்பது உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பா ? கறுப்பு நல்லது, வெள்ளை தீதானது எனக் கூற முடியுமா? 

எவ்விதக் கட்டுப்பாடற்ற தனிமனித சுதந்தித்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சனனாயகம் என்பது உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பா ? கறுப்பு நல்லது, வெள்ளை தீதானது எனக் கூற முடியுமா? 

எவ்விதக் கட்டுப்பாடற்ற தனிமனித சுதந்தித்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. 

அதுக்கு தான் முதலிலேயே இது எனது நிலைப்பாடு மட்டுமே என்று எழுதியிருந்தேன் 

உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன் 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இது எனது நிலைப்பாடு

உங்களை போன்றவர்களால் மகிந்தா குடும்பம் தொடங்கி புரின், கிம் யொன் உன், சீ ஜின்பிங், முல்லாக்கள், அரச குடும்ப ஆட்சியாளர்களுக்கு  பிரச்சனை தான்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

மேற்கு எம்மைத் தேடி வந்து, எம்மைக் கொண்டு உழைத்தது. தற்போது , நாம் மேற்கைத் தேடிப்போய், அவர்களுக்காக உழைக்கிறோம். இதுதான்  நவகாலனித்துவம். 

இதுதான் உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்களை போன்றவர்களால் மகிந்தா குடும்பம் தொடங்கி புரின், கிம் யொன் உன், சீ ஜின்பிங், முல்லாக்கள், அரச குடும்ப ஆட்சியாளர்களுக்கு  பிரச்சனை தான்.

மிகச் சரியான புரிதல்  

👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை முற்றிலும் நான் அறிதவற்றில் இருந்து 

சீனாவில் boom - bust என்பது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

ஆனால், சீனாவின் பொருளாதார மற்றும் வங்கி துறைகளில்   ஏதாவது quarks இருக்கிறதா என்பது தெரியாது.

இங்கே US, UK இல் 0%, வருமானம் தேவை இல்லாத, வெளிப்படையாக பொய்யானா வீடு கடன் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டபோது எல்லோரும் நினைத்தது credit criteria lax செய்யப்பட்டுள்ளது  என்று.

financialization (கடன்களை பிரித்து கலந்து அதன் அடிப்படையில் credit  default  swap உருவாக்கியது) நடந்தது தெரியாது.     

ஆனால், fortress economy பக்கம் சாயக் கூடிய வாய்ப்புகள் கூட, அதனால், வார்ச்சி  வீதம் (இப்போது இருப்பதிலும்)  குறையும், ஆனால் பெருளாதார உறுதி தன்மை கூடும்.

fortress economy க்கு மேற்கும் ஓர் காரணம். தொழில்நுட்பத்தை தடை செய்யும் போது, சீனா fortress economy சாய்வது இயற்கை.  

(ரஷ்யா பொருளாதாரம் இவ்வளவு நின்று பிடிப்பதற்கு ஓர் காரணம், புட்டின் குழாம் ஆட்சி ஏறியதில் இருந்து, ரஷ்யா fortress economy க்கு ஒத்த பொருளாதார நிலையை ஏற்படுத்தியது. உ.ம். ரஷ்யாவின் தங்கம் வாங்கும் நடவடிக்கை. சீனாவும் செய்தது. இதில் ஒரு சுவாரசிய களவும் நடந்தது. எந்த நாடு என்று மறந்து விட்டேன், ஒன்றில் UK அல்லது US இடம் இருந்து சீன தங்கம் வாங்கியது, sampling ஆக வாங்கிய தங்க  பாளங்களின் தரத்தை சோதித்த போது, இரும்பு கலந்து இருப்பது தெரிய வந்து, சீனா பணம் கொடுக்க மறுத்து, பின்பு  தனத்தை விற்ற நாடு திரும்பி எடுத்து, சீனா  தனது முகவர்களை தங்கம் வார்க்கும் மேற்பார்வை செய்ய விட்டு தங்க பாளங்களை வாங்கியது).     

ரஷ்யாவுக்கு போடப்பட்ட தடைகளை, சீன சமாளிக்க எதிர்த்து நிற்க கூடிய நிலை என்று வரும் வரை,  fortress economy போன்ற நிலை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதற்காக , சீனா isolationist ஆக வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது.  

சீன சர்வதேச வர்த்தகத்தில், அமெரிக்கா - 13 %, ஐரோப்பா - 17 %, மிகுதி ஆசிய, ஆபிரிக்கா, இலத்தின்  அமெரிக்கா.

தைவான்,  தென்கொரிய,ஜப்பான் இன் வர்த்தக பெரும் பங்கு சீனா. 


 உண்மையில் (மறைமுகமாக) தனிமைப்படுத்தப்படுவது அமெரிக்கா,  ஏனெனில், சீன மீதான அமெரிக்காவின் (பொருளாதார)  தடையால். மேற்கு - சீனா பொருளாதார பிணைப்பு முழுமையாக நடந்தால், இது கூடுவதற்கு வாய்ப்பு கூட.  மேற்கின் சர்வதேச வர்த்தக, பொருளாதார பிணைப்பு டொலர், மற்றும் அதிஉயர் தொழிநுட்பத்தால்.  அது குறையுமாயின் மேற்கு பாதிக்கப்படும்.  அதி உயர் தொழில்நுட்பத்தை சீன நிகர் போட்டியாளராக மாறி வருகிறது. டாலருக்கும் மாற்று பரிவர்த்தனை அமைப்பை கட்டி எழுப்பிக்கொண்டு இருக்கிறது. 


BRI இ முழுமையாக பார்க்க வேண்டும் - ஆப்பிரிக்காவில் சீன கடன் தள்ளுபடி  செய்யம் போது, பாலைவனத்தின் (Taklimakan) வழியே புகையிரத வழங்கலை திறக்கிறது. இது கசக்ஸ்தான், உஸ்பெஸ்கித்தானை இப்போதைக்கு இணைக்கிறது, சர்வதேச வியாபாரத்தை திறக்கிறது.

இலத்தீன் அமெரிக்காவிலும், சீனாவின் வர்த்தக, முதலீடு விரிவாக்கத்தையும் இதில் அடங்குகிறது. 

மற்றது, பிரச்சனைகள்ன் இருந்தாலும், ஆபிரிக்க நாடுகள் (மற்றவையும்) சீனாவை விரும்புகியறது, ஏனெனில் அணுகு முறையால்.

விளக்க  நேரம் இல்லை, அண்மையில் g7 அறிவித்த திட்டத்தை மேலாக பார்க்கும் போது ஏன் என்பது புரியும். 600 பில்லியன் வங்கிகள் ஊடக கடனாக வழங்கப்படும் (அதாவது நாடுகள் தனியார் வங்கி நிபந்தனைகளை திருப்தி செய்து கடன் வாங்க வேண்டும்) , மேற்கு governance ஐ மேற்பார்வை செய்யும், இப்போதைய அதே model, காலனித்துவ mindset. அதாவது, மற்ற நாடுகளுக்கு governance தெரியாது என்ற கதை.

மற்றது, சீனாவின் high end technology, science research, development, products, services. 
 
இரண்டு உதாரணங்கள். 

2011 இல் அமெரிக்கா, சீனாவை விண்வெளி ஆய்வு கூடத்தில் இருந்து தடுத்து முற்றாக தடை செய்தது, 2022 இல் சீனாவிடம் தனிப்பட்ட   விண்வெளி ஆய்வு கூடம், பல நாடுகள் சீனாவுடன் research, development க்கு பேச்சுவார்த்தையில்.

மற்றது, chips முறுகல், போட்டி, அமெரிக்காவின் தடை - சீன கம்பனி 7nm உற்பத்தி வரை வந்துள்ளது  ஆனாலும், உற்பத்தி வினைத்திறனில் தொழில் நுட்பத்தால் பிரச்சனை இருக்கிறது (duv  vs euv, தேடி பார்க்கவும்).  


முக்கியமாக, சீனாவின் வளர்ச்சி, சீனா உள்ளே இருக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து இருக்கிறது ( எந்த நாட்டுக்கும் இது பொருந்தும் ). இதுவே மிக முக்கிய காரணம் சீனாவின் வளர்ச்சிக்கும், அதனால் உருவாகும் செல்வாகிற்கும். இது வேறு பொருளியல், துறை சார் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அதனால், US மற்றும்  West ஆல், ஆக கூடியது, சீனாவின் வளர்ச்சியை தள்ளிப்போட எத்தனிக்கலாம், அனால், நிறுத்துவது முடியாதது (யுத்தம் போல வேறு வழியின்றி) என்பது பல ஆய்வாளர்களின் முடிவு, முக்கியமாக முதலீடு வங்கிகளின் பொருளியல் ஆய்வு துறை.    

மிக குறைந்த மட்டத்திலான உதாரணம், சீனாவின் வறுமை ஒழிப்பு திட்டம். நவீன வரலாற்றில், இதுவரை காணாதது. அதாவது, இலக்கு வைக்கப்பட்டு, கால எல்லைக்குள் இலக்கு அடையப்பட்டது. 

மற்றது, வர்த்தகம், பொருளாதாரத்தை பொறுத்தவரை, சீன, ரஷ்யா, பொதுவாக எந்த நாடும்  தனிமைப்பட்டு விரும்பவில்லை. ஆனாலும், பிரிக்ஸ், ஷங்காய் ஒத்துழைப்பு  கூட்டணி விரிவடையும் சாத்தியகூற்றுகள் இருக்கிறது; காரணம்; அமெரிக்காவும், eu  உம் ரஷ்யா மீதி விதித்த தடை, எல்லா நாடுகளையும்  விழிப்படைய செய்து விட்டது.

எழுதிக்கொண்டு இருக்கும் போது இந்த செய்தி வந்தது 

https://www.reuters.com/markets/asia/chinas-top-banks-face-narrowing-margins-calls-help-economy-grow-2022-09-06/

BEIJING, Sept 6 (Reuters) - Top tier Chinese banks preparing to respond to Beijing's call to boost lending to the real economy and debt-laden property sector are set to face a squeeze on their profit margins in the second half, bankers and analysts said.

Reporting by Ziyi Tang, Engen Tham and Xie Yu; Editing by Sumeet Chatterjee and Jacqueline Wong

......

சீனாவின் property sector 57 tr என்பதற்கு, வேறு  ஒப்பீடுகள் உள்ளது. உ.ம். derivatives market, சாதாரண சட்ட அடிப்படையிலான ஒப்பந்தம் வழியாக. 

இதை பற்றி மேலும் எழுதலாம், நேரம் இல்லை.

முக்கியமாக, ஈழத்தமிழர் உணர்ச்சி வசப்படாது, சீனாவை விளங்கி கொள்ள முயல  வேண்டும்.   மேற்கின் பிரசாரத்தை தரம் பிரித்து அறிய வேண்டும்.  

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.